Jump to content

நவாலி சிலோன் மிசன் இடுகாடு விஷமிகளினால் சேதமாக்கப்பட்டது!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நவாலி சிலோன் மிசன் இடுகாடு விஷமிகளினால் சேதமாக்கப்பட்டது!

யாழ்ப்பாணம் – வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட நவாலி பகுதியில் அமைந்துள்ள அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபைக்கு சொந்தமான இடுகாட்டில் சில நினைவுத் தூபிகள் விசமிகளால் சேதமாக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (01) மாலை இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு வருகைதந்த மானிப்பாய் பிரதேச சபை தவிசாளர் அ.ஜெபநேசன் குறித்த விடையம் தொடர்பாக ஆராய்ந்திருந்துள்ளார்.

குறித்த விடையம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

  • 20200502_093006-1024x473.jpg?189db0&189d
  • 20200502_095322-1024x473.jpg?189db0&189d
  • 20200502_092711-1024x473.jpg?189db0&189d
  • IMG-20200502-WA0016-1024x768.jpg?189db0&
  • 20200502_092820-1024x473.jpg?189db0&189d
 
 
 

https://newuthayan.com/நவாலி-சிலோன்-மிசன்-இடு/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரரின் கல்லறைகளை சேதப்படுத்திய இராணுவத்தின் செயலுக்கும், இவர்களின்  இந்த ஈன செயலுக்கும் வித்தியாசம் இல்லை. வாழ்வை முடித்து மண்ணில் அமைதியில் உறங்குபவர்களை, ஏன் இப்படி அலைக்கழித்து தம்மையே இழிவு படுத்திக்கொள்கிறார்கள்? 

Link to comment
Share on other sites

போதையில் திரியும் சொறிலங்கா ராணுவம் இதையும் மாவீரர் கல்லறை என்டு நினைச்சிருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திட்டமிட்டு செய்கிறார்கள் போலுள்ளது. 😡

மானிப்பாய், நவாலி, ஆனைக்கோட்டை பிரதேசத்தில் மக்கள் எந்தவித சமய வேறுபாடுகளுமின்றி (நானறிந்த வகையில்) அன்னியோன்னியமாகப் பழகுகின்றனர்.🙂

இதனைக் குழப்பும் முயற்சியாக இருக்கலாம். 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான செய்தி போனவருடமும் படித்த சேதிபோல இருக்கு 

தற்போது மயானங்களில் கல்லறைகள் கட்டத்தடை எங்கள் பகுதியில் கட்டியது மட்டும் இருக்கிறது காரணம் இடப்பற்றாக்குறை 

எங்கள் ஊரில் பெட்டி கூட மண்ணில் புதைப்பதில்லை அதை மயானத்தின் ஒரு பகுதியில் எரித்துவிட்டு வருவோம் சில நேரம் மீள் சுழற்ச்சிக்கு எடுத்து செல்கிறார்கள் சிலர் அதனால் 

Link to comment
Share on other sites

சிலர் ராணுவத்தின்மீது போட்டுவிட்டு தப்ப பார்க்கிறர்கள்। உண்மையை ஏற்றுக்கொள்ள சிலருக்கு கஷ்ட்டமாக இருக்கிறது। இருந்தாலும் இங்குள்ள மக்களுக்கு எது உண்மை என்று தெரியும்। இதுதான் கிறிஸ்தவர்களின் நிலைமை। மயானத்தில் கூட நிம்மதியாக இருக்கமுடியாது நிலைமை। 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kapithan said:

திட்டமிட்டு செய்கிறார்கள் போலுள்ளது. 😡

மானிப்பாய், நவாலி, ஆனைக்கோட்டை பிரதேசத்தில் மக்கள் எந்தவித சமய வேறுபாடுகளுமின்றி (நானறிந்த வகையில்) அன்னியோன்னியமாகப் பழகுகின்றனர்.🙂

இதனைக் குழப்பும் முயற்சியாக இருக்கலாம். 🤔

கல்லறைகள் போற்றப்படுகின்றன. கல்லறைகளை பஸ்ஸிலோ எந்த வாகனத்தில் போனாலும் பிரார்த்திக்கின்றது வழக்கம், இது பலர் சிங்களவர் கூட.

சிங்கள காடையர் எங்கள் மாவீர ர்களது கல்லறைகளை உழுது இருந்த இடம் தெரியாமல் செய்துவிட்டார்கள், அனுபவிப்பார்கள் சாக முதல்😡😡

Link to comment
Share on other sites

21 hours ago, உடையார் said:

குறித்த விடையம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தலைநகரம் உட்பட பல இடங்களில் நடாத்திய சூத்திரதாரிகள்  யார் என இன்னமும் தெரியா நிலையில், அவர்களின் வேலையாக ஏன் இருக்காது? 

Link to comment
Share on other sites

தமிழின விரோதிகளின் செயல்கள் கடும் கண்டனத்துக்குரியது.

இவை தமிழின விரோதிகளின் திட்டமிட்ட நடவடிக்கைகளாக இருக்கும் சாத்தியம் அதிகம்.

சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதக் கும்பலின் ஒரு கைகூலிக் கும்பல் இவ்வாறான நாசகார வேலைகளை செய்ய சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதக் கும்பலின் இன்னொரு கைகூலிக் கும்பல் இதை திரித்து சமூக முரண்பாடுகளை தோற்றுவிக்கும் கைங்கரியங்களில் ஈடுபட முயல்வதற்குரிய அறிகுறிகள் தெரிகின்றன.

Link to comment
Share on other sites

தனக்கு தனக்கு என்றால் சுளகு படக்கு படக்கு என்குமாம்। இதில் கருது எழுதுபவர்களின் கருத்திலிருந்து யார் இதை உண்மையாய் செய்தவர்கள் என்பது நல்ல அறிவுள்ளவர்களுக்கு விளங்கும்। களவெடுத்த கள்ளன் களவெடுத்ததை ஒத்துக்கொள்ளவா போகிறான்। இன்னும் உடைச்சிப்போட்டு மத்தவனை கை நீட்டுங்கோ। அதுக்கும் பச்சை குத்த ஒரு கூடடம் இருக்கு।தொப்பி அளவாக இருந்தால் போட்டுக்கொள்ளவும்।  

Link to comment
Share on other sites

22 hours ago, போல் said:

சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதக் கும்பலின் ஒரு கைகூலிக் கும்பல் இவ்வாறான நாசகார வேலைகளை செய்ய சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதக் கும்பலின் இன்னொரு கைகூலிக் கும்பல் இதை திரித்து சமூக முரண்பாடுகளை தோற்றுவிக்கும் கைங்கரியங்களில் ஈடுபட முயல்வதற்குரிய அறிகுறிகள் தெரிகின்றன.

மிக அருமையான கருத்து. தொப்பி அளவா உள்ளவர்கள் படபடப்பில் தூக்கி போட்டுவிட்டனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/5/2020 at 06:54, Vankalayan said:

சிலர் ராணுவத்தின்மீது போட்டுவிட்டு தப்ப பார்க்கிறர்கள்। உண்மையை ஏற்றுக்கொள்ள சிலருக்கு கஷ்ட்டமாக இருக்கிறது। இருந்தாலும் இங்குள்ள மக்களுக்கு எது உண்மை என்று தெரியும்। இதுதான் கிறிஸ்தவர்களின் நிலைமை। மயானத்தில் கூட நிம்மதியாக இருக்கமுடியாது நிலைமை। 

இப்படித்தான் வவுணதீவு பொலிஸரணில் இருந்த பொலிசார் சுட்டுக்கொல்லப்பட்டதும் அது முன்னாள் புலி உறுப்பினர் எனவும் அவர்கிளிநொச்சியிலிருந்து வந்தவர் எனவும் கதைகள் அடிபட்டு கைதும் நடந்தன ஆனால் ஷகரானின் தாக்குதலின் பின்னரே அந்த தாக்குதலை செய்தவர்கள் யாரென கண்டுபிடிக்க முடிந்தது.

இனங்களுக்குள் சண்டையை தூண்டுபவர்கள் எங்கேயும் இருக்கலாம்  இதே தாக்குதல் போன வருடம் நடந்து உங்களுக்கு தெரியுமா வங்காலயன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

jaffna.jpg

நவாலியில் அமெரிக்கன் சிலோன் மிசனின் இடுகாட்டில் கல்வெட்டுகள் சேதம் – ஐவர் கைது

நவாலி அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபைக்கு சொந்தமான இடுகாட்டில் நினைவு கல்வெட்டுகள் சேதமாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேர் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது, கும்பல் ஒன்று இடுகாட்டில் வைத்து கள்ளு குடித்துவிட்டு கல்வெட்டுகளை சேதப்படுத்தியதாக விசாரணையில் தெரியவந்தது.

குறித்த கும்பலைச் சேர்ந்த 5 பேர் நேற்றிரவு மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஐவரும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

http://athavannews.com/நவாலியில்-அமெரிக்கன்-சில/

Link to comment
Share on other sites

இப்போது தெரியுதனே யார் இந்த அநியாயத்தை செய்தது என்று। இப்போது தொப்பியுடனேயே ஓடி விடுவார்கள்। இனி என்ன குடித்து விட்டு வெறியில் (மத) வந்து செய்தார்கள் என்று தொப்பியை மாற்றிவிடுவார்கள்। இந்த தி மு க காரரை திருத்தவே முடியாது। இருந்தாலும் இந்த காவலிகள் சடடப்படி தண்டிக்கப்பட வேண்டும்। எத்தியோப்பியன் தன் தோலையும் சிவிங்கி தன் புள்ளியை மாற்றினாலும் மாற்றும்। இவர்கள் திருந்தவே மாடடார்கள்। 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Vankalayan said:

எத்தியோப்பியன் தன் தோலையும் சிவிங்கி தன் புள்ளியை மாற்றினாலும் மாற்றும்। இவர்கள் திருந்தவே மாடடார்கள்। 

சாட்டையடி. இது பைபில் வசனம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Vankalayan said:

இப்போது தெரியுதனே யார் இந்த அநியாயத்தை செய்தது என்று। இப்போது தொப்பியுடனேயே ஓடி விடுவார்கள்। இனி என்ன குடித்து விட்டு வெறியில் (மத) வந்து செய்தார்கள் என்று தொப்பியை மாற்றிவிடுவார்கள்। இந்த தி மு க காரரை திருத்தவே முடியாது। இருந்தாலும் இந்த காவலிகள் சடடப்படி தண்டிக்கப்பட வேண்டும்। எத்தியோப்பியன் தன் தோலையும் சிவிங்கி தன் புள்ளியை மாற்றினாலும் மாற்றும்। இவர்கள் திருந்தவே மாடடார்கள்। 

இப்பவும் வெறியிலை செய்த ஆக்கள் குறிப்பிட்ட மதத்தினர் தான் என்று உங்களுக்கு எப்பிடி தெரியும்

Link to comment
Share on other sites

3 hours ago, வாதவூரான் said:

இப்பவும் வெறியிலை செய்த ஆக்கள் குறிப்பிட்ட மதத்தினர் தான் என்று உங்களுக்கு எப்பிடி தெரியும்

எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் குற்றம் சுமத்துவார்; ஆனால் கேதீஸ்வரத்தில் ஆதரத்துடன் நடந்த அப்பட்டமான வன்செயலுக்கு அண்ணர்  வாயே திறக்க மாட்டார்.

அதேபோல் அடாவடி மினிஸ்ட்டரின் ஆக்கள் மன்னார் முழுவதும் கிறிஸ்த்தவ மத சிலைகளை உடைத்த போது தேவாலயத்தின் மீது தாக்குதல் மேற்கொண்ட போது அண்ணருக்கு வராத கோபம் இங்க மட்டும் வந்து விடும்.

On 2/5/2020 at 16:26, Kapithan said:

திட்டமிட்டு செய்கிறார்கள் போலுள்ளது. 😡

மானிப்பாய், நவாலி, ஆனைக்கோட்டை பிரதேசத்தில் மக்கள் எந்தவித சமய வேறுபாடுகளுமின்றி (நானறிந்த வகையில்) அன்னியோன்னியமாகப் பழகுகின்றனர்.🙂

இதனைக் குழப்பும் முயற்சியாக இருக்கலாம். 🤔

சமய ரீதியாக தமிழ் மக்கள் மத்தியில் என்றும்  இருந்ததில்லை, ஆனால் இதை ஊக்குவிக்க சில கும்பல்கள் முயல்கின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Dash said:

எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் குற்றம் சுமத்துவார்; ஆனால் கேதீஸ்வரத்தில் ஆதரத்துடன் நடந்த அப்பட்டமான வன்செயலுக்கு அண்ணர்  வாயே திறக்க மாட்டார்.

அதேபோல் அடாவடி மினிஸ்ட்டரின் ஆக்கள் மன்னார் முழுவதும் கிறிஸ்த்தவ மத சிலைகளை உடைத்த போது தேவாலயத்தின் மீது தாக்குதல் மேற்கொண்ட போது அண்ணருக்கு வராத கோபம் இங்க மட்டும் வந்து விடும்.

சமய ரீதியாக தமிழ் மக்கள் மத்தியில் என்றும்  இருந்ததில்லை, ஆனால் இதை ஊக்குவிக்க சில கும்பல்கள் முயல்கின்றன.

Dash சமய ரீதியாக நான் அறிந்தவரை பிரச்சனைகள் இருந்ததில்லை, இப்பதான் சிலரின் தூண்டுதல்களால் இது நடக்கின்றது.

உங்களுக்கும் தெரிந்திருக்கும் மனிப்பாயில் எப்படி ஒற்றுமையாக வாழ்கின்றார்கள் என்று

Link to comment
Share on other sites

3 hours ago, வாதவூரான் said:

இப்பவும் வெறியிலை செய்த ஆக்கள் குறிப்பிட்ட மதத்தினர் தான் என்று உங்களுக்கு எப்பிடி தெரியும்

அது குழப்பங்களை உருவாக்க முயலும் கயவர்களின் கட்டுக்கதை.அதை தான் அவர்கள் கொஞ்ச காலமா இங்க உள்ள பாதாள குழுக்களின் உதவியுடன் செய்து வருகின்றனர்.

Link to comment
Share on other sites

16 hours ago, வாதவூரான் said:

இப்பவும் வெறியிலை செய்த ஆக்கள் குறிப்பிட்ட மதத்தினர் தான் என்று உங்களுக்கு எப்பிடி தெரியும்

மேலே உள்ள சில மத வெறியர்களின் கருத்தை வைத்து யார் செய்தார்கள் என்று நல்லாகவே தெரிகின்றது। கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.