Jump to content

நிவேதாவின் சமையல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

ஒரு சதத்துக்கும் உதவாத கறி.வாயிலையும் வைக்கேலாது. உதோடை சாப்பிடுற நேரம் இரண்டு பச்சை மிளகாயும்  எங்கடை சின்ன வெங்காயத்தோடையும் நாலு கவளம் சோறு திண்டுட்டு போகலாம்.பத்தியப்பட்ட மாதிரியும் இருக்கும். :grin:
இனிப்பாருங்கோ அக்காவின்ரை அடுத்தகறி அன்னாசிப்பழ கறியாய்த்தானிருக்கும்.😁

நாலையும் சாப்பிட்டுப் பார்க்கவேணும் கண்டியளோ. அடுத்த பன்னீர் செய்து போடுறன் பாருங்கோ கட்டாயம் பிடிக்கும்.😀

13 hours ago, Nathamuni said:

எனக்கென்னவோ, உந்த பண்ணீர் (கடும்பு) பிடிப்பதில்லை. 

உது வடவர் கறி தானே. நம்மூரில் இல்லை.

கடும்பு என்பது மாடு கன்று போட்ட உடன் சுரக்கும் பால். இதை பால் கட்டி என்று சொல்லலாம் நாதமுனி

Link to comment
Share on other sites

  • Replies 753
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நாலையும் சாப்பிட்டுப் பார்க்கவேணும் கண்டியளோ. அடுத்த பன்னீர் செய்து போடுறன் பாருங்கோ கட்டாயம் பிடிக்கும்.😀

கடும்பு என்பது மாடு கன்று போட்ட உடன் சுரக்கும் பால். இதை பால் கட்டி என்று சொல்லலாம் நாதமுனி

இது பாற்கட்டி அல்ல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவைத்தாச்சு, Like க்கு போட்டாச்சு. 

இங்கு ஊர் மாதிரி கிழங்கு கிடைக்குதில்லை லண்டனிலிருந்து பார்சல் பண்ணிவிட முடியுமா???😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Nathamuni said:

இது பாற்கட்டி அல்ல. 

 

1 minute ago, உடையார் said:

சுவைத்தாச்சு, Like க்கு போட்டாச்சு. 

இங்கு ஊர் மாதிரி கிழங்கு கிடைக்குதில்லை லண்டனிலிருந்து பார்சல் பண்ணிவிட முடியுமா???😎

உள் பெட்டியில் முகவரி போடுங்கள். உடனே அனுப்பிவைக்கலாம் உடையார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

17 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பன்னீர் கறி - Paneer Curry

 

Image may contain: food

 

 

பன்னீர் கறிக்கு பால் விட்டு சமைப்பதை அதுவும் தே.பால் விட்டு சமைப்பதை இப்பத் தான் பார்க்கிறேன் 
கொத்தமல்லி இலை எப்பவும் கறியை இறக்கிய பின்பே அல்லது அடுப்பை அணைத்த பின்னே போட  வேண்டும் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Nathamuni said:

எனக்கென்னவோ, உந்த பண்ணீர் (கடும்பு) பிடிப்பதில்லை. 

உது வடவர் கறி தானே. நம்மூரில் இல்லை.

உங்களுக்கு பன்னீர்  பிடிக்காட்டில் பிடிக்கவில்லை என்று எழுதுங்கள் ...அதென்ன "வடவன்களின் சாப்பாடு"
 என்பதற்காக பிடிக்கவில்லை என்பது? அவர்களது சப்பாத்தி ,பூரி ,பரோட்டா மட்டும் பிடிக்குமோ ?
அண்மைய உங்களது கருத்துக்களை அவதானித்தலில் ஒரு திமிரும்,உங்களை விட்டால் மற்றவருக்கு ஒரு மண்ணும் தெரியாது என்ற நக்கலும் காணப்படுது...குறைத்து கொள்ளுங்கள் ...நல்லதிற்கில்லை 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, ரதி said:

உங்களுக்கு பன்னீர்  பிடிக்காட்டில் பிடிக்கவில்லை என்று எழுதுங்கள் ...அதென்ன "வடவன்களின் சாப்பாடு"
 என்பதற்காக பிடிக்கவில்லை என்பது? அவர்களது சப்பாத்தி ,பூரி ,பரோட்டா மட்டும் பிடிக்குமோ ?
அண்மைய உங்களது கருத்துக்களை அவதானித்தலில் ஒரு திமிரும்,உங்களை விட்டால் மற்றவருக்கு ஒரு மண்ணும் தெரியாது என்ற நக்கலும் காணப்படுது...குறைத்து கொள்ளுங்கள் ...நல்லதிற்கில்லை 
 

அட இங்க பாரடா.... அண்ணனின் அதே திமிருடன் தங்கையார்...

வடவர்களின் பண்ணீருக்கும், உங்களுக்கும் என்ன பாசம் என்று சொல்லக்கூடாதா அக்கோய்?

‘’வடவன்களின் சாப்பாடு" என்பதற்காக பிடிக்கவில்லை என்று எங்கே சொன்னேன்?

முக்கியமாக, நான் வடவர் கறி என்று தான் சொன்னேன், நீங்கள் ஏன் வடவன் என்று திணிக்கிறீர்கள்?

உங்களுக்கு விளப்பம் காணாது எண்டால், அடுத்தவர் சொன்னால், திமிராக்கா? உதென்ன கதை இது?

முதலில்,  பரோட்டா யாருடையது எண்டு சொல்லுங்கோ. பிறகு மிச்சத்தினை கதைப்போம்.

நீங்களும் தான், உந்த கொம்மான் பத்தி, உங்களது கருத்துக்களை அவதானித்தலில்,  உங்களை விட்டால் மற்றவருக்கு ஒரு மண்ணும் தெரியாது என்ற நக்கலும் காணப்படுது...குறைத்து கொள்ளுங்கள் ...நல்லதிற்கில்லை... 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

அட இங்க பாரடா.... அண்ணனின் அதே திமிருடன் தங்கையார்...

வடவர்களின் பண்ணீருக்கும், உங்களுக்கும் என்ன பாசம் என்று சொல்லக்கூடாதா அக்கோய்?

‘’வடவன்களின் சாப்பாடு" என்பதற்காக பிடிக்கவில்லை என்று எங்கே சொன்னேன்?

முக்கியமாக, நான் வடவர் கறி என்று தான் சொன்னேன், நீங்கள் ஏன் வடவன் என்று திணிக்கிறீர்கள்?

உங்களுக்கு விளப்பம் காணாது எண்டால், அடுத்தவர் சொன்னால், திமிராக்கா? உதென்ன கதை இது?

முதலில்,  பரோட்டா யாருடையது எண்டு சொல்லுங்கோ. பிறகு மிச்சத்தினை கதைப்போம்.

நீங்களும் தான், உந்த கொம்மான் பத்தி, உங்களது கருத்துக்களை அவதானித்தலில்,  உங்களை விட்டால் மற்றவருக்கு ஒரு மண்ணும் தெரியாது என்ற நக்கலும் காணப்படுது...குறைத்து கொள்ளுங்கள் ...நல்லதிற்கில்லை... 😎

நான் முதல் இதை பார்க்கும் போது இரண்டு ,மூன்று வரியில் பதில் இருந்தது ...இப்ப பெரிய பந்தியே இருக்கு ...சுட்டுட்டுதுதோ😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, ரதி said:

நான் முதல் இதை பார்க்கும் போது இரண்டு ,மூன்று வரியில் பதில் இருந்தது ...இப்ப பெரிய பந்தியே இருக்கு ...சுட்டுட்டுதுதோ😂

உதில்லை என்ன சுடுறதுக்கு இருக்குதக்கோய். இல்லாத ஒன்றை சொல்லி, இழுக்கும் போதே, அக்காவின்.... விளையாட்டு எண்டு தெரிஞ்சு போச்சுதே.

நீங்கள் வேற வாயும், வயிறுமாய் இருக்கிறியள் எண்டு சொல்லுறியள்... பின்ன, தம்பி இதுக்கெல்லாம் கோவிக்கிறதா?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

 

பன்னீர் கறிக்கு பால் விட்டு சமைப்பதை அதுவும் தே.பால் விட்டு சமைப்பதை இப்பத் தான் பார்க்கிறேன் 
கொத்தமல்லி இலை எப்பவும் கறியை இறக்கிய பின்பே அல்லது அடுப்பை அணைத்த பின்னே போட  வேண்டும் 
 

மற்றவர்கள் செய்வதுபோலதான் செய்யவேண்டும் என்று இல்லைத்தானே ரதி. செய்து பார்த்து நன்றாக இருந்தால் அது புது செய்முறை அவ்வளவு தான்.

Link to comment
Share on other sites

பன்னீர்  கறியை விட  சில்லி பன்னீர், பன்னீர் பட்டர் மசாலா இரண்டும் சுவையாக இருக்கும். அதை செய்து இணைத்துவிடுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமே அடுப்பை கொஞ்சம் நிப்பாட்டிப்போட்டு அங்கால போய் ஒருக்காய் விலக்கு பிடித்து விடுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஜெகதா துரை said:

பன்னீர்  கறியை விட  சில்லி பன்னீர், பன்னீர் பட்டர் மசாலா இரண்டும் சுவையாக இருக்கும். அதை செய்து இணைத்துவிடுங்கள்.

நானும் அதைத்தான் நினைத்தேன்.

😀

24 minutes ago, சுவைப்பிரியன் said:

சுமே அடுப்பை கொஞ்சம் நிப்பாட்டிப்போட்டு அங்கால போய் ஒருக்காய் விலக்கு பிடித்து விடுங்கோ.

பிறகு நான் கல்லெறி வாங்கவோ ????😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வறுத்த அரிசி நூடில்ஸ் - Stir fried Rice Noodle

Image may contain: food

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோழி இறைச்சிச் சுருள் - Chicken Wrap

 

Image may contain: food

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கும் பச்சைக்கும் நன்றி ரதி,சுவி அண்ணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீன் குழம்பு - Fish Curry

Image may contain: food

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, யாயினி said:

மீனுக்கு முருங்கைகாய் போடுறதா..🤔

போட்டுச் செய்து பாருங்கள். அத்தனை சுவை.😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, யாயினி said:

மீனுக்கு முருங்கைகாய் போடுறதா..🤔

அக்கா சொன்னால் கேக்க வேணும்.:grin:
முருங்கைக்காய்க்கு மீன் போடுறது நானும் கேள்விப்படேல்லை தான்.சாப்பிடவுமில்லை.என்ன செய்யிறது எங்கடை விதியை நொந்து போட்டு இருக்க வேண்டியதுதான்...:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, குமாரசாமி said:

அக்கா சொன்னால் கேக்க வேணும்.:grin:
முருங்கைக்காய்க்கு மீன் போடுறது நானும் கேள்விப்படேல்லை தான்.சாப்பிடவுமில்லை.என்ன செய்யிறது எங்கடை விதியை நொந்து போட்டு இருக்க வேண்டியதுதான்...:(

நான் கேள்விப்பட்டிருக்கிறேன். சாப்பிடேல்லை. நல்லாயிருக்கும் என்று சாப்பிட்ட ஆக்கள் சொல்லியிருக்கினம்.. இப்ப ஒருக்கா செய்யத்தான் இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, Nathamuni said:

நான் கேள்விப்பட்டிருக்கிறேன். சாப்பிடேல்லை. நல்லாயிருக்கும் என்று சாப்பிட்ட ஆக்கள் சொல்லியிருக்கினம்.. இப்ப ஒருக்கா செய்யத்தான் இருக்கு.

இப்ப நான் எப்பிடி யோசிக்கிறன் எண்டால் முருக்கங்காய் சாப்பிடுறது ஒரு மினைக்கெட்ட வேலை அதோடை மீன் முள்ளையும் பிரிச்செடுத்து ......முள்ளு வேறை அப்பப்ப குத்த... எரிச்சல் வராது??????
ஐ திங் மாசிக்கருவாடு ஒகே.😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

இப்ப நான் எப்பிடி யோசிக்கிறன் எண்டால் முருக்கங்காய் சாப்பிடுறது ஒரு மினைக்கெட்ட வேலை அதோடை மீன் முள்ளையும் பிரிச்செடுத்து ......முள்ளு வேறை அப்பப்ப குத்த... எரிச்சல் வராது??????
ஐ திங் மாசிக்கருவாடு ஒகே.😎

விசயம் என்னெண்டா, புது பாத்திரங்கள், அந்தமாதிரி லைட்டிங், பொறுமையான விளக்கம் எண்டு.... முன்னேற்றம் தெரியுது.

எத்தனை தரம். தொண்டை கிளிய, ச...ச.. கை நோக எழுதி இருப்போம்.... நம்ப ஈழப்பிரியன், உதென்ன டச்சு காலத்தைய பாத்திரமே எண்டு வேற கேட்டுப் போட்டார், தாங்க ஏலாம.

இனிப் பாருங்க.... பழைய வீடியோக்களை, கிளறிப் பாத்து, ஓ மை கோட்... இப்படியும், செய்யிறதே.... இதுக்கு தான்... திரும்ப, திரும்ப சொல்லியிருக்கினம்..... நேரம் கிடைக்கும் போது, திரும்பவும் செய்து போடவேணும் எண்டு நிணைக்கப்போறா.

இப்ப பாருங்கோவன், அவவுக்கும் சந்தோசம்... நமக்கும் நிம்மதி. ஏனென்டா, உலகம் முழுவதும், பார்க்கிற ஆக்கள், உது இலண்டணில இருந்து தான் போடப்படுது எண்டு இனி நம்புவினம் எல்லே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

விசயம் என்னெண்டா, புது பாத்திரங்கள், அந்தமாதிரி லைட்டிங், பொறுமையான விளக்கம் எண்டு.... முன்னேற்றம் தெரியுது..

அக்கா தன்ரை மெசொபொத்தேமியா சுமேரியர் எண்ட பெயருக்கு ஏற்ற மாதிரி சட்டிபானையும் அறப்பழசாய் இருக்க வேணும் எண்டு நினைச்சாவோ தெரியாது...😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

அக்கா சொன்னால் கேக்க வேணும்.:grin:
முருங்கைக்காய்க்கு மீன் போடுறது நானும் கேள்விப்படேல்லை தான்.சாப்பிடவுமில்லை.என்ன செய்யிறது எங்கடை விதியை நொந்து போட்டு இருக்க வேண்டியதுதான்...:(

ஒரேமாதிரி சாப்பிடாமல் அதை இதை போட்டுச் சமைச்சுச் சாப்பிட்டுப் பார்க்கவேணும். அதைவிட்டுப்போட்டு ......... மெயின் செப்ஆ இருந்து என்ன பிரயோசனம். 😀

18 hours ago, Nathamuni said:

நான் கேள்விப்பட்டிருக்கிறேன். சாப்பிடேல்லை. நல்லாயிருக்கும் என்று சாப்பிட்ட ஆக்கள் சொல்லியிருக்கினம்.. இப்ப ஒருக்கா செய்யத்தான் இருக்கு.

செய்து சாப்பிட்டுவிட்டு உவருக்குச் சொல்லுங்கோ.வித்தியாசமான சுவை.

17 hours ago, குமாரசாமி said:

இப்ப நான் எப்பிடி யோசிக்கிறன் எண்டால் முருக்கங்காய் சாப்பிடுறது ஒரு மினைக்கெட்ட வேலை அதோடை மீன் முள்ளையும் பிரிச்செடுத்து ......முள்ளு வேறை அப்பப்ப குத்த... எரிச்சல் வராது??????
ஐ திங் மாசிக்கருவாடு ஒகே.😎

முருங்கைக்காய்க் கறிக்கு மாசிபோடலாம். ஆனால் மீனுக்கு மாசி போடக்கூடாது.😃

10 hours ago, Nathamuni said:

விசயம் என்னெண்டா, புது பாத்திரங்கள், அந்தமாதிரி லைட்டிங், பொறுமையான விளக்கம் எண்டு.... முன்னேற்றம் தெரியுது.

எத்தனை தரம். தொண்டை கிளிய, ச...ச.. கை நோக எழுதி இருப்போம்.... நம்ப ஈழப்பிரியன், உதென்ன டச்சு காலத்தைய பாத்திரமே எண்டு வேற கேட்டுப் போட்டார், தாங்க ஏலாம.

இனிப் பாருங்க.... பழைய வீடியோக்களை, கிளறிப் பாத்து, ஓ மை கோட்... இப்படியும், செய்யிறதே.... இதுக்கு தான்... திரும்ப, திரும்ப சொல்லியிருக்கினம்..... நேரம் கிடைக்கும் போது, திரும்பவும் செய்து போடவேணும் எண்டு நிணைக்கப்போறா.

இப்ப பாருங்கோவன், அவவுக்கும் சந்தோசம்... நமக்கும் நிம்மதி. ஏனென்டா, உலகம் முழுவதும், பார்க்கிற ஆக்கள், உது இலண்டணில இருந்து தான் போடப்படுது எண்டு இனி நம்புவினம் எல்லே.

ஏற்கனவே நேற்று பார்த்தாச்சு. பழசுகளை திருப்பச்  செய்யப்போறன். நன்றி. 😀

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.