Jump to content

4,000 கடற்படை சிப்பாய்கள் மற்றும் குடும்பத்தினர் சுய தனிமைப்படுத்தப்பட்டனர்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, உடையார் said:

போர் வெற்றி விழாவிற்கான ஒத்திகையில் ஈடுபட்டிருந்த இரு கடற்படையினருக்கு கொரோனா

நல்லூர்க் கந்தன் ஆலய பெருமைகளும் ...


தமிழனை.... கொன்ற, சிங்கள படைகளுக்கு... எல்லாம்,
"கொரோனா"...  வரவேண்டியது, காலத்தின்... கட்டாயம்.  😎

🪔 "நல்லூர்... கந்தனுக்கு" ... நன்றி.  🙏
நான்...  "நேர்த்தி வைத்தது", சரியாய்... வந்திட்டுது.  :)

Link to comment
Share on other sites

  • Replies 82
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வெலிசறை முகாமிலிருந்து நேற்றிரவு 17 பஸ்களில் வவுனியாவுக்கு கொண்டுவரப்பட்ட கடற்படையினர்

%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படைச் சிப்பாய்கள் தனிமைப்படுத்தும் செயற்பாட்டுக்காக வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமும்கு அழைத்து வரப்பட்டனர். இவர்கள் நேற்று இரவு 7 மணியளவில் 17 பஸ்களில் கடற்படையினர் அழைத்து வரப்பட்டதாக வவுனியா தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த 500 இற்கு மேற்பட்ட கடற்படைச் சிப்பாய்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து, அந்த முகாமைச் சேர்ந்த கடற்படைச் சிப்பாய்கள் பலர் கொரோனா பரிசோதனைக்காகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களில் சுமார் 500 பேர் 17 பஸ்களில் அழைத்து வரப்பட்டனர். இவர்கள் வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இதேவேளை, கடற்படையினரை அழைத்து வந்த பஸ்களை வவுனியா, குருமன்காடு பகுதியில் வைத்து இரு ஊடகவியலாளர்கள் புகைப்படம் எடுத்த போது அங்கு வந்த கடற்படை அதிகாரிகள் ஊடகவியலாளர்களைப் புகைப்படங்களை அழிக்குமாறு கூறித் தர்க்கத்தில் ஈடுபட்டனர். இதன்போது 17 பஸ்களும் வீதியில் நிறுத்தப்பட்டமையால் சிறிது நேரம் அங்கு பதற்றநிலை காணப்பட்டது.

http://thinakkural.lk/article/42962

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று 12 கடற்படை வீரர்களுக்கு தொற்று

இலங்கையில் இன்று (21) இதுவரை 13 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 1,068 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று கண்டறியப்பட்ட 13 பேரில் 12 கடற்படையினர் என்பதும், ஒருவர் மலேசியாவில் இருந்து நாடு திரும்பிய என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்போது கொரோனா தாெற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 439 ஆக காணப்படுகிறது.

இதேவேளை இதுவரை 620 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://newuthayan.com/இன்று-12-கடற்படை-வீரர்களு/

Link to comment
Share on other sites

உடனடியாக தனிமைப்படுத்தப்பட்ட 200 பேர்! தேவையற்ற அச்சம் வேண்டாம் - ஸ்ரீலங்கா கடற்படை வெளியிட்டுள்ள அறிவிப்பு

கொழும்பு கோட்டைப் பகுதியில் இருந்த கடற்படை கடற்படை உறுப்பினரொருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமை தொடர்பில் வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை என கடற்படை அறிவித்துள்ளது.

கொழும்பு கோட்டை கஃபூர் கட்டடத்தில் இருந்த கடற்படை உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதி மக்களுக்கு அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள கடற்படை பேச்சாளர் லெப்டினன்ட் கொமாண்டர் இசுறு சூரிய பண்டார,

இந்த கட்டடமானது கடற்படையினரால் நிர்வகிக்கப்பட்டுவருகிறது, அதன் நடவடிக்கைகள் சுகாதார பிரிவினரால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களின் பிரகாரம் மேற்கொள்ளப்படுகிறது.

குறித்த கட்டடத்தில் இருந்த கடற்படை வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, அவருடன் அக்கட்டடத்தில் இருந்த சுமார் 200 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த கடற்படை வீரர் வெலிசர கடற்படை முகாமுக்கு சேவை வழங்கிய குழுவின் உறுப்பினர்களில் ஒருவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வெலிசர கடற்படை முகாமில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து அப்பகுதி தனிமைப்படுத்தப்பட்டது.

அதற்கமைய, வெலிசர கடற்படை முகாமுக்கு சேவை வழங்கும் வெளியக உறுப்பினர்களை வேறுபடுத்தி வைப்பதற்கு கஃபூர் கட்டடம் கடற்படையின் கீழ் கொண்டுவரப்பட்டது.

அங்கிருந்தவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர். பரிசோதனைகளில் இந்த கடற்படை உறுப்பினருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.ibctamil.com/srilanka/80/144193

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெலிசர கடற்படை முகாமை சேர்ந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வெலிசர கடற்படை முகாமில் உள்ள அனைவரும் தனிமைப்படுதல் நிலையங்களிற்கு அனுப்பபபட்டுள்ளனர் என கடற்படை பேச்சாளர் இசுரு சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

வெலிசர முகாமிலிருந்த அனைத்து கடற்படையினரும் நாட்டின் பல பகுதிகளில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களிற்கும் அனுப்பப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்  .welisara-camp-596x394-5-300x198.jpg
அதேபோன்று அவர்களது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வெலிசர முகாமில் சுமார் 4000 கடற்படையினர் காணப்பட்டனர் என அவர் தெரிவித்துள்ளார்.navy-spokesmen-1-3.jpg
இதேவேளை கொழும்பின் கபூர் கட்டிடத்தில் தங்கியிருந்த 200 கடற்படை உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் அங்கு நெருக்கமான விதத்தில் தங்கியிருக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொவிட் 19 ற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினரே அங்கு தங்கவைக்கப்பட்டிருந்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.

http://thinakkural.lk/article/43989

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குவைத்திலிருந்து வந்தவர்களிற்கு உதவிய இராணுவவீரருக்கே கொரோனா

குவைத்திலிருந்து அழைத்துவரப்பட்டவர்களிற்கு உதவும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவவீரர் ஒருவர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்க விமானநிலையத்தில் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவவீரரே பாதிக்கப்பட்டுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.kuwait-2-300x139.jpg

பாதிக்கப்பட்டுள்ள இராணுவவீரர்; வெளிநாடுகளில் இருந்து வருபவர்களிற்கு உதவும் பணியில் ஈடுபட்டிருந்தவர் குறிப்பாக குவைத்திலிருந்து அழைத்து வரப்பட்ட இலங்கையர்களிற்கு உதவியவர் என அவர் தெரிவித்துள்ளார்.

http://thinakkural.lk/article/44291

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடற்படையைச் சேர்ந்த 836 பேர் வைரஸ் தொற்றால் பாதிப்பு

படையினரின் கண்காணிப்பின் கீழ் உள்ள 45 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 5,240 பேர் தொடர்ந்து தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனரென, இராணுவம் தெரிவித்துள்ளது.

அத்துடன், 11,709 பேர் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்து இதுவரை வெளியேறியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

கடற்படையைச் சேர்ந்த 836 பேர் தொற்றாளர்களாக பதிவாகியுள்ளதுடன், இவர்களில் 420 பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

http://www.tamilmirror.lk/செய்திகள்/கடறபடயச-சரநத-836-பர-வரஸ-தறறல-பதபப/175-251418

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கொடிகாமம் தனிமை மையத்தில் 6 கடற்படை வீரர்களுக்கு கொரோனா!

Test-960x540.jpg?189db0&189db0

இலங்கையில் இன்று (25) இதுவரை 6 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 2,007 ஆக உயர்ந்துள்ளது.

தென்மராட்சி – கொடிகாமம், கெற்பேலி இராணுவ முகாமில் உள்ள தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 6 கடற்படை வீரர்களுக்கே கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இப்போது கொரோனா தாெற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 394 ஆக காணப்படுகிறது.

அத்துடன் இன்று காலை வெளியான அறிக்கையின்படி புதிதாக 40 பேர் குணமடைந்துள்ளனர். இதன்படி இதுவரை 1,602 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://newuthayan.com/கொடிகாமம்-தனிமை-மையத்தி-2/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.