Jump to content

ஊரடங்கின் பசிப்பிணியை எதிர்க்கும் களப்போராளிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அன்பு நண்பர்களே 
ஏற்கனவே குறிப்பிட்டது போல , கடந்த மாதம் முதல் எனது நண்பன் மற்றும் அவருடன் பணியாற்றும் பணியாளர்களை உள்ளடக்கிய தன்னார்வ குழுவுடன் இணைந்து வெற்றிகரமாக உலர் உணவுப்பொதிகளை விநியோகித்து வருகிறோம், இவர்கள் அனைவரும் நீர்ப்பாசனத்துறையை சார்ந்தவர்கள் ,இவர்களுடன் நீர்ப்பாசனத்துறை பொறியாளரும் எங்களுக்கு முற்றுமுழுதான ஆதரவையும் உதவியையும் அனுசரணையையும் வழங்குகின்றார் , இவர்களின் நல்  மனதால் எங்களுக்கு ஊரடங்கிட்கு நடுவிலும் முழு வீச்சுடன் பொதிகளை விநியோகம் செய்ய முடிகிறது. 
எங்களது செயற்பாடு தொடர்பான சில புகைப்படங்களை கீழே இணைத்துள்ளேன், 
மேலதிக செயற்பாடுகளும் தொடர்ந்து இங்கே இணைக்கப்படும்.
ஏற்கனவே யாழ் கள உறவுகள் இருவர் அவர்களது ஆதரவு கரத்தை எமக்கு நீட்டியுள்ளனர் (நிழலி மற்றும் உடையார் )
இவற்றில் உடையாரின் பணஉதவி ஏற்கனவே கிடைக்கப்பட்டு குழுவிற்கு பரிமாற்றப்பட்டுவிட்டது.
இந்த உறவுகளுக்கு பயனாளிகள்  சார்பிலும் குழுவின் சார்பிலும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

spacer.png

 spacer.pngspacer.pngspacer.pngspacer.pngspacer.png

எங்களது குழு 
spacer.pngspacer.pngspacer.pngspacer.pngspacer.png

பொதி விநியோகிப்பின் போது 

spacer.png

spacer.pngspacer.pngspacer.pngspacer.pngspacer.pngspacer.pngspacer.png

 

 இவை நான் தத்தெடுத்திருக்கும் இருபது குடும்பங்களுக்கான பொதிகள் 

spacer.pngspacer.pngspacer.pngspacer.png

வெற்றிகரமாக இரண்டாவது மாத விநியோகமும் நடந்து முடிந்து விட்டது 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் சந்தோசமாக இருக்கிறது அக்னி.
உங்கள் பாதுகாப்பிலும் கவனமாக இருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுகள்  உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும்.

இந்த ஊரடங்கு  நிலையிலும் அவர்கள் செய்யும் உதவி மிகப்பெரியது.

அவர்களையும் கவனமாக இருக்க செல்லுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அரிதான சேவைகளை செய்கிறீர்கள் பாராட்டுக்கள் அக்னீ & நண்பர்கள்.....!   💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சி நம்ம பக்கமா அல்லது மடக்களப்பு பக்கமா ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

மகிழ்ச்சி நம்ம பக்கமா அல்லது மடக்களப்பு பக்கமா ? 

இருபது குடும்பங்கள் நம்ம பக்கம் 
மிகுதி முழுதும்  மட்டு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, அக்னியஷ்த்ரா said:

இருபது குடும்பங்கள் நம்ம பக்கம் 
மிகுதி முழுதும்  மட்டு 

மட்டக்களப்பு மேற்கு பகுதிகள் படுவான்கரை  பக்கம் செல்லட்டும் உணவுகள் ஆற்றுத்தொழில் செய்பவர்கள் மிகவும் கஸ்ரப்படுகிறார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அக்கினியஷ்த்ரா....   பாதிக்கப் பட்ட  மக்களுக்கு,  மிகவும் பெரிய அளவில்....  
உதவிகளை செய்துள்ளமையை பார்க்க மகிழ்ச்சியாக...  உள்ளது.
உங்களது நண்பர்களுக்கும்... பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • 5 months later...
  • கருத்துக்கள உறவுகள்

நண்பர்களுக்கு வணக்கம் 
மீண்டும் எங்களது குழு களத்தில் , இம்முறை வித்தியாசமாக எங்களுக்கு வாழைச்சேனை  போலீஸ் பிரிவிலிருந்து விண்ணப்பம் விடுக்கப்பட்டது, அதாகப்பட்டது கொரோனாவின் இரண்டாவது அலை பரவல்  சூடுபிடிக்கும் முன்பே சுய தனிமைப்படுத்தலுக்குட்பட்ட வாழைச்சேனை கருவாக்கேணியை சேர்ந்த  20 குடும்பங்களுக்கு ஒரு நேர சாப்பாட்டிற்கு வழிவகை செய்யமுடியுமா என்று, குழுவினர் உடனடியாக ஒன்று சேர்ந்து கலந்துரையாடி அந்த 20 குடும்பங்களுக்கும் ஒரு வாரத்திற்கு தேவையான (ஒன்று ரூபா 2500 பெறுமதியான) உணவுப்பொதிகளை விநியோகிப்பதாக தீர்மானித்து  உடனடியாக களத்தில் இறங்கினர், இன்று வெற்றிகரமாக அந்த பொதிகளை அவர்களது இருப்பிடங்களுக்கே சென்று எமது குழு விநியோகித்தது, 
இவற்றில் முக்கியமாக @நிழலி அவர்கள் எமக்கு உதவிய தொகை வரவு வைக்கப்பட்டு  நிலுவையில் இருந்ததால் அதனை முற்று முழுதாகவும் மிகுதியை எங்கள் சேமிப்பிலிருந்தும் எடுத்து உபயோகப்படுத்தியுள்ளோம், பாதிக்கப்பட்ட மக்கள் சார்பிலும் எங்கள் குழு சார்பிலும் நிழலி அண்ணைக்கு  உளம் கனிந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம், 
அத்துடன் பொலிஸ்  பிரிவால் விண்ணப்பம் விடுக்கும் அளவுக்கு எங்களது வீச்சு  மக்களை சென்றடைந்துள்ளமையையிட்டு குழு பெருமிதம் அடைகிறது, நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து செல்வதால் எங்கள் குழு மீண்டும் முடுக்கிவிடப்பட்டுள்ளனர், மீண்டும் ஒரு இற்றைப்படுத்தலுடன் உங்களை சந்திக்கிறேன்  

spacer.pngspacer.pngspacer.pngspacer.pngspacer.pngspacer.pngspacer.pngspacer.pngspacer.pngspacer.pngspacer.pngspacer.pngspacer.pngspacer.pngspacer.pngspacer.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனிமைப்படுத்திய குடும்பங்கள் எனில் உங்கள் பாதுகாப்பையும் கவனத்தில் எடுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தோழர் .. 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலத்திற்கேற்ற சேவைகள், உங்களின் சேவை அளப்பரியது........!  💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அக்னியஷ்த்ரா....  போலீஸ் பிரிவிலிருந்து, குறிப்பிட்ட இடத்திற்கு...  
உதவி கோரி விண்ணப்பம், வந்த தகவலை அறிந்து, பெருமையாக இருந்தது.
அதனை.. உடனே நிறைவேற்றிய, உங்கள்  குழுவினருக்கு பாராட்டுக்கள். 🙏

எல்லோரும் சொன்னது போல், உங்கள் பாதுகாப்பும்.. மிக முக்கியம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அக்னி.

ஆனால், இப்படி கொடுக்கும் போது படத்தை  தூரமாக எடுப்பதை கருத்தில் கொள்ளவும்.   

என்னைப்  பொறுத்தவரையில் கொடுப்பவரின் அடையாளமும் தெரியாமல் இருப்பதே உதவி.  

அதற்காக, உங்களின் தன்னார்வ  குழுவாக அடையாளப்படுத்துவதை தவிர்க்குமாறு சொல்லவில்லை.  

இது ஓர் வேண்டுகோள் மாத்திரமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் கொரோனா பரவல் அதிகமாகும்போது அது ஏற்கனவே போரால் பாதிக்கப்பட்டு அல்லாடும் மக்களை இன்னும் அதிகம் பாதிக்கும். 

உதவி தேவையானவர்களுக்கு காலத்துக்கேற்ற சேவையை உடனே செய்வதற்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, அக்னியஷ்த்ரா said:

நண்பர்களுக்கு வணக்கம் 
மீண்டும் எங்களது குழு களத்தில் , இம்முறை வித்தியாசமாக எங்களுக்கு வாழைச்சேனை  போலீஸ் பிரிவிலிருந்து விண்ணப்பம் விடுக்கப்பட்டது, அதாகப்பட்டது கொரோனாவின் இரண்டாவது அலை பரவல்  சூடுபிடிக்கும் முன்பே சுய தனிமைப்படுத்தலுக்குட்பட்ட வாழைச்சேனை கருவாக்கேணியை சேர்ந்த  20 குடும்பங்களுக்கு ஒரு நேர சாப்பாட்டிற்கு வழிவகை செய்யமுடியுமா என்று, குழுவினர் உடனடியாக ஒன்று சேர்ந்து கலந்துரையாடி அந்த 20 குடும்பங்களுக்கும் ஒரு வாரத்திற்கு தேவையான (ஒன்று ரூபா 2500 பெறுமதியான) உணவுப்பொதிகளை விநியோகிப்பதாக தீர்மானித்து  உடனடியாக களத்தில் இறங்கினர், இன்று வெற்றிகரமாக அந்த பொதிகளை அவர்களது இருப்பிடங்களுக்கே சென்று எமது குழு விநியோகித்தது, 
இவற்றில் முக்கியமாக @நிழலி அவர்கள் எமக்கு உதவிய தொகை வரவு வைக்கப்பட்டு  நிலுவையில் இருந்ததால் அதனை முற்று முழுதாகவும் மிகுதியை எங்கள் சேமிப்பிலிருந்தும் எடுத்து உபயோகப்படுத்தியுள்ளோம், பாதிக்கப்பட்ட மக்கள் சார்பிலும் எங்கள் குழு சார்பிலும் நிழலி அண்ணைக்கு  உளம் கனிந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம், 
அத்துடன் பொலிஸ்  பிரிவால் விண்ணப்பம் விடுக்கும் அளவுக்கு எங்களது வீச்சு  மக்களை சென்றடைந்துள்ளமையையிட்டு குழு பெருமிதம் அடைகிறது, நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து செல்வதால் எங்கள் குழு மீண்டும் முடுக்கிவிடப்பட்டுள்ளனர், மீண்டும் ஒரு இற்றைப்படுத்தலுடன் உங்களை சந்திக்கிறேன்  
 

அக்னி! உங்களுக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். இப்படியான சேவைகளை செய்வதற்கு முதலில் மனம் வேண்டும். அதற்கு பின் நேரம் வேண்டும். அத்துடன் நண்பர்களின் ஒத்தாசைகளும் வேண்டும். நீங்கள் உதவி செய்த மக்களின் ஆசி உங்களைச்சேரும்.உங்களுடன் உறுதுணையாக நின்ற நண்பர்களுக்கும் பாராட்டுக்கள்.

இதற்கு மூலகாரணமான நிழலிக்கும் அந்த மக்களின் ஆசி கிடைக்கட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அக்னிக்கும் குழுவினருக்கும் நன்றியும் பாராட்டுக்களும்.
கூடவே நிழலிக்கும் பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலிக்கும், அக்னிக்கும் & குழுவினருக்கும் நன்றியும் பாராட்டுக்களும்.


காலத்திற்கேற்ற சேவைகள், உங்களின் சேவை அளப்பரியது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதரவு,வாழ்த்து மற்றும் பாராட்டு தெரிவித்த,  மற்றும் பாதுகாப்பை பற்றி அக்கறையுடன் ஆலோசனை கூறிய யாழ் நல்லுள்ளங்களுக்கு நன்றி 
இதிலுள்ள அநேக குடும்பங்கள் (ஒருகுடும்பத்தை (நீல கேற்) தவிர -அதனாலேயே குழு வாசலில் பொதிகளை வைத்துவிட்டு அவர்களை எடுத்துக்கொள்ள சொன்னது  ) சுயதனிமைப்படுத்தலுக்கான  கால இடைவெளியை பூரணப்படுத்தியவர்கள், இலகுவாக அரசாங்கம் பதினான்கு ,இருபத்தியொரு நாட்கள் சுயதனிமைப்படுத்தல் என்று சொல்லிவிட்டு சென்றுவிடுகிறது, தினக்கூலியை நம்பி வாழும் இந்த மக்கள் தங்களது உடமைகளை கூட அடகு வைத்து அல்லது விற்று உண்ணுமளவுக்கு தள்ளப்படுகிறார்கள், அதை விட கொடூரம் தனிமைப்படுத்தல் முடிந்ததும் தங்களது பழைய வாழ்க்கைக்கு திரும்ப அவர்கள் படும்துயரம் குறைந்தபட்சம் உடனடியாக ஒரு தினக்கூலிக்கான தொழிலை அமைத்துக்கொள்ள முடியாமல் ,சேமிப்பெல்லாம் கரைந்து அடுத்தவர்களிடம் கையேந்தவேண்டிய அவல நிலை, 

9 hours ago, Kadancha said:

நன்றி அக்னி.

ஆனால், இப்படி கொடுக்கும் போது படத்தை  தூரமாக எடுப்பதை கருத்தில் கொள்ளவும்.   

என்னைப்  பொறுத்தவரையில் கொடுப்பவரின் அடையாளமும் தெரியாமல் இருப்பதே உதவி.  

அதற்காக, உங்களின் தன்னார்வ  குழுவாக அடையாளப்படுத்துவதை தவிர்க்குமாறு சொல்லவில்லை.  

இது ஓர் வேண்டுகோள் மாத்திரமே.

Kadancha 
இந்த புகைப்படங்களில் பொருளுதவி,பணஉதவி செய்த எவரும் இல்லை, பண மற்றும் பொருளுதவி செய்பவர்களை விட காலம் நேரம் பார்க்காது  சரீர, வாகன  உதவிகளை  செய்யும் இந்த நல்லுள்ளங்களை எங்களது குழு என்றும் கண்ணியப்படுத்தும், அப்படி உடலுழைப்பை வழங்கிய உள்ளங்கள் தான்  இவர்கள் 
இது அவர்களை ஊக்குவிப்பதாக அமையும் என்று நம்புகிறோம்    

Link to comment
Share on other sites

8 hours ago, குமாரசாமி said:

 இப்படியான சேவைகளை செய்வதற்கு முதலில் மனம் வேண்டும். அதற்கு பின் நேரம் வேண்டும். அத்துடன் நண்பர்களின் ஒத்தாசைகளும் வேண்டும்.

நிச்சயமாக.

இவற்றை ஒருங்கிணைத்த உள்ளங்களுக்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • புதிய ஆடுகளம் அமைத்து தானே அதில் சுருண்டு பலியாகிவிட்டதா குஜராத் அணி? ஏன் இந்த மோசமான தோல்வி? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 4வது ஓவர் தொடக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 169 ரன்கள் வரை சேர்க்கும் என்று கணினியின் முடிவுகள் கணிக்கப்பட்டது. இது 6-வது ஓவரில் திடீரெனக் குறைந்து 120 ரன்களாகக் குறைந்தது. முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனிலேயே குறைந்தபட்ச ஸ்கோருக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. 2022ம் ஆண்டு இந்த ஐபிஎல் தொடருக்குள் வந்தபின் குஜராத் டைட்டன்ஸ் அணி சேர்த்த மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 125 ரன்களில் சுருண்டிருந்தது குஜராத் அணி. அதைவிட இந்த ஆட்டத்தில் மோசமாகும். ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 89 ரன்களில் சுருண்டது. 90 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 53 பந்துகளில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் சேர்த்து 67 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியால் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்தது, 6-வது இடத்துக்கு முன்னேறியது. குறைந்த ஓவரில் வெற்றி வெற்றி பெற்றதால் நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.975 லிருந்து மைனஸ் 0.074 ஆக முன்னேறிவிட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகர ரன்ரேட் மோசமாக இருந்தநிலையில் தற்போது பாசிட்டிவ் நோக்கி டெல்லி அணி நகர்ந்துள்ளது. அடுத்ததாக ஒரு வெற்றி பெற்றால், நிகரரன்ரேட் பிளஸ்குக்குள் சென்றுவிடும். அதேசமயம், குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளது.7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்திலிருந்து 7-வது இடத்துக்கு சரிந்துள்ளது. நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.303 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. நிகர ரன்ரேட்டை உயர்த்த குறைந்தபட்சம் அடுத்த இரு போட்டிகளில் பெரிய வெற்றியை குஜராத் அணி பெற்றால்தான் முன்னேற்ற முடியும். டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக்காரணம், ஹீரோக்களாக இருந்தவர்கள் பந்துவீச்சாளர்கள்தான். 6 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு. 4.50 ரன்களுக்கும் குறைவாகவே வழங்கினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இதுவரை 79 டி20 போட்டிகளில் விளையாடி 177 பந்துகளை மட்டுமே வீசியுள்ளார். இந்த ஆட்டத்தில் ஸ்டப்ஸ் ஒரு ஓவர் மட்டும் சுழற்பந்துவீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கலீல் அகமது 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 18 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இசாந்த் சர்மா 2 ஓவர்கள் வீசி 8ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முகேஷ் குமார் 2.3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்ஸர் படேல் 4ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதில் விக்கெட் வீழ்த்தாமல் இருந்தது குல்தீப் யாதவ் மட்டும்தான். குறிப்பாக இந்த ஆட்டத்திஸ் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் உள்நாட்டு பந்துவீச்சாளர்களை வைத்தே டெல்லி கேபிடல்ஸ் விளையாடியது. கடந்த ஆட்டத்திலும் இதேபோன்று வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் உதவி இல்லாமல் உள்நாட்டு வீரர்களை வைத்தே டெல்லி அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் இரு முக்கிய கேட்ச்கள், இரு முக்கிய ஸ்டெம்பிங்குகள் ஆகியவற்றுடன்16 ரன்கள் சேர்த்த டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   பட மூலாதாரம்,SPORTZPICS ரிஷப் பந்த் கூறியது என்ன? டெல்லி கேபிடல்ஸ் ரிஷப் பந்த் கூறுகையில் “ ஏராளமான நேர்மறையான அம்சங்கள் நடந்தன. சாம்பியன் மனநிலையோடு எங்கள் அணி விளையாடியது. ஐபிஎல் சீசனில் சிறந்த பந்துவீச்சாக இருக்கும். தொடர்ந்து நாங்கள் எங்களை முன்னேற்றி வருகிறோம். நிகர ரன்ரேட்டை இழந்துவிட்டதால் இனிமேல் அதை உயர்த்த கவனம் செலுத்தவோம். பந்துவீச்சாளர்கள் அவர்கள் பணியை ரசித்துச் செய்தனர், அதனால்தான் வெற்றி எளிதாகியது” எனத் தெரிவித்தார் குஜராத் அணியின் பேட்டிங் நேற்று படுமோசமாக இருந்தது. சுருக்கமாகக் கூறினால், குஜராத் அணியின் பேட்டர்கள் களத்தில் சந்தித்ததே 17.3 ஓவர்கள்தான். அதில் பேட்டர்கள் டாட் பந்துகளாகச் சந்தித்தது 63 பந்துகள். ஏறக்குறைய 10 ஓவர்களுக்கு எந்த பேட்டர்களும் ரன்கள் ஏதும் சேர்க்கவில்லை. ஆக 7.3 ஓவர்களில்தான் 89 ரன்கள் சேர்த்தனர். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஆட்டத்தில் குறைந்தபட்சமாக குஜராத் அணி ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே நேற்று அடித்தது. குஜராத் அணியில் காயத்திலிருந்து மீண்டு டேவிட் மில்லர் அணிக்கு திரும்பி இருந்தார், இம்பாக்ட் ப்ளேயராக ஷாருக்கான் சேர்க்கப்பட்டிருந்தார். குஜராத் அணியில் 8-வது வரிசைவரை ஓரளவுக்கு நன்கு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள்தான் இருந்தனர். ஆனால், நேற்று ரஷித் கான் சேர்த்த 24 பந்துகளில் 31 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர். மற்ற எந்த பேட்டரும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.   பட மூலாதாரம்,GETTY IMAGES சாய் சுதர்சன்(12), திவேட்டியா(10) ரஷித்கான்(31) ஆகிய 3 பேட்டர்கள் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்களான சுப்மான் கில்(2), சாஹா(8), மில்லர்(2) அபினவ் மனோகர்(8), ஷாருக்கான்(0), மோஹித் சர்மா(2), நூர் அகமது(1) என 7 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே சேர்த்து மோசான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ரஷித்கான் தவிர வேறு எந்த பேட்டரும் களத்தில் 15 பந்துகளைக் கூட சந்திக்காமல் தேவையின்றி டெல்லி பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை வழங்கி வெளியேறினர். ஆடுகளத்தின் தன்மை என்ன, பந்து எப்படி பேட்டை நோக்கி வருகிறது என்பது குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல், பொறுமை இல்லாமல் மோசமான ஷாட்களை ஆடியே ஒட்டுமொத்தமாக விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் இசாந்த் சர்மா வீசிய 5வது ஓவரில் சுதர்சன் 12 ரன்னில் ரன்அவுட் ஆக, அதே ஓவரின் கடைசிப்பந்தில் மில்லர் 2 ரன்னில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதேபோல டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய 9-வது ஓவரில் 3வது பந்தில் அபினவ் மனோகர் 8ரன்னில் ரிஷப்பந்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார், அடுத்த பந்தைச் சந்தித்த இம்பாக்ட் ப்ளேயர் ஷாருக்கானும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இரு முறை ஒரே ஓவர்களில் 2 விக்கெட்டுகள் என குஜராத் அணி இழந்தது. முதல் விக்கெட்டை 11 ரன்களில் இழந்த குஜராத் அணி, அடுத்த 36 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அடுத்த 42 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் குஜராத் ஒட்டுமொத்தமாக இழந்தது.   பட மூலாதாரம்,SPORTZPICS குஜராத் சரிவுக்கு ஆடுகளம்தான் காரணமா? ஆமதாபாத்தில் போட்டி நடந்த ஆடுகளம் இதற்கு முன் நடந்த சீசன்களில் பயன்படுத்தப்படாத புதிய விக்கெட்டாகும். ஆடுகளத்தில் பந்து பிட்ச் ஆனதும் பேட்டரை நோக்கி மெதுவாகவே வரக்கூடிய ஸ்லோ பிட்சாகும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் பந்து வேகமாகத் திரும்பாமல் மெதுவாகத் திரும்பக்கூடிய ஆடுகளம். இதனால் மோசமான ஷாட்களை தேர்ந்தெடுத்து குஜராத் பேட்டர்கள் வெளியேறினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்த பந்தில் மனோகர், ஷாருக்கான் இருவரும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டனர். இவர்கள் இருவருமே பந்து இந்த அளவு டர்ன் ஆகும் என நினைத்திருக்கமாட்டார்கள். பந்து வருவதற்கு முன்பே பேட்டர்கள் பேட்டை சுழற்றியதும், ஸ்லோ பந்துகளில் பெரிய ஷாட்களை அடிக்க முற்பட்டதும் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த உதவியது. ஆனால் புதிய ஆடுகளத்தால் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என்று சுப்மான் கில் கூறினார். தோல்விக்குப் பிறகு அவர் கூறுகையில் “ எங்கள் பேட்டிங் சராசரியாகவே இருந்தது. விக்கெட் ஓரளவுக்கு நன்றாகத்தான் இருந்தது. விக்கெட் மோசம் என்று நான் கூறவில்லை. எங்கள் வீரர்கள் ஆட்டமிழந்த விதத்தைப் பார்த்தால், குறிப்பாக நான்ஆட்டமிழந்ததற்கும் ஆடுகளத்துக்கும் தொடர்பில்லை. சாஹா ஆட்டமிழந்தது, சாய் சுதர்சன் ரன்அவுட் ஆகியவையும் பிட்சுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. என்னைப் பொருத்தவரை மோசமான பேட்டிங், மட்டமான ஷாட் தேர்வுகள்தான் தோல்விக்கு காரணம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், குஜராத் பேட்டர் டேவிட் மில்லர் ஆடுகளத்தை குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில் “ விக்கெட் மிக மெதுவாக இருந்தது. எந்த அணியும் இதுபோன்று மோசமாக குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்தது இல்லை. அதிலும் ஒரு முன்னாள் சாம்பியன் அணி ஆட்டமிழந்தது இல்லை. இரு விக்கெட்டுகள் திடீரென அடுத்தடுத்து பறிபோனது அதிர்ச்சியளித்தது.” “சுப்மான் கில் கவர் ட்ரைவ் ஷாட்களை பந்து வரும்முன்பே ஆடிவிட்டார். பந்து ஆடுகளத்தில் நின்று மெதுவாக பேட்டரை நோக்கி வந்ததை புதிய பேட்டராக வருபவரால் கணிக்க முடியவில்லை அதனால்தான் 90 ரன்களுக்குள் ஆட்டமிழந்தோம். இந்த உலகத்திடம் ஆயிரம் மன்னிப்புகள் கேட்கலாம். ஆனால், இறுதியில் பார்த்தால் நாங்கள் மோசமான கிரிக்கெட்டைத்தான் விளையாடியிருக்கிறோம். 120 ரன்கள் சேர்த்திருந்தால்கூட பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்ய உதவியிருக்கும். ஆனால்,90 ரன்கள்கூட வரவில்லை. ரஷித்கான் அணியை பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்ததால்தான் ஓரளவுக்கு ஸ்கோர் கிடைத்தது. இல்லாவிட்டால் மோசமாகி இருந்திருக்கும் ” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cqqny66krveo
    • @goshan_che எழுதிய தாயக பயண அனுபவங்கள் என்ற இந்த பயண கட்டுரைக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைப்பதால் அவரின் அனுமதியுடன் இந்த தாயக இளைஞர்களின் முயற்சிகள் தொடர்பான  காணோளியை இணைக்கிறேன்.    பி. கு அனுமதி பெறாமலே😂
    • ஆம் இது உண்மை எனக்கு பலமுறை இப்படி ஏற்பட்டது. இது ஒரு புதிய யுக்தி. பெரெரா அன்ட் சன்ஸ் இல் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது இப்படி அடிக்கடி நடக்கும். கடை வாசலுக்கு முன் வந்து சாப்பிட்டு கொண்டிருப்பவரை பர்ர்த்து, கெஞ்சி மன்றாடி உணவ வாங்கி கேட்பது, அலுப்பு கொடுப்பது அடிக்கடி நடக்கும்.
    • வைகாசி மாதம் என்றால்  அகம் குளிரும் அன்னையின் முகம் காணும் ஆசைவரும்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.