Jump to content

தமிழ் பொக்கிசம்.


Recommended Posts

  • Replies 204
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இப்ப கொஞ்ச நாளாக இவரது தமிழ் பொக்கிசம் நிகழ்ச்சியைப் பார்க்கிறேன்.ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் தலையை சுற்றும் விதமான நிகழ்வுகளை ஆதாரத்தோடு போட்டுடைக்கிறார்.
        இங்கே வேறு யாராவது இந்த நிகழ்ச்சியை பார்க்கிறீர்களா?
உண்மை பொய் நன்மை தீமை பற்றி யாருக்கேனும் ஏதாவது பட்டால் எழுதுங்கள்.

     இல்லை இல்லை உண்மையைத் தான் சொல்கிறார்.இது நம்பகமான காணொளி தான் என்றால் தொடர்ந்தும் இணைக்கலாம்.

Link to comment
Share on other sites

4 hours ago, ஈழப்பிரியன் said:

இப்ப கொஞ்ச நாளாக இவரது தமிழ் பொக்கிசம் நிகழ்ச்சியைப் பார்க்கிறேன்.ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் தலையை சுற்றும் விதமான நிகழ்வுகளை ஆதாரத்தோடு போட்டுடைக்கிறார்.
        இங்கே வேறு யாராவது இந்த நிகழ்ச்சியை பார்க்கிறீர்களா?
உண்மை பொய் நன்மை தீமை பற்றி யாருக்கேனும் ஏதாவது பட்டால் எழுதுங்கள்.

     இல்லை இல்லை உண்மையைத் தான் சொல்கிறார்.இது நம்பகமான காணொளி தான் என்றால் தொடர்ந்தும் இணைக்கலாம்.

 

நான் தொடர்ந்து பார்த்துவருகின்றேன்.  தரவுகளை அடிப்படையாக வைத்துதானே சொல்கின்றார். இதில் பொய்யுரைக்கவேண்டிய அவசியம் எதுவும் இல்லை . வலிந்த பண உதவிகளும் நன்கொடைகளும் பன்நாட்டு கார்பரேட்  நிறுவனங்களிடம் இருந்து  ஏழை நாடுகளுக்கோ இல்லை கல்விநிறுவனங்கள்  ஊடகங்களுக்கு கொடுக்கப்படுகின்றது என்றால் அதன் பின்னணியில் சூழ்சிகள் வஞ்சகங்கள் இருப்பது வழமையானது. 

 

Quote

 

Coronavirus: Africa will not be testing ground for vaccine, says WHO

The head of the World Health Organization (WHO) has condemned as "racist" the comments by two French doctors who suggested a vaccine for the coronavirus could be tested in Africa.

https://www.bbc.com/news/world-africa-52192184

 

 

ஏழை நாடுகளில் மருந்துகளை பரிசோதிக்கும் போக்கு எப்போதும் மேற்குநாடுகளிடம் இருந்தே வருகின்றது.  இந்தியா ஆபிரிக்கா இப்போது எதிர்வினையாற்ற  முற்படுகின்றார்கள். பன்னாட்டு மருந்துக் கம்பனிகள் மொன்சான்ரோ போன்ற நிறுவனங்கள் பில்கேட்ஸ் போன்றவர்களின் மறுபக்கங்களை பற்றி தமிழர்கள் சிந்திப்பதற்கு இவ்வாறான காணெளிகள் தொடக்கமாக இருக்கும்.  அதனால் தொடரந்து இணையுங்கள். 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகின் முன்னணி பத்திரிகைகள், டிவி செய்திகளை இணையத்தில் படித்து அப்படியே தமிழில் தருவதால், செய்திகளில் தவறு இருக்க வாய்பில்லை.

ஆனாலும், சங்கிகளுக்கு ஆதரவாக, வாழைப்பழத்தில் ஊசி அடிப்பது போல, தமிழ்தேசியத்தினை, ஆதரிப்பது போல, மறைமுக தாக்குதல் நடாத்தப்போய்.... சீமான் தம்பிகளிடம் வாங்கிக் கட்டி... 

இவரது பூர்வீகம் கிளறப்பட, இவர் பூர்வீகம் திருவனந்தபுரம்...மொழி மலையாளம். தமிழ் இவரது இரண்டாவது மொழி என்று தெரிய வந்ததும், சமாதானமாகி... நாம உண்டு, நம்ம சானல் உண்டு என்று அடங்கி விட்டார்....

பெரும் தொகை subscribers கொண்ட சானல்களை சங்கிகளும், திமுகவும் காசு கொடுத்து மடக்கி, தம் அரசியல் எதிரிகளை மட்டம் தட்ட பயன் படுத்தும் முனைவில் சிக்கி, முதலுக்கே மோசம் என்ற நிலையில் சுதாகரித்துக் கொண்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பில் கேட்சின் உண்மை முகம்

 

பில் கேட்சின் தனி ஒருவன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சண்டமாருதன் said:

நான் தொடர்ந்து பார்த்துவருகின்றேன்.  தரவுகளை அடிப்படையாக வைத்துதானே சொல்கின்றார். இதில் பொய்யுரைக்கவேண்டிய அவசியம் எதுவும் இல்லை . வலிந்த பண உதவிகளும் நன்கொடைகளும் பன்நாட்டு கார்பரேட்  நிறுவனங்களிடம் இருந்து  ஏழை நாடுகளுக்கோ இல்லை கல்விநிறுவனங்கள்  ஊடகங்களுக்கு கொடுக்கப்படுகின்றது என்றால் அதன் பின்னணியில் சூழ்சிகள் வஞ்சகங்கள் இருப்பது வழமையானது. 

 

1 hour ago, Nathamuni said:

உலகின் முன்னணி பத்திரிகைகள், டிவி செய்திகளை இணையத்தில் படித்து அப்படியே தமிழில் தருவதால், செய்திகளில் தவறு இருக்க வாய்பில்லை.

ஆனாலும், சங்கிகளுக்கு ஆதரவாக, வாழைப்பழத்தில் ஊசி அடிப்பது போல, தமிழ்தேசியத்தினை, ஆதரிப்பது போல, மறைமுக தாக்குதல் நடாத்தப்போய்.... சீமான் தம்பிகளிடம் வாங்கிக் கட்டி... 

இவரது பூர்வீகம் கிளறப்பட, இவர் பூர்வீகம் திருவனந்தபுரம்...மொழி மலையாளம். தமிழ் இவரது இரண்டாவது மொழி என்று தெரிய வந்ததும், சமாதானமாகி... நாம உண்டு, நம்ம சானல் உண்டு என்று அடங்கி விட்டார்....

பெரும் தொகை subscribers கொண்ட சானல்களை சங்கிகளும், திமுகவும் காசு கொடுத்து மடக்கி, தம் அரசியல் எதிரிகளை மட்டம் தட்ட பயன் படுத்தும் முனைவில் சிக்கி, முதலுக்கே மோசம் என்ற நிலையில் சுதாகரித்துக் கொண்டார்.

உங்கள் கருத்துக்களுக்கு மிகவும் நன்றி சண்டமாருதன்,நாதமுனி.
இவரின் ஏமாற்று முழுவதும் ஆபிரிக்காவும் ஆசியாவும் போலவே இருக்கிறது.
பில் கேட் மேல் மிகவும் மரியாதை வைத்திருந்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலக அமைப்பின் உண்மைகள்

 

 

Link to comment
Share on other sites

அமெரிக்காவில் கோட்டல் ஒன்றில் இருந்து பலரை சுட்டதை ஒருவர் தான் சுட்டது என நானும் நம்பினேன்.பின்னர் சில ஊடகங்கள் தமது சந்தேகத்தை வெளியிட்டன. அதனை இவர் ஆதாரங்களை திரட்டி  இன்னும் சிலரும் உடந்தையாக இருந்திருக்கிறார்கள் என்பதை வெளியிட்ட காணொளி பிரமிக்க  வைத்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

             கொரோனா எனும் வெய்யிலில் குளிர் காயபோகும் இந்தியா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                                கிம் இரு(ற)ந்தால் யாருக்கு லாபம்.

 


கொரிய எல்லை காப்பதற்காக 5 பில்லியன் டெலர் கேட்டு தென்கொரியாவை மிரட்டும் அமெரிக்கா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                                     சோழனை சோதிக்கும் ரஞ்சித்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                                            சீனாவின் 6 வருட ரகசியம்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                              வுஹான் சோதனை எலி பாகிஸ்தான்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இவ‌ரின் காணொளிக‌ள் பார்த்து இருக்கிறேன் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா / இவ‌ர் சொல்லுவ‌து எல்லாம் ந‌டைமுறைக்கு வ‌ரும் என்று ந‌ம்ப‌ வேண்டாம் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா 😉

On 23/4/2020 at 04:22, Nathamuni said:

உலகின் முன்னணி பத்திரிகைகள், டிவி செய்திகளை இணையத்தில் படித்து அப்படியே தமிழில் தருவதால், செய்திகளில் தவறு இருக்க வாய்பில்லை.

ஆனாலும், சங்கிகளுக்கு ஆதரவாக, வாழைப்பழத்தில் ஊசி அடிப்பது போல, தமிழ்தேசியத்தினை, ஆதரிப்பது போல, மறைமுக தாக்குதல் நடாத்தப்போய்.... சீமான் தம்பிகளிடம் வாங்கிக் கட்டி... 

இவரது பூர்வீகம் கிளறப்பட, இவர் பூர்வீகம் திருவனந்தபுரம்...மொழி மலையாளம். தமிழ் இவரது இரண்டாவது மொழி என்று தெரிய வந்ததும், சமாதானமாகி... நாம உண்டு, நம்ம சானல் உண்டு என்று அடங்கி விட்டார்....

பெரும் தொகை subscribers கொண்ட சானல்களை சங்கிகளும், திமுகவும் காசு கொடுத்து மடக்கி, தம் அரசியல் எதிரிகளை மட்டம் தட்ட பயன் படுத்தும் முனைவில் சிக்கி, முதலுக்கே மோசம் என்ற நிலையில் சுதாகரித்துக் கொண்டார்.

ச‌ரியான‌ ப‌திவு நாதாமுனி ஜ‌யா /

Link to comment
Share on other sites

On 23/4/2020 at 04:22, Nathamuni said:

உலகின் முன்னணி பத்திரிகைகள், டிவி செய்திகளை இணையத்தில் படித்து அப்படியே தமிழில் தருவதால், செய்திகளில் தவறு இருக்க வாய்பில்லை.

ஆனாலும், சங்கிகளுக்கு ஆதரவாக, வாழைப்பழத்தில் ஊசி அடிப்பது போல, தமிழ்தேசியத்தினை, ஆதரிப்பது போல, மறைமுக தாக்குதல் நடாத்தப்போய்.... சீமான் தம்பிகளிடம் வாங்கிக் கட்டி... 

இவரது பூர்வீகம் கிளறப்பட, இவர் பூர்வீகம் திருவனந்தபுரம்...மொழி மலையாளம். தமிழ் இவரது இரண்டாவது மொழி என்று தெரிய வந்ததும், சமாதானமாகி... நாம உண்டு, நம்ம சானல் உண்டு என்று அடங்கி விட்டார்....

பெரும் தொகை subscribers கொண்ட சானல்களை சங்கிகளும், திமுகவும் காசு கொடுத்து மடக்கி, தம் அரசியல் எதிரிகளை மட்டம் தட்ட பயன் படுத்தும் முனைவில் சிக்கி, முதலுக்கே மோசம் என்ற நிலையில் சுதாகரித்துக் கொண்டார்.

நாத முனி யாழ்பாண தமிழர்களின் பூர்வீகம் மலபார் அதாவது மலையாள பூர்வீகம் என்று எமக்கு புவியியல் கற்பித்த ஆசிரியர் க. குணராசா( செங்கை ஆழியான்)  கற்பித்த ஞாபகம்.அதற்கான பல ஆதாரங்களை அவர் கற்பித்திருந்தார்.   யாழ்ப்பாண பேச்சு நடை தமிழ் நாட்டை ஒத்திருக்காது மலையாளத்தை ஒத்திருப்பதைக் காணலாம்.  அதில் எவ்வளவு உண்மை உள்ளது எனக்கு தெரியாது. பரீட்சை முடிய வழமை போல் எல்லாம் மறந்து போச்சு. யாரேனும் வரலாற்று பதிவுகளுடன் தர முடியுமா? முக்கியமாக கிருபன் இந்த விடயங்களை அறிந்திருப்பார் என்று நினைக்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

நாத முனி யாழ்பாண தமிழர்களின் பூர்வீகம் மலபார் அதாவது மலையாள பூர்வீகம் என்று எமக்கு புவியியல் கற்பித்த ஆசிரியர் க. குணராசா( செங்கை ஆழியான்)  கற்பித்த ஞாபகம்.அதற்கான பல ஆதாரங்களை அவர் கற்பித்திருந்தார்.   யாழ்ப்பாண பேச்சு நடை தமிழ் நாட்டை ஒத்திருக்காது மலையாளத்தை ஒத்திருப்பதைக் காணலாம்.  அதில் எவ்வளவு உண்மை உள்ளது எனக்கு தெரியாது. பரீட்சை முடிய வழமை போல் எல்லாம் மறந்து போச்சு. யாரேனும் வரலாற்று பதிவுகளுடன் தர முடியுமா? முக்கியமாக கிருபன் இந்த விடயங்களை அறிந்திருப்பார் என்று நினைக்கிறேன். 

இது உண்மை பல வருடம் மலையாளிளுடன் பழகிய அனுபவத்தில் கண்டது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, tulpen said:

நாத முனி யாழ்பாண தமிழர்களின் பூர்வீகம் மலபார் அதாவது மலையாள பூர்வீகம் என்று எமக்கு புவியியல் கற்பித்த ஆசிரியர் க. குணராசா( செங்கை ஆழியான்)  கற்பித்த ஞாபகம்.அதற்கான பல ஆதாரங்களை அவர் கற்பித்திருந்தார்.   யாழ்ப்பாண பேச்சு நடை தமிழ் நாட்டை ஒத்திருக்காது மலையாளத்தை ஒத்திருப்பதைக் காணலாம்.  அதில் எவ்வளவு உண்மை உள்ளது எனக்கு தெரியாது. பரீட்சை முடிய வழமை போல் எல்லாம் மறந்து போச்சு. யாரேனும் வரலாற்று பதிவுகளுடன் தர முடியுமா? முக்கியமாக கிருபன் இந்த விடயங்களை அறிந்திருப்பார் என்று நினைக்கிறேன். 

என்னய்யா புதுக் கதையாக இருக்கு.
மலையாளம் பிறந்தே இன்னும் 500 வருடம் முடியலை என்கிறார்கள்?
உங்கள் கதையைப் பார்த்தால் தமிழ் மலையாளத்தில் இருந்து பிறந்தது போலல்லவா இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, colomban said:

இது உண்மை பல வருடம் மலையாளிளுடன் பழகிய அனுபவத்தில் கண்டது

யூ மீன் ஓமணக்குட்டி? 🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, tulpen said:

நாத முனி யாழ்பாண தமிழர்களின் பூர்வீகம் மலபார் அதாவது மலையாள பூர்வீகம் என்று எமக்கு புவியியல் கற்பித்த ஆசிரியர் க. குணராசா( செங்கை ஆழியான்)  கற்பித்த ஞாபகம்.அதற்கான பல ஆதாரங்களை அவர் கற்பித்திருந்தார்.   யாழ்ப்பாண பேச்சு நடை தமிழ் நாட்டை ஒத்திருக்காது மலையாளத்தை ஒத்திருப்பதைக் காணலாம்.  அதில் எவ்வளவு உண்மை உள்ளது எனக்கு தெரியாது. பரீட்சை முடிய வழமை போல் எல்லாம் மறந்து போச்சு. யாரேனும் வரலாற்று பதிவுகளுடன் தர முடியுமா? முக்கியமாக கிருபன் இந்த விடயங்களை அறிந்திருப்பார் என்று நினைக்கிறேன். 

 

37 minutes ago, ஈழப்பிரியன் said:

என்னய்யா புதுக் கதையாக இருக்கு.
மலையாளம் பிறந்தே இன்னும் 500 வருடம் முடியலை என்கிறார்கள்?
உங்கள் கதையைப் பார்த்தால் தமிழ் மலையாளத்தில் இருந்து பிறந்தது போலல்லவா இருக்கிறது.

சில விடயங்களில் நாம் ஆழ்ந்த அக்கறை கொள்வதில்லை.... அதனாலேயே இந்த புரிதல் குழப்பம்...

தமிழகத்தின் தென்பகுதி கன்னியாகுமரி பகுதிக்கும் யாழ்பாணத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு.

சங்கிலி மன்னனின் பூர்வீகத் தொடர்புகள் கன்னியாகுமரி பகுதியில் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

கன்னியாகுமரி, கேரளத்தின் எல்லை. பல மலையாள கிராமங்களும் (தமிழ்நாட்டினுள்) உள்ளன.

தமிழகத்தில் சென்னைப் பகுதியில் உள்ள ஈழ தமிழர்கள், உச்சரிப்பு குறித்த கேள்வி எழும் சில வேளைகளில் கன்னியாகுமரி பக்கம், தென்காசிகாரர்கள் என்று சொல்வார்கள்.

பாரிஸ் நகரில் வாழும் சிவா சின்னப்பொடி என்பார், ஈழவர் எனும் ஒரு இனக்குழு கேரளாவில் உள்ளது. அவரகளது உணவு வழக்கம் யாழில் உள்ளது போன்றே, என்று தான் நேரில் பார்த்ததை எழுதினார்.

ஆயினும் மலபார் (மலை எனும் தமிழ் சொல்லும், பார் எனும் அரபிச் சொல்லும் இணைந்தது; மலைப்பாங்கான பகுதியில் பரந்து வாழ்ந்த பரவர்கள்) என்னும் சொல், யாழ்பாணத்துடன் சேர்ந்தது போர்த்துக்கேயர் காலத்தில் தொடங்கி, ஒல்லாந்தர் காலத்தில் வியாபித்து, பிரிட்டிஸ் காலத்தில் குறைந்தது.

தொடரும்...

Link to comment
Share on other sites

வணக்கம்.
இது "இங்கிருந்தே வந்தான்" அறிமுகம்.

யாழ்ப்பாணத்தில், மலையாளத்திலிருந்து குடியேறியவர்களும் இருக்கிறார்கள். ஆனால், யாழ்ப்பாணத் திலுள்ள எல்லாத் தமிழரும் மலையாளிகளல்ல. ஆதித் தமிழர்களே பெரும் பான்மை.

மலையாளம் என்பது ஒரு இடப்பெயரே தவிர, இனப் பெயர் அல்ல. சேர, சோழ, பாண்டியரில், சேரர்களே மலையாளிகள். வன்னியர், கொங்கு நாட்டார், குடகு நாட்டார் என்பது போல.

 

கவனிக்க: தமிழ் நாட்டை இரண்டாகப் பிரித்தால் ஒரு பகுதி வேற்று இனமாக மாறும் அபாயம் உண்டு.

 

இலங்கையில், யாழ்ப்பாணத்தார், மட்டக்களப்பார் என்பது தனியினமா? ஒரு காலத்தில், அப்படி எண்ணியவர்களுமுண்டு. சிலாபம், நீர்கொழும்புத் தமிழர்கள் சிங்களவர்களாக மாற்றப்பட்டது போல்தான் இதுவும்.

சேரர்களை "மலையாளிகளாக" மாற்றியது, பிரித்தாளும் சூழ்ச்சியைக்கையாளும் வந்தேறிகளே.

சேரன் செங்குட்டுவன் இருந்து சிலப்பதிகாரம் படைத்த இடம் எப்படி தமிழில்லாமல் போகும். வந்தேறிகளே மலையாளம் தனிமொழி என்பதில் தீவிரமாயிருப்பவர்கள். 

மலையாளிகளில் இரு வகையுண்டு: ஒன்று பூர்வீகத் தமிழர், மற்றது வந்தேறிகள். இலங்கைச் சிங்களவர்களும் இவ்வாறே. கன்னட, ஆந்திரர்களும் இவ்வாறே. 

இலங்கை முஸ்லிம்களும் இவ்வாறே. தாங்கள் எல்லோரும் ஒரு இனம் என்று மதத்தை வைத்து பிரிப்பார்கள். எல்லாம் ஆழும் சூழ்ச்சியே.

உதாரணத் துக்கு: ஜேசுதாஸ் பூர்வீகத் தமிழர், மற்ற நடிகர் கூட்டம் வந்தேறிகள். எப்படிக் கண்டுபிடிப்பது என்று உங்களுக்குப் புரியும்.

 

சேரநாடு என்பது மலைச்”சாரல்” நாடகும். “சார” நாடு என்பதே “சேர” நாடாக மருவியது.

சாரல் என்பதே சேரல் என்றாகிய வினைச்சொல், இடப்பெயராக சேரலம், சேரலர் என்றாகிப் பின் திரிப்பவர்களால் திரிபடைந்து கேரளாவாகியது.  பின்னர், கேரளத்திலிருக்கும் காய் “கேரா”வாகியது.

மாறாக, “கேரா”விலிருந்து கேரளாவாகவில்லை, அப்படியானால் “கேரா” என்றால் என்ன?

 

சரி விடயத்துக்கு வருவோம்.

மலபார் என்பதன் பொருள்:

 

உழுவார் : உழவர் என்பது உழுபவர்கள்.

சுடுபவர்கள் : சுடுவார் பொடி நீறும் நல்ல துண்டப் பிறை…. - தேவாரம்

எழுவார் - எழுவான்கரையிலிருப்பவர்கள், படுவார் – படுவான்கரையிலிருப்பவர்கள்

எழுவார் – எழுச்சியுடையவர்கள்.

படுவார் – xyz எனப்படுவார் -  xyz எனப்படுபவர்கள்.

இன்னும் ஒரு தொகை உதாரணங்கள் சொல்லலாம், சரி விடயத்துக்கு வருவோம்.

 

உழு என்னும் வினைச்சொல் “வார்” என்னும் விகுதி சேர்த்து “உழுவார்” என்னும் பெயர்ச் சொல்லாகிறது.

வினைச்சொல்லிலிருந்தே பெயர்ச்சொல் உருவாகிறது.

உண்மையில்: உழு + ஆர் = "உழுவார்" ஆகியது, இங்கு "ஆர்" என்பதே விகுதி.

ஆர் என்பது “அ”ப்படியான அவ”ர்”கள்.

 

மலைச் சாரலில் வாழ்ந்தவர்கள் மலைவார் => மலவார்

“வார்” என்பது வேற்று மொழியாளர்களால் “பார்” ஆக மாறி “மலபார்” ஆனது.

வேற்று மொழியாளர்களால் யாழ்ப்பாணம் Jaffna ஆகவும், மட்டக்களப்பு Batticaloa ஆகவும் மாறியது போல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

என்னய்யா புதுக் கதையாக இருக்கு.
மலையாளம் பிறந்தே இன்னும் 500 வருடம் முடியலை என்கிறார்கள்?
உங்கள் கதையைப் பார்த்தால் தமிழ் மலையாளத்தில் இருந்து பிறந்தது போலல்லவா இருக்கிறது.

பல மல்லுகளுடன் ஞான் பறைஞ்சதில், எல்லா மல்லுகளும் ஒருமிச்சி சொல்லும்  திருவாசகம்,

"மலையாளத்திலிருந்து பிறந்ததுதான் தமிழ்.." 🤣

பட்சே ஞான் கண்டிட்டில்லா..! 😎

Link to comment
Share on other sites

3 minutes ago, ராசவன்னியன் said:

பல மல்லுகளுடன் ஞான் பறைஞ்சதில், எல்லா மல்லுகளும் ஒருமிச்சி சொல்லும்  திருவாசகம்,

"மலையாளத்திலிருந்து பிறந்ததுதான் தமிழ்.." 🤣

பட்சே ஞான் கண்டிட்டில்லா..! 😎

வந்தேறிகளே மலையாளம் தனிமொழி என்பதில் தீவிரமாயிருப்பவர்கள். இவர்களே தமிழர்களுக்கெதிராயிருப்பவர்கள். Wikipedia வில் எழுதுபவர்களும் இவர்களே. வந்தேறிகள்தான் உயர் பதவியிலிருப்பார்கள்,  வந்தேறிகள் தங்களது இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள பூர்வீகத் தாருக்கு இனத்துவேச மூளைச்சலவை செய்வார்கள்.

 

மலையாளம் என்றால் என் ன என்று கேளுங்கள் ஐயா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் முக்கியமானவர்கள் நம்பூதிரிகள்..

வடக்கிலிருந்து சமஸ்கிருதத்தை காவிவந்து சேர மன்னர்களிடம் நாங்கள் "இறை தூதர்கள், டெரெக்ட் ஏஜென்ட்கள்" என மயக்கி, பாமர மக்களை ஏமாற்றி அவர்கள் பேசிய பச்சைத் தமிழில், சமஸ்கிருதம் விசம் கலந்து "மல்லு" தேவபாசை(???)யை உருவாக்கியவர்கள். 🙄

இவர்களின் ஆக்கிரமிப்பால், நான் பள்ளியில் படித்த தமிழிலும் ஸ், ஷ், ஜ் எழுத்துக்கள் உண்டு. தமிழ்நாட்டு தமிழர்களின் தினசரி வழக்கிலும் இவ்வெழுத்துக்கள் ஊடுருவிவிட்டன.

இவ்விடயத்தில் ஈழத்தமிழை பார்த்து நான் பொறாமைபடுவதும் உண்டு. 😡

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போர்த்துக்கேயர் கோழிக்கோடு வந்திறங்கியபோது அங்கே ஆண்டு கொண்டிருந்தவர்கள் சமூரியர்கள். இவர்கள் சேரமன்னன் வழிவந்த, இப்போது தம்மை நாயர்கள் என்று கூறிக்கொள்வோர். 

***

(தனியாக ஆய்வு செய்யப்பட வேண்டிய இந்த நாயர்கள் தான், தமிழகத்தினை ஆண்ட தெலுங்கு விஜயநகர நாயக்கர்கள் என்பதாகவும் ஒரு குழப்பம் உண்டு. இந்த நாயக்கர்கள் இலங்கையின் தென்னிலங்கை ராசதானிகள் (கோட்டை, சீதாவாக்கை, கண்டி ) உடனான அரச குடும்ப சம்பந்தங்கள் மூலம், இலங்கை தீவினுள் புகுந்து கொண்டனர். இன்றும் விக்கிரமநாயக்க, திசாநாயக்க, ஏக்கநாயக்க, பண்டாரநாயக்க, ராமநாயக்க என்று பலர் அரசியலில் உள்ளனர். 

மகிந்தா, மலே, பறங்கி இன கலப்பு கிறித்தவர்கள். ஜூலியஸ் ரிச்சர்ட் ஜெயவர்த்தனே, சாலமன் வில்சன் ரிச்சர்ட் டயஸ் பண்டாரநாயக்க போலவே அரசியலுக்காக பௌத்தராக மாறியவர்கள்.)

***

இவர்கள் மிளகு, ஏலக்காய் போன்ற வாசனை பொருட்கள் வியாபாரம் மூலம் பெரும் செல்வம் சேர்த்து வைத்து இருந்தார்கள். இவர்களது வியாபார முகவர்கள் ஆக மத்திய கிழக்கின் அரபிகள் இருந்தனர். போர்த்துக்கேயர் வந்தபோது துறைமுக சுங்க அதிகாரியாக இருந்தவர் ஒரு இஸ்லாமியர்.

அவர்கள் தமது வியாபாரத்தினை ஐரோப்பியர்களிடம் இழக்க தயாராக இருக்கவில்லை. உண்மையில் சிலுவை யுத்தத்தினால், துருக்கிய  ஒட்டோமான் பேரரசின் ஆதிக்கத்தினால், மத்திய தரை கடல் பகுதி இஸ்லாமியருக்கு மட்டுமே ஆனதாக இருந்தது. இதன் காரணமாக அரபிகள் மிளகு வர்த்தகத்தில் ஏக போக உரிமை கொண்டிருந்தனர். மிளகு வாங்க ஐரோப்பிய அரசர்கள், பணக்காரர்கள் தங்கத்தினை கொடுக்கும் அளவுக்கு மிளகின் விலை இருந்தது. மன்னர்கள் மிளகினை வரிக்கு பதிலாக வாங்கிக் கொண்டனர். இதனால் இது Pepper Tax என்று ஐரோப்பிய வரலாறில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

இந்த அறாவிலையே, இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் ஆகிய தங்கள் மீது சிலுவை யுத்தத்தினை நடத்தும் பொருளாதாரத்தினை கொடுப்பதாக உணர்ந்த பின்னரே, மத்திய தரைக்கடலின் மறு முனையில் இருந்த ஸ்பானியர்களையும், போர்த்துகேயர்களையும் இந்திய துணைக்கண்டத்துக்கான புதிய பாதையினை தேட வைத்தது.

ஆகவே போர்த்துக்கேயர் மூர்க்கமாக எதிர்க்கப்பட்டனர். 

திரும்பி சென்ற போர்த்துக்கேயர், பெரும் பலத்துடன் வந்து, கோழிக்கோட்டுக்கு கீழே கொச்சின் பகுதியினை பிடித்துக் கொண்டனர்.

அங்கே இருந்த மக்களை வைத்து தமது வியாபாரத்தினை பெருக்க முயன்றாலும், அவர்கள் சமூரியர்களால் தொடர்ந்து எதிர்க்கப்பட்டதாலும், இவர்களுடன் தொடர்பு கொண்டிருந்த மக்களை போர்த்துக்கேயர் ஆதிக்கத்துக்கு வெளியே இருந்த மக்கள் புறக்கணித்ததால், போர்த்துகேயர்களுக்கு வியாபாரம் விருத்தியாகவில்லை. அவர்கள்  பார்த்துக் கொண்டிருக்கவே, சீனர்கள் கப்பலில் வந்து, சமூரியர்கள் இடம் மிளகு வாங்கி சென்றனர்.

அரபிகள் தொடர்ந்து சமூரிகளுடன், கொச்சினுக்கு மேலே கோழிக்கோட்டில் வியாபார தொடர்பினை பேணினர்.

(இதனை தடுக்கவே 1510ல் கோவாவினை போர்த்துக்கேயர் பிடித்துக் கொண்டனர். நாளடைவில் இந்த அரபிகள் ஆதிக்கம் முறியடிக்கப்பட்டது வேறு கதை)

ஆகவே போர்த்துக்கேயர் வேறு இடம் பார்க்க தொடங்கினார்கள். 1505 அளவில் இலங்கை தீவு பக்கம் ஒதுங்கினர்.

அவர்கள் பிடித்த முதல் இடம் வடக்கே உள்ள மக்கள் வாழாத தீவுக்கூட்டம். முக்கியமாக நெடுந்தீவு.

இங்கிருந்தே அவர்கள் தமது வியாபாரத்தினை பெருக்கிக்கொண்டனர். தமிழகத்துக்கும், யாழ்ப்பாணத்துக்கும் இடையே, சீனாவின் கப்பல் பாதையினை மடக்கிக் கொண்டனர். 

சீனாவுக்கு தாமே பொருட்களை வழங்கும் நோக்கில், சீனாவுக்கு பக்கத்தில் மக்குவா என்ற இடத்தினை (லீசுக்கு எடுத்து, பின்னர்) பிடித்துக் கொண்டனர். ஜப்பான், மலாக்கா, தாய்லாந்து என கீழை தேயம் முழுக்க வியாபாரம் வளர்ந்தது.

பாக்கு நீரிணையில் முத்துக் குளிக்க, கப்பல் ஓட்டிகளாக, படை வீரர்களாக, தமது முன்னைய மலபார் தொடர்புகளை அழைத்து வந்து குடி அமர்த்தினர். ஆனாலும் அப்பகுதி வர்த்தக மொழியாக தமிழ் இருந்தபடியால், தமிழ் நிலைத்தது.

இவர்கள் மிளகாய் உட்பட பல வகையான பயிர் செய்கைகளை நடாத்தி ஏற்றுமதி செய்தனர். முக்கியமாக யாழ்ப்பாணத்தில் பூசணிக்காய், தமிழகத்தில் பறங்கியர்களான போர்த்துக்கேயர் கொண்டு வந்து வியாபாரம் செய்ததால் பரங்கிக்காய் என்று அழைக்கப்படுகின்றது. 

ஒல்லாந்தர் காலத்தில் அறிமுகமாகிய புகையிலை யாழ் குடாநாட்டின் பொருளாதார வளத்தின் முக்கிய இடம் பிடித்த ஒன்று. இந்தவருடம் முதல் சிங்கள அரசினால் இப்பயிர் தடை செய்யப்படுகின்றது. 

இந்த பயிர் செய்கையில், அனுபவமிக்க மலபார் கொண்டு வந்து இறக்கப்பட்டனர். அவர்களுக்கு காணிகள் வழக்கப்பட்டன. அவர்கள் தமிழ் பேசிய காரணத்தினால் நாளடைவில் தமிழர்கள் ஆகினர். தமிழ் மொழியின் கிளை மொழியே மலையாளம் ஆகியதால், அதுவும் அப்போது தான் தோன்றி பேச்சு வழக்கில் வந்த படியால், இந்த மலபார்களுக்கு தமிழ் மொழிக்கு திரும்புவது பெரிய பிரச்சனையாக இருந்திருக்க முடியாது.

தீவுப்பகுதியில் ஊர்காவத்துறை பகுதியில் பாலக்காடு என்ற சிறு கிராமம் உள்ளது. இதே பெயரில் கேரளத்தில் ஒரு பிரபல்யமான சிறு நகரம் உண்டு.

பிரிட்டிஷ் காலம் முடிந்த பின்னும் 1958 காலப்பகுதியில் கூட, யாழ்ப்பாண, மலையாள புகையிலை வியாபாரிகள் சங்கம் என்ற அமைப்பு இருந்து, சிங்கள அரசின் சில வேலைகளினால் செயலற்று போனது என வாசித்திருக்கிறேன்.

போர்த்துக்கேயர் காலத்தில் தென் இலங்கையிலும் கணிசமான மலபார் குடி அமர்ந்தார்கள். தம்மை நம்பி, தம்முடன் கொச்சினில் இருந்த மக்களை, இங்கே அழைத்து வந்து நல்ல முறையில் வைத்திருந்தார்கள்.

இறுதி யுத்த கால சிங்கள ராணுவ தளபதி சரத் பொன்சேகா, இந்த மலபார் வம்சாவளி என்பார்கள். 

*****

என்னை வருடும் ஒரே ஒரு விடயம், ஐரோப்பியர்களும், தமிழகத்தினை சேர்ந்த பலரும் சொல்லும் ஒரு விடயம். ஐரோப்பியர்கள் இந்தியா வந்தார்கள்.  (இதில் சீமான் தெளிவாக இருக்கின்றார்)

இந்திய துணைக்கண்டம் என்ற சொல்லை, இந்தியா என்று குறிக்கின்றனர்.

கொலம்பஸ் தான் சென்றடைந்தது இந்தியா என்று கருதி வைத்த பெயர் பின்னர் மேற்கு இந்தியா (வெஸ்ட் இண்டீஸ்) ஆகியது. அங்கே பார்த்த மக்களை செவ்விந்தியர்கள் என்றார்.

ஆனால் சேரர், சோழ, பாண்டியர்கள் ஆண்ட தென்னிந்திய முனை தவிர்ந்த இந்திய துணைக்கண்டம் ஒரு சேர ஆளப்பட்டது மௌரிய வம்ச (அசோக சக்கரவர்த்தியின்) கிமு 350 ஆண்டு காலப்பகுதி மட்டுமே.

ஆகவே மூவேந்தர் ஆண்ட தென் பகுதி ஒரு போதுமே இந்தியாவின் ஒரு பகுதியாக ஆளப்பட்டதில்லை.

மொத்த துணைக்கண்டத்தினையும்  இந்தியாவாக ஆண்டவர்கள் கிழக்கு இந்திய கம்பெனி தான்.

பிரிட்டிஷ் இந்தியா ஆகியது 1857ல்  சிப்பாய் கலகத்தினை தொடர்ந்து.

கிழக்கு இந்திய கம்பெனி தான் அடிப்படையில் ஒரு வியாபார நிறுவனம் என்பதனை மறந்து, பிரிட்டிஷ் பாராளுமன்றம் மற்றும் அரச குடும்பத்துக்கு இணையாக தாமும் ஒரு பெரும் சாம்ராஜ்யத்தினை நடத்துவதாக பீலா விடப்போக, தருணம் பார்த்துக் காத்திருந்த பிரிட்டிஷ் அரசு, சிப்பாய் கலகத்தினை பாவித்து, கிழக்கு இந்திய கம்பெனியை களைத்து, அதன் கீழிருந்த நாடுகள் அனைத்தையும் பிரிட்டிஷ் முடிக்குரிய காலனியாக அறிவித்ததனை தொடர்ந்தே பிரிட்டிஷ் இந்தியா பிறந்தது.

இந்தியா சட்ட ரீதியாக பிறந்தது 1947ல். 

ஆகவே போர்த்துக்கேயர் இந்தியா வரவில்லை. இந்திய துணைக்கண்டத்துக்கே வந்தார்கள்.

அண்மையில் இஸ்ரேல் போயிருந்த மோடி, 2000 ஆண்டுகளுக்கு முன்னர், யூதர்கள் மிளகு வாங்க இந்தியா வந்தார்கள் என்றார்.

இது குறித்து ஒரு மேடையில் பேசிய சீமான், ஐயா மோடி சொன்னது பாதி உண்மை, பாதி தவறு என்றார். அதாவது அவர்கள் வந்தது இந்தியாவுக்கு அல்ல, தமிழரிடம், சேரத்தமிழர்களிடம் என்றார்.

இந்த புரிதல் வேறு அரசியல் வாதிகளிடம் இல்லாமல் போனதன் காரணம் அவர்கள் தமிழர்கள் அல்ல அல்லது எடப்பாடி, பண்ணீர் போல அக்கறை இல்லாதவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ராசவன்னியன் said:

பல மல்லுகளுடன் ஞான் பறைஞ்சதில், எல்லா மல்லுகளும் ஒருமிச்சி சொல்லும்  திருவாசகம்,

"மலையாளத்திலிருந்து பிறந்ததுதான் தமிழ்.." 🤣

பட்சே ஞான் கண்டிட்டில்லா..! 😎

 

10 minutes ago, Inkirunthae Vanthaan said:

வந்தேறிகளே மலையாளம் தனிமொழி என்பதில் தீவிரமாயிருப்பவர்கள். இவர்களே தமிழர்களுக்கெதிராயிருப்பவர்கள். Wikipedia வில் எழுதுபவர்களும் இவர்களே. வந்தேறிகள்தான் உயர் பதவியிலிருப்பார்கள்,  வந்தேறிகள் தங்களது இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள பூர்வீகத் தாருக்கு இனத்துவேச மூளைச்சலவை செய்வார்கள்.

 

மலையாளம் என்றால் என் ன என்று கேளுங்கள் ஐயா.

இலங்கைக்கும் மலையாளிகளுக்குமான தொடர்பு 
பாண்டிய சேர பல்லவர்களால் வந்தது  அது பல ஆயிரம் ஆண்டு முந்தியது 
மலையாளம் தெலுங்கு கன்னடத்துக்கு முந்தைய கால பகுதியில் 
கிட்டதட்ட ஒரே கால பகுதியில் ஆந்திராவின் மேற்பகுதியில் சம்ஸ்கிருதமும் 
நடு+ கீழ் பகுதியில் கிரந்தமும் தமிழை உள்வாங்கியே உருவானது இரண்டு மொழிகளினதும் 
எழுத்துக்களை உற்றுப்பார்த்தால் தமிழ்வடிவமும் உச்சரிப்பும் இருக்கும் 
பின்னாளில் கிரந்தம் பல்லவர்களின் வீழிச்சியால் கொஞ்சம் கொஞ்சமாக அழிய தொடங்கியது 
அதுபோல சம்ஸ்கிருதமும் விஜய பேரரசுக்கும்  மொகலாய + மராட்டிய  படையெடுப்புகளுக்கும் இடையில் மாட்டி அழிந்துபோனது. விஜயநகர பேர் அரசின் காலத்தில்தான் கிரந்தம் சமஸ்கிருதம் கலந்து தெலுங்கு மொழியும் தமிழ் கிரந்தம் கலந்து கன்னடம் எஞ்சிய பல்லவ சிற்றரரசுகளின் மக்களுக்குள் உருவானது.
பல்லவரின் படையெடுப்போடுதான் வங்கத்தில் இருந்து வந்த பாளி மொழி பேசிவந்த (சிங்களவர்கள்) 
எழுதத்துருவை தெலுங்கு + கன்னடம் கலந்து கண்டதோடு பாளி மொழியை இழந்து பாலி +தெலுங்கு + தமிழ் கலந்து சிங்களம் பேச தொடங்கினார்கள். 

சேரர்கள் தமிழர்கள்தானே செங்குட்டுவன் காலத்தில் கிரந்தமே இருக்கவில்லை 
மலையாளம் 800 ஆம் ஆண்டளவில் சோழ பேரரசின் எழுச்சி காலத்தில் சோழர்களிடம் 
வீழ்ச்சி கண்ட பல்லவ  சேர மன்னரும் மக்களும் தமிழ்நாட்டின் தென் மேற்கு ப்பகுதிக்கு சோழர்கள் வலிமையடையாத  பகுதிக்கு நகர்ந்து வாழ்ந்து வந்த போது கிரந்தமும் தமிழும் கலந்து பேச தொடங்கியபோதுதான்  பின்னாளில் அது மருவி மலையாளம் எனும் ஒரு புது மொழி உருவானது  
மலையாள எழுத்து உரு முதலில் வட்எழுத்து என்று தமிழை வட்டமாக எழுத்துவதில்தான் உருவானது 
மலையாளத்தின் மிக மிக பழமைவந்த இலக்கியமே தமிழின் வளையாபதியை  வட்டெழுத்தில் கி.பி 830 எழுதியதுதான். தற்போதைய இலக்கண மலையாளம் 13ஆம் நூற்றாண்டில்தான் உருவானது.

இலங்கைக்கும் மலையாளிகளுக்குமான தொடர்பு .......
பாண்டிய அரசுகளும் சேர அரசுகளும் சோழர்களிடம் வீழ்ச்சி அடைய தொடங்கிய போது 
இலங்கையில் எஞ்சியிருந்த பல்லவ அரசுகள்  தமிழ்+ சிங்களம்  பாண்டிய சேர அரசுக்களுக்கு துணையாக 
சோழர்களை எதிர்த்து போராட வந்து வந்து போவதுண்டு  அந்த கால பகுதியில் சோழர்களிடம் வீழ்ச்சி கண்ட சில  சேர சிற்றசர்கள் மக்கள் கூட்டம் இலங்கையில் இருந்து வந்த தமிழ் சிங்கள படைகளுடன் உயிர்தப்பி   இலங்கைக்கு  வருவதுண்டு. 

இந்த இலங்கையில் இருந்து அப்ப அப்ப பாண்டியர்களுக்கும் சேரர்களுக்கும் துணையாக வரும் 
இலங்கை அரசுகளை இலங்கைக்கு சென்றே அடிக்க வேண்டும் எனும் எண்ணம்  முதன் முதலில் ஆதித்ய  சோழனுக்கே  உருவான போதும்  வடக்கே இருந்து வந்த படையெடுப்புகளை எதிர்த்து போராடும் பொறுப்பை  
அவனது தந்தை சுந்தர சோழர் அவனிடம் ஒப்படைத்து இருந்தார் ஆதலால் ஆதித்ய சோழனால் இலங்கைக்கு அப்போது ஒரு பாரிய  படையெடுப்பை செய்ய முடியாது போனாலும் ஒரு படையை அனுப்பி இருந்தான்  
அது அப்போது பலமாக இருந்த சிங்கள மன்னன் மகிந்தனின் மகனான சேனாதியிடம் தோல்விகண்டு திரும்பியது  என்ற செய்தி சுந்தர சோழருக்கு வந்த போதுதான் ........ சுந்தர சோழர் முதன் முதலில் அந்த தோல்வியை தாங்க  முடியாது இலங்கைக்கு படையெடுக்கவேண்டும் என்று எண்ணம் கொண்டார்  

(இதை நான் தொடருவத்துக்கு காரணம் ...... கைவிரல் நீடிய இடமெல்லாம் புலிக்கொடி  ஏற்றிக்கொண்டு வந்த சோழ பேர் அரசு அழிய இதுதான் பிள்ளையார் சுழி போட்டது என்பதால்) 

இலங்கைக்கு படையெட்டுப்பது எனும் திட்டத்தை சுந்தர சோழர் அரச சபையில் வைத்தபோது  
ஆதித்திய சோழன் வடமுனையில் ஓர் பாரிய படையெடுப்பை எதிர்த்து போராடிக்கொண்டு இருந்தான்  
ஆதலால் யார் இலங்கைக்கு படையெடுப்பது? என்று கேள்வி வந்தபோது
சுந்தர சோழரின் இளைய மகளான குந்தவைதான் அப்போது வெறும் பதின்ம வயதிலேயே இருந்த  தனது தம்பியான அருண்மொழி சோழனை அனுப்ப தந்தைக்கு ஆலோசனையாக மட்டும் அல்ல கொஞ்சம் கட்டளையாகவும்  கூறி இருந்தாள்  .......  அதன்படியே அருண்மொழி சோழன் இலங்கைக்கு படையெடுத்து வந்தான்  இது வரைக்கும்  எமக்கு (இலங்கைக்கு)  வைகைநதி பக்கம் வீரபாண்டியனுக்கும்    இவர்களுடன்  திருமண  தொடர்பில் கொங்கு நாட்டு   சேரர்களுக்கும்தான் தொடர்பு இருந்தது. பாண்டிய அரசனான பரந்தாக வீர நாராயணன்  சேர நாட்டு இளவரசியான வானவ மகாதேவி யை திருமணம் முடித்து இருந்தான்.

வைகைநதி அருகே ஆதித்ய சோழன் வீர பாண்டியனை சாகடித்து பாண்டி நாட்டை கைப்பற்றிய பின்பு  
பின்னாளில் பரந்தாமன் என்று இன்னொரு சோழ மன்னன்தான் சேர அரசான வானவ மாதேவியின் வாரிசுகளை  வெற்றிகொண்டான். 

சுந்தர சோழரின் செல்ல மகளான குந்தவையின் சொல் கேட்டுதான் 
இப்போ சுந்தர சோழர் நடந்துகொள்கிறார்  ஒரு பொம்பிளையா எங்களுக்கு கட்டளை 
போடுவது என்று பின்னாளில் சுந்தர சோழர் வயது வந்து இருந்த போது சோழ பேர் அரசுக்கு பக்க  துணையாக  இருந்து பல போர்களை வெல்ல துணை போய்க்கொண்டு இருந்தசிற்றரசர்   பழுவேட்டையர் 
மற்ற சில சிற்றரசர்களுடன் கூடி சோழ அரசை கைப்பற்ற உள் கலக்கம் செய்தார்கள்  
ஒருபக்கம் விஜய பேரசின் படையெடுப்பு உள்ளுக்குள் இவர்கள் கலகம் என்று அப்போது சோழ அரசு கொஞ்சம் தள்ளாட  தொடங்கினாலும் ..........
கி பி 900- 1000 ஆண்டளவில் நம்ம ராஜா    ராஜ ராஜ ராஜேந்திர சோழன் கொங்கு நாடு ஈழம் தொடங்கி கலிங்கம் முதல் கடாரம் வரை புலிக்கொடி  ஏற்றினான்.  இதுக்கு பின்பு பண்டாரவன்னியன் வரை இலங்கையை ஆண்டது எல்லாம்  சோழ  அரசர்களும்   விஜய நகர  நாயக்கர்களும்தான். 

எமக்கும் மலையாளிகளுக்கு மான தொடர்பு என்பது ஆயிரம் வருடம் முன்னையது ஆனால் 
எம்மில் பல ஆயிர கணக்கானவர்கள் மலையாளிகளாக சேர நாட்டிடை சேர்ந்தவர்களாக இருக்கலாம் 
நாம் பின்னாளில் தமிழர்க்ளாக ஆகி இருக்கலாம். நாம் மலையாளிகள் என்பதனால் எமக்கு சோழர் காலத்திலும் படகு போக்குவரத்துகள் பண்ட மாற்றங்கள் தொடர்ந்து இருக்கலாம். 

மதங்கள் 
மன்னர்கள் 
கால பகுதியை வைத்து நாம் எமது தமிழ்மொழியின் இலக்கியங்களோடு நடை போட தொடங்கினால் மட்டுமே  உண்மைகளை கண்டறிய முடியும் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.