Jump to content

கிம் ஜாங் உன் வதந்தி: வட கொரிய வரலாற்றில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியது என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கிம் ஜாங் உன் வதந்தி: வட கொரிய வரலாற்றில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியது என்ன?

மைக்கேல் மேடன் வடகொரிய வல்லுநர்
Kim Jong-un and the brutal North Korea rumour millReuters

கடந்த வாரம் சர்வதேச ஊடகங்களின் தலைப்புச் செய்திகளில் வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்தான் இடம் பெற்றிருந்தார். கிம்மின் உடல்நிலை மோசமாக இருக்கிறது, கிம் இறந்துவிட்டார் என்ற பல வதந்திகள் பரவின. 

அதையெல்லாம் பொய்யாக்கி மிகுந்த உற்சாகத்தோடு உரத் தொழிற்சாலை ஒன்றின் திறப்பு விழாவில் கலந்து கொண்டுள்ளார் கிம் ஜாங் உன். மிகவும் கவனமாக திட்டமிடப்பட்டு இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி இருக்கின்றன. 

இப்படி இவர் திடீரென காணாமல் போய் திரும்பி வந்தது இது முதல் முறையல்ல. இப்படி பல முறை நடந்திருக்கிறது. கடந்த கால நிகழ்வுகளில் இருந்து நாம் என்ன கற்றுக் கொள்ள முடியும். 

என்ன நடந்தது?

பல பத்திரிகைகளில் கிம்மின் உடல்நிலை மோசமாக இரு்பபதாக செய்தி வெளியாளது. TMZ என்ற செய்தி நிறுவனம் வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் இறந்துவிட்டார் என்று செய்தி வெளியிட்டது. 

கிம்முக்கு சிகிச்சை அளிக்க சீன மருத்துவக்குழு வட கொரியா சென்றதாகவும், அதற்கு முன்பே கிம் இறந்துவிட்டார் என்றும் சீன சமூக ஊடகங்களில் ஒரு செய்தி பரவியது.

ஆனால், இவ்வாறு கிம் திடீரென பொது வெளியில் இருந்து காணாமல் போவது இது முதல் முறையல்ல என்று ஏற்கனவே கூறியிருந்தேன். 

கடந்த பிப்ரவரி மாதம் சுமார் மூன்று வாரங்களுக்கு கிம் பொது வெளிக்கு வரவில்லை. இதேபோல 2014ஆம் ஆண்டில் 40 நாட்கள் அவர் எங்கும் தென்படாமல் இருந்தார். ஓர் அரசியல் சதியால் அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக வதந்தி பரவியது.

ஆனால், திடீரென ஒரு நாள் கைத்தடி ஒன்றோடு வெளியில் காட்சி தந்தார். அவருக்கு மூட்டில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக பின்னர் தென் கொரிய உளவுத்துறை தகவல்கள் தெரிவித்தன. 

ஆனால், அது உண்மையா என்பது குறித்து வட கொரியா எதுவும் கூறவில்லை. ஏதும் நடக்காதது போல சாதாரணமாக பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்வது, புகைப்படங்களை வெளியிடுவது என்று அன்றாட வேலைகளை தொடர்ந்தது வட கொரியா. தற்போது கூட அப்படித்தான. 

கிம் இறந்துவிட்டார் என ஊகிக்கப்பட்டது ஏன்?

எந்த வதந்திகளையும் பொருட்படுத்தாது வழக்கமாக செயல்படுகிறது வட கொரியா. சரி. இந்த முறை கிம் ஜாங் உன் வெளியில் தோன்றாமல் இருந்ததை தொடர்ந்து, அவர் இறந்துவிட்டார் என ஊகிக்கப்பட்டது ஏன்?

இதற்கு மூன்று காரணங்கள் இருக்கின்றன.

ஒன்று, கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி கிம் ஜாங்-உன்னின் தாத்தாவும் வட கொரியாவின் நிறுவனத் தலைவருமான கிம் இல் சங்கின் பிறந்த தின கொண்டாட்டம் நடந்தது. இதில் கிம் ஜாங்-உன் கலந்து கொள்ளவில்லை. 

இதுவரை இந்த பிறந்த தின கொண்டாட்டத்தில் கிம் கலந்து கொள்ளாமல் இருந்ததில்லை. இது பலருக்கு சந்தேகத்தை எழுப்பியது.

இரண்டாவது காரணம் டெய்லி என்.கே வெளியிட்ட செய்தி. அமெரிக்க நிதி உதவி பெறும் இந்த நிறுவனம், வட கொரியா குறித்த நம்பத்தகுந்த தகவல்களை வெளியிடுதற்கு பெயர்போனது. 

அப்படி சமீபத்தில் வெளியிடப்பட்ட செய்தியில், வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், அவர் அதிலிருந்து குணமடைந்து கொண்டிருப்பதாகவும் செய்தி வெளியிட்டது.

அந்த செய்தியை அடிப்படையாக வைத்து, மற்ற செய்தி நிறுவனங்கள், புலனாய்வு வட்டாரங்கள் கூறியதாக குறிப்பிட்டு கிம் மோசமான உடல்நிலையில் இருக்கிறார் அல்லது இறந்துவிட்டார் என செய்தி வெளியிட்டன. இதுவே மூன்றாவது காரணம்.

எந்த அசாதாரண சூழலும் வட கொரியாவில் நிலவவில்லை என்றும், கிம் ஜாங் உன் இறக்கவில்லை என்று தென் கொரியா கூறியும், இந்த வதந்திதகள் அதிகமாகிக் கொண்டே இருந்தன. இதில் சீன சமூக ஊடகங்கள் மிகப்பெரிய பங்கு வகித்தன. 

வடகொரியாReuters

இதெல்லாம் எங்கிருந்து தொடங்கியது. நெருப்பு இல்லாமல் புகையாது என்று கூறுவார்கள். வட கொரியாவில் இருந்துதான் இந்த செய்திகள் தொடங்கி இருக்க வேண்டும்.இதுபோன்ற வதந்திகள் பரப்புவதற்கு வட கொரியாவில் சில இடங்கள் இருக்கின்றன. 

இதற்கு 30 ஆண்டுகால வரலாறும் உண்டு. கடந்த காலத்தில் வட கொரியத் தலைவர்கள் குறித்த வதந்திகள் பரவியதற்கு அந்நாட்டின் அந்நிய வர்த்தகத்துறை காரணமாக இருந்ததாக கருதப்பட்டது. 

The secretive Office 39 என்று அழைக்கப்படும் அத்துறை, வட கொரிய தலைவர்களுக்கு பணம் மற்றும் ஆடம்பரப் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து கொண்டு சேர்க்கும். 

அங்கிருந்துதான் பல தகவல்கள் கசிவதாக கூறப்பட்டது. அந்த செய்தி ஜப்பான் மற்றும் தென் கொரிய ஊடகங்களுக்குதான் முதலில் சென்று சேரும். எனினும், இந்தத் தகவல்கள் எல்லாம் ஒரு வதந்திதான் என்பதை மறுக்க முடியாது.

வட கொரியத் தலைமையின் அமைப்பில் அங்கம் வகிக்கும் ஒருவர் பணி தவிர வேறு ஏதேனும் சாதாரணமாக பேசுவது வழக்கமாக இருக்கும். மேலும் கிம் குடும்பத்தின் மீது அனைவருக்கும் ஆர்வம் அதிகமே.

அப்படி சாதாரணமாக பேசியதுகூட, வட கொரியாவிற்கு வெளியே சென்று பல்வேறு ஊகங்களுக்கு வழி வகுக்கலாம் சர்வாதிகார அமைப்புகளில் இதுபோன்று வதந்திகள் எப்போதும் அதிகமாகவே இருக்கும்.

அங்கிருந்து எந்த தகவல்களும் முறைப்படி வராத பட்சத்தில், கிடைக்கும் சிறிய தகவல்கூட ஒரு செய்தி ஆகிறது. இதற்கு வேறு வழியும் இல்லை. உலகெங்கும் செயல்படும் புலனாய்வு அமைப்புகளும், தகவலுக்காக காத்திருப்பார்கள். அது உண்மையா இல்லையா என்பதையும் தங்களது முறைகளில் சரிபார்ப்பார்கள்.

வட கொரியாவை கண்காணிக்க தென் கொரியாவில் பல வழிகளை கையாள்கிறார்கள. சில சமயம் செயற்கைக்கோள்களின் உதவியோடு கண்காணிப்பதும் உண்டு. 

வட கொரியாவில் எந்த அசாதாரண சூழலும் நிலவவில்லை என்று தென்கொரியா கூறியது குறிப்பிடத்தக்கது. வட கொரியாவுக்கு அமெரிக்கா கண்காணிப்பு விமானங்களை அனுப்பி கண்காணிக்கிறது என்பது வெளிப்படையாக தெரிந்த ரகசியமாகும். 

வதந்திகளை கட்டுப்படுத்த முடியுமா?

2008ல் கிம் பற்றிய பேச்சுகள் எல்லாம் அங்கங்கே ஓரிரு அறைகளில் நடக்கும். ஆனால், தற்போது உள்ள மொபைல் போன் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி அதையெல்லாம் மாற்றிவிட்டது. வட கொரிய தலைவர் குறித்து வதந்தி பரப்புபவர்களின் மொபைல் போன்கள் கண்காணிக்கப்படுகின்றன. 

ஆனால், தேவை ஏற்பட்டால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும். இந்த தகவல் பரிமாற்றத்தை கிம்மால் கட்டுப்படுத்துவது கடினம். ஆனால், அவருக்கு நெருங்கியவர்கள் இந்த வதந்திகளை பரப்புகிறார்கள் என்பது தெரிய வந்தால், அதற்கான விளைவுகள் பெரிதாக இருக்கும்.

வட கொரியாReuters

வட கொரியாவில் உள்ள பல மக்களுக்கு தங்களை சுற்றி நடக்கும் எதுவுமே தெரியாது என்பதை கவனிக்க வேண்டியது முக்கியம். வட கொரியாவில் இருந்து தப்பித்து அமெரிக்கா வந்த ஒரு முக்கிய நபரான தே யொங் ஹோ, 2017ல் அமெரிக்க நாடாளுமன்றம் முன்பு சாட்சியம் அளித்தபோது, பல வட கொரியர்களுக்கு கிம் ஜாங் உன் சுவிட்சர்லாந்தில் படித்ததுகூட தெரியாது என்று கூறினார்.

உண்மையில் கிம்மின் உடல்நிலை குறித்த சரியான தகவல்கள் ஒருசில நபர்களுக்கு மட்டுமே தெரிய வாய்ப்புள்ளது. ஆனால், அதற்காக வதந்திகள் பரவாது என்று அர்த்தமில்லை. அப்படியே அது பரவினாலும், அது உண்மையாக இருக்கும் என்பதையும் நாம் உறுதியாக கூற முடியாது.

1986ல் கிம் இரண்டாம் சாங்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டதாக வதந்தி பரவியது. ஆனால், அது உண்மையாக இருக்கவில்லை.

1990- 1992ல் கிம் இரண்டாம் சுங் மற்றும் கிம் ஜாங் இல் ரயில்வே நடைமேடையில் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்று வதந்தி பரவியது. அதுவும் உண்மையாக இருக்கவில்லை.

2003ல் கிம் ஜாங் இல் இறந்துவிட்டதாகவும், அவரைப் போலவே இருக்கும் மற்றொருவர் நாட்டை ஆட்சி செய்து வருவதாகவும் வதந்தி பரவியது குறிப்பிடத்தக்கது.

உலகின் வேறு எந்த நாட்டிலும் நடப்பதைப்போல, வதந்திகள் பரவிக் கொண்டேதான் இருக்கின்றன. ஆனால், மற்ற நாடுகளைப் போல, வதந்தி உண்மையா அல்லது பொய்யா என்பதற்கான பதிலை வட கொரியாவிடம் இருந்து எதிர்பார்கக முடியாது.

 

https://www.bbc.com/tamil/global-52513798

Link to comment
Share on other sites

7 hours ago, கிருபன் said:

இப்படி இவர் திடீரென காணாமல் போய் திரும்பி வந்தது இது முதல் முறையல்ல. இப்படி பல முறை நடந்திருக்கிறது. கடந்த கால நிகழ்வுகளில் இருந்து நாம் என்ன கற்றுக் கொள்ள முடியும். 

ஒன்றில் இவர் அணு ஏவுகணையை விடுவதை நிற்பாட்ட வேண்டும். இல்லை, ஆளை கொல்லவேண்டும்.

அதுவரை, இவர்மீதான "காதல்" ஒரு தீராத காதலாக தொடரும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ampanai said:

ஒன்றில் இவர் அணு ஏவுகணையை விடுவதை நிற்பாட்ட வேண்டும். இல்லை, ஆளை கொல்லவேண்டும்.

அதுவரை, இவர்மீதான "காதல்" ஒரு தீராத காதலாக தொடரும்.  

வந்ததுமே வேலையை காட்டிய கிம் ஜாங் உன்... கொரிய எல்லையில் உச்சக்கட்ட பரபரப்பு..!...

weird-laws-of-north-korea-11-jpg.jpg

வடகொரிய அதிபர் உடல்நிலை குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் 20 நாட்களுக்குப்பின் பொதுவெளியில் தோன்றிய நிலையில், கொரிய எல்லையில் குண்டுமழை பொழிந்த சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

அணு ஆயுத சோதனை என்ற பெயரில் வடகொரியா உலக நாடுகளை அவ்வப்போது மிரட்டி வருகிறது. அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்னின்  அதிரடி நடவடிக்கைகள் உலக தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்துவதும் அடிக்கடி நடப்பதுதான்.

அந்த வகையில் உலக நாடுகள் கொரானோ அச்சத்தில் உறைந்து கிடக்கும் இன்றைய சூழலில், கடந்த 3 வாரங்களாக கிம்மை காணவில்லை என்று ஊடகங்களில் செய்தி வெளியானது. 

 எந்த பொது நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்காததால், அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக ஒரு தரப்பினரும், கிம் இறந்து விட்டார் என்று மற்றொரு தரப்பினரும் வதந்தி பரப்பி வந்தனர்.இந்த நிலையில் கிம் ஜாங் உன் நேற்று வடகொரியாவில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டார்.

இதன் மூலமாக அவரது உடல்நிலை தொடர்பாக வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அவர் உயிருடன் இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்பும் தெரிவித்தார். ஆனால் வெளியில் வந்தவுடன் கிம், தனது அதிரடி வேலையை மீண்டும் தொடங்கியுள்ளார். 

நேற்று கொரிய எல்லையில் வடகொரியா வீரர்கள் குண்டுமழை பொழிந்தனர். துப்பாக்கியாலும், சிறிய வகை பீரங்கியாலும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதை சற்றும் எதிர்பார்க்காத தென் கொரியா, பதில் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என தென்கொரியா அரசு தெரிவித்துள்ளது.

https://tamil.asianetnews.com/world/north-and-south-korea-exchange-gunfire-q9r9gm

டிஸ்கி :

roflphotos-dot-com-photo-comments-201709

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கற்றுக்கொள்ள வேண்டியதென்னவெனில்,

1) ஊடக அறம் என்றொன்றில்லை. அது எப்போதே காலவதியாகி விட்டது. ☹️

2)மெயின் ஸ்ரிம் மீடியா எப்போதுமே தங்கள் நாட்டு அரசியல் பொருளாதாரக் கொள்கைகளுக்கு மாத்திரமே விசுவாசமாக இருக்கும். 👍

3) மெயின் ஸ்ரிம் மீடியா மூலம் வெளிவரும் தகவல்களை உடனே நம்பவேண்டிய அவசியமில்லை. மாற்று ஊடகங்கள் ஊடாகவும் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.🙂

4) மெயின் ஸ்ரிம் மீடியா எங்கள் எல்லோரையும் மூளைச் சலவை செய்துள்ளன. எந்தக் காரணமுமின்றி ஒருவரின் மரணத்தைக் கொண்டாடும் மனனிலைக்கு எம்மை இட்டுச் சென்றது இதற்கு  மிகச் சிறந்த உதாரணம். 😡

5) மெயின் ஸ்ரிம் மீடியாக்கள் பொய்யும் சொல்லும். அவற்றை நம்ப வேண்டிய கட்டாயமில்லை. 👍

6) எங்களை மிகவும் இலகுவாக ஏமாற்றலாம்.   ஏனென்றால் நாங்கள் எங்கள் விருப்பத்திற்கேற்ற செய்திகளை மாத்திரம் விரும்பிப் வாசிப்போம். அது மெயின் ஸ்ரிம் மீடியாவுக்கு மிக நன்றாகத் தெரியும். ☹️

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • சீமானுக்கு எதிராக பொங்கி எழுபவர்கள் யாரென்று பார்த்தால் சிங்கள ஆக்கிரமிப்பையும் கிந்திய ஆக்கிரமிப்பை பற்றியும் வாயே திறக்காதவர்கள் தான் 🤣
    • எம் ஜிஆர் ,  கருணாநிதி , நெடுமாறன்,திருமாளவன்,வைகோ,துரைமுருகன் போன்றோர் செய்யாத ஈழ அரசியலையா சீமான் செய்து விட்டார்? அதிலும் பழ நெடுமாறன்  ஒருபடி மேலே......! நான் தமிழன். நீங்கள் ஈழத்து திராவிடர்களா?😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.