Jump to content

நம்பினால் நம்புங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

 மன்னார்  மாவட்த்தின் ஒரு கிராமத்தில் சில வாரங்களுக்கு முன்  ரோந்து பணியில் சில ப டை வீரர்கள் ஈடுபட்டிருந்தார்கள் .  இரண்டு படை வீரர்கள்  ஒரு  கத்தோலிக்க  தேவாலயத்தின் அருகாமையில் சென்று கொண்டு இருக்கும்  போது வெயில் களைப்பினால் அருகில் இருந்த கோவில் வாயிலின் அருகே   உட்கார்ந்து அசதியில் தூங்கி  விட டார்கள் . மதியம் இரண்டு மணி இருக்கும். திடீரென ஒருவன் திடுக்கிடடெழுந்து அலறி  அடித்து வெளியே ஓடி மயக்கமுற்று விழுந்து  விடடானாம் . மற்றையவன் பின்னால் சென்று ஊரவர்கள் உதவியுடன்  தண்ணீர் தெளித்து  மயக்கம் தெளிந்தான்.என்ன நடந்தது என்று விசாரித்த போது ஒரு போர்வீரன் குதிரையில்,சாடடையை சுற்றியவாறே  என்னை நோக்கி வருவது   போல இருந்தது. அதனால் நான் திடுக்குற்று ஓடினேன் என்றான். இவன் ஒரு புத்த மதத்தை சேர்ந்தவன் .  புனிதர்களின்  பெயர் பற்றி தெரியாதவன் . 

 

 அந்தக் கோவில் செபஸ்தியார் (St. sebastian ) எனும் புனிதரின் பெயர் பெற்றது ( இந்துக்களின் குலதெய் வக் கோவில் போல ) இவர்  போர் வீரனாக இருந்தவர். வேதத்துக்காக  மரி த்தவர் ..வேதத்துக்கு எதிரானவர்கள் இவரை கள்ளி மரத்திலே கட்டி அம்புகளால் எய்து கொன்றார்கள் என சரித்திரம் உண்டு . எனது ஊரிலும் இப் பெயர் கொண்டவரது கோவில் உண்டு . எனது கிராமத்தில் மூதாதையர்கள்   வழி வந்த ஒரு கதை உண்டு. கொள்ளை நோய் போன்ற தொற்றுக்கு காலத்தில்  இரவில் குதிரையின் சலங்கை சத்தமும் சாடடையுடனும் ஊர்காவல்  வருவதாகவும் தெருவோர நாய்களின் ஊளையும் கூக்குரலும் கேட்பது போல இருக்குமாம் என    சொல்வார்கள் .அந்நேரத்தில்   யாரும்  ஜன நடமாடடம் இருக்காதாம்  இந்த பெயர் கொண்ட கோவில்   திருகோணமலையிலும் இருப்பதாக கேள்விப்பட்டு இருக்கிறேன் . இதன் உண்மைத்தன்மை  தெரியாது  .யாரோ சொல்லக் கேள்வி பட்டு எழுதுகிறேன். நம்பினால் நம்புங்கள்  

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.