Jump to content

சந்தேகம்: அறிவியலுக்கு அடிப்படை ;அரசியல்வாதிகளுக்கு பலவீனம்- ஜிம் அல்-கலிலி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சந்தேகம்: அறிவியலுக்கு அடிப்படை ;அரசியல்வாதிகளுக்கு பலவீனம்- ஜிம் அல்-கலிலி

Human-Virus.jpg

தமிழில்: கோகுலகிருஷ்ணன் கந்தசாமி

கொரோனா வைரஸைப் பற்றி மக்கள் உறுதியான தகவல்களை தேடுகிறார்கள், ஆனால் உறுதியற்ற தகவல்கள் தான் விஞ்ஞான முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கிறது.

வழக்கமான சுட்டுரை பயனராக, நாம் ஆன்லைனில் பின்தொடரும் நபர்களையும் நிறுவனங்களையும் மிகவும் கவனமாக தேர்வு செய்கிறோம். அதில் நமக்கொரு பிரச்சினை உள்ளது. சமூக ஊடகங்களில், நமது கருத்துக்களுடன் ஒத்துப்போகின்றவர்களுடன்  நாம் இணைவதற்கும் நம்புவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன, இதனால் நாம் ஏற்கனவே ஒப்புக்கொண்ட கருத்துக்களால் நிறைவுற்றவர்களாகி விடுகிறோம். இவற்றில் சில கருத்துக்கள் அரசியல் அல்லது மத சித்தாந்தங்களை அடிப்படையாகக் கொண்டவை, மற்றவை மிகக்குறைந்த சான்றுகள் அல்லது மிக மேலோட்டமான, நம்பமுடியாத தகவல்களின் அடிப்படையில் அமைந்தவை. முரண்பட்ட கருத்துக்கள் மற்றும் துருவப்படுத்தப்பட்ட பார்வைகளின் பின்னணியில்,  ஒருபோதும் இல்லாத அளவுக்கு அறிவியலையும் விஞ்ஞானிகளையும் நம்பும்படி சொல்கிறார்கள்.

AP_19204608887464-768x432-300x169.jpg

கொரோனா வைரஸ் நெருக்கடியின் போது, ஆன்லைனில் உள்ள அனைவருக்கும் “அறிவியல்” கருத்து இருப்பதாக தெரிகிறது. மாடலிங், தொற்று விகிதங்கள் மற்றும் ஆன்டிபாடி சோதனைகள் குறித்து நாம் அனைவரும் விவாதிக்கிறோம்; திடீரென்று, நாம் அனைவரும் தொற்றுநோய், நோயெதிர்ப்பு மற்றும் வைராலஜி ஆகியவற்றில் வல்லுநர்களாக மாறிவிடுகிறோம். புதிய விஞ்ஞான சான்றுகள் அரசாங்கக் கொள்கையில் திடீர் மாற்றத்தைத் ஏற்ப்படுத்தியிருப்பதாக பொதுமக்கள் கேள்வியுறும்போது, விஞ்ஞானிகள்  என்ன செய்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரியாது, எனவே அவர்களை நம்ப முடியாது என்று முடிவு செய்யும் மனப்பாங்கு மக்களிடையே இருக்கிறது. அரசியல்வாதிகள் தெளிவாகவும் வெளிப்படையாகவும் அறிவியல் தகவல்களை பகிர்ந்து கொள்வதில் மிகவும் மோசமானவர்கள். அதே நேரத்தில் ஊடகவியலாளர்கள் விஞ்ஞானிகளைப் போன்று கேட்பதைவிட  அரசியல்வாதிகளைப் போன்ற கேள்விகளைக் கேட்பதில் மிகவும் திறமையானவர்களாக இருக்கின்றனர்.

விஞ்ஞான செயல்படுகளை அறிவிப்பது நீண்டகாலமாக முக்கியமாக இருந்ததில்லை. அரசியலில், தவறை ஒப்புக்கொள்வது பலவீனத்தின் ஒரு வடிவமாகக் கருதப்படுகிறது. ஆனால் அறிவியலில் இது முற்றிலும் நேர்மாறானது, அங்கு தவறுகளை செய்வது அறிந்து கொள்வதின் மிக முக்கியமான படி . பழைய கோட்பாடுகள் மற்றும் கருதுகோள்களை புதிய, மிகவும் துல்லியமானவற்றைக் கொண்டு மாற்றுவது ஒரு விஷயத்தைப் பற்றிய ஆழமான புரிதலைப் பெற அனுமதிக்கிறது. இதற்கிடையில், நாம் கணித மாதிரிகளை உருவாக்கி தரவு மற்றும் கிடைக்கக்கூடிய ஆதாரங்களின் அடிப்படையில் கணிப்புகளைச் செய்கிறோம். இந்தக் கொரோனா வைரஸைப் போன்ற புதிய நோய்தொற்றைக் கொண்டு, குறைந்த அளவிலான அடிப்படை அறிவைக் கொண்டு தொடங்கினோம். நாம் புதிய தரவை சேர்த்துக் குவிக்கும்போது, நமது மாதிரிகள் மற்றும் கணிப்புகள் தொடர்ந்து உருவாகி மேம்படும்.

gettyimages-1208929365-300x200.jpg

விஞ்ஞான முறையின் இரண்டாவது முக்கியமான அம்சம் சந்தேகத்திற்குரிய மதிப்பைக் கணிப்பதாகும். சந்தேகம் என்ற கருத்தை ஆராய்வது மிகவும் முக்கியமானது .  சந்தேகத்தை ஆராய்வது குறித்து  இடைக்கால அறிவுசார் இயக்கத்தின் நபர்கள் குறிப்பாக இரண்டு நபர்கள் அரபு அறிஞர் இப்-அல்-ஹெய்தாம் (அல்ஹாசென்) மற்றும் பாரசீக அறிஞர் ராசி (ரேஸஸ்) ஆகியோரது கருத்துக்களின் மூலமாக நாம் அறிய முடியும். இந்த இயக்கம் அரபு மொழியில் அல்-ஷுகுக் என்று அழைக்கப்பட்டது (அதாவது “சந்தேகங்கள்” என்று பொருள்படும்). மேலும் இது வானியல் மற்றும் மருத்துவம் போன்ற பாடங்களில் 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் பண்டைய கிரேக்க அறிஞர்களிடமிருந்து பெறப்பட்ட ஞானத்தை சந்தேகத்திற்கு உள்ளாக்கியது. விஞ்ஞான முறையின் ஆரம்பகாலத்தவரான அல்-ஹெய்தம், ஹெலெனிக் வானியலாளர் டோலமியின் எழுத்து குறித்து சந்தேகம் எழுப்பினார். மேலும் ஒருவர்  ஏற்கனவே இருக்கும் பிறருடைய அறிவை மட்டுமல்ல, ஒருவரின் சொந்த யோசனைகளையும் கேள்விகளுக்கு உள்ளாக்க வேண்டும் என்றும்,  முரண்பாடான சான்றுகள் இருக்கும் பட்சத்தில் தனது கருத்தை மாற்ற தயாராக இருக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தார். நம் கண்கள் பொருள்களின் மீது ஒளி வீசுவதால், நாம் பொருட்களை காண்கிறோம் என்ற நூற்றாண்டுகள் பழமையான கருத்தை அவர் தூக்கி எறிந்தார், மேலும் பார்வை செயல்படும் விதம் குறித்த முதல் சரியான விளக்கத்தை அவர் அளித்தார்.

இந்த அணுகுமுறை இன்றும் நாம் விஞ்ஞானத்தை எவ்வாறு கடைப்பிடிக்கிறோம் என்பதை தெரிவிக்கிறது. உண்மையில், விஞ்ஞான முறை  கோட்பாடுகள் சூழ்ச்சி அல்லது சதி கோட்பாடுகளின் நிலைப்பாட்டிலிருந்து முற்றிலும் வேறுபடுகிறது.விஞ்ஞானிகளைப் போலவே, அவர்களும் எல்லாவற்றையும் கேள்வி கேட்கும் மற்றும் ஆதாரங்களின் முக்கியத்துவத்தை மதிக்கும் சந்தேகவாதிகள் என்று சதிவாதிகள் வாதிடுவார்கள். ஆனால் அறிவியலில், உலகத்தைப் பற்றிய நமது கோட்பாடுகள் மற்றும் விளக்கங்கள் சரியானவை என்று நாம் நம்பலாம் என்றாலும், நாம் ஒருபோதும் முழுமையாக உறுதியாக இருக்க முடியாது. எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு அவதானிப்பு அல்லது புதிய சோதனை முடிவு வந்து, ஏற்கனவே உள்ள கோட்பாட்டுடன் முரண்பட்டால், நம்முடைய பழைய முடிவுகளை நாம் கைவிட வேண்டும். சதி கோட்பாட்டாளர்கள்  அறிவியல் விஞ்ஞானிகளின் கோட்பாடுகளுக்கு அப்படியே எதிர்துருவ கருத்துக்களை கொண்டவர்கள்; அவர்கள் தங்கள் அடிப்படை நம்பிக்கைகளுக்கு முரணான ஆதாரங்களை ஒருங்கிணைக்கிறார்கள், மேலும் இந்த ஆதாரங்களை நிராகரிப்பதை விட உறுதிப்படுத்தும் வகையில் இந்த ஆதாரங்களை விளக்குகிறார்கள்.

பெரும்பாலும், இத்தகைய கருத்தியல் நம்பிக்கைகளின் விஷயத்தில், “அறிவாற்றல் ஒத்திசைவு மறுப்பு” என்ற வார்த்தையை நாம் கேட்கிறோம், இதன் மூலம் யாரோ ஒருவர் தாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு முரணான ஆதாரங்களை எதிர்கொள்ளும் போது உண்மையான மன அசவுகரியத்தை உணர்கிறார்கள். முன்பே இருக்கும் நம்பிக்கைகளை வலுப்படுத்த இது உதவும்.

இதையே ஒரு சதி கோட்பாட்டாளரிடம் கேளுங்கள்: அவர்கள் மனதை மாற்றிக்கொள்ள என்ன ஆகும்? அவர்களின் பதில், அவர்கள் தங்கள் பார்வைக்கு முற்றிலும் உறுதியுடன் இருப்பதால், எதுவும் மாற்றம் செய்யமுடியாது என்பார்கள். எவ்வாறாயினும், அறிவியலில், நம்முடைய தவறுகளை ஒப்புக்கொள்ளவும், உலகத்தைப் பற்றிய புதிய ஆதாரங்களுக்காக நம் மனதை மாற்றவும் கற்றுக்கொள்கிறோம்.

gettyimages-1208929365-300x200.jpg

தற்போதைய தொற்றுநோய்களில் இது முக்கியமானது. நடவடிக்கை எடுப்பதற்கு முன், வைரஸைப் பற்றி எல்லாவற்றையும் அறிய உலகம் காத்திருக்க முடியாது என்பது தெளிவாகிறது; அதே நேரத்தில், புதிய ஆதாரங்கள் இருந்தபோதிலும் ஒரு குறிப்பிட்ட மூலோபாயத்தை பிடிவாதமாக கடைப்பிடிப்பது பேரழிவு தரும். அதிகமான தரவு குவிந்து, நமது மாதிரி கணிப்புகள் மிகவும் நம்பகமானதாக இருப்பதால் நமது அணுகுமுறையை மாற்ற நாம் தயாராக இருக்க வேண்டும். அதுவே வலிமை, அது அறிவியல் முறையின் பலவீனம் அல்ல.

விஞ்ஞான ரீதியாக கல்வியறிவு பெற்ற சமூகம் இருப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி எனது வாழ்க்கையை கழித்திருக்கிறேன். எல்லோரும் அண்டவியல் அல்லது குவாண்டம் இயற்பியலில் நன்கு அறிந்திருக்க வேண்டும் அல்லது ஆர்.என்.ஏ மற்றும் டி.என்.ஏ இடையேயான வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் கூறவில்லை. ஆனால் பாக்டீரியாவிற்கும் வைரஸ்களுக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் அனைவரும் நிச்சயமாக அறிந்து கொள்ள வேண்டும். அதைவிட முக்கியமாக, இந்த நெருக்கடியை நாம்  முடிவுக்கு கொண்டு வரவேண்டுமானால், விஞ்ஞானம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றிய அடிப்படை புரிதலை நாம் அனைவரும் கொண்டிருக்க வேண்டும் – இது போன்ற ஒரு நெருக்கடியின் போது, சந்தேகத்தை ஒப்புக்கொள்வது, சந்தேகமில்லா உறுதியுடன் நடிப்பதை விட, வலிமையின் ஆதாரமாக இருக்கக்கூடும்.

நன்றி:

https://www.theguardian.com/commentisfree/2020/apr/21/doubt-essential-science-politicians-coronavirus

 

https://uyirmmai.com/செய்திகள்/அறிவியல்/சந்தேகம்-அறிவியலுக்கு-அ/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.