Jump to content

உண்மையிலேயே காலப்பயணம் செய்யமுடியுமா... இயற்பியலாளர்கள் சொல்வதென்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலேயே காலப்பயணம் செய்யமுடியுமா... இயற்பியலாளர்கள் சொல்வதென்ன?

Representational Image
 

இயற்பியல் விதிகளைப் பல்வேறு கோணங்களில் கோட்பாட்டு இயற்பியலாளர்கள் ஆய்வு செய்துகொண்டிருக்கின்றனர். நாம் காலப்பயணம் செய்வதை எது தடுத்துக் கொண்டிருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பதில் அவர்கள் பல ஆண்டுகளாகத் தீவிரமாகச் செயல்படுகின்றனர்.

கடந்த காலம் என்பது நாம் பயணித்துவிட்டு வரக்கூடிய மற்றுமொரு நாடுதான். ஆனால் என்ன, அங்கு பயணிப்பதற்கான வாகனம்தான் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பார்கள் காலவெளி (Time and Space) குறித்து ஆய்வு செய்யும் இயற்பியலாளர்கள்.

நடைமுறையில் பயணம் செய்வதாக இருந்தால், அதற்குப் பணம் வேண்டும். வெளிநாடுகளுக்குப் பயணம் செய்ய பாஸ்போர்ட், விசா போன்றவை வேண்டும். காலத்தைக் கடந்து பயணம்செய்ய, மிகவும் கடுமையான, நுட்பமான இயற்பியல் விதிகளை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். பேக் டு தி ஃபியூச்சர் என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் வருகின்ற டாக் பிரவுன் என்ற விஞ்ஞானி கதாபாத்திரம் அந்தப் படத்தைப் பார்த்த அனைவருக்குமே நினைவிருக்கும். அவரைப் போன்ற நிஜ உலக விஞ்ஞானிகள் பலரும் அவரைப் போலவே காலப் பயணத்தைச் சாத்தியமாக்கத் தங்கள் வாழ்வையே அர்ப்பணித்து முயன்று வருகிறார்கள். அவர்களில் ஒருவர்தான் ரான் மால்லெட்.

 

தன்னுடைய இளமைக்காலத்தை முழுக்க முழுக்கக் காலப்பயணத்தைச் சாத்தியமாக்கும் முயற்சிக்காகவே அர்ப்பணித்துவிட்டவர். அவர் செய்த ஆராய்ச்சிகள் அவருடைய வாழ்நாளில் காலப்பயணத்தைச் சாத்தியமாக்காது. இருப்பினும், என்றாவது ஒருநாள் அது சாத்தியப்படக்கூடும் என்ற நம்பிக்கையோடு அதற்குரிய விதையை விதைத்துக் கொண்டிருக்கிறார். வாழ்வில் ஒருவர் தன் லட்சியத்தை நோக்கி வெறி பிடித்ததைப் போல் ஓடுகிறார் என்றால், அதற்குப் பின்புலத்தில் ஏதாவதோர் உணர்வுபூர்வமான காரணம் நிச்சயம் இருக்கும். அப்படி ரான் மால்லெட்டுடைய வாழ்வைப் புரட்டிப் போட்டது, அவருடைய தந்தையின் மரணம். அவருடைய தந்தை மாரடைப்பு வந்து மரணிக்கையில் மால்லெட்டுக்கு 10 வயதுதான் இருக்கும். அவருடைய வாழ்வையே புரட்டிப் போட்டு, விஞ்ஞானத்தின் பக்கமாகத் திருப்பிவிட்ட தருணமும் அதுதான்.

 

 

ஒளி

ளி
அதுகுறித்து சி.என்.என் டிராவலுக்கு அவரளித்த பேட்டியில், ``எனக்கு அவரே மையமாகத் திகழ்ந்தார். அவரைச் சுற்றியே சூரியன் உதித்தது, மறைந்தது. இத்தனை ஆண்டுகள் கழித்து, இப்போதும்கூட, அவர் இல்லையென்பதை ஏற்றுக்கொள்ள மனதின் ஏதோபவொரு மூலையில் ஒருவித மறுப்பு இருந்துகொண்டேயிருக்கிறது" என்று கூறியுள்ளார். அவருடைய இத்தனை ஆண்டுக்கால காலப்பயண ஆராய்ச்சிகள் அனைத்துமே, தன் தந்தையின் காலகட்டத்துக்கே மீண்டும் சென்றுவிட முடியாதா என்ற அவருடைய பாசத்தின் அடையாளம்தான்.

மால்லெட்டின் தந்தை டிவி ரிப்பேர் செய்பவராகப் பணிபுரிந்துகொண்டிருந்தார். தன் மகனுக்கு வாசிப்பின் முக்கியத்துவதைச் சிறுவயதிலேயே உணர்த்திய அவர், அறிவியல் புனைகதைளின் மீதான மால்லெட்டின் ஆர்வத்தை வளர்த்தெடுத்தார். அப்படி வளர்க்கப்பட்ட ஆர்வத்தினால், தந்தை இறந்து ஓராண்டு கழித்து `தி டைம் மிஷின்' என்ற அறிவியல் புனைகதையை மால்லெட் படிக்க நேர்ந்தது. ஹெச்.ஜி.வெல்ஸ் எழுதிய அந்தப் புத்தகம்தான் அவருடைய வாழ்வையே புரட்டிப் போட்டது. மீண்டும் தன் தந்தையைக் காண முடியுமென்ற நம்பிக்கையை அவர் மனதில் விதைத்ததோடு, இன்று அவரை வான் அறிவியலாளராகவும் (Astrophysicist) வாழ்வில் உயர வைத்துள்ளது.

 

 

பால்வீதி மண்டலம்

பால்வீதி மண்டலம்
தற்போது 74 வயதாகும் மால்லெட், கன்னடிகட் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராகப் பணிபுரிகிறார். தன்னுடைய வாழ்நாள் முழுவதும், கருந்துளைகள் மற்றும் ஐன்ஸ்டீனின் சார்பியல் விதிகளை ஆய்வு செய்தார். காலப்பயண இயந்திரத்தைக் கண்டுபிடிக்கும் பாதையில் அவர் இன்னும் வெகுதூரம் பயணிக்க வேண்டியுள்ளது. அவர் தன்னுடைய இலக்கை அடையவே முடியாது என்றும் சிலர் வாதிடுகிறார்கள். ஆனால், அவரைப் போலவே காலப்பயண இயந்திரத்தைக் கண்டுபிடிக்கும் பயணத்தில் ஈடுபட்டிருக்கும் இன்னும் பலர் அதற்கு வாய்ப்பிருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில் பேசுகிறார்கள்.

 

ஜெனீவா பல்கலைக்கழகத்தில் பணிபுரிகின்ற நிக்கோலஸ் ஜிசின் என்ற இயற்பியலாளர் சில வாரங்களுக்கு முன் ஒர் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார். கணிதவியலையும் இயற்பியலையும் இணைத்து, காலப்பயணம் மீதான வேறொரு விதமான பார்வையில் அமைந்த அவருடைய தொடர் கட்டுரைகளின் ஒரு பகுதிதான் இந்த ஆய்வுக்கட்டுரை. ஜிசினுடைய முயற்சிகள், நவீன கால குவான்டம் தியரிகளில் இருக்கும் பிழைகளை, டச்சு கணிதவியலாளர் லுயிட்சென் எக்பெர்டஸ் ஜன் பிரௌவெரின் கணித விதிகளின் உதவியோடு சரிசெய்யும் வகையில் அமைந்துள்ளது. இருபதாம் நூற்றாண்டில் அந்தக் கணிதவியலாளர் முன்வைத்த தேற்றங்களைப் பயன்படுத்தி, காலப்பயணம் செய்ய முடியும் என்கிறார் ஜிசின். இப்படிப் பல இயற்பியலாளர்கள் பல்வேறு நுட்பமான வழிமுறைகளை, இயற்பியல் விதிகளை காலப்பயணம் செய்ய முன்வைக்கின்றனர். ஆனால், உண்மையிலேயே காலப்பயணம் சாத்தியமா! நவீனகால இயற்பியல் விதிகளின் அடிப்படை என்ன சொல்கின்றது, மனிதர்கள் காலத்தைக் கடந்து பயணிக்க முடியுமா?

இந்தக் கேள்விகளுக்கான விடைகளைத் தெரிந்துகொள்ள, நாம் இதைக் கொஞ்சம் உள்ளார்ந்து அலச வேண்டும். காலத்திற்குள் பயணம் செய்வது என்றால் என்ன? நம் தினசரி நேரத்தைப் பொறுத்து, இந்தக் கேள்வியை இரண்டு பாகங்களாகப் பிரிக்கலாம். மனித ஆயுளைக் கணக்கில் கொண்டு பார்க்கையில், நம்மால் அதைக் கடந்து எதிர்காலத்திற்குள் பயணிக்க முடியுமா? நாம் வாழ்ந்து முடித்து வந்துவிட்ட கடந்த காலத்திற்குள் பயணிக்க முடியுமா?

தற்போது நமக்கிருக்கும் அடிப்படை இயற்பியல் விதிகளைப் புரிந்திருந்தால், முதல் கேள்விக்கு, `முடியும்' என்ற பதிலையும் இரண்டாவது கேள்விக்கு, `வாய்ப்புகள் உண்டு' என்ற பதிலையும் கொடுப்பீர்கள்.

ஐன்ஸ்டீனின் சிறப்பு சார்பியல் விதிகளின்படி, எதிர்காலத்துக்குள் பயணிக்கக் கால நீடிப்பு (time-dilation effect) விளைவுகளைப் பயன்படுத்தலாம். ஒரு பொருள் நகர்கின்ற வேகம் கூடக்கூட, அது கழிக்கும் நேரத்தின் நீளம் அதிகரிக்கும். பொருளின் வேகத்தை ஒளியின் வேகத்தோடு ஒப்பிட்டுப் பேசலாம். அதாவது ஒளியின் வேகத்துக்கு நிகராக ஒரு பொருளின் வேகம் கூடிக்கொண்டே போகும்போது, அந்தப் பொருள் கழிக்கின்ற கால அளவின் நீளம் அதிகமாக இருக்கும். அதாவது, ஒரு நொடியின் நீளம் நிலையாக இருக்கும் பொருளைவிட, நகரும் பொருளுக்கு அதிகமாக இருக்கும். இதன்படி, ஒளியின் வேகத்துக்கு நிகராக நகரும் பொருளுக்கு நேரத்தின் நீளம் மிகக் குறைவாகவே இருக்கும். உயிரியல் ரீதியாகச் சொல்லப்போனால், காலம் போகப் போக நமக்கு வயதாவதும் கூட இதில் அடக்கம். நாம் ஒளியின் வேகத்தில் பயணிக்கையில், நேரத்தைவிட வேகமாக நாம் முன்னால் பயணிப்போம். அதன்மூலம் நம்மால், வயதே ஆகாமல் எதிர்காலத்துக்குள் பயணிக்க முடியும்.

 

காலப்பயணம்

காலப்பயணம்
ஒருவர், பூமியிலிருந்து விண்வெளிப் பயணத்தை மேற்கொள்கிறார். பூமியின் ஈர்ப்பு விசைக்குச் சமமான வேகத்தை உற்பத்தி செய்யக்கூடியது அவர் பயணிக்கும் விண்வெளிக் கப்பல். அந்த வேகத்தில் ஒருவர் தன் பயணத்தைத் தொடங்கினால், அவர் ஓராண்டில் ஒளியின் வேகத்துக்கு நிகரான வேகத்தை அடைந்துவிட முடியும். பூமியின் ஈர்ப்புவிசையைவிட அதிக வேகத்தில் செல்வதால், அந்த விண்வெளிக் கப்பலில் காலம் மிக மிக மெதுவாக நகரும். இந்த வேகத்தில் செல்லும்போது, நம்முடைய பால்வீதி மண்டலத்தின் மத்தியப் பகுதிக்குச் சென்றுவிட்டு, மீண்டும் பூமிக்குத் திரும்பி வர 40 ஆண்டுகள் எடுக்கும். நம்முடைய பூமியிலிருந்து பால்வீதி மண்டலத்தின் மையப்பகுதிக்கு இடையே இருக்கும் தொலைவு 60,000 ஒளி ஆண்டுகள். ஒளியின் வேகத்தில் பயணிக்கும்போது, அந்த 60,000 ஒளி ஆண்டுகளைக் கடக்க அவருக்கு 40 ஆண்டுகளே போதுமானது. இந்தக் கப்பலின் நேரப்படி, 40 ஆண்டுகளுக்கு முன்னர் ஏறிய விண்வெளி வீரருக்கு 25 வயது என்றால், அவர் திரும்பி வரும்போது அவருக்கு 65 வயது ஆகியிருக்கும். ஆனால், பூமியில் 60,000 ஆண்டுகள் கடந்திருக்கும்.

(குறிப்பு: ஒளி ஆண்டு என்பது மாதம், ஆண்டு என்பதைப் போல கால அளவு கிடையாது. ஓராண்டிற்கு ஒளியின் வேகத்தில் பயணித்தால், நாம் சென்றடையக்கூடிய தூரத்தைத்தான் ஓர் ஒளி ஆண்டு என்று கணக்கிடுகிறோம். அதன்படி, ஒளி ஆண்டு என்பது மீட்டர், கிலோமீட்டர் என்பது போல் தூரத்தைக் கணக்கிடும் அளவுகோல்)

இதைத்தான் காலப்பயணம் என்கிறோம். ஒரு பொருள் நகரும் வேகத்துக்கு ஏற்ப, அந்தப் பொருளின் காலமும் மாறும். பொருள் வேகமாக நகர்ந்தால், நிலையான பொருளின் காலம் நகரும் வேகத்தைவிட, வேகமாக நகரும் பொருளிற்கான காலத்தின் வேகம் குறையும். அந்த வேகம் ஒளியைவிட வேகமாக இருந்தால், காலம் நகரும் வேகத்தைவிட வேகமாகப் பொருள் நகர்ந்து எதிர்காலத்திற்குள் அதனால் பயணிக்க முடியும் என்பது இயற்பியல் விதி. அப்படிப்பட்ட பயணம்தான், மேலே கூறிய பால்வீதி மண்டலப் பயணம்.

விண்வெளிக் கப்பல்
ஆனால், அத்தகைய பயணம் பொறியியல் ரீதியாகப் பிரச்னைக்குரியதாக இருக்கின்றது. அவ்வளவு வேகமான பயணத்திற்குத் தேவைப்படும் ஆற்றலில் சிக்கல் ஏற்படுகின்றது. இந்தப் பயணத்திற்குத் தேவைப்படும் ஆற்றலை உண்டாக்கும் அளவுக்குப் பெரிய நிறை தேவைப்படுகிறது. அதற்குக் கிட்டத்தட்ட நம் பூமியின் நிறைக்கு நிகரான நிறை வேண்டும். தற்போதுள்ள இயற்பியல் விதிகளின்படி, இந்த ஆற்றலை உண்டாக்கக்கூடிய, இவ்வளவு பெரிய நிறையை வைத்துச் செய்யக்கூடிய பயணம் சாத்தியமில்லை என்று கூறுகிறார் இந்தத் துறையில் பல ஆண்டுகளாக ஆய்வு செய்துகொண்டிருக்கும் வில்லியம். ஏ. ஹிஸ்காக்.

சரி, கடந்த காலத்திற்குள் பயணிப்பது சாத்தியமா? பொதுவாக, மக்கள் இதைத்தான் காலப்பயணம் என்றும் கருதுகின்றனர். ஆனால், இது கொஞ்சம் உறுதியற்ற கருத்தாகவே நிலவிவருகின்றது. ஐன்ஸ்டீனின் சிறப்பு சார்பியல் சமன்பாடுகளுக்குப் பல்வேறு தீர்வுகள் கிடைத்துள்ளன. அதில் பலவும், காலக்கோட்டில் நாம் நம்மையோ அல்லது நம் பாட்டியையோ எதிர்கொள்ள முடியும் என்பதைக் கூறுகின்றன. அதாவது, கடந்த காலத்திற்குள் பயணிப்பது சாத்தியம்தான் என்றும் அந்த விதிகள் கூறுகின்றன.

பிரச்னை என்னவென்றால், இவற்றை நிஜ உலகிலும் செய்துகாட்ட முடியும் என்பதற்கான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை. இருப்பினும், கடந்த சில பத்தாண்டுகளாகக் கோட்பாட்டு இயற்பியலாளர்கள் (Theoritical Physicists) இதை நடைமுறையில் செய்வதற்கான கோட்பாடு சார்ந்த வேலைகளைச் செய்துகொண்டிருக்கிறார்கள். அதாவது, இருக்கின்ற ஆற்றலை வைத்தே, காலவெளியின் வடிவியலைப் (Space time geometry) புரிந்துகொள்ள முயல்கிறார்கள். அது நடந்துவிட்டால் காலத்தைக் கடந்து பயணிப்பதற்கான புதிய பாதையையும் அதில் பயணிப்பதற்கான கால இயந்திரத்தையும் கண்டுபிடிக்க முடியும்.

வார்ம்ஹோலின் வழியே நாம் பயணிக்கையில் நம்மால் கடந்த காலத்திற்குள் செல்ல முடியும்
சரி, காலப் பயணத்திற்கான பாதையையும் அதில் பயணிக்கத் தேவையான கால இயந்திரத்தையும் வடிவமைப்பது எப்படி?

காலப்பயணம் செய்வதற்குரிய எளிமையான பாதையாகத் தற்போதைய கோட்பாட்டு இயற்பியலாளர்கள் கருதுவது, வார்ம்ஹோல் (Wormhole). காலத்திற்கும் (time) வெளிக்கும் (Space) இடையேயுள்ள ஓர் இணைப்புதான் இந்த வார்ம்ஹோல். இது ஒரு குகை (tunnel) வழிப் பாதையைப் போலிருக்கும். இதை ஒருவித அனுமானப் பாதை என்று கூடச் சொல்லலாம். இந்த அனுமானப் பாதையின் ஒருபுறத்தில் நமக்குத் தேவைப்படுகின்ற கணிசமான வேகத்தோடு பயணத்தைத் தொடங்கினால், நாம் அதன் அடுத்த பக்கத்திற்குச் சென்றுவிட முடியும். இந்த வார்ம்ஹோலின் வழியே நாம் பயணிக்கையில் நம்மால் கடந்த காலத்திற்குள் செல்ல முடியும் என்கின்றனர் இயற்பியலாளர்கள்.

சரி, எளிமையாக சொல்லியாயிற்று. இந்த அனுமானப் பாதை எங்கே உள்ளது? அதுவே அனுமானப் பாதையாயிற்றே, அதை எப்படிக் கண்டுபிடிப்பது?

கடந்த பத்து ஆண்டுகளில், இது குறித்து நிறைய ஆய்வுகள் நடந்துள்ளன. ஆனால், மனிதர்களோ வாகனமோ நுழையும் அளவுக்குப் பெரிய வார்ம் ஹோலை எப்படி உருவாக்குவது என்பது குறித்து நமக்குத் தெரிந்தது மிகவும் குறைவுதான். குவான்டம் ஈர்ப்புவிசைக்கான (Theories of Quantum gravity) சில இயற்பியல் விதிகள், ஒரு எலக்ட்ரானைவிட பில்லியன் பில்லியன் மடங்கு சிறிய அளவில் (10^ -33 சென்டிமீட்டர்) நுரை வடிவில் இந்த அனுமானப் பாதைகள் இருப்பதாகக் கூறுகின்றன.

 

 

வார்ம்ஹோல் (Wormhole)

வார்ம்ஹோல் (Wormhole)
ரான் மால்லெட் போன்ற சில இயற்பியலாளர்கள், நிஜத்திலுள்ள அத்தகைய நுண்ணிய வார்ம்ஹோல்களில் ஒன்றைக் கண்டுபிடித்து, அதை நாம் நுழையும் அளவுக்குப் பெரிதுபடுத்தினால் அதன்மூலம் கடந்த காலத்திற்குள் பயணிக்க முடியும் என்று கருதுகின்றனர். ஆனால், இவையெல்லாமே தற்போது கருதுகோள்களாகத்தான் இருக்கின்றன.

ஒருவேளை வார்ம் ஹோலைக் காலப்பயணப் பாதையாக நம்மால் மாற்ற முடியும் என்றாலும்கூட, இயற்கை அதற்கு அனுமதிக்குமா என்ற கேள்வியை முன்வைத்தார் ஸ்டீபன் ஹாக்கிங். அதற்கு அவருடைய அனுமானம், இயற்கை அனுமதிக்காது என்பதுதான். இது அவருடைய ஊகம்தான், இன்னும் நமக்கு இயற்கை அனுமதிக்குமா இல்லையா என்பது நூறு சதவிகிதம் உறுதியாகத் தெரியவில்லை.

இயற்பியல் விதிகளைப் பல்வேறு கோணங்களில் கோட்பாட்டு இயற்பியலாளர்கள் ஆய்வு செய்துகொண்டிருக்கின்றனர். நாம் காலப்பயணம் செய்வதை எது தடுத்துக் கொண்டிருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பதில் அவர்கள் பல ஆண்டுகளாகத் தீவிரமாகச் செயல்படுகின்றனர். 1982-ம் ஆண்டு, டிபோரா ஏ.கொன்கோவ்ஸ்கி என்ற ஆய்வாளரும் ஹிஸ்காக்கும் காலப்பயணத்திற்கு முயலும்போது, நிறையற்ற வெற்றிடத்தால் அந்த இடம் பிணைக்கப்பட்டு, காலப்பயணம் தடுக்கப்படுவதைக் கண்டறிந்தனர். பின்னர், கால்டெக் பல்கலைக்கழகத்தில் ஹாக்கிங்கும் கிப்.எஸ். தோர்னும் காலப்பயணத்தைத் தடுக்கும் அளவுக்கு காலவெளியின் வடிவியலில் தொடர்ந்து அதிகரிக்கும் ஆற்றல், எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதைக் கண்டனர்.

காலப்பயணம்
சமீபத்தில் ஆய்வு செய்த மொன்டானா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுனேஃபுமி டனாகா (Tsunefumi Tanaka) என்ற ஆய்வாளரும் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டேவிட் பௌல்வேரும் (David Boulware) வெற்றிடத்திலுள்ள எலக்ட்ரான் போன்ற நிறையின் ஆற்றல், நிறையற்ற வெற்றிடத்தைப் போல காலப்பயணத்தைத் தடுப்பதில்லை என்பதைக் கண்டறிந்தனர். இந்தக் கண்டுபிடிப்பு, துகள் இயற்பியலில் (Particle physics) காலப்பயணம் செய்வதற்கான வாய்ப்பு இருப்பதை உணர்த்தியுள்ளது.

கடந்த இருபது ஆண்டுக்கால இயற்பியல் ஆராய்ச்சிகளில் நமக்குத் தெரிந்துள்ளது என்னவென்றால், நாம் இதுவரை கண்டுபிடித்துள்ள இயற்பியல் விதிகள் நம்மைக் காலப்பயணம் செய்யவிடாமல் தடுக்கவில்லை. அதற்கான வாய்ப்புகளை வழங்குகின்றன. அதை எப்படிப் பயன்படுத்துவது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டிய வேலைதான் பாக்கி. எதிர்காலத்தில் அதுவும் சாத்தியப்படலாம். அப்போது, நம் பிள்ளைகள் நம் இளமைப்பருவத்தைக் காண கடந்த காலத்திற்கு வரலாம். நீங்களும் உங்கள் எதிர்காலச் சந்ததிகளை முன்னமே காணலாம்.

https://www.vikatan.com/science/explained/is-it-true-that-time-travel-is-possible-what-science-says

 

 

 

 

 

 

 

 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.