Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பழனி மலை பூக்காரி | சிறுகதை | பொன் குலேந்திரன்.

download.png

ஆறு படைகளில் மூன்றாம் படைவீடான பழனி மலையை கிரிவலம் வந்த பின்பு, 450 மீட்டர் உயரம் உள்ள மலையை 690 படிகள் எறி பக்தர்கள் கடந்து வர வேண்டும். நடந்து மலையை ஏற முடியாதவர்களுக்கு மலைக்கு மேல் செல்வதற்கு ரோப் கார் வசதியும் இருக்கிறது.

அந்த மலையில் பல பூக்கடைகள் இருந்தாலும் பூக்காரி வள்ளியம்மையிடம் பூ வாங்க வரும் பக்தர்கள் அனேகர். அதுக்கு பல காரணங்கள் இருந்தன. அவைகளில் முக்கியம் அவளின்முத்து சிரிப்பழகு. இரண்டாவது தேன் சொட்டும் பேச்சழகு. மூன்றாவது   கண் சிமிட்டும் போது அவளின் பார்வையின் அழகு, நான்காவது அவளின் இடையழகு, ஐந்தாவது அவள் மாலை கட்டும்  அவளின்   விரல்களின் அசைவின்  அழகு.

ஆறாவது அவளின் நீண்ட கருங் கூந்தல் அழகு. முருகனின் ஆறு படைகளும் அவளுக்குள் அடங்கி   இருக்கிறது என்று அவளிடம் பூ மாலை வாங்கும் பக்தர்கள் சொல்வார்கள்.

வள்ளிக்கு வயசு பதினெட்டு இருக்கும். அவள் கையால் மலர் மாலை, தேங்காய் பழம் வாங்கும் போது அதுக்கு தனி சக்தி உண்டு என்று பக்தர்கள் பேசிக் கொண்டனர். அவளிடம் மாலை மற்றும் பொருட்கள்  வாங்கும் போது பேரம் பேசாமல்  அவள் சொன்ன விலைக்கு வாங்கி படிக்கட்டுகள் ஏறி முருகனுக்கு அர்ப்பணித்து  பூசை செய்தால், நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களின்  நம்பிக்கை.

அவ்வளவுக்கு வள்ளியின் முகத்தில் ஒரு பிரகாசம் அவர்களுக்கு தெரிந்தது. இவ்வளவு பேரழகியாக  இருந்தும்  இவள் ஏன் பூ  மாலை  கட்டி விற்று கஷ்டப்படவேண்டும்,  சினிமாவில்  நடிக்கலாமே என்று பலர் விமர்சித்தனர். அவளின் அழகுக்கு கூந்தலில் மல்லிகை பூ மாலை எவ்வளவு அழகாக இருக்கும், அவள் ஒரு நாளும் பூ மாலை கூந்தலில் வைப்பதில்லை. ஏன் என்பது பலருக்கு புரியாத புதிர்.

அந்த காரணத்தை அவளிடம் கேட்க வாலிபர்கள் பயந்தனர்.   அவளை சீண்டப் போய், மனதை சுடும் கடும் வார்த்தைகள் அவளிடம் இருந்து அவர்களை தாக்கின. வள்ளியம்மா பிறந்தது பழனிக்கு அருகில் உள்ள புளிய மரங்கள் அதிகம் உள்ள புளியம் பட்டி கிராமம்.

வள்ளியின் தாய் ராஜம்மாவும் பூ வியாபாரம் செய்து வந்தவள். தாயிடம் மாலை கட்டும் கலையை வள்ளி கற்றவள். ராஜம்மா ஒரு விதவை. அவளின் ஒரே மகள் தான் வள்ளியம்மை. அவளின் தந்தை முத்து தனியார் பேரூந்து ஓட்டுனகராக இருந்தவன். குடிகாரன், அதனல் ஒரு நாள் அவன் ஓட்டிய பேரூந்து விபத்துக்கு உள்ளாகி இறந்தான்.

தனக்கு ஒரு அழகிய மகள் பிறப்பாள் என ராஜம்மா கனவிலும் நினைக்கவில்லை. ஒரு சமயம் நாடகக் குழு ஓன்று வள்ளியை நாடகத்தில் நடிக்க விடும்படி கேட்ட போது ராஜம்மா மறுத்து விட்டாள். வள்ளியை ஒரு படித்தவனுக்கும் அதுவும் கை நிறைய சம்பளம் எடுக்கும் ஒருவனுக்கு திருமணம் செய்து வைப்பதே ராஜம்மாவின் திட்டம்.

அவளது தூரத்து சொந்தக்காரப் பையன் மயூரன்   என்பவன் மெச்கானிக்காக துபாயில் வேலை செய்வதை அவள் அறிவாள்.  மயூரன் வள்ளியுடன் ஒரே பாடசாலையில் படித்தவன்.  சிறு வயதில் இருவரும் ஒன்றாக விளையாடியவர்கள்.    அவனை வள்ளிக்கு முடித்து வைக்க ராஜம்மா திட்டம் போட்ருந்தாள். ஆனால்  விதி வள்ளியை சோதித்து விட்டது.

****

அந்த எதிர் பாராத சந்திப்பு நடந்த போது வள்ளிக்கு வயசு   பதுனெட்டு கூட ஆகவில்லை. ஆனால் வள்ளிபன்னிரெண்டில் ருதுவாகிவிட்டாள். புருஷனை இழந்த இராஜம்மாவுக்கு உதவிக்கு இனத்தவர் ஒருவரும் முன் வரவில்லை. மகளை எப்போதும் தன் பாதுகாப்பில் வைத்திருந்தாள். பூ விற்கப் போகும்போது வள்ளியும் அவள் கூடவே போவாள்.

வள்ளி ஒரு நாள் அவள் ஆற்றில் குளிக்கப் போன போது ஆற்றுக்கருகில் உள்ள தன் வயலில் வேலை சரியாக நடக்கிறதா என்று பார்க்க வந்த பண்ணையார் மதனராஜனின்    பார்வையில் வள்ளி விழுந்தாள். இவ்வளவு காலமும் தன் கிராமத்தில் இப்படி ஒரு அழகிய சிட்டு இருக்கிறது என்று தனக்குத் தெரியாதே என்று தன் கணக்குப்பிள்ளைக் கந்தசாமிக்கு சொன்னார்.

பல வருடங்கள் கந்தசாமி பண்ணையாரிடம்   வேலை செய்பவர் அதனால் அவருக்குத்   தெரியும் தன் முதலாளிக்கு   வயது அறுபதுக்கு மேலாகியும் பெண் ஆசை விட்டுப் போகவில்லை என்று. ஏற்கனவே அவர் இருமுறை திருமாணமாகி முதல் மனைவி அவரின் பாலியல் துண்புறுத்தளுக்கு ஆளாகி மூன்று வருடங்களில்  இறந்துவிட்டள்.  தன் மகன் தன்னை கேள்விகள் கேட்க  தொடங்கியதால் அவனை வீட்டை விட்டு  துரத்தி விட்டார்.

அதன் பின் முதல் மனைவியின் தங்கையை மணந்தார். அவளும் வீட்டு தோட்டக்காரனோடு அவருக்குத் தெரியாமல்   ஓடிப் போய் விட்டாள். தன் ஆசையை பூர்த்தி செய்ய ஒரு பெண்ணை தேடித் திரியும் போது தான் வள்ளியின் சந்திப்பு அவருக்கு கிடைத்தது விடுவாரா அந்த பருவமடைந்த அழகிய மலரை. பெண் ஆசை விட்டு போகவில்லை. எவ்வளவு பணம்  வேண்டுமானாலும் தருகிறேன்  உன் மகளை எனக்கு மனைவியாக   தா என்று ராஜம்மாவிடம் பெண் கேட்டார். அவளும் கணவனை   இழந்து   கடனாகியாக  இருந்த நேரம்.

தன் மகளை அவருக்கு தர முடியாது என்று அவளால் சொல்ல முடியவில்லை. வள்ளியை கிழவனுக்கு திருமணம் செய்து வைத்தாள். அறியாத வயதுள்ள வள்ளிக்கு தான் விலை போனது தெரியவில்லை. திருமணம் இரகசியமாக நடந்தது.  ஆண்மை வீரியத்தை கூட்டும்  சித்த மருத்துவ  லேகியம் அருந்தும் பழக்கம் மதனராஜனிடம் இருந்தது. அவர் அதை பெண்களுடன் புணரமுன் எடுப்பது வழக்கம்.

அன்று பண்ணையாருக்கு வள்ளியுடன் முதல் இரவு. அதுவே அவருக்கு கடைசி இரவும் கூட என்பது அவருக்கு தெரியவில்லை.    தாய்  கொடுத்து அனுப்பிய  பழத்தோடு மிரண்ட மான் போல் செய்வது என்ன என்று தெரியாது அறைக்குள் வந்த வள்ளியை அளவற்ற ஆசைகளுடன் இறுக கட்டிப் பிடித்து அவள் உதட்டில்  முத்தமிட  மதனராஜன்  முயன்ற  போது  திடீர்  என்று நெஞ்சு   வலி அவரை  பீடித்து கொன்டது “ஐயோ வள்ளி என் நெஞ்சு   வலிக்குதே   ஏதாவது குடிக்கத்  தா  என்று கதறிய படி அவளிடம் பால் வாங்கி குடிக்க முன்  கட்டிலில் அவர் சாய்ந்தார்.

கண்கள் மேலே சுருண்டன. அவரின் உடல் படிப்படியாக செயல் இழந்தது. உயிர் பிரிந்தது. வள்ளி செய்வது அறியாது பயத்தில் கதறி அழுதபடி கதவை திறந்து உதவிக்கு அழைத்தாள். ராஜம்மாவும் கணக்குபிள்ளையும்  அறைக்குள்  வந்தும்  அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

ராஜம்மா மருமகனின் கைநாடியை பிடித்து பார்த்து பண்ணையார் எங்களை விட்டு போயிட்டாரடி என்று கதறி  அழுதாள். வள்ளியும் தாய் அழுவதை பார்த்து அழுதாள். பாலும்    பழமும் தரையில் சிந்தி கிடந்தன. ராஜம்மா மகள் இந்த சிறு வயதில் விதவையாயிட்டாள் என்று நினைத்து அழுதாளா

அல்லது மருமகன் பிரிந்ததையிட்டு  அழுதாளா என்பது கணபதிக்கு   புரியவில்லை.

மரண சடங்கு முடிந்த பின் ராஜம்மாவுக்கு தெரிய வந்தது பண்ணையார் மதனராஜன்    வள்ளிக்கு ஒன்றும் எழுதி வைக்க வில்லை என்று. ஆக ராஜம்மாவின் கடனை தீர்க்கவும் அவள் வாழ்ந்த குடிசையை அடைவில்  இருந்து  மீட்க  வள்ளியை திருமணம் செய்ய முன்  செய்த உதவி மட்டுமே. அவர் தன் சொத்தையும் எல்லாம் முதல் மனைவிக்கு பிறந்து தான் ஊரை விட்டு துரத்தி விட்ட மகன் பெயருக்கும் கோவிலுக்கும் கொஞ்ச பணம் கந்தசாமிக்கும் எழுதி வைத்திருந்தார்.

அதனால் பாவம் அவர் தொட்டு தாலி கட்டிய வள்ளிக்கு ஒன்றும் கிடைக்கவில்லை.  ஆக அவளுக்கு கிடைத்தது விதவை என்று  ஊர் கொடுத்த பட்டம்  மட்டுமே.  அன்று முதல் அவள்  கூந்தலுக்கு மாலை  அணிவதில்லை. அனேகமாக  வெள்ளை  சீலை அணிவாள்.  கைகளில் வளையல்கள் இல்லை, காதில் தோடு இல்லை இறைவன் கொடுத்த அழகு மட்டுமே அவளை அலங்கரித்தது. தனக்கு நேர்ந்த நிலையை இட்டு தினமும் வள்ளி மனதுக்குள் பொறுமிக் கொண்டாள். சிறு வயதில் தன்னோடு ஒடி விளையாடி  தனக்கு பிடித்த தன் உறவினன்  மயூரனை மனதில்  நினைத்து கண்ணீர் விடுவாள்.

மகளுக்கு நடந்ததுக்கு தான் காரணம் என கவலை பட்டு   ராஜம்மாளின்  மன நிலை  பாதிக்கப்பட்டது. பூ வியாபரத்துக்கு அவள் போவதை நிறுத்தினாள். பூ மாலை கட்டி கோவிலில் பக்தர்களுக்கு பூ  மாலை விற்கும் தொழிலை வள்ளி செய்தாள்.

****

வள்ளி விதவையாகி  சில வருடங்கள்  சென்றன.  அவள் வாழ்வில் நடந்தது அவளுக்கு கனவு போல் இருந்தது. ராஜம்மா இறந்ததால் பூக்காரி வள்ளி தனித்துப் போனாள். அதிர்ஷ்டம் கெட்டவள, விதவை, முழிவியளத்துக்கு  உதவாதவள் என்ற பட்டங்கள் வள்ளி  மனதை ஈட்டி போல்  தைத்தன. தினமும் பழனி முருகனிடம் தனக்கு ஒரு   வழி காட்டும் படி   வேண்டுவாள்.

அன்று தை பூசத் திருவிழா. பழனியில் தைப்பூசத் திருவிழா. கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பழனி முருகன் கோயிலில் வருடந்தோறும் தைப்பூசத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டும் தைப்பூச திருவிழா நடந்தது. இந்த தைப்பூசத் திருவிழாவின் போது பக்தர்கள் பாதயாத்திரையாக நடந்து வந்து முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுவது வழக்கம்.

அதனாலேயே தமிழகத்தில் உள்ள காரைக்குடி தேவகோட்டை, வேலூர், திருச்சி, மதுரை, தேனி, பெரியகுளம், திருப்பூர், ஈரோடு, பொள்ளாச்சி, திண்டுக்கல் உள்பட தமிழகத்திலிருந்து பல மாவட்டங்களிலிருந்தும் வெளி மாநிலத்தில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வருவார்கள்.

இப்படி வரக்கூடிய பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, மயில் காவடி, மலர் காவடி என பல்வேறு வகையான காவடிகளை சுமந்து ஆடிப்பாடி பாதயாத்திரையாக வந்து கொண்டிருக்கும் அந்த திருவிழாவன்று வள்ளிக்கு எதிர்பாராத அளவுக்கு  வியாபாரம்.

“எனக்கு ஒவ்வோன்றிலும் பத்து கஜம் செவ்வந்தி பூமாலையும் மதுரை மல்லி பூமாலையும் தர முடியுமா”  ஒரு ஆண் குரல் கேட்டது.  குனிந்து வேலை செய்து கொண்டிருந்த வள்ளியின் காதுகளில் அக் குரல் விழுந்தது. இந்த இரு பூக்களும் அதுவும் மதுரை மல்லி தனக்கு தெரிந்த ஒருவருக்கு மட்டுமே பிடிக்கும். இது எனக்கு தெரிந்த குரல் ஆயிற்றே என்று தலை நிமிர்ந்து பார்த்தாள்.  அவள் கண்களால் நம்ப முடியவில்லை.

வள்ளி பல காலம் மனதுக்குள் நேசித்த  மயூரன் வெறும் மேலுடனும்  தங்கக் கரை பதித்த  பட்டு  வேஷ்டியுடன்  அவள் முன் நின்றான். அவன் தோற்றம் மாறவில்லை. அவன் அருகே ஓரு பிற நாட்டு மனிதர் ஒருவர் வேஷ்டியுடன் நின்றார்.

“மயூரன் நீயா என்னால் நம்ப முடியவில்லை. உன்னில் அவ்வளவு மாற்றமில்லை. உன் அருகில் நிற்கும் இவர் யார்?”

“வள்ளி சாட்சாத் உன் பள்ளிக்கால நண்பன் மயூ தான் நான். என்னை கவர்ந்த அதே உன் பார்வையில் மாற்றமில்லை வள்ளி. இவர் சாம். என்னுடன் அமெரிக்க ஜிஎம் மோட்டர்  கொம்பனியில்  வேலை  செய்யும் என்ஜனியர். இவரால் தான் நான் அமெரிக்காவில் வேலை கிடைத்து துபாயில் இருந்து  புலம் பெயர முடிந்தது. பக்கத்தில் நின்ற அமெரிக்கனை  பார்த்து, “இவள் என் ஸ்கூல் டைம் கேர்ள் பிரண்ட் வள்ளி” என்றான்  மயூரன்.

“அப்படியா.  உன்   கேர்ள் பிரண்ட் நல்ல வடிவு” என்றான் அமெரிக்க தமிழ் உச்சரிப்பில் சாம்.

“கேட்டாயா வள்ளி அவர்  சொன்னதை  நீ இன்னும் இந்த ஊர் அழகி” என்றான் மயூரன்

வள்ளியின் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டியது.

மயூரன் அதை எதிர்பார்க்கவில்லை

“ஏன் அழுகிறாய் வள்ளி என்ன நடந்தது உனக்கு”

மயூ நான் இப்போ ஒரு விதவை. காலம் என்னை ஏமாற்றி விட்டது.

“உனக்கு நடந்ததை சொல் வள்ளி”

தான் விதவையான முழுக் கதையும் வள்ளி சொன்னாள்

“இட் இஸ் எ பிட்டி” என்றான்  சாம்

மயூரன் சில வினாடிகள் சிந்தித்த பின் அவன் கேட்ட மதுரை மல்லி மாலையை  எடுத்து வள்ளியின் கூந்தலில்  சூடினான்.

“சரியான முடிவு மயூ”   என்றான் சாம்.

பழனி முருகன் கோவில் மணி ஓசை கேட்டது.

( யாவும் புனைவு)

– பொன் குலேந்திரன் (கனடா).

http://www.vanakkamlondon.com/palanimalai-pookkaari-pon-kulendiren-04-25-20/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழனிமலை முருகன் என்ற படியால்  வள்ளி அமேரிக்கா போனால் என்ன அவுஸ்ரேலியா போனால் என்ன பரவாயில்லை....திருச்செந்தூராய் இருந்தால் மயூரனை மயூரமே வந்து கொத்தி இருக்கும்.....!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

பழனிமலை முருகன் என்ற படியால்  வள்ளி அமேரிக்கா போனால் என்ன அவுஸ்ரேலியா போனால் என்ன பரவாயில்லை....திருச்செந்தூராய் இருந்தால் மயூரனை மயூரமே வந்து கொத்தி இருக்கும்.....!   😁

எழுத்து நடை ஈழத்து எழுத்தாளர் போல இருக்கு தோழர்.. முயற்சிக்கு வாழ்த்துவம்..👍

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.