Jump to content

கடிதங்களின் கவலை..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கடிதங்களின்கவலை..!

எங்களை இப்போது

எவருக்கும் தெரிவதில்லை

தொழில் நுட்பமென்னும்

தூரதேசம் பேச, எழுத..

பல நுட்பம் வந்ததனால்

எங்களை இப்போது

எவருக்கும் தெரிவதில்லை.

 

அந்தக்காலத்தின்-நாம் 

அன்பின் பாலங்கள்..

பிரிந்து வாழ்ந்தாலும்

பிரியமுடன் வாழ்ந்தாலும்

எங்களைத்தான் எதிர் பார்த்தே

ஏக்கமுடன் இருப்பார்கள்.

 

ஊர் விட்டுத் தள்ளிப்போன

உறவுகளின் உணர்வுகளை

வேர் இருக்குமிடம்பார்த்து

விருப்போடு நாம் வருவோம்.

 

அந்தகிராமத்தின்

அதிகாரிகளை தெரியாது

ஆனால்..

குஞ்சு குருமான்கள்,இளம்

 குடலை, பெரியோர்கள்

எல்லோர்க்கும் தெரிந்த முகம்

எமை காவும் தபால் காரர்

 

விசில் அடித்து கேட்டாலோ

பெல்லடித்துக் கேட்டாலோ

கடிதம் வருகுதென்று

கடப்பை மட்டும் ஓடிவந்து

இல்லையென்று மனமுடைந்து

எமை பேசி போனவர்கள்

அடுத்தநாள் கிடைத்துவிட்டால்

அதைச்சொல்லி மகிழ்வார்கள்

 

வெறுப்போடு போனமகன்

வீம்போடு போனமகள்

என அழுது புலம்பும்- பெற்றோர்

எமை பார்த்தே உயிர் வாழ்வார்.

 

வருந்திக்கிடக்கின்ற

வயதான காலத்திலும்

பேத்தி அவள்போட்ட-என்ர

பிரியமுள்ள கடிதமென்று

உற்றார் உறவுகட்கு-எம்மை

உரித்துரித்து காட்டிப்பல

சந்தோஷ மகிழ்சியில

சாஎட்டிப் போனதப்போ..

 

வெளிநாடு போன அப்பா-குளிரில்

வேலைகளில் விறைத்தாலும்-தன்

பிஞ்சுக்குழந்தைகளின்

கொஞ்சுமொழிக்கடிதமென்று

நெஞ்சில் எமை அணைத்தே

நிமதியாய் தூங்குவார்கள்.

 

தந்தி என்றொரு அண்ணன்

தபால் காட்டெனும் ஒரு தம்பி

எந்தன் உடன் பிறப்பே..

அண்ணனுக்கு வேலை

கிரமத்தை

அழவைத்து பார்ப்பதுவே

 

நத்தார்,புதுவருடம் 

நம் உழவர் பொங்கலென

அத்தனைக்கும் 

வாழ்த்துக்கூற..

அங்கு நிற்பான் என் தம்பி

 

எத்தனைதான் எழுத்துக்கள்

என்மேலே பதிந்தாலும்-காதல்

இதயத்தால் எமைத்தொட்ட

காயிதமாய் நாமிருந்தால்

 

அவர் அவர் ஒளித்துவைத்து

அணுவணுவாய் எமைரசித்து-நாம்

உருக்குலைந்து போனாலும்

ஒட்டியொட்டி வாழவைப்பார்.

 

வைபரென்றும்,வற்சாப்பென்றும்

வையகத்தில் பல விஞ்ஞானம்

எழுதி அளிப்பதுவே-கையில்

எமைப்போல இருப்பதில்லை

 

பசுமையான அக்காலம்-அன்பு

பாசத்தால் நிறைந்திருந்தோம்

சிந்தித்துப்பார்க்கின்றோம் அந்த

சிறப்பில்லை இக்காலம்.

 

என்றாலும்..

புதிய தலைமுறைக்கும்

புரியவேண்டும் குழந்தைகளே

உங்கள்..

பூட்டன் பேரனோடு நாம் வாழ்ந்த

பொன்னான காலமது.

-பசுவூர்க்கோபி-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதிய தலைமுறைக்கும்

புரியவேண்டும் குழந்தைகளே

உங்கள்..

பூட்டன் பேரனோடு நாம் வாழ்ந்த

பொன்னான காலமது.  அந்தக் காலம் ஓர் அழகிய காலம் . பாராட்டுக்கள்  கோபி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பசுவூர்க்கோபி said:

 

அந்தகிராமத்தின்

அதிகாரிகளை தெரியாது

ஆனால்..

குஞ்சு குருமான்கள்,இளம்

 குடலை, பெரியோர்கள்

எல்லோர்க்கும் தெரிந்த முகம்

எமை காவும் தபால் காரர்

-------

தந்தி என்றொரு அண்ணன்

தபால் காட்டெனும் ஒரு தம்பி

எந்தன் உடன் பிறப்பே..

அண்ணனுக்கு வேலை

கிரமத்தை

அழவைத்து பார்ப்பதுவே

--------

-பசுவூர்க்கோபி-

Sundayobserver.lk: Features | Postal services hit by labour shortage 

தொலைபேசி இல்லாத காலங்களில்....
மரணச் செய்திகளை காவி வந்த,  தந்தியை மறக்க முடியாது.
தபால்காரர்.... இரவு 11, 12 மணிக்கு மணி அடித்து... தந்தியை கொடுத்து, 
கையெழுத்து வாங்கிப் போனது, எனது நினைவில் உள்ளது.

நல்லதொரு பகிர்வு,  பசுவூர்க்கோபி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/5/2020 at 18:25, நிலாமதி said:

புதிய தலைமுறைக்கும்

புரியவேண்டும் குழந்தைகளே

உங்கள்..

பூட்டன் பேரனோடு நாம் வாழ்ந்த

பொன்னான காலமது.  அந்தக் காலம் ஓர் அழகிய காலம் . பாராட்டுக்கள்  கோபி

ஊக்கம் தரும் உங்களின் பாராட்டுக்கு உளமார்ந்த நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/5/2020 at 18:41, தமிழ் சிறி said:

Sundayobserver.lk: Features | Postal services hit by labour shortage 

தொலைபேசி இல்லாத காலங்களில்....
மரணச் செய்திகளை காவி வந்த,  தந்தியை மறக்க முடியாது.
தபால்காரர்.... இரவு 11, 12 மணிக்கு மணி அடித்து... தந்தியை கொடுத்து, 
கையெழுத்து வாங்கிப் போனது, எனது நினைவில் உள்ளது.

நல்லதொரு பகிர்வு,  பசுவூர்க்கோபி.

உங்களின் பழய நினைவுகள் எனக்கு கிடைத்த உரமென நினைக்கின்றேன் உளமார்ந்த நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடிதங்கள்.அதெல்லாம் ஒரு கனாக்காலம். பக்கம் பக்கமாக எழுதி....பக்கம் பக்கமாக வாசித்த கடைசி சந்ததியென்றால் அது நாங்களாகத்தானிருக்கும்.கூடியிருந்து கதைப்பது போல் எத்தனையோ விடயங்கள் கடிதங்கள் மூலம் பரிமாறப்பட்டது
இப்போதெல்லாம் ஓரிரு வரிகளுடன் குறுஞ்செய்தி எனும் பெயரில் உணர்ச்சிகள் அற்ற கருத்தாடல்கள் மட்டுமே.

பகிர்வுக்கு நன்றி பசுவூர்க்கோபி 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சலட்டை - தமிழ் விக்கிப்பீடியா

தபால் அட்டைகளில் நுணுக்கி நுணுக்கி கடிதங்கள் எழுதிய காலம் மனசில் இனிக்கிறது....நல்ல கவிதை .....நன்றி கோபி .....!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

கடிதங்கள்.அதெல்லாம் ஒரு கனாக்காலம். பக்கம் பக்கமாக எழுதி....பக்கம் பக்கமாக வாசித்த கடைசி சந்ததியென்றால் அது நாங்களாகத்தானிருக்கும்.கூடியிருந்து கதைப்பது போல் எத்தனையோ விடயங்கள் கடிதங்கள் மூலம் பரிமாறப்பட்டது
இப்போதெல்லாம் ஓரிரு வரிகளுடன் குறுஞ்செய்தி எனும் பெயரில் உணர்ச்சிகள் அற்ற கருத்தாடல்கள் மட்டுமே.

பகிர்வுக்கு நன்றி பசுவூர்க்கோபி 👍

அந்தப் பொற்காலத்தை நினைவூட்டியிருக்கிறீர்கள் ஐயா உளமார்ந்த நன்றிகள்.

9 hours ago, suvy said:

அஞ்சலட்டை - தமிழ் விக்கிப்பீடியா

தபால் அட்டைகளில் நுணுக்கி நுணுக்கி கடிதங்கள் எழுதிய காலம் மனசில் இனிக்கிறது....நல்ல கவிதை .....நன்றி கோபி .....!   👍

உங்களுக்கும் மகிழ்ச்சியோடு நெஞ்சார்ந்த நன்றிகள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.