Jump to content

கொரோனா வைரஸால் 5 விதமான தோல் பாதிப்புகள் - குழப்பத்தில் மருத்துவர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா வைரஸால் 5 விதமான தோல் பாதிப்புகள் - குழப்பத்தில் மருத்துவர்கள்

சியோ கிளீன்மேன் பிபிசி செய்தியாளர் 
Woman with syringePA Media

கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு ஐந்து விதமான தோல் பிரச்சனை மற்றும் காலில் உள்ள விரல்களில் அலர்ஜி போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது என ஸ்பெயினில் உள்ள மருத்துவ குழு ஒரு ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளது. 

பெரும்பாலும் வயது குறைவான கொரோனா நோயாளிகளுக்கே இந்த தோல் பிரச்சனை ஏற்படுகிறது என்றும் கூறப்படுகிறது. மேலும் பல நாட்களுக்கு இந்த பாத விரல்களில் ஏற்பட்ட ஒவ்வாமையும், தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளும் நீடிக்கின்றன என்றும் கூறப்படுகிறது. 

சின்னம்மை தொற்று உடலில் சிறிய புண்ணை ஏற்படுத்துவது போல, வைரஸ் பாதிப்பால் தோல் பிரச்சனை ஏற்படுவது எதார்த்தம்தான் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் கொரோனா பாதிப்பால் பல விதமான தோல் பாதிப்புகள் ஏற்படுவதே மருத்துவர்களை அச்சமடைய செய்கிறது. 

கொரோனா வைரஸ் அறிகுறிகள் பட்டியலில் தோல் பாதிப்புகள் இன்னும் சேர்க்கப்படவில்லை. 

கோவிட் கால் விரல் பாதிப்பு குறித்து பல ஆய்வு அறிக்கைகள் வெளிவந்துள்ளன. கொரோனா வைரஸுக்கான வேறு சில அறிகுறிகள் இல்லாதபோதும் கால் விரலில் ஏற்படும் தோல் பாதிப்பு மூலம் கொரோனா இருப்பது கண்டறியப்பட்ட நோயாளிகளும் உள்ளனர். 

கொரோனாவால் கால் விரல்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறதா? குழப்பத்தில் மருத்துவர்கள்COVID-PIEL STUDY

இந்த ஆய்வில் ஈடுப்பட்ட ஆராய்ச்சியாளர் இக்னாசியோ கார்ச்சியா டோவல் கூறுகையில், ''பெரும்பாலும் கொரோனாவால் ஏற்படும் கால் விரல் பாதிப்பு மக்குலோபாபுல்ஸ் என்று அழைக்கப்படும் ஒரு வித தோல் பிரச்சனை. சிறியதாக, தட்டையாக சிவப்பு நிறத்தில் தோல் புடைத்து காணப்படும். இது உடலில் சில பகுதிகளில் தோன்றும். பெரும்பாலும் கால் விரல்கள் அல்லது கைகளில் இந்த பாதிப்பு ஏற்படும். 

பொதுவாக இந்த விரல் பாதிப்பு சுவாசப் பிரச்சனை ஏற்பட்ட பின்னர் தான் ஏற்படும். எனவே கால் விரல் பாதிப்பிற்கு தேவையான சிகிச்சை அளிப்பது அவ்வளவு நல்லதல்ல.

இந்த ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட அனைத்து நோயாளிகளும் ஏற்கனவே சுவாசப் பிரச்சனைகளுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்கள்.

பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் டெர்மடாலஜி என்ற சஞ்சிகையில் இந்த வாரம் கொரோனாவால் ஏற்படுகிற தோல் பாதிப்பு குறித்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.

ஸ்பெயினில் இந்த வாரம் தோல் பாதிப்புகளுடன் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்ற கொரோனா நோயாளிகளின் விவரங்களையும் பெயர்ப் பட்டியலையும் வழங்கக்கோரி அங்குள்ள அனைத்து தோல் மருத்துவர்களிடமும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் அளித்த விவரங்களின்படி 375 பேர் தோல் பாதிப்புடன் மருத்துவர்களை நாடியுள்ளனர்.

கொரோனாவால் கால் விரல்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறதா? குழப்பத்தில் மருத்துவர்கள்COVID-PIEL STUDY கொரோனாவால் கால் விரல்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறதா? குழப்பத்தில் மருத்துவர்கள்

5 விதமான தோல் பிரச்சனைகள்

1. கை மற்றும் பாதத்தில் சிறிய புண்கள். இந்த புண்களால் வலி மற்றும் அரிப்பும் சிலருக்கு ஏற்படும். பெரும்பாலும் வயது குறைவான கோவிட் 19 நோயாளிகளே இந்த வகையான தோல் பிரச்சனைகளுடன் வந்துள்ளனர். சுமாராக 12 நாட்களுக்கு இந்த பாதிப்பு நீடிக்கிறது. லேசான தொற்றுள்ளவர்களுக்கு இது வருகிறு. 19% நோயாளிகளுக்கு இந்த பாதிப்பு இருக்கிறது. 

2. கை, கால்களில் சிறிய கொப்புளங்களுடனும் அவ்வப்போது அரிப்பு ஏற்பட்டும் சிலர் வந்துள்ளனர். நடுத்தர வயதுடைய சிலர் 10 நாட்களாக இந்த வகையான கொப்புளங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸுக்கான அறிகுறிகள் ஏற்படும் முன்பே கொப்புளங்கள் தோன்றியுள்ளது. 9% சதவீதம் பேருக்கு இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது. 

3. தொட்டால் எரிச்சலூட்டுகிற அரிப்பு, பெரும்பாலும் இளஞ்சிவப்பு அல்லது வெள்ளை நிறத்தில் தோற்றமளிக்கும் தோல் பாதிப்பு. பெரும்பாலும் உள்ளங்கை அல்லது உடலின் பிற பகுதிகளில் இந்த வகை தோல் பாதிப்பு ஏற்படுகிறது. 

4. மக்குலோபாபுலெஸ் - சிறிய, தட்டையான மற்றும் சிவப்பு நிறத்தில் தோல் தண்டிப்பாக தோன்றும். 47% பேருக்கு இந்த வகையான தோல் பாதிப்பே இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸுக்கான மற்ற அறிகுறிகள் தோன்றிய அதே நேரத்தில் இந்த தோல் பாதிப்பும் இருந்ததாக நோயாளிகள் குறிப்பிடுகின்றனர். இந்த வகையான தோல் பிரச்சனைகள் 7 நாட்களுக்கு நீடித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

5. நெக்ரோசிஸ் என்று அழைக்கப்படும் லிவிடோ என்ற நோய் பாதிப்பு 6 சதவீத கொரோனா நோயாளிகளுக்கு இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. தோலில் சிவப்பு அல்லது நீல நிறத்தில் வலை வலையாக தோற்றம் ஏற்படும். மோசமான இரத்த ஓட்டத்திற்கான அறிகுறியாக இந்த தோல் பாதிப்பு கருதப்படுகிறது. தீவிர கொரோனா பாதிப்பு உள்ள வயது முதிர்ந்த நோயாளிகளுக்கே இந்த வகையான தோல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பல விதமான தோல் பாதிப்புகளை கொரோனா வைரஸ் ஏற்படுத்துகிறது என மருத்துவர்கள் விளக்கி கூறினாலும், உண்மையில் நமக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் கொரோனாவிற்கான அறிகுறியா என்பதை மருத்துவர்களே கண்டறிந்து உறுதிப்படுத்த முடியும். 

மக்கள் தங்களுக்கு ஏற்படக்கூடிய தோல் பாதிப்புகளை தாங்களே கண்டறிந்து தீர்வு காணுவதை நோக்கமாக கொண்டு இந்த ஆய்வு நடத்தப்படவில்லை. 

மாறாக கொரோனா பாதிப்புகள் குறித்த முழுமையான தகவல்களையும் அதன் தீவிர தன்மையையும் மக்கள் புரிந்து கொள்வதற்காகவே இந்த ஆய்வு குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன என பிரிட்டன் மருத்துவர் ரூத் முற்ஃபி தெரிவித்தார். 

நிமோனியா போன்ற நோய் பாதிப்புகளின்போதும் தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுவது இயல்பு தான் என சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழக தலைவர் மைக்கேல் தெரிவித்துள்ளார். 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கும் தோல் அரிப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இல்லை. ஏன் சிலருக்கு மட்டும் தோல் பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

அமெரிக்காவின் தோல் சம்பந்தப்பட்ட மருத்துவ கல்வி நிறுவனமும், எத்தனை கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு தோல் பாதிப்புகள் இருக்கின்றன என்ற எண்ணிக்கை விவரங்களை சேகரித்து வருகிறது.

 

https://www.bbc.com/tamil/science-52533123

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கொரோனா வந்து.... மருத்துவர்களால் எந்த ஒரு இறுதியான முடிவுக்கும்.
வர முடியாமல்.. திணற  வைக்கின்றது.  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.