Jump to content

இந்தியாவுக்கு இது நல்ல செய்தி; அதிக வெப்பம், சூரியஒளி, ஈரப்பதமான சூழலில் கரோனா பரவுவது கடினம்: அமெரிக்க வெள்ளை மாளிகை தகவல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்கு இது நல்ல செய்தி; அதிக வெப்பம், சூரியஒளி, ஈரப்பதமான சூழலில் கரோனா பரவுவது கடினம்: அமெரிக்க வெள்ளை மாளிகை தகவல்

 

summer-like-conditions-can-curb-covid-19-transmission-us-official

 

உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வரும் கரோனா வைரஸ், சூரிய ஒளி, அதிகமான வெப்பம், ஈரப்பதமான சூழல் ஆகியவற்றில் பரவுவது கடினம். இந்த சூழல் அனைத்தும் இந்தியாவுக்கு சாதகமாக இருக்கிறது என்று அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது

அமெரி்க்க அரசின் உள்துறை அமைச்சக்தின் கீழ் வரும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை சார்பில் கரோனா பரவல் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் வெளியிடப்பட்டது.

அமெரிக்க உள்துறையின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவின் தலைமை இயக்குநர் பில் பிரையன் நேற்று வெள்ளை மாளிகையில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

1587698584756.jpg

அதிகமான சூரிய வெளி, வெப்பம், ஈரப்பதமான சூழல் இருந்தால் கரோனா வைஸ் வேகமாக உயிரிழக்கும், பரவும் வேகமும் குறையும். அதிலும் நேரடியான சூரிய ஒளியில் வேகமாக கரோனா வைரஸ் உயிரிழக்கும். ஐஸோபுரோபைல் ஆல்கஹால் கரோனா வைரஸை 30 வினாடிகளில் கொல்லும் திறன்படைத்தது.

எங்களின் சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட படி, சூரிய ஒளி படும்போதும், வெயில் அதிகரிக்கும் போதும் தரைத்தளத்திலும், காற்றிலும் கரோனா பரவும் வேகம் குறைந்து கரோனா வைரஸ் அழிந்து உயிரிழப்பும் குறையும். இதேபோன்ற சூழல்தான் அதிகமான வெப்பம், ஈரப்பதமான சூழிலும் கரோனா வைரஸ் அதிகமாக அழியும்.இந்த 4 சூழலும் இருந்தால் கரோனா வைரஸ் பரவும் வேகம் குறையும். இவை இந்தியாவுக்கு சாதகமாக இருக்கிறது.

குறிப்பாக கோடைகாலம் இருக்கும் நாடுகளில் கரோனா வைரஸ் பரவும் வேகம், ஒருவரிலிருந்து மற்றொருவருக்கு பரவுவதும் குறையும். இது எங்களுக்கு மிகச்சிறந்த வாய்ப்பு.

அதாவது சூரிய ஒளி, வெப்பநிலை 95 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் செல்லும் போது கரோனா வைரஸ் உயிர்வாழும் காலம் பாதியாகக் குறையும். அதேபோல ஈரப்பதமான சூழலும் இருந்தால் வழக்கமாக தரைத்தளத்தில் 18 மணிநேரம் வாழும்தன்மை கொண்டகரோனா வைரஸ் சில நிமிடங்களில் இறந்துவிடும்.

அதிகமான சூரிய ஒளி, 75 பாரன்ஹீட் வெப்பம், 80 சதவீதம் ஈரப்பதம் இருந்தால் கரோனா வாழும் காலம் 18 மணிநேரத்திலிருந்து 6 மணிநேரமாகக் குறையும், சில நிமிடங்களிலும் கரோனா வைரஸ் உயிரிழக்கலாம். இயற்கை அழிக்கும் வழிகள் இருப்பதால், நாம் கரோனா வைரஸ் காலத்தில் சமூக விலகலையும், முகக்கவசம் அணிவதை தவிர்கக்கூடாது.

70 முதல் 75 பாரன்ஹீட் வெப்பமும் 20 சதவீதம் ஈரப்பதமும் இருந்தாலே கரோனா வைரஸின் ஆயுள்காலம் பாதியாகக் குறைந்துவிடும். அதேபோல யு.வி. கதிர்களும் கரோனா வைரஸ் பரவும் சங்கிலியை உடைக்கும் திறன் படைத்தவை.

1587698597756.jpg

95 பாரன்ஹீட் வெப்பம் இருந்தால் கரோனா வைரஸ் ஆயுள் வெறும் 60 நிமிடங்கள் மட்டுமே. இந்த ஆய்வுகள் அனைத்தும் மேரிலண்டில் உள்ள டிஹெச்எஸ் அதிநவீன ஆய்வுக்கூடத்தில் செய்யப்பட்டன. டிஹெச்எஸ் அதிநவீன ஆய்வுக்கூடம் அமெரிக்காவில் ஒன்று மட்டுமே இருக்கிறது.

மேலும், ஐஸோபுரோபைல் ஆல்கஹாலைப் பயன்படுத்தி கரோனா வைரஸ் இருந்த இடத்தை சுத்தப்படுத்தும்படுத்தும் போது சிலவினாடிகளில் வைரஸ் உயிரிழக்கும். ஒருவரின் எச்சில், நுரையீரல் சளியிலிருந்து எடுக்கப்பட்ட வைரஸை இந்த ஆல்கஹாலில் சோதிக்கும்போது அது சில வினாடிகள்கூட உயிர்வாழவில்லை.

பொதுவாக ப்ளீச்சிங் முறையில் வைரஸ் 5 நிமிடங்களுக்குள் கொல்லும், ஆனால், ஐஸ்ரோபில் ஆல்கஹாலைப் பயன்படுத்தினால் 30 வினாடிகள் கூட வைரஸ் உயிர்வாழாது. குறிப்பிட்ட அந்த இடத்தை தேய்த்து கழுவவோ, அல்லது மனித உழைப்போ தேவையில்லை.

இ்வ்வாறு பிரையன் தெரிவித்தார்.

 

https://www.hindutamil.in/news/world/551120-summer-like-conditions-can-curb-covid-19-transmission-us-official-2.html

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கன் ஒருவ்ருமே அமெரிக்கனாக இல்லை...செய்வதறியாது திகைத்து நிற்கிறார்கள். இந்தியா நம்பினால் அதோ கதி

Link to comment
Share on other sites

அதே வெள்ளை மாளிகை தான் கிருமி கொல்லிகளை மனித உடம்பினுள் ஏற்றுவதனால் கொரோனவை கொல்லலாமா என்று ஆராயவேண்டும் என்று சொல்லி முழு உலகமே சிரிக்க காரணமாகிவிட்டது.

வெப்பம் பரவலை தடுப்பதில் ஒரு காரணியாக இருந்தாலும் அதுவே ஒட்டுமொத்த பரிகாரம் என்ற அளவுக்கு கருத்துரைத்த ஒரு தலைவரை  கொண்ட வெள்ளை மளிகை கோமாளிகளின் கூடாரமாகிவிட்டது . 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.