Jump to content

பயங்கரவாதி சஹ்ரானின் பயிற்சி முகாம் ஒரு வருடத்தின் பின் கண்டுபிடிப்பு !


Recommended Posts

(எம்.எப்.எம்.பஸீர்)

உயிர்த்த ஞாயிறுதொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் குறித்த பிரதான பயங்கரவாதியான மொஹம்மட் சஹ்ரானின் பயிற்சி முகம் ஒன்று, தாக்குதல் நடாத்தப்பட்டு ஒரு வருடம் கடந்துள்ள நிலையில் திருகோணமலை - மூதூர் பகுதியில் வைத்து கண்டறியப்பட்டுள்ளது.

சஹ்ரானின் பிரதான சகாவாக கருதப்படும், மாவனெல்லை புத்தர் சிலை தகர்ப்பு மற்றும் வனாத்துவில்லு ஆயுத களஞ்சிய விவகாரத்தின் பிரதான சந்தேக நபராக கருதப்படும், மாவனெல்லையைச் சேர்ந்தமொஹம்மட் இப்ராஹீம் சாதிக் அப்துல்லாஹ் எனும்நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு அமைய, குறித்த சந்தேக நபரை மூதூர் பகுதிக்கு அழைத்து சென்றுஅந்த இடத்தைகண்டுபிடித்துள்ளதாக சி.ஐ.டி.யின் உயர் அதிகாரி ஒருவர்தெரிவித்தார்.

15 ஏக்கர் வரை விசாலமான, குறித்த இடம் விவசாய நிலமாகஅடையாளப் படுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த காணிக்கு மாவனெல்லையைச் சேர்ந்த ஒருவரே சொந்தக் காரர் எனவும் தெரிவிக்கும்சி.ஐ.டி. அதிகாரி, குறித்த இடத்தில் பயிற்சி பெற்றதாக கூறப்படும் மாவனெல்லை பகுதியைச் சேர்ந்த 5 இளைஞர்களும் தற்போது சி.ஐ.டி., சி.ரி.ஐ.டி. தடுப்பில் உள்ளதாக சுட்டிக்காட்டினார்.

இது குறித்த மேலதிக விசாரணைகளில், மூதூரில் உள்ள அந்த இடத்தில்,சஹ்ரானின் ஆலோசனை பிரகாரம் ரி 56 ரக துப்பககிகளை கையாள்வது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தகவல்கள் வெளிபப்டுத்தப்பட்டுள்ளதாகஅறிய முடிகின்றது.

எவ்வாறாயினும்ஒரு வருடத்துக்கு பின்னர் இந்த முகாம் கண்டு பிடிக்கப்பட்டுள்ள நிலையில், தடுப்பில் உள்ள பிரதான சந்தேக நபர்கள் விடயங்களை தொடர்ந்து மறைத்து வருவது புலப்படுவதாகவும்,ஏற்கனவே அங்கு பயிற்சி பெற்ற இளைஞர்கள் கைதாகியுள்ளதால் அந்த பயிற்சி முகாம் தொடர்பில் மேலதிக விஷேட விசாரணைகள் இடம்பெறுவதாகவும் அறிய முடிகின்றது.

கடந்த 2014 ஆம் ஆண்டு துருக்கி ஊடாக சிரியா சென்ற ஐ.எஸ். அமைப்பில் பயிற்சி பெற்றுள்ள சாதிக் அப்துல்லாஹ் எனும்குறித்தசந்தேக நபர், அங்கிருந்து திரும்பியதும் இந்தபயிற்சி முகாமை ஆரம்பித்துள்ளதாக தெரிகின்றது. குறித்த சந்தேக நபர் அவரது சகோதரரானசாஹித் அப்துல்லாஹ், தந்தையான இப்ராஹீம் மெளலவி ஆகியோர் மாவனெல்லை பகுதி புத்தர் சிலை தகர்ப்பு விவகாரத்திலும் பிரதான சந்தேக நபர்களாக உள்ளனர்.

அவர்கள்முஸ்லிம் இளைஞர்களை அடிப்படை வாதத்தின் பால்இட்டுச் சென்ற பயிற்சி நெறிகளை ஒவ்வொரு பகுதிகளிலும் மிக சூட்சுமமாக தலைமைத்துவ பயிற்சி என்ற ரீதியில் கொண்டு சென்ருள்ளமை தொடர்பில் ஏற்கனவே விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டு மாவனெல்லை நீதிவான் நீதிமன்றுக்கும் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

https://www.virakesari.lk/article/80884

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிகளா ஒரு வருசம் முடிஞ்ச பிறகே கண்டுபிடித்திருக்கிறியளே 

Link to comment
Share on other sites

50 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அடப்பாவிகளா ஒரு வருசம் முடிஞ்ச பிறகே கண்டுபிடித்திருக்கிறியளே 

மெதுவாக வெளியில் விடுகிறார்கள்.... பாராளுமன்ற தேர்தல் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அடப்பாவிகளா ஒரு வருசம் முடிஞ்ச பிறகே கண்டுபிடித்திருக்கிறியளே 

அடுத்த ஈஸ்ரறுக்கு சஸ்றானின் மலசல கூடத்தைக் கண்டுபிடித்துவிட்டோம் என்பார்கள். நாங்களும் விட்டத்தைப் பார்த்துக் கொண்டு தலையைத் தலையை ஆட்ட வேண்டியதுதான். ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Kapithan said:

அடுத்த ஈஸ்ரறுக்கு சஸ்றானின் மலசல கூடத்தைக் கண்டுபிடித்துவிட்டோம் என்பார்கள். நாங்களும் விட்டத்தைப் பார்த்துக் கொண்டு தலையைத் தலையை ஆட்ட வேண்டியதுதான். ☹️

தேர்தலுக்கு மக்களை உசுப்பேத்துகிறார்கள் இருந்தாலும் அவர்கள் தான்  வரவேண்டும் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.