Jump to content

அமெரிக்க தேசத்தை உலுக்கும் கொரோனா – சர்வதேச ரீதியிலான கொரோனா பாதிப்புகளின் முழுமையான விபரம்


Recommended Posts

அமெரிக்க தேசத்தை உலுக்கும் கொரோனா – சர்வதேச ரீதியிலான கொரோனா பாதிப்புகளின் முழுமையான விபரம்

 

 

     by : Yuganthini

CORONA_DAILY_UPDATE-720x450.jpg

உலகமெங்கும் பரவும் கொரோனா வைரஸ் பரவல் பல நாடுகளில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ள அதேவேளை அமெரிக்கா அதன் உச்சக்கட்ட பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகின் பல நாடுகள் பாரிய மனித அழிவுகளையும் பொருளாதார நெருக்கடிகளையும் எதிர்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் நேற்றைய தினமும் வழக்கம் போலவே அமெரிக்காவில் பாரிய மனித உயிரிழப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் நேற்று ஒரே நாளில் அமெரிக்காவில் 2,341 பேர் வைரஸ் தாக்கத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 47 ஆயிரத்து 659 பேராக அதிகரித்துள்ளது.

இதேவேளை அமெரிக்காவில் நேற்றைய தினம் 29 ஆயிரத்து 973 பேர் கொரோனா வைரஸ் பரவலுக்கு இலக்காகியுள்ளமை பதிவாகியதை தொடர்ந்து மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எட்டு லட்சத்து 48 ஆயிரத்து 717 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இதுவரையான காலப்பகுதியில் அந்நாட்டில் கொரோனா வைரஸுக்கான அறிகுறிகுறிகளுடன் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள ஏழு லட்சத்து 17 ஆயிரத்து எட்டு பேர் சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், 84 ஆயிரத்து 50 பேர் இதுவரை குணமடைந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பாரிய பாதிப்புகளுக்கு முகம் கொடுத்துவரும் பிரித்தானியாவில், நேற்று ஒரே நாளில் 763 பேர் உயிரிழந்துள்ளதை தொடர்ந்து அந்நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் உயிரிழந்த மொத்த நபர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 100 ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழப்புகளை தொடர்ந்து நேற்றைய தினம் அங்கு கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை நான்காயிரத்து 451 ஆக பதிவாகியுள்ளது.
அதனடிப்படியில், அங்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒருலட்சத்து 33 ஆயிரத்து 495 என பதிவாகியுள்ளதாக அந்நாட்டு உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை பிரித்தானிய அரசாங்கத்தால் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என விசனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இதுவரையான காலப்பகுதியில், கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 51 பேர் மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த கொரோனா வைரஸால் பாதிப்புக்கு உள்ளான நாடுகளில் பிரான்ஸும் முன் வரிசையில் உள்ளது.  அதனடிப்படையில் நேற்று ஒரே நாளில் அங்கு 544 பேர் உயிரிழந்துள்ளமை பதிவாகியுள்ளது.

குறித்த உயிரிழப்பு எண்ணிக்கையுடன் சேர்த்து அங்கு மொத்தமாக மரணித்தவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 340 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் பிரான்சில் நேற்றைய தினம் ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்து 1,827 ஆக பதிவாகியுள்ளது. குறித்த எண்ணிக்கையுடன் சேர்த்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 877 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் அந்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகளுடன் கண்டுபிடிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட 97 ஆயிரத்து 880 பேர் சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன், இதுவரையான காலப்பகுதியில் குறித்த தொற்றுக்கு இலக்கானவர்களில் 40 ஆயிரத்து 657 பேர் குணமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை தொற்றுக்கு இலக்கானவர்களில் ஐயாயிரத்து 218 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரச சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் குறித்த வைரஸ் பரவலால் கடுமையாக அவதியுற்று வரும் மற்றுமொரு நாடான இத்தாலியில் நேற்று ஒரே நாளில் 437 பேர் மரணித்ததுள்ளனர்.
சீனாவினை தொடர்ந்து இத்தாலியில் நிலைகொண்ட கொரோனா வைரஸ் பரவல் பாரிய மனித அழிவுகளை அங்கு ஏற்படுத்தி வந்த நிலையில், குறித்த நிலை தற்போது குறைந்துள்ளது.

அதனடிப்படையில் அங்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25 ஆயிரத்து 85 ஆக உயர்ந்துள்ளது.
அத்துடன் நேற்று ஒரே நாளில் இத்தாலியில் கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 3,370 ஆக பதிவாகியுள்ளதுடன் இதுவரையான காலப்பகுதியில் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 327 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் அங்கு 2,384 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரும் அதேவேளை இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் 54 ஆயிரத்து 543 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளனர்.

அத்துடன், ஒரு லட்சத்து ஏழாயிரத்து 699 பேர் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகளுடன் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஸ்பெயினில் நேற்று ஒரே நாளில் 435 பேர் மரணித்துள்ள அதேவேளை அங்கு மரணித்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 21ஆயிரத்து 717 ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன் நேற்றைய தினம் 4,211 பேர் அங்கு புதிய தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ள அதேவேளை இதுவரையான காலப்பகுதியில் பாதிப்புக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை இரண்டு லட்சத்து எட்டாயிரத்து 389 ஆக உயர்ந்துள்ளது.

குறித்த நாடுகளை தாண்டி அதீதமாக பரவி வரும் கொரோனா வைரஸால், ஜேர்மனியில் நேற்று ஒரே நாளில், 229 பேர் மரணித்துள்ளனர். அங்கு மொத்தமாக மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,315 ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 648 ஆக காணப்படும் அதேவேளை நேற்றைய தினத்தில் மாத்திரம் அங்கு தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 2,195 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றை தாண்டி துருக்கியில் நேற்றைய தினம் 117 பேர் மரணித்து மொத்த மரணம் 2,376 ஆக அதிகரித்துள்ளது.
அதனை விட இதுவரையான காலப்பகுதியில் 5,391 பேர் மரணித்துள்ள நிலையில் நேற்று ஒரே நாளில் அங்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 94 ஆக பதிவாகியுள்ளது.

குறித்த நாடுகளை விட கொரோன வைரஸ் தோற்றம் பெற்ற நாடான சீனாவில் நேற்றைய தினம் எவ்விதமான மரணங்களும் பதிவாகவில்லை என்பதுடன், அங்கு நேற்று 30 புதிய நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதுவரையான காலப்பகுதியில் சீனாவில், 4,632 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.

குறித்த தகவ்களின் அடிப்படையில், கடந்த டிசம்பர் மாதம் முதல் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் பரவலுக்கு இலக்காகி உலகளாவிய ரீதியில் இதுவரை, இருபத்தாறு லட்சத்து முப்பத்து எட்டாயிரத்து 909 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் இவ்வைரஸ் தொற்றின் காரணமாக இதுவரை, ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 248 பேர் மரணித்துள்ள அதேவேளை, ஏழு லட்சத்து 22 ஆயிரத்து 55 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/அமெரிக்க-தேசத்தை-உலுக்கு/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.