Jump to content

இந்த ஆண்டின் சூப்பர் மூன் நிகழ்வை காண இறுதி வாய்ப்பு.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆண்டின் சூப்பர் மூன் நிகழ்வைக் காண இறுதி வாய்ப்பு.!

supermoon2020-1588656117.jpg

கடந்த மாதம் இயற்கையின் பிரமிப்பாய் தோன்றிய சூப்பர் பிங்க் மூன் நிகழ்வை நீங்கள் தவறவிட்டீர்களா.? கவலைப்பட வேண்டாம், இன்னொரு சூப்பர் மூன் நிகழ்வு இன்னும் இரண்டு நாட்களில் நிகழவுள்ளது.

இந்த 2020 ஆம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன் நிகழ்வாக இது மட்டுமே இருக்கும். இந்த ஆண்டின் இறுதி சூப்பர் மூன் நிகழ்வைக் காண இன்னும் உங்களுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது. இதை எப்படி? எந்த நேரத்தில் பார்க்கலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

சூப்பர் ஃப்ளவர் மூன் காண ஒரு வாய்ப்பு

சூப்பர் மூன் நிகழ்வை காண ஆர்வமாக இருக்கும் மக்களுக்கு வரும் மே 7 ஆம் தேதி, சூப்பர் ஃப்ளவர் மூன் காண ஒரு வாய்ப்புள்ளது. சூப்பர் ஃப்ளவர் மூன் குறிப்பாக வசந்தம் முழுமையாகப் பூக்கும் நேரத்தில் தோன்றும் என்பதால் இந்த நிகழ்விற்கு இப்படிப் பெயரிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்த சூப்பர் மூன் நிகழ்விற்கு வேறு சில பெயர்களும் உள்ளது.

இந்த ஆண்டின் இறுதி சூப்பர் மூன்

இந்த ஆண்டின் இறுதி சூப்பர் மூன் நிகழ்விற்கு முழு சோளம் நடவு நிலவு (Full Corn Planting Moon) மற்றும் முழு பால் நிலவு (Full Milk Moon) என்றும் அழைக்கப்படுகிறது. சூப்பர்மூனின் நிகழ்வு முழு நிலவு பெரிஜியுடன் (perigee) ஒப்பிடப்படுகிறது. நிலவின் நீள்வட்ட சுற்றுப்பாதையில் பூமிக்கு மிக நெருக்கமான புள்ளி பெரிஜி என்று அழைக்கப்படுகிறது. இந்த பகுதியை நிலவு நெருங்கும் நேரத்தில் வழக்கத்தை விட பெரியதாகத் தோன்றி சூப்பர் மூன் நிகழ்வாக உருவம் எடுக்கிறது.

இதை தவறவிட்டால் அடுத்த சூப்பர் மூன் நிகழ்வு எப்பொழுது?

இந்த 2020 ஆம் ஆண்டு, ஏற்கனவே இரண்டு சூப்பர்மூன்களைக் கண்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டின் மார்ச் மாதத்தில் வார்ம் மூன் தோன்றியது. அதேபோல், கடந்த ஏப்ரல் மாதத்தில் சூப்பர் பிங்க் மூன் தோன்றியது. இந்த ஆண்டின் இறுதி சூப்பர் மூன் நிகழ்வாக இந்த சூப்பர் ஃப்ளவர் மூன் தோன்றுகிறது. இதற்குப் பின் சூப்பர் மூன் நிகழ்வு அடுத்த ஆண்டு ஏப்ரல் 2021 இல் மட்டுமே தெரியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பூமியிலிருந்து நீண்ட தொலைவில் தோன்றும் சூப்பர் மூன் இது

சூப்பர் ஃப்ளவர் மூன் நிகழ்வை மற்ற இரண்டு சூப்பர் மூன் நிகழ்வுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது இதன் தோற்றம் மற்ற சூப்பர் மூன் தோற்றத்தை விட சிறியதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணமாக இது பூமியிலிருந்து நீண்ட தொலைவில் தோன்றுகிறது என்று கூறப்பட்டுள்ளது. பூமியிலிருந்து தூரத்தில் இந்த நிகழ்வு தோன்றுவதால் மற்ற இரண்டு சூப்பர் மூனை போல் இது பெரியதாக இருக்காது ஆனால், பிரகாசமாக இருக்கும்.

சூப்பர் ஃப்ளவர் மூன் நிகழ்வை எந்த நேரத்தில் பார்க்கலாம்

நாசாவின் கூற்றுப்படி, சூப்பர் ஃப்ளவர் மூன் மே 7ம் தேதி அன்று மாலை 04:15 மணிக்கு அதன் உச்ச வெளிச்சத்தை எட்டியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட நேரத்தில், சந்திரன் பூமியிலிருந்து சுமார் 361,184 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் என்று நாசா தெரிவித்துள்ளது. இந்த நிகழ்வைக் காணச் சிறந்த நேரமாக நிலவொளி உதயம் மற்றும் நிலவொளி மறையும் நேரம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திரனின் மேற்பரப்பை காண வாய்ப்பு

இந்த வாரம் பௌர்ணமியின் இரவுக்கு முன்னும் பின்னும் சந்திரனின் மேற்பரப்பில் உள்ள பள்ளங்களைக் கூட மக்கள் காணச் சிறந்த வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் மிக பிரகாசமான சூப்பர் மூன் நிகழ்வு இது என்பதால், நிலவின் மேற்பரப்பை காணவும் வாய்ப்புள்ளது என்று நாசா தெரிவித்துள்ளது.

நிலவின் எந்த இடங்களை காணலாம்.?

நிலவில் உள்ள கோப்பர்நிக்கஸ், டைகோ போன்ற பள்ளங்கள் மற்றும் நிலவின் ட்ராங்குவாலிட்டி கடல் மற்றும் அப்பல்லோ 11 இன் தரையிறங்கு இடம் போன்ற இடங்களைத் தொலைநோக்கியின் உதவியுடன் அல்லது அடிப்படை உருப்பெருக்கம் கொண்ட தொலைநோக்கி மூலம் காணலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

https://tamil.gizbot.com/news/super-flower-moon-is-the-last-chance-to-witness-the-last-supermoon-of-2020-025414.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நிலவின் எந்த இடங்களை காணலாம்.?

நிலவில் உள்ள கோப்பர்நிக்கஸ், டைகோ போன்ற பள்ளங்கள் மற்றும் நிலவின் ட்ராங்குவாலிட்டி கடல் மற்றும் அப்பல்லோ 11 இன் தரையிறங்கு இடம் போன்ற இடங்களைத் தொலைநோக்கியின் உதவியுடன் அல்லது அடிப்படை உருப்பெருக்கம் கொண்ட தொலைநோக்கி மூலம் காணலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலவிற்கு மனிதன் ஏன் மீண்டும் ...

"அப்பல்லோ 11"  தரையிறங்கிய  இடம் தெரியுது என்றால்... கட்டாயம்  பார்க்கத்தான் வேணும்.  :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்தியாவில் லோக்சபா தேர்தல் கட்டம் கட்டமாக நடப்ப்துதான் வழமை. பெரிய மாநிலங்களில் பிரிப்பார்கள். ஆனால் வெறும் 39 தொகுதிகள் உடைய மத்திய அளவு மாநிலமான தமிழ் நாட்டில் ஒரே நாளில்தான் வைப்பார்கள்.   கை காட்டலும் தொடரும்🤣
    • கெட்ட வார்த்தை பின்னோட்டங்கள் இட்டவர்கள் எல்லோரும் நாம் தமிழர் கட்சிகளை சேர்ந்தவர்களாம்.
    • பதில் 9 புள்ளிகளில் வழங்கப்பட்டுள்ளது.
    • என்றுமே உண்மையாக இருந்தால் இந்த உலகில் வாழ்வது மிக சிரமம்.
    • நாளைய தினம் முதல் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாக  எரிபொருள் விநியோகஸ்தர்கள்  சங்கம் தெரிவித்துள்ளது.    எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி காரணமாக இந்த நிலைமை ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது என்று  அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் கபில நாவுதுன்ன(Kapila Navuthunna) தெரிவித்துள்ளார். இதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களின்  வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். நாளை முதல் செலுத்த வேண்டிய வற் வரி இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் நிலையங்கள் கடும் நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி என்பது உரிமையாளருக்கு கிடைக்க கூடிய சிறிய தொகையில் செலுத்த வேண்டிய வற் வரியாகும். அதற்குரிய வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும்.   அவ்வாறு செலுத்தப்படாது விட்டால் எரிபொருள் நிலையங்களின் அடுத்தக்கப்பட்ட பயணங்கள் மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும். கடந்த 3 மாதங்களாக இந்த பிரச்சினையை தீர்க்க கோரிக்கை விடுத்தோம். எனினும் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கேனும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 20ஆம் திகதிக்கு பின்னர் எரிபொருள் நிலையங்களில் கடும் நெருக்கடியை சந்திக்கும்.     இந்த VAT வரியால் சிறிய நிரப்பு நிலையங்கள் கூட 10 லட்சத்திற்கும் அதிக VAT வரி செலுத்த நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   https://tamilwin.com/article/fuel-shortage-in-the-country-1713508148?itm_source=article
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.