Jump to content

நெல்லிக்காய் சொதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நெல்லிக்காய் சொதி

20200426-112350.jpg

 

பிள்ளைகள் நெல்லிக்காய் புளிக்கிறதென்று சாப்பிடுவது குறைவு அல்ல சாப்பிடவே மாட்டார்கள். அதனால் சொதி அல்லது சம்பல் சொய்து கொடுப்பது வழக்கம், நேற்று இடியப்பத்துட்டன் அருநொல்லி சொதியும் மனைவி செய்தார், சந்தோஷமாக சுவைத்து சாப்பிட்டார்கள்.

வழமையாக பால்சொதி வைப்பதுபோல் நெல்லிக்காய் சேருங்கள் அவ்வளவுதான்.

 

சொதி செய்முறை தேவையெனில் - சுட்டது

 

நெல்லிக்காய் சொதி


தேவையான பொருட்கள் : நெல்லிக்காய் - 1 கப், தேங்காய் - 1 மூடி, பச்சைமிளகாய் - 7, பெரிய வெங்காயம் - 1, மஞ்சள் பொடி - 1/4டீஸ்பூன், உப்பு - சுவைக்கேற்ப, கிராம்பு - 2, பட்டை - 1, இஞ்சித் துண்டு, எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை : நெல்லிக்காயைக் கழுவி, கொட்டை நீக்கி, நான்கு துண்டுகளாக நறுக்கவும். தேங்காயைத் துருவி, மிக்ஸியில் அரைத்து, முதல் பால், இரண்டாம் பாலை எடுத்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, பட்டை, கிராம்பு தாளிக்கவும். நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதக்கி, நெல்லிக்காயையும் சேர்த்து வதக்கவும். பின், அத்துடன் இரண்டாவது தேங்காய் பாலை ஊற்றி, உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வேகவிடவும். நெல்லிக்காய் வெந்ததும், முதல் பாலை விட்டுக் கொதி வந்ததும் இறக்கி விடவும். பரிமாறினால், அசத்தலாக இருக்கும்.

 

https://eegarai.darkbb.com/t83474-topic

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுசில் இருப்பவர்கள் அதிஸ்டசாலிகள் .சொந்த தோட்டம் ...நினைத்த நேரத்தில் விரும்பியதை சமைக்கலாம் ...அரி நெல்லியை நினைக்க வாய் கூசுது 😋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ரதி said:

அவுசில் இருப்பவர்கள் அதிஸ்டசாலிகள் .சொந்த தோட்டம் ...நினைத்த நேரத்தில் விரும்பியதை சமைக்கலாம் ...அரி நெல்லியை நினைக்க வாய் கூசுது 😋

கோதாரி பிடிச்ச, பத்து வகை கொடிய விச பாம்புகளும் அங்கை தான் இருக்குது... 🙄

அது சரி, உடையார் நெல்லி கடையில் வேண்டினாரோ, அல்லது வளவுக்குள் மரம் வளர்த்து பிடுங்கினாரோ எண்டு சொல்லவில்லையே 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

கோதாரி பிடிச்ச, பத்து வகை கொடிய விச பாம்புகளும் அங்கை தான் இருக்குது... 🙄

அது சரி, உடையார் நெல்லி கடையில் வேண்டினாரோ, அல்லது வளவுக்குள் மரம் வளர்த்து பிடுங்கினாரோ எண்டு சொல்லவில்லையே 🤔

மேலே உள்ள படம் என் வீட்டு தோட்டம்,  இரண்டு நெல்லி மரங்கள் வளர்கின்றேன் மகரத்த சேர்க்கைகாக.  முத்தின காய்களாக பார்த்து நேற்று பிடுங்கி சொதி வைத்தோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெல்லிக்காய் சொதி, இலங்கையில் சாப்பிட்டு இருக்கின்றேன். 
உடையார்... இந்த மரங்களை, அவுஸ்திரேலியாவில் வாங்கலாமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வயித்தெரிச்சலைக் கிளப்புகிறீர்களே உடையார். 😀 நெல்லியும் உங்கள் வீட்டதுதானே. உந்த மரங்களை பார்த்து எனக்கும் ஒஸ்ரேலியா வந்திருக்கவேணும் போல கிடக்கு 

Link to comment
Share on other sites

அவுஸ்ரேலியாவில்  இருப்பவர்களை நினைத்து பொறாமையாக இருக்கிறது.சொதியை  பார்க்க  நாவில்

நீர் ஊறுகிறது ....

ஈழத் தமிழர்களின் பாரம்பரிய முட்டை மிளகு சொதி /SRI LANKAN EGG SODHI

 

இதை பார்த்து எப்படி என்று சொல்லுங்கள் ,

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/4/2020 at 03:23, உடையார் said:

வழமையாக பால்சொதி வைப்பதுபோல் நெல்லிக்காய் சேருங்கள் அவ்வளவுதான்.

உடையார் நெல்லிக்காய் தின்றே எத்தனையோ வருடமாச்சு.
அப்புறம் எப்படி சொதி?
கடுப்பு ஏத்துறதுக்கென்றே இணைத்த மாதிரி இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/4/2020 at 21:28, தமிழ் சிறி said:

நெல்லிக்காய் சொதி, இலங்கையில் சாப்பிட்டு இருக்கின்றேன். 
உடையார்... இந்த மரங்களை, அவுஸ்திரேலியாவில் வாங்கலாமா?

ஆமாம் சிறி இங்கு எல்லோரிடமும் வாங்க ஏலாது, ஒரு சீனாக்காரன்  வீட்டில் வங்கினேன்

https://www.gumtree.com.au/s-ad/leeming/plants/unusual-tropical-fruit-trees-and-plants-for-sale-from-20/1194076512

 

 

10 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வயித்தெரிச்சலைக் கிளப்புகிறீர்களே உடையார். 😀 நெல்லியும் உங்கள் வீட்டதுதானே. உந்த மரங்களை பார்த்து எனக்கும் ஒஸ்ரேலியா வந்திருக்கவேணும் போல கிடக்கு 

வருவதற்கு தடையில்லை 😃, இவரிடம் பல மரங்கள் வாங்கி நட்டு வைத்திருக்கிறேன் (வேம்பு, கொய்யா, மலேசியன் கொய்யா, மலேசியன் ஐம்புக்காய் (இன்னும் காய்க்கவில்லை😪), ...........  மரங்கள் வளர்ப்பதற்கு நல்ல இடம்

6 minutes ago, ஈழப்பிரியன் said:

உடையார் நெல்லிக்காய் தின்றே எத்தனையோ வருடமாச்சு.
அப்புறம் எப்படி சொதி?
கடுப்பு ஏத்துறதுக்கென்றே இணைத்த மாதிரி இருக்கு.

😃 அப்படியில்லை ஈழப்பிரியன், சொதி நல்ல சுவை இடியப்பத்துடன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Thamarai.k said:

அவுஸ்ரேலியாவில்  இருப்பவர்களை நினைத்து பொறாமையாக இருக்கிறது.சொதியை  பார்க்க  நாவில்

நீர் ஊறுகிறது ....

ஈழத் தமிழர்களின் பாரம்பரிய முட்டை மிளகு சொதி /SRI LANKAN EGG SODHI

 

இதை பார்த்து எப்படி என்று சொல்லுங்கள் ,

 

அடுத்த முறை இடியப்பதுடன் செய்து பார்ப்போம், நன்றி பகிர்வுக்கு தாமரை. Frozen நெல்லிகாய் வாங்கியும் செய்யலாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

ஆமாம் சிறி இங்கு எல்லோரிடமும் வாங்க ஏலாது, ஒரு சீனாக்காரன்  வீட்டில் வங்கினேன்

உடையார்... சீனாக்காரன் வீட்டுக்கு எல்லாம்,  கண்டபடி போய்... ஒன்றும் வாங்காதீர்கள். :grin:
இலவசமாக... கொரோனாவையும், தந்து விடுவான்.  🤣

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஆழ்ந்த அஞ்சலிகள். மத்திய கல்லூரியில் என் அப்பாவுக்கு சீனியர். எதிர் என ஆரம்பித்து இவரை பற்றி ஒரு அசகாய சூரனை போல கதைத்து கொண்டே இருப்பார் அப்பா. அதே போலத்தான் கந்தப்பு சொன்ன அதிபர் ஸ்மித்தை பற்றியும்.   
    • யார் சொன்னார் சீமான் மட்டும் தங்கம் என? சீமான் இன்னும் ஆட்சி செய்யவில்லையே? அவரவர் தாம் விரும்பும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை விரும்புகின்றனர். விஜய் கட்சி ஆரம்பிக்க முதலே நீங்கள் சீமான் எதிர்ப்பாளர் தானே? அது சரி விஜய் அரசியல் கட்சியின் கொள்கை என்ன? 🤣
    • ஓம் கருணாநிதி கூட ஒரு முறை சொன்னார் “நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்குத் தொல்லை” என. எப்போதும் ஏனைய தமிழ் நாட்டு தொகுதி முடிவுக்கு மாறாக போக அதிக வாய்ப்பு உள்ள தொகுதி கன்யாகுமரி. தவிர பொன்னாருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. ஆனால் வாலி சொல்லும் காரணங்களும் பலமானவையே. கடும் போட்டி இருக்கும் என நினைக்கிறேன். மாற்று உண்மையான மாற்றாக இருக்க வேண்டும்.  உங்களை போலவே மேலே உள்ள காரணங்களுக்காக நான் விஜையின் அரசியல் வரவை வரவேற்கிறேன்.
    • அப்படியாயின் மாற்று ஆட்சி ஒன்று வரட்டும். அது பாஜகாவை விட நாம் தமிழர் கட்சியாக இப்போதைக்கு இருக்கட்டும். அதை தமிழ்நாட்டு மக்கள்பரீட்சித்து பார்க்கட்டும். சரி இல்லையேல் அடுத்த நான்கு வருடத்தில் ஆட்சியை மாற்றட்டும். சந்ததி சந்ததியாக மற்ற கட்சிகளின் குறைபாடுகளை எதிர்வு கூறியே மீண்டும் மீண்டும் விட்ட தொட்ட பிழைகளை தொடராமல்....
    • எழுதுங்கள்…எதோ நான் பானுமதி, விஜி, பாத்திமாவோடு டீலில் இருந்தமாரி போகுது கதை🤣. நான் எப்போதும் சீமானை என்ன சொல்வேன்? சின்ன கருணாநிதி….. சின்ன கருணாநிதியே இவ்வளவு கேலவலமானவர் என எழுதும் எனக்கு பெரிய கருணாநிதி, எம்ஜிஆர், ஸ்டாலின், ஜெ., சசி, உதய் எல்லாரும் அதை ஒத்த கள்ளர்கள் என்பது தெரியாமலா இருக்கும். உங்களையும் சகாக்களையும் போல சீமான் மட்டும் தங்கம், ஏனையோர் பித்தளை என பசப்புபவன் நான் இல்லை. இவர்கள் எல்லாரும் ஒரே குட்டையில் நாறிய மட்டைகள் என்பது நான் 1ம் நாளில் இருந்து எழுதி வருவதே. பிகு நல்ல சுவாரசியமாக படத்தோடு எழுதுங்கள். சும்மா “சரோஜா தேவி” பலான கதைகள் போல தெறிக்க விடுங்கள்🤣.  ஆவலோடு காத்திருக்கிறேன்🤣 ஆருக்கு தெரியும். ஆம் என்கிறனர் விஜி. இல்லை என்கிறார் அண்ணன். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.