Jump to content

வடக்கில் மத மாற்றத்தில் ஈடுபடும் சபையினருக்கு எதிராக விசேட ஆணைக்குழு- சிவசேனா கோரிக்கை


Recommended Posts

வடக்கில் மத மாற்றத்தில் ஈடுபடும் சபையினருக்கு எதிராக விசேட ஆணைக்குழு- சிவசேனா கோரிக்கை

 

 

 

    by : Litharsan

வடக்கில் மதமாற்றத்தில் ஈடுபடும் சபையினருக்கு எதிராக விசேட ஆணைக்குழு ஒன்று நிறுவப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என சிவசேனா அமைப்பினைச் சேர்ந்த மறவன்புலவு சச்சிதானந்தம் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம், அரியாலையில் உள்ள பிலதெல்பியா ஆலயத்திற்கு முன்னால் இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், “வடக்கில் மதமாற்ற சபைகள் நிறைந்து காணப்படுகின்றன. அவை எந்தச் சட்டத்திற்கு உட்பட்டு செயற்படுகின்றன என்பது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த பிலதெல்பியா சபையானது ஒரு வயல் காணியில் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு யார் அனுமதி கொடுத்தது? நல்லூர் பிரதேச சபை அதற்கு அனுமதி கொடுத்தது என்றால் அதனை நிர்வகிப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பினரே.

அக்கட்சியில் உள்ளவர்களே இந்த ஆலயம் அமைப்பதற்கு அனுமதி கொடுத்துள்ளார்கள். எனவே இது தொடர்பாக விசேட ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்” என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

http://athavannews.com/வடக்கில்-மத-மாற்றத்தில்/

Link to comment
Share on other sites

ஆகா, ஆகா, நிறைய பேருக்கு இருப்பு கொள்ளப்போவதில்லை.
உலகமே வேற பிரச்சினையில சிக்கி இருக்க ஐயா வேறை எங்கையோ கை வைக்கிறார்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

வடக்கில் மத மாற்றத்தில் ஈடுபடும் சபையினருக்கு எதிராக விசேட ஆணைக்குழு- சிவசேனா கோரிக்கை

 

 

 

    by : Litharsan

வடக்கில் மதமாற்றத்தில் ஈடுபடும் சபையினருக்கு எதிராக விசேட ஆணைக்குழு ஒன்று நிறுவப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என சிவசேனா அமைப்பினைச் சேர்ந்த மறவன்புலவு சச்சிதானந்தம் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம், அரியாலையில் உள்ள பிலதெல்பியா ஆலயத்திற்கு முன்னால் இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், “வடக்கில் மதமாற்ற சபைகள் நிறைந்து காணப்படுகின்றன. அவை எந்தச் சட்டத்திற்கு உட்பட்டு செயற்படுகின்றன என்பது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த பிலதெல்பியா சபையானது ஒரு வயல் காணியில் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு யார் அனுமதி கொடுத்தது? நல்லூர் பிரதேச சபை அதற்கு அனுமதி கொடுத்தது என்றால் அதனை நிர்வகிப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பினரே.

அக்கட்சியில் உள்ளவர்களே இந்த ஆலயம் அமைப்பதற்கு அனுமதி கொடுத்துள்ளார்கள். எனவே இது தொடர்பாக விசேட ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்” என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

http://athavannews.com/வடக்கில்-மத-மாற்றத்தில்/

சச்சியர் நிச்சயமாக இரு பகுதியினரும் கைகலப்பில் ஈடுபடும்வரை நிறுத்தமாட்டார் போல தோன்றுகிறது. ஆணைக்குழு அமைக்குமாறு கோருவது அவருடைய உரிமை. ஆனால் அதை எங்கு நின்று கூறுகிறார் என்பது பிரச்சனையான விடயம். ☹️

ஒரு மத நிறுவனத்திற்கு முன்பு நின்று அதற்கெதிராக கருத்து தெரிவிக்கும் அளவு துணிச்சல் உள்ளதென்றால், அங்கு நின்று கூறினாலும் அடிவிழாது என்கின்ற நம்பிக்கை உள்ளதென்றால் அந்த அளவில் மத சகிப்புத்தன்மை எமது சமூகத்தில் உள்ளதென்று பொருள். 👍

அந்த சகிப்புத்தன்மையை இல்லதொழித்துவிடுவார் போலுள்ளது. ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

sachi.jpg

வடக்கில் மதமாற்றத்தில் ஈடுபடும் சபையினருக்கு எதிராக விசேட ஆணைக்குழு ஒன்று நிறுவப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என சிவசேனா அமைப்பினை சேர்ந்த மறவன்புலவு சச்சிதானந்தம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்றைய தினம் யாழ் அரியாலையில் உள்ள பில் தெனியா ஆலயத்திற்கு முன்னால் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வடக்கில் மதமாற்ற சபைகள் நிறைந்து காணப்படுகின்றன. அவை எந்த சட்டத்திற்கு உட்பட்டு செயற்படுகின்றன என்பது தொடர்பில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பில்தெனியா ஆலயமானது ஒரு வயல் காணியில் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு யார் அனுமதி கொடுத்தது. நல்லூர் பிரதேச சபை என்றால் அதனை நிர்வகிப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே. இந்த மத மாற்றத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் சுமந்திரன் போன்றவர்கள் உள்ள கட்சியினர்தான் இந்த ஆலயம் அமைப்பதற்கு அனுமதி கொடுத்துள்ளார்கள். எனவே இது தொடர்பில் விசேட ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

add.gif
Link to comment
Share on other sites

மேலே உள்ள ஒளிப்பதிவில் உள்ளவர் உண்மையிலேயே ஒரு சிங்களவர் தானா ? என்றும் 
அவர் உண்மையிலேயே இலங்கையில் தானா உள்ளார் ? என்றும் கேட்கத்தோன்றுகின்றது.

அவரின் கோபம் ஒரு நடிப்பு போன்றும் அவரின் ஆங்கிலம் புலம்பெயர் தேசம் ஒன்றில் உள்ளவர் போன்றும் தெரிகிறது. 

45 minutes ago, பெருமாள் said:

வடக்கில் மதமாற்றத்தில் ஈடுபடும் சபையினருக்கு எதிராக விசேட ஆணைக்குழு ஒன்று நிறுவப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என சிவசேனா அமைப்பினை சேர்ந்த மறவன்புலவு சச்சிதானந்தம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை என்ற மக்களாட்சி ஒற்றையாட்சி  பௌத்த மேலாதிக்க நாட்டில் - மத சுதந்தரம் பெயரளவில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தங்கள் மதங்களை தக்கவைக்க, சிறுபான்மை மதங்கள் அவரவர் வலிமைக்கு ஏற்ப போராடலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

****

2 hours ago, ampanai said:

மேலே உள்ள ஒளிப்பதிவில் உள்ளவர் உண்மையிலேயே ஒரு சிங்களவர் தானா ? என்றும் 
அவர் உண்மையிலேயே இலங்கையில் தானா உள்ளார் ? என்றும் கேட்கத்தோன்றுகின்றது.

அவரின் கோபம் ஒரு நடிப்பு போன்றும் அவரின் ஆங்கிலம் புலம்பெயர் தேசம் ஒன்றில் உள்ளவர் போன்றும் தெரிகிறது

இலங்கை என்ற மக்களாட்சி ஒற்றையாட்சி  பௌத்த மேலாதிக்க நாட்டில் - மத சுதந்தரம் பெயரளவில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தங்கள் மதங்களை தக்கவைக்க, சிறுபான்மை மதங்கள் அவரவர் வலிமைக்கு ஏற்ப போராடலாம்

உங்கள் அனுமானம் சரிபோலத்தான் படுகிறது 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

மேலே உள்ள ஒளிப்பதிவில் உள்ளவர் உண்மையிலேயே ஒரு சிங்களவர் தானா ? என்றும் 
அவர் உண்மையிலேயே இலங்கையில் தானா உள்ளார் ? என்றும் கேட்கத்தோன்றுகின்றது.

அவரின் கோபம் ஒரு நடிப்பு போன்றும் அவரின் ஆங்கிலம் புலம்பெயர் தேசம் ஒன்றில் உள்ளவர் போன்றும் தெரிகிறது. 

மன்னிக்கவும் அது தவறாக இணைக்கப்பட்டது சச்சியின்  ஒளிநாடா  இணைக்க மாறி வந்துவிட்டது நீங்கள்  பார்த்தது புலம் பெயர்  சிங்களவர்களால் திட்டமிடப்பட்டு செய்த வேலை .இப்போதைக்கு அது வேணாம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தாளுக்கு வேற வேலை இல்லை  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு நாளும் குறட்டை விட்டு நித்திரை கொண்டுவிட்டு இப்ப எழும்பி நின்று "காந்தி செத்துட்டாரா "கேட்க்கும்  கேஸ் இது .

இனி அல்லுலோயா கூட்டத்தை யாழ் சனம்  பார்த்துக்கொள்ளும் .இவர் எல்லைப்புறங்களில் உள்ள காணி பறித்து கொண்டிருக்கும் அல்லா கூட்டத்தையும்  கிண்ணியா வெந்நீர் ஊற்றுகளில் அடாத்தாக கட்டப்படும் புத்த கோவில் பக்கமும் போங்க என்று சொல்லி பாருங்க போகமாட்டார் இதெல்லாம் செத்த பாம்பை அடிக்கும் வீரம் .

வேட்டியை கழட்டி குடுத்து கொஞ்சநஞ்ச தமிழ் மானத்தையும்  கப்பல் ஏற்றியவர் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இவரை பிடிச்சு வெளுக்கணும் ...அவர்கள் செய்வது பிழை என்றால் ஒரு கேஸை போட்டு சட்ட ரீதியாய் அணுகலாம் 

 

Link to comment
Share on other sites

2 hours ago, பெருமாள் said:

இவ்வளவு நாளும் குறட்டை விட்டு நித்திரை கொண்டுவிட்டு இப்ப எழும்பி நின்று "காந்தி செத்துட்டாரா "கேட்க்கும்  கேஸ் இது .

இனி அல்லுலோயா கூட்டத்தை யாழ் சனம்  பார்த்துக்கொள்ளும் .இவர் எல்லைப்புறங்களில் உள்ள காணி பறித்து கொண்டிருக்கும் அல்லா கூட்டத்தையும்  கிண்ணியா வெந்நீர் ஊற்றுகளில் அடாத்தாக கட்டப்படும் புத்த கோவில் பக்கமும் போங்க என்று சொல்லி பாருங்க போகமாட்டார் இதெல்லாம் செத்த பாம்பை அடிக்கும் வீரம் .

வேட்டியை கழட்டி குடுத்து கொஞ்சநஞ்ச தமிழ் மானத்தையும்  கப்பல் ஏற்றியவர் 

இந்த கள்ள காணி திருடர்களை பற்றி இவர் வாய் திறக்க மாட்டர்.... ஏன் .. இவர்கள் இருவரையும் இயக்குபவர்கள் ஒருவரே. ஆனா தமிழ் கிறிஸ்த்தவர்களுடன் மல்லுக்கட்ட நிப்பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Dash said:

தமிழ் கிறிஸ்த்தவர்களுடன் மல்லுக்கட்ட நிப்பார்.

அவரை காட்சிக்கு கொண்டுவந்ததே தமிழர்களிடையே பிளவு உண்டு பண்ணவே .

அல்லோயாய  எல்லாம் எப்ப கிறிஸ்தவர்கள் ஆனார்கள் ?

Link to comment
Share on other sites

5 hours ago, பெருமாள் said:

அவரை காட்சிக்கு கொண்டுவந்ததே தமிழர்களிடையே பிளவு உண்டு பண்ணவே .

அல்லோயாய  எல்லாம் எப்ப கிறிஸ்தவர்கள் ஆனார்கள் ?

நீங்கள் பிழையாக எழுதி இருக்கிறீர்கள்। அல்லேலூயா எல்லாம் அப்போது கிறிஸ்தவர்கள் ஆனார்கள் என்பது பிழை। அல்லேலூயா எல்லோரும் கிறிஸ்தவர்கள்தான்। அரோகரா எல்லோரும் எப்போது கிறிஸ்தவர்கள் என்று கேட்டிருக்க வேண்டும்।

இருந்தாலும் சச்சி ஐயா மத ஒற்றுமையை வலியுறுத்தும் ஒரு நல்ல மனிதன்। இந்தியாவில் இப்போது சங்கிகள் எல்லாம் முஸ்லீம் ஆதரவு கோசம் போட ஆரம்பித்துவிடடார்கள்। அடிக்க வேண்டிய இடத்தில அடித்தால் எல்லாம் சரியாகிவிடும்। 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Kali said:

ஆகா, ஆகா, நிறைய பேருக்கு இருப்பு கொள்ளப்போவதில்லை.
உலகமே வேற பிரச்சினையில சிக்கி இருக்க ஐயா வேறை எங்கையோ கை வைக்கிறார்.  

வைத்திருக்கிற தடியை பிடுங்கி அடித்திருக்கனும், சும்மா ஊதிகிட்டு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Vankalayan said:

நீங்கள் பிழையாக எழுதி இருக்கிறீர்கள்। அல்லேலூயா எல்லாம் அப்போது கிறிஸ்தவர்கள் ஆனார்கள் என்பது பிழை। அல்லேலூயா எல்லோரும் கிறிஸ்தவர்கள்தான்। அரோகரா எல்லோரும் எப்போது கிறிஸ்தவர்கள் என்று கேட்டிருக்க வேண்டும்।

இருந்தாலும் சச்சி ஐயா மத ஒற்றுமையை வலியுறுத்தும் ஒரு நல்ல மனிதன்। இந்தியாவில் இப்போது சங்கிகள் எல்லாம் முஸ்லீம் ஆதரவு கோசம் போட ஆரம்பித்துவிடடார்கள்। அடிக்க வேண்டிய இடத்தில அடித்தால் எல்லாம் சரியாகிவிடும்। 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/4/2020 at 03:09, Vankalayan said:

நீங்கள் பிழையாக எழுதி இருக்கிறீர்கள்। அல்லேலூயா எல்லாம் அப்போது கிறிஸ்தவர்கள் ஆனார்கள் என்பது பிழை। அல்லேலூயா எல்லோரும் கிறிஸ்தவர்கள்தான்

உண்மை தான்.அல்லேலூயா யேசு உம்மை அழைக்கிறார் பிரிவுகளும் கிறிஸ்தவர்களே. எனக்கு மத பிரசாரம் செய்தவர் தாங்கள் தான் உண்மையான கிறிஸ்தவர்கள் என்று சொல்லி கொண்டார்.

On 29/4/2020 at 03:09, Vankalayan said:

அல்லேலூயா எல்லாம் அப்போது கிறிஸ்தவர்கள் ஆனார்கள் என்பது பிழை।

சிலர் எனது மதம் சைவம் நான் இந்து இல்லை என்று சொல்வதில்லையா அது மாதிரி நினைத்திருப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/4/2020 at 06:06, உடையார் said:

 

 

அரபு நாடு ஒன்றில் பல வருடங்கள் வேலைபார்க்கும் எனது உறவினரோடு கதைத்த போது இதைபற்றியும் கேட்டேன்.அவர் சொன்னவற்றில் இருந்து
அங்கே வேலை பார்க்கும் இந்திய தமிழர்களில் தனக்கு தெரிந்த வரை திமுக, காங்கிரஸ் ஆதரவானவர்கள் தான் அதிகம்.
அரபிகளை பொறுத்தவரை முஸ்லிம்கள் மற்றது Non-Muslim தான்.  வெள்ளைகார Non-Muslim க்கு மதிப்பு.
அரபியர்கள் ஆசிய முஸ்லிம்களை சிறிதும் மதிப்பது இல்லை அவர்கள் நல்லாக பந்தம் பிடித்தாலும். இளவரசியின் பேச்சு இந்திய இலங்கை அரசியல்வாதிகளின் பேச்சு போன்றது.

Link to comment
Share on other sites

28 minutes ago, விளங்க நினைப்பவன் said:

உண்மை தான்.அல்லேலூயா யேசு உம்மை அழைக்கிறார் பிரிவுகளும் கிறிஸ்தவர்களே. எனக்கு மத பிரசாரம் செய்தவர் தாங்கள் தான் உண்மையான கிறிஸ்தவர்கள் என்று சொல்லி கொண்டார்.

சிலர் எனது மதம் சைவம் நான் இந்து இல்லை என்று சொல்வதில்லையா அது மாதிரி நினைத்திருப்பார்கள்.

சைவத்துக்கும் இந்துவுக்கு என்ன வித்தியாசம்? எனக்கு தெரியாதபடியால் கேட்க்கிறேன்। 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Vankalayan said:

சைவத்துக்கும் இந்துவுக்கு என்ன வித்தியாசம்? எனக்கு தெரியாதபடியால் கேட்க்கிறேன்।

தமிழ் இணையங்களில் தான் எனது மதம் சைவம் நான் இந்து இல்லை என்று சிலர் சொல்வதை பார்த்திருக்கிறேன். வித்தியாசம் இருப்பது எனக்கு தெரியாது.

Link to comment
Share on other sites

8 hours ago, விளங்க நினைப்பவன் said:

தமிழ் இணையங்களில் தான் எனது மதம் சைவம் நான் இந்து இல்லை என்று சிலர் சொல்வதை பார்த்திருக்கிறேன். வித்தியாசம் இருப்பது எனக்கு தெரியாது.

நன்றி 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 17. MI என்று எழுதி  விடுங்கோ.  நன்றி 
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
    • "சிவப்பு உருவம்"   இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே இடம்பெற்றன. இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட்  மாதத்தில் கடுமையாக பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்து விடும். இப்படியான ஒரு கால கட்டத்தில் தான் நான், மலையகம் பகுதியில் தற்காலிகமாக வேலை நிமிர்த்தம் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன்.   நான் தங்கி இருந்த விடுதி, கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிப்பதுடன் ஒரு  நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப் பெற்றுள்ளது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. மொத்தத்தில்  புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசம் ஆகும். ஒரு வரவேற்பு கம்பளம் போல அமைக்கப் பட்ட மரகத பச்சை தேயிலை தோட்டங்களின் அழகை பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும். ஆமாம், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த தேயிலை தோட்டங்கள் இயற்கையாகவே காதலர்களின் கனவை நனவாக்குகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.   தேயிலை தோட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை செல்வி சயந்தியின் தொடர்பு, தற்செயலாக, அந்த பாடசாலையில் நடந்த தைப்பொங்கல் திருவிழா மூலம் கிடைத்தது. அவர் தான் அங்கு நடந்த நாட்டிய மற்றும் நாடகத்துக்கு பொறுப்பாக இருந்தார். அந்த நிகழ்வின் சிறப்புத் தன்மையை போற்ற அவரை சந்தித்தது, அவரின் அழகிலும் நடத்தையிலும் என்னை கவர வைத்து விட்டது. அதன் பின் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக இருவர் மனதிலும் மலர்ந்தது  .    "சிலுசிலு எனக் காற்று வீச கமகம என தேயிலை மணக்க  தொளதொள சட்டையில் வனப்பை காட்டி கிளுகிளுப்பு தந்து கூப்பிடுவது எனோ ?"   "தளதள ததும்பும் இளமை பருவமே   தகதக மின்னும் அழகிய மேனியே  சலசல என ஆறு பாய  வெலவெல என நடுங்குவது எனோ?"    "கலகல பேச்சு நெஞ்சை பறிக்க படபட என இமைகள் கொட்ட   கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி  சரசர என்று ஓடுவது ஏனோ ?"    ஒரு சனிக்கிழமை நாம் இருவரும் சந்தோசமாக தனியாக கழிக்க நுவரெலியா மாவட்டத்தில் ஹோட்டன் சமவெளியின் (Horton Plains) முடிவுடன் 1,200  மீட்டர் உயரத்தில், 700 - 1000 மீட்டர் செங்குத்து ஆழத்தைக் கொண்ட  உலக முடிவு [world's end] போய் பின், 19 மைல் நேரடி தூரத்தை அல்லது இருமடங்கு வீதி வழித் தூரத்தை கொண்ட  பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல [எல்லா / Ella] நகரம் சென்று அங்கு ஒரு நீரூற்றுக்கு அருகில் உள்ள 98 ஏக்கர் உல்லாசப் போக்கிடத்தில் [98 Acres Resort & Spa] தங்கி, ஞாயிறு மாலை அங்கிருந்து திரும்பினோம். இருவரும் மிக மகிழ்வாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் விடுதிகளுக்கு கால்நடையாக பேசிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். நாம் அந்த கும்மிருட்டில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரங்களுக்கிடையில் ஒரு மைல் நடக்கவேண்டும். ஆனால் எமக்கு அது பிரச்சனையாகவோ பயமாகவோ இருக்கவில்லை. அவள் அந்த ஊர் ஆசிரியை. நான் அந்த நகர பொறியியலாளர். எம்மை எல்லோருக்கும் தெரியும். அந்த ஊர் மக்கள் மிகவும் மரியாதையும் கண்ணியமும் ஆனவர்கள்.       ஆனால் எம் கணக்கு தப்பு என்பதை சிறிது தூரம் இருவரும் கைகள் கோர்த்தபடி இருட்டில் ஏதேதோ சந்தோசமாக பேசிக் கொண்டு போகும் பொழுது தான் சடுதியாகத் தெரிந்தது. கொஞ்ச தூரத்தில், மரங்களுக் கிடையில் சிவத்த சால்வை அல்லது  துப்பட்டா மட்டும் தலையை மூடி தொங்க, கைவிரல்கள் மட்டும் எதோ கையில் இருக்கும் சிறு ஒளியில் ஒளிர , ஒரே இருட்டான ஒரு சிவப்பு உருவம் எம்மை நோக்கி வருவதைக் கண்டோம்.     கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில், யாழ்ப்பாணம் உட்பட கிறீஸ் மனிதன் விவகாரம் அடிக்கடி பத்திரிகையில் வருவதைப் பார்த்துள்ளேன், ஆனால் இந்த சிவப்பு உருவம் ஒரு சிவப்பு துணியால் தலையை மூடி தொங்க விட்டுக் கொண்டு வருவது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை கிறீஸ் பூதத்தின் பரிணாமமாக இருக்கலாம்? அப்படியாயின் அவனை மடக்கி பிடிக்க முடியாது, அவன் உடல் வழுக்கும். ஆனால், அவன் சிவப்பு துணி தொங்க விட்டு வருவது எனக்கு சாதகமாக தெரிந்தது. அந்த துணியை வைத்தே அவனை மடக்க நான் தீர்மானித்தேன். ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டுவில் நான் நல்ல பயிற்சி பெற்றவன் என்பது எப்படி அவனுக்கு தெரியும்? காளைகளின் கொம்புகளை பிடித்து மடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கும் சிவப்பு நிற துணியை காளையிடம் காட்டி மடக்கும் ஸ்பெயின் நாட்டு விளையாட்டுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு என்ன தெரியும் ?. சிவப்பு துணியுடன் எம்மை நோக்கி வருகிறானே, இந்த சிவப்பு உருவம்!    நான் மிக நிதானமாக, ஆனால் அவசரமாக அவளிடம் எனது பையில் இருந்த சிகரெட் தீமூட்டியை கொடுத்து, பக்கத்தில் இருந்த மரத்தின் பின் ஒழிந்து இருந்து, அவன் என்னை நெருங்கும் பொழுது அதை தீம்மூடி அவனின் சிவப்பு துணிக்கு எரியூட்டக் கூடியதாக  எறியச் சொன்னேன். அவள் உயர் வகுப்புக்கு பிரயோக கணிதம் படிப்பிக்கும் ஆசிரியர் தானே, ஆகவே அவள் சரியாக செய்வாள் என்பதில் நல்ல நம்பிக்கை எனக்கு இருந்தது. அது மட்டும் அல்ல, பெரும்பாலான கிறீஸ் வகைகள் இலகுவாக எரியக்  கூடியவையும் ஆகும். நானும் கவனமாக அவன் நெருங்கும் பொழுது சிவப்பு துணியின் இரு தொங்களையும் தேவைப்பட்டால் பிடித்து இழுத்து, சிவத்த உருவத்தை  மடக்கி பிடிக்க ஆயத்தமாக முழு பலத்துடன் இருந்தேன்.   இந்த கிறீஸ் மர்ம மனிதர்கள் துட்டுகைமுனு அரசனின் வாளைத் தேடி அலைந்ததாக எத்தனை கதைகள் அன்று செய்திகளாக வந்தன. இது ஒன்றே இவர்கள் தமிழர்களை குறி வைத்து தாக்கியதுக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. எல்லாளனின் நீதியான, சமத்துவமான, எதிரியையும் மதிக்கும் திறமையான ஆட்சிக்கு எதிராகவே அன்று அவன் சைவ மதத்தான் என்ற ஒரே காரணத்தால் துட்டுகைமுனு அவனை எதிர்த்தான் என்பது வரலாறு. அப்ப சிங்களம் என்ற மொழி வளர்ச்சி அடையாத காலம். ஆகவே சிங்கள தமிழ் வேற்றுமை அங்கு இருக்க முடியாது. அது மட்டும் அல்ல துட்டுகைமுனு சிங்களவனாக இருக்கவும் முடியாது. அது தெரியாத முட்டால்கள் தான் இந்த கிறீஸ் பூதங்கள்!    எல்லாம் நாம் திட்டம் போட்ட படி  நிறைவேற, பாவம் அந்த சிவப்பு உருவம் என்னிடம் முறையாக அகப்பட்டார். என் நீள்காற் சட்டையின் வார், அந்த சிவப்பு உருவத்தை, ஒரு மரத்துடன் கட்ட உதவியது. அவன் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் சத்தம் போட, ஊர்க்காரர்கள் எல்லாம் திரண்டு விட்டார்கள். அதன் பின் எமக்கு என்ன வேலை. அவர்களிடம் மிகுதி பொறுப்பை கொடுத்து விட்டு நாம் எம் விடுதிகளுக்கு போனோம் . ஆனால் அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை!  ஆகவே அவளை என் விடுதியில் உறங்க சொல்லி விட்டு , காவலுக்கு அவள் பக்கத்திலேயே , அவளை, அவள் அழகை ரசித்தபடி, அந்த சிவப்பு உருவத்துக்கு நன்றி கூறிக்கொண்டு இருந்தேன்!!    "சயனகோலம் அவளின் அழகு கோலம்  சரிந்த படுக்கையில் தேவதை கோலம்  சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து  சங்கடம் தருகிறது அவளின் பார்வை"     "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா  சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில்  சற்று நானும் என்னை மறந்தேன்"     "சக்கர தோடு கழுத்தை தொட  சடை பின்னல் அவிழ்ந்து விழ  சலங்கை கால் இசை எழுப்ப  சங்காரம் செய்யுது இள நகை"   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.