Jump to content

ஊரில் ஒரு வீடு வேணும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

கேட்டுக்கொண்டிருந்த சிங்களவர்.... அது ஒண்டும் பிரச்னை இல்லை.... எண்டு போனை போட்டு.... பேசி விட்டு... நாளைக்கு இந்த இடத்துக்கு போய்... இந்த ஆபிசரை பாருங்கோ என்று சொல்லி விட்டு... போகும் போது.... ஒரு விஸ்கி போத்தலுடன் போங்கோ என்று கண்ணடித்தார்.....

மறு நாளே அலுவல் முடிந்தது.

 

விஸ்கி போத்தல்கள் கொஞ்சம் வேலை செய்யும்தான். நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். உங்கள் பதிவை பார்த்ததும்தான் நினைவுக்கு வந்தது 

Link to comment
Share on other sites

  • Replies 277
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 11/5/2020 at 06:51, nedukkalapoovan said:

மிகவும் நல்ல விடயங்கள். எனக்குத்தெரிந்த ஒரு பத்திரிகையாளர் நண்பி நிறய குடும்பங்களை சந்தித்து பேட்டி எடுத்து பத்திரிககைகள் மற்றும் humans of Jaffna என்று முகநூலிலும் நிறய போட்டிருந்தவ. அத்துடன் எமது பிள்ளைகளுக்கு ஆங்கிலம்  படிக்க, Professional development , personal development , வெளிநாடுகளில் எவ்வாறு scholarship எடுத்து படிப்பது என்பனவும் பிரயோசனமாக இருக்கும். கைதடியில் அழகான ஒரு Siddha Teaching Hospital hospital இருக்கு. அங்கு போய்  நிறைய மூலிகைகளின் படங்களை எடுத்து வைத்திருக்கிறேன். அது Government subsidized hospital . நன்றாக பராமரிக்கிறார்கள். ஆனால் எமது சனம்  ஒண்டும் அங்க போய் தமது நிறய நோய்களுக்கு  நிரந்தர தெரிவு காணாமல் ஆஸ்பத்திரியில் போய் தற்காலிக நிவாரணம் தரும் மருந்துகளையே எடுக்கிறார்கள். இப்படி யாரும் போகாவிட்டால் விரைவில் மூடி விடுவார்கள். அத்துடன் வடக்கில் தொடங்கப்படும் இவ்வாறான முயற்சிகள் பெரிய அளவில் தொடங்கப்படுவதில்லை. அல்லது போதிய ஆதரவு மக்களிடம் இருந்து கிடைப்பதில்லை. அதனால் பெரிய அளவில் அவைகள் வளருவதும் இல்லை நிலைப்பதும்  இல்லை. எனக்கு இப்படி ஒரு விருப்பம் இருப்பதால் இவற்றை பற்றி தொடர்ந்து ஆராய்ந்து கொண்டு இருக்கிறேன். சரசாலை  பறவைகள் சரணாலயம் நிறைய பறவைகள் வந்து தாங்கும் இடம். அதனை மேலும் பெருப்பிக்கலாம் . மன்னார்  வங்காலை சரணாலயமும் பெரிய நிலப்பரப்பில் இருக்கு. ஆனால்  கவனிப்பு இல்லை .

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, உடையார் said:

தெகிவளையில் உள்ள கார்கில்ஸில் பொருட்கள் வாங்கியபின் பணம் சொலுத்துவதிற்கு வரிசையில் நின்றபோது பின்னால் இருந்து ஒருத்தன் வயிற்றினால் இடித்துகொண்டு நெருங்கி நின்றான், அப்ப திரும்பி கொஞ்சம் இடைவெளி விட்டு நில் என்று சொன்னேன், திரும்பவும் தள்ள, திரும்பவும் தள்ளி நில் என்றேன், அவன் உடனே கத்திக்கொண்டு தொலைபேசி எடுத்து இங்கு ஒரு தமிழனுக்கு 😡பாடம் படிப்பிக்கனும் வாங்கட என்று காத்த ஆரம்பித்துவிட்டான், அங்கு நின்ற காவல்காரன் இல்லாவிடில் அன்று என் நிலைமை கந்தல்தான்😪.

ஐம்புலன்களையும் அடக்கி வாழவேண்டும் இலங்கையில் எங்கிருந்தாலும், யார் யார் எப்படியென்றே தெரியா?

பிக்பாக்கெட் காரன் போல இருக்கிறது.

ஏனய்யா தமிழனாக இருக்க வேண்டும். இவர்களுடன் எக்காரணம் கொண்டும் சிங்களத்தில் பேசக் கூடாது. 

மீசை இல்லாமல், ஆங்கிலத்தில் பேசுங்கள்.... தள்ளி நின்று கொள்வார்கள்.

நான் கொழும்பில் இருந்த படியால் இவர்களை அறிவேன்.

நீங்களும் போனைப் எடுத்து, உங்கள் நண்பர் ஒரு போலீஸ் அதிகாரியின் பேசுவது போல, இங்கே ஒரு பிக்பாக்கெட் காரன் மாட்டி விடடான். உடனே வாருங்கள் என்று பிளேட்டினை மாத்திப்போடிருந்தால், நழுவி ஓடி இருப்பான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, suvy said:

இதில இவ்வளவுபேர் கருத்தெழுகினம், யாராவது இந்தமாதிரி ஒரு கோரிக்கையை முன்வைத்தார்களா.......என்ன செய்வது விதி வலியது.......!   🤔

எலி போல நான் டெஸ்டிங் செய்கிறேன் அண்ண மீதமானவர்கள் கவனமாக செயற்பட்டால் நல்லது 

 

6 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உதெல்லாம் ஒரு விஷயமே இல்லை 😃

ஹாஹா  சும்மா பகிடிக்கு எழுதினன் யாழ் உறவுகளை காண்பதில் மகிழ்ச்சி அதுவும் ஊரில என்றால் இரட்டிப்பு மகிழ்ச்சி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

 

நான் அப்பவே சொன்னனாலெல்லே பெரிய புடுங்குப்பாடு நடந்திருக்குமெண்டு அருமந்த வீட்டை குப்பை மலிவுக்கு வித்துப்போட்டியள். 
இப்பவும் அந்த வீடு உங்கடை பெயரிலை இருந்திருக்குமெண்டால் "மகாராணி" மாதிரி எல்லே போய் வந்திருப்பியள்.:137_princess:

சும்மா வயித்தெரிச்சலை ஏன் கிளப்புறியள் 😌

4 hours ago, சுவைப்பிரியன் said:

இதை வச்சே 10 கதை எழுதலாம்.

உங்களுக்கு விளங்குது 😂

4 hours ago, குமாரசாமி said:

சரி உசுப்பேத்தியாச்சா? அக்காவின்ரை 10 நாள் நித்திரை கெட்டுது போ......:(

அக்காவா ??????   😀😀

2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

எலி போல நான் டெஸ்டிங் செய்கிறேன் அண்ண மீதமானவர்கள் கவனமாக செயற்பட்டால் நல்லது 

 

ஹாஹா  சும்மா பகிடிக்கு எழுதினன் யாழ் உறவுகளை காண்பதில் மகிழ்ச்சி அதுவும் ஊரில என்றால் இரட்டிப்பு மகிழ்ச்சி

🤓

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/5/2020 at 15:19, nedukkalapoovan said:

இப்படியான சூழலில்.. நிச்சயம் வெளிநாட்டில் இருந்து போகும் உணர்வாளர்களுக்கு கோபம் அடக்கமுடியாத அளவுக்கு எழும்.. கட்டுப்படுத்தப் பழகிக் கொள்ள வேண்டும்.. ஊரில் இருக்க வேண்டின். ஏனெனில்.. எமது கோபத்தை அவர்கள் உணரும் வழிக்குக் காட்ட அங்கு நியாயமான வழியில்லை.. இப்போ. 

இப்படியான சந்தர்ப்பங்களில் எமது மண்ணிலேயே நாம் இரண்டாம் தர குடிமகனாக உணரவேண்டி இருக்கும். இப்படியான சந்தர்ப்ப சூழ் நிலைகளில் நான் என்னையே ஆறுதல் படுத்திக்கொள்வேன் . எல்லாம் ஒரு வட்டம். இன்றைக்கு அவன் காட்டில் மழை . 

21 hours ago, உடையார் said:

தெகிவளையில் உள்ள கார்கில்ஸில் பொருட்கள் வாங்கியபின் பணம் சொலுத்துவதிற்கு வரிசையில் நின்றபோது பின்னால் இருந்து ஒருத்தன் வயிற்றினால் இடித்துகொண்டு நெருங்கி நின்றான், அப்ப திரும்பி கொஞ்சம் இடைவெளி விட்டு நில் என்று சொன்னேன், திரும்பவும் தள்ள, திரும்பவும் தள்ளி நில் என்றேன், அவன் உடனே கத்திக்கொண்டு தொலைபேசி எடுத்து இங்கு ஒரு தமிழனுக்கு 😡பாடம் படிப்பிக்கனும் வாங்கட என்று காத்த ஆரம்பித்துவிட்டான், அங்கு நின்ற காவல்காரன் இல்லாவிடில் அன்று என் நிலைமை கந்தல்தான்😪.

ஐம்புலன்களையும் அடக்கி வாழவேண்டும் இலங்கையில் எங்கிருந்தாலும், யார் யார் எப்படியென்றே தெரியா?

மிகவும் இக்கட்டான சூழ்நிலை அது. அநேகமாக காசு களவெடுக்கத்தான் அப்படி நிண்டிருப்பான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/5/2020 at 07:55, குமாரசாமி said:

அந்த பெரிய கதையை ஒருக்கால் சொல்லுங்கோவன். எப்பிடியும் பெரிய புடுங்குப்பாடு இருந்திருக்கும்.

ஆ இது நீங்களா உங்கடை தங்கச்சியா எழுதியது?
வழமையில் ரதியிடமிருந்தே இப்படியான கேள்விகள் வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன் பக்கம்

E948-F84-F-85-A1-4-E75-8-DE8-119-F6-E1-B

பின் பக்கம்

90347-DC1-1-D54-465-D-AE4-C-E89-A1-AF4-B
மேலே உள்ளது தான் எனது வீடு.95 இல் நடந்த சண்டையின் போது மிகுந்த சேதாரமடைந்தது.முக்கியமான சில வேலைகளை செய்து வைத்தேன்.அந்த நேரம் மாமா(மனைவியின் தகப்பனார்)இருந்தபடியால் பணத்தை அனுப்பி செய்யக் கூடியதாக இருந்தது.இப்போ அவர் இல்லை.
             2015 17என்று இரு தடவைகள் 70 நாட்கள் விடுமுறையில் போய் நின்றேன்.வீடு வளவைப் பார்க்க கண்கள் குளமாகின.17 இல் வீடு திருத்தவென்றே போனேன்.சரியான ஆக்களை பிடிக்க முடிவில்லை.நான் நின்று செய்யுமாப் போல செய்ய ஆளுமில்லை.
              ஒரு காலத்தில் எனது உயிர் அங்கேயே போக வேண்டுமென விரும்பினேன்.இந்த வருடம் போய் கொஞ்சம் வேலை செய்யலாம் என்றிருந்தேன்.ஒவ்வொரு முயற்சியும் பின்னோக்கி போகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ஈழப்பிரியன் said:

முன் பக்கம்

E948-F84-F-85-A1-4-E75-8-DE8-119-F6-E1-B

பின் பக்கம்

90347-DC1-1-D54-465-D-AE4-C-E89-A1-AF4-B
மேலே உள்ளது தான் எனது வீடு.95 இல் நடந்த சண்டையின் போது மிகுந்த சேதாரமடைந்தது.முக்கியமான சில வேலைகளை செய்து வைத்தேன்.அந்த நேரம் மாமா(மனைவியின் தகப்பனார்)இருந்தபடியால் பணத்தை அனுப்பி செய்யக் கூடியதாக இருந்தது.இப்போ அவர் இல்லை.
             2015 17என்று இரு தடவைகள் 70 நாட்கள் விடுமுறையில் போய் நின்றேன்.வீடு வளவைப் பார்க்க கண்கள் குளமாகின.17 இல் வீடு திருத்தவென்றே போனேன்.சரியான ஆக்களை பிடிக்க முடிவில்லை.நான் நின்று செய்யுமாப் போல செய்ய ஆளுமில்லை.
              ஒரு காலத்தில் எனது உயிர் அங்கேயே போக வேண்டுமென விரும்பினேன்.இந்த வருடம் போய் கொஞ்சம் வேலை செய்யலாம் என்றிருந்தேன்.ஒவ்வொரு முயற்சியும் பின்னோக்கி போகிறது.

emotional (உணர்வு பூர்வமாக) ஆக சிந்திக்காமல் rational (அறிவு பூர்வமாக) ஆக சிந்தியுங்கள்.

அங்கு நீங்கள் இருந்த காலம் வேறு. இப்போது காலம் வேறு. இருக்கும் பணத்தினை அங்கு கொட்டாமல்.... எங்கவாது நிம்மதியாக இருக்க பாருங்கள்.

நம்மில் பலருக்கு அங்கு போய் வாழவேண்டும் என்று ஆசை.

ஆசை வேறு, நிதர்சனம் வேறு. வயது போகும் போது, இங்கே வாழ்வது பல வசதிகள். அரசே செய்து தருகிறது.

அங்கே, பிள்ளைகள் உடன் இல்லாவிடில், வாழ்வது அர்த்தமில்லாதது. போய் வரலாம். நிரந்தரமாக வாழ முடியும் என்று தோன்றவில்லை. ஒரு சிறு வருத்தம் வந்தால் போதும். பெரு வருத்தமாக காட்டி.... கோவணத்துடன் தான் வெளியே விடுவார்கள். (இதனை எழுத்தாளர் சுஜாதாவே சொல்லி இருக்கிறார்)

எனது பூர்வீக வீட்டில், உறவினர்கள் வாழ்கிறார்கள். சாதாரணமாக, கழிவறை கூட பயன்படுத்த முடியாத நிலையில் வைத்திருக்கிறார்கள். அவர்களில் பிழை இல்லை. எமது பழக்க வழக்க மாறுதல்களினால், அதனை, நாம் பாவித்த அதே கழிவறையினை, பாவிக்க முடியாத மன நிலை.

இது ஒரு உதாரணம். சமையலில் இருந்து சகலமும் அப்படியே....

சாப்பாட்டுக்கு கூப்பிட்டார்கள் ஒரு உறவினர்கள். சமையல் அறைக்கு கை கழுவ போனால், காலில் கறுப்பாக ஓட்டும் அளவுக்கு அசுத்தம்.... சமயலறையில் இருந்து வெளியே பின் வளவுக்கு போக கதவு. அதை  திறந்து அடிக்கடி போய், வருவதால், மண் வருகிறது என்று சொல்கிறார்கள்.

இதனை சொல்லி மாத்து விக்க முடியும் என்று தோன்றவில்லை.

இங்கே டிவி நிகழ்வில், வீடு, வாசல் எப்படி வைத்துக்கொள்வது, பூந்தோட்டம் எப்படி பராமரிப்பது என்று சொல்லித் தருவார்கள். 

அங்கே, தமிழகத்து குப்பைகள் டிவியில். எப்படி முன்னேறுவது?

அங்கே வாழ தொடங்கும் வெளிநாடு நபர்கள் என்றால், போலீசார் கூட, கிரிமினல்களை அனுப்பி, கொள்ளை அடித்து பங்கு போடுகிறார்களாம்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

என் சித்திமார் இரண்டுபேர். அம்மாவின் தங்கைகள். இருவர்மேலும் அம்மாவுக்கு அலாதியான அன்பு. அவர்கள் கூறுவதை நம்புவதும் அதற்கு எதிரொலிப்பதும் அம்மாவின்செயல். நான் பல தடவை அம்மாவுக்கு எம்மிலும் பார்க்க சித்திமாரிலேயே அன்பு அதிகமோ என எண்ணியிருக்கிறேன். எனது வீட்டில் சித்தி இருந்தார். என் கணவரின் அண்ணன் குடும்பம் என் தங்கையின் வீட்டில் இருந்தனர். நாங்கள் வெளிநாட்டில்தானே இனி வரமாட்டோம் . சித்தியின் பிள்ளைகளுக்குத்தான் வீடு என்று அவர்கள் எண்ண, தம்பியின் வீடு எங்களுக்குத்தான் என்று கணவரின் அண்ணன் கூறிக்கொண்டு திரிய, சித்தி அம்மாவுக்கு என்ன கூறினாவோ நாங்கள்  கஸ்ரப்பட்டுக் கட்டின வீட்டை உன் மச்சானுக்குக் குடுக்கப்போறியோ என்று அம்மா எனக்கு போன் எடுத்து வாக்குவாதப்பட, உன்ர சித்தியின் மக்களுக்குத்தான் வீடு போகப்போகுது என்று மாற்றப்பக்கத்தால் என்ர அருமை மனிசன் நை நை என்று என் உயிரை வாங்க, எனக்கு வீடும் வேண்டாம் ஒண்டும் வேண்டாம் நின்மதியா இருக்க விடுங்கோ என்று விற்க ஆரமிக்க அதுக்கும் எனக்கு வில் உனக்கு வில் என்று சண்டை. நாம் பிறந்து வளர்ந்த வீடு வெளியே யாருக்கும் விற்கக் கூடாது என்று எண்ணி 75 இலட்சம் விலை போன வீட்டுவளவை தங்கைக்கு 40 லட்சத்துக்குக் கொடுத்துவிட்டேன். விற்றபின்னர் தான் அம்மா தொடக்கம் என்கணவர் சித்திமார், கணவரின் அண்ணா எல்லோரும் அமைதியானார்கள். நானும் ஒருபக்கம் நின்மதியானாலும் பிறந்து வளர்ந்த வீட்டை, எனக்கு என்று கட்டிய வீட்டை விற்றது மனதை அறுத்துக்கொண்டே இருக்கிறது. விதியை யாரால் வெல்ல முடியும் குமாரசாமி???

இது கதைச்சுருக்கம் மட்டுமே 😀

 

 

9 hours ago, குமாரசாமி said:

 

நான் அப்பவே சொன்னனாலெல்லே பெரிய புடுங்குப்பாடு நடந்திருக்குமெண்டு அருமந்த வீட்டை குப்பை மலிவுக்கு வித்துப்போட்டியள். 
இப்பவும் அந்த வீடு உங்கடை பெயரிலை இருந்திருக்குமெண்டால் "மகாராணி" மாதிரி எல்லே போய் வந்திருப்பியள்.:137_princess:

ஒரிஜினல் பேரிலை இருந்து கொண்டு, துணிவா குடும்ப விசயங்களை, பிடுங்குப்பாடுகளை எழுதுறதோ?

கடவுளே இனி என்ன பிரச்னை வரப்போகுதோ தெரியவில்லை. புதுசா உறுப்பினர்கள் ஆக சேர்ந்து.... ஆச்சோ, போச்சோ....அப்படியே, இப்படியே.... நாங்கள் வாசிக்க மாட்டம்... எங்களுக்கு தெரிய வராது எண்டு சும்மா எழுதுவதோ.... 40 லட்ச்சத்துக்கோ தந்தனியளோ? 

என்ன கத இது.... உங்களுக்கு எங்க காணி, வீடு இருந்தது.. சொல்லங்கோ பார்ப்பம்... இது எண்ட பூட்டன்... மலேசியன் பெஞ்சனியர் தந்தது.... எண்டு வந்து நிக்காம இருந்தால் சந்தோசம்.... 😎🤑

என்ன சாமியார்.... நான் சொல்லுறது சரியே? 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Nathamuni said:

பிக்பாக்கெட் காரன் போல இருக்கிறது.

ஏனய்யா தமிழனாக இருக்க வேண்டும். இவர்களுடன் எக்காரணம் கொண்டும் சிங்களத்தில் பேசக் கூடாது. 

மீசை இல்லாமல், ஆங்கிலத்தில் பேசுங்கள்.... தள்ளி நின்று கொள்வார்கள்.

நான் கொழும்பில் இருந்த படியால் இவர்களை அறிவேன்.

நீங்களும் போனைப் எடுத்து, உங்கள் நண்பர் ஒரு போலீஸ் அதிகாரியின் பேசுவது போல, இங்கே ஒரு பிக்பாக்கெட் காரன் மாட்டி விடடான். உடனே வாருங்கள் என்று பிளேட்டினை மாத்திப்போடிருந்தால், நழுவி ஓடி இருப்பான்.

 

4 hours ago, nilmini said:

இப்படியான சந்தர்ப்பங்களில் எமது மண்ணிலேயே நாம் இரண்டாம் தர குடிமகனாக உணரவேண்டி இருக்கும். இப்படியான சந்தர்ப்ப சூழ் நிலைகளில் நான் என்னையே ஆறுதல் படுத்திக்கொள்வேன் . எல்லாம் ஒரு வட்டம். இன்றைக்கு அவன் காட்டில் மழை . 

மிகவும் இக்கட்டான சூழ்நிலை அது. அநேகமாக காசு களவெடுக்கத்தான் அப்படி நிண்டிருப்பான் 

நான் இருந்த மனநிலையோ வேறு, இரு மகன்களுக்கு Dehiwala  யில் நின்றபோது டெங்கு வந்து களுபோவில வைத்தியசாலையில் அனுமதித்திருந்தேன், இரவு பகல் நான் தான் வைத்தியசாலையில், இடையில் கடைக்கு பொருட்கள் வாங்க வந்தபோதுதான் இந்த தள்ளு முள்ளு,

நான் களைப்படைந்திருந்ததை கவனித்து நீங்கள் சொன்னமாதிரி பிட்பக்கட் அடிக்க வந்திருக்கலாம். என் பிழை சிங்களத்தில் கதைத்தது. ஆங்கிலத்தில் கதைத்திருக்கனும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, உடையார் said:

 

நான் இருந்த மனநிலையோ வேறு, இரு மகன்களுக்கு Dehiwala  யில் நின்றபோது டெங்கு வந்து களுபோவில வைத்தியசாலையில் அனுமதித்திருந்தேன், இரவு பகல் நான் தான் வைத்தியசாலையில், இடையில் கடைக்கு பொருட்கள் வாங்க வந்தபோதுதான் இந்த தள்ளு முள்ளு,

நான் களைப்படைந்திருந்ததை கவனித்து நீங்கள் சொன்னமாதிரி பிட்பக்கட் அடிக்க வந்திருக்கலாம். என் பிழை சிங்களத்தில் கதைத்தது. ஆங்கிலத்தில் கதைத்திருக்கனும். 

இந்தமாதிரி கேசுகளுக்கு ஆங்கிலம்தான் சரி. தமிழர்களிலும் பார்க்க சிங்களவர் தான் ஆங்கிலத்தை கண்டு நடுங்குவார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Nathamuni said:

emotional (உணர்வு பூர்வமாக) ஆக சிந்திக்காமல் rational (அறிவு பூர்வமாக) ஆக சிந்தியுங்கள்.

அங்கு நீங்கள் இருந்த காலம் வேறு. இப்போது காலம் வேறு. இருக்கும் பணத்தினை அங்கு கொட்டாமல்.... எங்கவாது நிம்மதியாக இருக்க பாருங்கள்.

நம்மில் பலருக்கு அங்கு போய் வாழவேண்டும் என்று ஆசை.

ஆசை வேறு, நிதர்சனம் வேறு. வயது போகும் போது, இங்கே வாழ்வது பல வசதிகள். அரசே செய்து தருகிறது.

அங்கே, பிள்ளைகள் உடன் இல்லாவிடில், வாழ்வது அர்த்தமில்லாதது. போய் வரலாம். நிரந்தரமாக வாழ முடியும் என்று தோன்றவில்லை. ஒரு சிறு வருத்தம் வந்தால் போதும். பெரு வருத்தமாக காட்டி.... கோவணத்துடன் தான் வெளியே விடுவார்கள். (இதனை எழுத்தாளர் சுஜாதாவே சொல்லி இருக்கிறார்)

எனது பூர்வீக வீட்டில், உறவினர்கள் வாழ்கிறார்கள். சாதாரணமாக, கழிவறை கூட பயன்படுத்த முடியாத நிலையில் வைத்திருக்கிறார்கள். அவர்களில் பிழை இல்லை. எமது பழக்க வழக்க மாறுதல்களினால், அதனை, நாம் பாவித்த அதே கழிவறையினை, பாவிக்க முடியாத மன நிலை.

இது ஒரு உதாரணம். சமையலில் இருந்து சகலமும் அப்படியே....

சாப்பாட்டுக்கு கூப்பிட்டார்கள் ஒரு உறவினர்கள். சமையல் அறைக்கு கை கழுவ போனால், காலில் கறுப்பாக ஓட்டும் அளவுக்கு அசுத்தம்.... சமயலறையில் இருந்து வெளியே பின் வளவுக்கு போக கதவு. அதை  திறந்து அடிக்கடி போய், வருவதால், மண் வருகிறது என்று சொல்கிறார்கள்.

இதனை சொல்லி மாத்து விக்க முடியும் என்று தோன்றவில்லை.

இங்கே டிவி நிகழ்வில், வீடு, வாசல் எப்படி வைத்துக்கொள்வது, பூந்தோட்டம் எப்படி பராமரிப்பது என்று சொல்லித் தருவார்கள். 

அங்கே, தமிழகத்து குப்பைகள் டிவியில். எப்படி முன்னேறுவது?

அங்கே வாழ தொடங்கும் வெளிநாடு நபர்கள் என்றால், போலீசார் கூட, கிரிமினல்களை அனுப்பி, கொள்ளை அடித்து பங்கு போடுகிறார்களாம்.
 

நன்றி நாதம்.
இலங்கைக்கு போக முதலே இருந்த எண்ணம் வேறு இரு தடவை போனபின் இருக்கும் எண்ணம் வேறு.
ஐரோப்பாவிலிருந்து இலங்கை போவது போல அமெரிக்காவிலிருந்து போக முடியாது.பயணம் செய்யும் நேரமே ஆளை கொன்றுவிடும்.
       இன்னும் கொஞ்ச காலத்துக்கிடையில் வீடு திருத்தாவிட்டால் இடித்து தான் கட்ட வேண்டும்.

Link to comment
Share on other sites

On 6/5/2020 at 22:40, Kapithan said:

1) சொந்தக் காணியென்றால் பிரச்சனை இல்லை. புதிதாக வேண்டுவதென்றால் நல்ல அனுபவம் மிக்க சட்டத்தரணியை அணுகவும். இல்லையேல் தவறுகள் நிகழ வாய்ப்புகள் அதிகம். (சொந்த அனுபவம் ☹️)

தவறு நிகழக் கூடிய இடங்கள்.

உறுதிப் பத்திரம் Deed / Transfer அதன் மூலப் பத்திரம் (தாய் உறுதி ?) வெளிப்படுத்தல் உறுதி

1) நிலத்தை விற்பவர் யார் ? உரிமையாளர் அல்லது தத்துவப் பத்திரம் (Power of Attorney) வழங்கப்பட்டவர்.

2) வீடு கட்டுவதற்கு அனுமதிக்கப்பட்ட / அனுமதிக்கப்படாத நிலம்.

3) பாதை: தற்காலிக அனுமதி / நிரந்தர அனுமதி / உறுதிப்படுத்தப்பட்ட பாதை

எனது சொந்த அனுபவத்தில் தெரிந்து கொண்டதை இங்கு குறிப்பிடுகிறேன். தவறுகளிருப்பின் விடயமறிந்தவர்கள் தாராளமாகத் திருத்தலாம்.  😀

 

வதிவிட உரிமையைப் பெற இரண்டு வழிகளுண்டு.

1) 2.5 மில்லியன் ரூபாய்களை வதியாதோர் வெளிநாட்டுக் கணக்கில் (?) நீண்டகால வைப்பிலிடல். 

2) கல்வி அடிப்படையிலான அனுமதி

இரட்டை பிரஜாஉரிமை எடுக்கலாம் அதுக்கு யாருக்கும் சொல்லாமல் காணி வாங்கி உங்கள் பெயரில் எழுதலாம் பிறகு காணியைக்காட்டி இலகுவாக பிரஜாஉரிமை எடுக்கலாம் அதுக்கு நல்ல சட்டதரணி இலங்கையில பிடித்தால் சரி ஆண்கள் நல்லம் பெண் சட்டதரணிகள் கடிதம் எழுதவே 15000 ரூபா கேட்கினம் வெளிநாட்டுக்காரன் தானே 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Nathamuni said:

 

ஒரிஜினல் பேரிலை இருந்து கொண்டு, துணிவா குடும்ப விசயங்களை, பிடுங்குப்பாடுகளை எழுதுறதோ?

கடவுளே இனி என்ன பிரச்னை வரப்போகுதோ தெரியவில்லை. புதுசா உறுப்பினர்கள் ஆக சேர்ந்து.... ஆச்சோ, போச்சோ....அப்படியே, இப்படியே.... நாங்கள் வாசிக்க மாட்டம்... எங்களுக்கு தெரிய வராது எண்டு சும்மா எழுதுவதோ.... 40 லட்ச்சத்துக்கோ தந்தனியளோ? 

என்ன கத இது.... உங்களுக்கு எங்க காணி, வீடு இருந்தது.. சொல்லங்கோ பார்ப்பம்... இது எண்ட பூட்டன்... மலேசியன் பெஞ்சனியர் தந்தது.... எண்டு வந்து நிக்காம இருந்தால் சந்தோசம்.... 😎🤑

என்ன சாமியார்.... நான் சொல்லுறது சரியே? 
 

நான் பொய் எழுதாதபடியால் பயப்படேல்லை

11 hours ago, ஈழப்பிரியன் said:

முன் பக்கம்

E948-F84-F-85-A1-4-E75-8-DE8-119-F6-E1-B

பின் பக்கம்

90347-DC1-1-D54-465-D-AE4-C-E89-A1-AF4-B
மேலே உள்ளது தான் எனது வீடு.95 இல் நடந்த சண்டையின் போது மிகுந்த சேதாரமடைந்தது.முக்கியமான சில வேலைகளை செய்து வைத்தேன்.அந்த நேரம் மாமா(மனைவியின் தகப்பனார்)இருந்தபடியால் பணத்தை அனுப்பி செய்யக் கூடியதாக இருந்தது.இப்போ அவர் இல்லை.
             2015 17என்று இரு தடவைகள் 70 நாட்கள் விடுமுறையில் போய் நின்றேன்.வீடு வளவைப் பார்க்க கண்கள் குளமாகின.17 இல் வீடு திருத்தவென்றே போனேன்.சரியான ஆக்களை பிடிக்க முடிவில்லை.நான் நின்று செய்யுமாப் போல செய்ய ஆளுமில்லை.
              ஒரு காலத்தில் எனது உயிர் அங்கேயே போக வேண்டுமென விரும்பினேன்.இந்த வருடம் போய் கொஞ்சம் வேலை செய்யலாம் என்றிருந்தேன்.ஒவ்வொரு முயற்சியும் பின்னோக்கி போகிறது.

உங்களுக்கு அங்கே போய்  இருக்க ஐடியா இருக்கோ அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் பொய் எழுதாதபடியால் பயப்படேல்லை

பொய் சுடாது...


உண்மையாயின். பொது வெளியே பகிராதீர்கள்.

நான் ஒரு உண்மையை சொன்னால், சம்பந்தப்பட்டவர்கள் கேட்டால், யாழ் ஆ... நான் கேள்விப்படவேயில்லை... என்னது யாழ்ப்பாணம் பத்தினதோ எண்டு கதை விட.... நாதமுனியெண்டு.... என்றே தொடங்க மாட்டினம்....

உங்களுக்கு அந்த நிலை இல்லை. ஆகவே உண்மையை சொல்கிறேன் என்று பொது வெளியே குடும்ப கதையினை சொல்லாதீர்கள்....

சரிதானே அக்கா... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ஈழப்பிரியன் said:

 ஒரு காலத்தில் எனது உயிர் அங்கேயே போக வேண்டுமென விரும்பினேன்.இந்த வருடம் போய் கொஞ்சம் வேலை செய்யலாம் என்றிருந்தேன்.ஒவ்வொரு முயற்சியும் பின்னோக்கி போகிறது.

நல்ல வீடு. தோட்டமும் செய்யலாம். கட்டாயம் திருத்தி வீட்டை அழகாக்குங்கள்.

Link to comment
Share on other sites

18 hours ago, ஈழப்பிரியன் said:

ஒரு காலத்தில் எனது உயிர் அங்கேயே போக வேண்டுமென விரும்பினேன்.இந்த வருடம் போய் கொஞ்சம் வேலை செய்யலாம் என்றிருந்தேன்.ஒவ்வொரு முயற்சியும் பின்னோக்கி போகிறது.

பிற்காலத்தில் போய் வாழ்றதுக்கு நல்ல இடம். 
அங்கேயே போய் இருந்தால்  6 - 12 மாதத்துக்குள்ள சோலையா மாத்திடலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உங்களுக்கு அங்கே போய்  இருக்க ஐடியா இருக்கோ அண்ணா

பிள்ளைகளின் திருமணத்துக்கு முன்னர் நாங்களும் இளந்தாரியாக இருக்கும் போது (அந்த நேரம் 62 இளைப்பாறும் வயது இப்போ 65.4 வயது.இன்னும் ஒன்றரை வருடம்)இருந்த எண்ணங்கள் வேறு.இப்போ நியூயோர்க்கில் இருக்கும் பேரன் அப்பப்பா பிளீஸ் அப்பப்பா வாங்கோ எனும் போது மனதைப் பிழிகிறது.இந்த நிலையில் எப்படி சாத்தியமாக போகிறது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nilmini said:

நல்ல வீடு. தோட்டமும் செய்யலாம். கட்டாயம் திருத்தி வீட்டை அழகாக்குங்கள்.

நில்மினி சொன்னா நம்பமாட்டீங்க எமது வளவுக்கு பெயரே தோப்பு.

போய் இருக்காவிட்டாலும் வீடு திருத்தியே ஆகவேண்டும்.இதற்காக பலருடனும் கதைத்தேன்.வெளிநாட்டினர் என்று தெரிந்தவுடன் மனச்சாட்சி இன்றிய விலைகள்.
சரி செய்த வேலைகளைப் பார்த்தா சொதப்பல்.
நீங்கள் நல்லதொரு கட்டடக்காரரை பிடித்திருப்பதாக சொன்னீர்கள்.இவை பற்றி உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டுமென எண்ணியுள்ளேன்.

6 hours ago, Kali said:

பிற்காலத்தில் போய் வாழ்றதுக்கு நல்ல இடம். 
அங்கேயே போய் இருந்தால்  6 - 12 மாதத்துக்குள்ள சோலையா மாத்திடலாம். 

காளி இரண்டு தோணியில் பயணம் செய்த மாதிரி தான் எனது நிலை.

இலங்கைக்கு போக முதல் இரட்டை பிரஜாவுரிமை எடுக்க வேண்டும் என்று நினைத்தேன்.ஆனால் அங்கே இரு தடவை போய் வந்த பின் அந்த எண்ணமே இல்லை.(எப்பவும் மாறலாம்).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

நில்மினி சொன்னா நம்பமாட்டீங்க எமது வளவுக்கு பெயரே தோப்பு.

போய் இருக்காவிட்டாலும் வீடு திருத்தியே ஆகவேண்டும்.இதற்காக பலருடனும் கதைத்தேன்.வெளிநாட்டினர் என்று தெரிந்தவுடன் மனச்சாட்சி இன்றிய விலைகள்.
சரி செய்த வேலைகளைப் பார்த்தா சொதப்பல்.
நீங்கள் நல்லதொரு கட்டடக்காரரை பிடித்திருப்பதாக சொன்னீர்கள்.இவை பற்றி உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டுமென எண்ணியுள்ளேன்.

 

என்ன செய்வது அண்ணா ? அநேகமான வீட்டில் இருக்கும் மரங்களையுமே பராமரிக்க ஆட்களுக்கு பஞ்சி. எமது வீட்டில் பாக்கு , மா, கொய்யா, தென்னை எல்லாவற்றயும் வெட்டி போட்டார்கள். திரும்ப செய்யலாம் தானே? Dwarf சாதி மரங்கள் நடலாம். நான் ஒரு Agriculture officer உடன் கதைத்து வைத்திருக்கிறேன். வீடு கட்டு engineer அவரே Design , plan , building பொறுப்புக்களை எடுத்துள்ளார். இப்ப curfew வுக்கு பிறகு என்னும் வேலை தொடங்கவில்லை. முதல் கட்ட வேலைகள் 1 மாதத்துக்குள் செய்யலாம் என்கிறார். அதை பார்த்துவிட்டு உங்களுக்கு recommend விளக்கமாக எழுதுகிறேன்   விளக்குகிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஈழப்பிரியன் said:

பிள்ளைகளின் திருமணத்துக்கு முன்னர் நாங்களும் இளந்தாரியாக இருக்கும் போது (அந்த நேரம் 62 இளைப்பாறும் வயது இப்போ 65.4 வயது.இன்னும் ஒன்றரை வருடம்)இருந்த எண்ணங்கள் வேறு.இப்போ நியூயோர்க்கில் இருக்கும் பேரன் அப்பப்பா பிளீஸ் அப்பப்பா வாங்கோ எனும் போது மனதைப் பிழிகிறது.இந்த நிலையில் எப்படி சாத்தியமாக போகிறது?

அண்ணா வீட்டை வடிவாகத் திருத்திவிட்டு எனக்கு ஐந்து ஆண்டுகளுக்கு வாடகைக்கு விடுங்கள்.நான் எனக்கு விரும்பிய மரங்கள் நாட்டு சோலையாக்கினதுமாகும்.😃 வீடும் பாதுகாப்பாக இருக்கும். நீங்களும் இடையிடையில்வந்து தாங்கிப் போகலாம். அதுசரி எந்த ஊரில் உள்ளது உங்கள் வீடு ???😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அண்ணா வீட்டை வடிவாகத் திருத்திவிட்டு எனக்கு ஐந்து ஆண்டுகளுக்கு வாடகைக்கு விடுங்கள்.நான் எனக்கு விரும்பிய மரங்கள் நாட்டு சோலையாக்கினதுமாகும்.😃 வீடும் பாதுகாப்பாக இருக்கும். நீங்களும் இடையிடையில்வந்து தாங்கிப் போகலாம். அதுசரி எந்த ஊரில் உள்ளது உங்கள் வீடு ???😎

கந்தர்மடப்பக்கம்....

அது நல்ல ஐடியா..... வீட்டினை திருத்தி.... வாடகைக்கு கொடுப்பது.... இடையிடையே போய் வந்தால் சரி....

ஆனால் சொந்தக்காரர்களை அமர்த்தாமல், ஓரளவு தெரிந்தவர்களை வைத்து உங்களுக்கும் ஒரு ரூமை அட்டாச் பாத்ரூமுடன் கட்டினால் நல்லது. (lawyer மூலம் அக்ரீமெண்ட் போடணும் )

யாழ்ப்பாணத்தில் உள்ள பெரிய பிரச்னை.... sewage  சிஸ்டம் இன்னும் இல்லை. எப்ப வருமோ தெரியாது. அதுக்கு முன்னுரிமை கொடுக்கும் ஐடியா இருப்பதாக தெரியவில்லை.

கந்தர்மடத்தில் உள்ள எனது வீட்டினை, திருத்தி, பல்கலைக்கழக மாணவிகளுக்கு கொடுக்கும் ஐடியா.... சிங்கள மாணவிகள்.... நல்ல பாதுகாப்பான வீடுகள் தேடி அலைகிறார்கள்...

தமிழ் சிறியர் இப்ப... நாடில கை வைத்து யோசிப்பார்... ' அட நல்ல ஐடியா...'

நில்மினி.... உங்கள் ஆலடி சந்தி வீடு, சொந்தக்காரர்கள் இருக்கிறார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

கந்தர்மடப்பக்கம்....

நில்மினி.... உங்கள் ஆலடி சந்தி வீடு, சொந்தக்காரர்கள் இருக்கிறார்களா?

வணக்கம் நாதமுனி.

எனது மாமா மட்டும் தான் (தனி ஆள்) இருக்கிறார். பழைய நாற்சார வீடுதானே  என்று மடம் மாதிரி உறவினர், தெரிந்தவர் என்று எல்லோரும் மாசக்கணக்காக நின்று செல்வார்கள். இப்பதான் என்ர கைக்கு வந்திருக்கு. Vintage home மாதிரி திருத்தி அம்மம்மா இருந்தபோது எப்படி இருந்ததோ அப்படியே கொண்டுவரவேணும் என்று ஒரு ஆசை. பழைய தளபாடங்கள் யாரவது விற்றால் எனக்கு தெரியப்படுத்துங்கள் யாழ் உறுப்பினர்களே. கல்லுப்பாரமாக இருந்த தளபாடங்களே களவாடப்பட்டுவிட்டது .

சிங்களப்பிள்ளைகள் அதுவும் பெண் பிள்ளைகளுக்கு கொடுப்பது நல்ல யோசனை. எனக்கு Airbnb  க்கு  கொடுக்கும் ஐடியா இருக்கு. அதுக்கு மேற்பார்வை பார்க்க ஆக்கள் இருந்தால் மட்டுமே சரிவரும். ஆனால் நல்ல வருமானம் வரும். நானே சிலவேளை யோசிப்பதுண்டு. எமது வீட்டுடன் சேர்த்து எனது மச்சாள் மாரின் வீடுகளையும் Airbnd க்கு கொடுத்து பராமரித்தாலே இங்க உழைப்பதை போல வருமானம் வரும். அத்துடன் யாழில் இருந்துகொண்டு ஏதாவது சேவையும் செய்யலாம். யாழ் மருத்துக்கல்லூரியிலும் படிப்பிக்கலாம் என்று. மனம் அப்படிதான் சொல்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nilmini said:

வணக்கம் நாதமுனி.

எனது மாமா மட்டும் தான் (தனி ஆள்) இருக்கிறார். பழைய நாற்சார வீடுதானே  என்று மடம் மாதிரி உறவினர், தெரிந்தவர் என்று எல்லோரும் மாசக்கணக்காக நின்று செல்வார்கள். இப்பதான் என்ர கைக்கு வந்திருக்கு. Vintage home மாதிரி திருத்தி அம்மம்மா இருந்தபோது எப்படி இருந்ததோ அப்படியே கொண்டுவரவேணும் என்று ஒரு ஆசை. பழைய தளபாடங்கள் யாரவது விற்றால் எனக்கு தெரியப்படுத்துங்கள் யாழ் உறுப்பினர்களே. கல்லுப்பாரமாக இருந்த தளபாடங்களே களவாடப்பட்டுவிட்டது .

சிங்களப்பிள்ளைகள் அதுவும் பெண் பிள்ளைகளுக்கு கொடுப்பது நல்ல யோசனை. எனக்கு Airbnb  க்கு  கொடுக்கும் ஐடியா இருக்கு. அதுக்கு மேற்பார்வை பார்க்க ஆக்கள் இருந்தால் மட்டுமே சரிவரும். ஆனால் நல்ல வருமானம் வரும். நானே சிலவேளை யோசிப்பதுண்டு. எமது வீட்டுடன் சேர்த்து எனது மச்சாள் மாரின் வீடுகளையும் Airbnd க்கு கொடுத்து பராமரித்தாலே இங்க உழைப்பதை போல வருமானம் வரும். அத்துடன் யாழில் இருந்துகொண்டு ஏதாவது சேவையும் செய்யலாம். யாழ் மருத்துக்கல்லூரியிலும் படிப்பிக்கலாம் என்று. மனம் அப்படிதான் சொல்கின்றது.

airbandb & booking.com இரண்டுமே நல்ல ஐடியா. ஆனால்.... அங்கு பொறுப்பான ஒருவர் இல்லாவிடில் யாவாரம் படுத்துவிடும்.

உதாரணமாக கெஸ்ட் வருமுன்னர் சுத்தம் செய்யவேண்டும். பொறுப்பானவர்... கலியான வீடு.... சாமத்தியவீடு.... அல்லது காச்சல்..... எண்டால் போக மாட்டார்....

கெஸ்ட்.... ரிவியூ போட்டு கதையை காலி பண்ணி விடுவார்கள்.

ஒருவர் முழு நேரமாகவும்.... இன்னோருவர் பகுதி நேரமாகவும் செய்யவேண்டும். போய் நின்று சுத்தம் செய்யும் முறைகள், கிளௌஸ் பாவனை.... வெளிநாட்டு சமையல் செய்து கொடுத்து.... எக்ஸ்ட்ரா வருமானம் பார்க்கும் வழி வகைகள் சொல்லிக் கொடுத்து வரவேண்டும்....

சிறப்பான வேலை.... இரண்டு மூண்டு வீடுகள் வாடைக்கு எடுத்து.... சுவியர், ஈழப்பிரியர், சுமே போல யாராவது போய் நிற்க விரும்புபவர்களின் உதவிகள் பெறுவது. தமது வீடுகளுடன் உங்களுடையதையும் கவனிப்பார்கள். அவர்களுக்கும் பொழுது போகும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.