Jump to content

(சேக்கிழார்) பற்றி உலகம் அறிந்திராத சில தகவல்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

(சேக்கிழார்) பற்றி உலகம் அறிந்திராத சில தகவல்கள்

Vasanth Kannan2020-04-23 20:14:04

287d5ae197fb3d3e73c290cf5657fecf-480.jpgcredit: third party image reference

தொண்டை நாட்டில் "குன்றத்தூர்" என கூறப்படும் சிறிய ஊரில் வெள்ளியங்கிரியார், அழகாம்பிகை அம்மையார் ஆகியோர் இல்லறம் நடத்தி வந்தனர். அவர்களுக்கு அருண்மொழித்தேவர், பாலறாவாயர் என இரண்டு மைந்தர்கள் இருந்தனர். மூத்த மகனான அருண்மொழித்தேவரே சேக்கிழார் ஆவார். இவர் இளமையிலேயே கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கினார். இலக்கண, இலக்கியங்களை முறையாக பயின்றார். தெய்வ பக்தியில் சிறந்து விளங்கினார். இவரது தந்தை வெள்ளியங்கிரியார் அநபாயசோழ மன்னரின் அரசவை புலவர்களில் ஒருவராக சிறந்து விளங்கினார். இவ்வாறு இருக்கையில் ஒருநாள் புலவர் பெருமக்களை காண வேண்டும் என்று மன்னன் விரும்பினான். மேலும் அவர்களை பார்த்து மூன்று வினாக்களை எழுப்பினார்.

  1. மலையினும் பெரியது எது?
  2. நிலத்தினும் பெரியது எது?
  3. கடலினும் பெரியது எது?

இந்த வினாக்களுக்கு அவைப் புலவர்கள் பதில் கூற இயலாமல் தடுமாறினார்கள். ஆலோசித்து வருவதாக அரசனிடம் கூறிவிட்டு வீடுகளுக்கு சென்றார்கள். இதனால் உணவு உட் கொள்ளவும் மனமில்லாது சிந்தனையில் ஆழ்ந்தார் வெள்ளியங்கிரியார். குழம்பி இருந்த தந்தையிடம் அருண்மொழித்தேவர் விபரம் வினவினார். வெள்ளியங்கிரியார் அரசவையில் நடந்த நிகழ்ச்சியையும், அரசர் கேட்ட மூன்று வினாக்களையும் தன் மகனிடம் கூறினார். புன்னகை பூத்த அருண்மொழித்தேவர் எழுத்தாணியும் சுவடியையும் எடுத்துக் கொண்டு இருக்கையில் அமர்ந்தார்.

  1. மலையினும் பெரியது எது? "நிலையின் திரியா தடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது"
  2. நிலத்தினும் பெரியது எது? "காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது"
  3. கடலினும் பெரியது எது? "பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது"

என்று வினாவும், விடையும் எழுதி தந்தையாரிடம் கொடுத்தார். மகனின் அறிவு கூர்மையை பாராட்டினார் வெள்ளியங்கிரியார்.

3b7b8cbf7c3b504972f5393903160c5e-480.jpgcredit: third party image reference

இந்த நிகழ்ச்சியை வெள்ளியங்கிரியார் மூலம் அறிந்த சோழ மன்னன் மகிழ்ச்சி அடைந்தான். தொண்டைநாட்டு சான்றோர் அனைவரும் அருண்மொழித்தேவரை காண வேண்டும் என்பதற்காக பல்லக்கு பரிவாரங்களை அனுப்பி அவரை அழைத்து வர ஏற்பாடு செய்தார். அருண்மொழித்தேவர் அரண்மனைக்கு வருகை தந்தார். மன்னர் தனது அரியணையில் இருந்து எழுந்து சென்று அவரை வரவேற்றார். அவருடைய அறிவாற்றலை அறிந்த மன்னர் தலைமை அமைச்சர் பதவியை அளித்தார். "உத்தமசோழப்பல்லவராயன்" என்ற பட்டத்தையும் வழங்கினார். சோழநாட்டின் தலைநகரான திருவாரூரில் வாழ்ந்து தன் அமைச்சர் வேலைகளை நடத்தி வந்தார். அங்கே திருநாகேச்சுரம் என்னும் திருக்கோயில் இறைவனை தினமும் வணங்கி வந்தார். தான் பிறந்த குன்றத்தூரில் இதுபோன்ற ஒரு திருக்கோவில் நிறுவி அதற்கு திருநாகேஸ்வரம் என்று பெயர் சூட்டினார். தொன்மையின் சிறப்புகளையும், வரலாற்றுப் பெருமைகளையும் கூறும் கல்வெட்டுகளை ஆராய்ந்து "மனுநீதி சோழனின்" வரலாற்றை இயற்றினார். சமண மதத்தில் ஈடுபாடு கொண்டிருந்த மன்னர் பெருமானின் அறிவுரைப்படி சைவ மதத்தவர் ஆனார். அநபாய சோழ மன்னனின் வேண்டுதலின் படி காப்பியம் ஒன்றை இயற்ற தில்லைக்கு சென்றார். தில்லையில் சிவகங்கையில் நீராடி சிவ கோலம் பூண்டு, இறைவன் முன் நின்று, உங்கள் சிறப்பினை நான் பாட அடி எடுத்துக் கொடுக்க வேண்டும் என்று வேண்டினார். வானிலிருந்து "உலகெலாம்" என்ற அசரீரி வாக்கு கிளம்பியது. கூடியிருந்த அனைவரும் இறைவனை வணங்கி நின்றனர். "உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்" என்று பாடி இறைவனை வணங்கினார். அனைத்து அடியார்களையும் வணங்கி அதன்பிறகு காப்பியம் வரைந்தார். அந்த காப்பியத்திற்கு "திருத்தொண்டத்தொகை" என்று பெயர் சூட்டினார். காப்பியம் நிறைவுற்றதை அறிந்த மன்னர் தில்லைக்கு வந்தார். ஒரு சித்திரைத் திங்கள் திருவாதிரை திருநாளில் அரங்கேற்றம் துவங்குவதாக நாள் குறிப்பிட்டார். பெருமான் காப்பியத்தை விளக்கிக்கூற ஆரம்பித்தார். அதை கேட்டறிந்த மக்கள் "அமுத மொழி" என்றும் "அற்புதமான காப்பியம்" என்றும் உளமார பாராட்டி புகழ்ந்தனர். இதில் (உலகம், உயிர், கடவுள்) என்ற மூன்றும், (அறம், பொருள், இன்பம், வீடு) என்ற நான்கும் (மலை, கடல், நாடு, மக்கள், வளம்) போன்றவற்றின் சிறப்புகள் நிறைய பெற்றமையால் பெரியபுராணம் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர். அநபாய சோழன் பெரியபுராணத்தை பச்சை பட்டில் சுற்றி, ஒரு தாங்க கலசத்தில் வைத்து, பெருமானையும், பெரிய புராணத்தையும் யானை மீது ஏற்றி தானும் யானை மீது ஏறி அமர்ந்து சேக்கிழார் பெருமானுக்கு வெண் சாமரம் வீசிய வண்ணம் அலங்கரிக்கப்பட்ட நகர வீதிகளில் வலம் வந்தார். மக்கள் அனைவரும் வரவேற்றனர். அநபாய மன்னன் "தொண்டர் சீர் பரவுவார்" என்ற பட்டத்தையும் சேக்கிழார் பெருமானுக்கு கொடுத்தார். இப் பெருமகனார் ஒரு வைகாசி பூசத் திருநாளில் இறைவனடி சேர்ந்தார். சேக்கிழார் பெருமானுக்கு அவர் வாழ்ந்த குன்றத்தூரில் ஆலயம் நிறுவி அன்பர்கள் வழிபடுகின்றனர்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்ப‌த்தை ஆயுத‌ங்க‌ளை ப‌ற்றி நூற்றுக்கு நூறு உங்க‌ளுக்கு தெரியுமா இல்லை தானே நான் ஒரு ஆய்வில் தெரிந்து கொண்டேன் இந்த வ‌ருட‌ம்.................. அதை ஈரானே வெளிப்ப‌டையா அறிவித்த‌து😏............................. அவ‌ங்க‌ யாழுக்கு அதிக‌ம் வ‌ராட்டியும் அத‌தூற‌ ப‌ரப்ப வ‌ருவ‌தில்லை......................... அவாக்கும் குடும்ப‌ம் பிள்ளைக‌ள் வேலைக‌ள் என்று அதிக‌ம் இருக்கு உங்க‌ளை மாதிரி யாழுக்கை 24ம‌ணித்தியால‌ம் கும்பி அடிக்க‌ முடியாது தான் அவவாள்😁..........................
    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.