Jump to content

ஸ்ரீலங்காவில் சட்ட ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவில்லை: நீதிமன்றத்தில் வாதிட்ட சுமந்திரன்


Recommended Posts

இலங்கையில் சட்டரீதியான முறையில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவில்லை எனவும் எனினும் நாட்டில் காணப்படும் சுகாதாரம் தொடர்பான நிலைமையில் அந்த ஊரடங்குச் சட்டத்தை பின்பற்ற வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சார்பில் ஆஜரான சட்டத்தரணி சுமந்திரன், இலங்கையில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் சட்டரீதியாக அமுல்படுத்தப்படவில்லை என வாதிட்டதை அடுத்து, நீதவான், ரஞ்சன் ராமநாயக்கவை பிணையில் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

ஊரடங்குச் சட்டத்தை மீறியமை மற்றும் பொலிஸாரின் கடமைக்கு தடையேற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டில் ரஞ்சன் ராமநாயக்க அண்மையில் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பாக ஊடகங்களிடம் மேலும் கருத்து வெளியிட்ட சுமந்திரன்,

“ வழக்கின் ஆரம்பத்தில் ரஞ்சன் ராமநாயக்க ஊரடங்குச் சட்டத்தை மீறியதாகவும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் நேரத்தல் வாகனத்தை கொண்டு வந்தனர் என குற்றம் சுமத்த பொலிஸார் முயற்சித்தனர்.

எனினும் நாட்டிற்குள் சட்டரீதியாக ஊரடங்குச் சட்டம் அமுலில் இல்லை, நாட்டில் காணப்படும் நிலைமை காரணமாக அதனை பின்பற்றி வருகிறோம் என நாங்கள் சுட்டிக்காட்டினோம்.

இதனால், அனுமதிப்பத்திரம் இல்லை, ஊரடங்குச் சட்டத்தை மீறினார் என குற்றம் சுமத்துவது சட்டவிரோதமானது.

பொலிஸார் சட்டவிரோதமாக செயற்பட்டு இவர்களை கைது செய்து, தடுத்து வைக்க முடியாது என்பதை வலியுறுத்தினோம். இதனையடுத்து ரஞ்சனுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியது.

நாட்டில் காணப்படும் சுகாதாரம் தொடர்பான நிலைமையில் அனைவரும் ஊரடங்குச் சட்டத்தை பின்பற்ற வேண்டும். எனினும் அமுலில் உள்ள ஊரடங்குச் சட்ட ரீதியானது அல்ல.

சட்டரீதியான ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த முடியும் என்ற போதிலும் அரசாங்கம் ஊடக அறிக்கை மூலம் அதனை செய்து வருகிறது.” என கூறியுள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/141592

Link to comment
Share on other sites

  • Replies 61
  • Created
  • Last Reply
5 minutes ago, போல் said:

நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சார்பில் ஆஜரான சட்டத்தரணி சுமந்திரன், இலங்கையில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் சட்டரீதியாக அமுல்படுத்தப்படவில்லை என வாதிட்டதை அடுத்து, நீதவான், ரஞ்சன் ராமநாயக்கவை பிணையில் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

சட்டத்தரணி சுமந்திரன் தொடர்ந்தும் சிங்கள மக்களுக்காக குரல் கொடுத்து, தமிழ் மக்களை விட்டு முழுமையாக  செல்வது சிறப்பு. 

Link to comment
Share on other sites

இந்த ஸ்பீட்ல இறங்கின சுமந்திரன் இதுக்கு ஏதாவது காசு வாங்கி இருப்பாரோ?

இல்லை சிங்கள மந்திரித்துமா என சும்மா போயிருப்பாரோ?

Link to comment
Share on other sites

தமிழருக்கு பிடிக்காத ஒரு விடயம் சுமந்திரன் இப்படியாக தனது மூளையை பாவித்து  வென்று வருவது। ஸ்ரீதரன் எம்பீ நடத்தும் ஜேவிபி நியூஸ் இணையத்தளத்தில் இவருக்கு எதிரான , பொய்யான செய்திகளை நிறைய காணலாம்। அதட்காக மற்றைய இனைய தளம் எல்லாம் உண்மையான செய்திகளை வெளியிடுகிறது என்பதல்ல। 

Link to comment
Share on other sites

தமிழினப் படுகொலைகாரர்களை மட்டுமே வெல்லவைக்கும் சுமந்திரனின் நரித் திறமை மேல சிலருக்கு கொள்ளை பிரியமாம். அப்ப அவையள் எப்பிடியானவை என்டு புரிந்துகொள்ளலாம்.

Link to comment
Share on other sites

நான்  மேலே எழுதின கருத்து எவ்வளவு உண்மை என்று வாசிப்பவர்களுக்கு விளங்கும்। மிருசுவில் படுகொலை வழக்கிலும் இப்போது இவர் தோன்ற இருக்கிறார்। அதட்கு என்ன எழுதப்போகிறார்கள் என்று பார்ப்போம்।

நான் அண்மையில் சுமந்திரன் அவர்களுடன் கதைக்கும்போது இணையதளங்களில் அவருக்கு எதிராக எழுத்துவத்தைப்பற்றி கதைத்தேன்। அது தனக்கு தெரியும் என்று கூறினார்। அவர் ஒரு கிறிஸ்தவர் ஆனபடியால் சில காரியங்கள்பற்றி பேச வேண்டி இருந்தது। அவை எல்லாம் இங்கு எழுத முடியாது।

இன்னும் அவர் தான் ஒரு தமிழன் என்ற ரீதியில்தான் என்னுடன் பேசினார்। எல்லாவற்றிலும் நான் அவருடன் ஒத்துப்போக விடடாலும் தொடர்ந்து பேச இருக்கிறேன்। எனவே பின்வரும் காலங்களில் நிச்சயமாக அதன் முடிவுகளை பதிவிடுவேன்।

Link to comment
Share on other sites

On 20/4/2020 at 18:11, Kali said:

இந்த ஸ்பீட்ல இறங்கின சுமந்திரன் இதுக்கு ஏதாவது காசு வாங்கி இருப்பாரோ?

இல்லை சிங்கள மந்திரித்துமா என சும்மா போயிருப்பாரோ?

சுமந்திரன் ஒரு திறமையான வழக்கறிஞர். தனது உழைப்புக்கு ஊதியம் வாங்கி இருப்பார். அது இயல்பானது. ஆனால் ஒரு அரசியல் வாதியாக அவரின் நடவடிக்கைகள் சிலவற்றில்  என்னால் ஒத்து போக முடியவில்லை. தமிழ் மக்கள் சார்பாக சிறப்பாக செயற்படும் திறமை அவருக்கு இருந்தும் அதை அவர் சரியாக செய்யவில்லை.  தனது சொந்த அஜெண்டாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சாதாரண தமிழ் அரசியல்வாதிக்குணம் அவருக்கும் தொற்றிக்க கொண்டதாகவே எனக்கு படுகிறது.  எனது அனுமானம் மட்டுமே.

Link to comment
Share on other sites

15 hours ago, tulpen said:

சுமந்திரன் ஒரு திறமையான வழக்கறிஞர். தனது உழைப்புக்கு ஊதியம் வாங்கி இருப்பார். அது இயல்பானது. ஆனால் ஒரு அரசியல் வாதியாக அவரின் நடவடிக்கைகள் சிலவற்றில்  என்னால் ஒத்து போக முடியவில்லை. தமிழ் மக்கள் சார்பாக சிறப்பாக செயற்படும் திறமை அவருக்கு இருந்தும் அதை அவர் சரியாக செய்யவில்லை.  தனது சொந்த அஜெண்டாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சாதாரண தமிழ் அரசியல்வாதிக்குணம் அவருக்கும் தொற்றிக்க கொண்டதாகவே எனக்கு படுகிறது.  எனது அனுமானம் மட்டுமே.

Tulpen , நீங்கள் எழுதியது உண்மை। அரசியல்வாதியாக அவரது நடவடிக்கைகள் எனக்கும் முரண்பாடு உண்டு। இவர் அரசியல்வாதியாக வருமுன்னரே அவரை அறிவேன்। நிறைய காரியங்களை விவாதிப்போம்। நிச்சயமாக இங்கு வாழும் தமிழ் மக்கள் நிராகரித்தால் அவர் அரசியலில் இருந்து ஒதுங்குவார்।

மற்றைய அரசியல் வாதிகளிபோல உழைப்புக்காக அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை। நானும் அவரை அரசியலில் இருந்து வெளியேறும்படி வலியுறுத்துவது உண்டு। அநேகமாக நல்ல முடிவு விரைவில் வரும்। எமது இணையதள போராளிகளுக்கும் நல்ல செய்தியாக இருக்கும்।

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Vankalayan said:

மற்றைய அரசியல் வாதிகளிபோல உழைப்புக்காக அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை। நானும் அவரை அரசியலில் இருந்து வெளியேறும்படி வலியுறுத்துவது உண்டு। அநேகமாக நல்ல முடிவு விரைவில் வரும்। எமது இணையதள போராளிகளுக்கும் நல்ல செய்தியாக இருக்கும்।

இப்படி எங்களுக்கு ஆசை காட்டிவிட்டு அம்பிகா சற்குணநாதனையும் கொண்டு வந்து பாராளுமன்ற  கதிரையில்  ஏத்தப்படாது சொல்லிட்டம் ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேடிக்கை என்னவென்றால்.. இந்த தமிழ் பேசும் சட்டாம்பிகள்.. இப்ப தங்கட சிங்கள எஜமானர்களுக்காக சமூகத்துக்கு தேவையான ஊரடங்குச் சட்டத்தை எதிர்த்துக் கத்துகிறார்கள்.

இதே ஊரடங்குச் சட்டங்கள்.. மாதக் கணக்காக.. அவசரகாலச் சட்டத்தின் கீழ் தமிழர் தாயகத்தில் கொண்டு வரப்பட்ட போது.. சம்பந்தன் வகையறாக்கள் எதிர்த்துப் பேசியதே கிடையாது. அப்படி பேசிய ஒருவர் என்றால்.. அது ஜோசப் பரராஜசிங்கம் மட்டுமே. 

Link to comment
Share on other sites

26 minutes ago, nedukkalapoovan said:

வேடிக்கை என்னவென்றால்.. இந்த தமிழ் பேசும் சட்டாம்பிகள்.. இப்ப தங்கட சிங்கள எஜமானர்களுக்காக சமூகத்துக்கு தேவையான ஊரடங்குச் சட்டத்தை எதிர்த்துக் கத்துகிறார்கள்.

சரியா சொன்னீங்க!
சிங்கள எஜமானர் கால்களில தவமிருக்கிறது தானே இவங்களோட பிரதான வேலை.

Link to comment
Share on other sites

16 hours ago, அக்னியஷ்த்ரா said:

இப்படி எங்களுக்கு ஆசை காட்டிவிட்டு அம்பிகா சற்குணநாதனையும் கொண்டு வந்து பாராளுமன்ற  கதிரையில்  ஏத்தப்படாது சொல்லிட்டம் ...

இது ஒரு தவறன வேலை என்று நானும் ஏற்றுக்கொள்ளுகிறேன்। அப்படி நடக்க சந்தர்ப்பம் வராது।

இருந்தாலும் சிலருக்கு சில மன சஞ்சலத்தினால் என்ன எழுதுவதே என்று தெரியாமல் எழுதிக்கிறார்கள்। சந்திரனை பார்த்து நாய் குறைப்பதால் சந்திரனுக்கு ஒன்றுமே நடக்கப்போவதில்லை।

Link to comment
Share on other sites

கொள்ளைக் கோஷ்டிக்கு போதை தலைக்கேறினா தங்களையும் சந்திரனா நினைக்கிறது ஒன்டும் புதுசில்லை.

Link to comment
Share on other sites

தொப்பி அளவாக இருக்கிறவர்கள் போட்டுக்கொண்டே போக வேண்டியதுதான்। முதலில் நான் எழுதின கருது அவ்வளவு உண்மை என்பது வாசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு விளங்கும்।

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/4/2020 at 13:53, அக்னியஷ்த்ரா said:

இப்படி எங்களுக்கு ஆசை காட்டிவிட்டு அம்பிகா சற்குணநாதனையும் கொண்டு வந்து பாராளுமன்ற  கதிரையில்  ஏத்தப்படாது சொல்லிட்டம் ...

அப்ப மட்டக்களப்பில வந்த அந்த அக்காவையும் தூக்கிட்டாங்கள் அம்பிகா வந்தாலும் ஆண்டாள் வந்தாலும் ஆப்பு நமக்குத்தானே பாய் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/4/2020 at 09:41, தனிக்காட்டு ராஜா said:

அப்ப மட்டக்களப்பில வந்த அந்த அக்காவையும் தூக்கிட்டாங்கள் அம்பிகா வந்தாலும் ஆண்டாள் வந்தாலும் ஆப்பு நமக்குத்தானே பாய் 

ஆனாலும் திரும்பத்திரும்ப அவிங்க தானே நமக்கு தேவைப்படுகிறது  பாய் ...
எப்போதாவது கிணற்றை விட்டு வெளியே எட்டி பார்த்திருக்கிறோமா ...?
அவனுக்கே குத்துவது பிறகு கிடந்து கத்துவது... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, அக்னியஷ்த்ரா said:

ஆனாலும் திரும்பத்திரும்ப அவிங்க தானே நமக்கு தேவைப்படுகிறது  பாய் ...
எப்போதாவது கிணற்றை விட்டு வெளியே எட்டி பார்த்திருக்கிறோமா ...?
அவனுக்கே குத்துவது பிறகு கிடந்து கத்துவது... 

நான் குத்தி வருசமாகிறது அதற்க்காக பேக் ஐடி வேற திறந்து களமாடம் தொடர்கிறது இவங்களை ஓட்டுறம் அப்படி கிழக்கில் ஓரளவு குறைச்சாச்சு இன்னும் கொஞ்ச செம்புகள் இருக்கு அதற்கும் கொஞ்ச வேலைகள் செய்யணும் 

Link to comment
Share on other sites

On 27/4/2020 at 14:18, தனிக்காட்டு ராஜா said:

நான் குத்தி வருசமாகிறது அதற்க்காக பேக் ஐடி வேற திறந்து களமாடம் தொடர்கிறது இவங்களை ஓட்டுறம் அப்படி கிழக்கில் ஓரளவு குறைச்சாச்சு இன்னும் கொஞ்ச செம்புகள் இருக்கு அதற்கும் கொஞ்ச வேலைகள் செய்யணும் 

நீங்கள் மாற்றத்தை கொண்டு வரலாம்। மாற்றமென்று சொல்லி சோனவனை கொண்டுவரமாடதீர்கள் என்று உறுதிப்படுத்தமுடியுமா? இன்று எத்தனை தமிழ் கடசிகள் அம்பாறையில் கேட்க்கிறார்கள் । இங்கு கத்தியை மட்டுமல்ல புத்தியையும் தீடட வேண்டும்। கிழக்கை பற்றி எழுதவேண்டாமென்று சிலர் கூறினாலும் என்னால் எழுதாமல் இருக்கமுடியவில்லை। 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Vankalayan said:

நீங்கள் மாற்றத்தை கொண்டு வரலாம்। மாற்றமென்று சொல்லி சோனவனை கொண்டுவரமாடதீர்கள் என்று உறுதிப்படுத்தமுடியுமா? இன்று எத்தனை தமிழ் கடசிகள் அம்பாறையில் கேட்க்கிறார்கள் । இங்கு கத்தியை மட்டுமல்ல புத்தியையும் தீடட வேண்டும்। கிழக்கை பற்றி எழுதவேண்டாமென்று சிலர் கூறினாலும் என்னால் எழுதாமல் இருக்கமுடியவில்லை। 

நீங்கள் எழுதலாம் கருத்தாடல் தானே தமிழர்களை விட (தமிழ் அரசியல் வாதிகளை விட) சிங்கள அரசியல் வாதிகளும் , முஸ்லீம் அரசியல் வாதிகள் அவரவர் மக்கள் சார்ந்து செயற்படுகிறார்கள் கிழக்கில்  தமிழ் அரசியல் வாதிகள் அப்படி இல்லை 

நான் ஒரு கடிதம் வாங்க  அலைந்தேன் ரான்ஸ்பர் வாங்க  அலைந்தேன்  விடை இதுதான் விடை ஐயாவ பார்க்க இயலாது 

சிங்கள அமைச்சரிடம் செல்ல கடிதமும் கிடைத்தது  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நீங்கள் எழுதலாம் கருத்தாடல் தானே தமிழர்களை விட (தமிழ் அரசியல் வாதிகளை விட) சிங்கள அரசியல் வாதிகளும் , முஸ்லீம் அரசியல் வாதிகள் அவரவர் மக்கள் சார்ந்து செயற்படுகிறார்கள் கிழக்கில்  தமிழ் அரசியல் வாதிகள் அப்படி இல்லை 

நான் ஒரு கடிதம் வாங்க  அலைந்தேன் ரான்ஸ்பர் வாங்க  அலைந்தேன்  விடை இதுதான் விடை ஐயாவ பார்க்க இயலாது 

சிங்கள அமைச்சரிடம் செல்ல கடிதமும் கிடைத்தது  

அதுதான் தமிழன், பந்தா கட்டுவது அலையவிடுவது, இதே சிங்களவர் முஸ்லிம்கள் என்றால் வாலை சுருட்டி எட்டா வளைந்திருப்பார்கள் நம்மவர். சிங்களவர் பலர் நேர்மையாக உதவி செய்வார்கள்; அவர்களுடன் இலகுவாக வேலை செய்யலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, உடையார் said:

அதுதான் தமிழன், பந்தா கட்டுவது அலையவிடுவது, இதே சிங்களவர் முஸ்லிம்கள் என்றால் வாலை சுருட்டி எட்டா வளைந்திருப்பார்கள் நம்மவர். சிங்களவர் பலர் நேர்மையாக உதவி செய்வார்கள்; அவர்களுடன் இலகுவாக வேலை செய்யலாம்

மொழிதான் பிரச்சினை உடையார் மொழி தெரிந்திருந்தால் பல விடயங்களை சாதிக்கலாம் ஆனால் பிரச்சினை முடிந்தால் அரசியல் செய்ய முடியாது 

பியசேன என்ற அயோக்கியனிடம் சென்ற போது இனத்தையே அசிங்கமாக பேசினவன் அவன் எம்பியாக இருக்கும் போது

Link to comment
Share on other sites

18 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நீங்கள் எழுதலாம் கருத்தாடல் தானே தமிழர்களை விட (தமிழ் அரசியல் வாதிகளை விட) சிங்கள அரசியல் வாதிகளும் , முஸ்லீம் அரசியல் வாதிகள் அவரவர் மக்கள் சார்ந்து செயற்படுகிறார்கள் கிழக்கில்  தமிழ் அரசியல் வாதிகள் அப்படி இல்லை 

நான் ஒரு கடிதம் வாங்க  அலைந்தேன் ரான்ஸ்பர் வாங்க  அலைந்தேன்  விடை இதுதான் விடை ஐயாவ பார்க்க இயலாது 

சிங்கள அமைச்சரிடம் செல்ல கடிதமும் கிடைத்தது  

நான் தமிழ் அரசியல் வாதிகளை நன்றாக சேவை செய்பவர்கள் என்றோ மக்களின் அன்றாட பிரச்சினைகளில் முன்னின்று செயட்படுபவர்கள் என்றோ சொல்லவில்லை। திரும்பவும் அதே அரசியல்வாதிகளைத்தானே தெரிவு செய்யப்போகின்றோம்। எனவே மக்களுக்கும் இப்படியான தவறுகளுக்பிழையான mகு பங்கிருக்கின்றது। நாங்கள் மாற்று வழியை  நாடப்போகிறோமென்று போய் பிழையான முடிவுகளை எடுக்கக்கூடாது। விசேடமாக கிழக்கில் பிழையான தீர்மானங்களை எடுக்கும்போது மாற்று இனத்தவருக்கு சந்தர்ப்பத்தை ஏட்படுத்தி கொடுத்ததாக அமையும்। அம்பாறையில் இம்முறை தமிழ் பிரதி நிதித்துவதை காப்பாற்ற முடியுமா? சிலவேளைகளில் பியசேனாவை தெரிவு செய்தால் தமிழ் பிரதிநிதியைவிட அதிக சேவையாற்றலுடன் , அரசுடன் முஸ்லிம்களுக்கு எதிராகவும் போராடலாம்। இருந்தாலும் நீங்கள் இதுபற்றி அரசியல்வாதிகளுடன் பேசி முடிவெடுப்பது நல்லது। 

Link to comment
Share on other sites

23 hours ago, உடையார் said:

அதுதான் தமிழன், பந்தா கட்டுவது அலையவிடுவது, இதே சிங்களவர் முஸ்லிம்கள் என்றால் வாலை சுருட்டி எட்டா வளைந்திருப்பார்கள் நம்மவர். சிங்களவர் பலர் நேர்மையாக உதவி செய்வார்கள்; அவர்களுடன் இலகுவாக வேலை செய்யலாம்

இதற்கு காரணம் சிங்களவரும் முஸ்லீமும் தமது பிரதி நிதிகளை மாற்ற தயங்கமாட்டார்கள். எங்கட அரசியல்வாதிகளுக்கு தமிழ் தேசியம் காணும் எல்லாத்துக்கும். கூட்டமைப்பு விக்கியை கண்டு அஞ்ச அது தான் காரணம் இவர்களது தமிழ் தேசிய தனி உரிமைக்கு போட்டி வந்து விட்டது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் பொதுவாகவே, ரத்த அழுத்தம் தீவிர உடல்நல பிரச்னையாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. ஆனால், இதனை முறையாக பரிசோதிக்காவிட்டால் பல இணை நோய்கள் ஏற்படும் என மருத்துவ உலகம் தொடர்ந்து எச்சரித்து வருகிறது. ஆனால், இந்திய மருத்துவ ஆய்வுக்கழகம் (ICMR) சமீபத்தில் இந்தியாவில் ரத்த அழுத்த பாதிப்பின் நிலைமை குறித்து வெளியிட்ட ஆய்வறிக்கையில், இந்தியர்கள் அதனை அவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்ளாததை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. அந்த ஆய்வறிக்கை சர்வதேச பொது சுகாதார ஆய்விதழில் வெளியாகியிருந்தது. அதன்படி, இந்தியாவில் 18 முதல் 54 வயதுக்குட்பட்ட 30% இந்தியர்கள் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதில்லை என்ற தகவல் தெரியவந்துள்ளது. அதாவது, பத்தில் மூன்று பேர் அதை பரிசோதிப்பதில்லை. தென்னிந்திய மாநிலங்களில் அதிகபட்ச சராசரியாக 76% பேர் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கின்றனர். வட இந்திய மாநிலங்களில் சராசரியாக 70% பேர் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கின்றனர். ரத்த அழுத்தத்தை தொடர் இடைவெளியில் முறையாக கண்காணிக்காவிட்டால், இதய நோய்கள் உட்பட பல தீவிர நோய்கள் ஏற்பட்டு, இறப்புக்குக் கூட காரணமாகிவிடும் என்கின்றனர் மருத்துவர்கள். அதுவே, முறையாக கண்காணித்து வாழ்வியல் மாற்றங்களின் மூலம் அதனை கட்டுக்குள் வைத்தால் பிரச்னை இல்லை என்ற ஆறுதல் செய்தியையும் அவர்கள் கூறுகின்றனர்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஐ.சி.எம்.ஆர். ஆய்வில் 30% இந்தியர்கள் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதில்லை என்ற தகவல் தெரியவந்துள்ளது. “முன்பு 50-60 வயதில்தான் ரத்த அழுத்தம் வரும். இப்போது சிறுவயதிலேயே வருகிறது. பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்குக் கூட உயர் ரத்த அழுத்தம் வருகிறது. இதற்கு முக்கிய காரணம் உடல் பருமன். இளம் வயதினரிடையே மன அழுத்தம், தூக்கமின்மை, உப்பு, கொழுப்பு அதிகமாக இருக்கும் உணவுகளை எடுப்பது இதற்கு காரணமாக இருக்கிறது. நீரிழிவு நோயைவிட உயர் ரத்த அழுத்தம் அதிகமானவர்களை பாதிக்கிறது” என்கிறார், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியரும் மருத்துவத் துறை தலைவருமான எஸ். சந்திரசேகர். மேலும், “பெரும்பாலானோர் இதற்கு மருத்துவ சிகிச்சையே எடுப்பது கிடையாது. ஒருமுறை பரிசோதித்துவிட்டு ‘நார்மலாக' இருக்கிறது என மருந்துகளை எடுக்க மாட்டார்கள். அப்படி இருக்கக்கூடாது. தொடர்ச்சியாக ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும். தொடர் பரிசோதனைகளில் ரத்த அழுத்தம் குறைந்தால்தான் மருந்துகளின் அளவை குறைக்க வேண்டும். உயர் ரத்த அழுத்தத்திற்கு தொடர்ந்து மாத்திரைகள் எடுக்க வேண்டும் என்பது விளிம்புநிலை மக்களுக்குத் தெரிவதில்லை. நடுத்தர மக்கள் மாத்திரைகள் எடுத்தாலும், தொடர்ந்து பரிசோதித்து கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறதா என்று பார்ப்பதில்லை” என்கிறார் அவர். ரத்த அழுத்தம் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.   படக்குறிப்பு,சிறுவயதினருக்கும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதாக கூறுகிறார் மருத்துவர் எஸ். சந்திரசேகர். ரத்த அழுத்தம் எந்த அளவை எட்டினால் உடனடியாக மருத்துவ ஆலோசனையை நாட வேண்டும்? ரத்த அழுத்தம் 120/80 mm/Hg என்பது நார்மல் அளவு. இதில் 120 என்பது சிஸ்டோல் அளவு, இதய அறைகள் சுருங்கும்போது மாறுபட்ட கட்டம். 80 என்பது டயஸ்டோல், அதாவது இதயத்தின் அறைகள் ரத்தத்தால் நிரப்பப்படும் போது இதய சுழற்சியின் தளர்வான கட்டமாகும். இந்த அளவு 140/90 வரை அதிகரித்தால் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும். உயர் ரத்த அழுத்தம் இருந்தால் என்ன வகையான உணவுகள், உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதை கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை நிச்சயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் கூறாமல், மருந்துகளை நிறுத்தவோ, கூட்டவோ, குறைக்கவோ கூடாது. குறிப்பிட்ட இடைவெளியில் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும். ரத்த அழுத்தத்தை வீட்டிலேயே பரிசோதிப்பது எப்படி? மருத்துவர்கள் முன்பெல்லாம் பாதரசத்துடன் கூடிய ஸ்பிக்மோமேனோ மீட்டர் எனப்படும் ரத்த அழுத்தமானியை பயன்படுத்தினார்கள். இப்போது மின்னணு ரத்த அழுத்தக் கருவி வந்துவிட்டது. ரூ.2,500-3,000-ல் நல்ல கருவிகளை வீட்டிலேயே வாங்கி வைத்துக்கொள்ளலாம். அந்த கருவியை கையில் எங்கு, எப்படி பொருத்த வேண்டும் என, செவிலியர் அல்லது மருத்துவத் துறையை சேர்ந்த ஒருவரிடம் நேரிலேயே சென்று செய்துபார்த்து தெரிந்துகொள்ள வேண்டும். ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதற்கு 15-20 நிமிடங்களுக்கு முன் டீ, காபி அருந்தியிருக்கக் கூடாது. பொதுவாகவே மது, புகைப்பிடிப்பது நல்லதல்ல. குறிப்பாக, ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதற்கு 20 நிமிடங்களுக்கு முன் நிச்சயம் அவற்றை செய்திருக்கக் கூடாது. ரிலாக்ஸாக இருக்க வேண்டும். பின்பக்கம் சாய்ந்துகொள்ளக்கூடிய நாற்காலியில், நிச்சயம் கால்களை தொங்கவிட்டுக்கொள்ள வேண்டும். கால்களை மடக்கி வைத்துக்கொண்டோ, கால்மேல் கால் போட்டுக்கொண்டோ அமர்ந்திருக்கக் கூடாது. ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால் ஓரிரு முறை மீண்டும் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். வலது கை, இடது கை என மாற்றி பரிசோதித்து, அதன் சராசரியைக் கூட எடுத்துப் பார்க்கலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ரத்த அழுத்தம் 120/80 mm/Hg என்பது நார்மல் அளவு. எந்த நேரத்தில் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும் என்கிற கட்டாயம் இருக்கிறதா? ரத்த அழுத்தத்தை காலையில்தான் பரிசோதிக்க வேண்டும் என்பதில்லை. மதியம் அல்லது இரவிலும் பரிசோதிக்கலாம். உறங்குவதற்கு முன்பு கூட எடுக்கலாம். உறங்கும்போது ரத்த அழுத்தம் 15-20% குறையும். அந்த நேரத்தில் நம் உடல் சற்று ரிலாக்ஸாகும். ஆனால், இப்போது பெரும்பாலானோர் தூங்குவதற்கே இரண்டு-மூன்று மணியாகிவிடுகிறது. அதனால், அந்த சமயத்திலும் ரத்த அழுத்தம் தாழ்வு நிலைக்கு செல்லாமல் உயர்வாகவே இருக்கிறது. இதனை மருத்துவ மொழியில் இரவு நேர உயர் ரத்த அழுத்தம் (Nocturnal hypertension) என்கிறோம். அதனால்தான் பலருக்கும் காலையில் பக்கவாதம், மாரடைப்பு போன்றவை ஏற்படுகிறது. ரத்த அழுத்தம் என்பது 24 மணிநேரமும் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்பதே நிறைய பேருக்குத் தெரிவதில்லை. அதனால்தான் இளம் வயதிலேயே மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றை நாம் பார்க்கிறோம். மனச்சோர்வு, மன அழுத்தம் இருந்தாலும் ரத்த அழுத்தம் அதிகமாகும். வலிநிவாரண மாத்திரைகள் எடுப்பதுகூட சில சமயங்களில் உயர் ரத்த அழுத்தத்திற்கு காரணமாக உள்ளது. ரத்த அழுத்தத்தை தினசரி பரிசோதிக்க வேண்டுமா? தினசரி பரிசோதிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஏதாவது அறிகுறிகள், தொந்தரவு இருந்தால் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். உயர் ரத்த அழுத்தம் இருந்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? உயர் ரத்த அழுத்தம் தொடர்ந்து இருந்தால் கண்பார்வை பாதிக்கப்படும். இதய சுவர்கள், ரத்தக்குழாய்கள் பாதிப்பு, சிறுநீரகம் செயலிழப்பு, மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய்கள் பாதித்து பக்கவாதம் ஏற்படலாம். காலுக்கு செல்லும் ரத்தக்குழாய்கள் பாதித்து பெரிஃபெரல் ஆர்ட்டரி நோய் எனப்படும் புற தமனி நோய் ஏற்படலாம். அனைத்து உறுப்புகளும் ரத்தக் குழாய்களும் பாதிக்கப்படலாம். ரத்த அழுத்தம் அதிகமாகும்போது இதய ரத்தக் குழாய்களின் சுற்றளவு குறைகிறது. இதய சுவர்கள் தடித்து வீங்கிவிடும். சுருங்கி விரிவது குறைந்துவிடும். எனவே, உயர் ரத்த அழுத்தம் நிறைய வழிகளில் இதயத்தைப் பாதிக்கும். இதய துடிப்புகள்கூட இதனால் அதிகமாகிவிடும். உயர் ரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகள் என்னென்ன? உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு அறிகுறியே இருக்காது. ‘எனக்குதான் அறிகுறியே இல்லையே, நான் எதற்கு மாத்திரை எடுக்க வேண்டும்’ என்றுதான் பலரும் கேட்பார்கள். நாளடைவில்தான் அறிகுறிகள் தோன்றும். பதற்றம், தலைவலி, தலைசுற்றல், உடல் சோர்வு, தூக்கமின்மை, சிறிய விஷயத்திற்கு பயம், கால்களில் வீக்கம் உள்ளிட்டவை ஏற்படும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,"உயர் ரத்த அழுத்தத்தால் கண் பார்வை பிரச்னை கூட ஏற்படலாம்" உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமல் எப்படி தடுக்கலாம்? உடல் எடையை ஒழுங்குக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். உணவில் உப்பு அதிகம் சேர்த்துக்கொள்ளக் கூடாது. உடற்பயிற்சி செய்ய வேண்டும். நடைபயிற்சி, ஜாக்கிங், நீச்சல், ஸ்ட்ரெச்சிங் போன்றவற்றை செய்யலாம். எடை பயிற்சி போன்றவற்றை மருத்துவ ஆலோசனையுடன் செய்யலாம். ‘மெடிட்டரேனியன் டயட்’ எனப்படும் அதிகளவில் காய்கறிகள், பழங்களுடன் சிறிது புரதம், அதைவிட குறைவாக கார்போஹைட்ரேட் எடுக்கலாம். உடல் எடை 10% குறைகிறது என்றாலே இரண்டு இலக்கத்தில் நிச்சயம் ரத்த அழுத்தம் குறையும். சரியான உடல் எடையில் இருப்பவர்களுக்கும் அப்படி குறையும் என்பதில்லை. நடைபயிற்சி எல்லோராலும் செய்ய முடியும். அதற்கு எந்த தடையும் இல்லை. மூட்டு வியாதி, மூட்டு வலி இருப்பவர்கள், கை, கால்களை நீட்டி மடக்கி பயிற்சி (Stretching) செய்யலாம். தோட்ட வேலை, வீட்டு வேலைகளையே உடற்பயிற்சியாக செய்யலாம். ஒரேமாதிரியான உடற்பயிற்சிகளையே தினமும் செய்யாமல் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு மாதிரியான உடற்பயிற்சிகளை செய்யலாம். ஒருவாரத்திற்கு 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்திருக்க வேண்டும். குறைந்தது 5 நாட்களாவது உடற்பயிற்சி செய்திருக்க வேண்டும். இதைத்தான் அமெரிக்க இதய சங்கம் கூறும் வழிமுறை. இவ்வளவு செய்தும் கட்டுப்பாட்டுக்குள் இல்லையென்றாலோ அல்லது இணை நோய்கள் இருந்தாலோ நிச்சயம் மருத்துவ ஆலோசனைகளை பெறுவது அவசியம். உயர் ரத்த அழுத்தத்திற்கு வாழ்நாள் முழுவதும் மாத்திரைகள் எடுக்க வேண்டுமா? இதனை முற்றிலும் குணப்படுத்த முடியுமா? பெரும்பாலானோருக்கு இதற்கு காலம் முழுவதும் மாத்திரை எடுக்க வேண்டும்தான். ஆனால், இதற்கான நிரந்தர தீர்வுக்கான ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. வாழ்வியல் முறைகளை மாற்றினாலே கட்டுப்பாட்டுக்குள் வரும் என்பது அறிவியல் பூர்வமான உண்மை.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உப்பு குறைவாக உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். குறை ரத்த அழுத்தம் என்பது என்ன? அதன் அறிகுறிகள் என்ன? குறை ரத்த அழுத்தம் என்பது நோய் கிடையாது. பெண்களுக்கு பொதுவாகவே 90/60 தான் ரத்த அழுத்தம் இருக்கும். அவர்களின் உடலமைப்புக்கு அப்படி இருக்கிறது. உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் மாத்திரை எடுத்து நார்மலாகிவிட்டது என்றால் சிலருக்கு தலைசுற்றல் இருக்கும். உடல்சோர்வு இருக்கும். அதனால் அவர்களுக்கு குறை ரத்த அழுத்தம் ஏற்படும். அவர்கள் அதற்கு மாத்திரைகள் எடுக்கலாம். நீர்ச்சத்துக் குறைபாட்டாலும் இது வரலாம். என்ன சாப்பிடலாம்? உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் என்னென்ன சாப்பிடலாம், எவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பது குறித்து, சென்னையை சேர்ந்த உணவியல் நிபுணர் புவனேஸ்வரி கூறினார். “உப்பு அதிகமாக உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். தினசரி உப்பின் அளவை குறைக்க வேண்டும். சிப்ஸ், ஊறுகாய், உப்பு அதிகம் உள்ள நொறுக்குத் தீனிகளை தவிர்க்க வேண்டும். தினசரி எடுத்துக்கொள்வதில் பாதி அளவையே எடுக்க வேண்டும். உலக சுகாதார மையத்தின்படி தினசரி ஆறு கிராம் உப்பு போதும். இந்திய உணவுகளில் 10-12 கிராம் உப்பு இருக்கிறது. அதனால் அதில் பாதி எடுக்க வேண்டும். அசைவ உணவுகளில் கொழுப்பு அதிகம். மேலும், அசைவ உணவுகளில் அதிக உப்பு, எண்ணெய், மசாலா சேர்க்கிறோம். கொழுப்பு அதிகமான ஆட்டிறைச்சி உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும். கொழுப்பு குறைவான கோழி இறைச்சி, மீன் உள்ளிட்டவற்றை சாப்பிடலாம். அவற்றையும் என்ன அளவு எடுக்க வேண்டும் என்றும் இருக்கிறது” என தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/c51nd7ekv99o
    • 15 APR, 2024 | 03:58 PM ஆர்.ராம் இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் எதிர்வரும் 19ஆம் திகதி வவுனியாவில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் கட்சி முகங்கொடுத்துள்ள வழக்குகள் தொடர்பிலும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் கட்சிகளால் முன்மொழியப்பட்டுள்ள பொதுவேட்பாளர் விடயம் சம்பந்தமாகவும் ஆராயப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு மீதான விசரணை எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக வழக்கு விடயங்களை கையாள்வது தொடர்பில் ஏகோபித்த நிலைப்பாட்டை எடுப்பதற்கு முனைவதாக கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இதேநேரம், கட்சியின் சிரேஷ்ட தலைவர் சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சாணக்கியன் மற்றும் வட மாகாண சபையின் தவிசாளர் சி.வி.கே.சிவஞானம் ஆகியோர் இதுவரை தமிழ் பொதுவேட்பாளர் விடயம் தொடர்பில் எதிர்மறையாக கருத்து வெளியிட்டுள்ளனர். அதேநேரம், சிவஞானம் சிறீதரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுவேட்பாளர் விடயத்தினை சாதகமாக பரிசீலிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர். எவ்வாறாயினும், கட்சியின் தலைவரோ செயலாளரோ இதுதொடர்பில் எவ்விதமான கருத்துக்களையும் வெளியிடவில்லை. இவ்வாறான பின்னணியிலேயே கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நடைபெறவுள்ளது. மேலும், எதிர்வரும் 19ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று மட்டக்களப்பில் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதால் அம்மாவட்டத்தினைச் சேர்ந்த தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் பங்கேற்பதில் சந்தேகமான நிலைமை ஏற்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181135
    • தனியாருடன் இணைந்த சேவையை வழங்க முடியாது : வட மாகாண போக்குவரத்து குழுமம் தெரிவிப்பு Published By: DIGITAL DESK 7    16 APR, 2024 | 10:14 AM யாழ்ப்பாணத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள நெடுந்தூர பயணிகள் பேருந்து தரிப்பிடத்தில் இருந்து தனியார் பேருந்துகளுடன் இணைந்த சேவையை வழங்க முடியாது என இலங்கை போக்குவரத்துச் சபையின் வடமாகாண குழுமத்தின் தலைவர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் புதிதாக கட்டப்பட்ட நெடுந்தூர பயணிகள் பேருந்து நிலையத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகள் இணைந்த நேர அட்டவணையில் பயணிக்க முடியும் ஆனால் இணைந்த சேவையை குறித்த தரிப்பிடத்தில் இருந்து வழங்க முடியாது . நேற்றைய தினம் திங்கட்கிழமை வட மாகாண ஆளுநர் செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வட மாகாண ஆளுநர் ஆகியோர் இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பேருந்து சங்கம் ஆகியவற்றுடன் புதிய பேருந்து தரிப்பிடத்தில் இணைந்த சேவையை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. குறித்த கலந்துரையாடலில் புதிய பேருந்து தரிப்பிடத்தில் இருவரும் இணைந்த சேவையை வழங்குவது தொடர்பில் வலியுறுத்தப்பட்ட நிலையில் தொழிற்சங்கங்கள் இணைந்த சேவைக்கு சம்மதிக்க மறுக்கின்றன. அதற்கான காரணங்களும் வலுவாக இருக்கிறது உதாரணமாக வவுனியா பேருந்து தரிப்பிடத்தில் பெரும்பாலான வெளி மாவட்டத்துக்கான சேவையை வழங்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் உள்ளே செல்லாது வெளியில் நின்றே பயணிகளை ஏற்றுகின்றன. இலங்கை போக்குவரத்துச் சபை சாரதிகள் நடத்துனர்கள் தனியார் பேருந்து சாரதி நடத்துனர்களால் தாக்கப்பட்ட சம்பவங்கள் பல தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ள நிலையில் அவர்களுடன் இணைந்து சேவையில் ஈடுபடும் போது பல்வேறு நெருக்கடிகளை சந்திக்க கூடும் என தொழில் சங்கங்கள் எண்ணுகின்றன. யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கான பேருந்து தரிப்பிடத்தில் இருந்து எமது பேருந்துகள் தனித்துவமான சேவைகளை வழங்கி வரும் நிலையில் அதனை நாம் குழப்புவதற்கு விரும்பவில்லை. வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் தனியாருடன் இணைந்த நேர அட்டவணையில் பயணிப்பதற்கு எமது விருப்பத்தை தெரிவித்துக் கொள்வதோடு இணைந்த சேவையை புதிய பேருந்து தரிப்பிடத்தில் மேற்கொள்வதற்கு சங்கங்கள் விரும்பவில்லை என அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/181189
    • மகிழ்சசியான சுற்றுலா மனித வாழ்விற்கு இன்றியமையாதது. தொடருங்கள்.  கடற்கரையோரம் காலாற நடப்பதற்காக கால்களை தயார் செய்தார் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் எதை நினைத்தீர்கள். 
    • கடைசி இடத்தில் ஆர்சிபி; தவறு நடந்தது எங்கே? கேப்டன் கூறுவது என்ன? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வீடியோ கேம்ஸிஸ் கிரிக்கெட் பார்த்த, விளையாடிய உணர்வு ஆர்சிபி, சன்ரைசர்ஸ் இடையிலான ஆட்டத்தின்போது ரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்கக்கூடும். 38 சிக்ஸர்கள், 43 பவுண்டரிகள், ஒரே போட்டியில் 549 ரன்கள், 4 பந்துவீச்சாளர்கள் 50 ரன்களுக்கு மேல் வாரி வழங்கிய சோகம், அதிகபட்ச ஸ்கோர் என நேற்றைய ஐபிஎல் டி20 ஆட்டத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளை பட்டியலிடலாம். ஆட்டத்தைப் பார்க்க வந்த ரசிகர்களுக்கு கழுத்துவலி கூட வந்திருக்கலாம். ஏனென்றால், கிட்டத்தட்ட 40 ஓவர்களில் 9 ஓவர்களில் வெறும் சிக்ஸர், பவுண்டரிகளாகவே அடிக்கப்பட்டது. மிகச்சிறிய மைதானமான சின்னசாமி ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் எப்படி வீசினாலும் பேட்டை நோக்கித்தான் வந்தது என்பதால் பேட்டர்கள் கருணையற்றவர்களாக மாறினர். யாருக்கு எப்படி பந்துவீசுவது எனத் தெரியாமல் ஆர்சிபி பந்துவீச்சாளர்களும், சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்களும் திணறி நின்றதைக் காண முடிந்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் குவித்தது. 288 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் சேர்த்து தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் அணி 6 போட்டிகளில் 4 வெற்றி, 2 தோல்வி என 8 புள்ளிகளுடன் 4வது இடத்துக்கு முன்னேறியது. நிகர ரன்ரேட்டிலும் பெரிய ஸ்கோர் அடித்தும் பெரிய முன்னேற்றமில்லாமல் 0.502 ஆக இருக்கிறது. டி20 போட்டிகளில் 250ரன்களுக்கு மேல் அதிகமுறை அடித்த அணி என்ற பெருமையை சன்ரைசர்ஸ் அணி நேற்று பெற்றது. ஆர்சிபி அணியைப் பொருத்தவரை இவ்வளவு பெரிய ஸ்கோரை அடித்தும் தோல்வி அடைந்த முதல் அணியாக மாறிவிட்டது. 7 போட்டிகளில் ஒரு வெற்றி, 6 தோல்விகள் என 2 புள்ளிகளுடன் ஆர்சிபி அணி கடைசி இடத்தில் நீடிக்கிறது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தொடக்கத்திலேயே அதிரடி காட்டிய ஹைதராபாத் வீரர்கள் சன்ரைசர்ஸ் அணிக்கு மிகப்பெரிய ஸ்கோரை அமைத்துக் கொடுத்தவர்களில் முக்கியமான பேட்டர் டிராவிஸ் ஹெட் 102 (41பந்துகள், 8சிக்ஸர், 9பவுண்டரி). ஏற்கெனவே ஆஸ்திரேலிய அணிக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப், உலகக் கோப்பையை வென்றதில் முக்கிய பங்கு வகித்த ஹெட், நேற்றைய ஆட்டத்தில் முதல் சதத்தைப் பதிவு செய்து ஆட்டநாயகன் விருது வென்றார். 39 பந்துகளில் சதம் அடித்து, அதிவேக சதம் அடித்த 4வது பேட்டர் என்ற பெயரை ஹெட் பதிவு செய்தார். சன்ரைசர்ஸ் அணிக்காக அதிவேகமாக சதம் அடித்த முதல் பேட்டர் என்ற பெயரை ஹெட் பெற்றார். இதற்கு முன் வார்னர் 43 பந்துகளில் சதம் அடித்திருந்தார். மற்றொரு பேட்டர் ஹென்ரிச் கிளாசன் அசுரத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த சீசன் முழுவதும் பந்துவீச்சாளர்களுக்கு சிம்மசொப்னமாக திகழ்ந்துவரும் கிளாசன் 31 பந்துகளில் 67 ரன்கள்(7சிக்ஸர், 2 பவுண்டரி) அடித்து ஆட்டமிழந்தார். இது தவிர மார்க்ரம் 32(17பந்துகள், 2சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள்), அப்துல் சமது37(10 பந்துகள் 3 சிக்ஸர்கள், 4பவுண்டரிகள்) என ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த 4 பேட்டர்கள் அடித்த ஸ்கோர்தான் மற்றவகையில் பெரிதாக எந்த பேட்டரும் ஸ்கோர் செய்யவில்லை.   பட மூலாதாரம்,SPORTZPICS சன்ரைசர்ஸ் கேப்டன் கூறியது என்ன? சன்ரைசர்ஸ் கேப்டன் கம்மின்ஸ் கூறுகையில் “ நானும் பேட்டராக இருந்திருக்கலாம் என நினைக்க வைக்கிறது. மும்பைக்கு எதிரான ஆட்டத்துக்குப் பிறகு இப்போது மீண்டும் பெரிய ஸ்கோர் அடித்துள்ளோம். போட்டி பேட்டர்கள் ராஜ்ஜியமாகமாறி வருகிறது. இந்த ஆடுகளத்தை படிக்க நானும் முயற்சித்தேன். எங்கள் ஆட்டம் மகிழ்ச்சியாக இருக்கிறது. 4 வெற்றிகள் பெற்றுள்ளோம். பேட்டர்களுக்கு முழுசுதந்திரம் அளித்துள்ளோம். அதனால்தான் பெரிய ஸ்கோர் வருகிறது” எனத் தெரிவித்தார் ஆர்சிபி கொடுத்த பதிலடி ஆர்சிபி அணியிலும் கேப்டன் டூப்பிளசிஸ் 28 பந்துகளில் 62 ரன்கள்(4சிக்ஸர், 7பவுண்டரி), விராட் கோலி 42 (2சிக்ஸர், 6பவுண்டரி), தினேஷ் கார்த்திக் 35 பந்துகளில் 85(7சிக்ஸர், 5 பவுண்டரி) என விளாசினர். இதில் ஆர்சி அணியில் நடுவரிசை பேட்டர்கள் ரஜத் பட்டிதார், வில் ஜேக்ஸ், சவுகான் ஆகிய மூவவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்காமல் தங்களின் பங்களிப்பை வெளிப்படுத்தி இருந்தால், ஆர்சிபி அணி ஒருவேளை வென்றிருக்கலாம். சன்ரைசர்ஸ் அடித்த ஸ்கோருக்கு தாங்கள் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்று ரீதியில்தான் கடைசி நேரத்தில் தினேஷ் கார்த்திக் ஆக்ரோஷமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகழ்த்தப்பட்ட சாதனைகள் இந்த ஆட்டத்தில் சில சுவையான சம்பவங்கள் நடந்துள்ளன. ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு அணி சேர்த்த அதிகபட்ச ஸ்கோரான 287 ரன்களை சன்ரைசர்ஸ் அணி பதிவு செய்தது. இதற்கு முன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக இந்த சீசனில் 277 ரன்கள் சேர்த்ததுதான் சாதனையாக இருந்தது, தன்னுடைய சாதனையை அந்த அணியை முறியடித்தது. ஆடவர் டி20 போட்டியில் சேர்க்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். ஓட்டுமொத்தமாக நேற்றைய ஆட்டத்தில் 549 ரன்கள் சேர்க்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. இதற்கு முன் ஹைதராபாத்தில் இந்த சீசனில் நடந்த மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் இடையிலான ஆட்டத்தில் ஒட்டுமொத்தமாக 523 ரன்கள் சேர்க்கப்பட்டதுதான் அதிகபட்சமாக இருந்தநிலையில் அந்த சாதனை முறியடிக்கப்பட்டது. ஆர்சிபி அணிக்கு எதிராக நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி 22 சிக்ஸர்களை விளாசி, ஒரு இன்னிங்ஸில் ஒரு அணிக்கு எதிராக அடிக்கப்பட்டஅதிகபட்ச சிக்ஸர்களைப் பதிவு செய்தது. இதற்கு முன் 2013-இல் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக ஆர்சிபி 21 சிக்ஸர்களை அடித்த நிலையில் அதை சன்ரைசர்ஸ் முறியடித்துவிட்டது. இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் சேர்ந்து 38 சிக்ஸர்களை விளாசின. டி20 போட்டியில் அதிக பட்சமாக 262 ரன்கள் சேர்த்தும் தோல்வி அடைந்த முதல் அணி என்ற பெயரை ஆர்சிபி பெற்றது. இதற்குமுன் 2023ம் ஆண்டில் செஞ்சூரியனில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 258 ரன்களை மேற்கிந்தியத்தீவுகள் சேர்த்தும் தோல்வி அடைந்ததுதான் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. ஆர்சிபி அணியில் பந்துவீச்சாளர்கள் டாப்ளி(68), யாஷ் தயார்(51), லாக்கி பெர்குஷன்(52), விஜயகுமார்(64) என 4 பந்துவீச்சாளர்கள் 50 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினர். ஒரு போட்டியில் 4 பந்துவீச்சாளர்கள் 50 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்தது இதுதான் முதல்முறை. சன்ரைசர்ஸ் அணியில் நேற்று மட்டும் 4 பேட்டர்கள் ஒரு சதம் பார்ட்னர்ஷிப்பும் உள்பட, 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஐபிஎல் வரலாற்றில் இது 2வது முறையாக நடக்கிறது. இதற்கு முன் 2008-இல் ஆர்சிபிக்கு எதிராக கொல்கத்தா அணியின் 4 பேட்டர்கள் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர்.   பட மூலாதாரம்,SPORTZPICS ஆர்சிபி இதயத்தை உடைத்த ஹெட் ஆர்சிபி அணி நேற்றைய ஆட்டத்தில் முறையான சுழற்பந்துவீச்சாளர்கள் இல்லாமல் களமிறங்கியது. டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா என இரு இடதுகை பேட்டர்கள் களத்துக்கு வந்ததும் பகுதிநேர சுழற்பந்துவீச்சாளரான ஜேக்ஸை பந்துவீசச் செய்து சோதிதித்துப் பார்த்தது. முதல் இரு ஓவர்கள் மட்டும் பொறுமை காத்த ஹெட், அபிஷேக் அடுத்தடுத்த ஓவர்களில் பவுண்டரி, சிக்ஸர்களாக அடிக்கத் தொடங்கினர். எந்தப் பந்துவீச்சாளர் பந்துவீசினாலும் ஹெட், அபிஷேக் பேட்டிலிருந்து பவுண்டரி, சிக்ஸர்களாக பறந்தன. ஆர்சிபிக்காக முதல்முறையாக களமிறங்கிய பெர்குஷன் 5-ஆவது ஓவரில் ஹெட் சிக்ஸர்களாக விளாசி 18 ரன்களையும், யாஷ் தயால் ஓவரில் பவுண்டரி, சிக்ஸர் என 20 ரன்களையும் சேர்த்தார். 20 பந்துகளில் ஹெட் அரைசதம் அடித்தார். பவர்ப்ளே ஓவரில் சன்ரைசர்ஸ் 76 ரன்கள் சேர்த்தது. பவர்ப்ளேயில் சன்சைர்ஸ் சேர்த்த 3வது அதிகபட்ச ரன்களாகும். இதற்குமுன் மும்பை அணிக்கு எதிராக 81 ரன்கள், சிஎஸ்கேவுக்கு எதிராக 77ரன்களும் சேர்த்திருந்தது. 7.1 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 100 ரன்களை தொட்டது. அபிஷேக் சர்மா 34 ரன்களில் டாப்ளே பந்துவீச்சில் பெர்குஷனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு ஹெட், அபிஷேக் 108 ரன்கள் என வலுவான அடித்தளம் அமைத்தனர். கிளாசன் சிக்ஸர் மழை 2-ஆவது விக்கெட்டுக்கு கிளாசன் களமிறங்கி ஹெட்டுடன் சேர்ந்தார். முதல் 5 பந்துகளில் 3 ரன்கள் சேர்த்து மெதுவாகத் தொடங்கிய கிளாசன், அதன்பின் வாண வேடிக்கை நிகழ்த்தினார். டி20 போட்டிகளில் ஆபத்தான பேட்டராக கருதப்படும் கிளாசன், ஆர்சிபி பந்துவீச்சாளர்களை நேற்று வதம் செய்தார். பெர்குஷன், யாஷ் தயால் ஓவரில் சிக்ஸர்களும், பவுண்டரிகளும் கிளாசன் பேட்டிலிருந்து பறந்தன. மறுபுறம் டிராவிஸ் ஹெட்டும் சிக்ஸர், பவுண்டரி மழை பொழிந்து, 39 பந்துகளில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். டிராவிஸ் ஹெட் 102 ரன்கள் சேர்த்தநிலையில் பெர்குஷன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு இருவரும் 57 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அதிரடியாக ஆடிய கிளாசன் 23 பந்துகளில் அரைசதம் அடித்தார். 14.1 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 200 ரன்களைத் தொட்டது. கிளாசன் 67 ரன்கள் சேர்த்தநிலையில் பெர்குஷன் பந்துவீ்ச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். இந்த கிளாசன், ஹெட் ஆகிய இரு பேட்டர்களும் ஆட்டமிழந்து சென்றபின் ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். கடைசி நேரத்தில் களமிறங்கிய அப்துல் சமது, மார்க்ரம் இருவரும் சூப்பர் கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினர். கடைசி இரு ஓவர்களில் மட்டும் இருவரும் 46 ரன்களைக் குவித்தனர்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கடைசி வரை போராடியது பெருமை ஆர்சிபி கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “இது முறையான டி20 ஆடுகளம். இன்று சேர்த்த ரன்களை பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது. அதுவே சாதனையாக மாறிவிட்டது. இந்த ஆடுகளத்தில் 270 ரன்கள்கூட சேஸிங் செய்யக்கூடியதுதான். இந்த ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் பந்துவீசுவது கடினம். பாவம் பந்துவீச்சாளர்கள் பல நுணுக்கங்களை பயன்படுத்தி வீசியும் பயன் இல்லை. பேட்டர்கள் பக்கமே ஆட்டம் தொடர்ந்து போவது கடினம்தான். வித்தியாசமாக சந்திக்க வேண்டும். எங்கள் பேட்டிங்கில் சில தவறுகள் உள்ளன. அதை சரிசெய்வோம். பவர்ப்ளேக்குப்பின் நாங்கள் தவறுகளைத் திருத்த வேண்டியுள்ளது. ஆனால் கடைசிவரை எங்கள் வீரர்கள் போராடியது பெருமையாக இருந்தது. பந்துவீச்சைப் பொருத்தவரை பந்துவீச்சாளர்கள் எப்போதும் மனதை உற்சாக வைத்திருக்கவேண்டும்” எனத் தெரிவித்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபிக்கு நம்பிக்கை அளித்த தினேஷ் கார்த்திக் ஆர்சிபியும் பதிலடி கொடுக்க முயன்று, விக்கெட்டுகளை இழந்திருந்த தருணத்தில் தினேஷ் கார்த்திக் களமிறங்கி, அரங்கில் இருந்த ரசிகர்களுக்கு தனது பேட்டால் விருந்தளித்தார். லாம்ரோருடன் சேர்ந்து 59 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த டிகே, சன்ரைசர்ஸ் பந்துவீச்சை துவம்சம் செய்தார். உனத்கட், மர்கண்டே வீசிய 13 மற்றும் 14வது ஓவர்களில் மட்டும் தினேஷ் கார்த்திக், லாம்ரோர் சேர்ந்து 46 ரன்கள் சேர்த்தனர். டிகே அடித்த ஷாட்களால் ரன்ரேட்டும் வேகமாக உயர்ந்தது, ரசிகர்களுக்கும் ஆர்சிபி வென்றுவிடும் என்ற நம்பிக்கை வந்தது. 23 பந்துகளில் டிகே அரைசதம் அடித்தார். லாம்ரோர் 19 ரன்னில் கம்மின்ஸ் பந்துவீச்சில் போல்டாகினார். அடுத்துவந்த ராவத்துடன் சேர்ந்து தினேஷ் கார்த்திக் வெளுத்துவாங்கினார். அனுஜ் ராவத்துடன் சேர்ந்து 7-வது விக்கெட்டுக்கு 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த தினேஷ் கார்த்திக் 83 ரன்னில் நடராஜன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். தினேஷ் கார்த்திக் களத்தில் இருந்தவரை ஆர்சிபி ரசிகர்களுக்கு வெற்றி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தனர். ஆனால் அவர் வெளியேறியபின், ரசிகர்களும் கலையத் தொடங்கினர். தினேஷ் கார்த்திக் கடைசிவரை போராடியும், ஆர்சிபி 25 ரன்களில் தோற்றது. https://www.bbc.com/tamil/articles/cj5l2j16y69o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.