Jump to content

கடிதங்களின் கவலை..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கடிதங்களின்கவலை..!

எங்களை இப்போது

எவருக்கும் தெரிவதில்லை

தொழில் நுட்பமென்னும்

தூரதேசம் பேச, எழுத..

பல நுட்பம் வந்ததனால்

எங்களை இப்போது

எவருக்கும் தெரிவதில்லை.

 

அந்தக்காலத்தின்-நாம் 

அன்பின் பாலங்கள்..

பிரிந்து வாழ்ந்தாலும்

பிரியமுடன் வாழ்ந்தாலும்

எங்களைத்தான் எதிர் பார்த்தே

ஏக்கமுடன் இருப்பார்கள்.

 

ஊர் விட்டுத் தள்ளிப்போன

உறவுகளின் உணர்வுகளை

வேர் இருக்குமிடம்பார்த்து

விருப்போடு நாம் வருவோம்.

 

அந்தகிராமத்தின்

அதிகாரிகளை தெரியாது

ஆனால்..

குஞ்சு குருமான்கள்,இளம்

 குடலை, பெரியோர்கள்

எல்லோர்க்கும் தெரிந்த முகம்

எமை காவும் தபால் காரர்

 

விசில் அடித்து கேட்டாலோ

பெல்லடித்துக் கேட்டாலோ

கடிதம் வருகுதென்று

கடப்பை மட்டும் ஓடிவந்து

இல்லையென்று மனமுடைந்து

எமை பேசி போனவர்கள்

அடுத்தநாள் கிடைத்துவிட்டால்

அதைச்சொல்லி மகிழ்வார்கள்

 

வெறுப்போடு போனமகன்

வீம்போடு போனமகள்

என அழுது புலம்பும்- பெற்றோர்

எமை பார்த்தே உயிர் வாழ்வார்.

 

வருந்திக்கிடக்கின்ற

வயதான காலத்திலும்

பேத்தி அவள்போட்ட-என்ர

பிரியமுள்ள கடிதமென்று

உற்றார் உறவுகட்கு-எம்மை

உரித்துரித்து காட்டிப்பல

சந்தோஷ மகிழ்சியில

சாஎட்டிப் போனதப்போ..

 

வெளிநாடு போன அப்பா-குளிரில்

வேலைகளில் விறைத்தாலும்-தன்

பிஞ்சுக்குழந்தைகளின்

கொஞ்சுமொழிக்கடிதமென்று

நெஞ்சில் எமை அணைத்தே

நிமதியாய் தூங்குவார்கள்.

 

தந்தி என்றொரு அண்ணன்

தபால் காட்டெனும் ஒரு தம்பி

எந்தன் உடன் பிறப்பே..

அண்ணனுக்கு வேலை

கிரமத்தை

அழவைத்து பார்ப்பதுவே

 

நத்தார்,புதுவருடம் 

நம் உழவர் பொங்கலென

அத்தனைக்கும் 

வாழ்த்துக்கூற..

அங்கு நிற்பான் என் தம்பி

 

எத்தனைதான் எழுத்துக்கள்

என்மேலே பதிந்தாலும்-காதல்

இதயத்தால் எமைத்தொட்ட

காயிதமாய் நாமிருந்தால்

 

அவர் அவர் ஒளித்துவைத்து

அணுவணுவாய் எமைரசித்து-நாம்

உருக்குலைந்து போனாலும்

ஒட்டியொட்டி வாழவைப்பார்.

 

வைபரென்றும்,வற்சாப்பென்றும்

வையகத்தில் பல விஞ்ஞானம்

எழுதி அளிப்பதுவே-கையில்

எமைப்போல இருப்பதில்லை

 

பசுமையான அக்காலம்-அன்பு

பாசத்தால் நிறைந்திருந்தோம்

சிந்தித்துப்பார்க்கின்றோம் அந்த

சிறப்பில்லை இக்காலம்.

 

என்றாலும்..

புதிய தலைமுறைக்கும்

புரியவேண்டும் குழந்தைகளே

உங்கள்..

பூட்டன் பேரனோடு நாம் வாழ்ந்த

பொன்னான காலமது.

-பசுவூர்க்கோபி-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதிய தலைமுறைக்கும்

புரியவேண்டும் குழந்தைகளே

உங்கள்..

பூட்டன் பேரனோடு நாம் வாழ்ந்த

பொன்னான காலமது.  அந்தக் காலம் ஓர் அழகிய காலம் . பாராட்டுக்கள்  கோபி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பசுவூர்க்கோபி said:

 

அந்தகிராமத்தின்

அதிகாரிகளை தெரியாது

ஆனால்..

குஞ்சு குருமான்கள்,இளம்

 குடலை, பெரியோர்கள்

எல்லோர்க்கும் தெரிந்த முகம்

எமை காவும் தபால் காரர்

-------

தந்தி என்றொரு அண்ணன்

தபால் காட்டெனும் ஒரு தம்பி

எந்தன் உடன் பிறப்பே..

அண்ணனுக்கு வேலை

கிரமத்தை

அழவைத்து பார்ப்பதுவே

--------

-பசுவூர்க்கோபி-

Sundayobserver.lk: Features | Postal services hit by labour shortage 

தொலைபேசி இல்லாத காலங்களில்....
மரணச் செய்திகளை காவி வந்த,  தந்தியை மறக்க முடியாது.
தபால்காரர்.... இரவு 11, 12 மணிக்கு மணி அடித்து... தந்தியை கொடுத்து, 
கையெழுத்து வாங்கிப் போனது, எனது நினைவில் உள்ளது.

நல்லதொரு பகிர்வு,  பசுவூர்க்கோபி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/5/2020 at 18:25, நிலாமதி said:

புதிய தலைமுறைக்கும்

புரியவேண்டும் குழந்தைகளே

உங்கள்..

பூட்டன் பேரனோடு நாம் வாழ்ந்த

பொன்னான காலமது.  அந்தக் காலம் ஓர் அழகிய காலம் . பாராட்டுக்கள்  கோபி

ஊக்கம் தரும் உங்களின் பாராட்டுக்கு உளமார்ந்த நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/5/2020 at 18:41, தமிழ் சிறி said:

Sundayobserver.lk: Features | Postal services hit by labour shortage 

தொலைபேசி இல்லாத காலங்களில்....
மரணச் செய்திகளை காவி வந்த,  தந்தியை மறக்க முடியாது.
தபால்காரர்.... இரவு 11, 12 மணிக்கு மணி அடித்து... தந்தியை கொடுத்து, 
கையெழுத்து வாங்கிப் போனது, எனது நினைவில் உள்ளது.

நல்லதொரு பகிர்வு,  பசுவூர்க்கோபி.

உங்களின் பழய நினைவுகள் எனக்கு கிடைத்த உரமென நினைக்கின்றேன் உளமார்ந்த நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடிதங்கள்.அதெல்லாம் ஒரு கனாக்காலம். பக்கம் பக்கமாக எழுதி....பக்கம் பக்கமாக வாசித்த கடைசி சந்ததியென்றால் அது நாங்களாகத்தானிருக்கும்.கூடியிருந்து கதைப்பது போல் எத்தனையோ விடயங்கள் கடிதங்கள் மூலம் பரிமாறப்பட்டது
இப்போதெல்லாம் ஓரிரு வரிகளுடன் குறுஞ்செய்தி எனும் பெயரில் உணர்ச்சிகள் அற்ற கருத்தாடல்கள் மட்டுமே.

பகிர்வுக்கு நன்றி பசுவூர்க்கோபி 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சலட்டை - தமிழ் விக்கிப்பீடியா

தபால் அட்டைகளில் நுணுக்கி நுணுக்கி கடிதங்கள் எழுதிய காலம் மனசில் இனிக்கிறது....நல்ல கவிதை .....நன்றி கோபி .....!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

கடிதங்கள்.அதெல்லாம் ஒரு கனாக்காலம். பக்கம் பக்கமாக எழுதி....பக்கம் பக்கமாக வாசித்த கடைசி சந்ததியென்றால் அது நாங்களாகத்தானிருக்கும்.கூடியிருந்து கதைப்பது போல் எத்தனையோ விடயங்கள் கடிதங்கள் மூலம் பரிமாறப்பட்டது
இப்போதெல்லாம் ஓரிரு வரிகளுடன் குறுஞ்செய்தி எனும் பெயரில் உணர்ச்சிகள் அற்ற கருத்தாடல்கள் மட்டுமே.

பகிர்வுக்கு நன்றி பசுவூர்க்கோபி 👍

அந்தப் பொற்காலத்தை நினைவூட்டியிருக்கிறீர்கள் ஐயா உளமார்ந்த நன்றிகள்.

9 hours ago, suvy said:

அஞ்சலட்டை - தமிழ் விக்கிப்பீடியா

தபால் அட்டைகளில் நுணுக்கி நுணுக்கி கடிதங்கள் எழுதிய காலம் மனசில் இனிக்கிறது....நல்ல கவிதை .....நன்றி கோபி .....!   👍

உங்களுக்கும் மகிழ்ச்சியோடு நெஞ்சார்ந்த நன்றிகள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேரம் கிடைக்கும் போது காங்கேசந்துறை முதல் தாமரை கோபுரம் வரை நான் எடுத்த படங்களையும் இணைக்கிறேன்.  வாசகர்கள் முடிவு செய்யட்டும். அதான் கொக்கதடில மாம்பழம் சிக்கீட்டே. மரநாய் ஏன் கிடந்து உருளுது🤣
    • இந்த வீழ்ச்சிக்கு என்ன காரணம் என எண்ணுகிறீர்கள்?
    • யாராவது தினமுரசில் அற்புதன் எழுதிய இந்த தொடரை வாசிக்காமல் விட்டிருந்தால் இந.த தொடரை நிச்சயமாக பார்க்க வேண்டும்.ஏனெனில் புலிகளுக்கு நேர் எதிரான அணியிலிருந்த ஒருவரால்த் தான் இது எழுதப்பட்டது. நான் இந்த பத்திரிகையை தொடர்ந்து வாங்கிய போது பலரும் மறைமுகமாக ஈபிடிபிக்கு ஆதரவளிப்பதாக கூறினார்கள். நிறைய பேருக்கு ஆரம்பகாலத்தில் போராட்டத்துக்கு வித்துப் போட்டவர்களையும் வித்துடலானவர்களையும் இன்னமும் தெரியாமல் இருக்கிறார்கள்.
    • தென்னாபிரிக்காவில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். அதிவேகமாக சென்ற அந்த பேருந்து செல்லும் வழியில் மாமட்லகலா என்ற இடத்தில் வேகத்தக் கட்டுப்படுத்த முடியாமல் அங்குள்ள பாலத்தில் மோதி தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு இருந்து 165 அடி பள்ளத்தில் விழுந்தது. அங்குள்ள பாறையில் விழுந்த வேகத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் பேருந்தில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதிலிருந்தவர்களில் நல்வாய்ப்பாக 8 வயது சிறுமி மட்டும் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானதில், அதில் இருந்த பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகிப்போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரது உடல்கள் பேருந்தின் அடிப்புறத்தில் சிக்கியுள்ளன. அவற்றை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தென்னாபிரிக்காவை உலுக்கியுள்ள இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டின் ஜனாதிபதி சிரில் ரமபோசா இரங்கல் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297513
    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.