Jump to content

கொரோனா வைரஸ் நமது கனவுகளை எப்படி மாற்றியுள்ளது? அதை கட்டுப்படுத்துவது எப்படி?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா வைரஸ் நமது கனவுகளை எப்படி மாற்றியுள்ளது? அதை கட்டுப்படுத்துவது எப்படி?

பூஜா பிபிசி செய்தியாளர் 
கொரோனா வைரஸ் நமது கனவுகளை எப்படியெல்லாம் மாற்றியுள்ளது? அதை கட்டுப்படுத்துவது எப்படி?Getty Images

பிலிப்பைன்ஸில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு தழுவிய முடக்க நிலை அமல்படுத்தப்பட்டு பல வாரங்களாகிறது. அப்போது முதல், அந்த நாட்டை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவருக்கு வினோதமான கனவுகள் வருகின்றன.

“மருத்துவமனையில் நான் இருக்கிறேன். நள்ளிரவு நேரத்தில் மருத்துவர் ஒருவர் எனது கையில் அறுவை சிகிச்சை செய்துகொண்டிருக்கிறார்” என்று கூறுகிறார் எலிசா ஏஞ்சல்ஸ்.

“அடுத்த சில கணங்களில் நான் வெறும் ஒரு கையோடு மருத்துவமனையை விட்டு வெளியேறுகிறேன். அந்த மருத்துவர் என் கையை வைத்து ஓடியாடி விளையாடுவதை நான் பார்த்ததாக நினைவு.”

இதே போன்று அடுத்தடுத்த நாட்களில் தனது பணம், மடிக்கணினி உள்ளிட்டவற்றை இழப்பது போன்ற கனவு வந்ததாக எலிசா கூறுகிறார். 

இதுபோன்ற வினோதமான கனவால் எலிசா மட்டுமல்ல, பலரும் தூக்கத்தை இழந்து தவித்து வருகிறார்கள்.

Illustration of a dreamNikita Deshpande/BBC

கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலின் காரணமாக ஒட்டுமொத்த உலகின் போக்கே மாறியுள்ளது. குறிப்பாக, உலகின் 175க்கும் மேற்பட்ட நாடுகளில் முடக்க நிலை அமல்படுத்தப்பட்ட பின்பு, இதுபோன்ற வினோதமான கனவுகள் வருவதாக பலரும் கூறி வருகின்றனர்.

கவலை மற்றும் மன அழுத்தம்

கோவிட்-19 நோய்த்தொற்று பரவல் உச்சத்தை உடைந்த மார்ச் மாதம் முதல் இதுபோன்ற கனவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் உளவியல் துறை பேராசிரியரான டீய்ட்ரே பாரெட் ஆராய்ச்சி செய்து வருகிறார்.

“ஆழ்ந்த கவலையையோ அல்லது மன அழுத்தத்தையோ விளைவிக்கும் விடயங்கள் வினோதமான கனவுகளுக்கு காரணமாக இருக்கின்றன. எனது ஆய்வில் பங்கேற்றவர்களுக்கும் இதே நிலைதான்” என்று அவர் கூறுகிறார்.

சிலருக்கு கொரோனா வைரஸுடன் தொடர்பு உள்ளதை போன்ற கனவுகள் வந்துள்ளன. “Contagion திரைப்படத்தை பார்த்தவுடன், எனக்கு கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பு உள்ளதாக கனவு கண்டேன்.”

கொரோனா வைரஸ் நமது கனவுகளை எப்படியெல்லாம் மாற்றியுள்ளது? அதை கட்டுப்படுத்துவது எப்படி?Getty Images

“எனக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு வலியில் துடித்து, கண்கள் இருள்வதை போன்று உணர்ந்தேன். என் உயிர் பிரிவதை போன்று கனவு வந்தது. அதன் பிறகு, என் மீது ஏதோ விழுந்தவுடன், நோய் அறிகுறிகள் மெல்ல விலகி, நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்துவிட்டேன். ஆனால், அது எப்படி சாத்தியமானது என்று எனக்கு தெரியவில்லை.” 

9/11 தாக்குதலுக்கு பிறகு அமெரிக்கர்கள், இராக் ஆக்கிரமிப்பிற்குப் பின் குவைத் மக்கள் உள்ளிட்ட பல்வேறு தருணங்களினால் மக்களின் மனதில் ஏற்பட்ட அழுத்தத்தையும், அதனால் வந்த கனவுகளையும் டீய்ட்ரே ஆய்வு செய்துள்ளார்.

ஆனால், கொரோனா வைரஸை ஒட்டி மக்களுக்கு ஏற்பட்டு வரும் கனவுகள் மற்றவற்றுடன் வேறுபட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.

கண்ணுக்கு தெரியாத எதிரி

"இது ஒரு கண்ணுக்கு தெரியாத எதிரி, இந்த வைரஸிற்கான உருவகங்கள் மிகவும் பொதுவானவை” என்று அவர் கூறுகிறார். 

“எனது ஆய்வுகளில் திரளான பூச்சிகள், சுனாமி, சூறாவளி, நிலநடுக்கம் உள்ளிட்டவற்றை கனவுகளில் கண்டவர்கள் ஏராளம்.”

முடக்க நிலையின் காரணமாக வீட்டில் இருப்பதால், பலரும் நீண்ட நேரம், அலாரம் கூட வைக்காமல் தூங்குவதும், கனவை மீட்டெடுத்து விவரிப்பதற்கு தேவைக்கும் அதிகமான நேரம் இருப்பதும் கூட இதற்கு காரணமாக இருக்கலாம் என்கிறார் டீய்ட்ரே.

“நீண்ட பணிநேரத்தாலும், அழுத்தம் நிறைந்த சமூக வாழ்க்கையாலும் தூக்கத்தை இழந்தவர்கள் இந்த நேரத்தை பயன்படுத்தி இயல்புக்கு அதிகமாக உறங்குகின்றனர்.”

கொரோனா வைரஸ் நமது கனவுகளை எப்படியெல்லாம் மாற்றியுள்ளது? அதை கட்டுப்படுத்துவது எப்படி?Getty Images

இவரது ஆய்வின் பகுதியாக இருந்த இன்னொருவரின் கனவில், நல்ல பகல்நேர பொழுது, கொடுங்கனவாக மாறுகிறது.

“நான் பூங்காவில் நண்பர்களுடன் மேசையில் அமர்ந்து அரட்டையடித்து கொண்டிருந்தேன். அப்போது திடீரென பெரும் சத்தத்துடன் வானில் தோன்றிய ஒரு மிகப் பெரிய துப்பாக்கி, வானில் அங்குமிங்கும் வட்டமடித்து கொண்டே தரையில் இருந்த பலரையும் சுட்டுக்கொண்டே வந்தது.”

“ஒரு கட்டத்தில், அது எங்களை நோக்கி வர தொடங்கிய உடன், நான் அங்கிருந்து ஓடி, மறைந்துகொள்ள ஆயத்தமானேன்.”

அறிவியல் இவ்வளவு வளர்ந்த பின்பும் கூட, ஆராய்ச்சியாளர்களுக்கு இன்னமும் வியப்பு நிறைந்த ஒன்றாக விளங்கும் மூளையின் விசித்திரமான, அதே வேளையில் நமது வாழ்க்கையில் தொடர்புடைய மற்றும் தொடர்பற்ற விடயங்களை கண்முன்னே நிறுத்தும் ஒன்றாக கனவு உள்ளது. ஒவ்வொரு நாளும் உலகம் முழுவதும் பில்லியன்கணக்கானோர் கனவுகளை காண்கின்றனர்.

இத்தாலியில் கொரோனா வைரஸால் அமல்படுத்தப்பட்டுள்ள முடக்க நிலையால் அந்த நாட்டு மக்களிடையே கனவுகளை நினைவுகூரும் விகிதம் மிகப் பெரிய அளவில் அதிகரித்திருப்பதாக அதுகுறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள லூய்கி டி ஜென்னாரோ கூறுகிறார்.

 

தூக்கநிலை

மன அழுத்தத்தின் காரணமாக தூக்கத்தின் தரம் குறைவதாலும் இதுபோன்ற கனவுங்கள் ஏற்படக் கூடும் என்று அவர் கருதுகிறார்.

இதன் காரணமாக பலர் இரவுநேரத்தில் தூக்கத்திலிருந்து அடிக்கடி விழிப்பதாக அவர் கூறுகிறார். மேலும் கண் அசைவுறும் தூக்கநிலையும் (REM) இதற்கு காரணமாக இருக்கலாம் என்றும் அவர் கூறுகிறார்.

REM நிலையில் ஒருவர் தூங்கும்போது அடிக்கடி கண்கள் அசைந்துகொண்டே இருக்கும். மேலும், சுவாசித்தலிலும், உடல் இயக்கத்திலும் மாற்றம் ஏற்பட்டு அஸ்டோனியா எனப்படும் ஒருவித செயல்பாடற்ற நிலையை உடல் அடைகிறது. சுமார் 90 நிமிடம் நீடிக்கும் இந்த வகை நிலையின்போது, ஒருவர் மூளையில் கனவுகள் தூண்டப்படுகின்றன. 

Illustration of a dreamNikita Deshpande/BBC

REM நிலையின்போது விழிப்பவர்களுக்கு அவர்களது தூக்கம் குறித்த பெரும்பாலான விவரங்கள் நினைவிலேயே இருக்கின்றன.

“பெருந்தொற்றுக்கு எதிரான உணர்ச்சிபூர்வமான ஒரு வகை பதிலீடுதான் இதுபோன்ற கனவுகள். சமீபகாலமாக கொடுங்கனவுகளை காண்போரின் எண்ணிக்கையில் பெரும் ஏற்றம் ஏற்பட்டுள்ளது.”

கனவில் ஆதிக்கம் செலுத்தும் நடப்புகள் 

நம் அன்றாட அனுபவங்கள் நம் கனவுகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நிபுணர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். நமது அனுபவம் எவ்வளவு உணர்வுபூர்மாக இருக்கிறதோ, அதே அளவுக்கு நமது கனவுகளும் இருக்கும்.

குறிப்பாக, கொரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கையின் முன்களத்தில் பணியாற்றுபவர்களுக்கு எளிதில் கொடுங்கனவுகள் ஏற்படக் கூடும்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் செயலி ஒன்றை சமீபத்தில் இத்தாலி அரசு அறிமுகப்படுத்தியது.

கொரோனா வைரஸ் நமது கனவுகளை எப்படியெல்லாம் மாற்றியுள்ளது? அதை கட்டுப்படுத்துவது எப்படி?Getty Images

இந்த செயலின் செயல்பாடு குறித்த செய்தியை படித்த இளம்பெண் ஒருவருக்கு அதுகுறித்த கனவு வந்தது.

“நான் உறக்கத்தில் இருந்து எழுந்தவுடன், என் நெற்றியில் ஏதோ விசித்திரமாக ஒன்று இருப்பதை போன்று கனவு கண்டேன். கழிவறைக்கு சென்று கண்ணாடியில் பார்த்துக்கொண்டே என் நெற்றி அருகே இருந்த முடிகளை சரிசெய்தபோது, அங்கு மூன்று பட்டன்கள் இருந்தன.”

“இரண்டு பட்டன்களில் சிவப்பு நிறத்திலும், மற்றொன்றில் பச்சை நிறத்திலும் விளக்குகள் எரிந்தன. பச்சை நிற விளக்கு ஒரு ஜிபிஎஸ் கருவி என்றும், அதை கொண்டு ஒருவரின் நடவடிக்கைகள் ஆராயப்படுவதாகவும் யாரோ என்னிடம் கூறினர். சிவப்பு விளக்கு எதற்காக என்று எனக்கு தெரியாது, இருந்தாலும் அதை அழுத்தினேன், உடனே தூக்கத்தில் இருந்து விழித்துவிட்டேன்.”

கனவுகளை பதிவுசெய்ய ஒரு இணையதளம்

கலிஃபோர்னியாவை சேர்ந்த எரின் கிராவ்லி என்ற பெண் தொடங்கியுள்ள idreamofcovid என்ற இணையதளத்தில் தனது கனவு குறித்து அந்த இத்தாலிய பெண் பதிவு செய்துள்ளார்.

எரின் விஞ்ஞானியோ அல்லது ஆராய்ச்சியாளரோ அல்ல. ஆனால், புதிய இயல்பாக உருவெடுத்துள்ள சமூக விலகல் நிலையால் மக்களிடையே மாறி வரும் கனவுகளை தொகுக்க விரும்பியதாக அவர் கூறுகிறார். 

தனது இணையதளத்தில் பதியப்பட்டுள்ள பலரது கனவுகளின் போக்கை முதலாக கொண்டு ஆய்வுகளை மேற்கொள்ளலாம் என்று எரின் கூறுகிறார்.

நேர்மறையான கனவுகள்

கொரோனா வைரஸ் மக்களிடையே ஏற்படுத்தியுள்ள அச்சத்தால் மக்களுக்கு இதுபோன்ற கொடுங்கனவுகள் மட்டுமே வருகின்றன என்று கூற முடியாது.

 

“குறிப்பிடத்தக்க அளவிலான மக்களுக்கு நேர்மறையான கனவுகளும் வருகின்றன. இது கேட்பதற்கு விசித்திரமாக இருக்கலாம், ஆனால் உண்மைதான்” என்கிறார் டீய்ட்ரே பாரெட்.

“சுற்றுச்சூழல் மாசுபாடு அற்ற எதிர்காலம் குறித்தும், கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதை போன்றும் சிலருக்கு கனவுகள் வருகின்றன.”

டெல்லியை சேர்ந்த நீரு மல்ஹோத்ராவும் அதில் ஒருவர்.

“முடக்க நிலை தொடங்கியதில் இருந்து, மிகவும் ஆடம்பரமான ஹோட்டல்கள் எனது கனவுகளில் வருகின்றன. அதுபோன்ற ஹோட்டல்களை நான் இதுவரை தொலைக்காட்சியில் மட்டுமே பார்த்துள்ளேன்.”

“அந்த அறைகளில் பெரிய ஜன்னல்கள் இருந்தன. அதை திறந்தால் கடலோ அல்லது பச்சை பசேலென்ற நிலப்பரப்போ உள்ளது. என் மனநிலை மகிழ்ச்சியாகவும் பரவசமாகவும் இருக்கிறது. சுற்றிலும் நிறைய பேர் இல்லை; பெரும்பாலான நேரங்களில் மனிதர்களே இல்லை."

வேண்டிய கனவை பெற முடியுமா?

மனதுக்கு அமைதியான, அருமையான கனவுகளை காண்பது எப்படி என்பது குறித்து டீய்ட்ரேவிடம் கேட்டபோது, “நீங்கள் உறங்கியவுடன் எப்படிப்பட்ட கனவுகளை காண விரும்புகிறீர்கள் என்பது குறித்து உங்களுக்கு நீங்களே பரிந்துரைக்கலாம்.”

“உங்களுக்கு பிடித்த நபர், இடம் அல்லது வேறெதாவது ஒன்றை நினைத்துக்கொள்ளுங்கள் அல்லது கனவு காண்பதை போன்று நினைத்துக்கொண்டு அந்த காட்சிகளை கண்முன்னே நிறுத்துங்கள். குறிப்பாக, நீங்கள் உறங்க தொடங்குவதற்கு முன்பு விரும்பும் கனவு குறித்து உங்களுக்கு நீங்களே சொல்லுங்கள்.”

“இந்த உத்தியை பயன்படுத்தினால், உங்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு மூளை அதற்கேற்றவாறு கனவுகளை ஏற்படுத்த கூடும்.”

 

https://www.bbc.com/tamil/science-52444482

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • வணக்கம் வாத்தியார் .........! ஆண் : உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு ஆண் : என் சுவாசக் காற்று வரும்பாதை பாா்த்து உயிா்தாங்கி நானிருப்பேன் மலா்கொண்ட பெண்மை வாராமல் போனால் மலைமீது தீக்குளிப்பேன் என் உயிா் போகும் போனாலும் துயாில்லை கண்ணே அதற்காகவா பாடினேன் வரும் எதிா்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே அதற்காகத்தான் வாடினேன் முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன் ஆண் : காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு பெண் : ஓா் பாா்வை பாா்த்தே உயிா்தந்த பெண்மை வாராமல் போய்விடுமா ஒரு கண்ணில் கொஞ்சம் வலிவந்த போது மறு கண்ணும் தூங்கிடுமா நான் கரும்பாறை பலதாண்டி வேராக வந்தேன் கண்ணாளன் முகம் பாா்க்கவே என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக வந்தேன் கண்ணா உன் குரல் கேட்கவே அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே பெண் : மழைபோல் மழைபோல் வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன் மனம்போல் மனம்போல் உந்தன் ஊனோடு உறைந்துவிட்டேன் உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன் நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன் .......! --- உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு ---
    • ஏன் பழனிச்சாமி வாக்குகளைப் பிரிக்கிறார் என்றும் சொல்லலாம்தானே. இந்த முறை நிரந்த சின்னம் கிடைக்குமளவுக்கு வாக்கு சதவீதம் இருக்கும். யாழ்கள திமுக ஆதரவாளர்களுக்கு இது எரிச்சலாக இருக்கும். எதற்கும்  பான் ஓன்று வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
    • உன்மேலே கொண்ட ஆசை .......!  😍
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் புல‌வ‌ர் அண்ணா🙏🥰.................................................................
    • ம்....ம்...ம் சொந்த மண்ணினத்தவெனையே பாகுபாடு பார்க்கும் தமிழ்நாட்டில்  இலங்கை பொண்ணு வாக்களிச்சு எத சாதிக்கப்போகுதாம்? 🤣 கவனம். உயிராபத்து நிறைந்த விடயம். 😎
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.