Jump to content

ஈழத் திரைப்பட நடிகர் ஏ.ரகுநாதன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் திரைப்பட நடிகர் ஏ.ரகுநாதன் தனது 85வது வயதில் 22.04.2020 இல் காலமானார் என்ற  துயரமான செய்தி வந்திருக்கிறது. ஈழத்து சினிமாவில் இவரது பங்கு அதிகமானது. இவரைப் பற்றி 2004இல் நான் எழுதிய ஈழத் தமிழ் சினிமா பற்றிய ஒரு கட்டுரையின் ஒரு சிறிய பகுதி இது.
96729-D12-C659-48-D4-9-ABF-7033372-C28-B

சினிமாப்படத்தை உருவாக்கும்  ஆர்வம் யார் யாருக்கு வருமென்றில்லை. யாழ்ப்பாண ஆசிரியர் பயிற்சி கல்லூரி ஆங்கில விரிவுரையாளரான எம்.வேத நாயகத்துக்கும்  வந்திருக்கின்றது. விளைவு 'கடமையின் எல்லை' படம் தயாரானது. இது ஷேக்ஸ்பியரின் Hamlet என்ற ஆங்கில நாடகத்தைத் தழுவி தயாரிக்கப்பட்ட திரைப்படம். திரைப்படம் சம்பந்தமான நுட்பங்கள் தெரியாமலேயே எம்.வேதநாயகம் இந்தத் திரைப்படத்தை நெறியாண்டார். கூடவே இசை அமைப்பையும் ஏற்றுக் கொண்டார். இசை அமைப்பதற்கான தகமை அவரிடமிருந்தது. எம்.வேத நாயகம் அவர்கள் விரிவுரையாளர் மட்டுமல்ல சங்கீத பூசணம் பட்டம் பெற்ற வித்துவானும் கூட. 1966இல் வெளியான இத்திரைப்படத்தில்தான் இன்றும் நடித்துக் கொண்டிருக்கும் ஏ.ரகுநாதன் அறிமுகமாகியிருந்தார். எம்.உதயகுமாருக்கும் இப்படமே அறிமுகமாக இருந்தது. 

இப்படம் பெரும் தோல்வியை அடைந்திருந்தாலும் இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதல் சரித்திரப் படம் என்ற பெயரைப் பெற்றுக் கொண்டது. இப்படத்தில் நடித்த கதாநாயகி ஜி. நிர்மலா உயரம் குறைந்தவராகவே இருந்தார். நாலரையடி நடிகை என்ற பெயர் இவருக்கு தானகவே வந்துவிட்டது. தென்னிந்தியத் திரையுலகில் நுளைந்து இலங்கை நடிகை தவமணி தேவி புரட்சி செய்து கொண்டிருந்தார். ஆனால் இலங்கையில் தயாரிக்கப்பட்ட தமிழ் திரைப்படத்தில் நடிக்க நடிகை இல்லாமல் சிரமப்பட்டிருக்கின்றார்கள். இல்லாவிட்டால் கடமையின் எல்லையில் ஒரு ஆணுக்கு பெண்வேடம் போட்டு நடிக்க விட்டிருக்க மாட்டார்கள். 

ஒரு ரயில் பயணம் சிறந்த கலைஞன் ஒருவரை எங்கள் திரையுலகத்திற்குத் தந்திருக்கின்றது. அறுபதுகளின் ஆரம்பத்தில் தனக்கு மனைவியாக நிச்சயிக்கப் பட்டிருந்த பெண்ணைப் பார்க்கும் ஆவலில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வார விடுமுறைக்குச் சென்று கொண்டிருந்த அந்த இளைஞனுக்கு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு அந்த ரயிலிலேதான் நிச்சயிக்கப்பட்டது. ரயிலிலே கூடப் பயணித்த விரிவுரையாளர் எம்.வேதநாயகத்தின் கண்களில் அந்த திடகாத்திரமான இளைஞன் பட்டுவிடுகிறான். அந்த இளைஞனைப் பார்த்த மாத்திரமே அவனிடம் விரிவுரையாளர் எம்.வேதநாயகம் கேட்டு விடுகின்றார். நானெடுக்கும் திரைப்படத்தில் நடிக்கிறாயா? கலையரசு சொர்ணலிங்கம் அவர்களிடம் கலை பயின்ற அந்த நாடகக் கலைஞனுக்கு இதைவிட வேறென்ன வேண்டும். சம்மதித்துவிடுகிறான். எடுக்கப்படும் திரைப்படம் சரித்திரப் படம் என்பதால் குதிரையேற்றம், வீர விளையாட்டுக்கள் எல்லாம் பயின்று கொள்கிறான். கதாநாயகனுக்குத் தேவையான எல்லாமிருந்த போதும் பல் வரிசை நேர்த்தியில்லை என்ற காரணத்தால் அந்த வாய்ப்பு இல்லாமல் போகிறது. இவருக்கு கிடைத்திருக்க வேண்டிய அந்தப் பாத்திரம் அன்றைய கராத்தே சம்பியனான பொனி றோபேர்ட்ஸ் இற்குப் போய்விடுகிறது. ஆனாலும் கதாநாயகனின் நண்பனாக நடிக்கும் வாய்ப்பு அந்த இளைஞனுக்குக் கிடைக்கிறது. கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி தனக்கென்று ஒரு வரலாறு எழுதிய, எழுதுகின்ற அந்தக் கலைஞன் ஏ.ரகுநாதன் ஆவார். 

கடமையின் எல்லையை உருவாக்கிய எம்.வேத நாயகம் அவர்கள் அதன் படத்தொகுப்பின் போது கலையகத்திலேயே மாரடைப்பால் காலமானார். தான் படைத்த திரைப்படத்தைப் பார்க்காமலேயே அவர் காலமானது வரலாற்றில் பதிந்து விட்ட சோகமான சம்பவம்.

 

 

 

Link to comment
Share on other sites

ஈழத் திரைப்பட நடிகர் ஏ.ரகுநாதன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.