Jump to content

Recommended Posts

யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஈ.பி.டி.பி உறுப்பினர் ஒருவர் வீடு ஒன்றிற்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இந்த சம்பவம் யாழ்ப்பாணம் பிரப்பங்குளம் வீதியில் உள்ள வீடொன்றில் நேற்று மாலை 5.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

ஈ.பி.டி.பி உறுப்பினர் இரா. செல்வவடிவேல், தனது மகனுடன் சென்று குறித்த வீட்டிற்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்டுள்ளார். அந்த வீட்டிலுள்ள கோழிப்பண்ணையை அகற்றாவிடின் ஆவா குழுவைக் கொண்டு அழிக்க வேண்டி வரும் எனவும் எச்சரித்துள்ள மாநகர சபை உறுப்பினர் இரா.செல்வவடிவேல், பண்ணை உரிமையாளரைத் தாக்கியும் உள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளர் கருத்துத் தெரிவிக்கையில்,

மாநகர சபை உறுப்பினர் இரா.செல்வவடிவேல் எமது வீதிக்கு 3 ஒழுங்கைகள் தொலைவில் இருக்கிறார். அவர் தனது மனைவி, மகனுடன் நேற்று மாலை எமது வீட்டுக்குள் சண்டியர் போன்று புகுந்தார். எமது கோழிப் பண்ணையால் சுகாதாரச் சீர்கேடு எனவும் அதனை உடனடியாக அகற்றுமாறும் அச்சுறுத்தும் பாணியில் தெரிவித்தார்.

நாம் இந்தக் கோழிப்பண்ணை பொதுச் சுகாதார பரிசோதகரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையில் உரிய அனுமதி பெற்று கடந்த 4 ஆண்டுகளாக நடத்தி வருகின்றோம் என்று அவரிடம் கூறினோம். அதனை ஏற்க மறுத்த அவர், தான் ஈ.பி.டி.பியைச் சேர்ந்தவர் என்றும் தனது மகனிடம் ஆவா குழு உள்ளது என்றும் மிரட்டி என்னை கொட்டனால் அடித்தார்.

பெண்களை தகாத வார்த்தைகளால் ஏசினார். அவரது அடாவடி தொடர்பில் பொலிஸ் அவசர சேவைக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் பொலிஸார் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர் என்று கோழிப்பண்ணை உரிமையாளர் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் ஈ.பி.டி.பி உறுப்பினர் கருத்துத் தெரிவிக்கையில்,

நான் அங்கு சென்று கோழிப்பண்ணை நாற்றம் தொடர்பில் கேட்டேன். அத்துடன் அந்தப் பண்ணை பதிவு செய்யப்படவில்லை. மேலும் கோழிப்பண்ணை உரிமையாளர் என் மீது கல்லால் எறிந்தார். அதனால் தான் அவரைத் தாக்கினேன் என்று மாநகர சபை உறுப்பினர் இரா.செல்வவடிவேல் தெரிவித்தார். இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

https://www.ibctamil.com/srilanka/80/142390?ref=home-imp-flag

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரா.செல்வவடிவேல்.. ஏன் இப்படி ஆனார்.

இவர் எதுக்கு ஈபிடிபி தேசவிரோதக் கும்பலோடு இயங்க ஆரம்பித்தார். கடந்த காலங்களை குறிப்பாக ஹிந்திய இராணுவத்தின் பிள்ளைபிடி காலத்தில் இவர் ஈபி கும்பலால் பட்ட துன்பத்தை எப்படி மறந்தார்..????!

ஒரு ஆசிரியர்.. பேச்சாளர் என்ற நிலைகளை எல்லாம் கடந்து இப்போ ஈபிடிபி சண்டியர் ஆகி இருப்பது மிகவும் கவலையளிக்கிறது.

இவரின் மதிப்புக்குரிய மாணவனாக இருந்த காலத்தை இட்டு இப்போ வெட்கப்பட வைத்துவிட்டாரே.

 

யாழ். மாநகர சபை உறுப்பினர் இரா ...

யாழ். மாநகர சபை உறுப்பினர் இரா ...

தங்கத்தாத்தா நினைவு விழா | Nanilam

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார் சொல்வது உண்மை? குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்கள் உள்ளனவா? அரசியல் தலையீட்டில் வந்து முடியுமா? ஒரே குழப்பமாக  இருக்கு குமரேசா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தவறு முழுவதும் இரா.செல்வவடிவேல் உடையதே.

முழு நடைமுறைகளையும் தெரிந்த ஒரு பிரஜை என்ற வகையில்.. இன்னொருவரின் வீடு தேடி போய் குடும்பமா நின்று கத்த வேண்டிய அவசியமில்லை. 

பிரச்சனையை பொது சுகாதாரப் பரிசோதகர்களின் கவனத்துக்கு கொண்டு சென்றிருக்கலாம்.. அல்லது சொறீலங்கா காவல்துறையில் முறையிட்டு அவர்கள் மூலமா விடயத்தைக் கையாண்டிருக்கலாம்.

மேலும்.. சமர்ப்பிக்கப்பட்ட காணொளியின் பிரகாரம்.. செல்வவடிவேலின் மகன் தான் முதலில் தாக்குதல் நடத்தியது தெரிகிறது. கல்லால் அடித்த எந்த ஒரு காட்சியும் பதிவாகவில்லை அல்லது வெளியிடப்படவில்லை. 

செல்வவடிவேல்.. வீட்டு வளவுக்குள் நுழைந்து தாக்கியதற்கு முன் அவரின் மகனோடு தான் பண்ணை உரிமையாளர் கைகலப்பில் ஈடுபட்டார். அதன் பின்னரே செல்வவடிவேல் வெளியில் இருந்து உள்நுழைந்து வீட்டு வளவுக்குள் வைத்து பண்ணை உரிமையாளரை தாக்கினார். அதன் பின் அவரின் மகனும் வளவுக்குள் நுழைந்துவிட்டார். 

இவை அனைத்துமே.. செல்வவடிவேல் மற்றும் அவரின் குடும்பத்தினரின் தவறே ஆகும்.

குற்றச்சாட்டை சட்டத்துக்கு அப்பால் தன் கையில் எடுத்துக் கையாண்டது அவர்களின் மகா தவறு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தின் ஒளி மயமான எதிர்காலம் தெரிகிறது....கோழி வளர்த்தும் தொழில் செய்து சாப்பிட முடியாத நிலை...e.p d.p கு 5 -6 சீற் கிடைத்தால்... எல்லாம் சிவமயமே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனது தகுதி ஆசிரியருக்குத் தெரியவில்லையா அல்லது ஆசிரியராக இருப்பதற்கு இவருக்குத் தகுதியில்லையா ?  ☹️

மாணவர்கள் இவரிடம் எதனைக் கற்கப் போகிறார்கள் 🤥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈ. பி.  டி. பி  யின் சேவை  பெருகுகிறது. இதுதான் இன்றைய வடக்கின் நிலைமை. அடாவடி, ஆவா குழு இயக்கத்தின் இயக்குனர் யார் என்பதும், மக்களின் கவலை, நிம்மதி அற்ற தன்மைக்கு காரணம் என்ன? என்பது தெளிவாக தெரிகிறது. சொறிஞ்ச கை சொறிஞ்சு கொண்டுதானிருக்கும். வடக்கின் பொதுவான நிலைமையினைச் சொன்னேன். எல்லாவற்றுக்குள்ளும் மூக்கை நுழைத்து, நீதிச் சேவையினைக் கையில் எடுப்பது, குழப்புவது. தகுதி அற்றவர் கையில் பதவி போனால், எல்லாம் குழப்பமே. 

Link to comment
Share on other sites

இராமசாமி செட்டியார் செல்வவடிவேல் ஈபிடிபி காடையர் கோஷ்டியுடன் கலந்து தனது மிருக குணத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதோட ஆவா குழுவை இயக்குவதில் ஈபிடிபி காடையர் கோஷ்டியின் பங்களிப்பை தெளிவாகவே வெளிப்படுத்தியுள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செல்வவடிவேல் என்று ஒருவர் என்னுடன் படித்தார்.
பின்னர் பயோலஜி ரியூசன் சொல்லிக் கொடுத்துக் கொண்டு திரிந்தார்.
அவரும் இவரும் ஒரே ஆளோ தெரியலை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, ஈழப்பிரியன் said:

செல்வவடிவேல் என்று ஒருவர் என்னுடன் படித்தார்.
பின்னர் பயோலஜி ரியூசன் சொல்லிக் கொடுத்துக் கொண்டு திரிந்தார்.
அவரும் இவரும் ஒரே ஆளோ தெரியலை?

அவரேதான் இவர், இவரேதான் அவர் 😀

Link to comment
Share on other sites

இவர் பயிற்றப்பட்ட  பாடசாலை  ஆசிரியர் அல்ல. இவர் ஒரு ரியூசன் வாத்தி 

O/L வகுப்புக்கு விஞ்ஞானம் படிப்பிக்கிறவர் . கோண்டாவில் நிருவில் பதிப்பித்தவர் .

Link to comment
Share on other sites

12 hours ago, Ahasthiyan said:

யார் சொல்வது உண்மை? குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்கள் உள்ளனவா? அரசியல் தலையீட்டில் வந்து முடியுமா? ஒரே குழப்பமாக  இருக்கு குமரேசா.

இன்னொருவர் வளவுக்குள் சென்று தாக்குவதட்கு யாருக்கும் உரிமை இல்லை। வீட்டுக்காரரில் தவறு இருக்குதோ இல்லையோ இன்னொருவர் வளவுக்குள் சென்று தாக்குதல் நடத்தினால் சட்ட்ப்படி குற்றம்। இதுவே இந்த மாநகர சபை உறுப்பினர்தான் பிழை விட்டிருக்கிறார்।

 இவர்தான் வெளிப்படையாக தனது மகனுடன் ஆவ குழு இருப்பதாக ஒத்துக்கொண்டு இருக்கிறாரே। அப்பறம் என்ன மடக்க வேண்டியதுதானே। இருந்தாலும் அவங்கட ஆட்சிதானே , ஒண்ணுமே பண்ண முடியாது।

மக்கள் தீர்மானிக்க வேண்டிய நேரம் வந்திருக்கிறது। நல்ல தீர்மானத்தை எடுத்தால் நல்லது। இல்லாவிடடாள் தொடர் கதைதான்।

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

அவரேதான் இவர், இவரேதான் அவர் 😀

 

1 hour ago, Kaalee said:

இவர் பயிற்றப்பட்ட  பாடசாலை  ஆசிரியர் அல்ல. இவர் ஒரு ரியூசன் வாத்தி 

O/L வகுப்புக்கு விஞ்ஞானம் படிப்பிக்கிறவர் . கோண்டாவில் நிருவில் பதிப்பித்தவர் .

சரி சரி நன்றி கப்பிதான்.நன்றி காளி.

Link to comment
Share on other sites

4 hours ago, Kaalee said:

இவர் பயிற்றப்பட்ட  பாடசாலை  ஆசிரியர் அல்ல. இவர் ஒரு ரியூசன் வாத்தி 

O/L வகுப்புக்கு விஞ்ஞானம் படிப்பிக்கிறவர் . கோண்டாவில் நிருவில் பதிப்பித்தவர் .

இவர் கம்பன்கழக பேச்சாளர் என்டு நினைக்கிறன். ஜெயராஜின் குணம் அப்பிடியே இருக்கு போல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Rajesh said:

இவர் கம்பன்கழக பேச்சாளர் என்டு நினைக்கிறன். ஜெயராஜின் குணம் அப்பிடியே இருக்கு போல.

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் யாழ் இருந்த போதே இவர் கம்பன்கழகப் பேச்சாளர் தான். அப்போதெல்லாம்.. மக்களுக்கு போராட்ட நியாயங்களை சொன்னவர் இன்று அதே போராட்டத்தை காட்டிக்கொடுத்து அழிக்க உதவியோர் கூட கைகோர்த்திருப்பது.. எம்மவர் பலரின் இரட்டை வேடத்தின் குணத்தையே இயம்பி நிற்கிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காட்டிக்கொடுப்பால் போராட்டமும், அதன் நிஞாயமும், தோற்றுவிட்டதால் அதர்மம் தலை விரித்தாடுவது இயற்கையே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, nedukkalapoovan said:

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் யாழ் இருந்த போதே இவர் கம்பன்கழகப் பேச்சாளர் தான். அப்போதெல்லாம்.. மக்களுக்கு போராட்ட நியாயங்களை சொன்னவர் இன்று அதே போராட்டத்தை காட்டிக்கொடுத்து அழிக்க உதவியோர் கூட கைகோர்த்திருப்பது.. எம்மவர் பலரின் இரட்டை வேடத்தின் குணத்தையே இயம்பி நிற்கிறது. 

எவராக இருந்தாலும் யாரோடு சேருகிறார்கள் என்பதைப் பொறுத்தே அவர்கள் செயல்பாடுகள் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சட்டத்தின் உதவியை நாடாமல் ஈபிடிபி காரர் வீடு தேடிபோய் தனிமனித சண்டித்தனம் காட்டியது ஏற்கமுடியாத ஒன்றுதான்,

அதேநேரம் குடிமனைகளுக்கு நடுவில் கோழி பண்ணை வைத்திருத்தலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றே.

கோழி பேன், கோழி எச்சங்களின் நாற்றம், அதுவும் மழை காலங்களில் கரைந்து ஓடினால் அந்த பகுதியை சூழ உள்ளவர்கள் மூச்சே விடமுடியாது.

ஓரிரு கோழிகள் வீட்டு தேவைக்காக வளர்ப்பது வேறு பண்ணை என்பது வேறு. பண்ணை தனியாக ஓரிடத்தில்தான் வைக்க அனுமதியளிக்கப்பட்டிருக்கவேண்டும்.

இங்கே சின்னதா ஒரு மணம் வீட்டுக்குள்  வந்தாலே Fan-ஐ போட்டும் ஜன்னல்களையும் திறந்துவிடும் நாங்கள் இதை எப்படி சரியென்று ஏற்றுக்கொள்கிறோம்.

சூழ வசிப்பவர்களின் அசெளகரியங்கள்பற்றி கவலையே இல்லையா?

ஈபிடிபி காரர் சொல்றமாதிரி அவரை கல்லால் அடிச்ச எந்த சம்பவமும் காணொளியில் இல்லை, 

அதேநேரம் ஈபிடிபி காரரின் மகனை முதலில் அடிக்கபோனது கோழிபண்ணைக்காரர்தான் என்பது காட்சியில் தெளிவாகவே உள்ளது.

அதன்பின்னர்தான் அப்பனும்மகனும் சேர்ந்து தாக்குகிறார்கள்.

வீடுதேடிபோய் தகராறு பண்ணிய அவர்கள்மேல்தான் முதல் குற்றம், ஆனால் அவர்கள் கருத்தில் நியாயம் இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் எங்கேயோ எழுதின ஞாபகம் ஆடு மாடு கோழி வளர்க்க முடியாது வளர்த்தால் மணம் அடிக்கிறது  கத்துகிறது கூவுகிறது என பொது சுகாதார பரிசோதகர்களிடமும் பொலிசசிலயும் முறைப்பாடு செய்கிறார்கள் வட கிழக்கில் 

Link to comment
Share on other sites

காலி , ஹபாராடுவா என்னுமிடத்தில் ஒரு வீடுதிடடம் நடைபெறுகிறது। இது பெரிய ஒரு திடடம்। இருந்தாலும் அந்தப்பக்கம் போக முடியாத நாற்றம்। நிச்சயமாக வாந்தி எடுக்க நேரிடும்। ஆடு மாடு , கோழி என்றாலும் பரவாயில்லை। இது ஒரு பெரிய பன்றி பண்ணை। இந்த திடடம் முடிவடையும் முன்னர் இதை நிச்சயமாக அகற்றி விடுவார்கள்। இருந்தாலும் கோழி பண்ணை அகற்ற முடியுமோ தெரியவில்லை। 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.