Jump to content

அகில இலங்கை இந்து மாமன்றத்தினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு!


Recommended Posts

In இலங்கை     May 2, 2020 12:10 pm GMT     0 Comments     1076     by : Litharsan

அகில இலங்கை இந்து மாமன்றத்தினால் தெனியாய பிரதேசத்து மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது நிலவும் நெருக்கடி நிலையில் வறுமை நிலையில் உள்ள தெனியாய பிரதேசத்தில் உள்ள பெருந்தோட்டப் பகுதி மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் இன்று (சனிக்கிழமை) வழங்கப்பட்டன.

இதன்போது தெனியாய பிரதேசத்தில் உள்ள சுமார் 500இற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இந்த நிவாரணப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.

நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸின் காரணமாக அன்றாடம் பொருளாதார ரீதியாக பல குடும்பங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றனர்.

நாளாந்த கூலித் தொழில் புரியும் பலர் தமது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் குறித்த குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்கும் பணியில் பல்வேறு அமைப்புக்கள் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Peoples-Help-All-Ceylon-Hindu-Congress-D

Peoples-Help-All-Ceylon-Hindu-Congress-D

Peoples-Help-All-Ceylon-Hindu-Congress-D

Peoples-Help-All-Ceylon-Hindu-Congress-D

Link to comment
Share on other sites

3 hours ago, Rajesh said:

நாளாந்த கூலித் தொழில் புரியும் பலர் தமது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் குறித்த குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்கும் பணியில் பல்வேறு அமைப்புக்கள் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சமுதாயத்தின் நலிவுற்ற உறுப்பினர்கள் இவர்கள் தாம். 

Link to comment
Share on other sites

13 hours ago, ampanai said:

சமுதாயத்தின் நலிவுற்ற உறுப்பினர்கள் இவர்கள் தாம். 

இந்து மாமன்றத்தின் பணி நலிவுற்ற மக்களை நிர்பந்தித்து மதம் மாற்றும் நோக்கங்களுடன் கூடியதில்லை என்பதால் மனப்பூர்வமாக பாராட்டப்பட வேண்டும்!

Link to comment
Share on other sites

பாவம் மலையக மக்கள்। முஸ்லிம்களின் உதவியுடன் உங்கள் சேவை தொடரட்டும்। 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/5/2020 at 03:25, Vankalayan said:

பாவம் மலையக மக்கள்। முஸ்லிம்களின் உதவியுடன் உங்கள் சேவை தொடரட்டும்। 

இந்த நடவடிக்கைக்கும் சோனகர்களுக்கும் என்ன தொடர்பு?

Link to comment
Share on other sites

6 hours ago, MEERA said:

இந்த நடவடிக்கைக்கும் சோனகர்களுக்கும் என்ன தொடர்பு?

இங்கு தொப்பி போடட ஒரு  முஸ்லிம்தான்  பொருட்களை  வழங்குகிறார் ।   அல்லது  இப்போது இந்துக்களும் தொப்பி போட ஆரம்பித்துவிடடார்களோ  தெரியவில்லை ।  எப்படியோ  மக்களுக்கு உதவி கிடைத்தால் சரிதான்।

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/5/2020 at 03:13, போல் said:

இந்து மாமன்றத்தின் பணி நலிவுற்ற மக்களை நிர்பந்தித்து மதம் மாற்றும் நோக்கங்களுடன் கூடியதில்லை என்பதால் மனப்பூர்வமாக பாராட்டப்பட வேண்டும்!

உதவிபுரிபவர்களை தாராளமாகப் பாராட்டலாம். ஆனால் அதற்குள் ஏன் மத மாற்றம் என்கின்ற ஒரு செயற்பாட்டை இந்தத் திரிக்குள் செருகுகிறீர்கள் 🤥 ?  

திரும்பவும் முரண்பாட்டை இந்தத் திரிக்குள்ளும் தோற்றுவிக்கவா 😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Vankalayan said:

இங்கு தொப்பி போடட ஒரு  முஸ்லிம்தான்  பொருட்களை  வழங்குகிறார் ।   அல்லது  இப்போது இந்துக்களும் தொப்பி போட ஆரம்பித்துவிடடார்களோ  தெரியவில்லை ।  எப்படியோ  மக்களுக்கு உதவி கிடைத்தால் சரிதான்।

காணொளியில் விபரமாகக் கூறி உள்ளாரே.... காணொளியில் பொருட்களை வழங்குபவர்கள் தொப்பி அணியவில்லையே....!

மற்றைய படத்தில் பொருட்களை வழங்குபவர் தொப்பி போடவில்லையே..... அவர் யார்? 

அந்த சோனகர் அப்பிரதேச GS அல்லது CHI ஆக இருக்கலாம் அல்லவா....

 

Link to comment
Share on other sites

15 hours ago, MEERA said:

காணொளியில் விபரமாகக் கூறி உள்ளாரே.... காணொளியில் பொருட்களை வழங்குபவர்கள் தொப்பி அணியவில்லையே....!

மற்றைய படத்தில் பொருட்களை வழங்குபவர் தொப்பி போடவில்லையே..... அவர் யார்? 

Peoples-Help-All-Ceylon-Hindu-Congress-D

Link to comment
Share on other sites

15 hours ago, MEERA said:

காணொளியில் விபரமாகக் கூறி உள்ளாரே.... காணொளியில் பொருட்களை வழங்குபவர்கள் தொப்பி அணியவில்லையே....!

மற்றைய படத்தில் பொருட்களை வழங்குபவர் தொப்பி போடவில்லையே..... அவர் யார்? 

அந்த சோனகர் அப்பிரதேச GS அல்லது CHI ஆக இருக்கலாம் அல்லவா....

 

அங்கு தொப்பி போடடமாதிரி எனக்கு ஒருவர் தெரிகிறார்। நீங்கள் தொப்பி போடடவர் பொருட்களை வழங்கவில்லை என்று கூறுகிறீர்களா?

இந்து மாமன்றம் பொருட்கள் வழங்குவதென்றால் அதிகாரிகள் வருவதட்கு சந்தர்ப்பம் இல்லை। அப்படி வருவர்களாக இருந்தால் அது அரசின் ஒத்துழைப்புடன் செய்த ஒரு நிகழ்வாக இருந்திருக்க வேண்டும்।

இருந்தாலும் தொப்பி போடடவர்களுக்கு அங்கு அப்படியான தொழில்கள் வழங்குவது மிகவும் அருமையான காரியம்। இருந்தாலும் மலையக மக்களுக்கு செய்த உதவிக்கு பாராட்டுக்கள்। 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/5/2020 at 15:12, Rajesh said:
18 hours ago, கற்பகதரு said:

Peoples-Help-All-Ceylon-Hindu-Congress-D

 

Peoples-Help-All-Ceylon-Hindu-Congress-D

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முகமூடிகளை வழங்கி வைத்த சிவன் அறக்கட்டளை

IMG20200505114645-960x540.jpg?189db0&189db0

 

கொரோனாத் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் மருத்துவத் துறையினரின் நன்மை கருதி சிவன் அறக்கட்டளை நிலையத்தினரால் முகமூடி கருவிகள் கையளிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு 150 முகமூடி கருவிகளும் (Face shields), ஊர்காவற்துறை வைத்தியசாலைக்கு 50 முகமூடி கருவிகளும், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு 50 முகமூடி கருவிகளும், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு 100 முகமூடி கருவிகளும், முல்லைத்தீவு வைத்தியசாலைக்கான 50 முகமூடி கருவிகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

https://newuthayan.com/முகமூடிகளை-வழங்கி-வைத்/

Link to comment
Share on other sites

9 hours ago, உடையார் said:

முகமூடிகளை வழங்கி வைத்த சிவன் அறக்கட்டளை

இந்துக்கள் செய்யும் நற்பணிகள் அனைத்துமே நலிவுற்ற மக்களை நிர்பந்தித்து மதம் மாற்றும் நோக்கங்களுடன் கூடியதில்லை என்பதால் மனப்பூர்வமாக பாராட்டப்பட வேண்டும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள். 

இந்துக்கள் ஏன் மதம் மாறுகின்றார்கள் என ஆராய்ந்து அதை தடுப்பதற்கு உரிய வழிமுறைகளை முயற்சி செய்யவும் வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

இந்துக்கள் ஏன் மதம் மாறுகின்றார்கள் என ஆராய்ந்து அதை தடுப்பதற்கு உரிய வழிமுறைகளை முயற்சி செய்யவும் வேண்டும்

 

 

முதல் கட்ட நடவடிக்கையாய்  மூலஸ்தானத்திலையிருந்து ஐயர்மாரை கலைக்க முக்காவாசி பிரச்சனை சரிவரும். இன்னுமொரு முக்கிய பிரச்சனை இருக்கு அதை பிறகு ஒரு சந்தர்ப்பத்திலை பாப்பம்.😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, போல் said:

இந்துக்கள் செய்யும் நற்பணிகள் அனைத்துமே நலிவுற்ற மக்களை நிர்பந்தித்து மதம் மாற்றும் நோக்கங்களுடன் கூடியதில்லை என்பதால் மனப்பூர்வமாக பாராட்டப்பட வேண்டும்!

இதன் சாராம்சம் ஏழைகளுக்கு மதத்தை மாற்றாமலும் உதவி செய்யலாம் என்பது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாதவூரான் said:

இதன் சாராம்சம் ஏழைகளுக்கு மதத்தை மாற்றாமலும் உதவி செய்யலாம் என்பது

நீங்கள் சொல்வது நூறு வீதம் உண்மை. 👍

ஆனால் இதை தங்கள் சமய நம்பிக்கையின் அடிப்படையிலும்,  அதன் தொடர்ச்சியாக உதவி செய்பவர்களிடமும் எதிர்பார்க்க முடியாது. அவர்களிடம் மதத்தை மாற்ற முயற்சிக்காமல் உதவியை மட்டும் செய்யுங்கள் என நாம் கேட்க முடியாது. கேட்டாலும் நடக்கப்போவதில்லை.☹️

ஆனால் பொருளாதார ரீதியில் நலிவுற்றிருப்போருக்கு எமது உதவிகளை திட்டமிட்டு அதிகரிப்பதனூடாக,  சமயம் மாறுவதற்கான சந்தர்ப்பங்களை பெருமளவு குறைக்கலாம். 👍

(ஆனால் இந்தத் திரி சமயம் மாற்றுவது தொடர்பானது அல்ல. அதனை இங்கே செருகினால் வெறுப்புணர்வு மட்டுமே மிஞ்சும் என்பது உங்களுக்கு  மிக நன்றாகவே தெரியும். அதனை நான் கூறவேண்டிய தேவை இல்லை 🙂)

Link to comment
Share on other sites

5 hours ago, வாதவூரான் said:

இதன் சாராம்சம் ஏழைகளுக்கு மதத்தை மாற்றாமலும் உதவி செய்யலாம் என்பது

மிகச் சரியாக விளங்கிக் கொண்டுளீர்கள்!  நன்றி வாதவூரன்!

 

***

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நிச்சயமாக இல்லை. இங்கே ஒரு பிரித்தானிய இடை மத்திய வர்க்க வாழ்கையை (middle middle class) இலங்கை உயர் மத்திய தர வர்க்கத்துடனோ (upper middle class) ஒப்பிட்டுள்ளேன். நாம் இலங்கை போய் அனுபவிப்பது அங்கே உள்ள upper class இன் வாழ்க்கை அல்ல. 5 நட்சத்திர விடுதிகள் போன்ற வீடுகள். கடற்கரையோர வீக் எண்ட் ஹொலிடே வீடுகள். Q8, X7, GLS வாகனங்கள்….Sri Lankan upper class இன் ரேஜ்ஞே வேறு. 
    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
    • சிறையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தானே இருக்கும். அது தானை உங்கள் கவலை அண்ணா?😜
    • நீதிமன்ற அவமதிப்பு, இனங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றுவித்தமைக்காக 201´ம் ஆண்டு   ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த இவரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பொதுமன்னிப்பு வழங்கினார். மிக  விரைவில்... இருமுறை பொதுமன்னிப்பு பெற்றவர் என்ற விதத்தில் தேரர் "கின்னஸ் சாதனை புத்தகத்தில்" இடம் பெற சாத்தியங்கள் நிறைய உண்டு.  😂 ஞானசார தேரருக்கு பிரான்சில் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் வசித்து வருவதாக அவரின் முன்னாள் கார் சாரதி, படங்களுடன் வெளியிட்ட  செய்தி யாழ்.களத்திலும் வந்து இருந்தது.
    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.