Jump to content

மனிதாபிமான உதவிகளும் மதுபானக் கடைகளும் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மனிதாபிமான உதவிகளும் மதுபானக் கடைகளும் !
=========================================
இலங்கையில் அண்மையில் COVID-19 தொற்றினைத் தடுக்கக் கொண்டுவரப்பட  ஊரடங்கு உத்தரவை அடுத்து, நாட்டின் பல பகுதிகளிலும் பல குடும்பங்களுக்கு வருமானம் அற்ற நிலை ஏற்பட்டது நாங்கள் அனைவரும் அறிந்ததே.

அதையடுத்து அவர்களுக்கு உதவ புலம் பெயர் தமிழ் அமைப்புகள் பலவும் முன் வந்ததும், அவர்கள் நாட்டின் பல பகுதிகளுக்கும் பொருட்களை அனுப்பி வைத்ததும் நாம் அறிந்ததே! அதே நேரம் இலங்கை அரசே வருமானம் குறைந்த, வருமானம் இழந்த குடும்பங்களுக்கு பணக் கொடுப்பனவுகளை மேற்கொண்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது. மறுபுறம் இலங்கையில் உள்ள சில மத அமைப்புக்களும் சமூக அமைப்புக்களும் தமது பங்குக்கு உணவுப் பொதிகளை வழங்கி வருகின்றன.

இவ்வாறு அரசும் புலம்பெயர் சமூகமும் உள்நாட்டு அமைப்புகளும் மக்கள் பசி தீர்க்க கடந்த இரண்டு வாரங்களாக பாடுபட்ட நிலையில் அரசாங்கம் ஏப்ரல் 20 அன்று ஊரடங்கைத் தளர்த்தியது. நீண்ட நாட்களின் பின்னர் கூண்டைவிட்டு வெளியே வந்த பறவைகளான இலங்கையின் குடிமக்கள் (மிக)நீண்ட வரிசையை மிகவும் ஒழுக்கமாக சமூக இடைவெளியைப் பேணியபடி நின்றனர். 

அது அத்தியாவசிய உணவுக்கான வரிசையல்ல.  அது விட்டதைப் பிடிக்கும் நோக்கிலும் இனி (வெளியே) விடாவிட்டால் என்ன செய்வது என்ற பயத்திலும் ஒரு மாதத்திற்கு தேவையான உற்சாக பானத்தை போதுமான அளவு வாங்கிச் சேமித்துவிட வேண்டும் என்று உறுதி கொண்ட வரிசையாக இருந்தது.  . 

நோய்த் தொற்றைத் தடுக்க இத்தனை நாட்கள் ஊரடங்கு உத்தரவு இருந்த நிலையில் இந்த ஒருநாளில் அவசரமாக மதுபானக் கடைகளைத் திறக்கவேண்டிய அவசியம், அவசரம் என்ன வந்தது என்ற கேள்வியும் எனக்கு வராமல் இல்லை.ஆனால் மக்களுக்கு அரசு செலவு செய்த பணத்தை (உதவித் தொகை) அரசு மீளப் பெற்றுக்கொள்ள இதைவிட மிக விரைவான வழிமுறை வேறொன்றும் இல்லைத்தானே? 

அது தவிர, மதுபான சாலை அனுமதிப்பத்திரம் வைத்திருக்கும் ஏழைப் பராளுமன்ற உறுப்பினர்களும் அவர்களில் தங்கி வாழ்வோரும் வருமானம் இல்லாது பட்டினி கிடக்க வேண்டியும் ஏற்படலாம் அல்லவா?

அரசு சாராயக் கடைகளைத் திறந்ததும் சாராயம் விற்றதும் எமக்குத் தேவையில்லாத விடயம், அது நாட்டின் தேசிய வருமானம் சம்பந்தப்பட்டது. அரசின் வருமானத்தைக் கெடுத்தவன் என்ற கெட்டபெயர் எனக்கெதற்கு? நான் கதைக்க வந்தது நம்நாட்டுக் குடிமக்களைப் பற்றியும் புலம்பெயர் தேச புரவலர்களைப் பற்றியும்தானே? அதைப்பற்றி மட்டும் பேசுவோம். 

இந்த சம்பவத்தையடுத்து சமூக வலைத்தளங்களில் பலரும் கொஞ்சம்கூட மனசாட்சியில்லாமல்  செய்வது இந்தக் குடிமக்களையும் அண்மையில் இலங்கைவாழ் தமிழர்களுக்கு ஓடோடி வந்து உதவிய புலம்பெயர் தமிழர்களையும்தான். 

வெளிநாட்டில் உள்ளவர்கள் நமது மக்கள் ஒருவரும் பட்டினி கிடந்து செத்துவிடக் கூடாது என்றுதானே பணம் அனுப்பி உதவினார்கள்? வாங்கியவர்களில் சிலர் அதைப் பாதி விலைக்கு விற்றுக் குடித்தால் கொடுத்தவர்கள் என்ன செய்வார்கள் என்று வெளிநாட்டு வள்ளல்களை ஆதரிப்போர் சொல்கிறார்கள். 

அரசே காசும் உணவும் கொடுக்கும்போது இவர்களும் பொருட்களை வாரி இறைத்ததால்தானே வாங்கியவர்கள் அவற்றைப் பாதி விலைக்கு விற்று அந்தக் காசில் மதுபானம் வாங்குகிறார்கள் என்று மறுசாரார் திட்டுகிறார்கள். குற்றம் செய்தவரைவிட செய்யத் தூண்டியவர்தனே குற்றவாளிகள் என்பது அவர்கள் வாதம்.

இன்னும் சிலரோ, இந்த வெளிநாட்டு உதவிகளை ஒவ்வொரு பிரதேச செயலாளர்கள் மூலமும் கொடுத்திருக்கலாம்தானே என்றும் வாதிக்கிறார்கள். சில பிரதேசச் செயலாளர்கள் சரியாக  வேலை செய்வதில்லை என்று மறுசாரார் குற்றம் சாட்டுகிறார்கள். மொத்தத்தில் வழமைபோல எமது பாரம்பரியம் தவறாமல் ஆளையாள் குற்றம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். 

புலம்பெயர் தமிழரே, உங்கள் உதவிகளுக்கு நன்றி. ஆனால் தயவுசெய்து அதை ஒருங்கிணைத்து எல்லோருக்கும் கிடைக்கும்படி செய்யுங்கள் என்று பொதுநல விரும்பிகள் கூறினால் வெளிநாட்டு தமிழர்களுக்கு கோபம் வருகிறது. 

ஏறச் சொன்னால் எருதுக்கு கோபம், இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம் என்றதாக நிலைமை மாறிப் போச்சு.

இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் எமது குடிமக்கள் ஊரடங்கு உத்தரவை மதித்து தத்தமது வீடுகளை அமைதியாகக் குடித்துக் கொண்டிருப்பார்கள். நான் மட்டும் எதற்காக இதைப்பற்றிப் பேசிக்கொண்டு........!?

பி.கு.: பண உதவி, பொருள் உதவி பெற்ற எல்லாருமே அதை மதுபானம் வாங்கப் பயன்படுத்தினார்கள் என்று நான் சொல்லவில்லை. ஏனெனில் உண்மையும் அதுதான். 
இரண்டாவது படத்தை பாருங்கள். உங்களில் யாராவது அந்த யானை மதுபானம் வாங்கத்தான் வந்தது என்றோ, வெளிநாட்டுத் தமிழரின் நிவாரணம் பெற்றது என்றோ உங்களால் குற்றம் சாட்ட முடியுமா?

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/4/2020 at 19:24, கிருபன் said:

வெளிநாட்டு உதவிகளை ஒவ்வொரு பிரதேச செயலாளர்கள் மூலமும் கொடுத்திருக்கலாம்தானே என்றும் வாதிக்கிறார்கள். சில பிரதேசச் செயலாளர்கள் சரியாக  வேலை செய்வதில்லை என்று மறுசாரார் குற்றம் சாட்டுகிறார்கள். மொத்தத்தில் வழமைபோல எமது பாரம்பரியம் தவறாமல் ஆளையாள் குற்றம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். 

 

போராட்ட காலம். புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு பொருளாதாரத் தடையை சிறீலங்கா அரசாங்கம் அறிவித்தது. உணவு, மருத்துவம் முதல் அனைத்துப் பொருட்களும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் எடுத்துச் செல்ல முற்று முழுவதுமான தடை. வன்னியில் உள்ள மக்களுக்கு தங்கள் நிழல் அரசாங்கத்தின் ஊடாக அவர்களது தேவைகளை விடுதலைப் புலிகள்தான் நிறைவேற்றிக் கொண்டிருந்தார்கள்.

மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய தமிழர் புனர்வாழ்வுக் கழகம், தமிழ் பொருண்மிய மேம்பாட்டுக் கழகம் என்ற அமைப்புகள் ஊடாக பொருளாதாரத் தடையை சமாளித்து மக்களின் அன்றாட வாழ்க்கை சிதைவடையாமல் விடுதலைப் புலிகள் பார்த்துக் கொண்டார்கள். இங்கே நான் குறிப்பிட்ட இரண்டு கழகங்களுக்கும் வெளி, உள்நாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவிகள் மிகக் குறைவாகவே இருந்தன. ஆனால் இந்த இரண்டு கழகங்களையும் புலம் பெயர் தமிழர்கள் தங்கள் இரண்டு தோள்களில் தாங்கி நின்றார்கள். வன்னி மக்களின் தேவைக்கு அதிகமான நிதிகளை புலம் பெயர் நாட்டில் இருந்து தமிழர்கள் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

மேலதிகமான நிதி கிடைத்ததனால் காந்தி நிலையம், குருகுலம், இனிய வாழ்வு இல்லம், வெற்றிமனை, பெண்கள் அபிவிருத்தி புனர்வாழ்வு, முன்பள்ளி, தொழில்சார் பயிற்சி நிலையம், சத்துணவு நிலையங்கள், வெண்புறா என்று பல அமைப்புகள் அங்கே உருவாகி மிக நேர்த்தியாக நிர்வகிக்கப் பட்டன. அதிலும் யாரிடமும் கையேந்தும் நிலை இல்லாமல் அவரவர்கள் சுயமாக வாழ வழி செய்து கொடுப்பதே அங்கே பிரதானமாகக் கருதப்பட்டது. தங்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ள மக்களின் தேவைகளைக் கவனிப்பது தங்களது அரசின் கடமை என்று விடுதலைப் புலிகள் நடந்து கொண்டார்கள்.

இன்று இவை எதுவும் சிறிலங்காவில் இல்லை. பொருளாதாரத் தடை என்ற பேச்சுக்கே இடமில்லை. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி இருக்கிறார். பிரதமர் இருக்கிறார், அவரது அமைச்சுக்கள் இருக்கின்றன. தமிழ் மக்கள் தங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்து அனுப்புகிறார்கள். மாகாணசபை, அதற்கான ஆளுனர், மாநகரசபை, மேஜர், நகரசபை, நகரபிதா கிராமசேவகர்கள் என எல்லாமே இருக்கின்றன. இங்கே மக்களுக்கான பிரச்சனைகள் என்று வரும் போது அதை கவனிக்க வேண்டியது அரசாங்கமே

இன்றைய கொரோனாக் காலகட்டத்தில் அன்றாடம் தொழில் புரிந்து அந்த வருமானத்தில் வாழ்பவர்கள் வீட்டில் இருத்தப் பட்டால், அவர்களது தேவைகளைக் கவனிக்க வேண்டியது ஒரு அரசாங்கத்தின் கடமை. நான் வசிக்கும் யேர்மனியில், கொரோனாக் காலத்தில் வேலைக்குப் போக முடியாதவர்களுக்கு யேர்மனிய அரசாங்கம்,  அவர்கள் இதுவரை பெற்ற சம்பளத்தில் 60 வீதமான பணத்தைத் தருகிறது. அது போதுமானதாக இல்லை என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டதால் இப்பொழுது சம்பளத்தின் 80 வீதமான தொகையைத் தருகிறோம் என நிதியமைச்சு அறிவித்திருக்கிறது

இலங்கை அரசாங்கமும் உலக நாடுகளிடம் நிதி கேட்கிறது. வரும் நிதிகளைத் தங்கள் பகுதிகளுக்குத் தர வைப்பதும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கடமை. தேர்தல் வரும் போது வந்து வார்த்தைகளை அள்ளி வீசும் பாராளுமன்ற உறுப்பினர்களை அவர்களது கடமைகளைச் செய்ய வேண்டும்.அல்லது பொதுமக்கள் அவர்களைக் கேட்க வேண்டும்.

நாட்டில் ஏதாவது ஒரு பிரச்சினை வந்தால், உடனடியாகப் புலம் பெயர் தமிழர்களிடம் நிதி கேட்கும் இன்றுள்ள நிலை மாறவேண்டும். லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஒரு தமிழ் வானொலிஇது ஒரு வரலாற்றுக் கடமை. தமிழர்களே உதவுங்கள்என்கிறது. இங்கே எங்கே ஒரு வரலாறு எழுதப் படுகிறது என்று தெரியவில்லைஒரு பொது நலனுக்காக அனுப்பப்படும் பணம் சரியான முறையில் பயன்படுத்தப் படல் வேண்டும். எதற்கெடுத்தாலும் புலம் பெயர் தமிழ் மக்கள் பணம் அனுப்பிக் கொண்டிருந்தால் ஒரு வலிமையான சமுதாயம் உருவாகமல் போகும் வாய்ப்பு ஏற்பட்டு விடும்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தானம் கொடுத்த மாட்டின் பல்லை பிடித்து பார்க்காதே என்று ஒரு பழமொழி இருக்கின்றது.

உதவி செய்வதோடு தமது எல்லைகளை அறிந்து நின்று கொண்டால் அவரவர்க்கு நல்லது.

உதவிசெய்கின்றோம் எனும் உரிமையில் அடுத்தவன் வீட்டு படுக்கை அறைவரை செல்வது அநியாயம்.

உதவிசெய்கின்றோம் என்று கூறிக்கொண்டு அடுத்தவன் சுதந்திரத்தை பறிப்பது மனிதாபிமானம் இல்லை. 

முதலில் இலங்கையில் இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு மண்டைக்குள் ஒன்றும் இல்லை அவர்களுக்கு வாழத்தெரியாது ஒன்றுமே தெரியாது முட்டாள்கள் எனும் நிலையில் நினைப்பில் இலவச அறிவுரைகள், அழுத்தங்களை கொடுப்பது நிறுத்தப்படவேண்டும்.

இங்கு வெளிநாடுகளில் செய்யாததை அங்கு அவர்கள் செய்யவில்லை. தமக்கு ஒரு நியாயம் மற்றவனுக்கு ஒரு நியாயம் எனும் போக்கும் தவறானது.

ஒரு காலத்தில் தாங்களும் ஊரில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து எப்படி இருந்தார்கள் என்பதை வெளிநாட்டில் வாழ்ந்துகொண்டு ஓடர் போடுபவர்கள் நினைத்துப்பார்க்க வேண்டும்.

அங்குள்ளவர்களை மட்டம் தட்டுவது, ஓரம் கட்டுவது, ஒன்றும் தெரியாத மடையர்கள் எனும் கணக்கில் ஊடகங்களில் பொறுப்பு இல்லாமல் செய்திகள் பிரசுரிப்பது எல்லாம் தவறானது.

இப்படியான போக்கு அங்குள்ள மக்களின் மனதில் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கலாம். கஸ்டப்படுபவனை தோளில் தட்டிக்கொடுக்கவேண்டும். தலையில் குட்டி கெடுக்கக்கூடாது.

நீங்கள் அங்கு இருந்து உதவி பெறும்போது உங்களுக்கு உதவி செய்பவர்கள் எப்படி வாழவேண்டும் என்று வகுப்பு எடுத்தால் உங்களுக்கு எப்படி உரைக்கும் என்பதை ஒருகணம் தயவுசெய்து சிந்தித்து பாருங்கள். 

வெளிநாட்டில் இருந்து காசு கொடுப்பவர்கள் அங்குள்ள மக்களை எப்படி தங்கள் விருப்பு வெறுப்பின் பிரகாரம் ஆட்களை இருத்தி எழுப்புகின்றார்கள் என்பது பற்றியும் கொஞ்சம் ஆராய்ச்சி செய்து கட்டுரை எழுதுங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

தானம் கொடுத்த மாட்டின் பல்லை பிடித்து பார்க்காதே என்று ஒரு பழமொழி இருக்கின்றது.

விதானைகள் எடுத்த வறுமைக்கோட்டில் வாழ்கிறவர்  குடும்பங்களில் லிஸ்டில் வெளிநாட்டில் உள்ளவர்களின் குடும்பமும் உள்ளது கேட்டால் தம்பி அரசாங்கத்து உதவி எடுக்க என்று போட்ட லிஸ்ட் நீங்கள்  வேணுமெண்டால் அதை வெட்டி விட்டு மற்றவையளுக்கு உங்க உதவிகளை குடுங்க என்று பதில் வருது . 

அப்ப  உண்மையிலே கஷ்ட்டப்பட்ட  குடும்பங்கள் தொடர்ந்து வறுமையில் வாழனும் என்பது விதியா ?

பல இடங்களில் சமுர்த்தி எடுப்பவர்களை கேட்டால் வெட்க்க  கேடு அவர்களை எல்லாம் உதவி செய்யும்  வெளிநாட்டுக்காரன் கண்டுபிடித்துவிடுவான் எனும் பயத்தில் காசை  மட்டும் அனுப்புங்கோ மற்றபடி வாயை  பொத்திக்கொண்டு கிடவுங்கோ எனும் தொனியில் வரும் கூப்பாடுகளை முதலில் நிப்பாட்டுங்கோ அங்கும் நாங்கள் அனுப்பும் ஒவ்வொரு பென்னியும் உண்மையான கஸ்ட்டப்பட்டவருக்குத்தான் போகுதா என்று பார்ப்பதை தவறு என்று சொல்லமுடியாது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டில் உறவினர்கள் வாழலாம் வாஸ்தவம்தான். ஆனால் வெளிநாட்டில் வாழும் உறவினர்கள் எல்லாம் ஊரில் உள்ள உறவுகளுக்கு காசு அனுப்புகின்றார்கள் என்பது உண்மை இல்லை. வெளிநாட்டில் வசதியாக வாழ்ந்துகொண்டு ஊரில் வாழும் தாய், சகோதரங்களை கவனிக்காமல் உள்ள நல்லவர்களும் உள்ளார்கள்.

ஒருவகையில் பார்த்தால் வெளிநாட்டில் உறவினர் வாழ்கின்றார் என்றுசொல்லி ஊரில் உள்ள ஒருவரின் கொடுப்பனவுகளை வெட்டுவது நியாயம் இல்லை. 

சமுர்த்தி காசு கிடைக்கலாம். சரி. ஆனால், எவ்வளவு கொடுக்கின்றார்கள். மாதம் ஒரு பத்தாயிரம் கிடைக்குமா? ஐயாயிரம் கொடுக்கப்பட்டது என்றே செய்திகளில் பார்த்தேன்.

ஊரில் வாழ்பவர்கள் ஒழுங்காக சாப்பிட்டு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய ஒரு நான்கு பேர் அமைந்த குடும்பத்துக்கு மாதம் எவ்வளவு காசு போதுமானது என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்?

சமுர்த்தி பணத்தை வைத்து மாதத்தில் உள்ள எத்தனை நாட்களை சமாளிக்கமுடியும்.

நானும் முன்பின் தெரியாதவர்களுக்கு காசு அனுப்புவதுண்டு. எப்படி செலவளிக்கின்றார்கள் என்று கேட்பதில்லை. அது எனக்கு நியாயமாகப்படவில்லை பெருமாள் 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

வெளிநாட்டில் இருந்து காசு கொடுப்பவர்கள் அங்குள்ள மக்களை எப்படி தங்கள் விருப்பு வெறுப்பின் பிரகாரம் ஆட்களை இருத்தி எழுப்புகின்றார்கள் என்பது பற்றியும் கொஞ்சம் ஆராய்ச்சி செய்து கட்டுரை எழுதுங்கள். 

நீங்களும் அதை எழுதலாம்😀

புலம்பெயர்ந்த தமிழர் அரசியல் கட்சிகளுக்கு வார்த்துக்கொடுத்து தமது agenda வை முன்னெடுப்பதுபோல சாதாரண மக்களுக்கு வாரி வழங்குவதில்லை. உதவிகள் பெரும்பாலும் சொந்தங்களாலும், நண்பர்களாலும் செய்யப்படுகின்றன. 

1 hour ago, நியாயத்தை கதைப்போம் said:

நானும் முன்பின் தெரியாதவர்களுக்கு காசு அனுப்புவதுண்டு. எப்படி செலவளிக்கின்றார்கள் என்று கேட்பதில்லை. அது எனக்கு நியாயமாகப்படவில்லை பெருமாள் 👍

ஜெயமோகனின் கதையில் இருந்து...

 

“பணம் மாம்மன் என்ற தெய்வம், அது சாத்தானின் படைவீரர்களில் ஒன்று. வியர்வை சிந்தி அதை ஈட்டவேண்டும். அல்லது ரத்தமும் கண்ணீரும் சிந்தி ஈட்டவேண்டும். வியர்வையும் ரத்தமும் கண்ணீரும் நாம் அல்லாவுக்கு அளிக்கும் விலை, அதற்கு பதிலாக அவர் நமக்கு செல்வத்தை அளிக்கிறார்.அவ்வாறு ஈட்டப்பட்ட செல்வத்தை அல்லா காப்பாற்றுவார். அல்லாவுக்கான விலையை அளிக்காமல் வரும் செல்வம் சாத்தானுடையது. அவனிடமிருந்து நாம் தப்பமுடியாது. ஆகவேதான் நான் எவருக்குமே சும்மா பணத்தை கொடுப்பதில்லை. கல்வியோ மருத்துவமோ கொடுப்பேன். திருமணம் செய்துவைப்பேன். பணம் கொடுப்பதில்லை. பணம் கொடுப்பது ஒருவனை சாத்தானிடம் தள்ளிவிடுவது.”

 

https://www.jeyamohan.in/130497#.XqXfMy_TVR4

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

மண்டைக்குள் ஒன்றும் இல்லை அவர்களுக்கு வாழத்தெரியாது ஒன்றுமே தெரியாது முட்டாள்கள் எனும் நிலையில் நினைப்பில் இலவச அறிவுரைகள், அழுத்தங்களை கொடுப்பது நிறுத்தப்படவேண்டும்.

இங்கு வெளிநாடுகளில் செய்யாததை அங்கு அவர்கள் செய்யவில்லை. தமக்கு ஒரு நியாயம் மற்றவனுக்கு ஒரு நியாயம் எனும் போக்கும் தவறானது.

 

6 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

அங்குள்ளவர்களை மட்டம் தட்டுவது, ஓரம் கட்டுவது, ஒன்றும் தெரியாத மடையர்கள் எனும் கணக்கில் ஊடகங்களில் பொறுப்பு இல்லாமல் செய்திகள் பிரசுரிப்பது எல்லாம் தவறானது.

இப்படியான போக்கு அங்குள்ள மக்களின் மனதில் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கலாம். கஸ்டப்படுபவனை தோளில் தட்டிக்கொடுக்கவேண்டும். தலையில் குட்டி கெடுக்கக்கூடாது.

நீங்கள் அங்கு இருந்து உதவி பெறும்போது உங்களுக்கு உதவி செய்பவர்கள் எப்படி வாழவேண்டும் என்று வகுப்பு எடுத்தால் உங்களுக்கு எப்படி உரைக்கும் என்பதை ஒருகணம் தயவுசெய்து சிந்தித்து பாருங்கள். 

👍  மிகச் சரியான கருத்து.

3 hours ago, கிருபன் said:

புலம்பெயர்ந்த தமிழர் அரசியல் கட்சிகளுக்கு வார்த்துக்கொடுத்து தமது agenda வை முன்னெடுப்பதுபோல சாதாரண மக்களுக்கு வாரி வழங்குவதில்லை. உதவிகள் பெரும்பாலும் சொந்தங்களாலும், நண்பர்களாலும் செய்யப்படுகின்றன. 

உண்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூலித்தொழில் செய்பவர்கள், உடலால் தொழில் செய்பவர்கள் வீடுதிரும்பியதும் உடல் நோ நீங்குவதற்கு, உடல் அடித்துப்போட்டது போல் உள்ளபோது உடலை ஆற வைப்பதற்கு, நோவை மறந்து தூக்கம் செய்வதற்கு சாராயம் பருகுவதாக கூறக்கேட்டு உள்ளேன். இவர்கள் குடியை அளவுடன் நிறுத்தும் மனக்கட்டுப்பாடு இல்லாமல் போவது போகாதது எமக்கு தெரியாது. அதற்காக பொறுப்பு இல்லாமல் மதுபானக்கடையில் காசை கொட்டுகின்றார்கள், மதுபானம் வாங்குவதற்கு வரிசையில் நிற்கின்றார்கள் என்று சந்தி சிரிக்க நாற்சந்தியில் எழுதி ஒட்டத்தேவையில்லை . 

இரத்த உறவுகள், சகோதரங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து காசு அனுப்புகின்றார்கள், சரி. அதற்காக அவர்கள் குடிக்கின்றார்கள் நாங்கள் குளிருக்குள் கஸ்டப்பட்டு வேலை செய்து அனுப்பும் காசை கரி ஆக்குகின்றார்கள் என்று முறைப்பாடு செய்து செய்தித்தாளில் தலையங்கமாக போடவேண்டுமா? அவர்களுடன் தொடர்புகொண்டு சம்மந்தப்பட்டவர்களுக்கு அறிவுரை கூறுவது தவறு இல்லை.  

காதும் காதும் வைத்தாற்போல் செய்யவேண்டிய வேலையை பறை அடித்து ஊரைக்கூட்டி மதுபான கடைகளுக்கு செல்லும் எல்லாரையும் அவமானம் செய்தாற்போல் ஊடகங்களில் பொறுப்பு இல்லாமல் செய்திகளை கிறுக்கி தள்ளுவது அசிங்கமானது.

உங்களுக்கு நீங்கள் வெளிநாடுகளில் முதுகுமுறிய வேலை செய்து அனுப்பும் காசை அங்குள்ள உறவுகள் தகுந்த முறையில் பயன்படுத்தவேண்டும் என்று விரும்பினால் வெறும் காசு என்று கொடுக்காமல் ஒரு சிறிய முதலீடுபோல் கொடுங்கள் அல்லது அவர்களை வேலை செய்யச்சொல்லி அதற்கு கூலியாக கொடுங்கள். அதற்கு பிறகு நீங்கள் கொடுக்கும் வேதனத்தை அவர்கள் எப்படியும் செலவு செய்வது  அவர்களின் தனிப்பட்ட விடயம்.

பெரிய தொகை இல்லாமல் சிறிய சிறிய தொகையாக அனுப்பலாம். இவ்வாறே அவர்களின் தேவைக்கு ஏற்றபடிஅளவு அறிந்து பணத்தை அனுப்பலாம். இன்னும் எத்தனையோ வழிகள் உள்ளன. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நிச்சயம் பாதிப்பு இருக்கும். அதனால்த் தான் பெரும்தொகை பணத்தைச் செலவு செய்து இத்தனை பேரை களமிறக்கியுள்ளனர்.
    • ஆமாம்   ஆனால் படம். இலக்கம்  சின்னம்   கட்சி பெயர்   என்பன  வெவ்வேறு  .....இதில் ஒருவர் நன்கு அறியப்பட்டவர்.    அவருக்கு அவ்வளவு பதிப்பு இல்லை.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • இந்தியாவின் விருப்பத்தின்படி யுத்த நிறுத்ததிற்கு இணங்குங்கள் அல்லது இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் - போராளிகளை எச்சரித்த ப சிதம்பரம் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட யுத்தநிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கான யோசனைகளை பரிசீலிக்க  ஏற்றுக்கொள்வதென்று முடிவெடுத்தனர்.  ஆனால், இந்தியாவின் வெளியுறவுத்துறை அதனுடன் மட்டுமே நின்றுவிடவில்லை. எம்.ஜி.ஆர் உடன் தொடர்புகொண்டு, அவர் பங்கிற்கும் போராளித் தலைவர்கள் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தது. ஆகவே, போராளித் தலைவர்களுடன் பேசுவதற்காக தனது நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், 1983 ஆம் ஆண்டு ஆடி இனக்கொலை குறித்து ஐ.நா வில் இந்திரா பேசும்போது உடனிருந்தவருமான பண்ருட்டி ராமச்சந்திரனை எம்.ஜி.ஆர் அனுப்பிவைத்தார். போராளித் தலைவர்களுடன் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்," சமாதானத்திற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்.    ரஜீவுடன் சிதம்பரம்  பின்னர், இந்திய உள்நாட்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான ப சிதம்பரத்தைப் போராளித் தலைவர்களுடன் பேசுவதற்கு ரஜீவ் காந்தி அனுப்பி வைத்தார். சிதம்பரத்துடனான போராளித் தலைவர்களின் கூட்டத்தினை ரோ ஒழுங்குசெய்திருந்தது. சென்னையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புலிகள் சார்பாக பிரபாகரன், பாலசிங்கம் ஆகியோரும், டெலோ சார்பில் சிறீசபாரட்ணம், மதி ஆகியோரும், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் பத்மநாபா, வரதராஜப்பெருமாள், ரமேஷ் ஆகியோரும், ஈரோஸ் சார்பில் பாலக்குமார், சங்கர் ராஜி மற்றும் முகிலன் ஆகியோரும் கலந்துகொண்டனர். போராளித் தலைவர்களுடன் பேசிய சிதம்பரம், தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வொன்றினைக் காண்பதில் ரஜீவ் காந்தி உறுதியாக இருப்பதாகக் கூறினார். தமிழர்கள் தமது நலன்களைக் காத்துக்கொள்ள ரஜீவ் காந்தி மீது நம்பிக்கை வைக்கலாம் என்றும் அவர் கூறினார். போராளிகளுடன் நேரடியாகப் பேசுவதற்கு ஜெயவர்த்தனவை சம்மதிக்க வைத்திருக்கிறார் ரஜீவ் என்றும், இதன் மூலம் போராளிகளுக்கு அங்கீகாரமும், மதிப்பும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் சிதம்பரம் மேலும் கூறினார். ஆகவே, இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதற்கு போராளித் தலைவர்கள் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும். பேச்சுக்கள் ஆரம்பிப்பதற்கு யுத்தநிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும். இந்தியா யுத்த நிறுத்தத்திற்கான யோசனையினை முன்வைத்திருக்கிறது, ஆகவே போராளி அமைப்புக்கள் அனைத்தும் அதனை ஏற்றுக்கொண்டு ஒழுக வேண்டும் என்று சிதம்பரம் கூறினார். பின்னர் போராளித் தலைவர்களை நோக்கி அச்சுருத்தும் தொனியில் இப்படிக் கூறினார் சிதம்பரம், " யுத்த நிறுத்தத்திற்கு நீங்கள் சம்மதித்தால் நீங்கள் தொடர்ந்தும் இந்தியாவில் இருக்கலாம், இல்லையென்றால், இப்போதே வெளியேறி விடவேண்டும்". சிதம்பரத்தின் எச்சரிக்கையினைக் கேட்ட போராளித் தலைவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். பிரபாகரன் பாலசிங்கத்தை நோக்கித் தனது முகத்தினைத் திருப்ப, பாலசிங்கம் சிதம்பரத்தைப் பார்த்துப் பின்வருமாறு கூறினார், " நாம் இதுகுறித்து எமக்குள் பேசி முடிவெடுக்க வேண்டும். அப்படிக் கலந்தாலோசித்த பின்னர் எமது முடிவினை உங்களுக்கு நாம் அறியத் தருவோம்".  "நீங்கள் எடுக்கப்போகும் முடிவு நல்ல முடிவாக இருக்கட்டும்" என்று கூறிவிட்டு எழுந்து சென்றார் சிதம்பரம். சிதம்பரத்தினுடனான சந்திப்பினையடுத்து உடனடியாக போராளித் தலைவர்கள் தமக்குள் சந்திப்பொன்றினை நடத்தினர். அச்சந்திப்பில் எவரும் எதிர்பாராத வகையில் பத்மநாபா, "நாம் யுத்த நிறுத்தத்தை முற்றாக ஏற்றுக்கொள்கிறோம்" என்று அறிவிக்கவும், பிரபாகரனும், சிறீசபாரட்ணமும் அதிர்ந்து போனார்கள். அங்கு பேசிய பாலசிங்கம், "எமது இறுதிச் சந்திப்பில் கூட்டாக நாம் முடிவெடுக்க இணங்கிவிட்டு, இப்போது உங்கள் பாட்டில் வேறு எதனையோ கூறுகிறீர்களே?" என்று கேட்டார். பத்மாநாபா பேசுவதற்கு முன் அவர் சார்பாக சங்கர் ராஜி பாலசிங்கத்திற்குப் பதிலளித்தார். "நாங்களும் அதேபோன்றதொரு முடிவினையே எடுத்திருக்கிறோம். எம்மை அனைத்தையும் மூடிக் கட்டிக்கொண்டு வெளியேறுமாறு கூறுகிறார்கள். இலங்கைக்குச் சென்று நாம் என்ன செய்வது?" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கேட்டார் சங்கர் ராஜி. அப்படிக் கேட்கும்போது கேவலமான வார்த்தைப் பிரயோகத்தையும் சங்கர் ராஜி மேற்கொண்டார். பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தின் முன்னாள்த் தலைவர் யாசீர் அரபாத்துடன் ஈரோஸின் சங்கர் ராஜீ சங்கர் ராஜியின் வார்த்தைத் துஷ்பிரயோகத்தினையடுத்து கோபமடைந்த பாலசிங்கம் அதனைக் கடிந்துகொள்ள, இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இத்தர்க்கங்களின்போது பாலசிங்கம் ரோ பற்றியும் குறிப்பிட்டார். இது அன்று நடைபெற்ற வாக்குவாதத்தினை மேலும் தீவிரமாக்கியது. வாக்குவாதத்தினை நிறுத்த பிரபாகரன் முயன்றார், "அண்ணை, தயவுசெய்து நிப்பாட்டுங்கோ" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கூறினார். "அண்ணை சார்பாக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நாங்கள் இங்கே தர்க்கிக்க வரவில்லை. முன்னணி யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதாக முடிவெடுத்தால், நானும் அதனை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அதனை உடனடியாக நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. நாம் அப்படிச் செய்தால் எம்மை எவரும் மதிக்கப்போவதில்லை. ஒரு தாய் தனது பிள்ளையை அதட்டி சோறூட்டும் வரையில் அப்பிள்ளை உட்கொள்வதில்லை. சிறிதுகாலத்திற்கு யுத்தநிறுத்ததை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று கூறிவிட்டு இறுதியாக ஏற்றுக்கொள்ளலாம்" என்று அவர் கூறினார். பின்னர் யுத்த நிறுத்தத்தை எதற்காக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான தனது காரணங்களை முன்வைத்தார் பிரபாகரன்,  1. யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பது தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்குப் பாதகமாக அமையலாம். யுத்த நிறுத்தத்தை நிராகரிப்பதன் மூலம் இந்தியாவின் அனுதாபத்தினையும், ஆதரவையும் இழக்க வேண்டி வரும். அப்படி நடக்கும் பட்சத்தில் ஜெயவர்த்தனவே வெற்றி பெறுவார். நாம் அதனை அனுமதிக்க முடியாது.  2. தமிழர்களின் விடுதலைப் போராட்டம் சர்வதேசத்தின் ஆதரவினை இழக்கும்.  3. போராளிகள் பயங்கரவாதத்தின் மீது காதல் கொண்டவர்கள் என்கிற அவப்பெயர் ஏற்படுத்தப்படும். அதன்பின்னர் சர்வதேசம் எம்மை சுதந்திர விடுதலைப் போராளிகள் என்று பார்ப்பதை நிறுத்திவிடும்.  4. தன்னையொரு சமாதான விரும்பி என்று சர்வதேசத்திற்குக் காட்ட முயலும் ஜெயவர்த்தன தனது முயற்சியில் வெற்றி பெறுவார். யுத்த நிறுத்ததினை ஏற்றுக்கொள்வதற்கான இன்னொரு காரணத்தையும் பிரபாகரன் முன்வைத்தார். அதுவரை காலமும், "பொடியள் சண்டை பிடிப்பார்கள், கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடும்" என்று தமிழ் மக்கள் கருதிவந்த நிலையினை மாற்றுவதற்கான சந்தர்ப்பமாகவும் இதனைப் பாவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இதேவிதமான கருத்தினையே அக்காலத்தில் டிக் ஷிட்டும் தொண்டைமானும் என்னிடம் கூறியிருந்தார்கள். போராளி அமைப்புக்கள் போரிடட்டும், அனுபவம் நிறைந்த கூட்டணியின் தலைவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடட்டும் என்று அவர்கள் கூறினார்கள். டிக் ஷிட் என்னிடம் பேசும்போது, " அரசியல் அமைப்பில் பாவிக்கப்படும் சூட்சுமம் நிறைந்த, சிக்கலான, சட்ட ரீதியான வார்த்தைப் பிரயோகங்களை புரிந்துகொண்டு பேசும் அறிவோ, திறமையோ போராளிகளிடம் இருக்கப்போவதில்லை" என்று கூறினார். பிரபாகரன் மேலும் பேசும்போது, தமிழர்களை வீழ்த்த ஜெயவர்த்தன வைத்த சமாதானப் பொறியிலேயே அவரை வீழ்த்த வேண்டும் என்று கூறினார். ஆகவே, யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதற்கு சில நிபந்தனைகளை நாம் முன்வைக்க வேண்டும் என்று அவர் கூறினார். தாம் முன்வைக்கும் நிபந்தனைகள், தான் வைத்த பொறியிலேயே ஜெயாரை வீழ்த்துவதாக அமையவேண்டும் என்றும் அவர் கூறினார். "யுத்த நிறுத்தக் காலத்தில் இராணுவம் முகாம்களை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலையினை முதலில் நாம் ஏற்படுத்த வேண்டும். அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, நாம் எமது போராளிகளை ஒவ்வொரு முகாமைச் சுற்றியும் நிலைவைக்க வேண்டும். சிலவேளை யுத்த நிறுத்தம் முறிவடைந்தால், இராணுவத்தினர் தமது முகாம்களுக்குள் இருந்து வெளியே வருவதை இதன்மூலம் நாம் தடுத்துவிடலாம்"   என்கிற  பிரபாகரனின் யோசனையினை ஏனைய தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர். பிரபாகரனின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை நான் 1985 வைகாசியில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது கண்டேன். யாழ்ப்பாணக் கோட்டைக்கும், நாவட்குழி முகாமிற்கும் நான் சென்றேன். கிட்டுவே நடவடிக்கைகளுப் பொறுப்பாகவிருந்தார். நான்கு போராளி அமைப்புக்களைச் சேர்ந்த போராளிகள் முகாம்களைச் சூழ காவலிருப்பதை நான் கண்டேன். "இராணுவத்தினர் வெளியே வந்தால், அவர்களை சிதறடிப்போம்" என்று அவர்கள் கூறினார்கள்.   போராளிகளால் சூழப்பட்டிருந்த இந்த முகாம்களுக்கு உலங்குவானூர்திகளூடாக உணவுப்பொருட்களும் ஏனைய பொருட்களும் கொண்டுவந்து இறக்கப்படுவதை நான் கண்டேன். யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருக்கும் ஏனைய முகாம்களின் நிலையும் இதுதான் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது.  அதன்பின்னர் யுத்தநிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதற்காக தாம் முன்வைக்கவிருக்கும் நிபந்தனைகள் குறித்துப் போராளித் தலைவர்கள் கலந்தாலோசித்தார்கள். ஆறு விடயங்கள் குறித்து அவர்கள் பேசினார்கள். 1. இராணுவம் தமது முகாம்களுக்குப் பின்வாங்கிச் செல்ல வேண்டும். 2. வாகனப் போக்குவரத்தின் மேல் இருக்கும் தடைகள் நீக்கப்பட வேண்டும். 3. அவசரகாலச் சட்டமும், ஊரடங்கு உத்தரவும் மீளப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். 4. கடற்கண்காணிப்பும், தடைசெய்யப்பட்ட வலயங்களும் அகற்றப்பட வேண்டும். 5. அரச ஆதரவுடனான சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும். 6. அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். தமது கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ள்ப்படுமிடத்து, தாம் 12 வார கால யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதாக இந்தியாவிடம் போராளித் தலைவர்கள் அறிவித்தனர். மேலும், இந்த 12 வார காலத்திற்குள் தமிழர்களுக்கு தான் லொடுக்கப்போவதாகக் கூறும் தீர்வினை இலங்கையரசாங்கம் போராளிகளின் பரிசீலினைக்காக முன்வைக்க வேண்டும் என்றும் கோரினர். அரசாங்கம் முன்வைக்கும் தீர்வு தமக்குத் திருப்தி தராத பட்சத்து, தாம் பேச்சுக்களில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று அறிவிப்பது என்று அவர்கள் முடிவெடுத்தனர். மேலும், யுத்த நிறுத்தத்தினை மேலும் நீடிப்பதில்லையென்றும், 12 வாரகால யுத்த நிறுத்தம் முடிவிற்கு வரும்வேளை தமிழ் மக்களின் விடுதலைக்கான தமது போராட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதென்றும் அவர்கள் முடிவெடுத்தனர். ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் தமது ஒருமித்த முடிவினை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சிடம் அறிவித்தனர். இதனையடுத்து, பாலசிங்கத்திடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட சந்திரசேகரன், தனது கடுமையான அதிருப்தியினைத் தெரிவித்தார். ஆனால், இந்த விடயம் செய்தி ஊடகங்களுக்குக் கசிந்ததோடு, பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இதேவேளை, யுத்த நிறுத்தத்திற்கான இந்தியாவின் ஆலோசனைகளையும், பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான கால அட்டவணையினையும் கொழும்பிற்குத் தெரிவிப்பதற்காக பண்டாரி கொழும்பு நோக்கிப் பயணமானார். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.