Jump to content

அடுத்து வரும் ஒரு மாதத்திற்கு, இலங்கையை முற்றாக மூட வேண்டும் – துஷார ஹிந்துனில்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

 

அடுத்து வரும் ஒரு மாதத்திற்கு, இலங்கையை முற்றாக மூட வேண்டும் – துஷார ஹிந்துனில்

நாட்டின் பாரத்தூரத்தன்மையை உணர்ந்துக் கொண்டு, அடுத்து வரும் ஒரு மாதத்திற்கு இலங்கையை முற்றாக மூட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார ஹிந்துனில் தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“இன்று அதிகளவான கடற்படையினருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. கட்டுநாயக்க இராணுவ முகாமும் கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் முப்படையினர், பொலிஸார், வைத்தியர்கள், துப்புரவு பணியாளர்கள் என அனைவருக்கும் இன்று கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இவர்கள்தான் கொரோனாவுக்கு எதிராக போராடி மக்களை காப்பாற்றுகிறவர்கள்.

இவர்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளமை மிகவும் மோசமான விடயமாகும். இதற்கு அரசாங்கம்தான் பொறுப்புக் கூற வேண்டும். அவர்களுக்கான உரிய பாதுகாப்பு கருவிகள், முகக்கவசங்கள் என எதுவும் இல்லாமல் பரிசோதனை மேற்கொண்டமையே இதற்கான காரணமாகும்.

துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு கொரோனாவுடன் போராட முடியாது. இதற்கு சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவைப்படுகின்றது. விடுதலைப் புலிகளுடன் சண்டையிட்டதைப் போன்று, வைரஸுடன் சண்டையிட முடியாது.

கடற்படையினர் உள்ளிட்ட முப்படையினருக்கு இந்த தொற்று பரவியமைக்கான பொறுப்பை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷதான் ஏற்றுக் கொள்ள வேண்டும். நாம் இன்று பாரிய சவாலுக்கு முகம் கொடுத்து வருகிறோம். பாதுகாப்புத் துறையும், வைத்தியத் துறையும் இவ்வேளையில் பலமாக இருக்க வேண்டும்.

இந்த இரண்டு துறையும் பலவீனமடைந்த காரணத்தினால்தான் அமெரிக்காவின் நிலைமை தீவிரமடைந்தது. இதனை அரசாங்கம் உணர்ந்துக் கொள்ள வேண்டும். நாம் இவ்வேளையில் ஒன்றிணைய வேண்டும்.

நாம் கிராமங்களுக்குச் சென்று மக்களுக்கு பொருட்களை வழங்கத் தயாராக இருக்கிறோம். இதனால், நாட்டை ஒரு மாதத்திற்கு முழுமையாக மூடுவோம் என்று கேட்டுக் கொள்கிறேன்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/அடுத்து-வரும்-ஒரு-மாதத்த/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு கொரோனாவுடன் போராட முடியாது. இதற்கு சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவைப்படுகின்றது. விடுதலைப் புலிகளுடன் சண்டையிட்டதைப் போன்று, வைரஸுடன் சண்டையிட முடியாது.

யாரோ புலியை வென்ற எங்களுக்கு இந்த கொரானோ எல்லாம் சாதாரணம் என்றானுகள் இப்ப ஒரு மாத்திற்கு மூட சொல்கிறார்கள் 

நிவாரணம் கொடுங்கடா அரச ஊழியருக்கும் முடியல பொருட்கள் வேற கடைகளில் இல்ல குறைவாக இருக்கு ஒருமாதம் என்றால் ஏழைகள் வாழ்வு அதே கெதிதான் 😰

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

யாரோ புலியை வென்ற எங்களுக்கு இந்த கொரானோ எல்லாம் சாதாரணம் என்றானுகள் இப்ப ஒரு மாத்திற்கு மூட சொல்கிறார்கள் 

நிவாரணம் கொடுங்கடா அரச ஊழியருக்கும் முடியல பொருட்கள் வேற கடைகளில் இல்ல குறைவாக இருக்கு ஒருமாதம் என்றால் ஏழைகள் வாழ்வு அதே கெதிதான் 😰

இப்பவே பலர் கஷ்டப்படுகின்றார்கள் நிவாரணம் சரியாக கிடைக்காமல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, உடையார் said:

இப்பவே பலர் கஷ்டப்படுகின்றார்கள் நிவாரணம் சரியாக கிடைக்காமல்

எங்க அம்மா , மாமியார் குடும்பத்துக்கு இன்னும் நிவாரணம் கிடைக்கல நான் விடுங்கோ தேவையில்லை என்றேன் உடையார் ஆனால் நம்ம பெயரை பயன்படுத்தி யாரும் எடுத்துப்போவார்கள் என அம்மா சொல்கிறார் சுனாமியில் எங்கள் தந்தையின் பெயரை மாற்றியே கொள்ளையடித்தவர்கள் ஊரில் இருக்கிறார்கள் 

பிரதேச செயலாளரிடம் முறையிடுவோமென சொல்ல 1000 ரூபாவின் உணவு பொதி ஒன்று கிடைத்துள்ளது புலத்து தமிழர்கள் உதவிகள் சிலருக்கு  கிடைக்கிரது சிலருக்கு கிடைக்கல 

Link to comment
Share on other sites

3 hours ago, தமிழ் சிறி said:

“இன்று அதிகளவான கடற்படையினருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. கட்டுநாயக்க இராணுவ முகாமும் கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் முப்படையினர், பொலிஸார், என அனைவருக்கும் இன்று கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

சிறீலங்கா நாட்டில் மக்களைவிடவும் படையினருக்கு ஏன் இத்தனை பாதிப்பு என்பது இன்னுமா புரியவில்லை? இதெல்லாம் முள்ளிவாய்க்கால் அப்பாவி மக்கள் அழிப்பில் தேடிக்கொண்ட பாவம், சும்மா விடாது. தெய்வம் நின்று கொல்லும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Paanch said:

சிறீலங்கா நாட்டில் மக்களைவிடவும் படையினருக்கு ஏன் இத்தனை பாதிப்பு என்பது இன்னுமா புரியவில்லை? இதெல்லாம் முள்ளிவாய்க்கால் அப்பாவி மக்கள் அழிப்பில் தேடிக்கொண்ட பாவம், சும்மா விடாது. தெய்வம் நின்று கொல்லும். 

பாஞ்சர் பெற்றோல் விலை குறைவு என்டதுக்காக இப்படியா

Link to comment
Share on other sites

30 minutes ago, Paanch said:

சிறீலங்கா நாட்டில் மக்களைவிடவும் படையினருக்கு ஏன் இத்தனை பாதிப்பு என்பது இன்னுமா புரியவில்லை? இதெல்லாம் முள்ளிவாய்க்கால் அப்பாவி மக்கள் அழிப்பில் தேடிக்கொண்ட பாவம், சும்மா விடாது. தெய்வம் நின்று கொல்லும். 

நின்று கொன்ற அந்த தெய்வத்திற்கு  இந்த மக்கள் அழிப்பிற்கு கட்டளை கொடுத்தவர்களை தெரியவில்லை போலும். அதனால் தான் அவர்களுக்கு வெற்றியை கொடுத்திருக்கிறது.   

Link to comment
Share on other sites

29 minutes ago, சுவைப்பிரியன் said:

பாஞ்சர் பெற்றோல் விலை குறைவு என்டதுக்காக இப்படியா

விலை குறைவா...? சும்மாவே கிடைக்குமே நீச்சல் உடையில் சென்றால்! செய்தி ஒன்று பார்த்தேன் படத்துடன்.

BP_1_637097183333247905.-Then...-696x461.jpg 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

இப்பவே பலர் கஷ்டப்படுகின்றார்கள் நிவாரணம் சரியாக கிடைக்காமல்

எதோ நம்மால் முடிந்தது என்று இருபது மிக வறிய  குடும்பங்களை  தத்தெடுத்துள்ளேன்,
ஒவ்வொரு மாதமும் 2500/= பெறுமதியான உலர்  உணவு பொருட்கள் அடங்கிய பொதியை அவர்கள் எனது வீட்டிற்கு வந்து பெற்றுச்செல்லுமாறு வசதி செய்துள்ளேன் முதல் மாதம் வெற்றிகரமாக கடந்துள்ளது  ,புலம் பெயர் நல்ல உள்ளங்களும் இப்படி அவர்களால் முடிந்ததை செய்து அந்த மக்களுக்கு நம்பிக்கையூட்டலாமே 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, அக்னியஷ்த்ரா said:

எதோ நம்மால் முடிந்தது என்று இருபது மிக வறிய  குடும்பங்களை  தத்தெடுத்துள்ளேன்,
ஒவ்வொரு மாதமும் 2500/= பெறுமதியான உலர்  உணவு பொருட்கள் அடங்கிய பொதியை அவர்கள் எனது வீட்டிற்கு வந்து பெற்றுச்செல்லுமாறு வசதி செய்துள்ளேன் முதல் மாதம் வெற்றிகரமாக கடந்துள்ளது  ,புலம் பெயர் நல்ல உள்ளங்களும் இப்படி அவர்களால் முடிந்ததை செய்து அந்த மக்களுக்கு நம்பிக்கையூட்டலாமே 

மிகப்பெரிய உதவி இது இந்த இக்கட்டான சூழ்நிலையில். உங்கள் நல்ல உள்ளத்திற்கு நன்றாக இருப்பீர்கள் குடும்பத்துடன்.

நானும் என்னால் இயன்ற உதவியை மகளிர் இல்லத்திற்கு செய்தேன் நில்மினி தந்தார் https://mahalirillam.org/au/ , இன்னும் மூன்று கிழமையில் அடுத்த கட்டம் உதவனும் , உங்களுக்கு கஷ்டப்படும் நேர்மையான காப்பகங்கள் இருந்தால் பதிவிடுங்கள், பலர் உதவலாம் விரும்பிய காப்பகங்களுக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

எங்க அம்மா , மாமியார் குடும்பத்துக்கு இன்னும் நிவாரணம் கிடைக்கல நான் விடுங்கோ தேவையில்லை என்றேன் உடையார் ஆனால் நம்ம பெயரை பயன்படுத்தி யாரும் எடுத்துப்போவார்கள் என அம்மா சொல்கிறார் சுனாமியில் எங்கள் தந்தையின் பெயரை மாற்றியே கொள்ளையடித்தவர்கள் ஊரில் இருக்கிறார்கள் 

பிரதேச செயலாளரிடம் முறையிடுவோமென சொல்ல 1000 ரூபாவின் உணவு பொதி ஒன்று கிடைத்துள்ளது புலத்து தமிழர்கள் உதவிகள் சிலருக்கு  கிடைக்கிரது சிலருக்கு கிடைக்கல 

 உங்களுக்கு தெரிந்த நல்ல நேர்மையான அமைப்புகள் தெண்டு நிறுவனங்கள் விபரம் தெரிந்தால், இதில் பதிவிட்டுவிடுங்கள்,  பத்து பேரவது உதவுவார்கள் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, tulpen said:

நின்று கொன்ற அந்த தெய்வத்திற்கு  இந்த மக்கள் அழிப்பிற்கு கட்டளை கொடுத்தவர்களை தெரியவில்லை போலும். அதனால் தான் அவர்களுக்கு வெற்றியை கொடுத்திருக்கிறது.   

நீஙகள் ஏதோ ஒரு காரணமாக மிஸ்டர் கடவுள் மீது செம கடுப்பில் இருக்கிறீர்கள்.

ஒரு சரித்திர புத்தகம் வாசிக்கிறேன்.

ரோஜாக்களின் யுத்தம் என்பது இரு பிரபுக்களின் குடும்பத்தாருக்கு இடையே, யார் இங்கிலாந்து மன்னராவது அல்லது நீடிப்பது என்ற சண்டை.

முப்பது வருட சண்டை இறுதியாக, மூன்றாம் ரிட்சட் மன்னர் 1485ல் கொல்லப்பட, கென்றி மன்னராகிறார்.

தப்பும் மரணித்த அரசரின் படைவீரர்கள், எங்கேயோ அரசனை புதைத்து விட்டு ஓடுகிறார்கள். அந்த மன்னனின் உடலெச்சம் 529 ஆண்டுகள் பின்னர் கார்பார்க் தரிப்பிடம் ஒன்றை, கட்டிடம் அமைக்க தோண்டிய போது கிடைக்கிறது.

ஒரு மன்னனை எப்படி, ஒரு சாதாரண பிரபுவால் வீழ்த்த முடிந்தது என்று பார்த்தால், மன்னரின் கொடுமையான வேலை தெரிய வருகிறது.

அரசனாக இருந்த அவரது அண்ணன் இறந்து போக, குழந்தைகளாக இருந்த அண்ணன் பிள்ளைகள், குட்டி இளவரசர்கள் பெரியவர்கள் ஆகும் வரை தம்பி மன்னராகிறார்.

ரவர் ஆப் லண்டணில் தங்கி வளர்ந்து கொண்டிருந்த இளவரசர்கள், எங்கே என்று தெரியாமல் காணாமல் போகின்றார்கள்.

மன்னனும் முப்பது ஆண்டுகள் ஆட்சி புரிகிறார்.

நீண்டகாலத்தின் பின்னர், ரவர் ஆப் லண்டன் கோட்டை விஸ்தரிப்பின் போது, ஓரே பெட்டியில், சிறுவரின் எச்சம், கச்சிதமாக, சுவரினுள் வைத்து கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டன.

இன்றும், ரவர் ஆப் லண்டன் சரித்திரத்தில், அந்த சிறுவர்களின் அவல ஓலம் இரவு நேரத்தில் வருவதாக சொல்வார்கள்.

அந்த சிறுவர்களின் அவல கொலைகள், உடல் மறைப்பை, அதே மன்னரின் உடல் 529 ஆண்டுகள் கழித்தே 2014 ல் எடுக்கப்பட்டதையும், பின்னரே முறையான மரணசடங்குகள் நடந்ததையும் சேர்த்து, பறவைப்பார்வை (birds eye view) பார்த்தால், ஏதோ ஒன்று புரிகிறது.

ஆனாலும் அந்த முப்பதாண்டு காலத்தில், ஒரு துல்பன் இருந்து, கடவுளுக்கு கண் இல்லை  என்று நிச்சயமாக சொல்லி இருப்பார்.

அதன் பின்னர் , இங்கிலாந்து  அரச வரலாறில், இறந்துபோகும் மன்னரின் வாரிசு, ஒரே நாள் வயதாக இருந்தாலும் முடிசூட்டப்பட்டு, அந்த குழந்தை பெயரில் ஆட்சி நடக்கும் சம்பிரதாயம் வந்தது.

Link to comment
Share on other sites

7 hours ago, தமிழ் சிறி said:

இதனால், நாட்டை ஒரு மாதத்திற்கு முழுமையாக மூடுவோம் என்று கேட்டுக் கொள்கிறேன்“ எனக் குறிப்பிட்டுள்ளார்

நாடு பட்ட கடன் சுமைகளையும் அரசியல்வாதிகள் கட்டிவிடல் வேண்டும். 

7 hours ago, தமிழ் சிறி said:

நாம் கிராமங்களுக்குச் சென்று மக்களுக்கு பொருட்களை வழங்கத் தயாராக இருக்கிறோம்.

 

Link to comment
Share on other sites

4 hours ago, அக்னியஷ்த்ரா said:

எதோ நம்மால் முடிந்தது என்று இருபது மிக வறிய  குடும்பங்களை  தத்தெடுத்துள்ளேன்,
ஒவ்வொரு மாதமும் 2500/= பெறுமதியான உலர்  உணவு பொருட்கள் அடங்கிய பொதியை அவர்கள் எனது வீட்டிற்கு வந்து பெற்றுச்செல்லுமாறு வசதி செய்துள்ளேன் முதல் மாதம் வெற்றிகரமாக கடந்துள்ளது  ,புலம் பெயர் நல்ல உள்ளங்களும் இப்படி அவர்களால் முடிந்ததை செய்து அந்த மக்களுக்கு நம்பிக்கையூட்டலாமே 

இதில் உங்களுடன் நானும் இணைந்து கொள்ளலாமா? இன்னும் 10 குடும்பங்களை இணைத்து 30 குடும்பங்களுக்கு கொடுக்க முடியுமா?

Link to comment
Share on other sites

20 minutes ago, நிழலி said:

இதில் உங்களுடன் நானும் இணைந்து கொள்ளலாமா? இன்னும் 10 குடும்பங்களை இணைத்து 30 குடும்பங்களுக்கு கொடுக்க முடியுமா?

நிழலி யாழ் இணையத்தின் மூலமாக ஒரு பொதுவான உதவித்திட்டத்தை தொடர்சசியாக நடைமுறைப்படுத்த முடியாதா?( விரும்பியவர்கள் வருட சந்தா செலுத்துவதன் மூலம்)

Link to comment
Share on other sites

10 minutes ago, tulpen said:

நிழலி யாழ் இணையத்தின் மூலமாக ஒரு பொதுவான உதவித்திட்டத்தை தொடர்சசியாக நடைமுறைப்படுத்த முடியாதா?( விரும்பியவர்கள் வருட சந்தா செலுத்துவதன் மூலம்)

யாழ் இணையத்திற்கு விளம்பரம் மற்றும் அறிவித்தல்களை வழங்கும் போது செலுத்தப்படும் பணம், தாயகத்தில் உள்ள நலிவற்றவர்களுக்கே போய்ச் சேருகின்றது. இவ்வாறு அறிவித்தல்கள் விளம்பரங்கள் போட அவசியம் ஏற்படாமல் அதே நேரம் யாழினூடாக தாயகத்துக்கு உதவி செய்ய விரும்புவர்களுக்கான மாற்று வழி  இன்னும் இல்லை. இதை நடைமுறைப்படுத்துவதற்கு மனித வலு, முகாமைத்துவம், நிறைய நேரம், சட்ட ரீதியிலான சவால்கள் போன்ற நிறைய விடயங்கள் தேவைப்படும்.


இவற்றுக்கும் அப்பால் 'கேள்விகள் மட்டுமே கேட்கத் தெரிந்த மனிதர்கள்' அதிகம் இருக்கும் சமூகத்தில் இவற்றை செய்ய வெளிக்கிட்டு இருக்கும் நிம்மதியையும் தொலைக்க வேண்டி மோகனுக்கும் எமக்கும் வரலாம்.
 

Link to comment
Share on other sites

15 minutes ago, நிழலி said:

யாழ் இணையத்திற்கு விளம்பரம் மற்றும் அறிவித்தல்களை வழங்கும் போது செலுத்தப்படும் பணம், தாயகத்தில் உள்ள நலிவற்றவர்களுக்கே போய்ச் சேருகின்றது. இவ்வாறு அறிவித்தல்கள் விளம்பரங்கள் போட அவசியம் ஏற்படாமல் அதே நேரம் யாழினூடாக தாயகத்துக்கு உதவி செய்ய விரும்புவர்களுக்கான மாற்று வழி  இன்னும் இல்லை. இதை நடைமுறைப்படுத்துவதற்கு மனித வலு, முகாமைத்துவம், நிறைய நேரம், சட்ட ரீதியிலான சவால்கள் போன்ற நிறைய விடயங்கள் தேவைப்படும்.


இவற்றுக்கும் அப்பால் 'கேள்விகள் மட்டுமே கேட்கத் தெரிந்த மனிதர்கள்' அதிகம் இருக்கும் சமூகத்தில் இவற்றை செய்ய வெளிக்கிட்டு இருக்கும் நிம்மதியையும் தொலைக்க வேண்டி மோகனுக்கும் எமக்கும் வரலாம்.
 

நீங்கள் கூறுவதை விளங்கிக் கொள்ளுகிறேன். பல நடைமுறைச்சிக்கல்கள் உண்டு. ஆனால் விரும்பியவர்கள் பங்களிப்பு கொள்ளும் வகையில் வங்கிக்கணக்கை பிரசுரிப்பதன் முலம் தாங்கள் தற்போது செய்துவரும் உதவியை அப்படியே மேம்படுபடுத்தலாம் தானே. உ+ம் smartphone ல் share the meal app மூலம் விரும்பும் நேரத்தில் அழுத்துவதன் மூலம் மக்களுக்கு உதவ முடிகிறது.  அதைப் போல விரும்புபவர்கள் பங்கடுக்கலாம் தானே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Paanch said:

சிறீலங்கா நாட்டில் மக்களைவிடவும் படையினருக்கு ஏன் இத்தனை பாதிப்பு என்பது இன்னுமா புரியவில்லை? இதெல்லாம் முள்ளிவாய்க்கால் அப்பாவி மக்கள் அழிப்பில் தேடிக்கொண்ட பாவம், சும்மா விடாது. தெய்வம் நின்று கொல்லும். 

ம்ம்ம்....

இரதியின்ர வாய்க்கு அவல்....😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

இதில் உங்களுடன் நானும் இணைந்து கொள்ளலாமா? இன்னும் 10 குடும்பங்களை இணைத்து 30 குடும்பங்களுக்கு கொடுக்க முடியுமா?

நிச்சயமாக.... இதனை மட்டுவில் இருக்கும் எனது நண்பனுடன் சேர்ந்து ஒரு குழுவாக செய்கிறோம்..

அதாவது பொருட்களை  மொத்தமாக விற்பனை செய்யும் இரு நல்ல உள்ளங்கள் அவர்களது முழு இலாபத்தையும் தவிர்த்து கொள்முதல் விலைக்கே பொருட்களை தந்துதவுவதால் 1000 ரூபாய் பொதியை தயார் படுத்த எங்களுக்கு 900 ரூபாய் மட்டுமே செலவாகிறது.
ஆகவே உதாரணத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் பொதிகளை தயார் செய்தால் எங்களுக்கு மிஞ்சும் பணத்தை வைத்து மொத்தமாக 11 பொதிகளை தயார் செய்ய முடியும்.

2500 பொதி என்னும்போது மொத்தமாக ஒரு பொதியில் 250 ரூபாய் மிஞ்சும் 10 பொதி என்னும்போது மிஞ்சும் 2500 ஐ வைத்து 
மொத்தமாக 11 பொதிகளை செய்யலாம்.

எனது நண்பன் மட்டுநகரை சேர்ந்தவன் , அவனும் அவனது குழுவும் பணம் சேகரித்து ஒவ்வொரு தடவையும் குறைந்தது 250- ஆயிரம் ரூபாய் பொதிகளாவது செய்வார்கள்

எனது வதிவிடம் கல்முனை என்பதாலும் ,மற்றும் பொதியின் கனதி அதிகம் அத்துடன் நான் 20 பொதிகளை மட்டுமே கேட்டிருந்ததாலும் இந்த 20  பொதிகளை தனியாக செய்து வீட்டில் கொடுத்துவிடுவார். மிஞ்சும் 5000 ரூபாயில் 5 -ஆயிரம் ரூபாய் பொதிகளை செய்து அவர் விநியோகிக்கும் ஆயிரம் ரூபாய் பொதிகளுடன் சேர்த்து மட்டுவில் விநியோகம் செய்வார்.
மிகுதி விடயங்கள்,மற்றும் புகைப்படங்களை உங்களுக்கு தனி மடலில் தெரிவிக்கிறேன்

Link to comment
Share on other sites

2 hours ago, tulpen said:

நீங்கள் கூறுவதை விளங்கிக் கொள்ளுகிறேன். பல நடைமுறைச்சிக்கல்கள் உண்டு. ஆனால் விரும்பியவர்கள் பங்களிப்பு கொள்ளும் வகையில் வங்கிக்கணக்கை பிரசுரிப்பதன் முலம் தாங்கள் தற்போது செய்துவரும் உதவியை அப்படியே மேம்படுபடுத்தலாம் தானே. உ+ம் smartphone ல் share the meal app மூலம் விரும்பும் நேரத்தில் அழுத்துவதன் மூலம் மக்களுக்கு உதவ முடிகிறது.  அதைப் போல விரும்புபவர்கள் பங்கடுக்கலாம் தானே. 

முகப்பில் மேலுள்ள பன்னரை அழுத்தி கீழ்வரும் பக்கத்தில் 'இணைந்து கொள்ள' என்பதைத் தெரிவு செய்து, வாத்தோ விளம்பரமோ ஏதோவொன்றைத் தெரிவு செய்து, விடயம் / Body text என்பதில் 'யாழிணையம் மூலமான உதவி' என்று எழுதி நீங்கள் விரும்பிய தொகையை அனுப்பிவைக்கலாம் (ஏதாவது ஒரு படத்தையும் தரவேற்றலாம்). இந்த வகையில் விளம்பரமோ வாழ்த்தோ பிரசுரிக்கப் பட மாட்டாது. 
https://yarl.com/order/

நேரடி இணைப்பு : https://yarl.com/order/advert/

மரண அறிவித்தல், அஞ்சலி, நினைவஞ்சலி, வாழ்த்து, பிறந்தநாள் வாழ்த்து போன்றவற்றைப் பிரசுரிக்க விரும்புபவர்கள் சரியான தகவல்களைத் தரலாம். 

உவகை நிர்வாகியும் இது போன்றுதான் உதவும் நோக்கில் கருத்துக் களத்தில் கொரோனா விளிப்புணர்வு விளம்பரம் ஒன்றிற்கு அனுசரணை வழங்குகின்றார்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, அக்னியஷ்த்ரா said:

நிச்சயமாக.... இதனை மட்டுவில் இருக்கும் எனது நண்பனுடன் சேர்ந்து ஒரு குழுவாக செய்கிறோம்..

அதாவது பொருட்களை  மொத்தமாக விற்பனை செய்யும் இரு நல்ல உள்ளங்கள் அவர்களது முழு இலாபத்தையும் தவிர்த்து கொள்முதல் விலைக்கே பொருட்களை தந்துதவுவதால் 1000 ரூபாய் பொதியை தயார் படுத்த எங்களுக்கு 900 ரூபாய் மட்டுமே செலவாகிறது.
ஆகவே உதாரணத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் பொதிகளை தயார் செய்தால் எங்களுக்கு மிஞ்சும் பணத்தை வைத்து மொத்தமாக 11 பொதிகளை தயார் செய்ய முடியும்.

2500 பொதி என்னும்போது மொத்தமாக ஒரு பொதியில் 250 ரூபாய் மிஞ்சும் 10 பொதி என்னும்போது மிஞ்சும் 2500 ஐ வைத்து 
மொத்தமாக 11 பொதிகளை செய்யலாம்.

எனது நண்பன் மட்டுநகரை சேர்ந்தவன் , அவனும் அவனது குழுவும் பணம் சேகரித்து ஒவ்வொரு தடவையும் குறைந்தது 250- ஆயிரம் ரூபாய் பொதிகளாவது செய்வார்கள்

எனது வதிவிடம் கல்முனை என்பதாலும் ,மற்றும் பொதியின் கனதி அதிகம் அத்துடன் நான் 20 பொதிகளை மட்டுமே கேட்டிருந்ததாலும் இந்த 20  பொதிகளை தனியாக செய்து வீட்டில் கொடுத்துவிடுவார். மிஞ்சும் 5000 ரூபாயில் 5 -ஆயிரம் ரூபாய் பொதிகளை செய்து அவர் விநியோகிக்கும் ஆயிரம் ரூபாய் பொதிகளுடன் சேர்த்து மட்டுவில் விநியோகம் செய்வார்.
மிகுதி விடயங்கள்,மற்றும் புகைப்படங்களை உங்களுக்கு தனி மடலில் தெரிவிக்கிறேன்

நன்றி பகிர்வுக்கு,  அக்னியஷ்த்ரா நானும் உங்களுடன் பங்கு கொள்ளாமா? எனக்கும் தனிமடலில் விபரத்தை தரும், என் உதவி தொகையை உமக்கு அனுப்பிடுகின்றேன் அல்லது தாயக கணக்கிற்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/4/2020 at 15:32, உடையார் said:

 உங்களுக்கு தெரிந்த நல்ல நேர்மையான அமைப்புகள் தெண்டு நிறுவனங்கள் விபரம் தெரிந்தால், இதில் பதிவிட்டுவிடுங்கள்,  பத்து பேரவது உதவுவார்கள் 

 

 

அமைப்புக்கள் உதவுகிறது சிலது அவர்களுக்கு தெரிந்தவர்களுக்கு மட்டும்  சிலது நேர்னையற்றது முடிந்தால் சொந்தக்காரர் ஊடாக செய்யுங்கள் அதுவும் அவர்களுக்கு தெரிந்தவ்ர்களுக்கு மட்டும் அப்படி உதவி செய்ய போனாலும் கிராமசேவகர் நான் தரும் பெயர் லிஸ்டுக்குத்தான் கொடுங்கள்  என்ற கதையும் போகிறது உடையார் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.