Jump to content

நிவேதாவின் சமையல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, suvy said:

உங்களின் அத்தனை வீடியோவிலும்   அப்பப்பவே லைக்  இட்டாச்சுது.கொஞ்சம் சைலண்டா இருப்பம் எண்டால் விட மாட்டிடீங்களே........!  😁 

லைக் மட்டும் செய்தால் போதாதண்ணா.Subscribe என்பதையும் அழுத்தவேணும் அண்ணா. 😀

Link to comment
Share on other sites

  • Replies 753
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

லைக் மட்டும் செய்தால் போதாதண்ணா.Subscribe என்பதையும் அழுத்தவேணும் அண்ணா. 😀

அதையும் அழுத்தியபடியால்தான் உங்களது தயாரிப்புகள் எல்லாம் தானாகவே வந்து விழுகுது.......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, suvy said:

அதையும் அழுத்தியபடியால்தான் உங்களது தயாரிப்புகள் எல்லாம் தானாகவே வந்து விழுகுது.......!   😁

அப்ப சரி. நன்றி அண்ணா 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ஒருத்தரும் தாளிக்கும் போது சின்ன சீரகம் போடுவதில்லையா?
சின்ன வெங்காயம் அல்லது சிகப்பு [பம்பாய் ]வெங்காயம் தரும் சுவையை இந்த வெள்ளை வெங்காயம் தருமா?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ரதி said:

நீங்கள் ஒருத்தரும் தாளிக்கும் போது சின்ன சீரகம் போடுவதில்லையா?
சின்ன வெங்காயம் அல்லது சிகப்பு [பம்பாய் ]வெங்காயம் தரும் சுவையை இந்த வெள்ளை வெங்காயம் தருமா?
 

நான் மாறி மாறி சிவப்பும் வெள்ளையும் பாவிப்பன் ரதி. சின்ன வெங்காயம் உரிக்கும் அலுப்பில் பெரிதாக நான் வாங்குவதில்லை. சிலநேரம் வாங்குவது. எல்லாம் மனம் தான்.

நான் சின்னச் சீரகம் தாளிக்கும்போது போடுவதில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, உடையார் said:

யாயினி - வாய்விட்டு சிரிக்க வீட்டில் எல்லோரும் என்ன சுற்றி நிற்கின்றார்கள்🤣; இப்படி கலாய்க்க வேண்டாம் நம்ம சுமேயை, okay

ஓ நோ.. எல்லோரோடும் இப்படி பேச மாட்டேன் அண்ணா.சுமே அக்காவுக்கு புரியும்.😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, யாயினி said:

ஓ நோ.. எல்லோரோடும் இப்படி பேச மாட்டேன் அண்ணா.சுமே அக்காவுக்கு புரியும்.😀

சும்மா பகிடிக்குதான் யாயினி - சுமேக்கு எதையும் தாங்கும் இதயம்😀, நல்லா கலாய்க்கலாம்👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நீங்கள் மட்டும் போட்டால் எப்பிடி அண்ணா ஏறும்?? பாக்கிறவை இதில என்ன எழுதினம்  எண்டு பாக்கினமே தவிர வீடியோவையும் பார்ப்பதில்லை.லைக்கும் செய்வதில்லை. 😥

முதல்ல வீடியோவுக்கு Subscribe  செய்தியளா ???😃

👍 காட்டி கொடுத்துவிடாதீர்கள் 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு தயாரிப்புக்கள் பதியும் போதும் சொன்னால் தான் லைக்,பெல் பட்டன் எல்லாம் நினைவில் இரூக்கும் அக்கா.. 😀✍️கோவிட் 19 பரவலால் சுத்தம்்சுகாதாாாரம் கருதி இப்போதைக்கு எல்லாம் சிலோ டவுண் தான் கவலைப் படாாதீர்கள்.😷

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, யாயினி said:

ஓ நோ.. எல்லோரோடும் இப்படி பேச மாட்டேன் அண்ணா.சுமே அக்காவுக்கு புரியும்.😀

நீங்கள் தாராளமாய் எதுவும் சொல்லுங்கள் யாயினி. எனக்குப் பிரச்சனையே இல்லை   😀

5 hours ago, உடையார் said:

👍 காட்டி கொடுத்துவிடாதீர்கள் 😎

எனக்கு ஒரு ஐந்து பேரைத் தவிர மற்றவர்களின் பார்க்க முடியாதுள்ளது.🤣 அதனால் கவலை கொள்ள வேண்டாம். நன்றி உடையார்.

4 hours ago, யாயினி said:

ஒவ்வொரு தயாரிப்புக்கள் பதியும் போதும் சொன்னால் தான் லைக்,பெல் பட்டன் எல்லாம் நினைவில் இரூக்கும் அக்கா.. 😀✍️கோவிட் 19 பரவலால் சுத்தம்்சுகாதாாாரம் கருதி இப்போதைக்கு எல்லாம் சிலோ டவுண் தான் கவலைப் படாாதீர்கள்.😷

 

இனிமேல் கவனிக்கிறேன். நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வறுத்த நூடில்ஸ் - Fried Noodles

 

Image may contain: food

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதுசட்டி எல்லாம் வெளிய வருது.
எனக்கு மிகவும் பிடித்த சாப்பாடு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

2 hours ago, ஈழப்பிரியன் said:

புதுசட்டி எல்லாம் வெளிய வருது.
எனக்கு மிகவும் பிடித்த சாப்பாடு.

நீங்கள்  தானே அண்ணா பழைய சட்டியில் சமைக்கவேண்டாம் என்றது. அதனால் பெட்டகத்துள்  பூட்டிவைத்தவற்றை வெளியே எடுத்தாச்சு.😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பெட்டகத்துள்  பூட்டிவைத்தவற்றை வெளியே எடுத்தாச்சு.

இதுவரை பாவிக்காமல் இருந்திருந்தால், நீங்கள் அவற்றை season பண்ணினீர்களா, non-stick ஆயினும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

நீங்கள்  தானே அண்ணா பழைய சட்டியில் சமைக்கவேண்டாம் என்றது. அதனால் பெட்டகத்துள்  பூட்டிவைத்தவற்றை வெளியே எடுத்தாச்சு.😀

பழைய சட்டியளை எறிஞ்சு போடாதேங்கோ......அதெல்லாம் ஞாபகச் சின்னங்கள். 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kadancha said:

இதுவரை பாவிக்காமல் இருந்திருந்தால், நீங்கள் அவற்றை season பண்ணினீர்களா, non-stick ஆயினும்?

என்ன சொல்கிறீர்கள். புரியவில்லையே.

2 hours ago, குமாரசாமி said:

பழைய சட்டியளை எறிஞ்சு போடாதேங்கோ......அதெல்லாம் ஞாபகச் சின்னங்கள். 😎

😃😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

என்ன சொல்கிறீர்கள். புரியவில்லையே.

அடுப்பில் வைத்து சமைக்கும் எந்த புதிய, பாவிக்கப்படாத pan உம், non-stick உட்பட்ட, முதல் பாவிப்பின் முன் season பண்ணுப்பட  வேண்டும்.

இப்படி சீசன் பண்ணுவது, pan ஐ பாதுகாப்பதுடன், உணவு ஒட்டாமலும் இருக்க உதவி செய்யும்.

season பண்ணுவததற்கான காரணம், எவ்வளுவு நுணுக்கமான non-stick ஆயினும் கண்ணில் புலப்படாத மிகச்சிறிய இடைவெளிகள், துவாரங்கள், மற்றும் தவாளிப்புகள் இருக்கும். இவை நிரவப்பட வேண்டும். இதுவே season செய்வதன் நோக்கம். இப்படி நிரவுவதே seasoning. 

மற்றும் 6-9 மாதத்திற்கு ஓர் தடவை சீசன் செய்யப்படுவது pans ஐ நீண்ட கால பாவனைக்கு உதவும். 

மற்றது எந்த metal-safe non-stick என்று சொல்லி இருந்தாலும், metal utensils ஐ பாவிக்காமல் இருப்பதே நல்லது.  

மேலும் எந்த non-stick ஆயினும், மற்ற pans கூட,  வெறுமையாக நெருப்பின் மேல் வைத்து சூடாக்குவது இயலுமானவரை தவிர்க்கப்பட வேண்டும். 
 
seasoning செய்வதை youtube இல் தேடிப்பாருங்கள், விளங்கப்படுத்துவது எழுத்தை கூட்டும்.

சுருக்கமாக எண்ணையை pans உள்ளே மேற்பரப்பில் துணியால்  பூசி, ஓரளவு எண்ணெய் புகைக்கும் (smoke point) வரைக்கும் சூடாக்கி, இயல்பாக ஆறவிடுவது.   இது எண்ணையில் இருக்கும் கொழுப்புகளின் மிகவும் மெலிய, கண்ணனுக்கு தெரியாத படலத்தை உருவாக்கும், இடைவெளி, தாவலிப்புகள் நிரவும்.    3-4 தரம் மீளவும் செய்வது நல்லது.
seasoning செய்வதை பொறுமையாக செய்யுங்கள், அவசரப்படாமல்.

seasoning செய்வதை unrefined avacado oil பாவியுங்கள், ஏனெனில் அதன் smoke point 270 செல்சியஸ்.    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/6/2020 at 19:47, யாயினி said:

செவ்ஃப் இண்டைக்கு கடையை பூட்டிட்டு என்ன செய்யிறா.😀

இதோ வந்திட்டன் யாயினி.🤣

On 21/6/2020 at 19:36, Kadancha said:

அடுப்பில் வைத்து சமைக்கும் எந்த புதிய, பாவிக்கப்படாத pan உம், non-stick உட்பட்ட, முதல் பாவிப்பின் முன் season பண்ணுப்பட  வேண்டும்.

இப்படி சீசன் பண்ணுவது, pan ஐ பாதுகாப்பதுடன், உணவு ஒட்டாமலும் இருக்க உதவி செய்யும்.

season பண்ணுவததற்கான காரணம், எவ்வளுவு நுணுக்கமான non-stick ஆயினும் கண்ணில் புலப்படாத மிகச்சிறிய இடைவெளிகள், துவாரங்கள், மற்றும் தவாளிப்புகள் இருக்கும். இவை நிரவப்பட வேண்டும். இதுவே season செய்வதன் நோக்கம். இப்படி நிரவுவதே seasoning. 

மற்றும் 6-9 மாதத்திற்கு ஓர் தடவை சீசன் செய்யப்படுவது pans ஐ நீண்ட கால பாவனைக்கு உதவும். 

மற்றது எந்த metal-safe non-stick என்று சொல்லி இருந்தாலும், metal utensils ஐ பாவிக்காமல் இருப்பதே நல்லது.  

மேலும் எந்த non-stick ஆயினும், மற்ற pans கூட,  வெறுமையாக நெருப்பின் மேல் வைத்து சூடாக்குவது இயலுமானவரை தவிர்க்கப்பட வேண்டும். 
 
என்னிடம் இருப்பது தனி இரும்புப் பாத்திரங்கள் அல்ல. non-stick மற்றும் கறள்ப் பிடிக்காத இரும்புப் பாத்திரங்கள். அதனால் இவற்றுக்கு seasoning செய்வது தேவை இல்லை என்று என் நண்பனின் உணவகத்தில் சமைக்கும் பிரதான சமையற்காரர் கூறினார். செய்வதை youtube இல் தேடிப்பாருங்கள், விளங்கப்படுத்துவது எழுத்தை கூட்டும்.

சுருக்கமாக எண்ணையை pans உள்ளே மேற்பரப்பில் துணியால்  பூசி, ஓரளவு எண்ணெய் புகைக்கும் (smoke point) வரைக்கும் சூடாக்கி, இயல்பாக ஆறவிடுவது.   இது எண்ணையில் இருக்கும் கொழுப்புகளின் மிகவும் மெலிய, கண்ணனுக்கு தெரியாத படலத்தை உருவாக்கும், இடைவெளி, தாவலிப்புகள் நிரவும்.    3-4 தரம் மீளவும் செய்வது நல்லது.
seasoning செய்வதை பொறுமையாக செய்யுங்கள், அவசரப்படாமல்.

seasoning செய்வதை unrefined avacado oil பாவியுங்கள், ஏனெனில் அதன் smoke point 270 செல்சியஸ்.    

என்னிடம் இருப்பது தனி இரும்புப் பாத்திரங்கள் அல்ல. non-stick மற்றும் கறள்ப் பிடிக்காத இரும்புப் பாத்திரங்கள். அதனால் இவற்றுக்கு seasoning செய்வது தேவை இல்லை என்று என் நண்பனின் உணவகத்தில் சமைக்கும் பிரதான சமையற்காரர் கூறினார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: dessert and food

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கும் பச்சைக்கும் நன்றி ஜெகதா துரை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு வீடியோகளுகளும் பார்த்துவிட்டேன், இப்ப கன பேர் பார்க்கின்றார்கள் உங்கள் பதிவை👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

என்னிடம் இருப்பது தனி இரும்புப் பாத்திரங்கள் அல்ல. non-stick மற்றும் கறள்ப் பிடிக்காத இரும்புப் பாத்திரங்கள். அதனால் இவற்றுக்கு seasoning செய்வது தேவை இல்லை என்று என் நண்பனின் உணவகத்தில் சமைக்கும் பிரதான சமையற்காரர் கூறினார்.

non-stick எவ்வளவு நுண்ணிய உற்பத்தி  முறை ஆயினும் (விலை கூடும் உற்பத்தி  முறை நுண்ணிய தன்மை கூடும் போது), ஏலவே சொன்னது போல துவாரங்கள், இடைவெளிகள், மற்றும் தவலிப்புகள் இருக்கும்.    

பாவனையின் போது இவை பெரிதாகும், metal-safe என்று metal utensils பாவித்தால் இன்னும் அது துரிதமாகும்.  

சமைக்கும் உணவு ஒட்டுதல் தன்மை அதிகரிக்கும். அதை உரசி அகற்றும் போது மிகவும் non-stick ஐ மிக மிக நுண்ணிய அளவில் பாதிக்கும் அல்லது உரசி  அகற்றப்படும். 

இது பௌதிக இராசாயனத்தோடு  தொடர்பு பட்ட விடயம்.

மற்றது, நீங்கள் இந்த pans ஐ பாவிக்காமல் வைத்து இருந்ததாக சொன்னீர்கள்.

2015 இற்கு முதல் என்றால், இவற்றில் PFOA and PTFE இருப்பதற்கு சாத்தியக்கூறுகள் உண்டு. இவை நோய்களை, குறிப்பாக புற்று நோய்களை தூண்டுவதாக ஓர் consensus வளர்ந்துள்ளது.  இதை பற்றி தேடிப்பாருங்கள்.

https://www.cancer.org/cancer/cancer-causes/teflon-and-perfluorooctanoic-acid-pfoa.html

இப்பொது ceramic, stone, marble coating பிரபல்யம் அடைவதற்கு இதுவும் ஓர் காரணம்.   

ரெஸ்ட்ராரென்ட் தலைமை chef சொன்னது, ரெஸ்ட்ராரென்ட் இல் இருக்கும் நடைமுறை, ஏனெனில் ரெஸ்ட்ராரென்ட் இல் பாவிப்பது carbon steel, cast iron அல்லது ஸ்டெயின்லெஸ் steel. 

எதுவும் உங்கள் விருப்பம்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நொன் ஸ்டிக் பாத்திரங்கள் பாவிக்க கூடாது என்று சொல்லினம் ...உண்மையா ?
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.