Jump to content

மீண்டும் 'வரனே அவஷ்யமுண்டு' சர்ச்சை: தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்ட துல்கர் சல்மான்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் 'வரனே அவஷ்யமுண்டு' சர்ச்சை: தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்ட துல்கர் சல்மான்

dulquer-salman-asks-sorry

 

வரனே அவஷ்யமுண்டு' படத்தில் நாய்க்கு பிரபாகரன் என்று பெயர் வைத்தது சர்ச்சையானதால், தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் துல்கர் சல்மான்.

அனூப் சத்யன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்து, தயாரித்த படம் 'வரனே அவஷ்யமுண்டு'. இந்த ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது. இதில் சுரேஷ் கோபி, ஷோபனா, துல்கர் சல்மான், கல்யாணி ப்ரியதர்ஷன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

 
 

இந்தப் படம் சில நாட்களுக்கு முன்புதான் டிஜிட்டலில் வெளியிடப்பட்டது. அப்போது பத்திரிகையாளர் ஒருவரின் புகைப்படம் தவறுதலாக இடம் பெற்றிருப்பது சர்ச்சையானதால் அவரிடம் மன்னிப்பு கோரினார் துல்கர் சல்மான். தற்போது, மீண்டும் 'வரனே அவஷ்யமுண்டு' படம் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

அந்தப் படத்தில் சுரேஷ் கோபி வளர்க்கும் நாய்க்கு பிரபாகரன் என்று பெயர் சூட்டிக் காட்சிப்படுத்தியது படக்குழு. இந்த காமெடிக் காட்சிகளை வைத்து இணையத்தில் தமிழ்ப் பயனர்கள் பலரும் 'வரனே அவஷ்யமுண்டு' படக்குழுவினரைக் கடுமையாகத் திட்டத் தொடங்கினார்கள். துல்கர் சல்மான் இதற்கு மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இறுதியாக இந்தச் சர்ச்சை தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார் துல்கர் சல்மான்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

" 'வரனே அவஷ்யமுண்டு' படத்தில் வரும் பிரபாகரன் ஜோக் தமிழ் மக்களை அவமதிக்கும் வகையில் இருப்பதாகச் சிலர் என் கவனத்துக்கு கொண்டு வந்தனர். அது உள்நோக்கத்துடன் வைக்கப்பட்டதல்ல. பழைய மலையாளப் படமான 'பட்டண பிரவேஷம்' படத்தில் வரும் நகைச்சுவை அது. கேரளாவில் அது பொதுவான ஒரு பெயர். எனவே, படத்தின் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல் யாரையும் குறிப்பிடுவது அல்ல.

இதற்கு எதிர்வினையாற்றும் பலரும் படத்தைப் பார்க்காமலேயே வெறுப்பைப் பரப்ப முயல்கின்றனர். என்னையே என்னுடைய இயக்குநர் அனூப்பையோ வெறுப்பதை ஏற்றுக்கொள்ள முடியும். இதை எங்கள் அளவில் வைத்துக் கொள்ளலாம். எங்கள் தந்தைகளையோ அல்லது மூத்த நடிகர்களையோ இதில் இழுக்க வேண்டாம்.

இதனால் காயப்பட்டதாக உணரும் அன்பான அனைத்துத் தமிழ் மக்களிடமும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என்னுடைய வார்த்தைகள் மூலமாகவோ படங்கள் மூலமாக யாரையும் காயப்படுத்த நினைத்ததில்லை. இது உண்மையில் ஒரு தவறான புரிதல்.

பின் குறிப்பு : உங்களில் சிலர் எங்களோடு சேர்த்து எங்கள் குடும்பத்தையும் வன்மத்துடன் திட்டி, மிரட்டி, அவமானப்படுத்தி வருகிறீர்கள். இது நடந்திருக்க வேண்டாம் என்று விரும்புகிறேன்".

இவ்வாறு துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.

மேலும், 'பட்டண பிரவேஷம்' காமெடிக் காட்சியையும் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார்.

 

To all those who were offended. I apologise. And I also apologise on behalf of #VaraneAvashyamund and @DQsWayfarerFilm !

View image on Twitter
 
 
 
 

 

 

To all those who were offended. I apologise. And I also apologise on behalf of #VaraneAvashyamund and @DQsWayfarerFilm ! This is the reference to the joke in question. The 1988 film “Pattana Pravesham”.

 
Embedded video
 
 
 
 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

`காயம்பட்ட அன்பான தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்!'-சர்ச்சை காட்சிக்கு துல்கர் சல்மான் விளக்கம்

துல்கர் சல்மான்

 

அப்போதே ஒரு சர்ச்சையில் சிக்கியது படம். பத்திரிகையாளர் ஒருவரின் புகைப்படம் தவறுதலாக படத்தில் இடம் பெற்றிருப்பது தெரியவர உடனே அவரிடம் மன்னிப்பு கோரினார் துல்கர் சல்மான்.

அனூப் சத்யன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்து, தயாரித்த மலையாள படம் 'வரனே அவஷ்யமுண்டு'. நீண்ட நாட்களுக்கு இந்தப் படத்தில்தான் மலையாள சினிமாவில் புகழ்பெற்ற நடிகர்களான சுரேஷ் கோபி, ஷோபனா ஆகியோர் நீண்ட காலங்களுக்குப் பிறகு சேர்ந்து நடித்திருந்தனர். அவர்களுடன் துல்கர் சல்மான், கல்யாணி ப்ரியதர்ஷன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பிப்ரவரி 7-ம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. OTTP பிளாட்பார்மில் சில நாட்களுக்கு முன்தான் இந்தப் படம் வெளியானது. அப்போதே ஒரு சர்ச்சையில் சிக்கியது படம். பத்திரிகையாளர் ஒருவரின் புகைப்படம் தவறுதலாக படத்தில் இடம் பெற்றிருப்பது தெரியவர உடனே அவரிடம் மன்னிப்பு கோரினார் துல்கர் சல்மான்.

துல்கர் சல்மான்
 
துல்கர் சல்மான்

தற்போது, மீண்டும் இந்தப் படம் சர்ச்சையில் சிக்கியுள்ளது. காமெடி காட்சிகளாக இந்தப் படத்தில் நாய் ஒன்றின் காட்சிகள் இருக்கும். சுரேஷ் கோபி வளர்க்கும் அந்த நாயை பிரபாகரன் என்று அழைக்கும் காட்சி இடம்பெற்றிருக்கும். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை இழிவுபடுத்துவது போல இந்தக் காட்சி அமைந்திருப்பதாக இந்தக் காட்சிகளை பார்த்த தமிழ் ரசிகர்கள் படக்குழு மீது கடுமையான விமர்சனங்கள் வைத்தனர். இதுதொடர்பாக துல்கர் சல்மான் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்

இந்நிலையில்தான் இந்தச் சர்ச்சை தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார் துல்கர் சல்மான். `` 'வரனே அவஷ்யமுண்டு' படத்தில் வரும் பிரபாகரன் ஜோக் தமிழ் மக்களை அவமதிக்கும் வகையில் இருப்பதாக என் கவனத்துக்கு வந்தது. எந்தவித உள்நோக்கத்துடனும் அந்தக் காட்சி எடுக்கப்பட்டது அல்ல. 'பட்டண பிரவேஷம்' என்ற பழைய மலையாளப் படத்தில் வரும் நகைச்சுவையே அது. கேரளாவில் அது பொதுவான ஒரு பெயர். இது கேரளாவில் மிகவும் பிரபலமான மீம். எனவே, ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல் யாரையும் குறிப்பிடுவது அல்ல.

விளக்கம்
 
விளக்கம்

இந்தப் படத்தைப் பார்க்காமல் பலர் இதற்கு எதிர்வினையாற்றுகிறார்கள். வெறுப்பை பரப்ப முயற்சிக்கிறார்கள். என்னை வெறுப்பதோ அல்லது என்னுடைய இயக்குநர் அனுப்பை வெறுப்பதையோ நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அதை எங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள். எங்களுடைய தந்தைகளை திட்டுவதோ அல்லது படத்தில் நடித்த மூத்த நடிகர்களைத் திட்டுவதோ வேண்டாம். அந்தக் காட்சியால் காயம்பட்ட நல்ல மற்றும் அன்பான தமிழ் மக்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய படத்தின் மூலமோ என்னுடைய வார்த்தைகளின் மூலமோ யார் குறித்தும் அவதூறு பரப்ப வேண்டும் என்று நான் ஒருபோதும் நினைத்தது இல்லை. இது தவறான புரிதலின் விளைவு'' எனக் கூறி 'பட்டண பிரவேஷம்' காமெடிக் காட்சியையும் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார்.

https://cinema.vikatan.com/tamil-cinema/dulquer-salmaan-apologises-once-again-varane-avashyamund-controversy

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, உடையார் said:

பிப்ரவரி 7-ம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. OTTP பிளாட்பார்மில் சில நாட்களுக்கு முன்தான் இந்தப் படம் வெளியானது

எனக்கென்னவோ  ஏதோ ஒரு ஐ.ரி விங் ரூம் போட்டு கோரோனோ சீசனுக்கு ஓவர் ரூற்றி செய்வது போல் தோன்றுகிறது.. 👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

எனக்கென்னவோ  ஏதோ ஒரு ஐ.ரி விங் ரூம் போட்டு கோரோனோ சீசனுக்கு ஓவர் ரூற்றி செய்வது போல் தோன்றுகிறது.. 👌

சரியாக சொன்னீர்கள் வேணுமென்றே பிரச்சனைகளை கிழப்பி, சில பாரிய பிரச்சனைகளை மறைக்க  பார்க்கின்றார்கள், கவனத்தை சிதற விடுகின்றார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாய் அரசியல்

எந்த மனிதர்களுடைய வீட்டை தான் நன்றியுடன் காத்துவருகிறேனோ, அந்த மனிதர்கள் தமக்குப் பிடிக்காதவர்களை வசை பாட பல முன்னொட்டுக்களுடன் தன்னைப் பயன்படுத்துகிறார்களென்பதை நாய் அறியாது. பெயர் குறித்த விருப்பத் தெரிவுகளும் அதற்கில்லை. ஆனால், எது இழிவு எது பெருமையெனத் தாம் கருதுகிறோமென்பதை மனிதர்கள் அறிவார்கள். ‘எளிய பூனையே’என்றோ, ‘கள்ள அணிலே’என்றோ நாம் யாரையும் வசைபாடுவதில்லை. நடிகர் துல்கர் சல்மானுக்குக்கூட தெரியும் ‘பட்டியிண்ட மோனே’என்றால் வசையா இல்லையா என்பது.

புலியெதிர்ப்பாளர்கள் ஒப்புக்கொள்ள மறுக்கும் உண்மையொன்றுண்டு. அது, கோடிக்கணக்கான மக்களின் பெருமதிப்பிற்கும் பேரன்புக்கும் உரியவர் தலைவர் பிரபாகரன் என்பது. வசைபாடத் தங்களால் பயன்படுத்தப்படும் (உண்மையில் நாய் பாவம்) ஒரு பிராணிக்கு பல கோடிப் பேரின் போற்றுதலுக்குரிய தலைவரது பெயரைச் சூட்டுவதானது திட்டமிட்ட புண்படுத்தல், சீண்டல், மேன்மையெனக் கருதுவதன் மீது காறியுமிழ்தல். அதன் பின் ஒரு வெள்ளந்தி மனம் உள்ளது, தற்செயல், பெருமைப்படுத்தல் என கூறப்படும் காரணங்களை சிறுபிள்ளைகூட நம்பாது. மேலும், துல்கரைப் பொறுத்தமட்டில், தலைவர் பிரபாகரனை விடவும் பெருமதிப்பிற்குரியவர்கள் இருப்பார்கள். உண்மையில் பெருமை செய்யவே நாய்க்கு அந்தப் பெயரை வைத்தாரென்றால், தன் தந்தையின் பெயரையே கூட அந்த நாய்க்கு வைத்திருக்கமுடியும்.

இலக்கியத்தில் எப்படி படைப்பிலுள்ள அரசியலைக் கழித்துவிட்டு, ‘கலையைக் கலையாக மட்டும் பாருங்கள்’என்று இங்கு சிலர் அங்கீகாரங்களின் நிமித்தம் பம்முகிறார்களோ, அதற்கிணையானதுதான் இந்தப் பெயரரசியலும். இந்திய அரசில் தலையாடுகளாக இருந்த மலையாள அதிகாரிகள், எவ்விதம் ஈழத்தமிழர்களது அழித்தொழிப்பிற்குத் துணைபோனார்கள், திட்டமிட்டுக் கருவறுத்தார்கள் என்பதை உலகம் அறியும். ஈழத்தமிழர்கள் மீதான வெறுப்பின் தொடர்ச்சியாகவே இந்தப் பெயர் சூட்டலையும் கருதவேண்டும். அல்லாமல், பெருமைப்படுத்தவே பெயர்வைத்தார்களென்பது நகைப்பிற்குரிய சப்பைக்கட்டல்.

இந்தப் பெயர் சூட்டலைச் சரியெனத் தாங்கிப் பிடிப்பவர்கள், தங்களது பிள்ளைகளுக்கு ‘பப்பி’, ‘சீசர்’, ‘ரைகர்’இன்னபிற பெயர்களைச் சூட்டச் சம்மதிப்பார்களா?என வினயமாக வினவுகிறேன். 1f609.png

Thamizhnathy Nathy

https://www.facebook.com/thamizhnathy?__tn__=%2CdC-R-R&eid=ARCLLQOg7OKEdOsvsOItfU5Qxgx1spUolUQnSOp2touc-gfh0L3a2Z6W4leBi9lMu5p_RhK5xwVfUViK&hc_ref=ARQxeCPImaavDuMqepQlwiONIo3nYiVxUaG3L8JjOvcFkn7BoOLUhw8TXbgzVgavokA&fref=nf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/4/2020 at 06:27, புரட்சிகர தமிழ்தேசியன் said:

எனக்கென்னவோ  ஏதோ ஒரு ஐ.ரி விங் ரூம் போட்டு கோரோனோ சீசனுக்கு ஓவர் ரூற்றி செய்வது போல் தோன்றுகிறது.. 👌

எனக்கும் அப்படித்தான்  தோணுது .

ஆனாலும் அவர்களின் கடவுள் மாபாலி(ஓணம் பண்டிகை கடவுள் ) படத்தை என் காலில் போட்டு மிதித்து படம் எடுத்து போட்டால் அவர்கள் தாங்குவார்களா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

3 minutes ago, பெருமாள் said:

எனக்கும் அப்படித்தான்  தோணுது .

ஆனாலும் அவர்களின் கடவுள் மாபாலி(ஓணம் பண்டிகை கடவுள் ) படத்தை என் காலில் போட்டு மிதித்து படம் எடுத்து போட்டால் அவர்கள் தாங்குவார்களா ?

ஆனா இந்த வீடியோக்களை பார்க்க வேணுமென்றே செய்த மாதிரி இருக்கு, காட்சியை நீக்கி, இனிமேல் இப்படி நாடக்காமல் இருக்க மழையாள சினிமா கவனத்தில் எடுக்குமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காட்சி உண்மையில் நீக்கப்பட்டு  இருக்கணும் ஆனால் அவர்கள் சுழித்தோடுவார்கள்  அதுக்கு தகப்பன் காரனை  இழுத்தாள் காணும் ஆனால் இது வேண்டுமென பல சேதிகள்  அடியில் போக இதை ஊதி  பெருபிக்கிறார்கள் ஆனாலும் தமிழ்நாடு இவ்வளவு குமுறினதே இப்போ இருக்கும் தமிழ்நாட்டு  டெல்லி அடிமைகளை சிந்திக்க வைத்து இருக்கும் .

நேற்றும் யாரோ திண்ணையில் இருந்து இந்த செய்தி பற்றி தேடிக்கொண்டு இருந்தினம் திண்ணையில் வைத்து விளங்கப்படுத்தும் அளவுக்கு இது பெரிது அல்ல .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://www.youtube.com/watch?v=BuXbu9nhycQ

 

https://youtu.be/BuXbu9nhycQ

 

உங்களுக்கு ஒரு சாதாரண பெயர்... எங்களுக்கு அதுவே உயிர் - துல்கர் சல்மானுக்கு இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் கண்டனம்

 

உங்களுக்கு ஒரு சாதாரண பெயர்... எங்களுக்கு அதுவே உயிர் - துல்கர் சல்மானுக்கு இயக்குனர்  எஸ்.ஆர்.பிரபாகரன் கண்டனம்

அனுப் சத்யன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்து தயாரித்துள்ள ‘வரனே அவஷ்யமுண்டு’ என்ற மலையாள படம் கடந்த பிப்ரவரி மாதம் திரைக்கு வந்து நல்ல வசூல் பார்த்தது. இந்த படத்தில் சுரேஷ் கோபி வளர்க்கும் நாய்க்கு பிரபாகரன் என்று பெயர் வைத்து அழைப்பர். இது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்நிலையில் இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், அன்பிற்குரிய துல்கர் சல்மான் &  அனுப் சத்யன் உங்களின் சமீபத்திய வெளியீடான  #VaraneAvashyamund " எனும் மலையாள திரைப்படத்தில், நாய்க்கு "பிரபாகரன்" என்று பெயர் சூட்டி இருப்பதாக வரும் வசனம் பற்றியும் அதன் மூலம் எழுந்த சர்ச்சை பற்றியும், அதற்கு, மன்னிப்பா? அல்லது விளக்கமா என்று புரியாத வகையில் நீ அளித்த பதிவையும் சற்று முன்பே பார்க்கவும் படிக்கவும் நேர்ந்தது., நிற்க.,

அதென்ன  கேரள தேசத்திலும் மலையாள திரைப்படங்களிலும் தமிழர்களையும் தமிழினத்தின் தேசியத் தலைவரையும் தொடர்ந்து கொச்சை படுத்தி வருகிறீர்கள்.? யார் சொல்லி கொடுத்தது உங்களுக்கு, மலையாளிகளை விட தமிழர்கள் தாழ்ந்தவர்கள் என்று., உங்களின் தாய்மொழி மலையாளத்திற்கும் தாய்மொழி எங்களின் தமிழ்மொழி என்பதை மறந்து விடாதீர்கள்..!

"பிரபாகரன்" என்பது உங்களுக்கு ஒரு சாதாரண பெயர்., எங்களுக்கு அதுவே உயிர்., இதை சொன்னால் உங்களுக்கு நிச்சயம் புரியாது., இனியும் நீங்கள்  தமிழர்களையும் தமிழின தலைவரையும் தொடர்ந்து தரம் தாழ்த்தி பேசுவதாகவும் எழுதுவதாகவும் இருந்தால்- நாங்களும்  "கேரளத்து காந்தி" என்றழைக்கப்பட்ட கே.கேளப்பன் பெயரையும் சுதந்திர போராட்ட காலத்திலிருந்து பெருந்தலைவராக அங்கு அறியப்பட்ட "மொகம்மத் அப்துல் ரஹிமான் சாகிப்" பின் பெயரையும் "வக்கம் மௌலாவி" யின் பெயரையும் எங்களின் படைப்புகளில் நாய்களுக்கும் பன்றிகளுக்கும் பெயராக சூட்ட  வேண்டிய சூழல் ஏற்படும்., யார் இதை செய்கிறார்களோ இல்லையோ., நான் நிச்சயம் என் படைப்பில் இதை செய்வேன் என்பதை பணிவோடு கூறிக்கொள்கிறேன்.,

நடிகர் பிரசன்னா., சக நடிகர் என்கிற முறையில் துல்கர்க்கு ஆதரவாக பேசுவதை விட்டு விட்டு., "தலைவர்" பிரபாகரன் யார் என்பதை எடுத்து கூறினால் நன்றாக இருக்கும்..,  என்று கூறியுள்ளார்.

https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/04/28191019/1468199/Director-sr-Prabhakaran-condemn-to-dulquer-salmaan.vpf

Link to comment
Share on other sites

பொதுவாகக்  மலையாள  படங்கள்  நன்றாகவே  இருக்கும் .  ஆனால்  அவர்களின்  படங்களில்  தமிழர்களை 

நல்லதாக  காட்டமாட்டாரகள் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேரம் கிடைக்கும் போது காங்கேசந்துறை முதல் தாமரை கோபுரம் வரை நான் எடுத்த படங்களையும் இணைக்கிறேன்.  வாசகர்கள் முடிவு செய்யட்டும். அதான் கொக்கதடில மாம்பழம் சிக்கீட்டே. மரநாய் ஏன் கிடந்து உருளுது🤣
    • இந்த வீழ்ச்சிக்கு என்ன காரணம் என எண்ணுகிறீர்கள்?
    • யாராவது தினமுரசில் அற்புதன் எழுதிய இந்த தொடரை வாசிக்காமல் விட்டிருந்தால் இந.த தொடரை நிச்சயமாக பார்க்க வேண்டும்.ஏனெனில் புலிகளுக்கு நேர் எதிரான அணியிலிருந்த ஒருவரால்த் தான் இது எழுதப்பட்டது. நான் இந்த பத்திரிகையை தொடர்ந்து வாங்கிய போது பலரும் மறைமுகமாக ஈபிடிபிக்கு ஆதரவளிப்பதாக கூறினார்கள். நிறைய பேருக்கு ஆரம்பகாலத்தில் போராட்டத்துக்கு வித்துப் போட்டவர்களையும் வித்துடலானவர்களையும் இன்னமும் தெரியாமல் இருக்கிறார்கள்.
    • தென்னாபிரிக்காவில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். அதிவேகமாக சென்ற அந்த பேருந்து செல்லும் வழியில் மாமட்லகலா என்ற இடத்தில் வேகத்தக் கட்டுப்படுத்த முடியாமல் அங்குள்ள பாலத்தில் மோதி தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு இருந்து 165 அடி பள்ளத்தில் விழுந்தது. அங்குள்ள பாறையில் விழுந்த வேகத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் பேருந்தில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதிலிருந்தவர்களில் நல்வாய்ப்பாக 8 வயது சிறுமி மட்டும் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானதில், அதில் இருந்த பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகிப்போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரது உடல்கள் பேருந்தின் அடிப்புறத்தில் சிக்கியுள்ளன. அவற்றை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தென்னாபிரிக்காவை உலுக்கியுள்ள இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டின் ஜனாதிபதி சிரில் ரமபோசா இரங்கல் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297513
    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.