Jump to content

இவர தொட்ட நீ கெட்ட ஜோதிகாவை நேரடியாக எச்சரித்த இயக்குனர் மோகன்.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, குமாரசாமி said:

ஜோத்திகா கோவிலை பழிக்கவுமில்லை. குறை சொல்லவுமில்லை. ஆகையால் அவர் சொன்னதை வேதவாக்காக எடுக்கமுடியாது.

1) அவர் சார்ந்த சினிமாத்துறை பணத்தை தண்ணீராக இறைக்கும் துறை. அனாவசிய செலவுகள் நிறைந்த துறை. அந்த அநாவசிய செலவுகளை ஒரு வருடம் நிறுத்தி அந்த பணத்தை மருத்துவமனைகளுக்கு கொடுக்கும் எண்ணம் பகுத்தறிவு சிந்தனைவாதி ஜோத்திகாவுக்கு ஏன் வரவில்லை.
 கோடிக்கணக்கில் செலவாகும் ஒரு பாடல் காட்சிகளுக்கு மட்டும் சுவீஸ் வந்து குத்தியாட்டம் போட்ட ஜோத்திகாவுக்கு இந்த பரந்துபட்ட பகுத்தறிவு சிந்தனைகள் அப்போது முளைக்கவில்லையா? அல்லது துளிர் விடவில்லையா? 
உலகிலே சகல இயற்கை காட்சிகளும் நிறைந்த இந்தியாவை விட்டு பாரின் சூட்டிங் போய்

2)காசை கரியாக்க வேண்டாம் என ஜோத்திகாவிடம் சொல்வீர்களா?சொல்வீர்களா?சொல்வீர்களா?
அந்த பணத்தை ஏழை எளிய மக்களுக்கு கொடுக்கும்படி உத்தமி ஜோத்திகாவிடம் சொல்வீர்களா?

 

இரண்டு விடயங்களை ஜோவின் பேச்சோடு போட்டுக் குழப்பிக் கொள்கிறீர்கள்.

1) அது அவரின் தொழில்👍

2) காசைக் கரியாக்குவதென்றால் பிரயோசனம் இன்றி வீணாக்குகிறார் என்று கூறுகிறீர்களா ? அதெப்படி ஒரு வியாபாரத்தில் முதலீடு செய்வதை கரியாக்குவதாக கூறலாம். 🤔

அதுசரி,

இவையெல்லாம் எப்படி அவரின் கூற்றுடன் தொடர்புபடும் ? 🤔

41 minutes ago, குமாரசாமி said:

70 களிலிருந்தே கருணாநிதி என்பவர் மேல் நம்பிக்கை வைக்க ஆரம்பித்த ஈழத்தமிழினம் படிப்படியாக எல்லோர் மீதும் நம்பிக்கை வைத்து இன்று கருவறுக்கப்பட்டு நடுத்தெருவில் நிற்கின்றது.

குசா,

நீங்கள் கரு நா நி(த்)தி அல்லவே🙂

Link to comment
Share on other sites

  • Replies 116
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாடும் கருத்துச் சுதந்திரமும்!
===========================
இப்போதுதான் தமிழ்நாட்டில் மதுவந்தியின் விளம்பர வீடியோ சர்ச்சை ஓயத் தொடங்கியது. அடுத்தததாக ஜோதிகாவின் மேடையில் சொன்ன கருத்து கையில் எடுக்கப்பட்டுள்ளது. இவை இரண்டும் தற்செயலாக நடந்தவைதானா என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. 

அண்மையில் நடந்த விருது விழாவில் ஜோதிகா இந்து சமயத்தை சீண்டியதாகவும், தஞ்சைப் பெரும் கோவிலை இலக்கு வைத்து பேசியதாகவும் Youtubers Channelகள் வெளுத்து வாங்குகின்றன. ஒரு விடயத்தை எப்படியெல்லாம் திரித்துச் சொல்லலாம் என்பதற்கு நல்ல உதாரணம் ஜோதிகா சம்பந்தப்பட்ட சர்ச்சை.

இதில் முரண் நகையான சில விடயங்கள் உள்ளன.
1. பெண் நிருபர்கள் தமது உடலைப் பயன்படுத்தியே பதவியுயர்வு பெறுகிறார்கள் என்று கூறி பெண்களை இழிவுபடுத்திய, பண்பாடுள்ள மனிதரான S.V. சேகர், இன்று ஜோதிகா வைத்தியசாலைக்கும் பாடசாலைக்கும் பண உதவி செய்யச் சொன்னது அயோக்கியத்தனம் என்கிறார்.

2. சமூக வலைத் தளங்களில் ஜோதிகாவை கண்டிக்கும் பலரும் தமிழிலேயே மிக மோசமான வார்த்தைகளைப் பாவித்துத் திட்டுகிறார்கள். 

இவர்கள் எல்லோரும் தமிழ் மற்றும் இந்துமதப் பண்பாட்டில் வளர்ந்தவர்கள் என்றால் எப்படி இவ்வளவு சரளமாக கீழ்த்தரமான வார்த்தைகளை ஒரு பெண்ணை நோக்கிப் பேச முடிகிறது. (சில மாதங்களுக்கு முன்னர் நித்தியானந்தாவின் சிஷ்யைகள் செந்தமிழில் பேசியது வேறு இந்த நேரத்தில் ஞாபகம் வந்து தொலைக்கிறது!)

உண்மையில் என்னதான் நடந்தது?
--------------------------------------------------------
இந்த விருது விழா நேற்றோ போனவாரமோ நடைபெறவில்லை. நாற்பது நாட்களுக்கு முன்னர், கடந்த மார்ச் மாதம் 14 ம் திகதி Chennai Trade Centre இல் நடைபெற்ற Just for Women 2020 விருது விழாவில்தான் ஜோதிகா சில விடயங்களை சொல்லியிருந்தார். 

ஜோதிகா அங்கு சொல்லியது கோவிலுக்கு பணம் கொடுப்பது போலவே பாடசாலைகளுக்கும் வைத்தியசாலைகளுக்கும் கொடுத்து உதவுங்கள் என்றுதான். கோவில் பணத்தை எடுத்துக் கொடுங்கள் என்றோ, கோவிலுக்குக் கொடுக்காமல் வைத்தியசாலைக்கு கொடுங்கள் என்றோ அவர் சொல்லவேயில்லை. 

உண்மையில் அவர் தமிழ் பேசியதையே  தமிழில் பிழையாக (தமக்குத் தேவையான வகையில்) மொழிபெயர்க்கும் சில வலைத்தள ஊடகர்களின் திறமையைப் பார்த்து எனக்குத் தலையே சுற்றிவிட்டது. 

அவர் தஞ்சைப் பெருங்கோவிலைப் பற்றி பேசியதால் தமிழரின் அடையாளத்தை இலக்கு வைத்துப் பேசுகிறாராம். ஒருவர் தன் பதிவில் ஜோதிகா அரசியல்தான் பேசுகிறாராம். அதனால் அவர் வார்த்தைகளை கவனமாகப் பயன்படுத்த வேண்டுமாம். இன்னொருவர் ஜோதிகா பிறப்பால் முஸ்லிம் என்பதால்தான் இந்துக் கோவிலை இலக்கு வைத்து பேசினாராம். 

இதற்கு முன்னரும் H. ராஜா என்பவர் நடிகர் விஜயை கிறிஸ்தவர் என இலக்கு வைத்துக் தாக்கியது வரலாறு. சமூக அக்கறையில் யார் என்ன பேசினாலும் அதற்கு தமக்குத் தேவையான சாயம் பூசுவதில் பல விற்பன்னர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் என்பது மட்டும் தெளிவாகிறது.

உண்மையில் தங்களைச் சுற்றி நடக்கும் அரசியலை சூழலை தமிழக மக்கள்தான் தம் அறியாமையால் அறியாது இருக்கின்றனரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

சம்பவம் ஒன்று: இந்தியாவில் ஊரடங்கு நடைமுறைக்கு வந்தபின் மதுவந்தி இரண்டு முறை மக்கள் இலகுவாக தவறு கண்டுபிடிக்கும்படியான வகையில்  வீடியோக்களை வெளியிடுகிறார். ஒன்றுக்கு மமதையோடு மன்னிப்புக் கேட்டும் வீடியோ வெளியிடுகிறார். அதன்பின் பலரின் கவனமும் அதற்கு meme போடுதல், பகிர்தல், வீடியோ மூலம் பதில்வாதம் செய்தலில் இருந்தது. 

சம்பவம் இரண்டு: நாற்பது நாட்களுக்கு முன்னர் நடந்த நிகழ்வின் பதிவின் சிறுதுண்டு திடீரென வெட்டியெடுக்கப்பட்டு சிலநாட்களுக்கு முன்னால் நடந்ததாகச் சித்தரித்து ஜோதிகா இந்துமதத்தை அவமதித்தார் என்று பிரச்சனை கிளப்பி விடப்பட்டுள்ளது. பலரும் இப்போது அதைப்பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இங்கு கவனிக்க வேண்டிய விடயம், மதுவந்தி விவகாரம் சூடு தணியத் தொடங்கியதும், ஜோதிகாவின் விடயம் தோண்டியெடுக்கப்பட்டு சுடச்சுட புதிய தட்டில் பரிமாறப்பட்டுள்ளது. இனி கொஞ்ச நாட்களுக்கு பலரின் கவனமும் இதிலேயே இருக்கும். அதுதான் சிலருக்குத் தேவைப்படுகிறதா? 

தமிழக இளைஞர்கள் 2017இல் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வென்ற பின்னர், கடந்த காலங்களில் முக்கியமான தருணங்களில் மக்களைத் திசைதிருப்ப S.V. சேகர், H.  ராஜாவின் அட்மின், சில தமிழக அமைச்சர்கள் போன்று பலரும் பல சர்ச்சையான விடயங்களைச் செய்து வருவதும் பேசி வருவதும் ஒன்றும் தமிழக மக்களுக்குப் புதிதில்லைதானே?

இது ஒருபுறம் இருக்க, தமிழகத்தில் யார் என்ன பேசலாம் என தீர்மானிக்கும் ஒரு மனநிலை அண்மைக் காலங்களில் அதிகரித்து வருகிறது. 
உதாரணம் நடிகர்கள் அரசியல் பேசக்கூடாது, யாருமே ஆளும் கட்சியை விமர்சிக்கக் கூடாது; நடிகைகள் சமூக அக்கறையில் எதுவும் பேசக்கூடாது. இந்து சமயத்தை யாரும் விமர்சனம் செய்யக்கூடாது என அவர்களின் பட்டியல் வளர்ந்து கொண்டே போகிறது. 

இதுவும் மிகவும் ஆபத்தானது.

 

 

Link to comment
Share on other sites

EWQrvZCVAAEppBJ?format=jpg&name=900x900

 

ஜோதிகா கடவுள் இல்லைன்னு சொல்லிருந்தா கூட நேக்கு இவ்வளவு டென்சன் ஆகிருக்காது.. படுபாவி நேரா உண்டியல்ல கைய வச்சுண்டா.. பகவானே நேக்கு BP எகிரிடுத்தூ.. அபச்சாரம்... அபச்சாரம்...

1 hour ago, tulpen said:

 

யாழ் கள சமய சித்தாந்தவாதிகள் இதில் ஜோதிகா சொன்னதைத் தெளிவாக் கேட்டார்களா?இல்லை என்ன சொல்லப்பட்டது என்று விளங்கினார்களா? வந்து இனி சப்பைக்கட்டு கட்டாம பாத்தீங்களா விளங்கினீங்களா அதில் என்ன தப்பு என்று சொல்லுவாங்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Aalavanthan said:

 

யாழ் கள சமய சித்தாந்தவாதிகள் இதில் ஜோதிகா சொன்னதைத் தெளிவாக் கேட்டார்களா?இல்லை என்ன சொல்லப்பட்டது என்று விளங்கினார்களா? வந்து இனி சப்பைக்கட்டு கட்டாம பாத்தீங்களா விளங்கினீங்களா அதில் என்ன தப்பு என்று சொல்லுவாங்களா?

பல தடவைகள் கேட்டத்துதான்.
மற்றவைகளை சுட்டிக்காட்ட முன் தான் சார்ந்திருக்கும் சமுதாயத்தை திருத்த வேண்டும்.

Link to comment
Share on other sites

Just now, குமாரசாமி said:

பல தடவைகள் கேட்டத்துதான்.
மற்றவைகளை சுட்டிக்காட்ட முன் தான் சார்ந்திருக்கும் சமுதாயத்தை திருத்த வேண்டும்.

கேள்வி விளங்காவிடில் திருப்பியும் கேட்கின்றேன். இங்கு ஜோதிகா சொன்னதில் என்ன தப்பு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Aalavanthan said:

கேள்வி விளங்காவிடில் திருப்பியும் கேட்கின்றேன். இங்கு ஜோதிகா சொன்னதில் என்ன தப்பு

எனக்கு நீங்கள் தமிழ் படிப்பிக்க வேண்டாம்.
கேள்வி நன்றாக விளங்கியது.
மருத்தவமனைகளுக்கு பொதுமக்கள் உதவவேண்டும் என்றால் அரசு எதற்கு?

Link to comment
Share on other sites

ஜோதிகா சொன்னது நூற்றுக்கு நூறு வீதம் சரியானது.  அதில் எந்த தவறும் இல்லை.  அதை சொல்லும் தகுதி அவருக்கு உண்டு. தெருவில் போகும் சில சங்கி பண்டாரங்களின்  என்ன வேண்டுமென்றாலும் சொல்லி விட்டு போகட்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

எனக்கு நீங்கள் தமிழ் படிப்பிக்க வேண்டாம்.
கேள்வி நன்றாக விளங்கியது.
மருத்தவமனைகளுக்கு பொதுமக்கள் உதவவேண்டும் என்றால் அரசு எதற்கு?

திரும்பவும் முதலிலிருந்தா 🤥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Aalavanthan said:

கேள்வி விளங்காவிடில் திருப்பியும் கேட்கின்றேன். இங்கு ஜோதிகா சொன்னதில் என்ன தப்பு

எங்களுக்கு கேள்வி நன்றாகவே விளங்குகிறது. சொன்னதில் பிழையில்லை ஏனென்றால் தமிழ்நாட்டில் கோவில் உண்டியலுக்கு செல்லும்காசு அரசாங்கத்துக்கே செல்கிறது. அதைவைத்துக்கூட ஒன்றும் செய்கிறார்களில்லை. இப்படி சொன்னவ ஒருபிடி மேலேபோய் சினிமாவிலும். கட்டவுட்டுகளுக்கு பாலூற்றுவதிலும் செலவழிக்கும் காசை பாடசாலைக்கும் வைத்தியசாலைக்கு கொடுத்து முன்னேற்ற சொல்லியிருக்கலாம் என்ற ஆதங்கம்தான்.

ஒன்று தெரியவேண்டும். இது கல்வி அறக்கட்டளை நடத்துவதுபோல் அவ்வளவு சுலபமானதில்லை. அரச மருத்துவமனைகளில் தனியார் உதவிகளை நெறிப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல, 

Link to comment
Share on other sites

“இவரை தொட்ட நீ கெட்ட”... ஜோதிகாவை நேரடியாக எச்சரித்த திரெளபதி இயக்குநர்...!

போங்க தம்பி எப்பபாரு காமடி பண்ணிக்கிட்டு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Kaalee said:

“இவரை தொட்ட நீ கெட்ட”... ஜோதிகாவை நேரடியாக எச்சரித்த திரெளபதி இயக்குநர்...!

போங்க தம்பி எப்பபாரு காமடி பண்ணிக்கிட்டு 👍

வாங்க காளி, அவரையே தமிழ் நாட்டில் மறந்துவிட்டார்கள். காவியை தொட்ட நீ கெட்ட என்று வந்திருக்கனும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nedukkalapoovan said:

 

காமாளைக் கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள். 😜

6 hours ago, nedukkalapoovan said:

 

கோவிலைப் பிரம்மாவின் தலையில் இருந்து பிறந்தவர்களிடம் தரவேண்டுமாம். 😜😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

பல தடவைகள் கேட்டத்துதான்.
மற்றவைகளை சுட்டிக்காட்ட முன் தான் சார்ந்திருக்கும் சமுதாயத்தை திருத்த வேண்டும்.

அதுக்கும் எங்கே விடுறீர்கள் 
நீங்களே ஞானஸ்தானம் தந்து முதலில் கிறிஸ்தவன் ஆக்கிவிட்டுத்தானே 
மற்ற கும்மியடி குளவியடி என்று தொடங்கிறீங்கள்.

இந்த கேடு கெட்ட மதம் 
அழிந்துபோனால்தான் முதலில் தமிழ் ஆவது தலை நிமிரும். 

Link to comment
Share on other sites

1 hour ago, nedukkalapoovan said:

 

தஞ்சைப்பெருவுடையார் கோவில்  ராஜ ராஜ சோழனின் சொந்த பணத்தில் அவரது சொந்த உழைப்பில் வந்த பணத்தை கொண்டு கட்டபட்டதாக இந்த வீடியோவில் கூறப்பட்ட   பெரிய புளுகுமூட்டையை  நம்பி நெடுக்ஸ் இந்த காணொணியை இணைத்துள்ளார்.  எல்லா மன்னர்களும் மக்களிடம் வரி வாங்கி தான் தமது சாம்ராஜ்யங்களை நிர்வகித்தனர் என்பது உலகறிந்த உண்மை. இதில் ராஜ ராஜ சோழனுக்கு விதிவிலக்கு இல்லை. இந்த கோவிலின் சரித்திர பெருமை குறித்தோ அதன் பிரமாண்டம் குறித்தோ எவரும்  கருத்து கூறவில்லை. அப்படி இருக்க ஜோதிகா சொன்ன விடயத்தை தமது வசதிக்கு திரித்து ஜோதிகா மீது அவதூறு கூறும் நோக்கத்திற்காக அவர் மீது வன்ம‍ம் கொண்ட சில கும்பல்கள் வெளிவிடும் பித்தலாட்ட வீடியோக்கள் இவை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

தஞ்சைப்பெருவுடையார் கோவில்  ராஜ ராஜ சோழனின் சொந்த பணத்தில் அவரது சொந்த உழைப்பில் வந்த பணத்தை கொண்டு கட்டபட்டதாக இந்த வீடியோவில் கூறப்பட்ட   பெரிய புளுகுமூட்டையை 

அவா சொன்ன பெரிய புளுகுமூட்டையை நானும் கவனித்தேன்.😂சீரியஸ் மாதிரி பெரிய பொய்யை சொல்கிறா.இனி இந்த புளு மூட்டை இந்தியா முழுவதும் கொறோனாவைவிட வேகமாக பரவும். வெளிநாடுகளில் வசிக்கும் ஈழ தமிழர்களிமும் பரவும் என்பது கவலைக்குரியது😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜோதிகா சொன்னதில் எந்தவித தவறும் இல்லை. எதையும் மத அடிப்ப்டையில் பார்க்க கூடாது. 

 

இங்கு சிலருக்கு கேள்வி விளங்கவில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

இங்கு சிலருக்கு கேள்வி விளங்கவில்லை

உங்களுக்கு இருக்கும் விளக்கம் எனக்கு இல்லைபோல் உள்ளது குறைநினையாமல்  அதை கொஞ்சம் விளங்கப்படுத்தினால் என்னை போல் உள்ளவர்கள் படித்து பயன்பெறுவார் ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.