Jump to content

வாழைப்பழ பணியாரம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

                                                                      இன்றைய ஸ்பெசல் வாழைப்பழ பணியாரம்.

D887-A695-5094-497-C-BB0-C-8-B53-E0-A73-

 

எமது வீட்டில் இடைஇடை செய்தாலும் எல்லா நேரங்களிலும் சரியாக வராது.அளவு என்று ஒன்றும் இதுவரை இல்லை.
சரி காணொளிகளைப் பார்த்து செய்வோம் என்று எண்ணி முதலில் யாழ்களத்தில் உறுப்பினராக உள்ள தாமரை என்பவரது கொணொளியை பார்த்தால் சில பொருட்கள் வாங்க வேண்டி இருந்தது.
இன்னொரு காணொயைப் பார்த்தால் சுலபமாகவும் இருந்த பொருட்களுடனே செய்யலாம்.

அந்த காணொளியையும் மேலே இணைத்துள்ளேன்.
அதில் எல்லாமே அவ சொன்ன மாதிரி செய்தேன்.ஆனாலும் தண்ணீருக்கு பதிலாக பால் விட்டேன்.தின்றது தான் தின்றது கொஞ்சம் ருசியாக சாப்பிடுவமே என்று தான்.
அடுத்து நான் கை பாவிக்கவில்லை.கறிக்கு பாவிக்கிற வளையாத கரண்டி இருந்தது.அதைப் பாவித்து குழைத்து சட்டிக்குள் போடும் போது தண்ணீருக்குள் தோய்த்து தோய்த்து எடுத்த மேசைக்கரண்டியைப் பாவித்தேன்.
நன்றாக இருந்தது ரெசிப்பியைத் தாங்கோ என்று வேறு வாங்கி வைத்துள்ளார்கள்
முக்கிய குறிப்பு
வாழைப்பழம்,மாவு,எண்ணெய்,சீனி
ஒன்றுக்குமே உதவாத சாமான்.
நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பகிர்வுக்கு. வாய்ப்பனும் இதுவும் ஓன்றுதானே. பாடசலை கன்ரீனில் இதுதான் மழிவு, நண்பர்களுடன் சுடச்சுட வாங்கி பிளேன்ரியுடன் சாப்பிட அந்த மாதிரி சுவை.  

புத்தன் & சாத்திரி பாடசலை வாய்ப்பனின் சுவை எப்படியிருந்தது?

 

 

Link to comment
Share on other sites

வாய்ப்பனும் வாழைப்பழ  பணியாரமும் சிறிது சிறிது  வேறுபாடும் . ஈழப்பிரியன்  இந்த முறையில் செய்து பாருங்கள்  ,பின்பு  எப்படி வருகிறது என சொல்லுங்கள் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி கேக் ஆக செய்தல் இன்னும் சுவையாக இருக்கும் ( எண்ணையில் பொறிக்க தேவை இல்லை )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Thamarai.k said:

வாய்ப்பனும் வாழைப்பழ  பணியாரமும் சிறிது சிறிது  வேறுபாடும் . ஈழப்பிரியன்  இந்த முறையில் செய்து பாருங்கள்  ,பின்பு  எப்படி வருகிறது என சொல்லுங்கள் .

 

நான் உங்கள் செய்முறையைத் தான் முதலில் பார்த்தேன்.ஆனாலும் செய்ய தேவையான பொருட்கள் இல்லை.
அதையும் மேலே எழுதியுள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

                                                                      இன்றைய ஸ்பெசல் வாழைப்பழ பணியாரம்.

D887-A695-5094-497-C-BB0-C-8-B53-E0-A73-

அடுத்து நான் கை பாவிக்கவில்லை.கறிக்கு பாவிக்கிற வளையாத கரண்டி இருந்தது.அதைப் பாவித்து குழைத்து சட்டிக்குள் போடும் போது தண்ணீருக்குள் தோய்த்து தோய்த்து எடுத்த மேசைக்கரண்டியைப் பாவித்தேன்.

ஈழப் பிரியன்.... நீங்கள் செய்த வாழைப்பழ பணியாரம் எல்லாம்,
ஒரே அளவில் உருண்டையாக உள்ளது.
அதற்கு நீங்கள் பாவித்த கரண்டி தான்... காரணம் என நினைக்கின்றேன்.

அந்த வளையாத கரண்டியின், படத்தையும்... போட்டு விடுங்களேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிலாமதி said:

இப்படி கேக் ஆக செய்தல் இன்னும் சுவையாக இருக்கும் ( எண்ணையில் பொறிக்க தேவை இல்லை )

ம் இதுவும் நல்லாத் தான் இருக்கு.தகவலுக்கு நன்றி நிலாமதி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Thamarai.k said:

வாய்ப்பனும் வாழைப்பழ  பணியாரமும் சிறிது சிறிது  வேறுபாடும் . ஈழப்பிரியன்  இந்த முறையில் செய்து பாருங்கள்  ,பின்பு  எப்படி வருகிறது என சொல்லுங்கள் .

 

ஓ அப்படியா, இதுவரை வீட்டில் செய்யவில்லை, செய்து பார்க்கனும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

ஈழப் பிரியன்.... நீங்கள் செய்த வாழைப்பழ பணியாரம் எல்லாம்,
ஒரே அளவில் உருண்டையாக உள்ளது.
அதற்கு நீங்கள் பாவித்த கரண்டி தான்... காரணம் என நினைக்கின்றேன்.

அந்த வளையாத கரண்டியின், படத்தையும்... போட்டு விடுங்களேன். :)

அடபாவி வீட்டில் மேசைக்கரண்டி இல்லையா?

குழைப்பதற்குத் தான் வளையாத கரண்டி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/4/2020 at 20:10, தமிழ் சிறி said:

ஈழப் பிரியன்.... நீங்கள் செய்த வாழைப்பழ பணியாரம் எல்லாம்,
ஒரே அளவில் உருண்டையாக உள்ளது.
அதற்கு நீங்கள் பாவித்த கரண்டி தான்... காரணம் என நினைக்கின்றேன்.

அந்த வளையாத கரண்டியின், படத்தையும்... போட்டு விடுங்களேன். :)

B38-F8818-1-CC3-4672-943-F-01-AB5402-B5-

நீங்க ஆசைப்பட்தால 
பொரிச்ச சட்டி
குழைத்த கரண்டி
அள்ளி போட்ட கரண்டி
போதுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

B38-F8818-1-CC3-4672-943-F-01-AB5402-B5-

நீங்க ஆசைப்பட்தால 
பொரிச்ச சட்டி
குழைத்த கரண்டி
அள்ளி போட்ட கரண்டி
போதுமா?

ஆஹா..... நன்றி, ஈழப்பிரியன். :)
எனக்கு இப்ப, அமெரிக்கன் அடுப்பையும்...பார்க்க 😆 வேண்டும் போலுள்ளதே.... 🤣

நியூயோர்க்குக்கு, மோகன் அண்ணா... வந்த போது,
அவர் பார்த்த, அடுப்பை... நாங்களும் பார்க்க,  ஆசையாக.. உள்ளது ஐயா. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் என்ன பெயர் சொல்லி அழைத்தாலும் இது வாய்ப்பன்தான், மிக நன்றாக இருக்கின்றது.....!  👍

வாழைப்பழ கேக்கும் சுலபமாய் செய்வதுபோல் நன்றாக இருக்கின்றது......!   👍 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/4/2020 at 21:05, ஈழப்பிரியன் said:

                                                                     

நல்லா வந்திருக்கு. எனக்கும் வாழைப்பழ பணியாரம் நல்ல விருப்பம். ஒரு நாளைக்கு செய்து பார்க்கவேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பணியாரம் நல்லாத்தான் வந்திருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்ததுக்கையே வெகு சுலபமான சாமான் இது தான்.
கையே வைக்காமல் செய்து முடித்தேன்.

2 hours ago, தமிழ் சிறி said:

நியூயோர்க்குக்கு, மோகன் அண்ணா... வந்த போது,
அவர் பார்த்த, அடுப்பை... நாங்களும் பார்க்க,  ஆசையாக.. உள்ளது ஐயா. :grin:

சிறி நான் இன்னமும் கலிபோர்ணியா தான்.

அன்பே நீ அங்கே

நான் இங்கே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.