Jump to content

"பரோட்டா" மாஸ்ரர்.... தமிழ் சிறி.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

large.IMG_0146.2.jpg.047c90ec003bb8d1da72e88b823fe86b.jpg

 

இன்று வீட்டில், எல்லோரும் நிற்பதால்.... 
"பரோட்டா"   செய்ய பிளான் போட்டிருக்கின்றேன், அது சரியாக...  வர,
நீங்களும், ஆண்டவனை   🙏 பிரார்த்தியுங்கள் என்று,
வேறு ஒரு, திரியில்... குறிப்பிட்டு இருந்தேன். :)

யாழ்.கள உறுப்பினர்கள் எல்லோரும், பிரார்த்தித்து   👏  இருக்கிறார்கள் போலுள்ளது. :grin:
நான் செய்த,  பரோட்டா.... கடையில் வாங்குவதை விட,  நன்றாக  இருந்தது  என்று, 
வீட்டில்... எல்லோரும், 💕 விரும்பி சாப்பிட்டார்கள். :)

ஓகே... இனி, நான்  "பரோட்டா"   செய்த முறையை, பார்ப்போம்...

வீட்டில்,  ஐந்து பேர் இருந்தால்....
மத்தியானமும், இரவும் சாப்பிட... பரோட்டாவுக்கு  தேவையான பொருட்கள். 🧐

 

இவை....  "பரோட்டா" மாவை, குழைக்க  தேவையான பொருட்கள். 

கோதுமை மா.  -------   இரண்டு, கிலோ கிராம்.
பால்.   --------  750 மில்லி லீற்றர்.
பட்டர்  ---------  10 மேசைக் கரண்டி.
உப்பு.  ---------  5 தேக்கரண்டி.
சீனி.   ----------  5 தேக்கரண்டி.
எண்ணை.  ----------  150 மில்லி லீற்றர்.   
இளம் சூடான தண்ணீர்.  ----------  500 மில்லி லீற்றர்.
உருட்டுக் கட்டை. ---------  ஒன்று போதும். 🤣

செய்முறை.
1)  மாவை... (மாவை சேனாதிராஜாவை,  அல்ல) :grin: ஒரு பெரிய,  பிளாஸ்ரிக் சட்டியில் போடவும். 😄

2)  750 மில்லி லீற்றர்  பாலும், எண்ணையும்  விட்டு... நன்றாக  பிசையவும்.

3)  மைக்ரோ அவனில்... சாதுவாக சூடாக்கிய, பட்டரையும்.... 
உப்பையும், போட்டு, மேலும்... நன்றாக  குழைக்கவும்.

4)  இப்போ... தண்ணீர் விட்டு, குழைக்க வேண்டிய,  இறுதிக் கட்டத்துக்கு, வந்துள்ளோம்.
கொஞ்சம், கொஞ்சமாக....  தண்ணீர் விட்டு, பிசையும் போது.... 
மிகவும்,  அவதானமாக இருக்க வேண்டும். தண்ணீர் கூடினால்..  எல்லாம்   பிழைத்துப் போகும். 😮

குழைத்துக்  கொண்டிருக்கும் மா.... உங்கள் கையில் ஒட்டாமல், வந்தது என்றால்,
சரியான பதத்துக்கு... மாவை, குழைத்து விட்டீர்கள் என்று, அர்த்தம். 👆

கையில்... கனக்க, ஒட்டி இருந்தால்... இன்னும், கொஞ்ச  மாவை போட்டு....
பதத்துக்கு... கொண்டு வாருங்கள். 

இனி.... குழைத்த மாவின் மேல், எண்ணை தடவி,  
அதே சட்டியில் வைத்து, 30 நிமிடங்கள் வரை,
சாதுவான ஈரத் துணியால்.... மூடி  விடுங்கள்.
மா... நன்றாக ஊறினால் தான்,  "பரோட்டா" மெதுமையாக வரும்.  :)

சீனி.. போட விருப்பமில்லாதவர்கள், அதனை தவிர்க்கலாம்.
சீனியை...  போட் டால்,  "பரோட்டா"  நல்ல மண்ணிறத்துக்கு வரும்.

அரை மணித்தியாலம் ஆகி விட்டது.... அடுத்த, வேலைக்கு... போவோம். :grin:

 

1)  ஒரு தோசைக் கல்லை..... எடுத்து, அடுப்பில் வைத்து,  மெல்லிய சூட்டில் சூடாக்கவும்.
அடுப்பு.. எப்பவும், மெல்லிய சூட்டில்... இருக்க வேண்டும். இல்லையேல்...
 "பரோட்டா" வெளியில் கருகி, உள்ளுக்கு வேகமால் போய் விடும்.

2)   குழைத்த  மாவை,  🍋 தேசிக்காய் 🟠  அளவு எடுத்து..... "குசினி" மேடையில் வைத்து,
உருட்டுக் கட்டையால்.... மா,  மெல்லிசாக...  வரும் வரை உருட்டவும்.  

3)   இப்போ... அதனை, ஒரு தட்டில், அல்லது கோப்பையில் வைத்து....  இரண்டு சென்ரி மீற்றர்  அளவில்,
நீள வாக்கிற்க்கு  கத்தியால், கீறி  விடுங்கள். அவ்வப்போது, எண்ணையை.. பாவியுங்கள்..

4)   இனி... கீறிய  மாக் கலவையை... குறுக்குப்  பாட்டிற்கு மெதுவாக உருட்ட, 
"பாம்பு" போல், அந்த மா வந்திருக்கும்.   😎

5)   இப்ப... அதனை,   "நத்தை" மாதிரி.... உருட்டி, திரும்பவும்... உருட்டுக் கட்டையால்,
அதன் மேல், மெல்லமாக அமத்தி, வட்ட வடிமாக ஆக்குங்கள்.  :grin:

6)  இனி... அதற்கு மேல், உருகிய பட்டரை... சாதுவாக தடவி, 
இளம் சூடான தோசைக்கல்லில் போட்டு, இரண்டு பக்கமும்..  உங்களுக்கு பிடித்த,
மண்ணிறம்  வரும் வரை, சூடாக்கி எடுங்கள்.

இப்போ... இனி செய்ய வேண்டும்? என கேட்கிறீர்காளா? 
குசினிக்குள் நின்ற படியே....   "பரோட்டா" ரெடி... ‼️ என்று கத்துங்கள். 🤠
எல்லாரும்... பாய்ந்தடித்து, சாப்பிட வந்து,  சாப்பிட்டு விட்டு,
அப்பா... 😍  உங்களில், இப்படி... ஒரு, திறமையா....?  
என்ற, பாராட்டை...  கேட்கும் போது,    மிகப் பெருமையாக இருக்கும். 💕

💥 டிஸ்கி:  "பரோட்டா" செய்ய,  மூன்று மணி நேரமும், 
அடுப்பையும், பாத்திரங்களையும்... கழுவி வைக்க, ஒன்றரை மணி நேரமும்,
இந்தப் படங்களை, தரவேற்ற... இரண்டு மணித்தியாலமும், 
அதற்குத் தேவையான பொருட்களை வாங்க,  ஒன்றரை மணி நேரமும் எடுத்தது. 
மொத்தத்தில்....  எட்டு மணித்தியாலம், 
குடும்பத்தில் செலவளித்தது... மிக்க மகிழ்ச்சியை, தருகின்றது. 💋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி, வெல்கம் டூ "டம்மிஸ் செஃப்" குறூப்..!   poele.gif

பாராட்டுக்கள்..  bjr2.gif

அடுத்தமுறை கீழ்க்கண்ட மாதிரி காணொளியை தயாரித்து யுடுயூபில் தரவேற்றம் செய்து இங்கே இணையுங்கள்..!

(எப்படி யூடூபில் கணக்கு துவங்கி காணொளியை மெருகேற்றி தரவேற்றம் செய்வது..?  என உதவி தேவைப்பட்டால், சொல்லுங்கள் உதவுகிறேன்..!)

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, தமிழ் சிறி said:

இன்று வீட்டில், எல்லோரும் நிற்பதால்.... 
"பரோட்டா"   செய்ய பிளான் போட்டிருக்கின்றேன், அது சரியாக... 

சிறி இத்தனை நாளாக திட்டம் போட்டு இப்பவாவது செய்து முடித்துள்ளீர்கள்.
மிகவும் சந்தோசம்.
குடும்பத்தவர்களும் மிகவும் சந்தோசப்பட்டிருப்பார்கள்.
அதைவிட அப்பா குசினிக்குள் பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டிருப்பார்கள்.
ஏன் உங்களுக்கே உங்களை நினைக்க ஆச்சரியமாக இருந்திருக்கும்.
60 வருடத்தில் இப்ப தான் முதல் தடவை குசினியை கைபற்றியிருக்கிறீர்கள்.
பொம்பிளை கையும் தெரியுது.அதைப் பற்றி ஒன்றையும் காணவில்லை.

சரி பிள்ளையார் சுழி போட்டாச்சு.இனி தொடரட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

தமிழ் சிறி, வெல்கம் டூ "டம்மிஸ் செஃப்" குறூப்..!   poele.gif

பாராட்டுக்கள்..  bjr2.gif

அடுத்தமுறை கீழ்க்கண்ட மாதிரி காணொளியை தயாரித்து யுடுயூபில் தரவேற்றம் செய்து இங்கே இணையுங்கள்..!

(எப்படி யூடூபில் கணக்கு துவங்கி காணொளியை மெருகேற்றி தரவேற்றம் செய்வது..?  என உதவி தேவைப்பட்டால், சொல்லுங்கள் உதவுகிறேன்..!)

 

 

ஓம்... வன்னியன்,ன் எனக்கு.. "யூ  ரியூப்பில்" ஒரு பதிவு போட வேண்டும் என்று ஆசை உள்ளது.
அதற்காக... இன்று, காலை எட்டு மணிக்கு, கடை திறக்கும் நேரம்,    
முதல் ஆளாய்.. போய் நின்று,  "பரோட்டா" பொருட்களை வாங்கும் போதே...
நில்மினியின்...  "மாலு பணிஸ்" செய்வதற்கு தேவையான..... 
பொருட்களையும் வாங்கி வந்து விட்டேன்.  

ஆனால்... இன்று சனிக்கிழமை, வீட்டில்  எல்லோரும்.... 
(என்னைத் தவிர)  சைவ உணவு...  உண்பவர்கள் என்பதால்,  
அதனை சமைக்க முடியாமல் போய் விட்டது, 

அத்துடன்... அகலக் கால் வைத்து, செய்கின்ற ஒரு சமையலை... சொதப்பக்   கூடாது என்பதால்,
"மாலு பணிசை"... அடுத்த முறை செய்யலாம் என நினைக்கின்றேன். 

அப்போது... நிச்சயம், உங்கள் உதவி தேவைப்படும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமையலில் இப்படி மினக்கெடுவீர்கள் என்று தெரிந்திருந்தால் உந்தப் போன் கோதாரியை நாலு வருடத்துக்கு முன்பே வாங்கித் தந்திருப்பார்கள்.........! 

இனித்தான் நீங்கள் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்...... பரோட்டா ஆயிட்டம் இப்ப உங்களின் பொறுப்பில் வந்து விட்டது....ஆர்வக்கோளாறில் 🐘 தன் 🤯 யில் :337_fire: கொட்டின மாதிரி ஆயிடப்போகுது......!   😪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

1 hour ago, ஈழப்பிரியன் said:

சிறி இத்தனை நாளாக திட்டம் போட்டு இப்பவாவது செய்து முடித்துள்ளீர்கள்.
மிகவும் சந்தோசம்.
குடும்பத்தவர்களும் மிகவும் சந்தோசப்பட்டிருப்பார்கள்.
அதைவிட அப்பா குசினிக்குள் பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டிருப்பார்கள்.
ஏன் உங்களுக்கே உங்களை நினைக்க ஆச்சரியமாக இருந்திருக்கும்.
60 வருடத்தில் இப்ப தான் முதல் தடவை குசினியை கைபற்றியிருக்கிறீர்கள்.
பொம்பிளை கையும் தெரியுது.அதைப் பற்றி ஒன்றையும் காணவில்லை.

சரி பிள்ளையார் சுழி போட்டாச்சு.இனி தொடரட்டும்.

ஈழப்பிரியன், எனக்கு,  இந்த ஆசை... நீண்ட நாட்களாக இருந்தது. :D:
ஆனால்... அதனைச்  செய்ய முடியாமல், வேலைப்பளு... மிகவும் அதிகமாக இருந்ததால்,
அந்த ஆசை... தள்ளிப் போய்க் கொண்டே  வந்தது.

"கொரோனா"  உலகம் எல்லாம்... பரவியதன்  மூலம்,
எனது வேலை இடத்திலும், "மந்த நிலை" ஏற்பட்டதால்...
எனக்கு சென்ற வருடங்களாக...  சேமித்த, வருட விடுமுறை நாட்கள் 32´ம்,
இந்த வருட விடுமுறை நாட்கள்... 30´ம் சேர்த்து,  62 விடுமுறை நாட்கள்  கைவசம் உள்ளது.

எமது முதலாளி... எம்மிடம் வந்து,  
"கொரோனா" பிரச்சினையால்.... வர்த்தகம்  மோசமாக பாதிக்கப் பட்டுக் கொண்டு போயுள்ளது.
ஆனாலும்... எங்கள் நிறுவனம், பச்சைக் கோட்டிற்குள் இருந்தாலும்...
எப்பவும்... மஞ்சள், சிவப்புக்  கோட்டிற்குள் வரலாம்.
அதற்கு முன்... உங்கள், பழைய ஆண்டு, விடுமுறைகளை எடுங்கள் என்றும்...
தமிழ் சிறி தான்... இந்த நிறுவனத்திலேயே, 
கூடுதலான விடுமுறையை சேமித்து  வைத்திருப்பவர்  என்று...  
எனது முகத்தைப்  பார்த்து கூறியவுடன்...    போது,

"தமிழன் டா"....  எதனையும்...  சேர்த்து வைப்பதில், திறமானவன் டா....  
என்று,  கூவ  வேண்டும் போல இருந்தாலும்,   சபை நாகரீகம்  கருதி...
ஊகூ.... என்று, பெரிய குரல் எடுத்து, கத்தி.... (சவுண்டு)  கொடுத்தேன். :grin:
இவனுக்கு... விசரோ...என்று, பலர் பார்த்தாலும், 
என்னை அறிந்தவர்கள்... நன்றாக சிரித்தார்கள். 🤣

இப்போ... எனக்கு, வாற கிழமை.... முழுக்க விடுமுறை.
கனக்க.... புரோகிராம் போட்டு வைத்துள்ளேன். ஈழப்பிரியன்... 

பரோட்டா..... செய்யும் போது,.....
உப்பு, சீனி, எண்ணை, போன்றவற்றை எடுக்கவும்... 
நான்... உருட்டுற, பரோட்டாவை... புரட்டவும் ... 
அந்த இடத்து.... ஆளை, கையில்... வைத்திருப்பதும் ஒரு "ரெக்னிக்" தான். :D:
அது தான்... எனது இல்லத்து, இனிய... அரசி.   :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, தமிழ் சிறி said:

பரோட்டா..... செய்யும் போது,.....
உப்பு, சீனி, எண்ணை, போன்றவற்றை எடுக்கவும்... 
நான்... உருட்டுற, பரோட்டாவை... புரட்டவும் ... 
அந்த இடத்து.... ஆளை, கையில்... வைத்திருக்க வேண்டும்.
அது தான்... எனது இல்லத்து, இனிய... அரசி.   :)

ஆகா முட்டாள் என்று சொல்லுங்க.(ஆளில்லை வேலையை சொன்னேன்)

26 minutes ago, தமிழ் சிறி said:

தமிழ் சிறி தான்... இந்த நிறுவனத்திலேயே, 
கூடுதலான விடுமுறையை சேமித்து  வைத்திருப்பவர்  என்று...  
எனது முகத்தைப்  பார்த்து கூறியவுடன்...    போது,

ஊரில தான் தின்னாமல் குடிக்காமல் உடுக்காமல் சேர்த்து வைத்து மொத்தமா கொடுத்தோமே?
இங்கையுமா?
ஆமா இந்த விடுமுறை நாளை பணமாக தரமாட்டார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

 

 

 

நான் இவ்வளவு நாளும் சிறித்தம்பியை கமலகாசன் கலர்  எண்டெல்லே நினைச்சுக்கொண்டிருந்தனான். 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, குமாரசாமி said:

நான் இவ்வளவு நாளும் சிறித்தம்பியை கமலகாசன் கலர்  எண்டெல்லே நினைச்சுக்கொண்டிருந்தனான். 😎

நோ நோ நோ
அது அடுப்பு சூட்டுக்கு கை கொஞ்சம் கறுத்துப் போச்சு.

1 hour ago, தமிழ் சிறி said:

அந்த இடத்து.... ஆளை, கையில்... வைத்திருப்பதும் ஒரு "ரெக்னிக்" தான். 

உருட்டுக் கட்டைகளை கொடுத்துட்டு பக்கத்தில நிக்கிறது கவனமப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

பால்.   --------  750 மில்லி லீற்றர்.

இதை என்ன செய்தீர்கள்.....??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரோடடவும் சாம்பலும் நல்ல  இருக்கு . ஆனால் போட்டொவுக்காக

எண்ணெய் போத்தலுடன் நிற்க கூடாது 😗

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி நன்றாக மினக்கிட்டு இருக்கிறீர்கள், இனி குசுனிக்குள் தான் வாழ்கை, அடிக்கடி விதம் விதமாக செய்து அசத்துங்கள், காலடி எடுத்து வைக்கும் வரைதான் தயக்கம் எப்படியிருக்குமோ என்று

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

இதை என்ன செய்தீர்கள்.....??

 

7 hours ago, தமிழ் சிறி said:

 

 

செய்முறை.
1)  மாவை... (மாவை சேனாதிராஜாவை,  அல்ல) :grin: ஒரு பெரிய,  பிளாஸ்ரிக் சட்டியில் போடவும். 😄

2)   பாலும், எண்ணையும்  விட்டு... நன்றாக  பிசையவும்.

3)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, உடையார் said:

 

 

உடையார்..... இந்த  மாவை... நினைத்தவுடன்,
அந்த.... மாவை... வந்து,  எல்லாத்தையும்...  குழப்பியடிச்சுட்டார்.:grin:

😎 ச்சீ...ய்.... புலம் பெயர் நாட்டிலை, இருக்கிற தமிழனை... 
பரோட்டா சுடவும்... விடுறாங்களில்லை    :D:
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

 

பிறகென்ன சிறி ஒருமாதிரி குசினிக்குள் என்டர் பண்ணி பாம்பு மாதிரி, நத்தை மாதிரி உருட்டி நல்ல பரோட்டாவும் சம்பலும் செய்துபோட்டீர். வாழ்த்துக்கள். செய்முறைக்கு நன்றி . 8 மணி நேரம் என்ன எவ்வளவு நேரம் போனாலும் பிரயோசனம். நாங்களும் உமது கைவண்ணத்தை பார்த்ததாக போயிட்டுது . அடுத்த ரிலீஸ் எப்ப?  இந்தியாவில் படிக்கும் போது  விடுதிக்கு பக்கத்துக்கு கொட்டில் கடையில்  பரோட்டாவும் சால்னாவும் சாப்பிட்ட ஞாபகம் வந்துது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழ் சிறி said:

large.IMG_0146.2.jpg.047c90ec003bb8d1da72e88b823fe86b.jpg

 

இன்று வீட்டில், எல்லோரும் நிற்பதால்.... 
"பரோட்டா"   செய்ய பிளான் போட்டிருக்கின்றேன், அது சரியாக...  வர,
நீங்களும், ஆண்டவனை   🙏 பிரார்த்தியுங்கள் என்று,
வேறு ஒரு, திரியில்... குறிப்பிட்டு இருந்தேன். :)

யாழ்.கள உறுப்பினர்கள் எல்லோரும், பிரார்த்தித்து   👏  இருக்கிறார்கள் போலுள்ளது. :grin:
நான் செய்த,  பரோட்டா.... கடையில் வாங்குவதை விட,  நன்றாக  இருந்தது  என்று, 
வீட்டில்... எல்லோரும், 💕 விரும்பி சாப்பிட்டார்கள். :)

ஓகே... இனி, நான்  "பரோட்டா"   செய்த முறையை, பார்ப்போம்...

வீட்டில்,  ஐந்து பேர் இருந்தால்....
மத்தியானமும், இரவும் சாப்பிட... பரோட்டாவுக்கு  தேவையான பொருட்கள். 🧐

 

இவை....  "பரோட்டா" மாவை, குழைக்க  தேவையான பொருட்கள். 

கோதுமை மா.  -------   இரண்டு, கிலோ கிராம்.
பால்.   --------  750 மில்லி லீற்றர்.
பட்டர்  ---------  10 மேசைக் கரண்டி.
உப்பு.  ---------  5 தேக்கரண்டி.
சீனி.   ----------  5 தேக்கரண்டி.
எண்ணை.  ----------  150 மில்லி லீற்றர்.   
இளம் சூடான தண்ணீர்.  ----------  500 மில்லி லீற்றர்.
உருட்டுக் கட்டை. ---------  ஒன்று போதும். 🤣

செய்முறை.
1)  மாவை... (மாவை சேனாதிராஜாவை,  அல்ல) :grin: ஒரு பெரிய,  பிளாஸ்ரிக் சட்டியில் போடவும். 😄

2)  எண்ணை  விட்டு, நன்றாக.... பிசையவும்.

3)  மைக்ரோ அவனில்... சாதுவாக சூடாக்கிய, பட்டரையும்.... 
உப்பையும், போட்டு, மேலும்... நன்றாக  குழைக்கவும்.

4)  இப்போ... தண்ணீர் விட்டு, குழைக்க வேண்டிய,  இறுதிக் கட்டத்துக்கு, வந்துள்ளோம்.
கொஞ்சம், கொஞ்சமாக....  தண்ணீர் விட்டு, பிசையும் போது.... 
மிகவும்,  அவதானமாக இருக்க வேண்டும். தண்ணீர் கூடினால்..  எல்லாம்   பிழைத்துப் போகும். 😮

குழைத்துக்  கொண்டிருக்கும் மா.... உங்கள் கையில் ஒட்டாமல், வந்தது என்றால்,
சரியான பதத்துக்கு... மாவை, குழைத்து விட்டீர்கள் என்று, அர்த்தம். 👆

கையில்... கனக்க, ஒட்டி இருந்தால்... இன்னும், கொஞ்ச  மாவை போட்டு....
பதத்துக்கு... கொண்டு வாருங்கள். 

இனி.... குழைத்த மாவின் மேல், எண்ணை தடவி,  
அதே சட்டியில் வைத்து, 30 நிமிடங்கள் வரை,
சாதுவான ஈரத் துணியால்.... மூடி  விடுங்கள்.
மா... நன்றாக ஊறினால் தான்,  "பரோட்டா" மெதுமையாக வரும்.  :)

சீனி.. போட விருப்பமில்லாதவர்கள், அதனை தவிர்க்கலாம்.
சீனியை...  போட் டால்,  "பரோட்டா"  நல்ல மண்ணிறத்துக்கு வரும்.

அரை மணித்தியாலம் ஆகி விட்டது.... அடுத்த, வேலைக்கு... போவோம். :grin:

 

1)  ஒரு தோசைக் கல்லை..... எடுத்து, அடுப்பில் வைத்து,  மெல்லிய சூட்டில் சூடாக்கவும்.
அடுப்பு.. எப்பவும், மெல்லிய சூட்டில்... இருக்க வேண்டும். இல்லையேல்...
 "பரோட்டா" வெளியில் கருகி, உள்ளுக்கு வேகமால் போய் விடும்.

2)   குழைத்த  மாவை,  🍋 தேசிக்காய் 🟠  அளவு எடுத்து..... "குசினி" மேடையில் வைத்து,
உருட்டுக் கட்டையால்.... மா,  மெல்லிசாக...  வரும் வரை உருட்டவும்.  

3)   இப்போ... அதனை, ஒரு தட்டில், அல்லது கோப்பையில் வைத்து....  இரண்டு சென்ரி மீற்றர்  அளவில்,
நீள வாக்கிற்க்கு  கத்தியால், கீறி  விடுங்கள். அவ்வப்போது, எண்ணையை.. பாவியுங்கள்..

4)   இனி... கீறிய  மாக் கலவையை... குறுக்குப்  பாட்டிற்கு மெதுவாக உருட்ட, 
"பாம்பு" போல், அந்த மா வந்திருக்கும்.   😎

5)   இப்ப... அதனை,   "நத்தை" மாதிரி.... உருட்டி, திரும்பவும்... உருட்டுக் கட்டையால்,
அதன் மேல், மெல்லமாக அமத்தி, வட்ட வடிமாக ஆக்குங்கள்.  :grin:

6)  இனி... அதற்கு மேல், உருகிய பட்டரை... சாதுவாக தடவி, 
இளம் சூடான தோசைக்கல்லில் போட்டு, இரண்டு பக்கமும்..  உங்களுக்கு பிடித்த,
மண்ணிறம்  வரும் வரை, சூடாக்கி எடுங்கள்.

இப்போ... இனி செய்ய வேண்டும்? என கேட்கிறீர்காளா? 
குசினிக்குள் நின்ற படியே....   "பரோட்டா" ரெடி... ‼️ என்று கத்துங்கள். 🤠
எல்லாரும்... பாய்ந்தடித்து, சாப்பிட வந்து,  சாப்பிட்டு விட்டு,
அப்பா... 😍  உங்களில், இப்படி... ஒரு, திறமையா....?  
என்ற, பாராட்டை...  கேட்கும் போது,    மிகப் பெருமையாக இருக்கும். 💕

💥 டிஸ்கி:  "பரோட்டா" செய்ய,  மூன்று மணி நேரமும், 
அடுப்பையும், பாத்திரங்களையும்... கழுவி வைக்க, ஒன்றரை மணி நேரமும்,
இந்தப் படங்களை, தரவேற்ற... இரண்டு மணித்தியாலமும், 
அதற்குத் தேவையான பொருட்களை வாங்க,  ஒன்றரை மணி நேரமும் எடுத்தது. 
மொத்தத்தில்....  எட்டு மணித்தியாலம், 
குடும்பத்தில் செலவளித்தது... மிக்க மகிழ்ச்சியை, தருகின்றது. 💋

 

6 hours ago, உடையார் said:

 

 

பாலை காணவில்லையே அண்ணா.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

large.IMG_0146.2.jpg.047c90ec003bb8d1da72e88b823fe86b.jpg

 

 

 

 

அவர் போட்ட நாப்பது பரோட்டாவில் போட்டொவில் போடுறது போல் இருந்தது பதினாலு பரோட்டா மட்டுமே, மிகுதியை மணாளனின் மானத்தை காப்பாற்ற மனையாள் ரிஜெக்ட் பண்ணி விட்டார்.....!   😁 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நிலாமதி said:

பரோடடவும் சாம்பலும் நல்ல  இருக்கு . ஆனால் போட்டொவுக்காக

எண்ணெய் போத்தலுடன் நிற்க கூடாது 😗

கையிலை வைச்சிருந்தது வேறை போத்திலாம்.....:cool:
பட நாகரீகம் கருதி பறிச்சு வைச்சிட்டு எண்ணைப்போத்திலை குடுத்தவையாம் 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த லொக் டவுண் தமிழ்சிறியையும் குசினிக்குள் போக வைத்திருக்கு 👍
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போத்தலோடை நிக்கிறதே நம்மாளு? அட... நான் ரொட்டி பிரட்டிப் போடுற கை தான் எண்டு நினைச்சு போட்டேன்.. 🤔

போத்திலுக்கு முன்னால வயிரு நிக்குதே.... 😄

துவக்கும்... தொப்பியுமா நிக்கிற ப்ரொபைல் படத்துக்கும்..... தமிழ் சிறியருக்கும் கண வித்தியாசம்.. 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Nathamuni said:

போத்தலோடை நிக்கிறதே நம்மாளு? அட... நான் ரொட்டி பிரட்டிப் போடுற கை தான் எண்டு நினைச்சு போட்டேன்.. 🤔

போத்திலுக்கு முன்னால வயிரு நிக்குதே.... 😄

துவக்கும்... தொப்பியுமா நிக்கிற ப்ரொபைல் படத்துக்கும்..... தமிழ் சிறியருக்கும் கண வித்தியாசம்.. 😉

06_anhang6.2.jpg

இதுக்கு மிஞ்சியும் என்னாலை அமைதி காக்கேலாது.இப்பவே உண்மையை உடைச்சு விடுறன்.
அந்த கைகள் எல்லாம் சிறித்தம்பி வீட்டிலை வேலை செய்யிற பணியாட்களின்ரை...😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/5/2020 at 11:39, தமிழ் சிறி said:

large.IMG_0146.2.jpg.047c90ec003bb8d1da72e88b823fe86b.jpg

 

இன்று வீட்டில், எல்லோரும் நிற்பதால்.... 
"பரோட்டா"   செய்ய பிளான் போட்டிருக்கின்றேன், அது சரியாக...  வர,
நீங்களும், ஆண்டவனை   🙏 பிரார்த்தியுங்கள் என்று,
வேறு ஒரு, திரியில்... குறிப்பிட்டு இருந்தேன். :)

யாழ்.கள உறுப்பினர்கள் எல்லோரும், பிரார்த்தித்து   👏  இருக்கிறார்கள் போலுள்ளது. :grin:
நான் செய்த,  பரோட்டா.... கடையில் வாங்குவதை விட,  நன்றாக  இருந்தது  என்று, 
வீட்டில்... எல்லோரும், 💕 விரும்பி சாப்பிட்டார்கள். :)

ஓகே... இனி, நான்  "பரோட்டா"   செய்த முறையை, பார்ப்போம்...

வீட்டில்,  ஐந்து பேர் இருந்தால்....
மத்தியானமும், இரவும் சாப்பிட... பரோட்டாவுக்கு  தேவையான பொருட்கள். 🧐

 

இவை....  "பரோட்டா" மாவை, குழைக்க  தேவையான பொருட்கள். 

கோதுமை மா.  -------   இரண்டு, கிலோ கிராம்.
பால்.   --------  750 மில்லி லீற்றர்.
பட்டர்  ---------  10 மேசைக் கரண்டி.
உப்பு.  ---------  5 தேக்கரண்டி.
சீனி.   ----------  5 தேக்கரண்டி.
எண்ணை.  ----------  150 மில்லி லீற்றர்.   
இளம் சூடான தண்ணீர்.  ----------  500 மில்லி லீற்றர்.
உருட்டுக் கட்டை. ---------  ஒன்று போதும். 🤣

செய்முறை.
1)  மாவை... (மாவை சேனாதிராஜாவை,  அல்ல) :grin: ஒரு பெரிய,  பிளாஸ்ரிக் சட்டியில் போடவும். 😄

2)  750 மில்லி லீற்றர்  பாலும், எண்ணையும்  விட்டு... நன்றாக  பிசையவும்.

3)  மைக்ரோ அவனில்... சாதுவாக சூடாக்கிய, பட்டரையும்.... 
உப்பையும், போட்டு, மேலும்... நன்றாக  குழைக்கவும்.

4)  இப்போ... தண்ணீர் விட்டு, குழைக்க வேண்டிய,  இறுதிக் கட்டத்துக்கு, வந்துள்ளோம்.
கொஞ்சம், கொஞ்சமாக....  தண்ணீர் விட்டு, பிசையும் போது.... 
மிகவும்,  அவதானமாக இருக்க வேண்டும். தண்ணீர் கூடினால்..  எல்லாம்   பிழைத்துப் போகும். 😮

குழைத்துக்  கொண்டிருக்கும் மா.... உங்கள் கையில் ஒட்டாமல், வந்தது என்றால்,
சரியான பதத்துக்கு... மாவை, குழைத்து விட்டீர்கள் என்று, அர்த்தம். 👆

கையில்... கனக்க, ஒட்டி இருந்தால்... இன்னும், கொஞ்ச  மாவை போட்டு....
பதத்துக்கு... கொண்டு வாருங்கள். 

இனி.... குழைத்த மாவின் மேல், எண்ணை தடவி,  
அதே சட்டியில் வைத்து, 30 நிமிடங்கள் வரை,
சாதுவான ஈரத் துணியால்.... மூடி  விடுங்கள்.
மா... நன்றாக ஊறினால் தான்,  "பரோட்டா" மெதுமையாக வரும்.  :)

சீனி.. போட விருப்பமில்லாதவர்கள், அதனை தவிர்க்கலாம்.
சீனியை...  போட் டால்,  "பரோட்டா"  நல்ல மண்ணிறத்துக்கு வரும்.

அரை மணித்தியாலம் ஆகி விட்டது.... அடுத்த, வேலைக்கு... போவோம். :grin:

 

1)  ஒரு தோசைக் கல்லை..... எடுத்து, அடுப்பில் வைத்து,  மெல்லிய சூட்டில் சூடாக்கவும்.
அடுப்பு.. எப்பவும், மெல்லிய சூட்டில்... இருக்க வேண்டும். இல்லையேல்...
 "பரோட்டா" வெளியில் கருகி, உள்ளுக்கு வேகமால் போய் விடும்.

2)   குழைத்த  மாவை,  🍋 தேசிக்காய் 🟠  அளவு எடுத்து..... "குசினி" மேடையில் வைத்து,
உருட்டுக் கட்டையால்.... மா,  மெல்லிசாக...  வரும் வரை உருட்டவும்.  

3)   இப்போ... அதனை, ஒரு தட்டில், அல்லது கோப்பையில் வைத்து....  இரண்டு சென்ரி மீற்றர்  அளவில்,
நீள வாக்கிற்க்கு  கத்தியால், கீறி  விடுங்கள். அவ்வப்போது, எண்ணையை.. பாவியுங்கள்..

4)   இனி... கீறிய  மாக் கலவையை... குறுக்குப்  பாட்டிற்கு மெதுவாக உருட்ட, 
"பாம்பு" போல், அந்த மா வந்திருக்கும்.   😎

5)   இப்ப... அதனை,   "நத்தை" மாதிரி.... உருட்டி, திரும்பவும்... உருட்டுக் கட்டையால்,
அதன் மேல், மெல்லமாக அமத்தி, வட்ட வடிமாக ஆக்குங்கள்.  :grin:

6)  இனி... அதற்கு மேல், உருகிய பட்டரை... சாதுவாக தடவி, 
இளம் சூடான தோசைக்கல்லில் போட்டு, இரண்டு பக்கமும்..  உங்களுக்கு பிடித்த,
மண்ணிறம்  வரும் வரை, சூடாக்கி எடுங்கள்.

இப்போ... இனி செய்ய வேண்டும்? என கேட்கிறீர்காளா? 
குசினிக்குள் நின்ற படியே....   "பரோட்டா" ரெடி... ‼️ என்று கத்துங்கள். 🤠
எல்லாரும்... பாய்ந்தடித்து, சாப்பிட வந்து,  சாப்பிட்டு விட்டு,
அப்பா... 😍  உங்களில், இப்படி... ஒரு, திறமையா....?  
என்ற, பாராட்டை...  கேட்கும் போது,    மிகப் பெருமையாக இருக்கும். 💕

💥 டிஸ்கி:  "பரோட்டா" செய்ய,  மூன்று மணி நேரமும், 
அடுப்பையும், பாத்திரங்களையும்... கழுவி வைக்க, ஒன்றரை மணி நேரமும்,
இந்தப் படங்களை, தரவேற்ற... இரண்டு மணித்தியாலமும், 
அதற்குத் தேவையான பொருட்களை வாங்க,  ஒன்றரை மணி நேரமும் எடுத்தது. 
மொத்தத்தில்....  எட்டு மணித்தியாலம், 
குடும்பத்தில் செலவளித்தது... மிக்க மகிழ்ச்சியை, தருகின்றது. 💋

சிறி, ஒரு மாதிரி நீங்களும் களத்தில் இறங்கி  கலக்கி விட்டீர்கள். நீங்கள் செய்ததை வர்னித்த விதம்தான் எல்லாவற்றையும் விட highlight 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறியற்றை பரோட்டா எப்படியோதெரியாது.ஆனால் எழுதியவிதம் சொல்லி வேலை இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நீர்வேலியான் said:

சிறி, ஒரு மாதிரி நீங்களும் களத்தில் இறங்கி  கலக்கி விட்டீர்கள். நீங்கள் செய்ததை வர்னித்த விதம்தான் எல்லாவற்றையும் விட highlight 

 

1 hour ago, சுவைப்பிரியன் said:

சிறியற்றை பரோட்டா எப்படியோதெரியாது.ஆனால் எழுதியவிதம் சொல்லி வேலை இல்லை.

 

சில வாத்திமார் பட்டங்கள் பெற்றிருப்பார்கள் படிப்பிக்கத் தெரியாது.

சிலர் ஓஎல் ஏல் தான் செய்திருப்பார்கள்.ஆனால் எருமைமாட்டை கொண்டு போய் விட்டாலும் சோதனையில் சித்தியடையச் செய்வார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, ஈழப்பிரியன் said:

 

 

சில வாத்திமார் பட்டங்கள் பெற்றிருப்பார்கள் படிப்பிக்கத் தெரியாது.

சிலர் ஓஎல் ஏல் தான் செய்திருப்பார்கள்.ஆனால் எருமைமாட்டை கொண்டு போய் விட்டாலும் சோதனையில் சித்தியடையச் செய்வார்கள்.

இப்ப இதில யார் எருமை யார் வாத்தி😃

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.