Jump to content

ரஜினியின் உதவி: தயாரிப்பாளர்கள் மத்தியில் மோதல்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ரஜினியின் உதவி: தயாரிப்பாளர்கள் மத்தியில் மோதல்!

spacer.png

 

ரஜினி எங்கு வந்தாலும், பேசினாலும் அது விவாதப் பொருளாக மாறி முக்கியத்துவம் பெற்று விடுகிறது.

அது போன்று தான் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு ரஜினிகாந்த் தரப்பில் வழங்கப்படுவதாக இருந்த அரிசி - மளிகை சாமான்கள் விவகாரமாகி வீதிக்கு வந்துவிட்டது. இதனைத் தொலைக்காட்சிகள் தங்கள் செய்தி பசிக்கு இரையாக்கி ஒரே நேரத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் தங்கள் குடும்ப தேவைக்கு அரிசி பருப்பு கூட வாங்க முடியாத வறுமையில் இருப்பதான தோற்றத்தை உலகம் முழுமையும் கொண்டு சேர்த்துள்ளது.

 

கொரோனா காரணமாக வேலையின்றி வீட்டில் முடங்கிவிட்ட தொழிலாளர்களுக்கு உதவி செய்ய வசதி படைத்த திரைத் துறையினரிடம் உதவி கேட்டவர் ஃபெப்சி அமைப்பின் தலைவர் R.K.செல்வமணி. தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் பொருளுதவியும், நிதியுதவியும் செய்தனர். ரஜினிகாந்த் 50 லட்சம் நிதி வழங்கியதை ஃபெப்சி அமைப்பு தான் பொதுவெளியில் அறிவித்தது. ரஜினி அறிவிக்கவில்லை.

ஃபெப்சி அமைப்பைத் தொடர்ந்து தென்னிந்திய நடிகர் சங்கம், சின்னத்திரை கலைஞர்கள் சங்கம், திரைப்பட இயக்குநர்கள் சங்கம் இவை மூன்றும் நிவாரண உதவி கேட்க தொடங்கினார்கள். இந்த சங்கங்களில் வேலைவாய்ப்பு கிடைத்தவர்கள் எல்லாம் லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி வசதியான வாழ்க்கை வாழ்பவர்கள். இவர்கள் தாமாக முன்வந்து உதவி செய்திருந்தால் பொதுவெளியில் உதவி கேட்டிருக்க வேண்டி இருந்திருக்காது.

 

இந்த அமைப்புகளுக்கு 10 கிலோ அரிசி மூட்டையுடன் பலசரக்கு அடங்கிய பை தலா 500 ரஜினிகாந்த் வழங்கினார். இந்த தகவலையும் சம்பந்தப்பட்ட அமைப்புகளே அறிவித்தனர். ரஜினி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இது மட்டுமின்றி நலிந்த கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் என பலதரப்புக்கும் அரிசி, மளிகை சாமான்கள் வழங்கப்பட்டிருந்தாலும், இவை பற்றிய தகவலை ரஜினிகாந்த் தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ரஜினிகாந்த் உறுப்பினர். இருந்த போதிலும் அந்த அமைப்பில் இருப்பவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் தயாரிப்பாளர் கே.ராஜன் கஷ்டத்தில் இருக்கும் தயாரிப்பாளர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என ரஜினிக்கு கடிதம் எழுதியதால் 750 தயாரிப்பாளர்களுக்கு அரிசி, மளிகை சாமான் வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

இதனைத் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் போட்டியிடும் மூன்று அணிகளுக்கு தலா 250 என ஒதுக்கீடு செய்து தி.நகர், சாலிகிராமம், வளசரவாக்கம் என மூன்று இடங்களில் வழங்கப்படும் என அறிவித்தார். இதனை நேரடியாக விமர்சனம் செய்ய இயலாத தயாரிப்பாளர்கள், தங்களது விசுவாசிகள் மூலம் விமர்சனம் செய்யத் தொடங்கினார்கள்.

தயாரிப்பாளர்களிடம் சம்பளம் வாங்கும் நடிகரிடம் கோடிக்கணக்கில் முதலீடு செய்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர் அரிசி, மளிகை சாமான் கேட்டு வாங்குவது பெரும் அவமானம் என ஒரு தரப்பு கே.ராஜனை திட்டி தீர்த்தது, மற்றொரு தரப்பு பொருளாகக் கொடுப்பதை காட்டிலும் தயாரிப்பாளர்களின் வங்கி கணக்கில் ரஜினி நேரடியாக பணத்தை செலுத்துவது கௌரவமாக இருக்கும் என்றனர். மற்றொரு தரப்பு ரஜினி தயாரிப்பாளர்கள் சங்க தயாரிப்பில் படம் ஒன்று தயாரிக்க கால்ஷீட் தரவேண்டும் அதன் மூலம் கோடிக்கணக்கில் சங்க அறக்கட்டளைக்கு வருமானம் கிடைக்கும். என்று ரஜினிக்கு வேண்டுகோள் வைக்கத் தொடங்கியுள்ளனர்.

இது சம்பந்தமாக தயாரிப்பாளர்கள் சிலரிடம் கேட்டபோது, "கேட்காமல் கிடைப்பது தான் உதவி, தயாள குணம் என்பார்கள். கடிதம் எழுதி கேட்டு பெறுவது யாசகம் ரஜினி சங்கத்தின் உறுப்பினராக இருந்தபோதிலும் அவரை உச்சபட்ச நட்சத்திரமாகவே இந்த உலகம் பார்க்கிறது. தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு அவர் தாமாக முன்வந்து உதவிகரம் நீட்டியிருந்தால் கௌரவமாக இருந்திருக்கும் .

கேட்டு பெற்ற பின்பு அதனை பங்கு பிரித்து தேர்தலில் போட்டியிடுபவர்கள் வழங்குவதற்கு நாள் குறித்தது சரியான செயல் இல்லை. உதவும் நோக்கோடு வழங்கிய உதவியை தங்கள் வசதிக்கு ஏற்ப விமர்சனம் செய்வர்கள் எல்லாம் எப்போதோ படம் தயாரித்தவர்கள். தற்போதைய திரைப்படத் துறை நிலை அறியாதவர்கள். இவர்களுக்கான பொழுதுபோக்கு மையமாக தயாரிப்பாளர்கள் சங்கம் மாறிவிட்டது.

உண்மையிலே கடந்த பத்தாண்டுகளாக திரைப்படத் தயாரிப்பில் இருக்கும் தயாரிப்பாளர்கள், பொதுவெளியில் எந்த கருத்தையும் தெரிவிப்பதில்லை. 4500 பேர் சங்கத்தில் உறுப்பினராகப் பதிவு செய்துள்ளனர். இவற்றில் 1300 உறுப்பினர்களே வாக்களிக்கத் தகுதியுள்ளவர்கள். இவர்களில் 70% பேர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு படம் தயாரித்தவர்கள்.

தேர்தல் வெற்றி தோல்வியை தீர்மானிப்பவர்களாக இருக்கும் இவர்களை அதிக அளவில் விலைக்கு வாங்கும் சக்தி படைத்த தயாரிப்பாளர் தலைவராக முடிகிறது. கூலிக்கு மாரடிக்கும் இந்த கூட்டம் தேர்தலுக்குப் பின் சொந்ததொழிலுக்கு திரும்பி விடுவார்கள். இதனால் திரைப்படத் தயாரிப்பாளர்கள் நலனுக்கான உறுதியான முடிவுகளை தலைமை பொறுப்புக்கு வருபவர்களால் எடுக்க முடிவதில்லை. அதேபோன்ற நிலை தான் ரஜினிகாந்த் வழங்கும் உதவி விஷயத்தை ஊதிப் பெரிதாக்கி பொது வெளியில், தயாரிப்பாளர்களின் கௌரவத்தை சின்னா பின்னமாக்கும் வேலையை கூலிக்கு வாக்களிக்கும் கூட்டம் செய்து கொண்டிருக்கிறது" என்றனர்.

 

https://minnambalam.com/entertainment/2020/05/06/23/latest-tamil-cinema-newsdispute-between-producers-help-fom-rajini

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.