Jump to content

முன்னணி உறுப்பினர் செந்தூரனை காணவில்லை; மோ.சைக்கிள் மீட்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முன்னணி உறுப்பினர் செந்தூரனை காணவில்லை; மோ.சைக்கிள் மீட்பு!

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் இலங்கநாதன் செந்தூரனை காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் இன்று (24) இரவு சற்றுமுன் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அவரது மோட்டார் சைக்கிள், தேசிய அடையாள அட்டை, அலைபேசி உள்ளிட்ட உடமைகள் தொண்டமனாறு இந்து மயானத்துக்கு அருகாமையில் மீட்கப்பட்டுள்ளன.

சம்பவத்தையடுத்து வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். பிரதேச சபை உறுப்பினரின் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோர் அவரைத் தேடும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் அறியவருவதாவது,

தொண்டமனாறு, மயிலந்தனை இந்து மயானத்துக்கு அண்மையாக கடற்கரை பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று நிற்பதை அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் இன்று (24) இரவு 7.20 மணியளவில் கண்டுள்ளனர். அத்துடன் அது தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸாருக்கும் தகவல் வழங்கினர்.

இரவு 8.30 மணியளவில் அந்த இடத்துக்குச் சென்ற பொலிஸார், அங்கு காணப்பட்ட மணிப்பையிலிருந்த (பேர்ஸ்) தேசிய அடையாள அட்டையை வைத்து இலங்கநாதன் செந்தூரன் (வயது – 37) என்பவருடையது என்று உறுதி செய்தனர்.

அதன் பின்னர் அவரது மோட்டார் சைக்கிள், இயக்கம் நிறுத்தப்பட்ட அலைபேசி, முகக்கவசம் மற்றும் தலைக்கவசம் உள்ளிட்டவற்றை பொலிஸார் மீட்டு பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் செந்தூரனின் வீட்டுக்கு அறிவிக்கப்பட்டது. இதனையறிந்த உறவினர்கள், செந்தூரனின் நண்பர்களுடன் தொண்டமனாறு பகுதியில் தேடி வருகின்றனர். அவருக்கு என்ன நடந்தது என்பது பற்றி தெரியவில்லை என்று உறவினர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் செந்தூரன் மக்களுக்கான உதவிப்பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டிருந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.

 

https://newuthayan.com/முன்னணி-உறுப்பினர்-ச/

 

Link to comment
Share on other sites

காணாமல் போன முன்னணி உறுப்பினர் சடலமாக மீட்பு!

நேற்று (24) இரவு முதல் காணாமல் போன வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் இலங்கநாதன் செந்தூரன் (37-வயது) இன்று (25) காலை தொண்டமனாறு, மயிலந்தனை கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தொண்டமனாறு மயிலந்தனை இந்து மயானத்துக்கு அண்மையாக கடற்கரை பகுதியில் செந்தூரனின் மோட்டார் சைக்கிள், இயக்கம் நிறுத்தப்பட்ட அலைபேசி, முகக்கவசம் மற்றும தலைக்கவசம் உள்ளிட்டவை நேற்று இரவு 7.20 மணியளவில் காணப்பட்ட நிலையில் பொலிஸார் அவற்றை மீட்டனர்.

இதன் பின்னரே அவர் காணாமல் போனார். இது குறித்து குடும்பத்தினருக்கும் அறிவிக்கப்பட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த நிலையிலேயே இன்று காலை சடலம் மீட்கப்பட்டுள்ளது

https://newuthayan.com/காணாமல்-போன-முன்னணி-உறுப/

 

என்ன நடக்கிறது?. ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG_8731-720x450.jpg

காணாமல் போயிருந்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் சடலமாக கண்டெடுப்பு!

காணாமல் போயிருந்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் இலங்கநாதன் செந்தூரன் (வயது 37) இன்று(சனிக்கிழமை) சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்று வெள்ளிக்கிழமை மாலை முதல் காணாமல் போயிருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், அவரது மோட்டார் சைக்கிள், தேசிய அடையாள அட்டை, அலைபேசி உள்ளிட்ட உடமைகள் தொண்டமனாறு இந்து மயானத்துக்கு அருகாமையில் நேற்றிரவு மீட்கப்பட்டிருந்தன.

இதனையடுத்து வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். அத்துடன்,  உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோர் அவரைத் தேடும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்

இந்நிலையில், இன்று சனிக்கிழமை காலை தொண்டமனாறு கடற்கரையில் அவர் சடலமாக கண்டுக்கப்பட்டுள்ளார். சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் செந்தூரன் மக்களுக்கான உதவிப் பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

IMG_8730.jpg

a35abca5-17ad-4ece-98bb-0745f4ec95db.jpg

http://athavannews.com/காணாமல்-போயிருந்த-வலிகாம/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செந்துரன் நீரில் மூழ்கியே மரணித்தார்; மரண விசாரணையில் தகவல்

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் இ.செந்தூரன், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என்றும் அவரது உடலில் அடிகாயங்கள் எவையும் இல்லை எனவும் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் செந்தூரன், நேற்று (24) மாலை முதல் காணாமற்போன நிலையில் தொண்டமனாறு கடலில் இன்று (25) அதிகாலை அவரது சடலம் கண்டறியப்பட்டது.

இந்நிலையில் பருத்தித்துறை நீதிவானின் உத்தரவில் அவரது சடலம் மந்திகை வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா முன்னிலையில் இன்று முற்பகல் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதன்போது “சடலத்தின் கழுத்து உட்பட உடலில் எந்தவொரு அடிகாயமும் இல்லை. கடல் விலங்குகளால் சடலத்தில் காயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. முகத்தில் உரசல் காயம் காணப்படுகிறது.

நுரையீரல் பெரியளவில் வீக்கம் அடைந்துள்ளது. அதனால் அவரது இறப்பு நீரில் மூழ்கி இடம்பெற்றுள்ளது” என்று சட்ட வைத்திய அதிகாரியின் உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

https://newuthayan.com/செந்துரன்-நீரில்-மூழ்க/

 
 

 

Link to comment
Share on other sites

7 hours ago, puthalvan said:

இயக்கம் நிறுத்தப்பட்ட அலைபேசி, முகக்கவசம் மற்றும தலைக்கவசம் உள்ளிட்டவை நேற்று இரவு 7.20 மணியளவில் காணப்பட்ட நிலையில் பொலிஸார் அவற்றை மீட்டனர்.

ஒன்றில் தற்கொலையாக இருக்க வேண்டும் அல்லது படுகொலையாக இருக்க வேண்டும்.  படுகொலையாக இருப்பதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம்.

Link to comment
Share on other sites

மனுஷனுக்கு வீட்டில ஏதும் பிரச்சினையோ தெரியல்ல.

Link to comment
Share on other sites

கண்ணீர் அஞ்சலிகளை காணிக்கையாக்குகின்றோம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், உரை

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினரும் வலி கிழக்கு பிரதேச சபை உறுப்பினருமான இ.செந்தூரன் அவர்களின் திடீர் மறைவுச் செய்தி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செந்தூரன் அவர்கள் தமிழ் மக்களின் விடுதலைக்கான அரசியல் பயணத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து தன்னை முழுமையாக அற்பணித்து உழைத்தவர்.

உறுதியான தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரான செந்தூரன் அவர்களின் இழப்பு அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்லாது தமிழ்ச் சமூகத்திற்கும் எமது கட்சிக்கும் ஈடு செய்யப்பட முடியாத பேரிழப்பகும்.

செந்தூரனின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் அவரது ஆத்ம சாந்திக்காகவும் பிரார்த்திக்காறோம்.

தமிழ்த் தேசத்தின் அற்பணிப்பு மிக்க செயற்பாட்டாளன் செந்தூரனிற்கு எமது கண்ணீர் அஞ்சலிகளை காணிக்கையாக்குகின்றோம்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் துயரமான செய்தி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டுத் தள்ளியிருக்கிறார்கள்.

ஆழ்ந்த அஞ்சலிகள்.

3 hours ago, Rajesh said:

மனுஷனுக்கு வீட்டில ஏதும் பிரச்சினையோ தெரியல்ல.

எப்படி உங்களால் இப்படி சிந்திக்க முடிகிறது.

உங்களுக்கு பிடிக்காத ஆளோ?

Link to comment
Share on other sites

7 hours ago, ஈழப்பிரியன் said:

போட்டுத் தள்ளியிருக்கிறார்கள்.

ஆழ்ந்த அஞ்சலிகள்.

 

நானும் முதலில் அப்படிதான் யோசித்தேன்। இருந்தாலும் தற்போதைய செய்தியின்படி , வைத்திய அறிக்கையின்படி நீரில் மூழ்கி இறந்ததாகவும் , வீட்டில் பிரச்சினை இருந்ததாகவும் அறிய முடிகிறது। எப்படி இருந்தாலும் மூழ்கியா , மூழ்கடிக்கப்படடர என்பது தெரியவில்லை।

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் இப்போது..... பிடிபடாமல் கொலைகளை செய்வதில், 
"மாஃபியா" போன்று... கைதேர்ந்தவர்கள் என்பதை,  கவனத்தில் கொள்ள வேண்டும்.

Link to comment
Share on other sites

20 hours ago, ஈழப்பிரியன் said:

எப்படி உங்களால் இப்படி சிந்திக்க முடிகிறது.

உங்களுக்கு பிடிக்காத ஆளோ?

உண்மை வெளிவர வீட்டுக்காரர் வாய் திறக்க வேணும் என்டு தான். வேற வித்தியாசமா நெச்சிடாதேங்கோ.
இப்ப கொலைகாரர் யார் என்டு தெரிஞ்சு போச்சு.

Link to comment
Share on other sites

ஒரு பிரதேசசபை உறுப்பினரின், கடந்த சில நாட்களாக ஓடியோடி மக்களுக்கு நிவாரப்பொருட்களை வழங்கி வந்த ஒருவரின், கொலை பற்றிய உண்மைகளை அறிந்த வடமாகாண அரசியல்வாதிகள் வழமைபோல மௌனமாக இருப்பது அவர்கள் முழுச் சுயநலவாதிகள் என்பதை மீண்டுமொருமுறை உணர்த்துகிறது.

அவ்வப்போது பத்திரிகைகளில் அறிக்கைகளை விட்டு மகிழ்ப்பவர்கள் குறைந்தது ஒரு கண்டனம், முழுமையான விசாரணைக் கோரிக்கைதனும் வைக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, போல் said:

ஒரு பிரதேசசபை உறுப்பினரின், கடந்த சில நாட்களாக ஓடியோடி மக்களுக்கு நிவாரப்பொருட்களை வழங்கி வந்த ஒருவரின், கொலை பற்றிய உண்மைகளை அறிந்த வடமாகாண அரசியல்வாதிகள் வழமைபோல மௌனமாக இருப்பது அவர்கள் முழுச் சுயநலவாதிகள் என்பதை மீண்டுமொருமுறை உணர்த்துகிறது.

அவ்வப்போது பத்திரிகைகளில் அறிக்கைகளை விட்டு மகிழ்ப்பவர்கள் குறைந்தது ஒரு கண்டனம், முழுமையான விசாரணைக் கோரிக்கைதனும் வைக்கவில்லை.

அவர்களுக்கு தெரிந்தே நடந்த கொலை .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
    • அப்படி நடந்தால் சீமான் தம்பிகளில் பாதி கீல்பாக்கத்துக்கும் அடுத்த பாதி ஏர்வாடியிலும் தங்களுக்கு தாங்களே கரண்டு பிடித்துகொண்டு நிக்கும்கள் இது தேவையா 😀
    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.