Jump to content

நிவேதாவின் சமையல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட நாட்களாக என் சமையலை போடவேண்டும் என எண்ணியும் இப்போதான் அதற்கு நேரம் வாய்த்திருக்கு.

முதல்ல இனிப்பாத் தொடங்குவம்

                                                                                                                          கொக்கிஸ்

 

 

Image may contain: food

 

தேவையான பொருட்கள் :

பச்சை அரிசி ( long Grein Rice) - 1 Kg
சீனி - 100 - 200 g
தேங்காய்ப் பால் - 1 முழுத்தேங்காய் / 100 g தே .பால் பவுடர்
ஏலக்காய் / கறுவா - அளவானது
உப்பு - அரை மேசைக் கரண்டி
எண்ணெய் - பொரிக்க அளவானது
நிறம் - சிவப்பு /பச்சை/ மஞ்சள்  
அச்சு

 

செய்முறை :

அரிசியை ஒரு மணிநேரம் ஊறவைத்து நீரை வடியவிட்டு செய்தித் தாளிலோ அல்லது வேறு தாள்களிலோ பரவி நீரை வடியவிடவேண்டும். பின்னர் மிக்சியில் போட்டு அரைத்து, அரைத்ததை அரிதட்டால் அரித்து ஒரு பாத்திரத்தில் போடவேண்டும்.

அரிதட்டு இல்லாதவர் மிக நன்றாக குருணல் இன்றி அரைத்து எடுக்கவேண்டும். பின்னர் தேங்காய் துருவிப் பிழிந்து எடுத்த பால், சீனி இரண்டையும் ஒன்றாய்ப் போட்டு சீனி கரைந்தபின் அரிசிமா, ஏலக்காய்த் தூள் அல்லது கறுவாத்தூள் சிறிதளவு போட்டு கட்டிக் கூழ்ப் பதத்துக்குக் கரைக்க வேண்டும்.  

பின்னர் நீங்கள் பொரிப்பதற்குப் பயன்படுத்தும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, தேவையான எண்ணெய் ஊற்றி அச்சையும் பாத்திரத்தினுள் வைத்துவிடவேண்டும். எண்ணெய் கொதித்ததும் அடுப்பைக் கொஞ்சம் குறைத்துவிட்டு அச்சை எண்ணெயிலிருந்து எடுத்து மாவில் முழுதும் மூழ்காவண்ணம் வைக்க மா அச்சில் ஒட்டும். உடனே அதை எண்ணெயுள் வைக்கப் பெரிய ஆரம்பிக்கும். உடனே அச்சை எண்ணெயில் அசைக்க அச்சிலிருந்து மா களரும். சிறிது நேரத்தில் அதைப்பிரட்டி வெந்ததும் வெளியே எடுக்கவும்.

 பழக்கமற்ற அச்சு முதலில் களர  மறுக்கும் . இரண்டொரு தரம் செய்தபின் தட்டியவுடன் அச்சைவிட்டுக் களரும்.

 

Image may contain: plant

 

 

Link to comment
Share on other sites

  • Replies 753
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆகா ஆகா
மிச்சம் மீதியும் தொடரட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு நாளைக்கு ஒன்றுதான் அண்ணா.😀

படம்தான் சிறிதாக மாட்டேன் என்கிறது. தெரிந்தால் யாரும் வழி சொல்லுங்கள்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லா மினக்கட்டு இருக்கிறீங்கள் ....... கொக்கிஸ் நன்றாக வந்திருக்கு சகோதரி.....அடுத்த பதார்த்தத்துக்காக ஆவலுடன்......!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த அச்சை ஒருக்காய் கடனாய் தருவியளோ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொக்கிஸ் நல்லா வந்திருக்கு. செய்து 20 வருடங்களாகுது. அச்சும் இல்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு ஒருமுறை, இதை செய்து சாப்பிட்ட  போது....
எனக்கு... வயித்தாலை, அடிச்சு...
அஞ்சு நாள்... ஆஸ்பத்திரியில் இருந்து, 
தப்பி வந்ததை.... நினைக்க,  பயங்கரமாய்.... இருந்தது 

***

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாயிருக்கு கொக்கிஸ், ஊரில் சாப்பிட்டதை விட சிங்கள அன்ரியிடம் சாப்பிட்டது நல்ல சுவை

1 hour ago, MEERA said:

உந்த அச்சை ஒருக்காய் கடனாய் தருவியளோ???

அச்சு வீட்டில் அப்படியே புத்தம் புதிதாக இருக்கு,  USD 100/-  paypal க்கு அனுப்பிவிடுங்கள்,  இரண்டு கிழமையில் வீட்டு வாசலுக்கு அனுப்பிவிடுகின்றேன்😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nilmini said:

கொக்கிஸ் நல்லா வந்திருக்கு. செய்து 20 வருடங்களாகுது. அச்சும் இல்லை 

எது... ஆ...

பார்க்க 20 வருசத்துக்கு முன்னம் செய்த கொக்கிஸ் மாதிரிதான் இருக்குதோ?

அக்கா இப்ப தான் செய்து போட்டிருக்கிறா.... 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Nathamuni said:

எது... ஆ...

பார்க்க 20 வருசத்துக்கு முன்னம் செய்த கொக்கிஸ் மாதிரிதான் இருக்குதோ?

அக்கா இப்ப தான் செய்து போட்டிருக்கிறா.... 😉

சுமே அக்கா இப்பதான் பொரிச்சிருக்கிறா. நான்தான் கடையசியாக 20 வருடங்களுக்கு முன்பு நியூசிலாந்தில் செய்தேன். அச்சை அங்கேயே விட்டுட்டு வந்திட்டேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, nilmini said:

சுமே அக்கா இப்பதான் பொரிச்சிருக்கிறா. நான்தான் கடையசியாக 20 வருடங்களுக்கு முன்பு நியூசிலாந்தில் செய்தேன். அச்சை அங்கேயே விட்டுட்டு வந்திட்டேன் .

சரி... ஒரு கந்தர்மட போட்டி...

இன்னும் ஒரு வாரத்துக்குள், நியூஸிலாந்து போய், அந்த அச்சினை எடுத்துக்கொண்டு வந்தீர்கள் எண்டால், போற வாற விமான பயண செலவை, நானும், தமிழ்சிறியர் மற்றும் சுவியர் ஏற்றுக் கொள்கிறோம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Nathamuni said:

சரி... ஒரு கந்தர்மட போட்டி...

இன்னும் ஒரு வாரத்துக்குள், நியூஸிலாந்து போய், அந்த அச்சினை எடுத்துக்கொண்டு வந்தீர்கள் எண்டால், போற வாற விமான பயண செலவை, நானும், தமிழ்சிறியர் மற்றும் சுவியர் ஏற்றுக் கொள்கிறோம்...

இது என்ன கந்தர்மட போட்டியா? இப்ப USA இருக்குற நிலைமைக்கு ஒரு நாட்டுக்கும் போகமுடியாது . கலைப்பார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நீண்ட நாட்களாக என் சமையலை போடவேண்டும் என எண்ணியும் இப்போதான் அதற்கு நேரம் வாய்த்திருக்கு.

முதல்ல இனிப்பாத் தொடங்குவம்

                                                                                                                          கொக்கிஸ்

 

 

Image may contain: food

 

தேவையான பொருட்கள் :

பச்சை அரிசி ( long Grein Rice) - 1 Kg
சீனி - 100 - 200 g
தேங்காய்ப் பால் - 1 முழுத்தேங்காய் / 100 g தே .பால் பவுடர்
ஏலக்காய் / கறுவா - அளவானது
உப்பு - அரை மேசைக் கரண்டி
எண்ணெய் - பொரிக்க அளவானது
நிறம் - சிவப்பு /பச்சை/ மஞ்சள்  
அச்சு

 

செய்முறை :

அரிசியை ஒரு மணிநேரம் ஊறவைத்து நீரை வடியவிட்டு செய்தித் தாளிலோ அல்லது வேறு தாள்களிலோ பரவி நீரை வடியவிடவேண்டும். பின்னர் மிக்சியில் போட்டு அரைத்து, அரைத்ததை அரிதட்டால் அரித்து ஒரு பாத்திரத்தில் போடவேண்டும்.

அரிதட்டு இல்லாதவர் மிக நன்றாக குருணல் இன்றி அரைத்து எடுக்கவேண்டும். பின்னர் தேங்காய் துருவிப் பிழிந்து எடுத்த பால், சீனி இரண்டையும் ஒன்றாய்ப் போட்டு சீனி கரைந்தபின் அரிசிமா, ஏலக்காய்த் தூள் அல்லது கறுவாத்தூள் சிறிதளவு போட்டு கட்டிக் கூழ்ப் பதத்துக்குக் கரைக்க வேண்டும்.  

பின்னர் நீங்கள் பொரிப்பதற்குப் பயன்படுத்தும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, தேவையான எண்ணெய் ஊற்றி அச்சையும் பாத்திரத்தினுள் வைத்துவிடவேண்டும். எண்ணெய் கொதித்ததும் அடுப்பைக் கொஞ்சம் குறைத்துவிட்டு அச்சை எண்ணெயிலிருந்து எடுத்து மாவில் முழுதும் மூழ்காவண்ணம் வைக்க மா அச்சில் ஒட்டும். உடனே அதை எண்ணெயுள் வைக்கப் பெரிய ஆரம்பிக்கும். உடனே அச்சை எண்ணெயில் அசைக்க அச்சிலிருந்து மா களரும். சிறிது நேரத்தில் அதைப்பிரட்டி வெந்ததும் வெளியே எடுக்கவும்.

 பழக்கமற்ற அச்சு முதலில் களர  மறுக்கும் . இரண்டொரு தரம் செய்தபின் தட்டியவுடன் அச்சைவிட்டுக் களரும்.

அதெல்லாம் சரி.... நிவேதா ஆரக்கா? மகளிண்ட பேரா இருக்குமோ எண்டு யோசிச்சன்...
 

1 minute ago, nilmini said:

இது என்ன கந்தர்மட போட்டியா? இப்ப USA இருக்குற நிலைமைக்கு ஒரு நாட்டுக்கும் போகமுடியாது . கலைப்பார்கள். 

அதுதானே போட்டியின் விசயமே... துணிந்து வெளிக்கிட்டு போய் எடுத்து வந்தால்... பயணச்செலவு தருவோம்.... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நீங்கள் போட்ட படம் பல அளவுகளில்..!

ஏம்மா, இப்படி அச்சு முறுக்கை செய்து தொட்டியில் உரமா போட்டுவிட்டீர்கள்..? வீட்டில் யாரும் சாப்பிடவில்லையா..? 😋

6 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஒவ்வொரு நாளைக்கு ஒன்றுதான் அண்ணா.😀

ஒரு நாளைக்கு ஒரு முறுக்குதானா..? 🙄

அதுக்கு மேலே சாப்பிட முடியாதா..? அவ்வளவு சுவையாகவா இருக்கு..? 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

படம்தான் சிறிதாக மாட்டேன் என்கிறது. தெரிந்தால் யாரும் வழி சொல்லுங்கள்.

நீங்கள் இணக்கும் படத்தின் மீது சுட்டியால்(Mouse) இரண்டுமுறை தொடர்ந்து 'க்ளிக்' செய்தால்(Double click) கீழ்க்கண்ட பெட்டி(Pop up) வரும். அதில் நீங்கள் மாற்ற விரும்பும் அளவை(Pixels) குறிப்பிட்டு முடிவில் அப்டேட்(Update) செய்தால் குறிப்பிட்ட அளவிற்கு படம் மாறி தெரியும்.

சரி.. சரி.. ரொம்பவும் முழிக்காமல், ஆலோசனை சொன்னதற்கு 10 K பவுண்ட்ஸ் அனுப்பவும். ஒங்க லண்டனுக்கு வந்து சுத்தி பார்த்ததில் ரொம்ப செலவாயிடிச்சி..! :(:)

 

test.jpg

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, suvy said:

நல்லா மினக்கட்டு இருக்கிறீங்கள் ....... கொக்கிஸ் நன்றாக வந்திருக்கு சகோதரி.....அடுத்த பதார்த்தத்துக்காக ஆவலுடன்......!   👍

வீட்டில நின்மதியா இருக்க விடாயள் போல 🤣 

18 hours ago, MEERA said:

உந்த அச்சை ஒருக்காய் கடனாய் தருவியளோ???

கடனாய்த் தர ஏலாது.ஒரு 100 பவுன்ஸ் தந்திட்டு எடுத்துக்கொண்டு போங்கோ. திருப்பித் தந்தால் பணம் திருப்பிக் கிடைக்கும். துலைச்சுப் போட்டன் எண்டு சொன்னால் நான் கோவிக்கமாட்ட்டான்.   😃

18 hours ago, nilmini said:

கொக்கிஸ் நல்லா வந்திருக்கு. செய்து 20 வருடங்களாகுது. அச்சும் இல்லை 

உத்து ருசி என்றாலும் மினைக்கெட்ட வேலை.சும்மாதான் இருக்கிறியள் செய்துதாங்கோ என்று பிள்ளைகள் கேட்டதால செய்தது.😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Nathamuni said:

அதெல்லாம் சரி.... நிவேதா ஆரக்கா? மகளிண்ட பேரா இருக்குமோ எண்டு யோசிச்சன்...
 

நல்லா யோசிப்பியள் 😎

17 hours ago, Nathamuni said:

எது... ஆ...

பார்க்க 20 வருசத்துக்கு முன்னம் செய்த கொக்கிஸ் மாதிரிதான் இருக்குதோ?

அக்கா இப்ப தான் செய்து போட்டிருக்கிறா.... 😉

நீங்கள் முடிஞ்சு விட ஏலாது 😃

17 hours ago, உடையார் said:

நல்லாயிருக்கு கொக்கிஸ், ஊரில் சாப்பிட்டதை விட சிங்கள அன்ரியிடம் சாப்பிட்டது நல்ல சுவை

அச்சு வீட்டில் அப்படியே புத்தம் புதிதாக இருக்கு,  USD 100/-  paypal க்கு அனுப்பிவிடுங்கள்,  இரண்டு கிழமையில் வீட்டு வாசலுக்கு அனுப்பிவிடுகின்றேன்😃

ஊரில் கனக்க உண்டிருப்பீர்கள். சிங்கள அன்ரி அளவாத் தந்தியிருப்பா. ருசிச்சிருக்கும்.

15 hours ago, ராசவன்னியன் said:

நீங்கள் போட்ட படம் பல அளவுகளில்..!

ஏம்மா, இப்படி அச்சு முறுக்கை செய்து தொட்டியில் உரமா போட்டுவிட்டீர்கள்..? வீட்டில் யாரும் சாப்பிடவில்லையா..? 😋

ஒரு நாளைக்கு ஒரு முறுக்குதானா..? 🙄

அதுக்கு மேலே சாப்பிட முடியாதா..? அவ்வளவு சுவையாகவா இருக்கு..? 🤣

😂 ஒரு நாளைக்கு ஒரு ரெசிப்பி என்றேன். உங்கள் ஊரிலுமிதை செய்வார்கள் தானே அண்ணா ?

 

15 hours ago, ராசவன்னியன் said:

 

சரி.. சரி.. ரொம்பவும் முழிக்காமல், ஆலோசனை சொன்னதற்கு 10 K பவுண்ட்ஸ் அனுப்பவும். ஒங்க லண்டனுக்கு வந்து சுத்தி பார்த்ததில் ரொம்ப செலவாயிடிச்சி..! :(:)

 

நான் கேட்டது இலவச ஆலோசனை. லண்டன் வந்து சந்திக்காமல் ஓடியதுக்கு நீங்கள் தான் காசு தரணுமாக்கும். 😀நன்றி அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொட்டியில் வைத்தது காக்கா குருவி சாப்பிட

18 hours ago, தமிழ் சிறி said:

முன்பு ஒருமுறை, இதை செய்து சாப்பிட்ட  போது....
எனக்கு... வயித்தாலை, அடிச்சு...
அஞ்சு நாள்... ஆஸ்பத்திரியில் இருந்து, 
தப்பி வந்ததை.... நினைக்க,  பயங்கரமாய்.... இருந்தது 

***

உங்கள் மனைவி மருந்து ஏதும் மாவுடன் கலந்துவிட்டாரோ???? அரிசிமாவு தேங்காய்ப்  பாலும் நோயாளியைக் கூட ஒன்றும் செய்யாதே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தமிழ் சிறி said:

முன்பு ஒருமுறை, இதை செய்து சாப்பிட்ட  போது....
எனக்கு... வயித்தாலை, அடிச்சு...
அஞ்சு நாள்... ஆஸ்பத்திரியில் இருந்து, 
தப்பி வந்ததை.... நினைக்க,  பயங்கரமாய்.... இருந்தது 

***

அப்ப அண்ணனுக்கு ஒரு பார்சல் அனுப்ப ரெடியாகுங்க அக்கா

 

நன்றாகத்தான் இருக்கிறது அக்கா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Sauce

1 minute ago, தனிக்காட்டு ராஜா said:

அப்ப அண்ணனுக்கு ஒரு பார்சல் அனுப்ப ரெடியாகுங்க அக்கா

 

நன்றாகத்தான் இருக்கிறது அக்கா

ஆஸ்பத்திரி வரை போனவர் இனிமேல் வாயில வைப்பார் எண்டு நினைக்கிறியளே  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அரிசியை ஒரு மணிநேரம் ஊறவைத்து நீரை வடியவிட்டு செய்தித் தாளிலோ அல்லது வேறு தாள்களிலோ பரவி நீரை வடியவிடவேண்டும்

சுமேரியர், இன்னுமா செய்தித்தாள்களை சமையலுக்கு பயன்படுத்துகிறீர்கள். மிக மிக தவறான விடயம்.

என் வயதுக்கு எண்ணைப் பணியாரம் எல்லாம் சரிவராது. வேறு நல்ல சமையல் குறிப்புகளைப் போடும் போது பார்ககலாம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஆஸ்பத்திரி வரை போனவர் இனிமேல் வாயில வைப்பார் எண்டு நினைக்கிறியளே  🤣

அதுவும் சரிதான் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kavi arunasalam said:

சுமேரியர், இன்னுமா செய்தித்தாள்களை சமையலுக்கு பயன்படுத்துகிறீர்கள். மிக மிக தவறான விடயம்.

என் வயதுக்கு எண்ணைப் பணியாரம் எல்லாம் சரிவராது. வேறு நல்ல சமையல் குறிப்புகளைப் போடும் போது பார்ககலாம்.

 

செய்தித் தாளின் மேல் Kitchen ரிசு விரித்துத்தான் போடுவது. அநேகமாக எல்லோரும் அப்படித்தான் செய்வர் என்று எண்ணிப் போடவில்லை அண்ணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிவேதாவின் Sauce சோஸ் செய்முறை

Image may contain: food

 

ராராஜவன்னியன் அண்ணா நீங்கள் கூறியதுபோலப் படத்தை எடிட் செய்ய எந்த option உம் காட்டுதில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நிவேதாவின் Sauce சோஸ் செய்முறை

Image may contain: food

 

ராராஜவன்னியன் அண்ணா நீங்கள் கூறியதுபோலப் படத்தை எடிட் செய்ய எந்த option உம் காட்டுதில்லை

நீங்கள் இப்படி  எல்லாம் செய்து பயமுறுத்தினால், ஒரு ஒப்சனும் வராதே.😎

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.