Jump to content

இவர தொட்ட நீ கெட்ட ஜோதிகாவை நேரடியாக எச்சரித்த இயக்குனர் மோகன்.!


Recommended Posts

  • Replies 116
  • Created
  • Last Reply
41 minutes ago, nedukkalapoovan said:

 

இது போன்ற தெரு பொறுக்கித்தனமான பண்பாடற்ற  கருத்துக்களை உள்ளடக்கிய வீடியோக்களை ரசிக்கும் அளவுக்கு நெடுக்கஸின் ரசனை தாழ்ந்து போனது ஏன்?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, tulpen said:

இது போன்ற தெரு பொறுக்கித்தனமான பண்பாடற்ற  கருத்துக்களை உள்ளடக்கிய வீடியோக்களை ரசிக்கும் அளவுக்கு நெடுக்கஸின் ரசனை தாழ்ந்து போனது ஏன்?  

ஒவ்வொருவரும் அவரவர் வடிவில் தமது கருத்தைப் பதிவு செய்கிறார்கள்.

நீங்கள் எப்படி ஜோதிகா அம்மையார் ஏதோ தான் போட்ட உண்டியல் காசில் கோயில் கழுவிறது என்று உண்மையை சொல்லுறாப் போலவும்..நீங்கள் என்னடான்னா.... இராஜராஜன் திறைசேரியில் இருந்து உங்கள் கணக்கின் கீழ் அறவிடப்பட்ட வரியில் கோவில் கட்டியது போலவும்.. கருத்துச் சொல்லும் போது அவனவன் தனக்குத் தெரிந்ததை தனக்குத் தெரிந்த மொழியில் சொல்லத்தான் செய்வான்.

நீங்கள் சொல்லுறதை எழுதிறதை நாங்க படிக்கிறமில்ல. அதுபோல தான் அவங்க சொல்லுறதையும்.. எழுதிறதையும் படிக்கிறம். இதில ரசனை.. பூனை என்று எழுதுவும் இல்லை. 

Link to comment
Share on other sites

9 minutes ago, nedukkalapoovan said:

ஒவ்வொருவரும் அவரவர் வடிவில் தமது கருத்தைப் பதிவு செய்கிறார்கள்.

நீங்கள் எப்படி ஜோதிகா அம்மையார் ஏதோ தான் போட்ட உண்டியல் காசில் கோயில் கழுவிறது என்று உண்மையை சொல்லுறாப் போலவும்..நீங்கள் என்னடான்னா.... இராஜராஜன் திறைசேரியில் இருந்து உங்கள் கணக்கின் கீழ் அறவிடப்பட்ட வரியில் கோவில் கட்டியது போலவும்.. கருத்துச் சொல்லும் போது அவனவன் தனக்குத் தெரிந்ததை தனக்குத் தெரிந்த மொழியில் சொல்லத்தான் செய்வான்.

நீங்கள் சொல்லுறதை எழுதிறதை நாங்க படிக்கிறமில்ல. அதுபோல தான் அவங்க சொல்லுறதையும்.. எழுதிறதையும் படிக்கிறம். இதில ரசனை.. பூனை என்று எழுதுவும் இல்லை. 

அந்த பொய்யர்களின் அவதூறு வீடியோக்களை தொடர்ந்து பார்த்ததாலோ என்னமோ நீங்களும் பொய் சொல்ல பழகிவிட்டீர்கள் நெடுக்ஸ்  இத்த பதிலிலேயே இரண்டு பொய்களைக் கூறி உள்ளீர்கள். 

1. ஜோதிகா தான் போட்ட உண்டியல் பணத்தால் கோவில் கழுவுகிறது என்று கூறாமலே அவர் அப்படிக் கூறியதாக நீங்கள் அவிழ்த்துவிட்ட  பொய் 

2. எனது கணக்கில் அறவிடப்பட்ட பணம் என்று நான் கூறியதாக  நீங்கள் சொன்ன அடுத்த பொய். 

மீண்டும் எனது பதிலை வாசித்து விளங்குங்கள் நண்பரே நெடுக்ஸ் 

 

இப்போது விளங்குகிறது ஜோதிகா பேசியதை  உங்களால்  ஆதரிக்கப்படும் அந்த  சங்கிக் கும்பல் எப்படி எப்படி எல்லாம்  திரித்து பொய்ப் பரப்புரைகளை மேற்கொண்டு வருகிறார்கள் என்பது . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு அறிவுரை சொல்லத்தான் ஆயிரம் வந்தேறிகள் வந்து நிற்கிறது கோவிலுக்கு இறைக்காதீங்கோ சரி 

 

இந்த எந்திரன் 2 ல எவ்வளவு இறைச்சாங்கள்  இப்படி திரைப்படங்களுக்கு இறைக்கும் போது கோவிலுக்கு மட்டும் ஏன் சொல்லணும் இவா  கோவிலை விட சினிமாக்குத்தான் தமிழ்நாட்டு தமிழன் இறைக்கான் என்பது இவாக்கு தெரியாது போல 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரி ஜோதிகா & தமிழ் ஆர்வலர்களுக்கு...

Image may contain: night, sky and outdoor

ஜோதிகா அவர்களே நீங்கள் சொன்ன கருத்தில் எந்த முரண்பாடும் எனக்கு இல்லை ஆனால் உங்கள் எல்லோருக்கும் கோவில் மட்டும் கண்ணுக்கு தெரிவதற்கு முன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய விடையங்கள் ஏராளமாக இருக்கிறது.

தமிழ் நாட்டில் அறநிலையத்துறைக்கு கீழ் சுமார் 45,000 கோவில்கள் இருக்கின்றன அவற்றிற்கு சொந்தமாக
சுமார் 5லட்சம் ஏக்கர் நிலம் இருக்கிறது
22,000க்கும் அதிகமான கட்டிடங்கள் இருக்கிறது
54 கல்வி நிறுவனங்கள் (கல்லூரி, பாடசாலை) உள்ளன.
36 கருணை இல்லங்கள் இருக்கின்றது
6 சித்த வைத்தியசாலை இருக்கின்றது
2 ஆங்கில மருத்துவமுறை மருத்துவமனையும் இருக்கின்றது.

ஆலயங்களினூடாக சுமார் 1,000 கோடிக்கும் அதிகமான வருவாய் தமிழ்நாட்டிற்கு கிடைக்கின்றது. அப் பணத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு பல திட்டங்களும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.

ஏழை எளியோருக்கான 4கிராம் தங்கம் உட்பட நடாத்தப்படும் திருமண திட்டம் ஆண்டுக்கு சுமார் 1,000க்கும் அதிகமாக திருமணம் செய்துவைக்கப்படுகிறது

754கோவில்களில் அன்னதானம் செய்யப்படுகிறது அதாவது ஆண்டுக்கு சுமார் 30கோடியில் அன்னதானம் மட்டும் தினமும் வழங்கப்படுகிறது

ஆன்மீகம் மற்றும் ஒழுங்கம் சார்ந்த (தமிழ் இலக்கியங்களில் காணப்படும் ) வகுப்புக்கள் சுமார் 28,000 மாணவர்களுக்கு 517 கோவில்களால் நடாத்தப்படுகிறது.

ஆண்டுதோறும் நடாத்தப்படும் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் ஆலயத்தினால் பெறப்படும் நிதியில் இருந்தே செயல்படுத்தப்பட்டுவருகிறது.

தமிழ்நாட்டில் காணப்படும் ஆலயங்களின் செலவுகள், கிராமங்களில் காணப்படும் வசதியற்ற கோவில்களின் பராமரிப்பு உட்பட மேட்கூறப்பட்ட நலத்திட்டங்களின் செலவுகள் அனைத்தும் கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்களினூடாக பெறப்படும் வருமானங்களின் ஊடாகவே செய்யப்பட்டுவருகிறது.

கோவில்கள் என்பது எங்களுடைய அடையலாம், தஞ்சை பெரிய கோவில் தமிழர்களின் மணிமகுடம். எங்களை பொறுத்தவை தஞ்சை கோவிலுக்கு செய்வதை விட வேறெதுவும் பெரிதில்லை. இவ்வாறு கூறுவதற்கும் ஒரு காரணம் இருக்கிறது அதையும் தெரிந்துகொள்ளுங்கள்.

இந்தியாவிலையே அதிகமான சுற்றுலா பயணிகள் வருகைதருவது தமிழ்நாடு தான். ஆண்டுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடு அடங்கலாக சுமார் 39கோடி மக்கள் தமிழ்நாட்டிற்கு சுற்றிப்பார்க்க வருகிறார்கள். இவர்களில் 90விகிதத்திற்கும் அதிகமான மக்கள் ஆலயங்களை தரிசிக்கவும் அதன் அழகை கண்டுகொள்ளவுமே வருகிறார்கள்.
"தமிழ்நாட்டில் மிகவும் போற்றத்தக்க வகையில் கோவில்களும் கட்டிட களையும் அமைந்துள்ளது" என்ற வாசகம் தான்
தமிழ்நாடு மற்றும் இந்திய சுற்றுலாத்துறை வாரியங்கள் முதன்மைப்படுத்தி விளம்பரம் செய்கின்றது. எமது வருவாயில் ஆலயங்களின் பங்கே இரண்டாவது இடத்தில் இருக்கின்றது அவற்றை அழகாக வைத்துக்கொள்வதில் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று அரசியலை ஆராய்ந்து சமூக செயல்பாடுகளை உற்றுநோக்குபவர்கள் கண்டிப்பாக அறிவார்கள்.

மருத்துவமனைகளுக்கு செலவழிக்க வேண்டும் என்று உங்களுடன் சேர்ந்து நாங்களும் கோரிக்கை வைக்கின்றோம். மக்களோ அல்லது அரசோ கோவிலுக்கு செலவு செய்கிறது என்பதை விட தேவையில்லாமல் சினிமா துறைக்கு கொடுக்கும் வரி சலுகையை நிறுத்தினாலும், சினிமா துறையில் புரளும் கருப்புப்பணத்தை வெளிகொண்டுவந்தாலும், அவ்வளவு ஏன் உங்கள் துறை சார்ந்த அனைவரும் வருமான கணக்குகளில் நேர்மையாக இருந்தாலே மருத்துவமனைகள் எல்லாம் நீங்கள் சென்று மருத்துவம் பார்க்கும் அளவிற்கு மேம்பட்டுவிடும்.

உங்கள் ஒப்புவமை நீங்கள் பணிபுரியும் துறை சார்ந்து இருந்திருக்கலாம் ஆனால் இந்து அறநிலைத்துறையை பற்றியும், தமிழர்களின் காலை கலாச்சார பாரம்பரியம் பற்றியும் கொஞ்சம் கூட தெரிந்துகொள்ளாமல் அதனுடன் ஒப்பிட்டு பேசுவது மிகவும் தவறானதேயாகும்.

இதையெல்லாம் பேசுவதற்காக நீங்கள்ஏறிய மேடையும் அந்த நிகழ்விற்கு ஒதுக்கப்பட்ட பணத்தில் கூட 2 மருத்துவமனைகளை உருவாக்கியிருக்கலாம் என்று எங்களாலும் கூற முடியும். அவ்வளவு என் இன்றைய காலகட்டத்தில் மக்கள் அதிகமாக பணத்தை விரயமாக்குவது சினிமாவிற்கு தான். அவ்வாறான சினிமா நமக்கு எதற்கு என்று கேட்கலாம். இதெல்லாம் தாண்டி அதற்க்கு பின்னால் இருக்கும் வணிகம், வேலைவாய்ப்பு கண்முன் தெரிகிறது.

வாழ வைக்கும் தமிழகம்தான் உங்களை வாழ வைக்கிறது என்பதை மறக்க வேண்டாம் சகோதரி....

இனியேனும் தமிழர் "கலை, கலாச்சார" விடயங்களில் மூக்கை நுழைக்காதீர்கள்.

நன்றி முகநூல் பதிவர் கூல் தமிழ்ஸ்

Link to comment
Share on other sites

"தமிழர்களுக்கு அறிவுரை சொல்லத்தான் ஆயிரம் வந்தேறிகள் வந்து நிற்கிறது"

 

தமிழன் சொல்லுறதை எந்த தமிழன் கேட்க்கிறான். யாரும் வந்தேறிகள் சொல்லுறதைதான்  தலையில்வைத்து கொண்டாடுகிறார்கள் அது எந்த துறையை சேர்ந்தவர்கள் என்றாலும் . 

தமிழ்நாட்டில் ஊரடங்கால்   அன்றாடம் காச்சி மக்கள் படும் துயரங்களை  மறைப்பதற்க்காக 1 1/2 மாதங்களுக்கு முன்பு பேசியதை தோண்டியெடுத்து வெளியிட்டு உள்ளார்கள். முதலில் மதுவந்த்தியின் பேச்சு இப்போது ஜோதிகாவின் பேச்சு.
 ஒவ்வொருமுறையும் ஏதாவது பெரிய பிரச்சனைகள் வரும்போதும் அவற்றை  மறைப்பதற்காகவும் / மழுங்கடிப்பதற்க்காகவும் இவ்வாறான உணர்வுகள் (சாதி, சமைய, இன,தனிமனிதன் }சம்பந்தமான சிறு controversy உருவாக்கப்படும்  ஆண்டாண்டுகாலமாக  அரசாங்கள் செய்யும் வேலை இது.


இங்கே இணைக்கப்பட்டுள்ள youtpe களில், யோதிகாவுக்கு எதிராகவோ அல்லது சார்பாகவோ பேசுபவர்கள் எல்லாம், ஒன்றும் சமயத்தின்மீதோ அல்லது இனத்தின்மீதோ உள்ள பற்றால் பேசவில்லை, மாறாக   எவாறு தங்கள் youtupe சேனலை பிரபல்யம் ஆக்கி அதன்மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்பதே அவர்களின்  நோக்கம்.

இது விளங்காமலோ அல்லது விளங்கிக்கொண்டபின்நாளோ எமது முடிவுகளில் இருந்து மாறமுடியாமல் குத்திமுறியிறம்.

தயவுசெய்து நெடுக்காலைபோற அண்ணையும் , குமாரசாமி அய்யாவும் யோதிகா பேசிய வீடியோவை பொதுமனித பார்வையில் மீண்டும் ஒருக்கா பார்க்கவும்.

அடுத்த controversy ரெடி - தமிழ்நாட்டில் பரப்பப்படும் "கம்யூன்"எனும் கன்றாவி வாழ்கைமுறை
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:

சகோதரி ஜோதிகா & தமிழ் ஆர்வலர்களுக்கு...

Image may contain: night, sky and outdoor

ஜோதிகா அவர்களே நீங்கள் சொன்ன கருத்தில் எந்த முரண்பாடும் எனக்கு இல்லை ஆனால் உங்கள் எல்லோருக்கும் கோவில் மட்டும் கண்ணுக்கு தெரிவதற்கு முன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய விடையங்கள் ஏராளமாக இருக்கிறது.

தமிழ் நாட்டில் அறநிலையத்துறைக்கு கீழ் சுமார் 45,000 கோவில்கள் இருக்கின்றன அவற்றிற்கு சொந்தமாக
சுமார் 5லட்சம் ஏக்கர் நிலம் இருக்கிறது
22,000க்கும் அதிகமான கட்டிடங்கள் இருக்கிறது
54 கல்வி நிறுவனங்கள் (கல்லூரி, பாடசாலை) உள்ளன.
36 கருணை இல்லங்கள் இருக்கின்றது
6 சித்த வைத்தியசாலை இருக்கின்றது
2 ஆங்கில மருத்துவமுறை மருத்துவமனையும் இருக்கின்றது.

ஆலயங்களினூடாக சுமார் 1,000 கோடிக்கும் அதிகமான வருவாய் தமிழ்நாட்டிற்கு கிடைக்கின்றது. அப் பணத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு பல திட்டங்களும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.

ஏழை எளியோருக்கான 4கிராம் தங்கம் உட்பட நடாத்தப்படும் திருமண திட்டம் ஆண்டுக்கு சுமார் 1,000க்கும் அதிகமாக திருமணம் செய்துவைக்கப்படுகிறது

754கோவில்களில் அன்னதானம் செய்யப்படுகிறது அதாவது ஆண்டுக்கு சுமார் 30கோடியில் அன்னதானம் மட்டும் தினமும் வழங்கப்படுகிறது

ஆன்மீகம் மற்றும் ஒழுங்கம் சார்ந்த (தமிழ் இலக்கியங்களில் காணப்படும் ) வகுப்புக்கள் சுமார் 28,000 மாணவர்களுக்கு 517 கோவில்களால் நடாத்தப்படுகிறது.

ஆண்டுதோறும் நடாத்தப்படும் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் ஆலயத்தினால் பெறப்படும் நிதியில் இருந்தே செயல்படுத்தப்பட்டுவருகிறது.

தமிழ்நாட்டில் காணப்படும் ஆலயங்களின் செலவுகள், கிராமங்களில் காணப்படும் வசதியற்ற கோவில்களின் பராமரிப்பு உட்பட மேட்கூறப்பட்ட நலத்திட்டங்களின் செலவுகள் அனைத்தும் கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்களினூடாக பெறப்படும் வருமானங்களின் ஊடாகவே செய்யப்பட்டுவருகிறது.

கோவில்கள் என்பது எங்களுடைய அடையலாம், தஞ்சை பெரிய கோவில் தமிழர்களின் மணிமகுடம். எங்களை பொறுத்தவை தஞ்சை கோவிலுக்கு செய்வதை விட வேறெதுவும் பெரிதில்லை. இவ்வாறு கூறுவதற்கும் ஒரு காரணம் இருக்கிறது அதையும் தெரிந்துகொள்ளுங்கள்.

இந்தியாவிலையே அதிகமான சுற்றுலா பயணிகள் வருகைதருவது தமிழ்நாடு தான். ஆண்டுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடு அடங்கலாக சுமார் 39கோடி மக்கள் தமிழ்நாட்டிற்கு சுற்றிப்பார்க்க வருகிறார்கள். இவர்களில் 90விகிதத்திற்கும் அதிகமான மக்கள் ஆலயங்களை தரிசிக்கவும் அதன் அழகை கண்டுகொள்ளவுமே வருகிறார்கள்.
"தமிழ்நாட்டில் மிகவும் போற்றத்தக்க வகையில் கோவில்களும் கட்டிட களையும் அமைந்துள்ளது" என்ற வாசகம் தான்
தமிழ்நாடு மற்றும் இந்திய சுற்றுலாத்துறை வாரியங்கள் முதன்மைப்படுத்தி விளம்பரம் செய்கின்றது. எமது வருவாயில் ஆலயங்களின் பங்கே இரண்டாவது இடத்தில் இருக்கின்றது அவற்றை அழகாக வைத்துக்கொள்வதில் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று அரசியலை ஆராய்ந்து சமூக செயல்பாடுகளை உற்றுநோக்குபவர்கள் கண்டிப்பாக அறிவார்கள்.

மருத்துவமனைகளுக்கு செலவழிக்க வேண்டும் என்று உங்களுடன் சேர்ந்து நாங்களும் கோரிக்கை வைக்கின்றோம். மக்களோ அல்லது அரசோ கோவிலுக்கு செலவு செய்கிறது என்பதை விட தேவையில்லாமல் சினிமா துறைக்கு கொடுக்கும் வரி சலுகையை நிறுத்தினாலும், சினிமா துறையில் புரளும் கருப்புப்பணத்தை வெளிகொண்டுவந்தாலும், அவ்வளவு ஏன் உங்கள் துறை சார்ந்த அனைவரும் வருமான கணக்குகளில் நேர்மையாக இருந்தாலே மருத்துவமனைகள் எல்லாம் நீங்கள் சென்று மருத்துவம் பார்க்கும் அளவிற்கு மேம்பட்டுவிடும்.

உங்கள் ஒப்புவமை நீங்கள் பணிபுரியும் துறை சார்ந்து இருந்திருக்கலாம் ஆனால் இந்து அறநிலைத்துறையை பற்றியும், தமிழர்களின் காலை கலாச்சார பாரம்பரியம் பற்றியும் கொஞ்சம் கூட தெரிந்துகொள்ளாமல் அதனுடன் ஒப்பிட்டு பேசுவது மிகவும் தவறானதேயாகும்.

இதையெல்லாம் பேசுவதற்காக நீங்கள்ஏறிய மேடையும் அந்த நிகழ்விற்கு ஒதுக்கப்பட்ட பணத்தில் கூட 2 மருத்துவமனைகளை உருவாக்கியிருக்கலாம் என்று எங்களாலும் கூற முடியும். அவ்வளவு என் இன்றைய காலகட்டத்தில் மக்கள் அதிகமாக பணத்தை விரயமாக்குவது சினிமாவிற்கு தான். அவ்வாறான சினிமா நமக்கு எதற்கு என்று கேட்கலாம். இதெல்லாம் தாண்டி அதற்க்கு பின்னால் இருக்கும் வணிகம், வேலைவாய்ப்பு கண்முன் தெரிகிறது.

வாழ வைக்கும் தமிழகம்தான் உங்களை வாழ வைக்கிறது என்பதை மறக்க வேண்டாம் சகோதரி....

இனியேனும் தமிழர் "கலை, கலாச்சார" விடயங்களில் மூக்கை நுழைக்காதீர்கள்.

நன்றி முகநூல் பதிவர் கூல் தமிழ்ஸ்

கோவில் என்று சொன்னாலே எல்லாரும் டெஞ்சனாகிறீங்களே அது ஏன். 🤥

கோவில் என்ன தீண்டத் தகாத சொல்லா 😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/4/2020 at 13:19, கிருபன் said:

தமிழக இளைஞர்கள் 2017இல் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வென்ற பின்னர்

ஒரு சிலர் விளையாடும் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்காக ஒரு போராட்டமே நடத்தி வெல்லும் தமிழக இளைஞர்களுக்கு அவசிய தேவையான அடிப்படை வசதி கொண்ட மருத்துவமனைகள் பள்ளிகூடத்திற்காக அரசிடம் போராடி பெற விரும்பம் இல்லை.ஜோதிகாவை தாக்குவதில் காட்டும் ஆர்வத்தை அங்கே காட்டலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

ஒரு சிலர் விளையாடும் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்காக ஒரு போராட்டமே நடத்தி வெல்லும் தமிழக இளைஞர்களுக்கு

தமிழர்களின்  பாரம்பரிய விளையாட்டை நிறுத்த கோருவதற்க்கு எதிராக ஒரு இனம் போராடியது.

ஜோதிகாவை தாக்குபவர்கள் சக்கிகள் என பேர் கூறி அழைக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, kalyani said:

தமிழர்களின்  பாரம்பரிய விளையாட்டை

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டு என்று சொல்வது கூட சரியானதா தெரியவில்லை ஏனெனில் அங்கே கூட 38 மாவட்டங்களில் 11 மாவட்டங்களில் மட்டுமே ஜல்லிக்கட்டு விளையாடபட்டது. இலங்கையிலும் தமிழர்கள் உள்ளார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏனைய மாவட்டங்களில் விளையாடவில்லை என்பதற்காக அது தமிழர்களின் விளையாட்டு இல்லை என்றாகி   விடுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜோதிகாவின் கருத்தில் உறுதியாகவே இருக்கிறோம்: சூர்யா

ஜோதிகாவின் கருத்தில் உறுதியாகவே இருக்கிறோம் என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு தனியார் விருது வழங்கும் விழாவில் ஜோதிகா பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினார். அதில், கோயில்களைக் குறித்துப் பேசிய விஷயம் சர்ச்சையாக உருவெடுத்தது. இதனைத் தொடர்ந்து இணையத்தில் பலரும் ஜோதிகாவுக்கு எதிராகவும், ஆதரவாகவும் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.

ளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"'மரம்‌ சும்மா இருந்தாலும்‌ காற்று விடுவதாக இல்லை' என்கிற கருத்து 'சமூக ஊடக' விவாதங்களுக்கு அப்படியே பொருந்தும்‌. ஒரு விருது வழங்கும்‌ விழாவில்‌ எப்போதோ ஜோதிகா பேசியது, இப்போது ஊடகங்களில்‌ செய்தியாகவும்‌, சமூக ஊடகங்களில்‌ விவாதமாகவும்‌ மாறி இருக்கிறது.

'கோயில்களைப்‌ போலவே பள்ளிகளையும்‌, மருத்துவமனைகளையும்‌ உயர்வாகக் கருத வேண்டும்‌' என்கிற கருத்தை ஜோதிகா வலியுறுத்தியதை, 'சிலர்‌' குற்றமாகப் பார்க்கிறார்கள்‌. இதே கருத்தை விவேகானந்தர்‌ போன்ற ஆன்மிகப்‌ பெரியவர்களே சொல்லியிருக்கிறார்கள்‌. 'மக்களுக்கு உதவினால்‌, அது கடவுளுக்குச்‌ செலுத்தும்‌ காணிக்கை' என்பது 'திருமூலர்‌' காலத்துச் சிந்தனை. நல்லோர்‌ சிந்தனைகளைப்‌ படிக்காத, காது கொடுத்துக் கேட்காதவர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை.

பள்ளிகளையும்‌, மருத்துவமனைகளையும்‌ இறைவன்‌ உறையும்‌ இடமாகக் கருத வேண்டும்‌ என்ற கருத்தை, எல்லா மதத்தைச்‌ சேர்ந்தவர்களும்‌ வரவேற்கவே செய்கின்றனர்‌. 'கரோனா தொற்று' காரணமாக இயல்பு வாழ்க்கை‌ பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்திலும்‌, எங்களுக்குக் கிடைத்த பேராதரவு நம்பிக்கையையும்‌, மகிழ்ச்சியையும்‌ அளித்தது.

அறிஞர்கள்‌, ஆன்மிகப்‌ பெரியவர்களின்‌ எண்ணங்களைப்‌ பின்பற்றி வெளிப்படுத்திய அந்தக்‌ கருத்தில்‌ நாங்கள்‌ உறுதியாகவே இருக்கிறோம்‌. “மதங்களைக்‌ கடந்து மனிதமே முக்‌கியம்‌' என்பதையே எங்கள்‌ பிள்ளைகளுக்கும்‌ சொல்லித்தர விரும்புகிறோம்‌. தவறான நோக்கத்தோடு, தரக்குறைவாகச் சிலர்‌ அவதூறு பரப்பும்‌ போதெல்லாம்‌, நல்லோர்கள்‌, நண்பர்கள்‌, ரசிகர்கள்‌ எங்களுக்குத் துணை நிற்கிறார்கள்‌.

முகமறியாத எத்தனையோ பேர்‌ எங்கள்‌ சார்பாக பதில்‌ அளிக்கிறார்கள்‌. ஊடகங்கள்‌ சரியான விதத்தில்‌ இச்சர்ச்சையைக்‌ கையாண்டன. 'நல்ல எண்ணங்களை விதைத்து நல்ல செயல்களை அறுவடை செய்ய முடியும்‌' என்கிற நம்பிக்கையை இவர்களே துளிர்க்கச்‌ செய்கிறார்கள்‌. எங்களுக்கு உறுதுணையாக நிற்கும்‌ அனைவருக்கும்‌ எங்களின்‌ நெஞ்சார்ந்த நன்றிகள்‌".

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Aalavanthan said:

EWqsIQ1U4AE8Da0?format=jpg&name=small

திருப்பதி கோயிலுக்கு செலுத்த இருந்த 40 ஆயிரம் ரூபாவை மாணவர்களின் குடும்பத்திற்கு வழங்கிய ஆசிரியரை பாராட்ட வார்த்தை இல்லை. அவசியமான மாற்றம்.

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, இசைக்கலைஞன் said:

 

ஜோதிகாவின் சமுதாய பொறுப்பு கொண்ட கருத்து  பகுதியில் சின்ன தேசம் கியுபா வெறும் கரும்பை வைத்து உலகின் தலைசிறந்த நாடாக மாறிவிட்டதாம்  இன்று அமெரிக்காவுக்கு மருந்துகளை அனுப்புகிற அளவுக்கு வளர்ந்திருக்கிறதாம் என்கின்ற இவரின் புழுகு மூட்டையும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, விளங்க நினைப்பவன் said:

ஜோதிகாவின் சமுதாய பொறுப்பு கொண்ட கருத்து  பகுதியில் சின்ன தேசம் கியுபா வெறும் கரும்பை வைத்து உலகின் தலைசிறந்த நாடாக மாறிவிட்டதாம்  இன்று அமெரிக்காவுக்கு மருந்துகளை அனுப்புகிற அளவுக்கு வளர்ந்திருக்கிறதாம் என்கின்ற இவரின் புழுகு மூட்டையும்

மருத்துவத்திலும் அவசரகால நிலமைகளைக் கையாள்வதில் கியூபா தலைசிறந்து விளங்குகிறது என்பது உண்மையே. 

Link to comment
Share on other sites

நெடுக்ஸ் அண்ணைக்கு குமாரசாமி அய்யாவுக்கும் சமர்ப்பணம் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kaalee said:

நெடுக்ஸ் அண்ணைக்கு குமாரசாமி அய்யாவுக்கும் சமர்ப்பணம் 

நல்ல விடியோ.இருவரும் ஏற்று கொள்வார்கள் என்றே நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.