Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

செயற்கை சுவாசக்கருவி மூலம் மூச்சு உள்ளே சென்று வெளியே வருகின்றது.

ஒவ்வொரு மூச்சுமே ஒரு போராட்டம்.

சுயநினைவு திரும்புமா? தெரியாது.

ஆனால்,

திரும்பவேண்டும்.

பின்பு...?

கண்கள் விழிக்கவேண்டும். சாதுவாக அல்ல, அவை நன்றாய் அகல விழிக்கவேண்டும். ஆட்கள், பொருட்கள் தெளிவாய், துல்லியமாக தெரியவேண்டும். 

மேலும்?

காதுகள் கேட்கவேண்டும். இரண்டு காதுகளும் கேட்கவேண்டும். மனித குரல்கள், குருவியின் ஓசை, கோயில் மணியோசை, வாகன இரைச்சல் அனைத்துமே காதுகளில் ஒலிக்கவேண்டும்.

இவை மட்டும் போதுமா?

இல்லையே. 

படுத்த படுக்கையாக சரிந்த ஆள் மீள எழவேண்டும். எழுந்து நடமாடவேண்டும். நாளாந்த வாழ்க்கை வழமைக்கு திரும்பவேண்டும். சிரித்து கதைத்து பேசவேண்டும். ஒன்றாக அமர்ந்து படம் பார்க்கவேண்டும். நடக்க செல்லவேண்டும். முன்புபோல் இன்னும் பலநூறு காரியங்கள் சேர்ந்தே செய்யவேண்டும்.

இதற்கு என்ன செய்யலாம்?

கோயிலிற்கு சென்று ஒரு அர்ச்சனை செய்யலாமா?

இல்லை, கோயில் திறந்து இருக்குமா என்பதே நிச்சயம் இல்லை. 

ஆட்களுக்கு சொல்லி கூட்டு பிரார்த்தனை செய்யலாமா?

ஜெபிக்க சொல்லலாமா?

வேறு ஏதாவது...

என்ன செய்யலாம்?

அவசரமாக ஏதாவது செய்தாக வேண்டும்.

முயற்சி  பயன் அளிக்குமோ தெரியாது. ஆனால், எங்கள் மனம் அமைதி அடைவதற்கு எதையாவது செய்து பார்க்க வேண்டும். எமது அன்புக்குரியவர் பிழைக்கவேண்டும்.

நேற்றுவரை உலகம் நன்றாகவே சுழன்றது.

இன்று ஏன்? இப்படி?

நோய், துன்பம், பிணி, இறப்பு, சாக்காடு இயல்பு நிலை. அது ஏன் எமக்கு வரும் என்பதை உணரமுடியாமல் போனது?

மற்றவர்களுக்கு அவை நடக்கும்போது அதன் தாக்கம் உணரப்படமுடியவில்லை. எமக்கு ஒன்றும் நடக்காது என்பதையே நம்பி இவ்வளவு காலமும் ஓடியது.

என்றாலும் கடைசியில்.. 

எமக்கு விரித்த வலையின் விரிப்பினுள் எதிர்பாராத தருணத்தில் கால்கள் முடங்கிவிட்டன?

இனி என்ன செய்வது?

மனம் சுதாகரித்தது.

பரிவு, பரபரிவு நரம்புத்தொகுதி புத்துணர்ச்சி பெற்றதோ? நீளவளைய மையவிழையத்தில் ஏதேனும் அதிசயம் நடந்ததோ? மூளையில் எந்தப்பகுதியில் என்ன நடந்தது? தெரியவில்லை.

இப்போது..

உலகம் தேவலோகமாக தெரிகின்றது.

நேற்றைய நரக வாழ்க்கை இன்று சொர்க்கமாகி விட்டது.

எவ்வளவு காசு இருந்து என்ன. பட்டங்கள் பெற்று என்ன. சுற்றங்கள் அமைந்து என்ன. அவை கிடைத்து என்ன.. கிடைக்காவிட்டாலும் என்ன..

அப்பாடா சாமி. எல்லாமே போதும். போதும். போதும். போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து

நிம்மதியாக படுத்து எழும்ப வேண்டும். வயிறு பசியார உண்ண உணவு வேண்டும். 

வேறு என்ன? 

வியாதி ஒன்றும் வேண்டாம். 

சுவாசப்பைகள் நன்கு தொழிற்படட்டும். இதயம் தொடங்கி தோல், தசை, கைகள், கால்கள், சிறிது பெரிதென என வியாபித்துள்ள உடல் உறுப்புக்கள் எல்லாம் சீராக செயற்படட்டும். புலன்கள், மூளை எல்லாம் நேர்த்தியாக இயங்கட்டும். 

ஆளை தனிமைப்படுத்தி வெண்டிலேட்டரில் வதக்கி எடுக்கும் நிலமை வரவே வரக்கூடாது.

இன்றைய நாள் நல்ல நாள்.

இன்றைய பொழுது நல்ல பொழுது.

இருப்பதை மறந்துவிட்டு இல்லாததை தேடி ஓடும் வாழ்க்கை நிலை மாறி,

நம்மிடம் நமக்கு வாய்த்த அரிய பொக்கிசங்களை இனம் கண்டும்,

அவற்றின் நன்மைகளை எண்ணிப்பார்த்தும்,

மகிழ்கின்ற..

உணர்கின்ற..

வாழ்கின்ற..

தருணம்

இது!

:100_pray::100_pray::100_pray:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

 

உலகம் தேவலோகமாக தெரிகின்றது.

நேற்றைய நரக வாழ்க்கை இன்று சொர்க்கமாகி விட்டது.

எவ்வளவு காசு இருந்து என்ன. பட்டங்கள் பெற்று என்ன. சுற்றங்கள் அமைந்து என்ன. அவை கிடைத்து என்ன.. கிடைக்காவிட்டாலும் என்ன..

அப்பாடா சாமி. எல்லாமே போதும். போதும். போதும். போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து

நிம்மதியாக படுத்து எழும்ப வேண்டும். வயிறு பசியார உண்ண உணவு வேண்டும். 

வேறு என்ன? 

வியாதி ஒன்றும் வேண்டாம். 

சுவாசப்பைகள் நன்கு தொழிற்படட்டும். இதயம் தொடங்கி தோல், தசை, கைகள், கால்கள், சிறிது பெரிதென என வியாபித்துள்ள உடல் உறுப்புக்கள் எல்லாம் சீராக செயற்படட்டும். புலன்கள், மூளை எல்லாம் நேர்த்தியாக இயங்கட்டும். 

ஆளை தனிமைப்படுத்தி வெண்டிலேட்டரில் வதக்கி எடுக்கும் நிலமை வரவே வரக்கூடாது.

இன்றைய நாள் நல்ல நாள்.

இன்றைய பொழுது நல்ல பொழுது.

இருப்பதை மறந்துவிட்டு இல்லாததை தேடி ஓடும் வாழ்க்கை நிலை மாறி,

நம்மிடம் நமக்கு வாய்த்த அரிய பொக்கிசங்களை இனம் கண்டும்,

அவற்றின் நன்மைகளை எண்ணிப்பார்த்தும்,

மகிழ்கின்ற..

உணர்கின்ற..

வாழ்கின்ற..

தருணம்

இது!

:100_pray::100_pray::100_pray:

பட்டறிவு இனி கண்ணைத்திறக்குமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருப்பதை மறந்துவிட்டு இல்லாததை தேடி ஓடும் வாழ்க்கை நிலை மாறி,

நம்மிடம் நமக்கு வாய்த்த அரிய பொக்கிசங்களை இனம் கண்டும்,

அவற்றின் நன்மைகளை எண்ணிப்பார்த்தும், மகிழ்கின்ற..உணர்கின்ற..

வாழ்கின்ற..தருணம்

 

  கொடிய நோயால்  இன்று நாம் காணும்  பட்டறிவு  . இவை உங்களுக்கும் எங்களுக்கும்  நல்  வரமாக கிடைத்திருக்கிறது . கடவுளுக்கு நன்றி சொல்லி மென்மேலும் உற்றார் உறவுகளை காக்க வேண்டுவோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் ....நடந்தவைகளை மறந்து விடுவோம்.

நடக்கப் போகின்றவைகளை யார் அறிவார்.

இந்த நிமிடத்தில் வாழ்வோம்.....!

அதுதான் தற்சமயம் எமக்கு கிடைக்கும் வெகுமதி.....!

நியாயத்தைக் கதைப்பது எனக்கும் பிடித்திருக்கு......!    😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

இன்றைய நாள் நல்ல நாள்.

இன்றைய பொழுது நல்ல பொழுது.

இருப்பதை மறந்துவிட்டு இல்லாததை தேடி ஓடும் வாழ்க்கை நிலை மாறி,

நம்மிடம் நமக்கு வாய்த்த அரிய பொக்கிசங்களை இனம் கண்டும்,

அவற்றின் நன்மைகளை எண்ணிப்பார்த்தும்,

இது தான் மனிதம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டறிவு நிச்சயம் கண்ணை திறக்கவேண்டும் உடையார் 👍

எங்கள் அறிவு மற்றவர்களுக்கு பயன்படவும், மற்றவர்கள் அறிவு எங்களுக்கு பயன்படவும் இந்த மனிதசமூகம் இக்கட்டான இந்தக்காலகட்டம் மூலம் நல்ல பல விடயங்களை கற்று முன்னேறட்டும் நிலாமதி 👍.

இந்த நிமிடத்தில் வாழ்வது இலகுவானது இல்லை. அது வரம். எங்கள்  குரங்கு மனம் அதற்கு இடம் கொடாது. அவரவர் மனவலிமையின் உதவியில் இந்த நிமிடத்தில் வாழ முயற்சிப்போம் சுவை 👍.

மனித  மனம் மனிதனுக்கு அழகு, அழிவு, அறிவு அனைத்தையும் கொடுக்கின்றது ஈழப்பிரியன்👍
 

Link to comment
Share on other sites

On 21/4/2020 at 20:18, நியாயத்தை கதைப்போம் said:

வியாதி ஒன்றும் வேண்டாம். 

சுவாசப்பைகள் நன்கு தொழிற்படட்டும். இதயம் தொடங்கி தோல், தசை, கைகள், கால்கள், சிறிது பெரிதென என வியாபித்துள்ள உடல் உறுப்புக்கள் எல்லாம் சீராக செயற்படட்டும். புலன்கள், மூளை எல்லாம் நேர்த்தியாக இயங்கட்டும். 

ஆளை தனிமைப்படுத்தி வெண்டிலேட்டரில் வதக்கி எடுக்கும் நிலமை வரவே வரக்கூடாது.

ஆம், நோயற்ற வாழ்வே நிறையற்ற செல்வம் என்பது மூதாதையர் எமக்கு சொல்லிச்சென்ற செய்தி..  

எனது உயரதிகாரி சொல்லுவார்,

படுத்தால் நித்திராதேவி அணைக்கவேண்டும்; 
எழுந்தால் முதல் செல்லுமிடம் மலசலகூடமாகட்டும்;
அதுக்கு வேலை செய் மிகுதி நேரத்தில்  🙂 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ampanai said:

ஆம், நோயற்ற வாழ்வே நிறையற்ற செல்வம் என்பது மூதாதையர் எமக்கு சொல்லிச்சென்ற செய்தி..  

எனது உயரதிகாரி சொல்லுவார்,

படுத்தால் நித்திராதேவி அணைக்கவேண்டும்; 
எழுந்தால் முதல் செல்லுமிடம் மலசலகூடமாகட்டும்;
அதுக்கு வேலை செய் மிகுதி நேரத்தில்  🙂 

நன்றாகத் தெரியுமா, படுத்தால் நித்திராதேவி அணைக்க வேண்டும் என்றுதான் சொன்னாரா....அவருக்கு என்ன வயதிருக்கும்......!   🤔

Link to comment
Share on other sites

7 hours ago, suvy said:

நன்றாகத் தெரியுமா, படுத்தால் நித்திராதேவி அணைக்க வேண்டும் என்றுதான் சொன்னாரா....அவருக்கு என்ன வயதிருக்கும்......!   🤔

61 வயது. திருமணம் ஆகாதவர். மட்டக்களப்பை பூர்வீகமாக கொண்டவர்.

  1. கட்டிலுக்கு போனால் நித்திரை லபக்கென்று வரவேண்டும் 
  2. எழும்பியதும் நம்பர் 2 சடக்கென்று போகவேண்டும் 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டிலுக்கு போனால் நித்திரை உடனடியாக வருவது, காலை எழுந்ததும் இலகுவாக க*கா போவது நல்ல விசயம் அம்பனை 👍.

கட்டிலுக்கு போய்விட்டு நித்திரை இல்லாமல் மாறி மாறி புரண்டு உருளுவதும் இடையிடையே போனை சுரண்டிக்கொண்டு இருப்பதும், இவ்வாறே காலையில் க*கா போகாமல் முக்கிக்கொண்டு இருப்பதுவும் நல்ல அறிகுறிகள் இல்லை.

நாங்கள் சிறிதுகாலமாய் கொரோனா கொரோனா என்று அலறி அடித்து ஓடுகின்றோம். இந்த வாட்ஸப், வைபர், பேஸ்புக் எல்லாமே கூட அலறி அடித்துக்கொண்டு ஓடவேண்டிய கிருமிகளே. எங்கள் உடலையும், உளத்தையும் சின்னாபின்னமாக்கி வாழ்க்கையையே நாசமாக்கக்கூடிய வலிமை இவற்றுக்கு உள்ளது.

எல்லாம் அளவாக கட்டுப்பாட்டுடன் பாவித்தால் பிரச்சனை இல்லை. ஆனால், அளவுடன் நிற்பாட்டும் அளவுக்கு எங்கள் ஒவ்வொருவருக்கும் மனக்கட்டுப்பாடு உள்ளதா? கொலஸ்ரோல், சுகர் போல இவற்றின் அளவு எல்லை மீறிகடந்து பல வில்லங்கங்களில் மாட்டி நிற்கின்றோம்.

நல்ல நிலையில் திடகாத்திரமாய் வழுவழு என்று உடம்பை காப்பதுவும், உளம் ஆற்றல்கள் மிகுந்ததாக விளங்கும் வகையிலும் வைத்து பேணுவது பெரும் எமக்கு போராட்டமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

On 22/4/2020 at 05:48, நியாயத்தை கதைப்போம் said:

வியாதி ஒன்றும் வேண்டாம். 

சுவாசப்பைகள் நன்கு தொழிற்படட்டும். இதயம் தொடங்கி தோல், தசை, கைகள், கால்கள், சிறிது பெரிதென என வியாபித்துள்ள உடல் உறுப்புக்கள் எல்லாம் சீராக செயற்படட்டும். புலன்கள், மூளை எல்லாம் நேர்த்தியாக இயங்கட்டும். 

வியாதி இல்லா உடல் எனது சித்தியின் இரு பிள்ளைகள் தலசீமியா என்கிற நோய்ய்கு ஆளாகிவிட்டார்கள் 

தினம் தினம் தாய் தந்தையர் இறந்து வாழ்கிறார்கள்  மாதம் தோறும் இரத்தம் ஏற்றல் நோய்கள் வரா உடல் வேண்டும் காசு பணம் இல்லாவிட்டாலும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுகதேகத்துடன் கழிகின்ற ஒவ்வொரு நாட்களிற்கும் நாம் எமது உடலிற்கு நன்றி உடையவர்களாய் விளங்குவோம் ராஜா 👍.

உடல் எமக்கு கிடைத்த விலைமதிப்பற்ற செல்வம், பெரும் பொக்கிசம். அதை பாதுகாக்கவேண்டியது எமது பொறுப்பு, கடமை. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நீங்களே தனியா நிண்டு வெல்ல முடியாது என நினைக்கும் கட்சியின் சின்னத்தை அப்படி எல்லாம் முடக்கி யாரும் மினகெட மாட்டார்கள். இது பல வருடமாக உள்ள இந்திய தேர்தல் விதி. நாதக போனமிறைக்கு முதல் முறை இரெட்டை மெழுகுதிரி, பின் விவசாயி, இப்போ மைக். போதியளவு வாக்கு எடுத்த கட்சிக்குத்தான் நிரந்தர சின்னம். லெட்டர்பேட் கடைக்கு எல்லாம் தற்காலிக சின்னம் என்பது பால வருட நடைமுறை. நடப்பு லோக்சபா எம்பிகள், சட்ட மன்ற உறுப்பினர் உள்ள விடுதலை சிறுத்தை, மதிமுகவுக்கே அவர்கள் சின்னம் இல்லை. ஒரு உள்ளாட்ட்சி சீட்டும் இல்லாத நாதக மட்டும் என்ன ஸ்பெசலா? நாதக 7%. நோட்டா 9% என நினைக்கிறேன்.
    • கையோடை இந்த திரியில் சீமான் பி ஜே பியின்  B team ஆ என கேட் க வேண்டும் போலுள்ளது.
    • ஊழ‌ல் மோச‌டி  கைத்து வ‌ழ‌க்குக்கு ப‌ய‌ந்து தான் வீஜேப்பி கூட‌ ப‌ல‌ர் கூட்ட‌னி வைச்சு இருக்கின‌ம்.............அது மெகா கூட்ட‌னி கிடையாது மான‌ம் கெட்ட‌ கூட்ட‌னிக‌ள் ரீடிவி தின‌க‌ர‌ன் சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முத‌ல் வீஜேப்பிய‌ ப‌ற்றி பேசின‌தை யாரும் எளிதில் ம‌ற‌ந்து இருக்க‌ மாட்டின‌ம்..............மான‌ஸ்த‌ன் ச‌ர‌த்துகுமார் வீஜேப்பி கூட்ட‌னி வைக்கிற‌ க‌ட்சியுட‌ன் ச‌ம‌த்துவ‌ க‌ட்சி ஒரு போதும் கூட்ட‌னி வைக்காது என்று சொல்லி விட்டு கூட்ட‌னிக்கு போன‌ கோழை   சீமானிட‌ம் இருக்கும் துணிவும் கொண்ட‌ கொள்கையும் த‌மிழ் நாட்டில் வேறு  எந்த‌ அர‌சிய‌ல் வாதிக‌ளிட‌ம் இருக்கு🙏🙏🙏...............இதுவ‌ரை அண்ண‌ன் சீமானை த‌மிழ் நாட்டில் இருக்கும் அனைத்து பெரிய‌ க‌ட்சிக‌ளும் கூட்ட‌னிக்கு கூப்பிட்ட‌தை ஞாப‌க‌ ப‌டுத்த‌னும் சில‌ருக்கு புல‌வ‌ர் அண்ணா................வாழ்வோ சாவோ எப்ப‌வும் த‌னித்து தான் போட்டி............அவ‌ர் முத‌ல‌மைச்ச‌ர் ஆக‌லாம் ஆகாம‌ போக‌லாம் ஆனால் ஒரு த‌மிழ‌ன் க‌ட்சி ஆர‌ம்பிச்சு ஒருத‌ர் கூட‌வும் கூட்ட‌னி வைக்காம‌ அர‌சிய‌ல் செய்தார் என்று வ‌ர‌லாறு சொல்லும்🥰................அந்த‌ க‌ட்சியில் இருக்கும் திற‌மையான‌ ந‌ப‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானுக்கு பிற‌க்கு அதே வ‌ழியில் அதே நேர்மையோடு க‌ட்சியை வ‌ழி ந‌ட‌த்துவுன‌ம் அத‌ற்க்கு இன்னும் நீண்ட‌ வ‌ருட‌ம்  இருக்கு...................................   200ரூபாய் கொத்த‌டிமைக‌ளை விட‌ யாழில் அண்ண‌ன் சீமான் விடைய‌த்தில் குர‌ங்கு சேட்டை செய்ய‌ சில‌ர் இருக்கின‌ம் ஹா ஹா அவைய‌ பார்க்க‌ என‌க்கு பரிதாக‌மாய் இருக்கு😁😜....................
    • பக்கா தமிழன் அண்ணே நீங்க. அண்ணர் தான் ஒரு ஜொள்ளுப் பாட்டியாம். நம்பச் சொல்லுறார்.  தென்னை மர உச்சியை கண்டவருக்கு.. நீண்டு செல்லும் அதிவேக சாலை தெரியவில்லை. யாழில் ஊபர்..?! பிக் மி தானே இருந்திச்சு.  அப்பாடா.. ஒரு மாதிரி ஒரு உண்மையை ஒத்துக் கொண்டார். என்ன கடற்கரை பார்த்தவர்.. தரைக்கரையை பார்க்கவில்லை..?! எல்லா இராணுவ பீடங்களும் வீதி நெடுகிலும் ஏக்கர் கணக்கில் ஆக்கிரமிச்சு நிற்குது.  பீட்சா பிரியரோ..?! கே எவ் சி கண்ணில படல்ல.  கொழும்பில் இல்லாத அளவுக்கா. ஆனால் முந்தி இருந்த ஆனப்பந்தியடி வைத்தியசாலை எல்லாம் காணாமல் போயிட்டே. அண்ணருக்கு அது தெரியல்லை.  ஆரிய குளத்தில்.. பழையபடி.. வெற்றுப் பிளாஸ்டிக் போத்தல் குப்பை மிதக்கிறது.. விட்ட படகுகளை காணம். அண்ணர் அதையும் கவனிக்கேல்ல.  அண்ணரும் சாட்சி.  மது ஆறாக ஓடுவது இங்கு மட்டுமல்ல. ரகளை இல்லை என்பது தான் முக்கியம்.  உண்மை தான். ஆனால் சாப்பாடும் நல்லம் லண்டனை விட.  இதை விட மோசம் தென்னிலங்கை. யாழ் சில இடங்களில் விலை குறைவு. உண்மை தான். சீன அங்காடிகளின் வரவும் அதிகரிச்சிருக்கு. விலையும் குறைவு.. டிசைனும் நல்லது. சொறீலங்காவில் தற்போது.. காசிருந்தால்.. விரும்பிய வாழ்கையை வாழலாம். லண்டனில் காசிருந்தாலும் விரும்பிய வாழ்கையை வாழ்வது கடினம்.  இறுதியா.. வாங்கோண்ணா.. வாங்கோ. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.