Jump to content

ஊரில் ஒரு வீடு வேணும்


Recommended Posts

19 hours ago, nilmini said:

இப்ப bank , பென்ஷன், டெலிபோன் bill , electricity bill  எல்லாம் ஒன்லைனில் கட்டலாம். மற்ற office களும். பரவாயில்லை. கொஞ்சம் slow தான். Election duty , poya , வருடப்பிறப்புக்கு 2 கிழமை என்று வேலைகள் நடக்காது. மற்றது கொஞ்சம் சிக்கலான வேலைகள் என்றாலும் செய்து கொள்ளுவது கரைச்சல். மற்றும்படி அவ்வளவு கஸ்டமில்லை . 2002 இலிருந்து ஒவ்வொரு வருடமும் போயிருக்கிறேன். நிறைய வேலைகள் குடும்பத்தினருக்கும், நண்பர்களும் செய்து குடுத்திருக்கிறேன். 

அக்கா நீங்கள் எல்லாம் பெரிய இடத்து  ஆட்கள் (Holy family convent படித்து இருக்கிறியள் மற்றும் சுமந்திரன் அய்யாவின் friend வேற) உங்களுக்கு பெரிய பிரச்சனை இருக்காது ஆனால் எங்களை போன்ற சாதாரண மக்களுக்கு கொஞ்சம் கஷ்டம்தான்.
நான்போனது 2012 ல் 

Link to comment
Share on other sites

  • Replies 277
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Kaalee said:

அக்கா நீங்கள் எல்லாம் பெரிய இடத்து  ஆட்கள் (Holy family convent படித்து இருக்கிறியள் மற்றும் சுமந்திரன் அய்யாவின் friend வேற) உங்களுக்கு பெரிய பிரச்சனை இருக்காது ஆனால் எங்களை போன்ற சாதாரண மக்களுக்கு கொஞ்சம் கஷ்டம்தான்.
நான்போனது 2012 ல் 

தம்பி நான் சாதாரணமான ஒரு ஆளாக லைனில் நின்றுதான் போனானான். ஒரே ஒரு ஆயுதம் சிங்களம். அவ்வளவுதான். சுமந்திரன் வீட்டுக்கு விசிடிங் மட்டும்தான். படித்த படிப்பும் , பள்ளிக்கூடமும் எனது வாழ்க்கையை மேம்படுத்த மட்டுமே உதவியது. இப்படி சிறு சிறு வேலைகள் செய்ய அல்ல. அதுதான் சொன்னேனே சிக்கலான விடயங்கள் கொஞ்சம் கஸ்ரம் என்று. அதற்கு தெரிந்த ஆக்கள் தேவை. இந்தியா இலங்கை ஒப்பிடும்போது இந்தியாவில் செலவாகுடன் போனால் ஸலாம் போடுவார்கள். ஆனால் இலங்கையில் செல்வாக்கு அப்படி வேலை செய்வதில்லை. மேல்மட்ட ஆட்களுக்கு அது பொருந்தும். நான் சாதாரண குடும்பம் தான் . அங்கங்கே கொஞ்ச செல்வாக்கு இருந்திருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nilmini said:

தம்பி நான் சாதாரணமான ஒரு ஆளாக லைனில் நின்றுதான் போனானான். ஒரே ஒரு ஆயுதம் சிங்களம். அவ்வளவுதான். சுமந்திரன் வீட்டுக்கு விசிடிங் மட்டும்தான். படித்த படிப்பும் , பள்ளிக்கூடமும் எனது வாழ்க்கையை மேம்படுத்த மட்டுமே உதவியது. இப்படி சிறு சிறு வேலைகள் செய்ய அல்ல. அதுதான் சொன்னேனே சிக்கலான விடயங்கள் கொஞ்சம் கஸ்ரம் என்று. அதற்கு தெரிந்த ஆக்கள் தேவை. இந்தியா இலங்கை ஒப்பிடும்போது இந்தியாவில் செலவாகுடன் போனால் ஸலாம் போடுவார்கள். ஆனால் இலங்கையில் செல்வாக்கு அப்படி வேலை செய்வதில்லை. மேல்மட்ட ஆட்களுக்கு அது பொருந்தும். நான் சாதாரண குடும்பம் தான் . அங்கங்கே கொஞ்ச செல்வாக்கு இருந்திருக்கு

இலங்கையில் சிங்களம் கதைக்க தெரிந்தால், பல காரியங்களை இலகுவாக செய்யலாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

இலங்கையில் சிங்களம் கதைக்க தெரிந்தால், பல காரியங்களை இலகுவாக செய்யலாம் 

அதுதான் உண்மை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிலோனிலை கொலை செய்தாலும் செல்வாக்கு இருந்தால் தப்பிடலாம்.இது நான் கண்ணால் கண்ட அனுபவங்கள்.🕵🏾‍♂️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அந்தக் கதை பெரிய கதை 😃

என் பேர் போட்டுத்தான் வீட்டு கேற் போட்டது முதல் வீட்டுக்கு. அப்ப அது என்னதுதானே😂

அதுவும் சரிதான் 

அப்படி என்றால் அந்தக் கேட் உங்களுக்குத்தான். அதை  நீங்கள் கழட்டிக்கொண்டு போகலாம்....ஆனால் வீட்டுக்க வரக்கூடாது.....அது உங்கட கடைசி தங்கச்சிக்குத்தான்....அதைக் காட்டித்தான் மற்றக்  குமர்களையும் கரை சேர்க்க வேண்டும்......!   🔪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/5/2020 at 08:40, சுவைப்பிரியன் said:

என்ன சுமே அத்திவாரம் வெட்ட தொடங்கியாச்சா.கெதியா வாங்கோ எங்களுக்கும் பொழுது போகும்.

ஏன் நீங்கள் அங்கேயா இருக்கிறியள் ??? எங்கே என்று சொன்னால் பக்கத்திலேயே காணி பார்க்கிறன் 😂

On 8/5/2020 at 10:01, Kadancha said:

ஓர் இறைமையுள்ள அரசின் நிலப்புலத்தில் உங்களின் பிரசன்னம் இருக்கும் வரைக்கும், நீங்கள் வேறு எந்த நாட்டின் குடி உரிமை வைத்து இருந்தாலும், நீங்கள் உட்படுவது அந்த அரசின் ஆளும் உரிமைகும்  அதன் சட்டதிட்டங்களுக்கு மட்டுமே.

இதுவே, இறைமையுள்ள அரசும், அதன் இறைமையுள்ள நிலப்புலத்தின்  அடிப்படை. இதற்கு விதி விலக்கு, பெரும்பாலும் வலோற்கரமாக அளிப்பது, un security council இல் நிறேவேற்றப்படும் peace and  security resolutions under chapter 7.     

எனவே, சொறிலங்காவில் உங்களுக்கு பிரச்னை என்றால், ஜேர்மன் (இந்த குடி உரிமையை நீங்கள் அநேகமாக இழப்பீர்கள் சொறி லங்காவின் குடியுரிமை பெற்றால்)   அல்லது UK உதவ முயற்சிக்கலாம். இது கூட உறுதியாக சொல்ல முடியாது. அதை ஏற்பதும், நிராகரிப்பதும் சொறிலங்காவின் முடிவு.     

உங்களின் பிரசன்னம் இருக்கும் நாட்டில்  (சொறி லங்கா) உங்களுக்கு குடியுரிமை இருக்குமாயின், வேறு எந்த குடியுரிமை உள்ள அரசும், அது பிறப்பால் dual ஆக இருந்தாலும், கதைப்பதற்கு கூட முன்வராது.    

எல்லாத்தையும் கேட்க தலை சுத்துது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/5/2020 at 07:58, தனிக்காட்டு ராஜா said:

ஓ கோ நன்றி நானும் படிச்ச ஞாபகம் அதான் எழுதினேன் அது பத்திரிகையிலா அல்லது யாழிலா என ஞாபகம் இல்லை 

 

கட்டியிருக்கிற வீட்டை வாங்கி நமக்கு தகுந்தால் போல் மாற்றியும் அமைக்கலாம் பல வழிகள் உண்டு ஆனால் இங்கே மீதிக்காலம் முழுவதும் வாழும் முடிவை திடமாக எடுங்கள் பிறகு ஏன்டா இங்கு வந்தோம் என மனம் வருந்தக்கூடாது நடக்கும் சம்பவங்களை வைத்து சொல்கிறேன் ஏனென்றால் வெளிநாடுகளில் வாழ்ந்து பழகியவர்களுக்கு சிறு சம்பவங்கள் கூட மன உளைச்சலை உண்டாக்கும்  பக்கத்து வீட்டுக்காரன் சொப்பினில் குப்பையை கட்டி நம்ம வாசலில் வச்சிட்டு போவான் கேட்டால் சண்டை பிடிப்பான் நீங்கள் நான் வச்சத பார்த்தீங்களா என்று

 

சனம் நடமாட்ட

காலம் முழுவதும் அங்கு வாழும் எண்ணம் எனக்கு இப்ப இருக்கு என்று கூறமுடியாது. எப்ப வேண்டுமானாலும் திரும்ப முடியும் என்னும் நம்பிக்கை மட்டுமே உள்ளது. அங்கு போய் ஒருஆண்டவது இருந்தபின்னர்தான் நிரந்தரமாக இருக்க முடியுமா என்று யோசிக்கவேணும்

2 hours ago, suvy said:

அப்படி என்றால் அந்தக் கேட் உங்களுக்குத்தான். அதை  நீங்கள் கழட்டிக்கொண்டு போகலாம்....ஆனால் வீட்டுக்க வரக்கூடாது.....அது உங்கட கடைசி தங்கச்சிக்குத்தான்....அதைக் காட்டித்தான் மற்றக்  குமர்களையும் கரை சேர்க்க வேண்டும்......!   🔪

தங்கைக்கு வேறு வீடு சீதனமாக கொடுத்தாச்சு 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

காலம் முழுவதும் அங்கு வாழும் எண்ணம் எனக்கு இப்ப இருக்கு என்று கூறமுடியாது. எப்ப வேண்டுமானாலும் திரும்ப முடியும் என்னும் நம்பிக்கை மட்டுமே உள்ளது. அங்கு போய் ஒருஆண்டவது இருந்தபின்னர்தான் நிரந்தரமாக இருக்க முடியுமா என்று யோசிக்கவேணும்

அங்க போய் வெளிநாட்டில் இருந்து வந்தது என்ற பந்தா காட்டி வாழ முடியாது. சனம் ஓரிரு வாரங்களுக்கு அந்த பந்தாவை அங்கீகரித்தாலும்.. அது நிரந்தரமில்லை.

மேலும்.. அங்கு போய் ஏதாவது ஒரு சமூக வேலைத்திட்டத்தோடு இருந்தால்.. காலம் போவது தெரியாது. எனது உறவினர் ஒருவர் இங்கிலாந்தில் மருத்துவ ஆலோசகர் நிலையில் இருந்தார். அவர் ஊரில் போய் தொண்டர் அடிப்படையில் ஒரு வருடங்கள் பணியாற்றினார். ஆரம்பத்தில் அவருக்கு பெரும் வரவேற்பிருந்தது. கடைசியில்.. அவரா.. ஒரு மோட்டார் சைக்கிலில்.. லோ லோ என்று அங்குள்ள புழுதி விழுந்த ஒழுங்கைகளுக்கூடாகத் திரிந்து கொண்டிருந்தார். ஆனால்.. அதை அவர் மகிழ்வாக எடுத்துக் கொண்டார். 

என்ன ஊரில்.. இருந்தால்.. நீங்கள் எதையோ தொலைத்த உணர்வு இருக்காது. கோவில் குளம் இருக்குது.. நினைச்ச நேரம் போகலாம். உங்களுக்கு எழுத்துப் பணி செய்ய நல்ல சூழல் உள்ளது. ஒவ்வொரு ஊராகப் போய் வரலாம். ஊர் மக்களைக் கொண்டு போருக்குப் பிந்திய எமது சமூகம் பற்றிய ஒரு சமூக ஆய்வைக் கூடச் செய்யலாம். இப்படி ஏதாவது உருப்படியான வேலைத்திட்டங்களை செய்ய வெளிக்கிட்டால்.. நிச்சயம்.. காலம் போவதே தெரியாமல்..போகும். 

வீட்டில்.. வீட்டுத் தோட்டம்.. மூளிகைத் தோட்டம் வைக்கலாம். நாய் வளர்க்கலாம்.. பறவைகள் ஒன்று கூடும் இடங்களை நிறுவலாம்.. இவை எல்லாம் நல்ல பொழுதுபோக்கும்.. எம்மால்.. இயலுவாகச் செய்யக் கூடியதும் ஆகும்.

ஆக.. அடுத்தவர் விடயங்களில் தலையிடாமல்.. நாம் நம் பாட்டுக்கு நம் பொழுதை அழகு படுத்திக் கொண்டிருந்தால்.. ஊரில் இருப்பது போல்.. பொன்னான வேளைகள் எதுவும் இருக்காது. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

தங்கைக்கு வேறு வீடு சீதனமாக கொடுத்தாச்சு 😃

அந்த பெரிய கதையை ஒருக்கால் சொல்லுங்கோவன். எப்பிடியும் பெரிய புடுங்குப்பாடு இருந்திருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொருளாதார மற்றும் அரசியல் தஞ்சம் தேடி சொந்த நாடுகளை விட்டு 
ஓடியபோது அடைக்கலம் தந்து நீங்கள் வாழ்ந்த நாடுகளை விட உங்களை 
சக மனிதராக ஏற்றுக்கொண்டு அனைத்து உதவிகளையும் புரிந்து. கல்வி மற்றும் பொருளாதார 
ரீதியாக நீங்கள் மற்றும் உங்களை சார்ந்தோரும் முன்னேற வழி வகுத்து கொடுத்த நாடுகளுக்கு 
நன்றி கடனாக ஏதும் செய்யலாம் அல்லது செய்யவேண்டும் எனும் எண்ணம் யாருக்காவது இருக்கிறதா?
அல்லது அப்படி எண்ணுவது தவறா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/5/2020 at 13:49, nilmini said:

பிரச்சனையான காலத்தில் நிறைய மோசடிகள் யாழ் எங்கும் நடைபெற்றது. இப்ப டவுண் பக்கம் ஏமாத்தி காணி வீடு பெயர் மாற்றுவது , விற்பது அவ்வளவு சுலபம் அல்ல. அத்துடன் அடிக்கடி கைமாறாத காணிகளை ஏமாற்றி மாத்தி எழுதுவதும் வைப்பதும் கஸ்டம் .அம்மா எனக்கு வீடு மாத்தி எழுத 4 முறை power attorney அனுப்ப வேண்டி வந்தது. ஒவ்வொரு முறையும் எதோ ஒரு பிழை கண்டு பிடித்தார்கள்.உறுதி இல்லாதவர்கள் பக்கத்து காணி விபரங்களை குடுத்தால் உங்களது உறுதிகளின் பிரதியை பெற்றுக்கொள்ளலாம்.

இப்பத்து யாழில் வீடு கட்டுவது போன்ற தொழில் செய்பவர்களில் குடித்துவிட்டு வேலை செய்பவர்கள் தான் அதிகம். நிறைய ஏமாத்து வேலைகளும் நடக்குது. சிலபேர் ரோட்டு பெருபிப்பதற்காக தடை செய்யப்பட்ட நிலத்தில் களிமண் அல்லது temporary கட்டிடங்கள் அனுமதி இல்லாமல் கட்டுகிறார்கள் . ரோட்டு கட்டும்போது உடைத்துவிடுவதாக சொன்னால் சரியாம்.நான் இப்ப இரண்டு மாதங்களுக்கு முன் தான் நல்ல ஒரு bulider யை கண்டுபிடித்து plan எல்லாம் கீறி estimate போட்டு , பிறகு ஒரு agriculture officer யை பிடித்து தோட்டம் அமைக்க ஒழுங்கு பண்ணி வேலை தொடங்கும் நேரத்தில் Lockdown வந்திட்டுது. விரைவில் துடங்கலாம் என்று இருக்கிறேன். 100 வருட நாற்சார் வீட்டை அதன் பழமை மாறாமல் திருத்த  இந்த ஒரு builder தான் உடன் பட்டார். வீடு கட்டும்போதோ திருத்தும்போதோ கட்டாயம் நம்பிக்கையான ஒருவர் மேற்பார்வையில் தான் செய்ய வேண்டும். ஒருத்தரும் இல்லாதவர்களுக்கு கட்டிடம் காட்டும் பொது மேற்பார்வை பார்க்க, maintenance செய்ய என்று தனியாக ஆக்கள் இருக்கினம். UK இல் இருந்து போன ஒருவரும் எப்படி பொறுப்பெடுத்து செய்வதாக கேள்விப்பட்டேன்  வெளிநாடு என்று கேள்விப்பட்டாலே   எல்லாவற்றுக்கும் கட்டணம் கூடும். அதற்கு முழுப்பொறுப்பும் வெளிநாட்டில் இருந்து  போகும் நாம் தான் காரணம். அல்லது வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்பும் நாம். நான் எப்பொழுது போகும்போதும் எனது சுற்றங்களுக்கு விளங்கப்படுத்த முயன்றாலும் அவர்களுக்கு அது விளங்குவதில்லை.

யாருக்காவது தேவைப்பட்டால் விபரம் அறியத்தருகிறேன். வீட்டுக்குத்தேவையான  பல பொருட்களை வெளிநாடுகளில் இருந்து கப்பல் மூலமாக அனுப்பவும் முடியும். புது பொருட்களாக பெட்டியில் இருந்தால் tax அடிப்பார்கள்.

Dual citizenship எடுக்க 1850 USD fees . அப்ளிகேசன்  போட 20$. மிச்சம் கிடைத்த  பிறகுதான் கொடுப்பது. நான்  டிசம்பரில் apply பண்ணினேன். ஒன்லைனில் பார்த்தபோது processing என்று போட்டிருக்கு.

நிறையப்பேர் குளிர் காலங்களில் மட்டும் ஊரில் இருந்துவிட்டு summer ற்கு  திரும்பி வந்துவிடுகிறார்கள். தொடர்ந்து அங்கு இருக்க நிறையபேருக்கு கஸ்டம் . உடல் நிலை சரியில்லாதவர்கள் போயிருப்பது என்பது மிகவும் கடினம். சிறு உடல்நல பிரச்சனைகள் என்றால் அங்கு நல்ல மருத்துவ வசதிகள் இருக்கு. நானும் போய் யாழ் மருத்துவ கல்லூரியில் கொஞ்ச காலம் பணியாற்றலாம் என்று யோசிக்கிறேன். சும்மா போய் இருப்பது மிகவும் கடினம். எத்தனையோ வகையில் எமது மக்களுக்கும் உதவுகிற மாதிரி ஏதாவது செய்யலாம் .

மற்றது அங்கு போய் இருப்பதானால் இந்த மொழிப்பற்று ,  விடுதலை உணர்ச்சி எல்லாவற்றையும் இங்கேயே விட்டுட்டு சந்தோஷமாக வாழ மட்டும் தான் போகவேண்டும். அவற்றையெல்லாம் கணக்கில் எடுத்தால் இருக்கிற நிம்மதியும் போய்விடும். நான் அம்மாவிடம் சொன்னேன், வீடு வேலைமுடிந்ததும் ஒரு அலரி மரம் நட்டு  புத்த சிலை ஒன்றயும் தோட்டத்தில் வைக்கப்போகிறேன் என்று. அத்துடன்  சிங்களம் கதைக்கத்தெரிந்தாலும் இப்ப எழுத வாசிக்க கற்றுக்கொள்கிறேன் ( self-learning ). இது எனது பார்வையில் சரி என்று பட்டாலும் எல்லோரும் இதற்கு உடன்படமாட்டார்கள்.

சிங்களவர்கள் மீதோ சிங்கள மொழிமீதோ எமக்கு விரோதம் இல்லை 
எமது மண்ணில் அழிக்கப்படும் தமிழ் மொழியும்  தமிழ் உயிர்களும்தான் 
எமக்கு அடிப்படை பிரச்சனை. எமது மாவீர்கள் சிந்திய குருதியின் மணத்தை 
அதில் வாழும் மனிதர்கள் மறந்தாலும் அந்த மண் ஒரு போதும் மறக்கபோவதில்லை.
அது வெறும் மண்ணாக மட்டும் இல்லை எமது பாதி உயிராகவும் இருக்கிறது.

ஆக்கிரமிப்பாளர்கள் சிங்களவர்களோ? அமெரிக்கர்களோ? எக்காலத்திலும் மாறப்போவதில்லை 
ஒரு சாரர்  கொஞ்சம் மனம் மாறி கொள்வார்கள் அதுவும் தமது வாழ்வை நிவர்த்தி செய்யும் ஒரு சுயநல போக்குதான். அவர்கள் சிங்கள ஆதிக்கத்தையோ வெள்ளையின வெறியையோ பெரிதாக எதிர்க்க போவதில்லை காரணம் அவர்களுக்கு அதில் லாபம் என்று ஏதும் இருக்க போவதும் இல்லை. 
இப்போதைய அமெரிக்க வெள்ளையின துவேஷிகள் எல்லாம் எங்கிருந்து வருகிறார்கள்? டிராம் அதிபராக வரும் முன்பும் அவர்கள் இங்குதான் இருந்தார்கள் இப்போது வெளிப்படையாக வெளியில் வருகிறார்கள் அவளவுதான். 

உணர்வுகளை கொலைசெய்துவிட்டு வாழ்வது என்றால் ஏன் அங்கு போகவேண்டும் 
அதை இங்கேயே செய்துகொண்டு வாலாமே? 
சிங்கள ஆதிக்க வெறியாலும்  துரோகங்களாலும் எமது மண்ணும் மொழியும் நாளும் நாளும் 
பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. 

இங்கிருந்தும் ஒன்றும்  வெட்டி புடுங்க போவதில்லை அங்கு போய் நாலு சிங்களவருக்கு 
எடுத்து சொல்லி அவர்களாவது புரிந்துகொண்டால் பெரும் வெற்றி என்று நீங்கள் எண்ணுவதும் சரியானதுதான். 

வலிகள் என்பது எவ்வளவு அடிபட்டோம் என்பதை பொறுத்தது 
குட்டிமணியின் கண் உயிருடன் பிடுங்கப்பட்ட போது எல்லா தமிழ் கண்ணுக்கும் 
ஒரே மாதிரி வலித்திருந்தால் ...... எமது நாடு இன்று வேறு விதமாக இருந்திருக்கும் 
என்பதுதான் இவ்வளவு உயிர்களை பறிகொடுத்து நாம் புரிந்துகொண்டது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Maruthankerny said:

உணர்வுகளை கொலைசெய்துவிட்டு வாழ்வது என்றால் ஏன் அங்கு போகவேண்டும் 
அதை இங்கேயே செய்துகொண்டு வாலாமே?

உண்மை தான்.

யாழ் நகர சந்தைப் பகுதிக்குச் செல்கிறேன்.  நயினாதீவுக்கு சென்றுவிட்டு திரும்பும் சிங்களக் குடும்பங்கள். அங்கு தான் கருவாடு முதலாய் நிறைய பனம்பொருட்களை வாங்குகிறார்கள். அவர்கள் சாதாரணமாகத் தான் நின்றார்கள். ஆனால் இரண்டு சிங்கள இராணுவத்தினர் சீருடையில் வந்தனர். ஒருவர் கையில் ஆயுதம். மற்றவர் உயர் அதிகாரி போலும். அவர் அந்தச் சிங்களவர்களோடு கதைத்து விட்டு நாங்கள் நின்று விலை பேசிக் கொண்டிருந்த கடைக்குள் நுழைகிறார். எந்த அனுமதியும் இன்றி அந்தக் கடைக்காரரிடம் அதிகாரத் தொனியில்.. விலைகளை விசாரிக்கிறார். கடைக்காரரும் பதறி அடிச்சுக் கொண்டு எங்களை கவனிப்பதை தற்காலிகமாக விடுத்து.. அந்த இராணுவ அதிகாரியையும் அவருடன் வந்த குலாமையும் கவனிக்கிறார். வெளிநாடுகளில் இப்படியான ஒரு நிகழ்வு நிகழின்.. நாமோ.. வெள்ளைகளோ சும்மா இருக்கமாட்டோம். கியூவில் நின்று வாங்கோ என்று தான் சொல்லுவோம். ஆனால்.. அங்கு அப்படியல்ல.

ஹிந்திய இராணுவ ஆக்கிரமிப்பின் போது ஹிந்திய இராணுவம் பொருட்கள் வாங்க வந்தாலும் இப்படி பொதுமக்களை இடித்துத்தள்ளிவிட்டு தாங்கள் முன்னுக்குப் போய் வாங்கியதை நான் கவனிக்கவில்லை. ஆனால் சிங்கள இராணுவத்திடம் யாழ் நகரில் பொருட்கள் வாங்கும்.. போது திமிர் அதிகம். ஆனால்.. இதனை கொழும்பில்.. தெற்கில் அவதானிக்க முடியவில்லை. அங்கு மக்களோடு மக்களாக கியூவில் நின்று தான் வாங்கிறார்கள்.

உண்மையில் அந்தச் சம்பவம் அடிமனதில் ஒரு ஆத்திரத்தை உண்டு பண்ணினாலும்.. அனாதரவான எம்மால்.. அதைத் தட்டிக்கேட்க முடியாத சூழல். பொறுமையாக நின்று அந்தக் கும்பல் பேரம் பேசிப் போன பின்.. நாங்கள் எங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டோம். அப்போது அந்த தமிழ் கடைக்காரர் சொன்னார்.. இது இப்ப இங்க சாதாரணம். சீருடையில்.. ஆயுத்தோடு வந்து அடிமாட்டு விலைக்கு கேட்பாங்கள். பயந்து கொடுப்பம் என்று. எங்களுக்கு கட்டுபடியாகாட்டி எப்படிக் கொடுக்கிறது. ஏதோ சொல்லிச் சமாளித்துவிடுகிறோம் என்றார்.

இப்படியான சூழலில்.. நிச்சயம் வெளிநாட்டில் இருந்து போகும் உணர்வாளர்களுக்கு கோபம் அடக்கமுடியாத அளவுக்கு எழும்.. கட்டுப்படுத்தப் பழகிக் கொள்ள வேண்டும்.. ஊரில் இருக்க வேண்டின். ஏனெனில்.. எமது கோபத்தை அவர்கள் உணரும் வழிக்குக் காட்ட அங்கு நியாயமான வழியில்லை.. இப்போ. 

Link to comment
Share on other sites

7 hours ago, Maruthankerny said:

 

வலிகள் என்பது எவ்வளவு அடிபட்டோம் என்பதை பொறுத்தது 
குட்டிமணியின் கண் உயிருடன் பிடுங்கப்பட்ட போது எல்லா தமிழ் கண்ணுக்கும் 
ஒரே மாதிரி வலித்திருந்தால்
...... எமது நாடு இன்று வேறு விதமாக இருந்திருக்கும் 
என்பதுதான் இவ்வளவு உயிர்களை பறிகொடுத்து நாம் புரிந்துகொண்டது. 

கோடியில் ஒரு வார்த்தை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெகிவளையில் உள்ள கார்கில்ஸில் பொருட்கள் வாங்கியபின் பணம் சொலுத்துவதிற்கு வரிசையில் நின்றபோது பின்னால் இருந்து ஒருத்தன் வயிற்றினால் இடித்துகொண்டு நெருங்கி நின்றான், அப்ப திரும்பி கொஞ்சம் இடைவெளி விட்டு நில் என்று சொன்னேன், திரும்பவும் தள்ள, திரும்பவும் தள்ளி நில் என்றேன், அவன் உடனே கத்திக்கொண்டு தொலைபேசி எடுத்து இங்கு ஒரு தமிழனுக்கு 😡பாடம் படிப்பிக்கனும் வாங்கட என்று காத்த ஆரம்பித்துவிட்டான், அங்கு நின்ற காவல்காரன் இல்லாவிடில் அன்று என் நிலைமை கந்தல்தான்😪.

ஐம்புலன்களையும் அடக்கி வாழவேண்டும் இலங்கையில் எங்கிருந்தாலும், யார் யார் எப்படியென்றே தெரியா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

காலம் முழுவதும் அங்கு வாழும் எண்ணம் எனக்கு இப்ப இருக்கு என்று கூறமுடியாது. எப்ப வேண்டுமானாலும் திரும்ப முடியும் என்னும் நம்பிக்கை மட்டுமே உள்ளது. அங்கு போய் ஒருஆண்டவது இருந்தபின்னர்தான் நிரந்தரமாக இருக்க முடியுமா என்று யோசிக்கவேணும்

வாங்கோ நல்வரவு யாழ்ப்பாணம் வந்தால் அங்க வந்து நீங்க சமைச்ச காட்டிய உணவுகளை உண்ண வேண்டும் 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

வாங்கோ நல்வரவு யாழ்ப்பாணம் வந்தால் அங்க வந்து நீங்க சமைச்ச காட்டிய உணவுகளை உண்ண வேண்டும் 😉

இதில இவ்வளவுபேர் கருத்தெழுகினம், யாராவது இந்தமாதிரி ஒரு கோரிக்கையை முன்வைத்தார்களா.......என்ன செய்வது விதி வலியது.......!   🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, nedukkalapoovan said:

அங்க போய் வெளிநாட்டில் இருந்து வந்தது என்ற பந்தா காட்டி வாழ முடியாது. சனம் ஓரிரு வாரங்களுக்கு அந்த பந்தாவை அங்கீகரித்தாலும்.. அது நிரந்தரமில்லை.

மேலும்.. அங்கு போய் ஏதாவது ஒரு சமூக வேலைத்திட்டத்தோடு இருந்தால்.. காலம் போவது தெரியாது. எனது உறவினர் ஒருவர் இங்கிலாந்தில் மருத்துவ ஆலோசகர் நிலையில் இருந்தார். அவர் ஊரில் போய் தொண்டர் அடிப்படையில் ஒரு வருடங்கள் பணியாற்றினார். ஆரம்பத்தில் அவருக்கு பெரும் வரவேற்பிருந்தது. கடைசியில்.. அவரா.. ஒரு மோட்டார் சைக்கிலில்.. லோ லோ என்று அங்குள்ள புழுதி விழுந்த ஒழுங்கைகளுக்கூடாகத் திரிந்து கொண்டிருந்தார். ஆனால்.. அதை அவர் மகிழ்வாக எடுத்துக் கொண்டார். 

என்ன ஊரில்.. இருந்தால்.. நீங்கள் எதையோ தொலைத்த உணர்வு இருக்காது. கோவில் குளம் இருக்குது.. நினைச்ச நேரம் போகலாம். உங்களுக்கு எழுத்துப் பணி செய்ய நல்ல சூழல் உள்ளது. ஒவ்வொரு ஊராகப் போய் வரலாம். ஊர் மக்களைக் கொண்டு போருக்குப் பிந்திய எமது சமூகம் பற்றிய ஒரு சமூக ஆய்வைக் கூடச் செய்யலாம். இப்படி ஏதாவது உருப்படியான வேலைத்திட்டங்களை செய்ய வெளிக்கிட்டால்.. நிச்சயம்.. காலம் போவதே தெரியாமல்..போகும். 

வீட்டில்.. வீட்டுத் தோட்டம்.. மூளிகைத் தோட்டம் வைக்கலாம். நாய் வளர்க்கலாம்.. பறவைகள் ஒன்று கூடும் இடங்களை நிறுவலாம்.. இவை எல்லாம் நல்ல பொழுதுபோக்கும்.. எம்மால்.. இயலுவாகச் செய்யக் கூடியதும் ஆகும்.

ஆக.. அடுத்தவர் விடயங்களில் தலையிடாமல்.. நாம் நம் பாட்டுக்கு நம் பொழுதை அழகு படுத்திக் கொண்டிருந்தால்.. ஊரில் இருப்பது போல்.. பொன்னான வேளைகள் எதுவும் இருக்காது. 

 

பார்ப்போம் எனக்கு என்ன விதிக்கப்பட்டுள்ளது என்று

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, குமாரசாமி said:

அந்த பெரிய கதையை ஒருக்கால் சொல்லுங்கோவன். எப்பிடியும் பெரிய புடுங்குப்பாடு இருந்திருக்கும்.

என் சித்திமார் இரண்டுபேர். அம்மாவின் தங்கைகள். இருவர்மேலும் அம்மாவுக்கு அலாதியான அன்பு. அவர்கள் கூறுவதை நம்புவதும் அதற்கு எதிரொலிப்பதும் அம்மாவின்செயல். நான் பல தடவை அம்மாவுக்கு எம்மிலும் பார்க்க சித்திமாரிலேயே அன்பு அதிகமோ என எண்ணியிருக்கிறேன். எனது வீட்டில் சித்தி இருந்தார். என் கணவரின் அண்ணன் குடும்பம் என் தங்கையின் வீட்டில் இருந்தனர். நாங்கள் வெளிநாட்டில்தானே இனி வரமாட்டோம் . சித்தியின் பிள்ளைகளுக்குத்தான் வீடு என்று அவர்கள் எண்ண, தம்பியின் வீடு எங்களுக்குத்தான் என்று கணவரின் அண்ணன் கூறிக்கொண்டு திரிய, சித்தி அம்மாவுக்கு என்ன கூறினாவோ நாங்கள்  கஸ்ரப்பட்டுக் கட்டின வீட்டை உன் மச்சானுக்குக் குடுக்கப்போறியோ என்று அம்மா எனக்கு போன் எடுத்து வாக்குவாதப்பட, உன்ர சித்தியின் மக்களுக்குத்தான் வீடு போகப்போகுது என்று மாற்றப்பக்கத்தால் என்ர அருமை மனிசன் நை நை என்று என் உயிரை வாங்க, எனக்கு வீடும் வேண்டாம் ஒண்டும் வேண்டாம் நின்மதியா இருக்க விடுங்கோ என்று விற்க ஆரமிக்க அதுக்கும் எனக்கு வில் உனக்கு வில் என்று சண்டை. நாம் பிறந்து வளர்ந்த வீடு வெளியே யாருக்கும் விற்கக் கூடாது என்று எண்ணி 75 இலட்சம் விலை போன வீட்டுவளவை தங்கைக்கு 40 லட்சத்துக்குக் கொடுத்துவிட்டேன். விற்றபின்னர் தான் அம்மா தொடக்கம் என்கணவர் சித்திமார், கணவரின் அண்ணா எல்லோரும் அமைதியானார்கள். நானும் ஒருபக்கம் நின்மதியானாலும் பிறந்து வளர்ந்த வீட்டை, எனக்கு என்று கட்டிய வீட்டை விற்றது மனதை அறுத்துக்கொண்டே இருக்கிறது. விதியை யாரால் வெல்ல முடியும் குமாரசாமி???

இது கதைச்சுருக்கம் மட்டுமே 😀

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Maruthankerny said:

பொருளாதார மற்றும் அரசியல் தஞ்சம் தேடி சொந்த நாடுகளை விட்டு 
ஓடியபோது அடைக்கலம் தந்து நீங்கள் வாழ்ந்த நாடுகளை விட உங்களை 
சக மனிதராக ஏற்றுக்கொண்டு அனைத்து உதவிகளையும் புரிந்து. கல்வி மற்றும் பொருளாதார 
ரீதியாக நீங்கள் மற்றும் உங்களை சார்ந்தோரும் முன்னேற வழி வகுத்து கொடுத்த நாடுகளுக்கு 
நன்றி கடனாக ஏதும் செய்யலாம் அல்லது செய்யவேண்டும் எனும் எண்ணம் யாருக்காவது இருக்கிறதா?
அல்லது அப்படி எண்ணுவது தவறா? 

அப்படி எண்ணுவது தவறா என்று தெரியவில்லை. ஆனால் அவர்களுக்கு நாம் நன்றிக்கடன் பட்டதாக எண்ண முடியவில்லை. உங்களைப்போல் யோசித்ததும் இல்லை.

 

10 hours ago, உடையார் said:

தெகிவளையில் உள்ள கார்கில்ஸில் பொருட்கள் வாங்கியபின் பணம் சொலுத்துவதிற்கு வரிசையில் நின்றபோது பின்னால் இருந்து ஒருத்தன் வயிற்றினால் இடித்துகொண்டு நெருங்கி நின்றான், அப்ப திரும்பி கொஞ்சம் இடைவெளி விட்டு நில் என்று சொன்னேன், திரும்பவும் தள்ள, திரும்பவும் தள்ளி நில் என்றேன், அவன் உடனே கத்திக்கொண்டு தொலைபேசி எடுத்து இங்கு ஒரு தமிழனுக்கு 😡பாடம் படிப்பிக்கனும் வாங்கட என்று காத்த ஆரம்பித்துவிட்டான், அங்கு நின்ற காவல்காரன் இல்லாவிடில் அன்று என் நிலைமை கந்தல்தான்😪.

ஐம்புலன்களையும் அடக்கி வாழவேண்டும் இலங்கையில் எங்கிருந்தாலும், யார் யார் எப்படியென்றே தெரியா?

நான் யாழில் பொருட்கள் வாங்கிவிட்டு வரும்போது ஒரு வயதுபோன சிங்கள வியாபாரி ஒரு கூடையை என்முன் நீட்டி வாங்குபடி கூற நான் வேண்டாம் என்று நகர சிங்களத்தில் பெரிதாக எதோ திட்டிக்கொண்டேயிருந்தான். நான் திரும்பிப் பார்த்துவிட்டு பதில் கூறாது வந்தேன்.ஏனெனில் திட்டியது எனக்கு விளங்காதது. அடுத்தது நான் விடுமுறையில் சென்றிருந்தது. இன்றுவரை அவனைத் திருப்பித் திடடவில்லையே என்னும் ஆதங்கம் எனக்கு உண்டு.

3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

வாங்கோ நல்வரவு யாழ்ப்பாணம் வந்தால் அங்க வந்து நீங்க சமைச்ச காட்டிய உணவுகளை உண்ண வேண்டும் 😉

உதெல்லாம் ஒரு விஷயமே இல்லை 😃

 

2 hours ago, suvy said:

இதில இவ்வளவுபேர் கருத்தெழுகினம், யாராவது இந்தமாதிரி ஒரு கோரிக்கையை முன்வைத்தார்களா.......என்ன செய்வது விதி வலியது.......!   🤔

நாம் எவர்க்கும் அஞ்சோம் 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

என் சித்திமார் இரண்டுபேர். அம்மாவின் தங்கைகள். இருவர்மேலும் அம்மாவுக்கு அலாதியான அன்பு. அவர்கள் கூறுவதை நம்புவதும் அதற்கு எதிரொலிப்பதும் அம்மாவின்செயல். நான் பல தடவை அம்மாவுக்கு எம்மிலும் பார்க்க சித்திமாரிலேயே அன்பு அதிகமோ என எண்ணியிருக்கிறேன். எனது வீட்டில் சித்தி இருந்தார். என் கணவரின் அண்ணன் குடும்பம் என் தங்கையின் வீட்டில் இருந்தனர். நாங்கள் வெளிநாட்டில்தானே இனி வரமாட்டோம் . சித்தியின் பிள்ளைகளுக்குத்தான் வீடு என்று அவர்கள் எண்ண, தம்பியின் வீடு எங்களுக்குத்தான் என்று கணவரின் அண்ணன் கூறிக்கொண்டு திரிய, சித்தி அம்மாவுக்கு என்ன கூறினாவோ நாங்கள்  கஸ்ரப்பட்டுக் கட்டின வீட்டை உன் மச்சானுக்குக் குடுக்கப்போறியோ என்று அம்மா எனக்கு போன் எடுத்து வாக்குவாதப்பட, உன்ர சித்தியின் மக்களுக்குத்தான் வீடு போகப்போகுது என்று மாற்றப்பக்கத்தால் என்ர அருமை மனிசன் நை நை என்று என் உயிரை வாங்க, எனக்கு வீடும் வேண்டாம் ஒண்டும் வேண்டாம் நின்மதியா இருக்க விடுங்கோ என்று விற்க ஆரமிக்க அதுக்கும் எனக்கு வில் உனக்கு வில் என்று சண்டை. நாம் பிறந்து வளர்ந்த வீடு வெளியே யாருக்கும் விற்கக் கூடாது என்று எண்ணி 75 இலட்சம் விலை போன வீட்டுவளவை தங்கைக்கு 40 லட்சத்துக்குக் கொடுத்துவிட்டேன். விற்றபின்னர் தான் அம்மா தொடக்கம் என்கணவர் சித்திமார், கணவரின் அண்ணா எல்லோரும் அமைதியானார்கள். நானும் ஒருபக்கம் நின்மதியானாலும் பிறந்து வளர்ந்த வீட்டை, எனக்கு என்று கட்டிய வீட்டை விற்றது மனதை அறுத்துக்கொண்டே இருக்கிறது. விதியை யாரால் வெல்ல முடியும் குமாரசாமி???

இது கதைச்சுருக்கம் மட்டுமே 😀

 

வீட்டுக்கு வீடு வாசல் படி ....😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

சிங்களமும் இல்லை.... ஆங்கிலமும் இல்லை.... தமிழும் இல்லை.

கோதாரி பிடித்த காசு இருந்தால் எல்லா வேலையும் நடக்கும்....

கொழும்பில் ஒரு நண்பர்.... ஒன்றாக படித்தவர்... சிங்கள பெண்ணை கலியாணம் கட்டி உள்ளார். 

நானும், இன்னோரு நண்பரும் அவரது வீட்டுக்கு போயிருந்தோம். விஸ்கி.... மேல் வீட்டிலிருந்து ஒரு சுங்க அதிகாரி சிங்களவர் இணைந்தார்.

என்னுடன் கூட வந்த நண்பருக்கு.... இரட்டை குடியுரிமை விண்ணப்பம் இழுபட்டுக் கொண்டே போனது தொடர்பில் விசனத்துடன் பேசினார்.

கேட்டுக்கொண்டிருந்த சிங்களவர்.... அது ஒண்டும் பிரச்னை இல்லை.... எண்டு போனை போட்டு.... பேசி விட்டு... நாளைக்கு இந்த இடத்துக்கு போய்... இந்த ஆபிசரை பாருங்கோ என்று சொல்லி விட்டு... போகும் போது.... ஒரு விஸ்கி போத்தலுடன் போங்கோ என்று கண்ணடித்தார்.....

மறு நாளே அலுவல் முடிந்தது.

On 11/5/2020 at 01:32, உடையார் said:

இலங்கையில் சிங்களம் கதைக்க தெரிந்தால், பல காரியங்களை இலகுவாக செய்யலாம் 

 

On 11/5/2020 at 03:40, nilmini said:

அதுதான் உண்மை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 பிறந்து வளர்ந்த வீட்டை, எனக்கு என்று கட்டிய வீட்டை விற்றது மனதை அறுத்துக்கொண்டே இருக்கிறது. விதியை யாரால் வெல்ல முடியும் குமாரசாமி???

இது கதைச்சுருக்கம் மட்டுமே 😀

 

நான் அப்பவே சொன்னனாலெல்லே பெரிய புடுங்குப்பாடு நடந்திருக்குமெண்டு அருமந்த வீட்டை குப்பை மலிவுக்கு வித்துப்போட்டியள். 
இப்பவும் அந்த வீடு உங்கடை பெயரிலை இருந்திருக்குமெண்டால் "மகாராணி" மாதிரி எல்லே போய் வந்திருப்பியள்.:137_princess:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

இது கதைச்சுருக்கம் மட்டுமே 😀

 

இதை வச்சே 10 கதை எழுதலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, சுவைப்பிரியன் said:

இதை வச்சே 10 கதை எழுதலாம்.

சரி உசுப்பேத்தியாச்சா? அக்காவின்ரை 10 நாள் நித்திரை கெட்டுது போ......:(

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.