Jump to content

கிளிநொச்சியில் அப்பிள் செய்கை சாத்தியமானது – மாதிரி அப்பிள் கன்றிலிருந்து அறுவடை செய்துள்ளார் ஒரு விவசாயி


Recommended Posts

கிளிநொச்சியில் அப்பிள் செய்கை சாத்தியமானது – மாதிரி அப்பிள் கன்றிலிருந்து அறுவடை செய்துள்ளார் ஒரு விவசாயி

 

 

 

     by : Jeyachandran Vithushan

குளிர்வலய கன்றுகளை வெப்ப வலயங்களில் உருவாக்குவதில்விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இதுவரை காலமும் வெளிநாடுகளிலிருந்து அப்பிள்கள் இறக்குமதி செய்யப்பட்டு வந்துள்ளன.

கொரோனோ அச்சுறுத்தல் நிறை்த இக்காலகட்டத்தில் இறக்குமதி பொருட்களும், உற்பத்திகளும் நாட்டில் அரிதாகவே கிடைக்கின்றது. எனினும் இறக்குமதி செய்யப்படும் உற்பத்திகளை இலங்கையிலும் மேற்கொள்ள முடியும் என்பதை பல விவசாயிகள் நிடூபித்துள்ளனர்.

1960ம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் முதல் முதலாக அப்பிள் பயிரிடப்பட்டது நுவரேலியா மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அப்பிள் செய்கை பின்னர் கைவிடப்பட்டது. எனினும் சில பகுதிகளில் வீட்டுத்தோட்டமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் குளிர் வலயங்களில் மாத்திரமல்ல வெப்ப வலயங்களிலும் அப்பிள் செய்கையை மெற்கொள்ள முடியுமா என்ற கேள்விக்கு கிளிநொச்சியை சேர்ந்த விவசாயி ஒருவர் நிரூபித்து காட்டியுள்ளார்.

லண்டனிலிருந்து சிறு கன்றினை எடுத்து வந்து கடந்த 4 வருடங்களிற்கு முன்னர் தனது தோட்டத்தில் நாட்டிய அவர் சாதாரண தாவரங்கள் போலவே பராமரித்து வந்துள்ளார். குறித்த அப்பிள் மரம் கடந்த வருடம் காய்த்துள்ளது. அதனை அறுவடை செய்த அவர் தொடர்ந்தும் அதனை பராமரித்து வருகின்றார்.

தற்போது குறித்த மரம் மீண்டும் அறுவடைக்கு தயாராகி வருகின்றது. இறக்குமதி அப்பிள்களின் சுவையை கொண்டதாகவும் அதன் அளவில் சிறியதாக காணப்படுவதாகவும் அமரசிங்கம் தெரிவிக்கின்றார். எனினும் குறித்த தொவரத்தை முறையான ஆலோசனைகளுடன் பராமரிக்கும் சந்தர்ப்பத்தில் சிறந்த பெறுபேற்றினை காண முடியும் என அவர் நம்பிக்கை வெளியிடுகின்றார்.

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் விவசாய உற்பத்தியில் ஈடுபடும் அமரசிங்கம் என்ற இந்த விவசாயி தனது காணியில் திராட்சை, அன்னாசி உள்ளிட்ட குளிர்வலய தாவர உற்பத்திகளை மேற்கொண்டு வருகின்றார்.

எனினும் குறித்த செய்கையில் ஓரளவு வெற்றி கண்டுள்ளதாக தெரிவிக்கும் அவர், அதற்கான ஆலோசனைகளும், உதவிகளும் கிடைக்கும் இடத்தில் செய்கையில் மேலும் முன்னேற்றத்தை காண முடியும் எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

Kilinochchci-applehg-428x248.jpg

Kilinochchci-apple-428x251.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளியவளை பகுதியில் எனது அக்காவின் வீட்டில் கனகாலமாக சில கோப்பிக் கண்டுகள் வளர்த்து கோப்பிக் கொட்டைகள் எடுத்திருக்கிறா.......அந்த இடங்களை சூழவும் பலா மரங்களும்,சமண்டலை மரங்களும் நிறைய இருந்தன.குளிர்ச்சியாக இருக்கும் இடங்களில் ஊடுபயிராக வீட்டுத் தேவைகளுக்கு செய்யலாம். ......! 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை அப்பிள் நுவரெலியா பகுதியில் நன்கு வளர்ந்து காய்க்கின்றன. நாங்கள் அங்கு சென்ற போது புடுங்கிச் சாப்பிட்டிருக்கிறோம்.

கிளிநொச்சியில் அப்பிள் என்பது புதுவிடயம் என்றாலும் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

மேலும் மலையக பழங்களான ஜம்பு.. லாவுலு.. ரம்புட்டான்.. மங்குஸ்தான்.. இவற்றை ஏலவே வடக்கில்.. பயிரிட்டு சிலர் சிறிதளவில் வெற்றியும் பெற்றிருக்கின்றனர். 

எதிர்காலத்தில்.. பசுமை வீடுகளை (Greenhouses) அமைத்து.. தேவையான பயிர்களை எல்லாம் பயிரிடக் கூடிய ஆய்வுகள் தாயகத்தில் செய்யப்பட்டால் நன்று.

யாழ் பல்கலை விவசாய பீடம்.. பலவற்றை சாத்தியமாக்கலாம். ஆனால்..???! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விவசாயபீட dean  எமது நண்பர் ( சூரியகுமார் கிருஷ்ணபிள்ளை) அவருடன் இதைப்பற்றி கட்டாயம் கதைக்கிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இந்தக் குளிர் நாட்டில பப்பாளியும் முருங்கையும் (மிகவும் செழிப்பாக) வளர்த்தனான். ஆதவன் நியூஸ் காறன் அதைப் போடவேயில்லை 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Kapithan said:

நானும் இந்தக் குளிர் நாட்டில பப்பாளியும் முருங்கையும் (மிகவும் செழிப்பாக) வளர்த்தனான். ஆதவன் நியூஸ் காறன் அதைப் போடவேயில்லை 😜

நெல்லி மரத்தையே காட்டேல்லையாம்.....இவர் தக்காளி பப்பாளி எண்டு கடுப்பிலை திரியுறார் 🙃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள்.
எந்த எந்த மண்ணில் என்னென்ன தாவரங்கள் விழையும் என்பதை மக்கள் சுலபமாக கண்டறிய ஆய்வு கூடங்கள் உதவி செய்ய வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nedukkalapoovan said:

பச்சை அப்பிள் நுவரெலியா பகுதியில் நன்கு வளர்ந்து காய்க்கின்றன. நாங்கள் அங்கு சென்ற போது புடுங்கிச் சாப்பிட்டிருக்கிறோம்.

கிளிநொச்சியில் அப்பிள் என்பது புதுவிடயம் என்றாலும் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

மேலும் மலையக பழங்களான ஜம்பு.. லாவுலு.. ரம்புட்டான்.. மங்குஸ்தான்.. இவற்றை ஏலவே வடக்கில்.. பயிரிட்டு சிலர் சிறிதளவில் வெற்றியும் பெற்றிருக்கின்றனர். 

எதிர்காலத்தில்.. பசுமை வீடுகளை (Greenhouses) அமைத்து.. தேவையான பயிர்களை எல்லாம் பயிரிடக் கூடிய ஆய்வுகள் தாயகத்தில் செய்யப்பட்டால் நன்று.

யாழ் பல்கலை விவசாய பீடம்.. பலவற்றை சாத்தியமாக்கலாம். ஆனால்..???! 

மட்டக்களப்பில் இந்தவருடம் பீற்றுட் செய்கை பல கிலோகிராம்களை தொட்டது 4000 கிலோவுக்கு மேல் 

கரட் , கோவா முயற்சித்தார்கள் இந்த்வருட வெள்ளம் வந்து அதை நிலைகுலைய வைத்துவிட்டது 

 

இந்த வீடியோவில் ஆப்பிளை காட்டினாங்களா ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

மட்டக்களப்பில் இந்தவருடம் பீற்றுட் செய்கை பல கிலோகிராம்களை தொட்டது 4000 கிலோவுக்கு மேல் 

கரட் , கோவா முயற்சித்தார்கள் இந்த்வருட வெள்ளம் வந்து அதை நிலைகுலைய வைத்துவிட்டது 

இந்த வீடியோவில் ஆப்பிளை காட்டினாங்களா ???

யாழிலும் போர்காலத்தில் (விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக் காலத்தில்) இருந்து பீற்றூட்.. கரட்.. கோவா பயிற்செய்கை ஆரம்பக்கப்பட்டு விட்டது. இப்போதும் பலர் இதனை செய்கின்றனர். முன்னர் மலையக மரக்கறி லொறிகளை பார்த்திருந்த காலம் ஒன்று இல்லாமல் போனமையே அதற்கு காரணம்.

இந்த கொரோனா காலமும் மீண்டும் சிலவற்றை புதுப்பிக்கும்.

ஆம்.. பச்சை அப்பிளை காட்டினார்கள். பச்சை அப்பிள் பிரித்தானியாவில் காட்டு அப்பிள் போல் நிறைய நிற்கிறது.

இளஞ்சிவப்பு ஆப்பிள் தான் செய்கைக்கு அதிகம் பாவிப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nedukkalapoovan said:

யாழிலும் போர்காலத்தில் (விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக் காலத்தில்) இருந்து பீற்றூட்.. கரட்.. கோவா பயிற்செய்கை ஆரம்பக்கப்பட்டு விட்டது. இப்போதும் பலர் இதனை செய்கின்றனர். முன்னர் மலையக மரக்கறி லொறிகளை பார்த்திருந்த காலம் ஒன்று இல்லாமல் போனமையே அதற்கு காரணம்.

இந்த கொரோனா காலமும் மீண்டும் சிலவற்றை புதுப்பிக்கும்.

ஆம்.. பச்சை அப்பிளை காட்டினார்கள். பச்சை அப்பிள் பிரித்தானியாவில் காட்டு அப்பிள் போல் நிறைய நிற்கிறது.

இளஞ்சிவப்பு ஆப்பிள் தான் செய்கைக்கு அதிகம் பாவிப்பார்கள்.

நுவரேலிய பச்சை அப்பிள் நல்லாத்தான் இருக்கும்  இங்கு அதிக நாட்கள் கிடப்பில் இருந்து வருவதால் என்னவோ சில பழங்கள் அதன் உன்மையான சுவையில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நுவரேலிய பச்சை அப்பிள் நல்லாத்தான் இருக்கும்  இங்கு அதிக நாட்கள் கிடப்பில் இருந்து வருவதால் என்னவோ சில பழங்கள் அதன் உன்மையான சுவையில்லை 

ஆம் அவை சுவை. நாங்க பச்சை ஆப்பிளை.. உப்பும் மிளகாய் தூளும் போட்டு சாப்பிடுவதுண்டு.

மேலும்.. அன்னாசிக்கறி சமைப்பது போல்.. சமைத்தால்.. மாசிக்கருவாடு எல்லாம் போட்டு.. பிரியாணியுடன் சாப்பிட மிகச் சுவையாக இருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, nedukkalapoovan said:

ஆம் அவை சுவை. நாங்க பச்சை ஆப்பிளை.. உப்பும் மிளகாய் தூளும் போட்டு சாப்பிடுவதுண்டு.

மேலும்.. அன்னாசிக்கறி சமைப்பது போல்.. சமைத்தால்.. மாசிக்கருவாடு எல்லாம் போட்டு.. பிரியாணியுடன் சாப்பிட மிகச் சுவையாக இருக்கும். 

நெடுக்ஸ்.... "அன்னாசிக்கறி"  எப்படி சமைப்பது என்று,
"நாவூற வாயூற" பகுதியில்... ஒரு சமையல் குறிப்பை, பதிந்து விடுங்களேன்.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, தமிழ் சிறி said:

நெடுக்ஸ்.... "அன்னாசிக்கறி"  எப்படி சமைப்பது என்று,
"நாவூற வாயூற" பகுதியில்... ஒரு சமையல் குறிப்பை, பதிந்து விடுங்களேன்.  :grin:

வீட்டில் அப்பப்ப செய்வதுண்டு....மரக்கறியாகவும் கிழங்குடன் சேர்த்து செய்யலாம்......நெடுக்ஸ் சொல்லியதுபோல் பச்சை ஆப்பிள் மிளகாய்த்தூள் உப்புடன் சாப்பிட சுவையாக இருக்கும்.இங்கு காய் மாங்காய் கிடையாது.....!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, தமிழ் சிறி said:

நெடுக்ஸ்.... "அன்னாசிக்கறி"  எப்படி சமைப்பது என்று,
"நாவூற வாயூற" பகுதியில்... ஒரு சமையல் குறிப்பை, பதிந்து விடுங்களேன்.  :grin:

நம்ம பசங்க வழி..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, தமிழ் சிறி said:

நெடுக்ஸ்.... "அன்னாசிக்கறி"  எப்படி சமைப்பது என்று,
"நாவூற வாயூற" பகுதியில்... ஒரு சமையல் குறிப்பை, பதிந்து விடுங்களேன்.  :grin:

சிறித்தம்பி அன்னாசிக்காய்க்கறி சமைக்கிறதை வீடியோவாய் எடுத்துப்போடோணும்...😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நுவரேலிய பச்சை அப்பிள் நல்லாத்தான் இருக்கும்  இங்கு அதிக நாட்கள் கிடப்பில் இருந்து வருவதால் என்னவோ சில பழங்கள் அதன் உன்மையான சுவையில்லை 

எந்தவொரு பழமாயினும், கடிபடும் தன்மை (மாங்காய் போல) உள்ளவரைக்கும் நருகல்  பொருகலான மிளகு தூளும், உப்பும் கலவையை plate இல் மெலிதான படையாக வைத்து,  பட்டும் படாத அளவில் தொட்டு உண்ணுவது மிகவும் ருசி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
    • அதைத்தானே ராசா  நானும் சொன்னேன் அதே கம்பி தான்...
    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.