Jump to content

தமிழர் இளையவர்கள் மத்தியில் தற்கொலைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் இளையவர்கள் மத்தியில் தற்கொலைகள்.
====================================
அண்மையில் என் நண்பரின் தளத்தில் பார்த்த ஒரு செய்திதான் என்னை இந்த விடயத்தை இப்போது எழுதத் தூண்டியது. பதினாறு வயதேயான ஒரு சிறுமி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  இது எமது சமூகத்தில் நடக்கும் முதாவது தற்கொலையுமில்லை, இறுதித் தற்கொலையுமில்லை. 

எமது சமூகத்தில் ஏன் இளையவர்கள் தற்கொலை செய்கிறார்கள் என்று இதற்கு முன்னரும் பலரும் ஆராய்ந்துள்ளார்கள், இனியும் ஆராய்வார்கள். ஆனால் அவையெல்லாம் இந்தப் பிரச்சினையைத் தீர்த்துவிடுமா? நிச்சயமாக இல்லை.

பதின்ம வயதினர் ஏன் தற்கொலை செய்கிறார்கள் என்பதுபற்றி எமது சமூகத்தினருக்கு தெளிவு ஏற்பட்டால் மட்டுமே இனிவரும் காலங்களில் இவ்வாறான தற்கொலையைத் தடுக்க முடியும். அதற்கு இவ்வாறான தற்கொலைக்கான காரணங்களை நன்றாக ஆராய்ந்து இதற்கான அடிப்படைப் பிரச்சனைகள் எங்கிருந்து ஆரம்பிக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இவர்களின் தற்கொலைக்கு கல்வியில் தோல்வி, காதல் தோல்வி, பாடசாலையில் சக மாணவரால், ஆசிரியரால் அல்லது அதிபரால் அவமானப்படுத்தப்படல், வீட்டில் தாயாருடன் அல்லது தந்தையுடன் சண்டை போன்ற காரணங்களைத் தவிர்த்து அண்மைக் காலமாக பிறந்தநாளுக்கு புது ஆடை வாங்கித் தரவில்லை, ஆசைப்படும் பொருளை பெற்றோர் வாங்கித் தரவில்லை, விளையாட்டு அணியில் இடம் கிடைக்கவில்லை போன்ற காரணங்களும் இணைந்துள்ளன. 

பெற்றோரின் பங்கு
---------------------------------
பிள்ளைகளைப் பெற்றுக் கொள்வது ஒன்றும் கஷ்டமான வேலையில்லை. அவர்களை வளர்த்து ஆளாக்குவதுதான் ஒவ்வொரு பெற்றோருக்கும் உள்ள சவால். ஏனெனில் யாருமே பிள்ளை வளர்ப்பதில் முன் அனுபவத்துடன் பிள்ளை பெற்றுக் கொள்வதில்லை. எல்லோருக்குமே பிரச்சனைகளை சரியாக கையாள்வதற்கான முதிர்ச்சியும் இருப்பதில்லை.

ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும் என்பதை பெற்றோர் உணரவேண்டும். பெற்றோரின் ஆசைகளைப் பிள்ளைகளின் மேல் திணிக்கக் கூடாது. நண்பர்கள், உறவினர்களின் பிள்ளைகளைப் பார்த்து உங்கள் பிள்ளைகளை அவர்களோடு போட்டி போடும் பந்தயக் குதிரை ஆக்காதீர்கள். 

பரீட்சையில் தோற்றாலும் ஒருவன் வாழ்க்கையில் வெற்றி பெறமுடியும் என்பதை நீங்களும் உணர வேண்டும் பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

பிள்ளைகளுக்கு பணத்தின் பெறுமதி உழைப்பின் பெறுமதி தெரியும்படி வளருங்கள். பிள்ளைகளை சமூகப் பொறுப்புள்ளவர்களாகவும் மற்றவர்மேல் அன்பு செலுத்தக் கூடியவராகவும் வளருங்கள்.  அவர்களை தோல்விகளைத் தாங்கக் கூடியவர்களாகவும் தைரியமானவர்களாகவும் வளர்க்க வேண்டும்.

பருவ வயதில் வரும் காதல் உணர்வும் சில பிள்ளைகளை தாம் தவறு செய்கிறோமோ என்ற குற்ற உணர்வுக்கு உள்ளாக்கி மன உளைச்சலுக்கும் உள்ளாக்கலாம். அந்த நேரத்தில் பொருத்தமான ஆலோசனைகள் அவர்களுக்கு ஆறுதலாக அமையலாம். 

பிள்ளைகளோடு மனம் விட்டுப் பேசுங்கள். உங்கள் பிள்ளை தனது படிப்பு, விருப்பமான துறை, ஆர்வமான விடயங்கள், எதிர்ப்பாலாரிடம் ஏற்படும் ஈர்ப்பு போன்றவை பற்றியும் தங்கள் பிரச்சனைகளையும் உங்களோடு மனம் விட்டு பேசக்கூடிய சூழலை ஏற்படுத்துங்கள். என் தந்தையோடு இதைப் பயப்படாமல் கதைக்கலாம், என் அம்மாவிடம் இதனைப்பற்றிச் சொல்லலாம் என்ற எண்ணம், தைரியம் உங்கள் பிள்ளைகளுக்கு ஏற்பட வேண்டும்.

அவர்களின் பிரச்சனைகளுக்கு நீங்கள் நீதிபதியாகாமல் அவர்களே சரியான தீர்வு எடுக்க உதவுங்கள். பிள்ளைகளுக்கு ஒரு அதிகாரியாக இல்லாமல் ஆலோசகராக இருக்க முயலுங்கள். 

உங்கள் பிள்ளையின் நடவடிக்கைகளில் சிறுமாற்றம் ஏற்பட்டாலும் அதைக் கவனித்து தகுந்த நேரத்தில் மெதுவாக அதைப்பற்றி பேசி அவர்களைச் சரிப்படுத்த உங்களால் ஆனதைச் செய்யுங்கள்.

ஏதோ காரணங்களால் உங்கள் பிள்ளைக்கு மன உளைச்சல் அல்லது மன அழுத்தம் இருப்பதாகத் தோன்றினால் உடனே தகுந்த உளவள ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளுங்கள். ஊரார் என்ன சொல்லுவார், உறவு என்ன சொல்லும் என்று நினைக்காதீர்கள். உங்கள் பிள்ளையின் உயிரை விடவா ஊராரின் பேச்சு உங்களுக்கு முக்கியம் என்று யோசியுங்கள்.

ஆசிரியரின் பங்கு 
---------------------------------
இளையவர்கள் வாழ்க்கையில் பெற்றோருக்கு அடுத்தபடியாக இருப்பவர்கள் ஆசிரியர்கள். இன்னொரு விதத்தில் சொல்வதென்றால் ஆசிரியர்களை இரண்டாவது பெற்றோர் என்றே சொல்லலாம். 

பல பாடசாலைகளில் மாணவர்களின் உளவியல் பிரச்சனைகளை இனங் காண்பதிலும் அவ்வாறான பிள்ளைகளுக்கு உதவுவதிலும் பல ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். அவ்வாறான பிள்ளைகளின் ஆர்வங்கள், தனித்திறமைகளை இனங்கண்டு அவற்றில் ஈடுபட ஊக்கம் கொடுப்பதிலும்  மாணவர்களின் பிரச்சனைகளை பெற்றோருக்கு அறிவுறுத்துவதிலும் பிள்ளைகளின் உளவள ஆற்றுப்படுத்தலிலும்  இவ்வாறான ஆசிரியர்கள் பெரும் பங்காற்றி வருகின்றனர்.

ஆனால் எல்லா ஆசிரியர்களுமே அவ்வாறு நடந்து கொள்வதில்லை. சில ஆசிரியர்களே மாணவர்களின் தன்னம்பிக்கையை சிதைப்பவர்களாகவும் துன்புறுத்துவோராகவும் இருக்கின்றனர் என்பதும் மறுக்க முடியாத உண்மையே. அதிலும் சிலர் இளையவர்களை உடல்ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்துகின்றனர். 

இன்னொரு வகையில் சொல்வதென்றால் சில இளையவர்களின் மன உளைச்சல், தற்கொலை எண்ணங்களுக்கு சில ஆசிரியர்களும் காரணமாக இருக்கின்றனர். 

இந்த நிலையும் மாறவேண்டும். இவ்வாறான ஆசிரியர்கள் மனம் திருந்தி ஏனைய நல்லாசிரியர்கள் போல மாறவேண்டும். 

பெற்றோரைப் போலவே ஆசிரியர்களும் தாம் கற்பிக்கும் ஒவ்வொரு பிள்ளையின் மீதும் உண்மையான அக்கறையும் பொறுப்பும் எடுத்துக் கொள்ள வேண்டும். எமது நாளைய சந்ததிகளைச் சரியாக வளர்த்தெடுப்பது எம் ஒவ்வொருவரின் கையில்தான் உள்ளது.

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.