Jump to content

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு வழங்கல்


Recommended Posts

யாழ் இணையத்தினால் கடந்த வருடம் விளம்பரப்பகுதி ஒன்று தொடக்கப்பட்டு அந்த விளம்பரங்கள் மூலம் கிடைக்கப்பெறும் உதவிகள் அனைத்தும் தாயகத்திற்கே வழங்கப்படும் என அறிவித்திருந்தோம்.விபரம் இங்கே

அந்த வகையில் கடந்த வருடத்திலிருந்து கிடக்கப்பெற்ற பணம் அனைத்தும் TNRA அமைப்பிற்கு நேரடியாக கிடைப்பதற்குரிய வழிவகையினைச் செய்திருந்தோம். ஆரம்பத்தில் கிடைக்கப்பெறும் பணம் ஒரு திட்டத்திற்குரியதாக போதுமானதாக வரும் போது அதை யாழ் இணையத்தின் பெயரில் ஒரு திட்டமாகச் செயற்படுத்திக் கொள்ள முடியும் என TNRA அமைப்புடன் கதைத்து முடிவு செய்யப்பட்டிருந்தது. எனினும் இன்றைய நெருக்கடி நிலையினைக் கருத்தில் கொண்டு மக்களின் உடனடித் தேவைக்கு கிடைக்கப்பெற்ற பணத்தின் ஒரு பகுதி உலர் உணவுப் பொருட்களாக வழங்கப்பட்டுள்ளது.

Quote

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர்உணவு வழங்கல்

கொரோனாவின் தாக்கமும் ஊரடங்கும் தொடர்ந்து அமுலில் இருப்பதால் தொடர்ந்தும் மக்கள் உணவுத்தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பல தன்னார்வ உதவி நிறுவனங்கள் தீவிரமாக செயற்பட்டுவருகின்ற நிலையிலும் சில குடும்பங்கள் அங்காங்கே இந்த உதவிகளை பெற்றுக் கொள்ளாமல் தவித்து வந்தனர்.
இவ்வாறு கிழக்கு மாகாணத்தில் குறிஞ்சாமுனை, புளியடிமடு, கன்னங்குடா, நாவற்குடா போன்ற இடங்களில் இனங்காணப்பட்ட 30 குடும்பங்களுக்கு இன்று தலா 2500 ரூபா பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.


இதற்கான நிதியுதவியை யாழ் இணையத்தள விளம்பர சேவையினூடாக எமது உறவுகள் எமக்கு வழங்கியிருந்தனர். யாழ் இணையத்தளத்திற்கும் விளம்பர சேவையினூடாக எமக்கு உதவிவழங்கிய உறவுகளுக்கும் தமிழ் நோர்வே வள ஒன்றியம் மனதார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.


ஊரடங்கு, கொரோனா தொற்று, பொருட்களுக்கான தட்டுப்பாடு, அநியாய விலை போன்ற நெருக்கடிகள் மத்தியிலும் உதவி சென்றடையாத குடும்பங்களை இனங்கண்டும், பொருட்களை கொள்வனவு செய்து பொட்டலங்கள் செய்து மக்களிடம் சேர்ப்பித்த நண்பன் கோணேசுக்கும் அவரது குழுவினருக்கும் எமது நன்றி கலந்த பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அன்புடன்
TNRA நிர்வாகம்
04.05.2020

 

tnra.png

94932556_1166358417035313_3150456368150872064_n.jpg95280717_1121713358168788_278908501823062016_n.jpg95488837_268878174248321_1579524177868619776_n.jpg95598637_534441184100562_887872213707915264_n.jpg

 

யாழ் இணையத்திற்கு விளம்பரம் / அறிவித்தல் தந்த நிழலி, தொடர்ச்சியாக விளம்பரங்களைத் தரும் வல்வை சகாரா, உடையார் (விளம்பரத் தொகையுடன் மேலதிகத் தொகையும் வழங்கியிருந்தார்) மற்றும் மக்களுக்கான உதவி வழங்கவென துல்பன் 100USD, தமிழ்சிறி199USD வழங்கியிருந்தனர். இவர்களுக்கான நன்றிக் கடிதம் TNRA அமைப்பினால் எனக்கு தரப்பட்டுள்ளது. அவை இவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

96161737_229203041697013_7500779461814517760_n.jpg

95877971_567900860773239_4914618625979056128_n.jpg

95762801_361041174856956_8993636607013683200_n.jpg

95596931_678714742916596_599742034848251904_n.jpg

95558137_885760731922567_5563103982676606976_n.jpg

95392794_257897018685228_1919835885797376000_n.jpg

95326493_238167920602646_1704475088725737472_n.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேவையான சேவை.. தொடர வாழ்த்துக்கள். 

Link to comment
Share on other sites

சேவைக்கு நன்றி.  எம்மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலத்தின் தேவை அறிந்து கொடை கொடுத்த வள்ளல்களுக்கு பாராட்டுக்கள்.

அதை உரிய இடங்களுக்கு நம்பிக்கையானவர்கள் மூலம் கொண்டு போய் சேர்த்த யாழ் இணையத்துக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு  நாட்களில்....  "மின்னல்"  வேகத்தில் செயல்பட்டு,
பாதிக்கப் பட்ட மக்களை... தேர்வு செய்து, 
அவர்களுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்து, 
சந்பந்தப் பட்ட மக்களிடம் கையளித்த...  TNRA அமைப்பினருக்கும்,  
யாழ். இணையத்திற்கும், நன்றிகள் பல. 
👏

பொருட்களை... கொண்டு போய் சேர்ப்பித்த, வேகம்... பிரமிக்க வைக்கின்றது. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பத்தபட்ட  அனைவருக்கும் பாராட்டுக்கள் , வாழ்த்துக்கள்.....!   💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடரட்டும் யாழ் கள நல்லுள்ளங்களின் சேவை ..பங்களித்த அனைத்து உள்ளங்களுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுகளும் ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையத்திற்கும் TNRA கும் பாராட்டுக்கள், உங்கள் சேவை தொடரட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று எனக்கு, TNRA  ஒன்றியத்தினரால்... பணம் கிடைத்தமைக்கான, 
நன்றிக் கடிதம் அனுப்பி வைக்கப் பட்டிருந்தது. 

விரைந்து செயல் பட்டமைக்காக TNRA நிர்வாகத்தினருக்கும், 
சேவையாளர்களுக்கும்... மிகவும்  நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

TNRA  ஒன்றியத்தினரால்... பணம் கிடைத்தமைக்கான, 
நன்றிக் கடிதம் யாழ் இணைய பொறுப்பாளர் மோகனால் அனுப்பி வைக்கப் பட்டிருந்தது. தொடர்ந்தும் இணைந்திருப்போம். யாழ் இணையத்தின் பணி தொடரட்டும். இணைந்து செயற்படும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும்  TNRA  ஒன்றியத்தினரால்  பணம் கிடைத்தமைக்கான, 
நன்றிக் கடிதம் யாழ் இணைய பொறுப்பாளர் மோகண்ணாவால்  அனுப்பி வைக்கப் பட்டிருந்தது. நன்றிகள் அனைவருக்கும் 

Link to comment
Share on other sites

மிகமிக அர்த்தமுள்ள பணிகள் தொடரட்டும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகச்சிறப்பான முயற்சி, சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் வாழ்த்துக்கள் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.