Jump to content

நவாலி சிலோன் மிசன் இடுகாடு விஷமிகளினால் சேதமாக்கப்பட்டது!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நவாலி சிலோன் மிசன் இடுகாடு விஷமிகளினால் சேதமாக்கப்பட்டது!

யாழ்ப்பாணம் – வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட நவாலி பகுதியில் அமைந்துள்ள அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபைக்கு சொந்தமான இடுகாட்டில் சில நினைவுத் தூபிகள் விசமிகளால் சேதமாக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (01) மாலை இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு வருகைதந்த மானிப்பாய் பிரதேச சபை தவிசாளர் அ.ஜெபநேசன் குறித்த விடையம் தொடர்பாக ஆராய்ந்திருந்துள்ளார்.

குறித்த விடையம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

  • 20200502_093006-1024x473.jpg?189db0&189d
  • 20200502_095322-1024x473.jpg?189db0&189d
  • 20200502_092711-1024x473.jpg?189db0&189d
  • IMG-20200502-WA0016-1024x768.jpg?189db0&
  • 20200502_092820-1024x473.jpg?189db0&189d
 
 
 

https://newuthayan.com/நவாலி-சிலோன்-மிசன்-இடு/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரரின் கல்லறைகளை சேதப்படுத்திய இராணுவத்தின் செயலுக்கும், இவர்களின்  இந்த ஈன செயலுக்கும் வித்தியாசம் இல்லை. வாழ்வை முடித்து மண்ணில் அமைதியில் உறங்குபவர்களை, ஏன் இப்படி அலைக்கழித்து தம்மையே இழிவு படுத்திக்கொள்கிறார்கள்? 

Link to comment
Share on other sites

போதையில் திரியும் சொறிலங்கா ராணுவம் இதையும் மாவீரர் கல்லறை என்டு நினைச்சிருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திட்டமிட்டு செய்கிறார்கள் போலுள்ளது. 😡

மானிப்பாய், நவாலி, ஆனைக்கோட்டை பிரதேசத்தில் மக்கள் எந்தவித சமய வேறுபாடுகளுமின்றி (நானறிந்த வகையில்) அன்னியோன்னியமாகப் பழகுகின்றனர்.🙂

இதனைக் குழப்பும் முயற்சியாக இருக்கலாம். 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான செய்தி போனவருடமும் படித்த சேதிபோல இருக்கு 

தற்போது மயானங்களில் கல்லறைகள் கட்டத்தடை எங்கள் பகுதியில் கட்டியது மட்டும் இருக்கிறது காரணம் இடப்பற்றாக்குறை 

எங்கள் ஊரில் பெட்டி கூட மண்ணில் புதைப்பதில்லை அதை மயானத்தின் ஒரு பகுதியில் எரித்துவிட்டு வருவோம் சில நேரம் மீள் சுழற்ச்சிக்கு எடுத்து செல்கிறார்கள் சிலர் அதனால் 

Link to comment
Share on other sites

சிலர் ராணுவத்தின்மீது போட்டுவிட்டு தப்ப பார்க்கிறர்கள்। உண்மையை ஏற்றுக்கொள்ள சிலருக்கு கஷ்ட்டமாக இருக்கிறது। இருந்தாலும் இங்குள்ள மக்களுக்கு எது உண்மை என்று தெரியும்। இதுதான் கிறிஸ்தவர்களின் நிலைமை। மயானத்தில் கூட நிம்மதியாக இருக்கமுடியாது நிலைமை। 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kapithan said:

திட்டமிட்டு செய்கிறார்கள் போலுள்ளது. 😡

மானிப்பாய், நவாலி, ஆனைக்கோட்டை பிரதேசத்தில் மக்கள் எந்தவித சமய வேறுபாடுகளுமின்றி (நானறிந்த வகையில்) அன்னியோன்னியமாகப் பழகுகின்றனர்.🙂

இதனைக் குழப்பும் முயற்சியாக இருக்கலாம். 🤔

கல்லறைகள் போற்றப்படுகின்றன. கல்லறைகளை பஸ்ஸிலோ எந்த வாகனத்தில் போனாலும் பிரார்த்திக்கின்றது வழக்கம், இது பலர் சிங்களவர் கூட.

சிங்கள காடையர் எங்கள் மாவீர ர்களது கல்லறைகளை உழுது இருந்த இடம் தெரியாமல் செய்துவிட்டார்கள், அனுபவிப்பார்கள் சாக முதல்😡😡

Link to comment
Share on other sites

21 hours ago, உடையார் said:

குறித்த விடையம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தலைநகரம் உட்பட பல இடங்களில் நடாத்திய சூத்திரதாரிகள்  யார் என இன்னமும் தெரியா நிலையில், அவர்களின் வேலையாக ஏன் இருக்காது? 

Link to comment
Share on other sites

தமிழின விரோதிகளின் செயல்கள் கடும் கண்டனத்துக்குரியது.

இவை தமிழின விரோதிகளின் திட்டமிட்ட நடவடிக்கைகளாக இருக்கும் சாத்தியம் அதிகம்.

சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதக் கும்பலின் ஒரு கைகூலிக் கும்பல் இவ்வாறான நாசகார வேலைகளை செய்ய சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதக் கும்பலின் இன்னொரு கைகூலிக் கும்பல் இதை திரித்து சமூக முரண்பாடுகளை தோற்றுவிக்கும் கைங்கரியங்களில் ஈடுபட முயல்வதற்குரிய அறிகுறிகள் தெரிகின்றன.

Link to comment
Share on other sites

தனக்கு தனக்கு என்றால் சுளகு படக்கு படக்கு என்குமாம்। இதில் கருது எழுதுபவர்களின் கருத்திலிருந்து யார் இதை உண்மையாய் செய்தவர்கள் என்பது நல்ல அறிவுள்ளவர்களுக்கு விளங்கும்। களவெடுத்த கள்ளன் களவெடுத்ததை ஒத்துக்கொள்ளவா போகிறான்। இன்னும் உடைச்சிப்போட்டு மத்தவனை கை நீட்டுங்கோ। அதுக்கும் பச்சை குத்த ஒரு கூடடம் இருக்கு।தொப்பி அளவாக இருந்தால் போட்டுக்கொள்ளவும்।  

Link to comment
Share on other sites

22 hours ago, போல் said:

சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதக் கும்பலின் ஒரு கைகூலிக் கும்பல் இவ்வாறான நாசகார வேலைகளை செய்ய சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதக் கும்பலின் இன்னொரு கைகூலிக் கும்பல் இதை திரித்து சமூக முரண்பாடுகளை தோற்றுவிக்கும் கைங்கரியங்களில் ஈடுபட முயல்வதற்குரிய அறிகுறிகள் தெரிகின்றன.

மிக அருமையான கருத்து. தொப்பி அளவா உள்ளவர்கள் படபடப்பில் தூக்கி போட்டுவிட்டனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/5/2020 at 06:54, Vankalayan said:

சிலர் ராணுவத்தின்மீது போட்டுவிட்டு தப்ப பார்க்கிறர்கள்। உண்மையை ஏற்றுக்கொள்ள சிலருக்கு கஷ்ட்டமாக இருக்கிறது। இருந்தாலும் இங்குள்ள மக்களுக்கு எது உண்மை என்று தெரியும்। இதுதான் கிறிஸ்தவர்களின் நிலைமை। மயானத்தில் கூட நிம்மதியாக இருக்கமுடியாது நிலைமை। 

இப்படித்தான் வவுணதீவு பொலிஸரணில் இருந்த பொலிசார் சுட்டுக்கொல்லப்பட்டதும் அது முன்னாள் புலி உறுப்பினர் எனவும் அவர்கிளிநொச்சியிலிருந்து வந்தவர் எனவும் கதைகள் அடிபட்டு கைதும் நடந்தன ஆனால் ஷகரானின் தாக்குதலின் பின்னரே அந்த தாக்குதலை செய்தவர்கள் யாரென கண்டுபிடிக்க முடிந்தது.

இனங்களுக்குள் சண்டையை தூண்டுபவர்கள் எங்கேயும் இருக்கலாம்  இதே தாக்குதல் போன வருடம் நடந்து உங்களுக்கு தெரியுமா வங்காலயன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

jaffna.jpg

நவாலியில் அமெரிக்கன் சிலோன் மிசனின் இடுகாட்டில் கல்வெட்டுகள் சேதம் – ஐவர் கைது

நவாலி அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபைக்கு சொந்தமான இடுகாட்டில் நினைவு கல்வெட்டுகள் சேதமாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேர் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது, கும்பல் ஒன்று இடுகாட்டில் வைத்து கள்ளு குடித்துவிட்டு கல்வெட்டுகளை சேதப்படுத்தியதாக விசாரணையில் தெரியவந்தது.

குறித்த கும்பலைச் சேர்ந்த 5 பேர் நேற்றிரவு மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஐவரும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

http://athavannews.com/நவாலியில்-அமெரிக்கன்-சில/

Link to comment
Share on other sites

இப்போது தெரியுதனே யார் இந்த அநியாயத்தை செய்தது என்று। இப்போது தொப்பியுடனேயே ஓடி விடுவார்கள்। இனி என்ன குடித்து விட்டு வெறியில் (மத) வந்து செய்தார்கள் என்று தொப்பியை மாற்றிவிடுவார்கள்। இந்த தி மு க காரரை திருத்தவே முடியாது। இருந்தாலும் இந்த காவலிகள் சடடப்படி தண்டிக்கப்பட வேண்டும்। எத்தியோப்பியன் தன் தோலையும் சிவிங்கி தன் புள்ளியை மாற்றினாலும் மாற்றும்। இவர்கள் திருந்தவே மாடடார்கள்। 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Vankalayan said:

எத்தியோப்பியன் தன் தோலையும் சிவிங்கி தன் புள்ளியை மாற்றினாலும் மாற்றும்। இவர்கள் திருந்தவே மாடடார்கள்। 

சாட்டையடி. இது பைபில் வசனம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Vankalayan said:

இப்போது தெரியுதனே யார் இந்த அநியாயத்தை செய்தது என்று। இப்போது தொப்பியுடனேயே ஓடி விடுவார்கள்। இனி என்ன குடித்து விட்டு வெறியில் (மத) வந்து செய்தார்கள் என்று தொப்பியை மாற்றிவிடுவார்கள்। இந்த தி மு க காரரை திருத்தவே முடியாது। இருந்தாலும் இந்த காவலிகள் சடடப்படி தண்டிக்கப்பட வேண்டும்। எத்தியோப்பியன் தன் தோலையும் சிவிங்கி தன் புள்ளியை மாற்றினாலும் மாற்றும்। இவர்கள் திருந்தவே மாடடார்கள்। 

இப்பவும் வெறியிலை செய்த ஆக்கள் குறிப்பிட்ட மதத்தினர் தான் என்று உங்களுக்கு எப்பிடி தெரியும்

Link to comment
Share on other sites

3 hours ago, வாதவூரான் said:

இப்பவும் வெறியிலை செய்த ஆக்கள் குறிப்பிட்ட மதத்தினர் தான் என்று உங்களுக்கு எப்பிடி தெரியும்

எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் குற்றம் சுமத்துவார்; ஆனால் கேதீஸ்வரத்தில் ஆதரத்துடன் நடந்த அப்பட்டமான வன்செயலுக்கு அண்ணர்  வாயே திறக்க மாட்டார்.

அதேபோல் அடாவடி மினிஸ்ட்டரின் ஆக்கள் மன்னார் முழுவதும் கிறிஸ்த்தவ மத சிலைகளை உடைத்த போது தேவாலயத்தின் மீது தாக்குதல் மேற்கொண்ட போது அண்ணருக்கு வராத கோபம் இங்க மட்டும் வந்து விடும்.

On 2/5/2020 at 16:26, Kapithan said:

திட்டமிட்டு செய்கிறார்கள் போலுள்ளது. 😡

மானிப்பாய், நவாலி, ஆனைக்கோட்டை பிரதேசத்தில் மக்கள் எந்தவித சமய வேறுபாடுகளுமின்றி (நானறிந்த வகையில்) அன்னியோன்னியமாகப் பழகுகின்றனர்.🙂

இதனைக் குழப்பும் முயற்சியாக இருக்கலாம். 🤔

சமய ரீதியாக தமிழ் மக்கள் மத்தியில் என்றும்  இருந்ததில்லை, ஆனால் இதை ஊக்குவிக்க சில கும்பல்கள் முயல்கின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Dash said:

எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் குற்றம் சுமத்துவார்; ஆனால் கேதீஸ்வரத்தில் ஆதரத்துடன் நடந்த அப்பட்டமான வன்செயலுக்கு அண்ணர்  வாயே திறக்க மாட்டார்.

அதேபோல் அடாவடி மினிஸ்ட்டரின் ஆக்கள் மன்னார் முழுவதும் கிறிஸ்த்தவ மத சிலைகளை உடைத்த போது தேவாலயத்தின் மீது தாக்குதல் மேற்கொண்ட போது அண்ணருக்கு வராத கோபம் இங்க மட்டும் வந்து விடும்.

சமய ரீதியாக தமிழ் மக்கள் மத்தியில் என்றும்  இருந்ததில்லை, ஆனால் இதை ஊக்குவிக்க சில கும்பல்கள் முயல்கின்றன.

Dash சமய ரீதியாக நான் அறிந்தவரை பிரச்சனைகள் இருந்ததில்லை, இப்பதான் சிலரின் தூண்டுதல்களால் இது நடக்கின்றது.

உங்களுக்கும் தெரிந்திருக்கும் மனிப்பாயில் எப்படி ஒற்றுமையாக வாழ்கின்றார்கள் என்று

Link to comment
Share on other sites

3 hours ago, வாதவூரான் said:

இப்பவும் வெறியிலை செய்த ஆக்கள் குறிப்பிட்ட மதத்தினர் தான் என்று உங்களுக்கு எப்பிடி தெரியும்

அது குழப்பங்களை உருவாக்க முயலும் கயவர்களின் கட்டுக்கதை.அதை தான் அவர்கள் கொஞ்ச காலமா இங்க உள்ள பாதாள குழுக்களின் உதவியுடன் செய்து வருகின்றனர்.

Link to comment
Share on other sites

16 hours ago, வாதவூரான் said:

இப்பவும் வெறியிலை செய்த ஆக்கள் குறிப்பிட்ட மதத்தினர் தான் என்று உங்களுக்கு எப்பிடி தெரியும்

மேலே உள்ள சில மத வெறியர்களின் கருத்தை வைத்து யார் செய்தார்கள் என்று நல்லாகவே தெரிகின்றது। கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • By KELUM BANDARA   Colombo, April 18 (Daily Mirror) - Sri Lanka is still at a loss to thwart the efforts by a city council in Canada to construct what it called a Tamil genocide monument, and to counter the allegations by the Canadian politicians, an informed source said . Brampton city council in Canada has approved the final design for the Tamil Genocide Memorial, a monument the city promised three years ago, according to foreign media. The media said it is a 4.8-metre tall stainless steel monument built in Chinguacousy Park in the Bramalea area to commemorate the lives lost in the Sri Lankan civil war — what many people in the Tamil community call a genocide. Canada's Parliament unanimously voted to recognize May 18 as Tamil Genocide Remembrance Day in 2022. A well placed diplomatic source said that Sri Lanka remains on high alert as Canadian leaders may make genocide allegations next month when the country marks the war victory. Last year, Canadian Prime Minister Justin Trudeau’s genocide accusations sparked a diplomatic dispute between the two nations. Sri Lanka responded with protests by summoning the Canadian envoy. A well-placed diplomatic source informed Daily Mirror yesterday that the Sri Lankan government is keen to ascertain whether such allegations will be repeated this time, despite previous protests by Sri Lanka. “Canadian leaders have a history of making such allegations, even though the Canadian federal government has concluded that the events in Sri Lanka during the war do not amount to genocide,” the official said. However, the official said Sri Lanka had been unable to thwart the efforts by the Brampton city council to construct the monument. The Canadian Federal government which rejected genocide allegations, however, has no jurisdiction over the city council making it difficult for Sri Lanka to stop the move. SL on alert on possible genocide allegations by Canada - Top Story | Daily Mirror
    • இதுக்கு மேலை விளங்கப் படுத்த எனக்குத் தெரியாது ராசா..... 🤣
    • மாதவன். யாழ்ப்பாணம் மணிக்கூட்டு கோபுரம் தொடக்கம் பண்ணை வரையான பகுதியை தூய்மையான சுற்றுலா வலையமாக்கும்  கலந்துரையாடல் யாழிலுள் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலின் போது கோடீஸ்வரன் றுசாங்கன் கருத்து தெரிவிக்கையில்; யாழ்ப்பாண மாநகரத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு ஏற்கனவே பல திட்டங்கள் வகுக்கப்பட்ட நிலையில் தற்போது அவை நடைமுறைப்படுத்தும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. அதன் முன்னேற்பாடாக உள்ளூர் சுற்றுலா ஊக்குவிப்பாளர்களுடன் இணைந்து மாநகரத்தின் சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்வதற்கும் வினை திறனாக செயல்படுத்துவதற்குமான கலந்துரையாடலாக பார்க்கிறேன். நாட்டின்  சுற்றுலா துறையை மேம்படுத்தும் தேவைப்பாடு அதிகரித்துள்ள நிலையில் யாழ். மாநகரமும் அத்தகைய செயல்பாட்டை முன்னெடுத்து வருகிறது. கடந்த 30ஆம் திகதி பூஜ்ஜிய கழிவு விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும்  யாழ். ஆரோக்கிய பவனி இடம்பெற்றது. யாழ்ப்பாண மாநகரத்தில் அடையாளப்படுத்தப்பட்ட பொது நூலகம், விளையாட்டு மைதானம் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளை தூய்மையாக்கும் சுற்றுலா அபிவிருத்தியில் ஈடுபடுத்தி அதன் மூலம் மாநகரத்தின் இயங்கு நிலை செலவினங்களை பெறும் முயற்சி தயாரிக்கப்பட்டு வருகிறது . ஆகவே யாழ்ப்பாண மாநகரத்தை தூய்மை ஆரோக்கியமான சுற்றுலா நகராக நகர் உருவாக்குவதற்கு யாழ். மாநகரசபை தனது முழுமையான பங்களிப்பை வழங்கும் என அவர் மேலும் தெரிவித்தார். குறித்த கலந்துரையாடலில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் கவிதா சிகரம் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கோடீஸ்வரன் றுசாங்கன்  மற்றும் தனியார் விருந்தினர் விடுதிகளின் உரிமையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். (ச) யாழ். நகரின் சுற்றுலாத்துறை தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்.! (newuthayan.com)
    • Published By: DIGITAL DESK 3 18 APR, 2024 | 11:56 AM   7 இலட்சம் சுற்றுலா பயணிகள் வருகை என்ற மைல்கல்லை இலங்கை 14  வாரங்களில் கடந்துள்ளது. ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மொத்தம்  718,315 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின்  தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. ஏப்ரல் மாதத்தின் முதல் 15 நாட்களில் 82,531 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இது நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வளர்ச்சி வேகம் சீராக இருப்பதை காட்டுகிறது. ஒரு வருடத்திற்கு முன்பு நாளாந்த சுற்றுலா பயணிகளின் வருகை 3000 ஆக குறைந்து இருந்த நிலையில், தற்போது ஏப்ரல் மாத்தில் 5,502 ஆக அதிகரித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் 168,539 ற்கும் 182,724 ற்கும் இடையில் சுற்றுலாப் பயணிகள் வருகையை இலங்கை இலக்காகக் கொண்டுள்ளது. இந்த இலக்கை அடைய நாளாந்தம் சராசரியாக 5,617 முதல் 6,090 வரை சுற்றுலாப் பயணிகள் வருகை தரவேண்டும். தற்போதைய வருகையின் வேகம் இலங்கை மாதத்திற்கான வருகை இலக்கின் கீழ் எல்லையை எட்டக்கூடும் என்பதைக் காட்டுகிறது. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தால் கடந்த ஆண்டு  ஏப்ரல் மாதம்  பதிவு செய்யப்பட்ட 105,498 சுற்றுலா பயணிகளின் வருகையை நாடு விஞ்சும்.  2018 ஆம் ஆண்டில் சுற்றுலா பயணகளின் வருகையை நாடு  அடைய மேம்பட்ட வேகம் தேவை. ஏப்ரல் மாத்தில் 17 சதவீதமான சுற்றுலா பயணிகள்  இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர். 11 சதவீதமான சுற்றுலா பயணிகள்  பிரித்தானியாவிலிருந்து வருகை தந்துள்ளனர். ஐக்கிய இராச்சியம் தனது பிரஜைகளுக்காக வெளியிட்டுள்ள இலங்கைக்கான பயண ஆலோசனையை (Travel Advisory) தளர்த்தியுள்ளமையினால் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளின் வருகை எதிர்பார்க்கப்படுகிறது. 10 சதவீதமான சுற்றுலா பயணிகள்  ரஷ்காவிலிருந்து  வருகை தந்துள்ளனர். ஜெர்மனி, பிரான்ஸ், அவுஸ்திரேலியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் தரவரிசையில் நான்காவது, ஐந்தாவது, ஆறாவது மற்றும் ஏழாவது இடங்களைப் பிடித்துள்ளன. 14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை | Virakesari.lk
    • Published By: DIGITAL DESK 7 18 APR, 2024 | 03:43 PM   கடந்த வருடங்களில் அதிகளவில் உயிரிழப்புக்கள் ஏற்பட்டமைக்கு பிரதான காரணம் மாரடைப்பு என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அத்தோடு, 2010 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலும் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு பிரதான காரணமும் மாரடைப்பு என்று சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. அதுமட்டுமன்றி, மாரடைப்பு ஏற்படுவதற்கு பிரதான காரணங்களாக ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள், உடல்  உறுப்புகளின் செயற்பாடுகள் பற்றிய கவனமின்மை, புகையிலை , போதைப்பொருள் பாவனை மற்றும் மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களினால் மாரடைப்பு ஏற்படுவதாகவும்  சுகாதாரத் துறை திணைக்களம் சுட்டிகாட்டியுள்ளது.    இலங்கையில் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு காரணம் மாரடைப்பு! | Virakesari.lk
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.