Jump to content

"பரோட்டா" மாஸ்ரர்.... தமிழ் சிறி.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

large.IMG_0146.2.jpg.047c90ec003bb8d1da72e88b823fe86b.jpg

 

இன்று வீட்டில், எல்லோரும் நிற்பதால்.... 
"பரோட்டா"   செய்ய பிளான் போட்டிருக்கின்றேன், அது சரியாக...  வர,
நீங்களும், ஆண்டவனை   🙏 பிரார்த்தியுங்கள் என்று,
வேறு ஒரு, திரியில்... குறிப்பிட்டு இருந்தேன். :)

யாழ்.கள உறுப்பினர்கள் எல்லோரும், பிரார்த்தித்து   👏  இருக்கிறார்கள் போலுள்ளது. :grin:
நான் செய்த,  பரோட்டா.... கடையில் வாங்குவதை விட,  நன்றாக  இருந்தது  என்று, 
வீட்டில்... எல்லோரும், 💕 விரும்பி சாப்பிட்டார்கள். :)

ஓகே... இனி, நான்  "பரோட்டா"   செய்த முறையை, பார்ப்போம்...

வீட்டில்,  ஐந்து பேர் இருந்தால்....
மத்தியானமும், இரவும் சாப்பிட... பரோட்டாவுக்கு  தேவையான பொருட்கள். 🧐

 

இவை....  "பரோட்டா" மாவை, குழைக்க  தேவையான பொருட்கள். 

கோதுமை மா.  -------   இரண்டு, கிலோ கிராம்.
பால்.   --------  750 மில்லி லீற்றர்.
பட்டர்  ---------  10 மேசைக் கரண்டி.
உப்பு.  ---------  5 தேக்கரண்டி.
சீனி.   ----------  5 தேக்கரண்டி.
எண்ணை.  ----------  150 மில்லி லீற்றர்.   
இளம் சூடான தண்ணீர்.  ----------  500 மில்லி லீற்றர்.
உருட்டுக் கட்டை. ---------  ஒன்று போதும். 🤣

செய்முறை.
1)  மாவை... (மாவை சேனாதிராஜாவை,  அல்ல) :grin: ஒரு பெரிய,  பிளாஸ்ரிக் சட்டியில் போடவும். 😄

2)  750 மில்லி லீற்றர்  பாலும், எண்ணையும்  விட்டு... நன்றாக  பிசையவும்.

3)  மைக்ரோ அவனில்... சாதுவாக சூடாக்கிய, பட்டரையும்.... 
உப்பையும், போட்டு, மேலும்... நன்றாக  குழைக்கவும்.

4)  இப்போ... தண்ணீர் விட்டு, குழைக்க வேண்டிய,  இறுதிக் கட்டத்துக்கு, வந்துள்ளோம்.
கொஞ்சம், கொஞ்சமாக....  தண்ணீர் விட்டு, பிசையும் போது.... 
மிகவும்,  அவதானமாக இருக்க வேண்டும். தண்ணீர் கூடினால்..  எல்லாம்   பிழைத்துப் போகும். 😮

குழைத்துக்  கொண்டிருக்கும் மா.... உங்கள் கையில் ஒட்டாமல், வந்தது என்றால்,
சரியான பதத்துக்கு... மாவை, குழைத்து விட்டீர்கள் என்று, அர்த்தம். 👆

கையில்... கனக்க, ஒட்டி இருந்தால்... இன்னும், கொஞ்ச  மாவை போட்டு....
பதத்துக்கு... கொண்டு வாருங்கள். 

இனி.... குழைத்த மாவின் மேல், எண்ணை தடவி,  
அதே சட்டியில் வைத்து, 30 நிமிடங்கள் வரை,
சாதுவான ஈரத் துணியால்.... மூடி  விடுங்கள்.
மா... நன்றாக ஊறினால் தான்,  "பரோட்டா" மெதுமையாக வரும்.  :)

சீனி.. போட விருப்பமில்லாதவர்கள், அதனை தவிர்க்கலாம்.
சீனியை...  போட் டால்,  "பரோட்டா"  நல்ல மண்ணிறத்துக்கு வரும்.

அரை மணித்தியாலம் ஆகி விட்டது.... அடுத்த, வேலைக்கு... போவோம். :grin:

 

1)  ஒரு தோசைக் கல்லை..... எடுத்து, அடுப்பில் வைத்து,  மெல்லிய சூட்டில் சூடாக்கவும்.
அடுப்பு.. எப்பவும், மெல்லிய சூட்டில்... இருக்க வேண்டும். இல்லையேல்...
 "பரோட்டா" வெளியில் கருகி, உள்ளுக்கு வேகமால் போய் விடும்.

2)   குழைத்த  மாவை,  🍋 தேசிக்காய் 🟠  அளவு எடுத்து..... "குசினி" மேடையில் வைத்து,
உருட்டுக் கட்டையால்.... மா,  மெல்லிசாக...  வரும் வரை உருட்டவும்.  

3)   இப்போ... அதனை, ஒரு தட்டில், அல்லது கோப்பையில் வைத்து....  இரண்டு சென்ரி மீற்றர்  அளவில்,
நீள வாக்கிற்க்கு  கத்தியால், கீறி  விடுங்கள். அவ்வப்போது, எண்ணையை.. பாவியுங்கள்..

4)   இனி... கீறிய  மாக் கலவையை... குறுக்குப்  பாட்டிற்கு மெதுவாக உருட்ட, 
"பாம்பு" போல், அந்த மா வந்திருக்கும்.   😎

5)   இப்ப... அதனை,   "நத்தை" மாதிரி.... உருட்டி, திரும்பவும்... உருட்டுக் கட்டையால்,
அதன் மேல், மெல்லமாக அமத்தி, வட்ட வடிமாக ஆக்குங்கள்.  :grin:

6)  இனி... அதற்கு மேல், உருகிய பட்டரை... சாதுவாக தடவி, 
இளம் சூடான தோசைக்கல்லில் போட்டு, இரண்டு பக்கமும்..  உங்களுக்கு பிடித்த,
மண்ணிறம்  வரும் வரை, சூடாக்கி எடுங்கள்.

இப்போ... இனி செய்ய வேண்டும்? என கேட்கிறீர்காளா? 
குசினிக்குள் நின்ற படியே....   "பரோட்டா" ரெடி... ‼️ என்று கத்துங்கள். 🤠
எல்லாரும்... பாய்ந்தடித்து, சாப்பிட வந்து,  சாப்பிட்டு விட்டு,
அப்பா... 😍  உங்களில், இப்படி... ஒரு, திறமையா....?  
என்ற, பாராட்டை...  கேட்கும் போது,    மிகப் பெருமையாக இருக்கும். 💕

💥 டிஸ்கி:  "பரோட்டா" செய்ய,  மூன்று மணி நேரமும், 
அடுப்பையும், பாத்திரங்களையும்... கழுவி வைக்க, ஒன்றரை மணி நேரமும்,
இந்தப் படங்களை, தரவேற்ற... இரண்டு மணித்தியாலமும், 
அதற்குத் தேவையான பொருட்களை வாங்க,  ஒன்றரை மணி நேரமும் எடுத்தது. 
மொத்தத்தில்....  எட்டு மணித்தியாலம், 
குடும்பத்தில் செலவளித்தது... மிக்க மகிழ்ச்சியை, தருகின்றது. 💋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி, வெல்கம் டூ "டம்மிஸ் செஃப்" குறூப்..!   poele.gif

பாராட்டுக்கள்..  bjr2.gif

அடுத்தமுறை கீழ்க்கண்ட மாதிரி காணொளியை தயாரித்து யுடுயூபில் தரவேற்றம் செய்து இங்கே இணையுங்கள்..!

(எப்படி யூடூபில் கணக்கு துவங்கி காணொளியை மெருகேற்றி தரவேற்றம் செய்வது..?  என உதவி தேவைப்பட்டால், சொல்லுங்கள் உதவுகிறேன்..!)

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, தமிழ் சிறி said:

இன்று வீட்டில், எல்லோரும் நிற்பதால்.... 
"பரோட்டா"   செய்ய பிளான் போட்டிருக்கின்றேன், அது சரியாக... 

சிறி இத்தனை நாளாக திட்டம் போட்டு இப்பவாவது செய்து முடித்துள்ளீர்கள்.
மிகவும் சந்தோசம்.
குடும்பத்தவர்களும் மிகவும் சந்தோசப்பட்டிருப்பார்கள்.
அதைவிட அப்பா குசினிக்குள் பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டிருப்பார்கள்.
ஏன் உங்களுக்கே உங்களை நினைக்க ஆச்சரியமாக இருந்திருக்கும்.
60 வருடத்தில் இப்ப தான் முதல் தடவை குசினியை கைபற்றியிருக்கிறீர்கள்.
பொம்பிளை கையும் தெரியுது.அதைப் பற்றி ஒன்றையும் காணவில்லை.

சரி பிள்ளையார் சுழி போட்டாச்சு.இனி தொடரட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

தமிழ் சிறி, வெல்கம் டூ "டம்மிஸ் செஃப்" குறூப்..!   poele.gif

பாராட்டுக்கள்..  bjr2.gif

அடுத்தமுறை கீழ்க்கண்ட மாதிரி காணொளியை தயாரித்து யுடுயூபில் தரவேற்றம் செய்து இங்கே இணையுங்கள்..!

(எப்படி யூடூபில் கணக்கு துவங்கி காணொளியை மெருகேற்றி தரவேற்றம் செய்வது..?  என உதவி தேவைப்பட்டால், சொல்லுங்கள் உதவுகிறேன்..!)

 

 

ஓம்... வன்னியன்,ன் எனக்கு.. "யூ  ரியூப்பில்" ஒரு பதிவு போட வேண்டும் என்று ஆசை உள்ளது.
அதற்காக... இன்று, காலை எட்டு மணிக்கு, கடை திறக்கும் நேரம்,    
முதல் ஆளாய்.. போய் நின்று,  "பரோட்டா" பொருட்களை வாங்கும் போதே...
நில்மினியின்...  "மாலு பணிஸ்" செய்வதற்கு தேவையான..... 
பொருட்களையும் வாங்கி வந்து விட்டேன்.  

ஆனால்... இன்று சனிக்கிழமை, வீட்டில்  எல்லோரும்.... 
(என்னைத் தவிர)  சைவ உணவு...  உண்பவர்கள் என்பதால்,  
அதனை சமைக்க முடியாமல் போய் விட்டது, 

அத்துடன்... அகலக் கால் வைத்து, செய்கின்ற ஒரு சமையலை... சொதப்பக்   கூடாது என்பதால்,
"மாலு பணிசை"... அடுத்த முறை செய்யலாம் என நினைக்கின்றேன். 

அப்போது... நிச்சயம், உங்கள் உதவி தேவைப்படும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமையலில் இப்படி மினக்கெடுவீர்கள் என்று தெரிந்திருந்தால் உந்தப் போன் கோதாரியை நாலு வருடத்துக்கு முன்பே வாங்கித் தந்திருப்பார்கள்.........! 

இனித்தான் நீங்கள் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்...... பரோட்டா ஆயிட்டம் இப்ப உங்களின் பொறுப்பில் வந்து விட்டது....ஆர்வக்கோளாறில் 🐘 தன் 🤯 யில் :337_fire: கொட்டின மாதிரி ஆயிடப்போகுது......!   😪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

1 hour ago, ஈழப்பிரியன் said:

சிறி இத்தனை நாளாக திட்டம் போட்டு இப்பவாவது செய்து முடித்துள்ளீர்கள்.
மிகவும் சந்தோசம்.
குடும்பத்தவர்களும் மிகவும் சந்தோசப்பட்டிருப்பார்கள்.
அதைவிட அப்பா குசினிக்குள் பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டிருப்பார்கள்.
ஏன் உங்களுக்கே உங்களை நினைக்க ஆச்சரியமாக இருந்திருக்கும்.
60 வருடத்தில் இப்ப தான் முதல் தடவை குசினியை கைபற்றியிருக்கிறீர்கள்.
பொம்பிளை கையும் தெரியுது.அதைப் பற்றி ஒன்றையும் காணவில்லை.

சரி பிள்ளையார் சுழி போட்டாச்சு.இனி தொடரட்டும்.

ஈழப்பிரியன், எனக்கு,  இந்த ஆசை... நீண்ட நாட்களாக இருந்தது. :D:
ஆனால்... அதனைச்  செய்ய முடியாமல், வேலைப்பளு... மிகவும் அதிகமாக இருந்ததால்,
அந்த ஆசை... தள்ளிப் போய்க் கொண்டே  வந்தது.

"கொரோனா"  உலகம் எல்லாம்... பரவியதன்  மூலம்,
எனது வேலை இடத்திலும், "மந்த நிலை" ஏற்பட்டதால்...
எனக்கு சென்ற வருடங்களாக...  சேமித்த, வருட விடுமுறை நாட்கள் 32´ம்,
இந்த வருட விடுமுறை நாட்கள்... 30´ம் சேர்த்து,  62 விடுமுறை நாட்கள்  கைவசம் உள்ளது.

எமது முதலாளி... எம்மிடம் வந்து,  
"கொரோனா" பிரச்சினையால்.... வர்த்தகம்  மோசமாக பாதிக்கப் பட்டுக் கொண்டு போயுள்ளது.
ஆனாலும்... எங்கள் நிறுவனம், பச்சைக் கோட்டிற்குள் இருந்தாலும்...
எப்பவும்... மஞ்சள், சிவப்புக்  கோட்டிற்குள் வரலாம்.
அதற்கு முன்... உங்கள், பழைய ஆண்டு, விடுமுறைகளை எடுங்கள் என்றும்...
தமிழ் சிறி தான்... இந்த நிறுவனத்திலேயே, 
கூடுதலான விடுமுறையை சேமித்து  வைத்திருப்பவர்  என்று...  
எனது முகத்தைப்  பார்த்து கூறியவுடன்...    போது,

"தமிழன் டா"....  எதனையும்...  சேர்த்து வைப்பதில், திறமானவன் டா....  
என்று,  கூவ  வேண்டும் போல இருந்தாலும்,   சபை நாகரீகம்  கருதி...
ஊகூ.... என்று, பெரிய குரல் எடுத்து, கத்தி.... (சவுண்டு)  கொடுத்தேன். :grin:
இவனுக்கு... விசரோ...என்று, பலர் பார்த்தாலும், 
என்னை அறிந்தவர்கள்... நன்றாக சிரித்தார்கள். 🤣

இப்போ... எனக்கு, வாற கிழமை.... முழுக்க விடுமுறை.
கனக்க.... புரோகிராம் போட்டு வைத்துள்ளேன். ஈழப்பிரியன்... 

பரோட்டா..... செய்யும் போது,.....
உப்பு, சீனி, எண்ணை, போன்றவற்றை எடுக்கவும்... 
நான்... உருட்டுற, பரோட்டாவை... புரட்டவும் ... 
அந்த இடத்து.... ஆளை, கையில்... வைத்திருப்பதும் ஒரு "ரெக்னிக்" தான். :D:
அது தான்... எனது இல்லத்து, இனிய... அரசி.   :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, தமிழ் சிறி said:

பரோட்டா..... செய்யும் போது,.....
உப்பு, சீனி, எண்ணை, போன்றவற்றை எடுக்கவும்... 
நான்... உருட்டுற, பரோட்டாவை... புரட்டவும் ... 
அந்த இடத்து.... ஆளை, கையில்... வைத்திருக்க வேண்டும்.
அது தான்... எனது இல்லத்து, இனிய... அரசி.   :)

ஆகா முட்டாள் என்று சொல்லுங்க.(ஆளில்லை வேலையை சொன்னேன்)

26 minutes ago, தமிழ் சிறி said:

தமிழ் சிறி தான்... இந்த நிறுவனத்திலேயே, 
கூடுதலான விடுமுறையை சேமித்து  வைத்திருப்பவர்  என்று...  
எனது முகத்தைப்  பார்த்து கூறியவுடன்...    போது,

ஊரில தான் தின்னாமல் குடிக்காமல் உடுக்காமல் சேர்த்து வைத்து மொத்தமா கொடுத்தோமே?
இங்கையுமா?
ஆமா இந்த விடுமுறை நாளை பணமாக தரமாட்டார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

 

 

 

நான் இவ்வளவு நாளும் சிறித்தம்பியை கமலகாசன் கலர்  எண்டெல்லே நினைச்சுக்கொண்டிருந்தனான். 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, குமாரசாமி said:

நான் இவ்வளவு நாளும் சிறித்தம்பியை கமலகாசன் கலர்  எண்டெல்லே நினைச்சுக்கொண்டிருந்தனான். 😎

நோ நோ நோ
அது அடுப்பு சூட்டுக்கு கை கொஞ்சம் கறுத்துப் போச்சு.

1 hour ago, தமிழ் சிறி said:

அந்த இடத்து.... ஆளை, கையில்... வைத்திருப்பதும் ஒரு "ரெக்னிக்" தான். 

உருட்டுக் கட்டைகளை கொடுத்துட்டு பக்கத்தில நிக்கிறது கவனமப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

பால்.   --------  750 மில்லி லீற்றர்.

இதை என்ன செய்தீர்கள்.....??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரோடடவும் சாம்பலும் நல்ல  இருக்கு . ஆனால் போட்டொவுக்காக

எண்ணெய் போத்தலுடன் நிற்க கூடாது 😗

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி நன்றாக மினக்கிட்டு இருக்கிறீர்கள், இனி குசுனிக்குள் தான் வாழ்கை, அடிக்கடி விதம் விதமாக செய்து அசத்துங்கள், காலடி எடுத்து வைக்கும் வரைதான் தயக்கம் எப்படியிருக்குமோ என்று

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

இதை என்ன செய்தீர்கள்.....??

 

7 hours ago, தமிழ் சிறி said:

 

 

செய்முறை.
1)  மாவை... (மாவை சேனாதிராஜாவை,  அல்ல) :grin: ஒரு பெரிய,  பிளாஸ்ரிக் சட்டியில் போடவும். 😄

2)   பாலும், எண்ணையும்  விட்டு... நன்றாக  பிசையவும்.

3)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, உடையார் said:

 

 

உடையார்..... இந்த  மாவை... நினைத்தவுடன்,
அந்த.... மாவை... வந்து,  எல்லாத்தையும்...  குழப்பியடிச்சுட்டார்.:grin:

😎 ச்சீ...ய்.... புலம் பெயர் நாட்டிலை, இருக்கிற தமிழனை... 
பரோட்டா சுடவும்... விடுறாங்களில்லை    :D:
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

 

பிறகென்ன சிறி ஒருமாதிரி குசினிக்குள் என்டர் பண்ணி பாம்பு மாதிரி, நத்தை மாதிரி உருட்டி நல்ல பரோட்டாவும் சம்பலும் செய்துபோட்டீர். வாழ்த்துக்கள். செய்முறைக்கு நன்றி . 8 மணி நேரம் என்ன எவ்வளவு நேரம் போனாலும் பிரயோசனம். நாங்களும் உமது கைவண்ணத்தை பார்த்ததாக போயிட்டுது . அடுத்த ரிலீஸ் எப்ப?  இந்தியாவில் படிக்கும் போது  விடுதிக்கு பக்கத்துக்கு கொட்டில் கடையில்  பரோட்டாவும் சால்னாவும் சாப்பிட்ட ஞாபகம் வந்துது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழ் சிறி said:

large.IMG_0146.2.jpg.047c90ec003bb8d1da72e88b823fe86b.jpg

 

இன்று வீட்டில், எல்லோரும் நிற்பதால்.... 
"பரோட்டா"   செய்ய பிளான் போட்டிருக்கின்றேன், அது சரியாக...  வர,
நீங்களும், ஆண்டவனை   🙏 பிரார்த்தியுங்கள் என்று,
வேறு ஒரு, திரியில்... குறிப்பிட்டு இருந்தேன். :)

யாழ்.கள உறுப்பினர்கள் எல்லோரும், பிரார்த்தித்து   👏  இருக்கிறார்கள் போலுள்ளது. :grin:
நான் செய்த,  பரோட்டா.... கடையில் வாங்குவதை விட,  நன்றாக  இருந்தது  என்று, 
வீட்டில்... எல்லோரும், 💕 விரும்பி சாப்பிட்டார்கள். :)

ஓகே... இனி, நான்  "பரோட்டா"   செய்த முறையை, பார்ப்போம்...

வீட்டில்,  ஐந்து பேர் இருந்தால்....
மத்தியானமும், இரவும் சாப்பிட... பரோட்டாவுக்கு  தேவையான பொருட்கள். 🧐

 

இவை....  "பரோட்டா" மாவை, குழைக்க  தேவையான பொருட்கள். 

கோதுமை மா.  -------   இரண்டு, கிலோ கிராம்.
பால்.   --------  750 மில்லி லீற்றர்.
பட்டர்  ---------  10 மேசைக் கரண்டி.
உப்பு.  ---------  5 தேக்கரண்டி.
சீனி.   ----------  5 தேக்கரண்டி.
எண்ணை.  ----------  150 மில்லி லீற்றர்.   
இளம் சூடான தண்ணீர்.  ----------  500 மில்லி லீற்றர்.
உருட்டுக் கட்டை. ---------  ஒன்று போதும். 🤣

செய்முறை.
1)  மாவை... (மாவை சேனாதிராஜாவை,  அல்ல) :grin: ஒரு பெரிய,  பிளாஸ்ரிக் சட்டியில் போடவும். 😄

2)  எண்ணை  விட்டு, நன்றாக.... பிசையவும்.

3)  மைக்ரோ அவனில்... சாதுவாக சூடாக்கிய, பட்டரையும்.... 
உப்பையும், போட்டு, மேலும்... நன்றாக  குழைக்கவும்.

4)  இப்போ... தண்ணீர் விட்டு, குழைக்க வேண்டிய,  இறுதிக் கட்டத்துக்கு, வந்துள்ளோம்.
கொஞ்சம், கொஞ்சமாக....  தண்ணீர் விட்டு, பிசையும் போது.... 
மிகவும்,  அவதானமாக இருக்க வேண்டும். தண்ணீர் கூடினால்..  எல்லாம்   பிழைத்துப் போகும். 😮

குழைத்துக்  கொண்டிருக்கும் மா.... உங்கள் கையில் ஒட்டாமல், வந்தது என்றால்,
சரியான பதத்துக்கு... மாவை, குழைத்து விட்டீர்கள் என்று, அர்த்தம். 👆

கையில்... கனக்க, ஒட்டி இருந்தால்... இன்னும், கொஞ்ச  மாவை போட்டு....
பதத்துக்கு... கொண்டு வாருங்கள். 

இனி.... குழைத்த மாவின் மேல், எண்ணை தடவி,  
அதே சட்டியில் வைத்து, 30 நிமிடங்கள் வரை,
சாதுவான ஈரத் துணியால்.... மூடி  விடுங்கள்.
மா... நன்றாக ஊறினால் தான்,  "பரோட்டா" மெதுமையாக வரும்.  :)

சீனி.. போட விருப்பமில்லாதவர்கள், அதனை தவிர்க்கலாம்.
சீனியை...  போட் டால்,  "பரோட்டா"  நல்ல மண்ணிறத்துக்கு வரும்.

அரை மணித்தியாலம் ஆகி விட்டது.... அடுத்த, வேலைக்கு... போவோம். :grin:

 

1)  ஒரு தோசைக் கல்லை..... எடுத்து, அடுப்பில் வைத்து,  மெல்லிய சூட்டில் சூடாக்கவும்.
அடுப்பு.. எப்பவும், மெல்லிய சூட்டில்... இருக்க வேண்டும். இல்லையேல்...
 "பரோட்டா" வெளியில் கருகி, உள்ளுக்கு வேகமால் போய் விடும்.

2)   குழைத்த  மாவை,  🍋 தேசிக்காய் 🟠  அளவு எடுத்து..... "குசினி" மேடையில் வைத்து,
உருட்டுக் கட்டையால்.... மா,  மெல்லிசாக...  வரும் வரை உருட்டவும்.  

3)   இப்போ... அதனை, ஒரு தட்டில், அல்லது கோப்பையில் வைத்து....  இரண்டு சென்ரி மீற்றர்  அளவில்,
நீள வாக்கிற்க்கு  கத்தியால், கீறி  விடுங்கள். அவ்வப்போது, எண்ணையை.. பாவியுங்கள்..

4)   இனி... கீறிய  மாக் கலவையை... குறுக்குப்  பாட்டிற்கு மெதுவாக உருட்ட, 
"பாம்பு" போல், அந்த மா வந்திருக்கும்.   😎

5)   இப்ப... அதனை,   "நத்தை" மாதிரி.... உருட்டி, திரும்பவும்... உருட்டுக் கட்டையால்,
அதன் மேல், மெல்லமாக அமத்தி, வட்ட வடிமாக ஆக்குங்கள்.  :grin:

6)  இனி... அதற்கு மேல், உருகிய பட்டரை... சாதுவாக தடவி, 
இளம் சூடான தோசைக்கல்லில் போட்டு, இரண்டு பக்கமும்..  உங்களுக்கு பிடித்த,
மண்ணிறம்  வரும் வரை, சூடாக்கி எடுங்கள்.

இப்போ... இனி செய்ய வேண்டும்? என கேட்கிறீர்காளா? 
குசினிக்குள் நின்ற படியே....   "பரோட்டா" ரெடி... ‼️ என்று கத்துங்கள். 🤠
எல்லாரும்... பாய்ந்தடித்து, சாப்பிட வந்து,  சாப்பிட்டு விட்டு,
அப்பா... 😍  உங்களில், இப்படி... ஒரு, திறமையா....?  
என்ற, பாராட்டை...  கேட்கும் போது,    மிகப் பெருமையாக இருக்கும். 💕

💥 டிஸ்கி:  "பரோட்டா" செய்ய,  மூன்று மணி நேரமும், 
அடுப்பையும், பாத்திரங்களையும்... கழுவி வைக்க, ஒன்றரை மணி நேரமும்,
இந்தப் படங்களை, தரவேற்ற... இரண்டு மணித்தியாலமும், 
அதற்குத் தேவையான பொருட்களை வாங்க,  ஒன்றரை மணி நேரமும் எடுத்தது. 
மொத்தத்தில்....  எட்டு மணித்தியாலம், 
குடும்பத்தில் செலவளித்தது... மிக்க மகிழ்ச்சியை, தருகின்றது. 💋

 

6 hours ago, உடையார் said:

 

 

பாலை காணவில்லையே அண்ணா.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

large.IMG_0146.2.jpg.047c90ec003bb8d1da72e88b823fe86b.jpg

 

 

 

 

அவர் போட்ட நாப்பது பரோட்டாவில் போட்டொவில் போடுறது போல் இருந்தது பதினாலு பரோட்டா மட்டுமே, மிகுதியை மணாளனின் மானத்தை காப்பாற்ற மனையாள் ரிஜெக்ட் பண்ணி விட்டார்.....!   😁 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நிலாமதி said:

பரோடடவும் சாம்பலும் நல்ல  இருக்கு . ஆனால் போட்டொவுக்காக

எண்ணெய் போத்தலுடன் நிற்க கூடாது 😗

கையிலை வைச்சிருந்தது வேறை போத்திலாம்.....:cool:
பட நாகரீகம் கருதி பறிச்சு வைச்சிட்டு எண்ணைப்போத்திலை குடுத்தவையாம் 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த லொக் டவுண் தமிழ்சிறியையும் குசினிக்குள் போக வைத்திருக்கு 👍
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போத்தலோடை நிக்கிறதே நம்மாளு? அட... நான் ரொட்டி பிரட்டிப் போடுற கை தான் எண்டு நினைச்சு போட்டேன்.. 🤔

போத்திலுக்கு முன்னால வயிரு நிக்குதே.... 😄

துவக்கும்... தொப்பியுமா நிக்கிற ப்ரொபைல் படத்துக்கும்..... தமிழ் சிறியருக்கும் கண வித்தியாசம்.. 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Nathamuni said:

போத்தலோடை நிக்கிறதே நம்மாளு? அட... நான் ரொட்டி பிரட்டிப் போடுற கை தான் எண்டு நினைச்சு போட்டேன்.. 🤔

போத்திலுக்கு முன்னால வயிரு நிக்குதே.... 😄

துவக்கும்... தொப்பியுமா நிக்கிற ப்ரொபைல் படத்துக்கும்..... தமிழ் சிறியருக்கும் கண வித்தியாசம்.. 😉

06_anhang6.2.jpg

இதுக்கு மிஞ்சியும் என்னாலை அமைதி காக்கேலாது.இப்பவே உண்மையை உடைச்சு விடுறன்.
அந்த கைகள் எல்லாம் சிறித்தம்பி வீட்டிலை வேலை செய்யிற பணியாட்களின்ரை...😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/5/2020 at 11:39, தமிழ் சிறி said:

large.IMG_0146.2.jpg.047c90ec003bb8d1da72e88b823fe86b.jpg

 

இன்று வீட்டில், எல்லோரும் நிற்பதால்.... 
"பரோட்டா"   செய்ய பிளான் போட்டிருக்கின்றேன், அது சரியாக...  வர,
நீங்களும், ஆண்டவனை   🙏 பிரார்த்தியுங்கள் என்று,
வேறு ஒரு, திரியில்... குறிப்பிட்டு இருந்தேன். :)

யாழ்.கள உறுப்பினர்கள் எல்லோரும், பிரார்த்தித்து   👏  இருக்கிறார்கள் போலுள்ளது. :grin:
நான் செய்த,  பரோட்டா.... கடையில் வாங்குவதை விட,  நன்றாக  இருந்தது  என்று, 
வீட்டில்... எல்லோரும், 💕 விரும்பி சாப்பிட்டார்கள். :)

ஓகே... இனி, நான்  "பரோட்டா"   செய்த முறையை, பார்ப்போம்...

வீட்டில்,  ஐந்து பேர் இருந்தால்....
மத்தியானமும், இரவும் சாப்பிட... பரோட்டாவுக்கு  தேவையான பொருட்கள். 🧐

 

இவை....  "பரோட்டா" மாவை, குழைக்க  தேவையான பொருட்கள். 

கோதுமை மா.  -------   இரண்டு, கிலோ கிராம்.
பால்.   --------  750 மில்லி லீற்றர்.
பட்டர்  ---------  10 மேசைக் கரண்டி.
உப்பு.  ---------  5 தேக்கரண்டி.
சீனி.   ----------  5 தேக்கரண்டி.
எண்ணை.  ----------  150 மில்லி லீற்றர்.   
இளம் சூடான தண்ணீர்.  ----------  500 மில்லி லீற்றர்.
உருட்டுக் கட்டை. ---------  ஒன்று போதும். 🤣

செய்முறை.
1)  மாவை... (மாவை சேனாதிராஜாவை,  அல்ல) :grin: ஒரு பெரிய,  பிளாஸ்ரிக் சட்டியில் போடவும். 😄

2)  750 மில்லி லீற்றர்  பாலும், எண்ணையும்  விட்டு... நன்றாக  பிசையவும்.

3)  மைக்ரோ அவனில்... சாதுவாக சூடாக்கிய, பட்டரையும்.... 
உப்பையும், போட்டு, மேலும்... நன்றாக  குழைக்கவும்.

4)  இப்போ... தண்ணீர் விட்டு, குழைக்க வேண்டிய,  இறுதிக் கட்டத்துக்கு, வந்துள்ளோம்.
கொஞ்சம், கொஞ்சமாக....  தண்ணீர் விட்டு, பிசையும் போது.... 
மிகவும்,  அவதானமாக இருக்க வேண்டும். தண்ணீர் கூடினால்..  எல்லாம்   பிழைத்துப் போகும். 😮

குழைத்துக்  கொண்டிருக்கும் மா.... உங்கள் கையில் ஒட்டாமல், வந்தது என்றால்,
சரியான பதத்துக்கு... மாவை, குழைத்து விட்டீர்கள் என்று, அர்த்தம். 👆

கையில்... கனக்க, ஒட்டி இருந்தால்... இன்னும், கொஞ்ச  மாவை போட்டு....
பதத்துக்கு... கொண்டு வாருங்கள். 

இனி.... குழைத்த மாவின் மேல், எண்ணை தடவி,  
அதே சட்டியில் வைத்து, 30 நிமிடங்கள் வரை,
சாதுவான ஈரத் துணியால்.... மூடி  விடுங்கள்.
மா... நன்றாக ஊறினால் தான்,  "பரோட்டா" மெதுமையாக வரும்.  :)

சீனி.. போட விருப்பமில்லாதவர்கள், அதனை தவிர்க்கலாம்.
சீனியை...  போட் டால்,  "பரோட்டா"  நல்ல மண்ணிறத்துக்கு வரும்.

அரை மணித்தியாலம் ஆகி விட்டது.... அடுத்த, வேலைக்கு... போவோம். :grin:

 

1)  ஒரு தோசைக் கல்லை..... எடுத்து, அடுப்பில் வைத்து,  மெல்லிய சூட்டில் சூடாக்கவும்.
அடுப்பு.. எப்பவும், மெல்லிய சூட்டில்... இருக்க வேண்டும். இல்லையேல்...
 "பரோட்டா" வெளியில் கருகி, உள்ளுக்கு வேகமால் போய் விடும்.

2)   குழைத்த  மாவை,  🍋 தேசிக்காய் 🟠  அளவு எடுத்து..... "குசினி" மேடையில் வைத்து,
உருட்டுக் கட்டையால்.... மா,  மெல்லிசாக...  வரும் வரை உருட்டவும்.  

3)   இப்போ... அதனை, ஒரு தட்டில், அல்லது கோப்பையில் வைத்து....  இரண்டு சென்ரி மீற்றர்  அளவில்,
நீள வாக்கிற்க்கு  கத்தியால், கீறி  விடுங்கள். அவ்வப்போது, எண்ணையை.. பாவியுங்கள்..

4)   இனி... கீறிய  மாக் கலவையை... குறுக்குப்  பாட்டிற்கு மெதுவாக உருட்ட, 
"பாம்பு" போல், அந்த மா வந்திருக்கும்.   😎

5)   இப்ப... அதனை,   "நத்தை" மாதிரி.... உருட்டி, திரும்பவும்... உருட்டுக் கட்டையால்,
அதன் மேல், மெல்லமாக அமத்தி, வட்ட வடிமாக ஆக்குங்கள்.  :grin:

6)  இனி... அதற்கு மேல், உருகிய பட்டரை... சாதுவாக தடவி, 
இளம் சூடான தோசைக்கல்லில் போட்டு, இரண்டு பக்கமும்..  உங்களுக்கு பிடித்த,
மண்ணிறம்  வரும் வரை, சூடாக்கி எடுங்கள்.

இப்போ... இனி செய்ய வேண்டும்? என கேட்கிறீர்காளா? 
குசினிக்குள் நின்ற படியே....   "பரோட்டா" ரெடி... ‼️ என்று கத்துங்கள். 🤠
எல்லாரும்... பாய்ந்தடித்து, சாப்பிட வந்து,  சாப்பிட்டு விட்டு,
அப்பா... 😍  உங்களில், இப்படி... ஒரு, திறமையா....?  
என்ற, பாராட்டை...  கேட்கும் போது,    மிகப் பெருமையாக இருக்கும். 💕

💥 டிஸ்கி:  "பரோட்டா" செய்ய,  மூன்று மணி நேரமும், 
அடுப்பையும், பாத்திரங்களையும்... கழுவி வைக்க, ஒன்றரை மணி நேரமும்,
இந்தப் படங்களை, தரவேற்ற... இரண்டு மணித்தியாலமும், 
அதற்குத் தேவையான பொருட்களை வாங்க,  ஒன்றரை மணி நேரமும் எடுத்தது. 
மொத்தத்தில்....  எட்டு மணித்தியாலம், 
குடும்பத்தில் செலவளித்தது... மிக்க மகிழ்ச்சியை, தருகின்றது. 💋

சிறி, ஒரு மாதிரி நீங்களும் களத்தில் இறங்கி  கலக்கி விட்டீர்கள். நீங்கள் செய்ததை வர்னித்த விதம்தான் எல்லாவற்றையும் விட highlight 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறியற்றை பரோட்டா எப்படியோதெரியாது.ஆனால் எழுதியவிதம் சொல்லி வேலை இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நீர்வேலியான் said:

சிறி, ஒரு மாதிரி நீங்களும் களத்தில் இறங்கி  கலக்கி விட்டீர்கள். நீங்கள் செய்ததை வர்னித்த விதம்தான் எல்லாவற்றையும் விட highlight 

 

1 hour ago, சுவைப்பிரியன் said:

சிறியற்றை பரோட்டா எப்படியோதெரியாது.ஆனால் எழுதியவிதம் சொல்லி வேலை இல்லை.

 

சில வாத்திமார் பட்டங்கள் பெற்றிருப்பார்கள் படிப்பிக்கத் தெரியாது.

சிலர் ஓஎல் ஏல் தான் செய்திருப்பார்கள்.ஆனால் எருமைமாட்டை கொண்டு போய் விட்டாலும் சோதனையில் சித்தியடையச் செய்வார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, ஈழப்பிரியன் said:

 

 

சில வாத்திமார் பட்டங்கள் பெற்றிருப்பார்கள் படிப்பிக்கத் தெரியாது.

சிலர் ஓஎல் ஏல் தான் செய்திருப்பார்கள்.ஆனால் எருமைமாட்டை கொண்டு போய் விட்டாலும் சோதனையில் சித்தியடையச் செய்வார்கள்.

இப்ப இதில யார் எருமை யார் வாத்தி😃

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து 
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.