Jump to content

யாழ் நகரப்பகுதியில் சற்றுமுன்னர் சுற்றிவளைக்கப்பட்டவீடு -சிக்கினர் இரண்டு பெண்கள்


Recommended Posts

யாழ்ப்பாணம் மாநகரப் பகுதியில் உள்ள வீடொன்றில் கலாசார சீரழிவு இடம்பெற்று வந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில் இன்று இரவு பொலிஸாரால் குறித்தவீடு சுற்றிவளைக்கப்பட்டு வெளிமாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் இருவர் பொலிஸாரால் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் மனோகரா தியேட்டருக்கு அண்மையாக உள்ள வீடொன்றிலேயே அண்மைக்காலமாக கலாசார சீரழிவு இடம்பெற்று வந்த நிலையில் அயலவர்களால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வீட்டை இன்று இரவு 7.45 மணியளவில் சுற்றிவளைத்த பொலிஸார், அங்கிருந்த வெளிமாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் இருவரையும் விசாரணைக்கு உள்படுத்தினர். அத்துடன் அங்கு விடுதி நடத்தி வந்தவரிடமும் பொலிஸார் விசாரணை நடத்துகின்றனர்.

இதன்போது அங்கிருந்தவர்கள் விசாரணைகளின் போது தொடர்ந்து முன்னுக்கு பின் முரணான தகவல்களை வழங்கியுள்ளனர்.

இதனால் இன்றைய தினம் இருவரையும் குறித்த வீட்டிலேயே தனிமைப்படுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாளைய தினம் அவர்களை தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்ப நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவாலும், திருத்த முடியாதவர்கள் – யாழில் இரு பெண்கள் – விடுதி நடத்துனர் தனிமைப்படுத்தப்பட்டனர்…

April 25, 2020

Roundup-2-800x600.jpg

யாழ்ப்பாணம் மாநகரப் பகுதியில் உள்ள வீடொன்றில் தகாத நடவடிக்கைகள் இடம்பெற்று வந்த நிலையில் இன்று இரவு காவற்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்டு வெளிமாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் இருவர் காவற்துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

பின்னர் அங்கிருந்த இரு பெண்களையும் ஆண் ஒருவரையும் அந்த வீட்டிலையே தனிமைப்படுத்த காவற்துறையினர் மற்றும் பொதுசுகாதார பரிசோதகர்கள்  நடவடிக்கை எடுத்தனர்.

யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் மனோகரா தியேட்டருக்கு அண்மையாக உள்ள வீடொன்றிலேயே அண்மைக்காலமாக தகாத நடவடிக்கைகள்  இடம்பெற்று வந்த நிலையில் அயலவர்களால் காவற்துறையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Roundup3-800x600.jpg

அந்த வீட்டை இன்று இரவு 7.45 மணியளவில் சுற்றிவளைத்த காவற்துறையினர், அங்கிருந்த வெளிமாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் இருவரையும் விசாரணைக்கு உள்படுத்தினார். அத்துடன் அங்கு விடுதி நடத்தி வந்தவரையும் காவற்துறையினர் விசாரணை நடத்தினர். அதன்போது அங்கிருந்தவர்கள் விசாரணைகளின் போது தொடர்ந்து முன்னுக்கு பின் முராண தகவல்களை வழங்கியுள்ளனர்.

இதனால் இன்றைய தினம் இருவரும் குறித்த வீட்டிலையே தனிமைப்படுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் அவர்களை தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்ப நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

Roundup1-800x600.jpg

 

http://globaltamilnews.net/2020/141566/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Rajesh said:

இதனால் இன்றைய தினம் இருவரையும் குறித்த வீட்டிலேயே தனிமைப்படுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாளைய தினம் அவர்களை தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்ப நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த இரு பெண்களை மட்டும்,  தனிமைப் படுத்தினால்... போதாது.
அங்கு வந்து சென்ற... ஆண்  வாடிக்கையாளர்களையும், 
தேடிப்  பிடித்து... தனிமைப் படுத்த வேண்டும்.

Link to comment
Share on other sites

5 hours ago, தமிழ் சிறி said:

ஆண்  வாடிக்கையாளர்களையும், தேடிப்  பிடித்து... தனிமைப் படுத்த வேண்டும்.

அவர்கள் குடும்பம் என்ன பாவம் செய்தார்களோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Rajesh said:

அவர்கள் குடும்பம் என்ன பாவம் செய்தார்களோ?

யாராவது இத்தகைய பெண்களின் கவலைகள் குறித்து அக்கறை பட்டுள்ளார்களா?

சமூக விலகியிருத்தல் காரணமாக தமது வருமானம் அடியோடு இல்லாமல் போய் விட்டதாகவும், தமது 'சேவை' சட்ட விரோதமானது அல்ல என்றும், (இவர்களுக்கு ஆள் பிடித்துக் கொடுக்கும் மாமா வேலை தான் சட்ட விரோதமானது) தமக்கும் அரச உதவி வேண்டும் என்றும் இவர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

நெதர்லாந்து போன்ற நாடுகளில், இவர்களது தொழில், ஒழுங்கு பட்டிருப்பதால் அங்கே அவர்களுக்கு அரச உதவி கிடைக்கிறது.

பிரிட்டனிலும் இந்த கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில், யாழில் இந்த வகை பெண்கள், ரிவேர்ஸ் வேலை செய்வதாக தெரிகிறது.

அதாவது, முன்பு கடன் சொல்லி சேவை பெற்ற வாடிக்கையாளர்களை போன்று, இப்போது பண உதவி தேவை.... சேவை பிறகு பெறலாம் என்று வழக்கமான வாடிக்கையாளர்களை கோருகிறார்களாம்.

அவர்களது நிலை எமக்கு சிரிப்பாக இருக்கலாம். ஆனாலும் அனுதாபத்துடன் பார்க்கப்படவேண்டியது. அவர்களுக்கும் வயிறும், குழந்தைகளும் உண்டு. 

6 hours ago, தமிழ் சிறி said:

இந்த இரு பெண்களை மட்டும்,  தனிமைப் படுத்தினால்... போதாது.
அங்கு வந்து சென்ற... ஆண்  வாடிக்கையாளர்களையும், 
தேடிப்  பிடித்து... தனிமைப் படுத்த வேண்டும்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, Nathamuni said:

யாராவது இத்தகைய பெண்களின் கவலைகள் குறித்து அக்கறை பட்டுள்ளார்களா?

சமூக விலகியிருத்தல் காரணமாக தமது வருமானம் அடியோடு இல்லாமல் போய் விட்டதாகவும், தமது 'சேவை' சட்ட விரோதமானது அல்ல என்றும், (இவர்களுக்கு ஆள் பிடித்துக் கொடுக்கும் மாமா வேலை தான் சட்ட விரோதமானது) தமக்கும் அரச உதவி வேண்டும் என்றும் இவர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

நெதர்லாந்து போன்ற நாடுகளில், இவர்களது தொழில், ஒழுங்கு பட்டிருப்பதால் அங்கே அவர்களுக்கு அரச உதவி கிடைக்கிறது.

பிரிட்டனிலும் இந்த கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில், யாழில் இந்த வகை பெண்கள், ரிவேர்ஸ் வேலை செய்வதாக தெரிகிறது.

அதாவது, முன்பு கடன் சொல்லி சேவை பெற்ற வாடிக்கையாளர்களை போன்று, இப்போது பண உதவி தேவை.... சேவை பிறகு பெறலாம் என்று வழக்கமான வாடிக்கையாளர்களை கோருகிறார்களாம்.

அவர்களது நிலை எமக்கு சிரிப்பாக இருக்கலாம். ஆனாலும் அனுதாபத்துடன் பார்க்கப்படவேண்டியது. அவர்களுக்கும் வயிறும், குழந்தைகளும் உண்டு. 

நாதமுனி... நீங்கள் சொல்வது மனிதாபிமான செயலாக இருந்தாலும்,
தமிழகம், இலங்கை போன்ற நாடுககளில்.... விபச்சாரம்  தடை செய்யப் பட்டது  என நினைக்கின்றேன்.

அப்படியிருக்க.... சட்ட பூர்வமான ரீதியில்,  அரசு உதவ முன்வராது என எண்ணுகின்றேன்.
தனிப்பட்ட அமைப்புகள் தான்... அவர்களுக்கு உதவ வேண்டும். 

Link to comment
Share on other sites

1 hour ago, Nathamuni said:

யாராவது இத்தகைய பெண்களின் கவலைகள் குறித்து அக்கறை பட்டுள்ளார்களா?

பெண், ஆண் இருவரும் யோசிச்சா தான் இவர்கள் கரைசேர முடியும். 

பெற்றோர், பெரியவங்க சொல் கேளாத பெண்கள் தான் கூடுதலா மோசமான ஆண்களால் வஞ்சிக்கப்பட்டு இப்பிடியான தொழிலுக்கு போகிறார்கள். 

அதோட பேராசை பிடிச்ச பெண்களும் பணத்தாசை பிடிச்சு இப்பிடியான தொழிலுக்கு போகிறார்கள். 

ஆக, இந்த நிலை மாற சொல்வழிகேளாத பெண்கள் திருந்தோனும், மோசமான ஆண்கள் திருந்தோனும், பேராசை பிடிச்ச பெண்கள் திருந்தோனும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Kali said:

பெற்றோர், பெரியவங்க சொல் கேளாத பெண்கள் தான் கூடுதலா மோசமான ஆண்களால் வஞ்சிக்கப்பட்டு இப்பிடியான தொழிலுக்கு போகிறார்கள். 

அதோட பேராசை பிடிச்ச பெண்களும் பணத்தாசை பிடிச்சு இப்பிடியான தொழிலுக்கு போகிறார்கள். 

ஆக, இந்த நிலை மாற சொல்வழிகேளாத பெண்கள் திருந்தோனும், மோசமான ஆண்கள் திருந்தோனும், பேராசை பிடிச்ச பெண்கள் திருந்தோனும். 

மிக தவறான புரிதல்.

Link to comment
Share on other sites

1 minute ago, Nathamuni said:

மிக தவறான புரிதல்.

அப்ப சரியா சொல்லுங்கோ பாப்பம் 

Link to comment
Share on other sites

23 minutes ago, Nathamuni said:

மிக தவறான புரிதல்.

 

21 minutes ago, Kali said:

அப்ப சரியா சொல்லுங்கோ பாப்பம் 

பேராசை பிடித்து மற்றவரகளை ஏமாற்றிப் பிழைக்கும் மோசடிப் பேர்வளிகளை விட, சோம்பேறித்தனமாக ஊர் சுற்றிவிட்டு வெளிநாட்டு பணத்தை எதிர்பார்தது வாழக்கை நடத்துபவர்களை விட, மக்களை ஏமாற்றி அரசியல் நடத்தும் இலங்கை அரசியல்வாதிகளை விட இந்த பெண்கள் செய்யும் தொழில் மேலானது என்பது எனது கருத்து.  அடுத்தவனை ஏமாற்றி அடுத்தவன் பொருளில் ஆசைப்படும்   கேடு கெட்டவர்களை விட தனக்கு சொந்தமான உடலை வருத்தி வருமானம் ஈட்டும் இவர்கள் எந்த வகையிலும் தவறானவர்கள் அல்ல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, tulpen said:

 

பேராசை பிடித்து மற்றவரகளை ஏமாற்றிப் பிழைக்கும் மோசடிப் பேர்வளிகளை விட, சோம்பேறித்தனமாக ஊர் சுற்றிவிட்டு வெளிநாட்டு பணத்தை எதிர்பார்தது வாழக்கை நடத்துபவர்களை விட, மக்களை ஏமாற்றி அரசியல் நடத்தும் இலங்கை அரசியல்வாதிகளை விட இந்த பெண்கள் செய்யும் தொழில் மேலானது என்பது எனது கருத்து.  அடுத்தவனை ஏமாற்றி அடுத்தவன் பொருளில் ஆசைப்படும்   கேடு கெட்டவர்களை விட தனக்கு சொந்தமான உடலை வருத்தி வருமானம் ஈட்டும் இவர்கள் எந்த வகையிலும் தவறானவர்கள் அல்ல. 

விபச்சாரம் சரி என்றால் நாளை அதனால் ஏற்படும் நோய்களுக்கும் உபாதைகளுக்கும் இந்த பெண்களை மீண்டும் குற்றம் சொல்வீர்களா (உதாரணம் எயிட்ஸ்) பரவினால் 

Link to comment
Share on other sites

22 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

விபச்சாரம் சரி என்றால் நாளை அதனால் ஏற்படும் நோய்களுக்கும் உபாதைகளுக்கும் இந்த பெண்களை மீண்டும் குற்றம் சொல்வீர்களா (உதாரணம் எயிட்ஸ்) பரவினால் 

தனி நான் என்ன கூறியுள்ளேன்  என்று மீண்டும் வாசியுங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

தனக்கு சொந்தமான உடலை வருத்தி வருமானம் ஈட்டும் இவர்கள் எந்த வகையிலும் தவறானவர்கள் அல்ல. 

இதை சொல்ல வருகிறீர்களா?  அல்லது குற்றம் சாட்டப்பட்டிருக்கும்   அனைத்து தரப்பினரையும் சொல்ல வருகிறீர்களா?

Link to comment
Share on other sites

5 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இதை சொல்ல வருகிறீர்களா?  அல்லது குற்றம் சாட்டப்பட்டிருக்கும்   அனைத்து தரப்பினரையும் சொல்ல வருகிறீர்களா?

நான் கூறிய விடயத்தில் ஒரு பகுதியை மட்டும் தான் வாசிப்பீர்களா தனி. ஒரு வசனத்தின் அர்த்தம்  என்பது அந்த வசனத்தை முழுமையாக வாசித்து விளங்கும் போது தான் தெளிவாகும். அதில் ஒரு பகுதியை  மாத்திரம் கட் பண்ணினால்  அர்த்தமே மாறிவிடும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

நாதமுனி... நீங்கள் சொல்வது மனிதாபிமான செயலாக இருந்தாலும்,
தமிழகம், இலங்கை போன்ற நாடுககளில்.... விபச்சாரம்  தடை செய்யப் பட்டது  என நினைக்கின்றேன்.

அப்படியிருக்க.... சட்ட பூர்வமான ரீதியில்,  அரசு உதவ முன்வராது என எண்ணுகின்றேன்.
தனிப்பட்ட அமைப்புகள் தான்... அவர்களுக்கு உதவ வேண்டும். 

மனிதாபிமான அடிப்படையில் உதவி புரிய முன்வந்தால், உங்கள் வீட்டில் முதல் பிரச்னை வெடிக்கும்....சமூகத்திலும் அவப் பெயர் உண்டாகும். 😜

இதனால் தான் அவர்கள் சங்கம் அமைத்து கோரிக்கை வைக்கிறார்கள்.

இவர்களுக்கான உதவிகளை ஒரு அரசே நடாத்த முடியும்.

இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் இந்த தொழிலை ஒழுங்கு படுத்தினால் தான், அவர்களும், அவர்களது வாடிக்கையாளர்களும் பாலியல் நோய்களிலிருந்து தப்பமுடியும்.

மிக முக்கியமாக, சிறுவர்களும், பெண்களும் பாலியல் வக்கிரம் பிடித்தவர்களிடம் இருந்து தப்பிக்க முடியும்.

மேலை நாடுகளில், சிறுவர்கள் பாதுகாப்பாக இருப்பதின் முக்கிய காரணமே, இந்த தொழில் அனுமதிக்க பட்டு இருப்பதனால் தான்.

இந்த வகையில் சிந்தித்து செயல் படாமல், இந்தியாவின் டெல்லி நகரம் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாதது என்று உலகம் முழுக்க சொல்ல வைத்து விட்டார்கள்.

இந்த நிலை தெலுங்கானா மாநிலம் வரை வந்து விட்டதே நிதர்சனம்.

6 hours ago, Kali said:

அப்ப சரியா சொல்லுங்கோ பாப்பம் 

மன்னிக்க வேண்டும்.... உங்கள் பதிவினை பார்க்கும் போது... உங்களுக்கு புரியக்கூடியவாறு சொல்லமுடியும் என்று நினைக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Nathamuni said:

யாராவது இத்தகைய பெண்களின் கவலைகள் குறித்து அக்கறை பட்டுள்ளார்களா?

அக்கறை பட மாட்டோமே அவர்களை கேலி செய்து சிரிக்க தான்  எங்களுக்கு விருப்பம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

மனிதாபிமான அடிப்படையில் உதவி புரிய முன்வந்தால், உங்கள் வீட்டில் முதல் பிரச்னை வெடிக்கும்....சமூகத்திலும் அவப் பெயர் உண்டாகும். 😜

இதனால் தான் அவர்கள் சங்கம் அமைத்து கோரிக்கை வைக்கிறார்கள்.

இவர்களுக்கான உதவிகளை ஒரு அரசே நடாத்த முடியும்.

இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் இந்த தொழிலை ஒழுங்கு படுத்தினால் தான், அவர்களும், அவர்களது வாடிக்கையாளர்களும் பாலியல் நோய்களிலிருந்து தப்பமுடியும்.

மிக முக்கியமாக, சிறுவர்களும், பெண்களும் பாலியல் வக்கிரம் பிடித்தவர்களிடம் இருந்து தப்பிக்க முடியும்.

மேலை நாடுகளில், சிறுவர்கள் பாதுகாப்பாக இருப்பதின் முக்கிய காரணமே, இந்த தொழில் அனுமதிக்க பட்டு இருப்பதனால் தான்.

இந்த வகையில் சிந்தித்து செயல் படாமல், இந்தியாவின் டெல்லி நகரம் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாதது என்று உலகம் முழுக்க சொல்ல வைத்து விட்டார்கள்.

இந்த நிலை தெலுங்கானா மாநிலம் வரை வந்து விட்டதே நிதர்சனம்.

 

இலங்கையில் இவர்கள் தொழிலை அங்கிகரித்து சட்டம் கொண்டுவாந்தால்தான் இவர்களுக்கும் மற்றவர்களுக்கு விமோசனம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

இந்த இரு பெண்களை மட்டும்,  தனிமைப் படுத்தினால்... போதாது.
அங்கு வந்து சென்ற... ஆண்  வாடிக்கையாளர்களையும், 
தேடிப்  பிடித்து... தனிமைப் படுத்த வேண்டும்.

ஆம் உங்கள் கோரிக்கை ஆராயப்பட்டது.
ஆனாலும் இங்கு வந்து போனவர்கள் தொகை கூடுதல் என்பதால் இப்போது அவர்களை வைத்து பராமரிக்க முடியாமைக்கு வருந்துகிறோம்.

7 hours ago, Kali said:

பெண், ஆண் இருவரும் யோசிச்சா தான் இவர்கள் கரைசேர முடியும். 

பெற்றோர், பெரியவங்க சொல் கேளாத பெண்கள் தான் கூடுதலா மோசமான ஆண்களால் வஞ்சிக்கப்பட்டு இப்பிடியான தொழிலுக்கு போகிறார்கள். 

அதோட பேராசை பிடிச்ச பெண்களும் பணத்தாசை பிடிச்சு இப்பிடியான தொழிலுக்கு போகிறார்கள். 

ஆக, இந்த நிலை மாற சொல்வழிகேளாத பெண்கள் திருந்தோனும், மோசமான ஆண்கள் திருந்தோனும், பேராசை பிடிச்ச பெண்கள் திருந்தோனும். 

அரசர் காலத்தில் தொடங்கி இரண்டாம் உலக யுத்தத்தின் போது புதிப்பித்து உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கும் வியாபாரத்தை நிற்பாட்டவே முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, tulpen said:

நான் கூறிய விடயத்தில் ஒரு பகுதியை மட்டும் தான் வாசிப்பீர்களா தனி. ஒரு வசனத்தின் அர்த்தம்  என்பது அந்த வசனத்தை முழுமையாக வாசித்து விளங்கும் போது தான் தெளிவாகும். அதில் ஒரு பகுதியை  மாத்திரம் கட் பண்ணினால்  அர்த்தமே மாறிவிடும். 

ஆரம்பத்தில் நீங்கள் எழுதியதை நீங்களும் வாசியுங்கள் நீங்கள் எதை நினைத்து எழுதினிர்களோ தெரியாது 

உடலை வருத்தி பல தொழில்கள் செய்யலாம் அதற்கு இது மட்டும் செய்வதென்பது என்ன கருத்து எனக்கென்னமோ ஊக்குவிக்கிறமாதிரி இருக்கு உங்க கருத்து 

கஸ்ரப்படாமல் உழைக்க வழி சொல்லுறது போலவும் இருக்கு 

பல பெண்கள் கிழக்கில் ஆற்றுக்கு போவார்கள் , பயிர் செய்வார்கள் , இடியப்பம் , அப்பம் , பல தொழில் செய்வார்கள் பல பேர் கணவனை இழந்த பெண்கள் கடைகளுக்கு மிக்சர், சீவல் (மரவள்ளி)  இப்படியும் பெண்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் 

 

Link to comment
Share on other sites

2 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஆரம்பத்தில் நீங்கள் எழுதியதை நீங்களும் வாசியுங்கள் நீங்கள் எதை நினைத்து எழுதினிர்களோ தெரியாது 

உடலை வருத்தி பல தொழில்கள் செய்யலாம் அதற்கு இது மட்டும் செய்வதென்பது என்ன கருத்து எனக்கென்னமோ ஊக்குவிக்கிறமாதிரி இருக்கு உங்க கருத்து 

கஸ்ரப்படாமல் உழைக்க வழி சொல்லுறது போலவும் இருக்கு 

பல பெண்கள் கிழக்கில் ஆற்றுக்கு போவார்கள் , பயிர் செய்வார்கள் , இடியப்பம் , அப்பம் , பல தொழில் செய்வார்கள் பல பேர் கணவனை இழந்த பெண்கள் கடைகளுக்கு மிக்சர், சீவல் (மரவள்ளி)  இப்படியும் பெண்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் 

 

தனி நான் எழுதிய வசனத்தின் என்ன கருத்து சொல்லபட்டிருக்கிறது என்பதை நீங்கள் இன்னும் சரியாக விளங்கி கொள்ளவில்லை என்பது உங்கள் கருத்தில் தெரிகிறது. நான் கூறியது

  1. அடுத்தவனை ஏமாற்றி அவனது பணத்தை திருடுவது  நாட்டில் நடக்கிறது. 
  2. அடுத்தவன் பொருளை திருடுவது நாட்டில் நடக்கிறது. 
  3. உழைக்காமால் சோம்பேறியாக ஊர்சுற்றி திரிந்து விட்டு வெளி நாடுகளில் வாழும் தமது குடும்ப            உறுப்பினர் பணத்தில் வாழ்வது நாட்டில் நடக்கிறது.
  4. இதை விட பெண்கள் மீதும் பெண் பிள்ளைகள் மீதும் பாலியல் வக்கிரம் நாட்டில் நடக்கிறது.
  5.   வன்ம பகை காரணமாக  சக மனிதனை கொலை செய்வது நாட்டில் நடக்கிறது.
  6. மக்களை ஏமாற்றி சுயநல அரசியல் செய்யும் கலாச்சாரம் நாட்டில் நடக்கிறது. 

இந்த குற்றங்களோடு ஒப்பிடும் போது அந்த பெண்கள் செய்யும் குற்றம் சிறிய குற்றமே.

 வன்ம பகைக்காக கொலை செய்வது கலாசார சீரளிவு இல்லையா? உழைக்காமல் ஊர் சுற்றுவது கலாசார சீரளிவு இல்லையா? அடுத்தனவனை ஏமாற்றுவது கலாசார சீரளிவு இல்லையா?  அதை போல் ஒன்று தான் இதுவும். அவர்களை ஊக்குவிப்பதாக என்னை சொல்லுகின்றீர்கள். சங்க காலத்தில் இருந்து நடக்க்கும் இந்த விபச்சாரத்தை ஊக்கிவிப்பர்கள் அந்த நாட்டில் வாழும் ஆண்களே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, tulpen said:

இந்த குற்றங்களோடு ஒப்பிடும் போது அந்த பெண்கள் செய்யும் குற்றம் சிறிய குற்றமே.

நான் கேட்டதற்கும் நீங்கள் பதில் சொல்லவில்லை வாசித்துகொள்ளுங்கள் என்று சொல்கிறீர்கள் குற்றத்தில் எது சின்ன குற்றம் பெரிய குற்றம் நாளடைவில் இந்த ரெண்டை போல இன்னும் பலர் தொழில் தொடங்கினால் என்ன ஆகும்  பின்னர் பாலியல் சார்ந்த நோய்கள் உண்டாகும்அது பலருக்கு பிறக்கும் சந்ததிக்கும் வரலாம் அல்லவா  

இந்த நாட்டில் மட்டும் அல்ல எல்லாநாடுகளில்  பாலியல் தொழில் நடைபெறுகிறது அதற்கெல்லாம் ஆண்கள் மட்டுமா காரணம் பெண்களூம் தானே?

 

 

Link to comment
Share on other sites

1 minute ago, தனிக்காட்டு ராஜா said:

நான் கேட்டதற்கும் நீங்கள் பதில் சொல்லவில்லை வாசித்துகொள்ளுங்கள் என்று சொல்கிறீர்கள் குற்றத்தில் எது சின்ன குற்றம் பெரிய குற்றம் நாளடைவில் இந்த ரெண்டை போல இன்னும் பலர் தொழில் தொடங்கினால் என்ன ஆகும்  பின்னர் பாலியல் சார்ந்த நோய்கள் உண்டாகும்அது பலருக்கு பிறக்கும் சந்ததிக்கும் வரலாம் அல்லவா  

இந்த நாட்டில் மட்டும் அல்ல எல்லாநாடுகளில்  பாலியல் தொழில் நடைபெறுகிறது அதற்கெல்லாம் ஆண்கள் மட்டுமா காரணம் பெண்களூம் தானே?

 

 

தனி நான் அதை சரி என்று வாதாடவில்லை. குற்றங்களில் பெரிய குற்றம் சிறிய குற்றம் என்று இருப்பதாக நான் மட்டும் கூறவில்லை. உலகமே அதை ஏற்றுக்கொண்டுள்ளது. தன்னை விற்று பிழைப்பது இயலாமை. அடுத்தவனை விற்று பிளைப்பது பெரிய குற்றம்.

வாடிக்கையாளரான ஆண்கள் இல்லை என்றால் தொழில் நடைபெறாதே? பெண்களால் எதுவும் செய்ய முடியாதே? சிலப்பதிகாரத்தில்  கோவலன் மாதவியிடம் போகாமல் இருந்திருந்தால் மாதவி என்ற கதா பாத்திரமே இல்லாமல் இருந்திருக்குமே?  தவறு மாதவியிடமா கோவலனிடமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, tulpen said:

தனி நான் அதை சரி என்று வாதாடவில்லை. குற்றங்களில் பெரிய குற்றம் சிறிய குற்றம் என்று இருப்பதாக நான் மட்டும் கூறவில்லை. உலகமே அதை ஏற்றுக்கொண்டுள்ளது. தன்னை விற்று பிழைப்பது இயலாமை. அடுத்தவனை விற்று பிளைப்பது பெரிய குற்றம்.

வாடிக்கையாளரான ஆண்கள் இல்லை என்றால் தொழில் நடைபெறாதே? பெண்களால் எதுவும் செய்ய முடியாதே? சிலப்பதிகாரத்தில்  கோவலன் மாதவியிடம் போகாமல் இருந்திருந்தால் மாதவி என்ற கதா பாத்திரமே இல்லாமல் இருந்திருக்குமே?  தவறு மாதவியிடமா கோவலனிடமா?

சிலப்பதிகாரத்தை  விடுங்கள் அதெல்லாம் நடந்து முடிந்தது சொன்னாலும் சிலர் நம்பலாம் நம்பாமல் போகலாம் 

இங்கே பெண்களைத்தான் கைது பண்ணியிருக்கிறார்கள் அண்களை கைது பண்ணியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் கன ஆண்கள் பெரிய இடமாக இருக்கும் அது வெளியில் வராது 

Link to comment
Share on other sites

5 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

சிலப்பதிகாரத்தை  விடுங்கள் அதெல்லாம் நடந்து முடிந்தது சொன்னாலும் சிலர் நம்பலாம் நம்பாமல் போகலாம் 

இங்கே பெண்களைத்தான் கைது பண்ணியிருக்கிறார்கள் அண்களை கைது பண்ணியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் கன ஆண்கள் பெரிய இடமாக இருக்கும் அது வெளியில் வராது 

நிச்சயமாக. அந்த ஆண்கள் பெரிய இடமாக இருப்பது மட்டும் அல்ல இதை விட பெரிய குற்றங்களை நடைமுறை வாழ்வில் செய்பவர்களாக இருக்கும். அந்த பெரிய குற்றங்களுக்குகாக அவர்களை கைது செய்திருந்தால் இந்த தவறை அவர்கள் செய்ய வாய்ப்பு குறைவாக இருக்கும். இறுதியாக நான் கூறவந்த விடயம் இந்த பெண்கள் செய்த்தை விட பாரிய குற்றங்கள் நாட்டில் நடக்கின்றன என்பதை தான். அது எல்லாம் கலாச்சார சீரழிவு இல்லை என்றால் இதுவும் கலாசார சீரழிவு இல்லை.

Link to comment
Share on other sites

 

பெண்கள், ஆண்கள்
1. தங்களை தாங்களே மதிக்க கற்று கொடுங்கள்
2. காதலையும் அன்பயும் கற்று கொடுங்கள்
3. உறவு முறைகளின் பெருமைகளை கற்று கொடுங்கள் (அம்மா, அப்பா, அக்கா, தங்கச்சி, அண்ணா, etc.)
4. ...

பெண்கள்
இதுக்குமிஞ்சிநடந்தா, அவமதிக்காமல், அவர்களின் துயரங்கள், கவலைகள், ஆசைகளை கேளுங்கள் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.