Jump to content

யாழ்.உடுவிலில் வயோதிப தம்பதிகளை சித்திரவதை செய்த கொள்ளை கும்பல்


Recommended Posts

கோவணம்

எங்கள் குமாரசாமித் தாத்தா அவர்களே தற்போது தங்கள் பதிவுகள். கருத்துக்களைக் குடும்பத்தோடு பார்ப்பதற்குச் சங்கடப்படவேண்டி உள்ளது, உங்கள் கோமணம் அப்படிக் கண்களை உறுத்துகிறது. மாற்றிவிடுங்கள் மாற்றாவிட்டால் பரிமளா அன்ரியிடம் சொல்லிவிடுவேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம்  எதற்காகவோ  கோவித்து கொண்டு போவது போல  இருக்கு 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

ஈழம் என்று கிளம்பின பாதிக்கூட்டம் கடைசியில் தம் இனத்திலே கொள்ளையடிக்கவும்  திருடவும் பழகின பழக்கம் இன்னும் வாரிசுகளை விட்டு போகவில்லை .

மாவீர‌ நாளுக்கு முன்னுக்கு நிக்கும் த‌மிழ் அன்ரி , இங்க‌த்த‌ காசுக்கு ஒரு மில்லிய‌ன் காசை ப‌ழ‌கின‌ உற‌வுக‌ளிட‌ம் இருந்து சுட்டு கொண்டு ஓடி விட்டா இர‌ண்டு மாத‌த்துக்கு முதல்  , இல‌ங்கை காசுக்கு பார்த்தா , 2கோடியும் 50லச்ச‌மும் , 

என‌து நொருங்கிய‌ ந‌ண்ப‌னின் அம்மாவும் அவாவிட‌ம் சீட்டு க‌ட்டி ஏமாந்து போய் இருக்கிறா , 

இப்ப‌டியான‌வ‌ர்க‌ளால் எம் போராட்ட‌த்துக்கு தான் கெட்ட‌ பெய‌ர் /  

தொட்டில் ப‌ழ‌க்க‌ம் சுடுகாடு வ‌ரைக்கும் / 

இப்ப‌டியான‌வ‌ர்க‌ளை ஒரு போதும் திருத்த‌ முடியாது 😉 /

அந்த‌ உத்த‌மியின் ப‌ட‌த்தை இணைப்ப‌தில் ஒரு த‌ய‌க்க‌மும் இல்லை , யாழ் நிர்வாக‌ம் அத‌ அனும‌திக்குமோ தெரியாது  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

கோவணம்

எங்கள் குமாரசாமித் தாத்தா அவர்களே தற்போது தங்கள் பதிவுகள். கருத்துக்களைக் குடும்பத்தோடு பார்ப்பதற்குச் சங்கடப்படவேண்டி உள்ளது, உங்கள் கோமணம் அப்படிக் கண்களை உறுத்துகிறது. மாற்றிவிடுங்கள் மாற்றாவிட்டால் பரிமளா அன்ரியிடம் சொல்லிவிடுவேன்.

ஐயா அது ஒரு ஏழை விவசாயியின் வறுமையை காட்டுகின்றது. 
அது சரி அந்தப்படம் அவ்வளவு செக்ஸியாகவா தெரியுது? 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Paanch said:

கோவணம்

எங்கள் குமாரசாமித் தாத்தா அவர்களே தற்போது தங்கள் பதிவுகள். கருத்துக்களைக் குடும்பத்தோடு பார்ப்பதற்குச் சங்கடப்படவேண்டி உள்ளது, உங்கள் கோமணம் அப்படிக் கண்களை உறுத்துகிறது. மாற்றிவிடுங்கள் மாற்றாவிட்டால் பரிமளா அன்ரியிடம் சொல்லிவிடுவேன்.

அட.... அவர் டாய்லெட்டுக்கு போய் கொண்டிருக்கிறார்.... பனை மரம் வரைக்கும் நடக்க வேணும்...விடுங்கோ..... 😎

Link to comment
Share on other sites

2 minutes ago, Nathamuni said:

அட.... அவர் டாய்லெட் போய் கொண்டிருக்கிறார்.... விடுங்கோ..... 😎

பார்த்தீர்களா சாமி நாதமுனி அவர்கள்கூடப் போற்றவில்லை. தேயிலை கொய்யும் தொழிலாளப் பெண்ணின் படத்தைப் போட்டு இதுதான் தமிழ்ப்பெண் என்றும், சினிமா கதாநாயகியின் படத்தைப்போட்டு இதுதான் சிங்களப்பெண் என்றும் உலகத்துக்குப் படம்காட்டியவர்கள் வாய்க்கு அவல் போட்டதுபோல் இருக்காதா.😟

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/5/2020 at 12:26, satan said:

இவரின் நண்பரின் தாயார் லண்டனில்தான் இருக்கிறார். என்று சொல்கிறார் என்று நினைக்கிறன். அவருக்கு வேலைக்கு வந்த பெண் லண்டனில் கொள்ளை அடித்த பணத்தை ஊருக்கு அனுப்பி அங்கே வீடு கட்டிவிட்டார் என்றே நான் விளங்கிக் கொள்கிறேன். அப்படித்தானே முடியாரே?

அதே அதே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, vanangaamudi said:

அதே அதே.

பதிலுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தம்பதியை கட்டிவைத்து துணிகரக் கொள்ளை!

யாழ்ப்பாணம் – கந்தரோடை ஆலடியில் வயோதிபத் தம்பதியைக் கட்டிவைத்து விட்டு 7 அரைப் பவுண் நகைகள் மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் நேற்றிரவு (23) இடம்பெற்றுள்ளது.

வீட்டில் வயோதிபத் தம்பதி ஒன்று வசித்து வரும் நிலையில் கூரிய ஆயுதங்களுடன் வீட்டுக்குள் புகுந்த கும்பல் அவர்கள் இருவரையும் மிரட்டி கட்டிவைத்துவிட்டு நகை மற்றும் பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

https://newuthayan.com/தம்பதியை-கட்டிவைத்து-துண/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலம் 

மாத வருவாயாக சில ஆயிரங்கள் வருமானம் பெறுவது  என்பது  மிக பெரும் சமுதாய அந்தஸ்து,

புதிதாக சைக்கிள் வைத்திருந்தால் எகத்தாளம்  அதிகம்.

அதிலும் லுமாலா ஹீரோ, பிளைஜிங் பிகன்,ஏசியா ,ரல்லி என்ற வகையறாக்களில்

ஏசியா வைத்திருந்தால் அவர் வசதிக்காரர், ரல்லி வைத்திருந்தால் அவர் முன்னாள் வசதிக்காரர்.

ஆனால் எல்லோரும் உடலை வருத்தி  கஷ்டப்பட்டே அந்த நிலையை அடைந்தார்கள் என்பதால் கெளரவமான சூழல் அங்கே நிலவியது.

ஆனால் இன்று நிலமை அப்படியா? உடலில் சிறு வலி வந்து வேலை செய்ய பழகாதவர்களிடம்கூட

உயர்தர மோட்டார் சைக்கிள்கள்,  பத்து ரூபாய் பொக்கெற் மணிகூட பெரும் ஆச்சரியமாக இருந்த யாழ்ப்பாண தமிழர்கள் வாழ்வில் இன்று எந்த வேலைக்கும் போகாத மனிதர்களிடம் மணி பேர்ஸ் பிதுங்க பிதுங்க லட்சக்கணக்கில் ரூப்பாய் நோட்டுக்கள்...

இதனால் எந்த வேலைக்கும் போகாத ஒரு குழுவிடம் லட்சக்கணக்காய் பணம் புழங்கும்போது, எந்த வேலையும் கிடைக்காத ஒரு குழு வேலைக்கு போகுமா?

உலகின் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பல சமுதாயம்  வறுமையில் வாடியிருக்கு,

ஒப்பீட்டளவில் யுத்த பாதிப்பால் தான் சார்ந்த சமூகத்தை அளவுக்கு அதிகமாக பணக்காரர்கள் ஆக்கியது யாழ் சமூகமே.

இந்த சமூகம்  வெறிகொண்டு வசதியாய் உள்ளவனை பார்த்து தானும் அப்படி வாழ வெறி கொண்டு அலையும்,

அதுக்கு பலிகடா ஆகபோவது அதே களவாணி  சமூகத்தை ஊட்டி வளர்த்த புலம்பெயர்  மஸ்தானுகளே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாராவது தினமுரசில் அற்புதன் எழுதிய இந்த தொடரை வாசிக்காமல் விட்டிருந்தால் இந.த தொடரை நிச்சயமாக பார்க்க வேண்டும்.ஏனெனில் புலிகளுக்கு நேர் எதிரான அணியிலிருந்த ஒருவரால்த் தான் இது எழுதப்பட்டது. நான் இந்த பத்திரிகையை தொடர்ந்து வாங்கிய போது பலரும் மறைமுகமாக ஈபிடிபிக்கு ஆதரவளிப்பதாக கூறினார்கள். நிறைய பேருக்கு ஆரம்பகாலத்தில் போராட்டத்துக்கு வித்துப் போட்டவர்களையும் வித்துடலானவர்களையும் இன்னமும் தெரியாமல் இருக்கிறார்கள்.
    • தென்னாபிரிக்காவில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். அதிவேகமாக சென்ற அந்த பேருந்து செல்லும் வழியில் மாமட்லகலா என்ற இடத்தில் வேகத்தக் கட்டுப்படுத்த முடியாமல் அங்குள்ள பாலத்தில் மோதி தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு இருந்து 165 அடி பள்ளத்தில் விழுந்தது. அங்குள்ள பாறையில் விழுந்த வேகத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் பேருந்தில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதிலிருந்தவர்களில் நல்வாய்ப்பாக 8 வயது சிறுமி மட்டும் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானதில், அதில் இருந்த பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகிப்போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரது உடல்கள் பேருந்தின் அடிப்புறத்தில் சிக்கியுள்ளன. அவற்றை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தென்னாபிரிக்காவை உலுக்கியுள்ள இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டின் ஜனாதிபதி சிரில் ரமபோசா இரங்கல் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297513
    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
    • ஓம். உணர்வு இல்லவே இல்லை என சொல்லவில்லை.  ஆனால் சதவீதம் வீழ்ந்துள்ளது என நினைக்கிறேன். மிக தெளிவான பார்வை. ஊருக்கு போகா விடிலும் உங்களுக்கு யதார்த்தம் அழகாக புரிகிறது. ஓம். ஆனால் இது அரசியலால் இல்லை. நன்றி உணர்வு. பாசம். நினைவுகூரல். சில மாவீரர் குடும்பங்களிடம் உரையாடிய அனுபவத்தில் சொல்கிறேன்.
    • வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன். நான் போன சமயம் சுத்தமாக இருந்தது. சிலவேளை முதல் நாள் துப்பரவு செய்தனரோ தெரியவில்லை🤣. கொழும்பில் இது முன்பே வழமை. யாழில் இந்த போக்கு புதிது. நாம் இருக்கும் போது சேவை என இருந்த்ஃ துறை இப்போ சேர்விஸ் என ஆகி வருகிறது. ஆனால் நாடெங்கும் இதுவே நிலை என எழுதியுள்ளேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.