Jump to content

யாழ்.உடுவிலில் வயோதிப தம்பதிகளை சித்திரவதை செய்த கொள்ளை கும்பல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.உடுவிலில் வயோதிப தம்பதிகளை சித்திரவதை செய்த கொள்ளை கும்பல்

யாழ்.உடுவில் அம்பலவாணர் வீதியில் வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளைக் கும்பல், வயோதிபத் தம்பதியைத் தாக்கிவிட்டு சுமார் 15 பவுண் தங்க நகைகள் மற்றும் 5 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளது.

 

வயோதிபத் தம்பதியைக் கட்டிவைத்துவிட்டு குடும்பத் தலைவரின் தலையில் கூரிய ஆயுதத்தால் குத்தி கொள்ளைக் கும்பல் சித்திரவதை செய்துள்ளது.

அதனால் படுகாயமடைந்த குடும்பத்தலைவர், தெல்லிப்பழை வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. வயோதிபத் தம்பதியின் 3 பிள்ளைகள் வெளிநாட்டில் வசிக்கின்றனர்.

வீட்டுக்குள் நுழைந்த 3 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல், எங்களைக் கட்டிவைத்தது. கணவரின் தலையில் கூரிய ஆயுதத்தால் குத்தியது. எனது கன்னத்தில் அறைந்தது. அதனால் நாம் நிலைகுலைந்தோம்.

சுமார் 3 மணிநேரம் சல்லடை போட்டு தேடுதல் நடத்தி, நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையிட்டு கும்பல் தப்பித்தது என்று குடும்பப் பெண் விசாரணையில் தெரிவித்தார்.

கொள்ளையர்கள் மூவரும் 20 தொடக்கம் 24 வயதுக்குட்பட்டவர்களா தான். அவர்களில் ஒருவன் கைகளில் கையுறை போட்டிருந்தான்.

வீட்டில் பிள்ளைகளின் நகைகளுடன் 15 பவுண் நகைகள் இருந்தன. 5 இலட்சம் ரூபா பணமும் இருந்தது. அவை கொள்ளையிடப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மோப்ப நாய் அழைத்துவரப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.

 

http://thinakkural.lk/article/40416

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

5 இலட்சம் ரூபா பணமும் இருந்தது. ???? 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

5 இலட்சம் ரூபா பணமும் இருந்தது. ???? 🤔

நகையுமாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மை அப்பனை நீங்கள் இருக்கும் நாடுகளுக்கு  எடுத்தாவது விடுங்களடா ஊரில் தவிக்க விடாதீர்கள் கள்ளனுகள் ஒரு பக்கம் கண்ணூல எண்ணெய ஊத்திட்டு திரியுறானுகள் வெளிநாட்டு சனத்துகள்ட வீட்டில்

காசு நகைகள் வீட்டிலா வைத்திருந்தார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

5 இலட்சம் ரூபா பணமும் இருந்தது. ???? 🤔

 

54 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

காசு நகைகள் வீட்டிலா வைத்திருந்தார்கள் 

உடுவில் பகுதியில்.... மரக்கறி தோட்டம் செய்பவர்கள் அதிகம் இருக்கின்றார்கள்.

அவர்கள் தோட்டத்திற்கு தேவையான.. பசளை போன்ற   பொருட்களை அடுத்த நாள் வாங்க, 
வங்கியில் இருந்த பணத்தை எடுத்து...  வீட்டில் வைத்தோ...

அல்லது... விளைந்த பொருட்களை, விற்று வந்த பணத்தை... வீட்டில் வைத்திருந்ததை...
யாராவது... அவதானித்து, இந்தப் பணத்தை திருடியிருக்கலாம் என நினைக்கின்றேன். 

Link to comment
Share on other sites

48 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

கள்ளனுகள் ஒரு பக்கம் கண்ணூல எண்ணெய ஊத்திட்டு திரியுறானுகள்

'அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி'

பிரபாகரன் தமிழீழத்தில் அரசுசெய்த காாலத்தில் இந்தத் திருடனுகள் எல்லாம் எங்கேபோய் இருந்தார்கள்.???? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, தமிழ் சிறி said:

உடுவில் பகுதியில்.... மரக்கறி தோட்டம் செய்பவர்கள் அதிகம் இருக்கின்றார்கள்.

அவர்கள் தோட்டத்திற்கு தேவையான.. பசளை போன்ற   பொருட்களை அடுத்த நாள் வாங்க, 
வங்கியில் இருந்த பணத்தை எடுத்து...  வீட்டில் வைத்தோ...

அல்லது... விளைந்த பொருட்களை, விற்று வந்த பணத்தை... வீட்டில் வைத்திருந்ததை...
யாராவது... அவதானித்து, இந்தப் பணத்தை திருடியிருக்கலாம் என நினைக்கின்றேன். 

சரியாகச் சொன்னீர்கள். அதே நேரம் வங்கியில் காசுவைத்திருப்பது மோட்டுதனம்  சிங்கள அரசு சுருட்டி விடும் என்று பயமுறத்தும் தமிழர்கள் சிலரின் பேச்சை நம்பி அவர்கள் வீட்டில் பணத்தை வைத்திருந்தால் வேதனையானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

உடுவில் பகுதியில்.... மரக்கறி தோட்டம் செய்பவர்கள் அதிகம் இருக்கின்றார்கள்.

அவர்கள் தோட்டத்திற்கு தேவையான.. பசளை போன்ற   பொருட்களை அடுத்த நாள் வாங்க, 
வங்கியில் இருந்த பணத்தை எடுத்து...  வீட்டில் வைத்தோ...

அல்லது... விளைந்த பொருட்களை, விற்று வந்த பணத்தை... வீட்டில் வைத்திருந்ததை...
யாராவது... அவதானித்து, இந்தப் பணத்தை திருடியிருக்கலாம் என நினைக்கின்றேன். 

உடனடி தேவைக்கு பணம் வங்கிலிருந்து அட்டைகளில் இருந்து எடுப்பது நல்லம் ஆனால் வைத்திருப்பது இப்படியான நிகழ்வுகளுக்கு வழிசமைத்துவிடும்

 

7 hours ago, Paanch said:

'அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி'

பிரபாகரன் தமிழீழத்தில் அரசுசெய்த காாலத்தில் இந்தத் திருடனுகள் எல்லாம் எங்கேபோய் இருந்தார்கள்.???? 

திருடினார்கள்  ஆனால் தெரியவரும் போது தண்டனை வழங்கப்பட்டது தற்போது கைது நீதிமன்றம் வெளியில் எடுக்க சட்டதரணிகள் இருக்கிறார்கள்  அவ்வளவுதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

உடனடி தேவைக்கு பணம் வங்கிலிருந்து அட்டைகளில் இருந்து எடுப்பது நல்லம் ஆனால் வைத்திருப்பது இப்படியான நிகழ்வுகளுக்கு வழிசமைத்துவிடும்

 

திருடினார்கள்  ஆனால் தெரியவரும் போது தண்டனை வழங்கப்பட்டது தற்போது கைது நீதிமன்றம் வெளியில் எடுக்க சட்டதரணிகள் இருக்கிறார்கள்  அவ்வளவுதான்

திருட்டில் பாதி சட்டத்தரணிக்கு. துணிந்து அடுத்த தடவையும் திருடுவான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அம்மை அப்பனை நீங்கள் இருக்கும் நாடுகளுக்கு  எடுத்தாவது விடுங்களடா ஊரில் தவிக்க விடாதீர்கள் கள்ளனுகள் ஒரு பக்கம் கண்ணூல எண்ணெய ஊத்திட்டு திரியுறானுகள் வெளிநாட்டு சனத்துகள்ட வீட்டில்

வயோதிப பெற்றோருக்கு வெளி நாடுகளிலும் திருடர்களிடமிருந்து பாதுகாப்பில்லை. லண்டனில் வசிக்கும் எனது நண்பரின் தாயார் வீட்டில் வேலைக்கு வந்த தமிழ் பெண் வயோதிப தாயின் வங்கியில் இருந்த சேமிப்பு பணத்தையும் வீட்டில் இருந்த நகைகளையும் கொஞ்சம் கொஞ்சமாக கொள்ளையடித்து ஊரில் வீடுகட்டிவிட்டாள். பொலிஸில் முறையிட்டும் ஒன்றும் நடக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, vanangaamudi said:

 லண்டனில் வசிக்கும் எனது நண்பரின் தாயார் வீட்டில் வேலைக்கு வந்த தமிழ் பெண் வயோதிப தாயின் வங்கியில் இருந்த சேமிப்பு பணத்தையும் வீட்டில் இருந்த நகைகளையும் கொஞ்சம் கொஞ்சமாக கொள்ளையடித்து ஊரில் வீடுகட்டிவிட்டாள். பொலிஸில் முறையிட்டும் ஒன்றும் நடக்கவில்லை.

வயோதிப தாய்க்கு அவ்வளவு பணம் அனுப்பினார்களா அவரரோட பிள்ளைகள்?

இல்ல , ஊரில் ஒரு வீடு கட்டுவதென்றால் குறைஞ்சது ஒரு கோடியாவது  வேண்டுமே, அதனால் கேட்டேன்.

Link to comment
Share on other sites

12 minutes ago, valavan said:

இல்ல , ஊரில் ஒரு வீடு கட்டுவதென்றால் குறைஞ்சது ஒரு கோடியாவது  வேண்டுமே, அதனால் கேட்டேன்.

20 இல் இருந்து 40 லட்சம் போதுமே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Rajesh said:

20 இல் இருந்து 40 லட்சம் போதுமே!

ஒண்டும் விளங்கெல்லை  ராஜேஸ், அப்பிடி எண்டால்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, valavan said:

 லண்டனில் வசிக்கும் எனது நண்பரின் தாயார் வீட்டில் வேலைக்கு வந்த தமிழ் பெண் வயோதிப தாயின் வங்கியில் இருந்த சேமிப்பு பணத்தையும் வீட்டில் இருந்த நகைகளையும் கொஞ்சம் கொஞ்சமாக கொள்ளையடித்து ஊரில் வீடுகட்டிவிட்டாள். பொலிஸில் முறையிட்டும் ஒன்றும் நடக்கவில்லை.

இவரின் நண்பரின் தாயார் லண்டனில்தான் இருக்கிறார். என்று சொல்கிறார் என்று நினைக்கிறன். அவருக்கு வேலைக்கு வந்த பெண் லண்டனில் கொள்ளை அடித்த பணத்தை ஊருக்கு அனுப்பி அங்கே வீடு கட்டிவிட்டார் என்றே நான் விளங்கிக் கொள்கிறேன். அப்படித்தானே முடியாரே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, vanangaamudi said:

வயோதிப பெற்றோருக்கு வெளி நாடுகளிலும் திருடர்களிடமிருந்து பாதுகாப்பில்லை. லண்டனில் வசிக்கும் எனது நண்பரின் தாயார் வீட்டில் வேலைக்கு வந்த தமிழ் பெண் வயோதிப தாயின் வங்கியில் இருந்த சேமிப்பு பணத்தையும் வீட்டில் இருந்த நகைகளையும் கொஞ்சம் கொஞ்சமாக கொள்ளையடித்து ஊரில் வீடுகட்டிவிட்டாள். பொலிஸில் முறையிட்டும் ஒன்றும் நடக்கவில்லை.

 

18 minutes ago, satan said:

இவரின் நண்பரின் தாயார் லண்டனில்தான் இருக்கிறார். என்று சொல்கிறார் என்று நினைக்கிறன். அவருக்கு வேலைக்கு வந்த பெண் லண்டனில் கொள்ளை அடித்த பணத்தை ஊருக்கு அனுப்பி அங்கே வீடு கட்டிவிட்டார் என்றே நான் விளங்கிக் கொள்கிறேன். அப்படித்தானே முடியாரே?

நண்பனின் தாயார் ஊரில இருக்கின்றார், அவரைப்பார்க்க வந்த வேலைகாரி காசடித்து வீடுகட்டிவிட்டார் என்றே நான் நினைக்கின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தாயாரின் வீட்டுக்கு தனது கஷ்டத்தின் விளைவாக வேலைக்கு வந்த ஒரு பெண் இந்தத் தாயாரின் பணத்தையும் பொன்னையும் செலவு செய்து தான் கௌரவமாக வாழ்வதற்கு ஒரு வீடு கட்டிக் கொண்டார் போல் இருக்கிறது.....!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, vanangaamudi said:

வயோதிப பெற்றோருக்கு வெளி நாடுகளிலும் திருடர்களிடமிருந்து பாதுகாப்பில்லை. லண்டனில் வசிக்கும் எனது நண்பரின் தாயார் வீட்டில் வேலைக்கு வந்த தமிழ் பெண் வயோதிப தாயின் வங்கியில் இருந்த சேமிப்பு பணத்தையும் வீட்டில் இருந்த நகைகளையும் கொஞ்சம் கொஞ்சமாக கொள்ளையடித்து ஊரில் வீடுகட்டிவிட்டாள். பொலிஸில் முறையிட்டும் ஒன்றும் நடக்கவில்லை.

இது போன்ற சம்பவம் ஒன்று எனது அம்மம்மாவுக்கு இலங்கையில் நடந்தது. 🤥

அம்மம்மாவுக்கு 95 வயது. அவரைக் நீராட்டுவதற்கு ஒன்றுவிட்ட ஒவ்வொரு நாளும் ஒரு பெண் வருவார். ஒருநாள் அவரை நீராட்டியபின் சென்றவர் திரும்பி வரவேயில்லை. ஏன் வரவில்லையென்று கேட்பதற்கு அவருக்கு அழைப்பை ஏற்படுத்தினால் பதிலில்லை. 🤔

சந்தேகத்தில் அம்மம்மாவின் அலுமாரியை கிளறியதில்,  அவரின் நல்ல நிறை கூடிய பழைய காலத்து  சங்கிலி மிஸ்ஸிங் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, உடையார் said:

 

நண்பனின் தாயார் ஊரில இருக்கின்றார், அவரைப்பார்க்க வந்த வேலைகாரி காசடித்து வீடுகட்டிவிட்டார் என்றே நான் நினைக்கின்றேன்

அப்படியென்றால் "வயோதிப பெற்றோருக்கு வெளி நாடுகளிலும் திருடர்களிடமிருந்து பாதுகாப்பில்லை" என்ற வசனம் தேவையில்லையே??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, satan said:

திருட்டில் பாதி சட்டத்தரணிக்கு. துணிந்து அடுத்த தடவையும் திருடுவான்.

 

Link to comment
Share on other sites

On 5/5/2020 at 11:18, Paanch said:

'அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி'

பிரபாகரன் தமிழீழத்தில் அரசுசெய்த காாலத்தில் இந்தத் திருடனுகள் எல்லாம் எங்கேபோய் இருந்தார்கள்.???? 

பிரபாகரன் தமிழீழத்தில் ஆட்சியில் இருக்கும் போது இந்த திருடனுகள் எல்லாம் பாலர் வகுப்பு படித்து கொண்டிருந்தார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, tulpen said:

பிரபாகரன் தமிழீழத்தில் ஆட்சியில் இருக்கும் போது இந்த திருடனுகள் எல்லாம் பாலர் வகுப்பு படித்து கொண்டிருந்தார்கள். 

ஈழம் என்று கிளம்பின பாதிக்கூட்டம் கடைசியில் தம் இனத்திலே கொள்ளையடிக்கவும்  திருடவும் பழகின பழக்கம் இன்னும் வாரிசுகளை விட்டு போகவில்லை .

Link to comment
Share on other sites

12 minutes ago, பெருமாள் said:

ஈழம் என்று கிளம்பின பாதிக்கூட்டம் கடைசியில் தம் இனத்திலே கொள்ளையடிக்கவும்  திருடவும் பழகின பழக்கம் இன்னும் வாரிசுகளை விட்டு போகவில்லை .

அந்த கூட்டத்தின் காட்டில தானே இப்ப மழை பெய்யுது. என்ன செய்ய.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, பெருமாள் said:

ஈழம் என்று கிளம்பின பாதிக்கூட்டம் கடைசியில் தம் இனத்திலே கொள்ளையடிக்கவும்  திருடவும் பழகின பழக்கம் இன்னும் வாரிசுகளை விட்டு போகவில்லை .

வந்து.......அரைகுறையிலை விட்டுட்டு ஓடின கூட்டங்களிலாலைதான் அப்பவும் பிரச்சனை இப்பவும் பிரச்சனை.
இதாலைதான் சில சமயங்களில் சிங்களம் நல்லவர்களாகவும் புத்திசாலிகளாகவும் தெரிகின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/5/2020 at 11:18, Paanch said:

'அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி'

பிரபாகரன் தமிழீழத்தில் அரசுசெய்த காாலத்தில் இந்தத் திருடனுகள் எல்லாம் எங்கேபோய் இருந்தார்கள்.???? 

த‌லைவ‌ர் வாழ்ந்த‌ கால‌த்தில் இப்ப‌டியான‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் ந‌ட‌ந்து நான் கேள்வி ப‌ட்ட‌து இல்லை , 

எங்க‌ட‌ ஊர் கோயிலுக்கு த‌ண்ணீர் மோட்ட‌ர‌ மாமா பூட்ட‌ இர‌வோடு இர‌வாய் அந்த‌ மோட்ட‌ர‌ க‌ள‌வு எடுத்துட்டு போட்டாங்க‌ , இப்ப‌ கோயிலுக்கு புது மோட்ட‌ர் பூட்டி இருக்கு /

2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு த‌மிழீழ‌ ம‌ண்ணில் ப‌ல‌ திருட‌ர்க‌ள் உருவாகி விட்டார்க‌ள் /

1996ம் ஆண்டுக்கு பிற‌க்கு பிற‌ந்த‌  ப‌ஸ்ச‌ங்க‌ தான் பெரிய‌ ர‌வுடிக‌ள் ஊரில் , 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.