Jump to content

தேரரின் கோரிக்கையை நிராகரித்த வாரியப்பொல பொலிஸ் பரிசோதகருக்கு நேர்ந்த கதி


Recommended Posts

சட்ட விரோத மதுபான உற்பத்தியாளர் ஒருவரைக் கைதுசெய்ய வேண்டாம் என தேரர் ஒருவர் விடுத்த கோரிக்கையை மீறி செயற்பட்டமைக்காக,  பொலிஸ் பரிசோதகர் தர அதிகாரி ஒருவர் மீது பொலிஸ் நிலையத்துக்குள்ளேயே தாக்குதல் நடாத்தப்பட்ட சம்பவமொன்று வாரியப்பொல பொலிஸ் நிலையத்தில் பதிவாகியுள்ளது.

வாரியப்பொல பொலிஸ் நிலையத்துக்கு புதிதாக கடமைகளுக்காக சென்ற, அப்பொலிஸ் நிலையத்தின் சுற்றிவளைப்பு பிரிவின் பொறுப்பதிகாரி மீதே இவ்வாறு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

கடந்த 19 ஆம் திகதி இரவு, பிரதேசத்தின் சட்ட விரோத மதுபான உற்பத்தியாளராக கருதப்படும் சந்தேக நபர் ஒருவர், குறித்த பொலிஸ் அதிகாரிக்கு தொலைபேசியில் அழைத்து, தன்னை  கைதுசெய்ய வேண்டாம் என கோரியுள்ளார்.

இது குறித்து உடனடியாக ஏனைய அதிகாரிகளையும் தெளிவுபடுத்தியுள்ள பொலிஸ்  பரிசோதகர், அது தொடர்பில் பொலிஸ் புத்தகத்திலும் தேவையான பதிவுகளை இட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.

இந்நிலையில், நேற்று 20 ஆம் திகதி காலை, பிரதேசத்தின் விகாரை ஒன்றின் விகாரதிபதி எனக் கருதப்படும் தேரர் ஒருவர்,  தொலைபேசியில் அழைத்து,   பொலிஸ் புத்தக பதிவுகளை நீக்குமாரும், சந்தேக நபரை கைது செய்ய வேண்டாம் எனவும் பொலிஸ் பரிசோதகரிடம் கோரியுள்ளார்.

இதேவேளை வேறு கடமைகளுக்காக வெளியே சென்ற போது, குறித்த பொலிஸ் பரிசோதகரை தேரர் உள்ளிட்டோர் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். மேலும்,அன்றைய தினம்  வெளியே கடமைகளை முடித்துவிட்டு  குறித்த பொலிஸ் பரிசோதகர் பொலிஸ் நிலையம் வந்த போது, அங்கு குறித்த தேரர், சட்ட விரோத மதுபான உற்பத்தியாளர் என கருதப்படும் நபர் உள்ளிட்ட பலர் இருந்துள்ளனர்.

இந்நிலையில்,  வாரியப்பொல பொலிஸ் நிலையத்தின், சிறைக் கூடத்துக்கு அருகே, தேரருடன் வந்த நபர் ஒருவர் குறித்த பொலிஸ் பரிசோதகரை சுவருடன் சேர்த்து பிடித்து தாக்கிகியுள்ளதாகவும், இதன்போது உடன் இருந்த தேரர் உள்ளிட்டோர் அந்த பொலிஸ் அதிகாரியை மிகக் கேவலமாக திட்டியதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.

எவ்வாறாயினும்  தாக்குதல் நடாத்திய நபரை உடனடியாக பொலிஸார் கைது செய்துள்ளனர். சுவருடன் சேர்த்து தாக்கும்போது பொலிஸ் பரிசோதகரின் தலைப் பகுதியில்  உபாதை ஏற்பட்டுள்ள நிலையில், அவர் நிக்கவரெட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் இன்று வாரியபொல நீதிவான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டு எதிர்வரும் 29 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந் நிலையில், பொலிஸ் பரிசோதகர் மீதான தாக்குதலின் போது, அங்கு சென்ற,  சட்டவிரோத கோரிக்கையை முன்வைத்த தேரர் கைதுசெய்யப்படாத நிலையில், அது குறித்து பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்னவை வீரகேசரி வினவியது.

இதற்கு பதிலளித்த அவர், குறித்த சம்பவத்தில் கூறப்படும் அனைத்து விடயங்கள் தொடர்பிலும் உதவி பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த விசாரணை தகவல்களுக்கு அமைய  மேலதிக கைதுகள் குறித்து முடிவு எடுக்கப்படும் என சுட்டிக்காட்டினார்.

https://www.virakesari.lk/article/80458

Link to comment
Share on other sites

காவிகள் மேல் கை வைக்க முடியாது। இது இலங்கையிலும் , இந்தியாவிலும் எழுதப்படாத சடடம்।

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, போல் said:

வாரியப்பொல பொலிஸ் நிலையத்துக்கு புதிதாக கடமைகளுக்காக சென்ற, அப்பொலிஸ் நிலையத்தின் சுற்றிவளைப்பு பிரிவின் பொறுப்பதிகாரி மீதே இவ்வாறு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

அவசர  பட்டு விட்டார் பொறுப்பதிகாரி. இளைஞராக இருப்பார் போலும்.  தேரரே உரிமையாளர் என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்  இனிப் பழகி விடுவார். தீமைகள் அகற்றப்படாவிட்டால் நல்லவர்களும் தீயவர்களாவது கட்டாயமாகிவிடும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, satan said:

அவசர  பட்டு விட்டார் பொறுப்பதிகாரி. இளைஞராக இருப்பார் போலும்.  தேரரே உரிமையாளர் என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்  இனிப் பழகி விடுவார். தீமைகள் அகற்றப்படாவிட்டால் நல்லவர்களும் தீயவர்களாவது கட்டாயமாகிவிடும். 

மூன்றாம் உலக நாடுகளிலுள்ள மிகப் பெரிய பிரச்சனை நாம் வாழும் சூழலுடன் எங்களை பழக்கப் படுத்திக் கொள்வது. பிழையான சூழல் (Tixic environment) என்று தெரிந்தும் அதனை மாற்றுவதற்கு முயற்சிப்பதில்லை அல்லது மாற்றத்திற்குப் பயப்படுவது. ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தேரர் நிறைய தமிழ்ப் படம் பார்ப்பவர் போலுள்ளது.

Link to comment
Share on other sites

4 hours ago, Vankalayan said:

காவிகள் மேல் கை வைக்க முடியாது। இது இலங்கையிலும் , இந்தியாவிலும் எழுதப்படாத சடடம்।

தேரர்களோடு மோத விரும்பாமல், தனது படைகள் இடித்த புத்தவிகாரைகளைத் திரும்பவும் ராச ராச சோழன் கட்டிக் கொடுத்தது சரித்திர வரலாறு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிப்பட்ட தேர ர்களுக்கு இருட்டடிதான் சரி, பகலில் ஒரு வாழ்கை இரவில் மறுமுகம்...

1 hour ago, Paanch said:

தேரர்களோடு மோத விரும்பாமல், தனது படைகள் இடித்த புத்தவிகாரைகளைத் திரும்பவும் ராச ராச சோழன் கட்டிக் கொடுத்தது சரித்திர வரலாறு.

ராஐதந்திரம்  😃

Link to comment
Share on other sites

6 hours ago, Paanch said:

தேரர்களோடு மோத விரும்பாமல், தனது படைகள் இடித்த புத்தவிகாரைகளைத் திரும்பவும் ராச ராச சோழன் கட்டிக் கொடுத்தது சரித்திர வரலாறு.

போலீசே கள்ளச்சாராயம் காச்சி தேரர்களுக்கு குடுக்கட்டும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல்; தேரர் கைது

வாரியபொல பொலிஸ் நிலையத்தில் வைத்து கசிப்பு உற்பத்தி சந்தேக நபர் தொடர்பான விவகாரத்தில் பொலிஸ் கான்ஸ்டபிளை தாக்கிய குற்றச்சாட்டில் தேரர் ஒருவர் இன்று (25) கைது செய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் கசிப்பு உற்பத்தி செய்யும் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய வேண்டாம் என்று குறித்த தேரர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரியிடம் கோரியுள்ளார்.

இதனை பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு அறிவித்த அந்த பொலிஸ் அதிகாரி, பதிவேட்டிலும் தொலைபேசி அழைப்பு பற்றி பதிவு செய்துள்ளார்.

மறுநாள் குறித்த பதிவுகளை நீக்குமாறு தொலைபேசியில் அழைப்பெடுத்து குறித்த பொலிஸ் அதிகாரியை தேரர் எச்சரித்துள்ளார்.

பின்னர் தேரர் மற்றும் கசிப்பு உற்பத்தியாளர் உள்ளிட்டோர் பொலிஸ் நிலையம் சென்றுள்ளனர். அங்கு அவர்களுடன் சென்ற ஒருவர் கான்ஸ்டபிளை தாக்கியுள்ளார்.

சம்பவத்தை அடுத்து தாக்கிய நபர் உடனடியாக கைது செய்யப்பட்டார். இந்நிலையிலேயே தேரர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

 

https://newuthayan.com/பொலிஸ்-அதிகாரி-மீது-த/

 

Link to comment
Share on other sites

17 minutes ago, உடையார் said:

சம்பவத்தை அடுத்து தாக்கிய நபர் உடனடியாக கைது செய்யப்பட்டார். இந்நிலையிலேயே தேரர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

அப்பாவி மக்களை படுகொலை செய்த சிங்கள-பௌத்த படுகொலைகாரர்களுக்கு மன்னிப்பளிக்கும் சிங்கள-பௌத்த போர்க்குற்றவாளி கோட்டாபய கள்ளச்சாராய பௌத்த தேரருக்கு மன்னிப்பு கொடுப்பது விரைவில் நடக்கலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.