Jump to content

ஊரில் ஒரு வீடு வேணும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சகாறா அக்கா , மீரா உங்கள் இருவரது வீட்டை பார்க்க ஆசையாய் உள்ளது .
சகாறா அக்கா உங்கள் வீடு எத்தனை அறைகளை கொண்டது...அதற்கு அண்ணளவாய் எவ்வளவு முடிந்தது என்று சொல்ல முடியுமா?
 

Link to comment
Share on other sites

  • Replies 277
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சரி சரி எல்லாரும் உங்கடைவிலாசத்தை சொல்லுங்கோ போய்ப் பாத்திட்டு வாரன்;

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, சுவைப்பிரியன் said:

சரி சரி எல்லாரும் உங்கடைவிலாசத்தை சொல்லுங்கோ போய்ப் பாத்திட்டு வாரன்;

அண்ணா, திருகோணமலை பக்கம் போவதென்டால் தனிமடலில் தெரிவியுங்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழர்கள்  குடும்பத்துக்கு ஒரு வீடாவது தங்கள் தங்கள் ஊரில் கட்ட வேண்டும்.இல்லையேல் இருக்கும் வீடுகளையாவது புனரமைத்து பரமாரிக்க வேண்டும்.

 எமது சந்ததிகளுக்கு சொந்த இருப்பிடம் ஒன்று நிச்சயம் வேண்டும்.இவர்கள் இங்கு பிறந்து வளர்ந்தாலும் இலங்கை எமது பூர்வீகம் என்று சொல்லாமல் எமது மண் என்று என்று சொல்ல வைக்க வேண்டும். 
நாளைய பொழுதும் உலகமும் எப்படி மாறுமென்று யாருக்கும் தெரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

புலம்பெயர் தமிழர்கள்  குடும்பத்துக்கு ஒரு வீடாவது தங்கள் தங்கள் ஊரில் கட்ட வேண்டும்.இல்லையேல் இருக்கும் வீடுகளையாவது புனரமைத்து பரமாரிக்க வேண்டும்.

 எமது சந்ததிகளுக்கு சொந்த இருப்பிடம் ஒன்று நிச்சயம் வேண்டும்.இவர்கள் இங்கு பிறந்து வளர்ந்தாலும் இலங்கை எமது பூர்வீகம் என்று சொல்லாமல் எமது மண் என்று என்று சொல்ல வைக்க வேண்டும். 
நாளைய பொழுதும் உலகமும் எப்படி மாறுமென்று யாருக்கும் தெரியாது.

உண்மை தான் தாத்தா
எப்ப‌வும் சூழ் நிலை ஒரு மாதிரி இருக்காது ,

முர‌ட்டு சிங்க‌ள‌வ‌னின் குன‌ம் யாழ் உற‌வுக‌ளுக்கு தெரியாம‌ இல்லை , 

புல‌ம்பெய‌ர் நாட்டில் பிற‌ந்த‌ பிள்ளைக‌ள் புல‌ம் பெய‌ர் நாட்டில் தான் வாழ் விரும்புவின‌ம் , 

நான் என் ம‌ன‌சில் ப‌ட்ட‌த‌ மேலே எழுதி விட்டேன் , என‌க்கும் ஊரில் வீடு க‌ட்ட‌ விருப்ப‌ம் ஆனால் சிங்க‌ள‌ ஓனாய்க‌ளுக்கு கீழ‌ அடிமை வாழ்க்கை வாழ‌ பிடிக்காது என்று /

இனி த‌மிழ‌ர்க‌ளுக்கும் சிங்க‌ள‌வ‌ர்க‌ளுக்கும் விரிச‌ல் வ‌ந்தா 1983ம் ஆண்டு முர‌ட்டு சிங்க‌ள‌வ‌ன் என்ன‌ செய்தானோ அதை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அட்டூழிய‌த்தை செய்வான் 😡 / இது என‌து த‌னிப்ப‌ட்ட‌ க‌ருத்து 🤞

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/5/2020 at 04:56, Knowthyself said:

 

தீயாகங்களை பற்றியும் கதைப்போம் காற்று வராத பெட்டிகளையும் கட்டுவோம் என்ன ஞாயமிது, வீடில்லாதோர் ஒருபுறம் வீட்டுக்குமேல் வீடுகட்டுவோர் மறுபுறம், ஏற்றதாழ்வுகளை நல்லா கூட்டுங்கோ, தமிழ் தேசியம் நல்லா விளங்கும்! என்ன கொடுமையிது

உடையது விளம்பேல்

ஊரில் காணிபூமி வாங்கியோ இருக்கிற வீட்டையோ யாராவது புதிதாக்கி போயிருக்க அவர்களுக்கு ஆதரவாக இருங்கள்.எல்லாவற்றுக்குள்ளும் தமிழ்தேசியத்தை புகுத்தி கோவணத்தோடு தமிழனை அலைய விடாதீர்கள்.
        வெளிநாடுகளில் பிறந்த பிள்ளைகள் அனேகமாக கோடை விடுமுறைக்கு போகிறார்கள் ஊர் சுற்றி பார்க்கிறார்கள்.பகலில் மாத்திரமல்ல இரவில் கூட நித்திரை கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள்.ஒரு பக்கம் வெக்கை மறு பக்கம் நுளம்பு.இதற்காகவே பலபேர் இரவுகளில் விடுதிகளில் போய் தங்குகிறார்கள்.
         75-80 லட்சம் செலவு செய்து வீடு கட்டும் போது ஓரிரு லட்சம் செலவு செய்து குளிரூட்டி போடுவது தவறல்ல.
         யாராவது வீடு கட்டிப் போகிறேன் திருத்தப் போகிறேன் என்றால் ஓரிரு அறைகளுக்காவது குளிரூட்டியை போடுங்கள்.அத்தோடு இன்னுமொரு 2 லட்சம் செலவு செய்து கமராவும் போடுங்கள்.அரசு மக்களை பாதுகாப்பது போல தெரியவில்லை.சிறிய பாதுகாப்பாவது எங்களுக்கு இருக்கட்டும்.
         தமிழ்தேசியத்தை கதைப்பதற்கு சந்தோசம்.உங்க பெயரே சொல்ல கஸ்டமாக உள்ளது.தமிழில் ஒரு பெயரை வைக்க முயற்சி பண்ணுங்கள்.
நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/5/2020 at 03:33, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அண்ணாஅதுசரி எந்த ஊரில் உள்ளது உங்கள் வீடு ???😎

இருபாலை

Link to comment
Share on other sites

6 hours ago, ஈழப்பிரியன் said:

ஊரில் காணிபூமி வாங்கியோ இருக்கிற வீட்டையோ யாராவது புதிதாக்கி போயிருக்க அவர்களுக்கு ஆதரவாக இருங்கள்.எல்லாவற்றுக்குள்ளும் தமிழ்தேசியத்தை புகுத்தி கோவணத்தோடு தமிழனை அலைய விடாதீர்கள்.
        வெளிநாடுகளில் பிறந்த பிள்ளைகள் அனேகமாக கோடை விடுமுறைக்கு போகிறார்கள் ஊர் சுற்றி பார்க்கிறார்கள்.பகலில் மாத்திரமல்ல இரவில் கூட நித்திரை கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள்.ஒரு பக்கம் வெக்கை மறு பக்கம் நுளம்பு.இதற்காகவே பலபேர் இரவுகளில் விடுதிகளில் போய் தங்குகிறார்கள்.
         75-80 லட்சம் செலவு செய்து வீடு கட்டும் போது ஓரிரு லட்சம் செலவு செய்து குளிரூட்டி போடுவது தவறல்ல.
         யாராவது வீடு கட்டிப் போகிறேன் திருத்தப் போகிறேன் என்றால் ஓரிரு அறைகளுக்காவது குளிரூட்டியை போடுங்கள்.அத்தோடு இன்னுமொரு 2 லட்சம் செலவு செய்து கமராவும் போடுங்கள்.அரசு மக்களை பாதுகாப்பது போல தெரியவில்லை.சிறிய பாதுகாப்பாவது எங்களுக்கு இருக்கட்டும்.
         தமிழ்தேசியத்தை கதைப்பதற்கு சந்தோசம்.உங்க பெயரே சொல்ல கஸ்டமாக உள்ளது.தமிழில் ஒரு பெயரை வைக்க முயற்சி பண்ணுங்கள்.
நன்றி.

 

முன்னர் இலங்கையில் ஏற்றதாழ்வுகளின் இடைவெளி குறைவு, இதை இந்தியாவாக மாற்றி விடாதீர்கள் 

சதுரமாக வீடு கட்டுவதால் காற்றின் வேகத்தையும் சுழற்சியையும் தடுக்கிறீர்கள், இன்னும் நிறைய விசையங்கள் இருக்கு

வீட்டின் உள்ளக வடிவமைப்புக்காக பாவிக்கபடும் பொருட்கள் இத்தாலியிலையும் இருந்து வருது. இதுக்கவேற பொருளாதார நிபுனர்கள் போல் வேலைவாய்ப்பை பெற்று தருகிறார்களாம், நெஞ்சதொட்டுசொல்லுங்கோ, கடசி தொழிலாலிக்கு ஒரு 10,000 ரூபாய் கூட கிடைத்திருக்காது, அவர்களை ஏழைகளாகவே வைத்திருப்பதை உறுதிப்படுதுகிறீர்கள்.

எனது பூமித்தாயை நாசம் பன்னாம நீங்கள் வேண்டுமென்றால் சந்திரனில் வீடுகட்டி குளிரூட்டி போட்டு தங்கு திங்கென்று ஆட்டம் போடுங்கோ, விடுதலை புலிகள் செய்த்தையென்றாலும் கொஞ்சம் செய்ய முயற்சிசெய்யுங்கள். குனிஞ்சு ஒரு சாமான்கள் எடுக்கேலாத வெளிநாட்டு குஞ்சுகள் படுக்க கரச்சலென்டால் கஸ்ட்டம்தான்.

சமயமென்றோம், சாதியென்றோம், சிங்களர் மொழியை, கானியை, கல்வியை, அபிவிருத்தி தரவில்லை/செய்யவில்லையென்றோம், இயக்மென்றோம். இப்ப (நாங்களாகவே), பொருளாதாரத்தில் மிகப்பெரிய இடைவெளியை ஏற்படுத்தி அன்போடும் மதிப்போடும் இருந்த எங்களை கள்ளர்களாகவும் காடையர்களாகவும் வண்மம்மிக்கவர்களாகவும் துண்டு துண்டாக்கி வைத்துள்ளீர்கள்.

எனது அழகான அன்புமிகு குடும்பமும் இடம்பெயர்ந்தது, எங்களுக்த்தெரிந்த களவுசெய்பவர் ஒருவரும் எல்லா வீடுகளிலும் களவு எடுப்பதாக கேள்விபட்டோம், ஆனாலும் திரம்பி சென்று பார்க்கும் போது எல்லாம் அப்படியே இருந்தன, ஏனென்றால் அப்பா உதவியென்று வருவோர்க்கு அள்ளியள்ளி கொடுத்தார் நெல்லாக காய்கறியாக, அந்த கள்ளருக்கும் அடங்கலாக, அன்பாகவும் இருந்தார்.

எனது புனைபெயர் தமிழில் அர்த்த படுத்தினால் மிகவும் இலகு, உனை நீ அறி, திரும்பவும் சொல்கிறேன் உனை நீ அறி.

சொந்த பெயரில் யாழில் இணையவேண்டுமென்று சட்டமில்லையென்று நினைக்கிறேன். உங்களுக்கு கட்டாயம் தேவையென்றால் தனிமடலில் தொடர்புகொள்ளலாம்.

 

இதுக்கவேற யாழிலும் குழுயிருக்கு

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா 


நான் ஒரு PRINCIPAL லோட வாழுறவன் புரியலே ஒரு கோடுபோட்டு வாழுறவன்

[5:50]

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Knowthyself said:

முன்னர் இலங்கையில் ஏற்றதாழ்வுகளின் இடைவெளி குறைவு, இதை இந்தியாவாக மாற்றி விடாதீர்கள் 

சதுரமாக வீடு கட்டுவதால் காற்றின் வேகத்தையும் சுழற்சியையும் தடுக்கிறீர்கள், இன்னும் நிறைய விசையங்கள் இருக்கு

வீட்டின் உள்ளக வடிவமைப்புக்காக பாவிக்கபடும் பொருட்கள் இத்தாலியிலையும் இருந்து வருது. இதுக்கவேற பொருளாதார நிபுனர்கள் போல் வேலைவாய்ப்பை பெற்று தருகிறார்களாம், நெஞ்சதொட்டுசொல்லுங்கோ, கடசி தொழிலாலிக்கு ஒரு 10,000 ரூபாய் கூட கிடைத்திருக்காது, அவர்களை ஏழைகளாகவே வைத்திருப்பதை உறுதிப்படுதுகிறீர்கள்.

இலங்கையில் இந்தியா மாதிரி மிக பெரிய ஏற்றதாழ்வுகள் இடைவெளிகள் ஏற்படுத்தி மாற்றியமைப்பது வெளிநாடுகளில் உள்ள ஒரு பகுதி ஈழ தமிழர்களினால் மிகவும் விரும்பபடுகிறது.சிங்க‌ள‌வ‌ன் ஓட‌ கை குலுக்கிவிட கூடாது அது மட்டும் தான் நிபந்தனை மற்றபடி 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப பூமியில் வீடு கட்டுவது பிரச்சனையா அல்லது ஊரில் கட்டுவது பிரச்சனையா.

உங்களுக்கு பொறாமை & எரிச்சல் 

அங்கு இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட இடத்திலேயே குடியிருக்க சனம்இல்லை.

மேற்கு நாடுகளில் நீங்கள் சுடுநீருக்காகவும் வீட்டை வெப்பமாக்கவும் உபயோகிக்கும் bioler இருந்து வெளியிடும் Co2 இனால் உங்கள் பூமித்தாய் நாசமடையாதா அதுமட்டுமல்ல உங்களது கார்களிலிருந்து வெளியிடும் Co2 இன் நிலை என்ன?

ஏதோ தாங்கள் மட்டும்தான் பூமித்தாயில் அக்கறை என்டு பீலா காட்ட வேண்டாம். 

ஊரியேலே படித்து உழைத்து எத்தனையோ பேர் கோடிக்கணக்கான பெறுமதியில் வீடுகளை கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

எனக்கு தெரிந்து Planning permission இல் ventilation ற்கு  Air condition எல்லாம் போட்டு காட்டேலாது...எதிர் சுவர் அல்லது எல்லையிலிருந்து 5 அடி இடைவெளி. அத்தோடு air condition க்கு அனுமதி தேவையில்லை.

சாதாராண உதவித் தொழிலாளிக்கு 1500/= நாள் சம்பளம். Slap concrete போடும் போது எல்லோருக்கும் 500/= கூடுதல்.

நகர சபையின் அனுமதி இல்லாமல் எதுவும் கட்ட ஏலாது அதிலும் 2000 சதுர அடிக்கு மேல் என்றால் Urban Development Authority அனுமதி. அவர்கள் planning permission இல் சதுரமா வட்டமா என்று பார்த்துதான் அனுமதிப்பார்கள். சதுரமாக கட்ட கூடாது என்று ஒரு தடையும் இல்லை....

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விமான நிலையத்திலிருந்து அரச திணைக்களங்கள் வங்கிகள் தனியார் நிறுவனங்கள்  இலத்திரனியல் கடைகள், பலசரக்கு கடைகள் வரை குளிரூட்டிகள் உபயோகிக்கிறார்கள். 

தீக்கோழி மண்ணுக்குள் தலையை புதைத்த நிலை தான்.....

நீங்க கோடு போட்டு வாழுங்கோ அல்லது வட்டம் போட்டு வாழுங்கோ, அது உங்கட சுதந்திரம் / பிரச்சனை.

இப்போ சுமோக்கு விளங்கியிருக்கும்  காணி வாங்கியவுடன் சுற்று மதிலை ஏன் கட்ட வேண்டும் என்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Knowthyself said:

எனது அழகான அன்புமிகு குடும்பமும் இடம்பெயர்ந்தது, எங்களுக்த்தெரிந்த களவுசெய்பவர் ஒருவரும் எல்லா வீடுகளிலும் களவு எடுப்பதாக கேள்விபட்டோம், ஆனாலும் திரம்பி சென்று பார்க்கும் போது எல்லாம் அப்படியே இருந்தன, ஏனென்றால் அப்பா உதவியென்று வருவோர்க்கு அள்ளியள்ளி கொடுத்தார் நெல்லாக காய்கறியாக, அந்த கள்ளருக்கும் அடங்கலாக, அன்பாகவும் இருந்தார்.

கள்வர்கள் சொந்தக்காரர் வீடுகளில் கன்னம் வைப்பதில்லை .

Link to comment
Share on other sites

 

நீங்கள் எப்படியும் கட்டலாம், எனது வாதம் எந்த இடத்தில் எந்த காலக்தில், எந்த சூல்லுக்கேற்ப கட்டபடுவது பற்றியது பற்றி.

உ+ம்; நீங்கள் மேல்மாடியில் போட்டிருக்கும் இரும்பு கம்பிகளில் இருந்து மன்சூன் மழைக்கு குறைந்தது இரண்டு வருடத்தில் கறள் ஒழுகுவது உறுதி, உனக்கென்ன அதுக்கு என்று எழுதமாட்டிங்கள் என்று நினைக்கிறன்

On 17/5/2020 at 02:59, MEERA said:

நீங்கள் அண்மையில் ஊருக்கு சென்றிருக்கிறீர்களா??

வெளிநாட்டு உதவியின்றி சொந்த முயற்சியில் முன்னேறிய மக்கள் அங்கு

 

அது ஒகானிக்குறோத் வெளிநாட்டில் போவோரால் செய்யபடுவது பலன்சில்லாமல் ஆக்கும் வேலை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Knowthyself said:

 

நீங்கள் எப்படியும் கட்டலாம், எனது வாதம் எந்த இடத்தில் எந்த காலக்தில், எந்த சூல்லுக்கேற்ப கட்டபடுவது பற்றியது பற்றி.

உ+ம்; நீங்கள் மேல்மாடியில் போட்டிருக்கும் இரும்பு கம்பிகளில் இருந்து மன்சூன் மழைக்கு குறைந்தது இரண்டு வருடத்தில் கறள் ஒழுகுவது உறுதி, உனக்கென்ன அதுக்கு என்று எழுதமாட்டிங்கள் என்று நினைக்கிறன்

Anti rust paint கேள்விப்பட்டதில்லையா?

வீட்டை கட்டினால் மட்டும் போதாது, நன்றாக பராமரிக்கவும் வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Knowthyself said:

நான் ஒரு PRINCIPAL லோட வாழுறவன் புரியலே ஒரு கோடுபோட்டு வாழுறவன்

நடை முறைக்கு சாத்தியமில்லாத கொள்கைகளைக் கொண்டுள்ளீர்கள்.
தனி நபராக இருந்தா என்ன ஒரு நாடாக இருந்தா என்ன காலத்துக்கு காலம் உலக சூழலுக்கேற்ப மாற்றிக் கொண்டே போகிறார்கள்.
     உங்களுடன் முரண்பட்டுக் கொண்டிருக்க விருப்பமில்லை.
ஆனாலும் ஒரு வேண்டுகோள்.
    புலம் பெயர்ந்தவர்கள் ஊர் திரும்பும் போது அதைஇத சொல்லி கொச்சைப்படுத்தாதீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Knowthyself said:

முன்னர் இலங்கையில் ஏற்றதாழ்வுகளின் இடைவெளி குறைவு, இதை இந்தியாவாக மாற்றி விடாதீர்கள்

 

1 hour ago, Knowthyself said:

உங்கள் முன்னேற்றம் என்ன, உழைப்பில்லா ஊதின உதவாத மக்கள்கூட்டத்தை உருவாக்குவதிலா?

வெளிநாட்டில் உழைப்பவர்கள், அங்கு காசை அனுப்பும் பொது. அதுவும் தொடர்ச்சியாக, ஏற்றத்தாழ்வு ஏற்படுகிறது. 

பலவழிகளில் அது உண்மையில் தீங்கில் முடிகிறது. அத்துடன், உழைப்பவரையும் பாரதூரமாக  தாக்குகிறது. பொதுவாக அங்கிருக்கும் வெளிநாட்டில் உழைப்பவரின் பெற்றோர் கூட, உடனடியாக கிடைக்கும் வசதி வாய்ப்புகளையே உவக்கின்றனர். இங்கு உழைப்பவரின் நிலையை, எதிர் காலத்தை புறக்கணிக்கின்றனர்.

இதை நான் பொதுவாகா மிகவும் கண்டிக்கிது இங்கு எழுதி உள்ளேன். ஓர் பயனுள்ள தேவைக்காக, அது அநேகமாக முதலீடாகத்தான் இருக்கும், கல்வி தொழில் கல்வி கூட, மேற்கல்வி, அல்லது தொழில் முயற்சிற்கு அனுப்படுவது வேறு. ஆனால் அப்படி அனுப்பப்படுவத்து வெகு குறைவு.      

அனுப்புவது நின்றவுடன் எத்தனையோ  பெற்றோர் கூட உறவில்லை என்று முறித்தது  என்பதை  நம்பவேண்டி உள்ளது.      

 

4 hours ago, Knowthyself said:

வீட்டின் உள்ளக வடிவமைப்புக்காக பாவிக்கபடும் பொருட்கள் இத்தாலியிலையும் இருந்து வருது. இதுக்கவேற பொருளாதார நிபுனர்கள் போல் வேலைவாய்ப்பை பெற்று தருகிறார்களாம், நெஞ்சதொட்டுசொல்லுங்கோ, கடசி தொழிலாலிக்கு ஒரு 10,000 ரூபாய் கூட கிடைத்திருக்காது, அவர்களை ஏழைகளாகவே வைத்திருப்பதை உறுதிப்படுதுகிறீர்கள்.

Housing economy ஐ முழுதும் அறியாதவராக இருக்கிறீர்கள்.

ஒருவர் தன் உழைத்த பணத்தில் காணியை வாங்கி அல்லது ஏற்கனவே இருக்கும் வெறுமையான காணியில் புதிதாக தான் உழைத்த பணத்தை கொண்டு வீடு கட்டப்படும் போது, அது பரந்த சமூகத்தில் ஏதோ ஓர் விதமாக productive economy ஐ, தற்காலிகமாகவேனும் உருவாக்கும்.

ஏற்கனவே தன்னிடம் இருக்கும் வீட்டை, சொந்த பணத்தில் புனருத்தாரணம் செய்யும் போதும், அது பரந்த சமூகத்தில் ஏதோ ஓர் விதமாக productive economy ஐ,  உருவாக்கும்.

உழைத்த பணத்தில் செய்வது, ஒருவர் தான் அடையும் பலனால்    (அதாவது வீட்டில் வசதிகளுடன் வசிப்பது மற்றும் மனத்திருப்தி போன்றவை ) அவரை மட்டுமின்றி, சமூகத்திற்கு தன்னாலான பொருளியல் பங்களிப்பு செய்து விட்டே பலனை அனுபவிக்கிறார் என்பதே பொருளியல் உண்மை.

அப்படி அந்த வீட்டை (அல்லது எதுவாககட்டும்) கட்டும்போது அதற்கான பொருட்கள் (கட்டுமான பொருட்கள் மற்றும் finishing items) , அந்த வீடு உள்ள பகுதியில், வடகிழக்கில் (தமிழர்கலின் பொருளாதாரத்தை மட்டும் வைத்து பார்க்கும் போது), அல்லது இலங்கைத் தீவில் வாங்கப்பட்டால், அந்த பொருட்கள் இத்தாலியில்  செய்யப்பட்டு வந்ததாயினும் (முகவர் அல்லது நேரடியாக), அது பரந்த சமூகத்தில் productive economic activity.    
 
இதனால் தான் housing boom (new construction, reconstruction, repairing and refurbishment, and as a result value rise) , சொந்த பணத்தால் மட்டும் ஏற்பட்டால், சமூகம் உண்மையான பொருளாதார அபிவிருத்தியும், வளர்ச்சியும், வாழ்க்கைத்தரமும் உண்மையில் உயரும்.
      
இதை ஒருவர் வங்கியிடம் இருந்து பணத்தை கடனாக பெற்று செய்வாராயின், பரந்த சமூகத்தையும் எதோ ஒரு விதமாக  கடன் சுமையை சுமக்கச் செய்யும்.

அதனால், சொந்த பணத்தில் வீடு கட்டுவது, பரந்த சமூகத்திற்கு productive economy (as opposed to Rentier economic activities and  practices, which is  exploitative) ஐ சமூகத்திற்கு வழங்கும். Rentier economy இல் ஒரு பகுதி வளரும், மாரு பகுதி தேயும்.

வடகிழக்கில் பொதுவாக (அங்கிருப்பர்வர்களும், வெளிநாட்டில் இருப்பவர்களும்) தம்முடைய உழைத்த பணத்திலேயே கட்டுகிற படியால், அது அபிவிருத்தியாகவும், வளர்ச்சியாகவும், வளைக்கைத்தரம் உயர்வடைகிறது என்றே எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.   

ஆனால், எந்தவொரு economic system ஆலும்  இதுவரை extreme poverty (dirt poor, இது கூட ஒப்பீட்டளவில்) ஐ நீக்க முடியவில்லை என்பதும் உண்மை.

ஆனால், யுத்தத்தால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிறுவனமயப்படுத்தப்பட்ட உதவிகள் தேவை என்பதையும் ஏற்றுக்கொள்கிறேன். அதற்கு விக்கி மிகவும் முயன்றார் (முதலமைச்சர் நிதியம் மூலம் நேரடியாகவே வட மாகாண சபை சட்ட அடிப்படையில் நிதி பெறுவதத்திற்கு), சிங்களளம் தடுத்து விட்டது.

ஆயினும், யுத்தத்தில் அகப்பட்டு மீண்டவர்கள், வேலை செய்யக் கூடியவர்கள்,  இத்தகைய பொருளாதார பங்களிப்பு மறைமுகமான உதவிகளை செய்யும், அதாவது productive economic activities பரந்த சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தின் ஊடாக.        
   

 குறிப்பிட்ட ஓர் வீடு கட்டப்படும் போது வேண்டிய நாட்கூலி மூலம் மட்டும் 10000 உழைத்தார்களா என்று சொல்ல முடியாது, ஆனாலும் நான் அறிந்த  வரையில், நாட்கூலி செய்பவர், ஆகக் குறைந்தது  15-20 நாட்கள் (நினைவில் உள்ளவரை 2015 க்கு முதல்) இற்கு வேலை செய்தால், 10000 க்கு மேல் உழைப்பார்கள். நாட்கூலியின் பெறுமதி அவ்வளவு ஏறி விட்டது.  

 இலங்கையில் உள்ளவர்களும் வசதி இருந்தால், இப்படி வீடுகளை கட்டுகின்றனர். அதை பற்றிய உங்கள் கருத்து என்ன. 

Link to comment
Share on other sites

28 minutes ago, ஈழப்பிரியன் said:

நடை முறைக்கு சாத்தியமில்லாத கொள்கைகளைக் கொண்டுள்ளீர்கள்.
தனி நபராக இருந்தா என்ன ஒரு நாடாக இருந்தா என்ன காலத்துக்கு காலம் உலக சூழலுக்கேற்ப மாற்றிக் கொண்டே போகிறார்கள்.
     உங்களுடன் முரண்பட்டுக் கொண்டிருக்க விருப்பமில்லை.
ஆனாலும் ஒரு வேண்டுகோள்.
    புலம் பெயர்ந்தவர்கள் ஊர் திரும்பும் போது அதைஇத சொல்லி கொச்சைப்படுத்தாதீர்கள்.

 

எனது அழகான இலங்கை தீவைப்பற்றி கதைக்கிறேன், wealth well-being பற்றி கதைக்கிறேன் நீங்கள் பணம் பார்பது, வறட்டு கௌவுரவத்தை பற்றி கதைக்கிறீங்கள்

நீங்கள் தானேசொல்கிறீங்கள் நாங்கள் நினைத்ததைதான் செய்வோமென்று. உள்ளார்ந்த அர்த்தங்களுடன் எழுதுபவைகளை கொச்சைப்படுத்திறேன் என்று விளங்கிகொண்டால் என்ன செய்ய

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kadancha said:

 

வெளிநாட்டில் உழைப்பவர்கள், அங்கு காசை அனுப்பும் பொது. அதுவும் தொடர்ச்சியாக, ஏற்றத்தாழ்வு ஏற்படுகிறது. 

பலவழிகளில் அது உண்மையில் தீங்கில் முடிகிறது. அத்துடன், உழைப்பவரையும் பாரதூரமாக  தாக்குகிறது. பொதுவாக அங்கிருக்கும் வெளிநாட்டில் உழைப்பவரின் பெற்றோர் கூட, உடனடியாக கிடைக்கும் வசதி வாய்ப்புகளையே உவக்கின்றனர். இங்கு உழைப்பவரின் நிலையை, எதிர் காலத்தை புறக்கணிக்கின்றனர்.

இதை நான் பொதுவாகா மிகவும் கண்டிக்கிது இங்கு எழுதி உள்ளேன். ஓர் பயனுள்ள தேவைக்காக, அது அநேகமாக முதலீடாகத்தான் இருக்கும், கல்வி தொழில் கல்வி கூட, மேற்கல்வி, அல்லது தொழில் முயற்சிற்கு அனுப்படுவது வேறு. ஆனால் அப்படி அனுப்பப்படுவத்து வெகு குறைவு.      

அனுப்புவது நின்றவுடன் எத்தனையோ  பெற்றோர் கூட உறவில்லை என்று முறித்தது  என்பதை  நம்பவேண்டி உள்ளது.      

👍 100% சரிமாக சொன்னீர்கள், சும்மா உதவாமால் முதலீட்டுக்கு உதவினால், பலர் ஒருவரின் முதலீட்டால் முன்னேறுவார்கள். சரியான் வழி நடத்தலின்றி சிலர் வெளியிலிருத்து அனுப்பும் பணத்தை செலவழிக்கின்றார்கள், இது மன வேதனை.

என் தம்பிக்கு தொழிலை காட்டினேன், அவனும் அவனை சார்ந்தோரும் நன்றாக இருக்கின்றார்கள், எனக்கும் பிரச்சனையில்லை வாழ்நாள் முழுக்க பொறுப்பெடுக்க 

Link to comment
Share on other sites

40 minutes ago, MEERA said:

Anti rust paint கேள்விப்பட்டதில்லையா?

வீட்டை கட்டினால் மட்டும் போதாது, நன்றாக பராமரிக்கவும் வேண்டும்

 

AFTER 20 YEARS, உந்த மக்கா கழிவுகளை,  PLASTIC RUBBER AND ETC. எங்கே கொட்டுவது இலங்கையில்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Knowthyself said:

 

AFTER 20 YEARS, உந்த மக்கா கழிவுகளை,  PLASTIC RUBBER AND ETC. எங்கே கொட்டுவது இலங்கையில்?

Recycling - ஆனால் இது அரசின் கைகளில் தங்கி உள்ளது

Link to comment
Share on other sites

 

12 minutes ago, MEERA said:

Recycling - ஆனால் இது அரசின் கைகளில் தங்கி உள்ளது

 

அரசு என்பது மக்கள் அல்லவா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Knowthyself said:

 

 

அரசு என்பது மக்கள் அல்லவா?

 

எனது பேச்சை கேளுங்கள் அல்லது வெளியேறுங்கள் என்று அரச ஊழியர்களை விரட்டும் அரசா மக்கள் அரசு..

தெரிந்தும் தெரியாமலும் மருத்துவக் கழிவுகளை இறக்குமதி செய்யும் அரசா மக்கள் அரசு

Link to comment
Share on other sites

42 minutes ago, Kadancha said:

 

வெளிநாட்டில் உழைப்பவர்கள், அங்கு காசை அனுப்பும் பொது. அதுவும் தொடர்ச்சியாக, ஏற்றத்தாழ்வு ஏற்படுகிறது. 

பலவழிகளில் அது உண்மையில் தீங்கில் முடிகிறது. அத்துடன், உழைப்பவரையும் பாரதூரமாக  தாக்குகிறது. பொதுவாக அங்கிருக்கும் வெளிநாட்டில் உழைப்பவரின் பெற்றோர் கூட, உடனடியாக கிடைக்கும் வசதி வாய்ப்புகளையே உவக்கின்றனர். இங்கு உழைப்பவரின் நிலையை, எதிர் காலத்தை புறக்கணிக்கின்றனர்.

இதை நான் பொதுவாகா மிகவும் கண்டிக்கிது இங்கு எழுதி உள்ளேன். ஓர் பயனுள்ள தேவைக்காக, அது அநேகமாக முதலீடாகத்தான் இருக்கும், கல்வி தொழில் கல்வி கூட, மேற்கல்வி, அல்லது தொழில் முயற்சிற்கு அனுப்படுவது வேறு. ஆனால் அப்படி அனுப்பப்படுவத்து வெகு குறைவு.      

அனுப்புவது நின்றவுடன் எத்தனையோ  பெற்றோர் கூட உறவில்லை என்று முறித்தது  என்பதை  நம்பவேண்டி உள்ளது.      

 

Housing economy ஐ முழுதும் அறியாதவராக இருக்கிறீர்கள்.

ஒருவர் தன் உழைத்த பணத்தில் காணியை வாங்கி அல்லது ஏற்கனவே இருக்கும் வெறுமையான காணியில் புதிதாக தான் உழைத்த பணத்தை கொண்டு வீடு கட்டப்படும் போது, அது பரந்த சமூகத்தில் ஏதோ ஓர் விதமாக productive economy ஐ, தற்காலிகமாகவேனும் உருவாக்கும்.

ஏற்கனவே தன்னிடம் இருக்கும் வீட்டை, சொந்த பணத்தில் புனருத்தாரணம் செய்யும் போதும், அது பரந்த சமூகத்தில் ஏதோ ஓர் விதமாக productive economy ஐ,  உருவாக்கும்.

உழைத்த பணத்தில் செய்வது, ஒருவர் தான் அடையும் பலனால்    (அதாவது வீட்டில் வசதிகளுடன் வசிப்பது மற்றும் மனத்திருப்தி போன்றவை ) அவரை மட்டுமின்றி, சமூகத்திற்கு தன்னாலான பொருளியல் பங்களிப்பு செய்து விட்டே பலனை அனுபவிக்கிறார் என்பதே பொருளியல் உண்மை.

அப்படி அந்த வீட்டை (அல்லது எதுவாககட்டும்) கட்டும்போது அதற்கான பொருட்கள் (கட்டுமான பொருட்கள் மற்றும் finishing items) , அந்த வீடு உள்ள பகுதியில், வடகிழக்கில் (தமிழர்கலின் பொருளாதாரத்தை மட்டும் வைத்து பார்க்கும் போது), அல்லது இலங்கைத் தீவில் வாங்கப்பட்டால், அந்த பொருட்கள் இத்தாலியில்  செய்யப்பட்டு வந்ததாயினும் (முகவர் அல்லது நேரடியாக), அது பரந்த சமூகத்தில் productive economic activity.    
 
இதனால் தான் housing boom (new construction, reconstruction, repairing and refurbishment, and as a result value rise) , சொந்த பணத்தால் மட்டும் ஏற்பட்டால், சமூகம் உண்மையான பொருளாதார அபிவிருத்தியும், வளர்ச்சியும், வாழ்க்கைத்தரமும் உண்மையில் உயரும்.
      
இதை ஒருவர் வங்கியிடம் இருந்து பணத்தை கடனாக பெற்று செய்வாராயின், பரந்த சமூகத்தையும் எதோ ஒரு விதமாக  கடன் சுமையை சுமக்கச் செய்யும்.

அதனால், சொந்த பணத்தில் வீடு கட்டுவது, பரந்த சமூகத்திற்கு productive economy (as opposed to Rentier economic activities and  practices, which is  exploitative) ஐ சமூகத்திற்கு வழங்கும். Rentier economy இல் ஒரு பகுதி வளரும், மாரு பகுதி தேயும்.

வடகிழக்கில் பொதுவாக (அங்கிருப்பர்வர்களும், வெளிநாட்டில் இருப்பவர்களும்) தம்முடைய உழைத்த பணத்திலேயே கட்டுகிற படியால், அது அபிவிருத்தியாகவும், வளர்ச்சியாகவும், வளைக்கைத்தரம் உயர்வடைகிறது என்றே எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.   

ஆனால், எந்தவொரு economic system ஆலும்  இதுவரை extreme poverty (dirt poor, இது கூட ஒப்பீட்டளவில்) ஐ நீக்க முடியவில்லை என்பதும் உண்மை.

ஆனால், யுத்தத்தால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிறுவனமயப்படுத்தப்பட்ட உதவிகள் தேவை என்பதையும் ஏற்றுக்கொள்கிறேன். அதற்கு விக்கி மிகவும் முயன்றார் (முதலமைச்சர் நிதியம் மூலம் நேரடியாகவே வட மாகாண சபை சட்ட அடிப்படையில் நிதி பெறுவதத்திற்கு), சிங்களளம் தடுத்து விட்டது.

ஆயினும், யுத்தத்தில் அகப்பட்டு மீண்டவர்கள், வேலை செய்யக் கூடியவர்கள்,  இத்தகைய பொருளாதார பங்களிப்பு மறைமுகமான உதவிகளை செய்யும், அதாவது productive economic activities பரந்த சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தின் ஊடாக.        
   

 குறிப்பிட்ட ஓர் வீடு கட்டப்படும் போது வேண்டிய நாட்கூலி மூலம் மட்டும் 10000 உழைத்தார்களா என்று சொல்ல முடியாது, ஆனாலும் நான் அறிந்த  வரையில், நாட்கூலி செய்பவர், ஆகக் குறைந்தது  15-20 நாட்கள் (நினைவில் உள்ளவரை 2015 க்கு முதல்) இற்கு வேலை செய்தால், 10000 க்கு மேல் உழைப்பார்கள். நாட்கூலியின் பெறுமதி அவ்வளவு ஏறி விட்டது.  

 இலங்கையில் உள்ளவர்களும் வசதி இருந்தால், இப்படி வீடுகளை கட்டுகின்றனர். அதை பற்றிய உங்கள் கருத்து என்ன. 

 

உங்கள் விளக்கங்கள் சரியானவையாக இருக்கலாம், படித்ததெல்லாம் இலங்கைக்கு சரிபட்டு வருமா?

தேவையில்லாமல் REALTORS களையும் ARTIFICIAL லா விலையை கூட்டி கீழ் நிலையில் உள்ளவர்கள் எந்த காலத்திலும் வீடு வேண்டாமல் செய்வது தர்மமா ஞயமா? 

4 minutes ago, MEERA said:

எனது பேச்சை கேளுங்கள் அல்லது வெளியேறுங்கள் என்று அரச ஊழியர்களை விரட்டும் அரசா மக்கள் அரசு..

தெரிந்தும் தெரியாமலும் மருத்துவக் கழிவுகளை இறக்குமதி செய்யும் அரசா மக்கள் அரசு

 

இது மடையை திருப்பும் வேலை, இது இன்னொரு தலைப்பில் விவாதிக்க வேண்டியது

நன்றி சகோதரா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Knowthyself said:

உங்கள் விளக்கங்கள் சரியானவையாக இருக்கலாம், படித்ததெல்லாம் இலங்கைக்கு சரிபட்டு வருமா?

படித்ததல்ல, practical ஆக நடைமுறையில் இருக்கும் பொருளாதாரங்களின் ஏற்ற தாழ்வுகளை  அடிப்படையாக வைத்து ஆராய்ந்து   நிறுவப்பட்ட பொருளியல் நடைமுறைகள், கட்டுப்படுத்தாத (artificially controlled) economy இல்லாமல் இருக்கும் வரைக்கும். 

ஆனால் சிங்களம் தேசியவளமான பொருளாதாரம், தனக்கு மட்டுமே ஏக போக உரிமையாக இருக்க வேண்டும் என்று கருதி செய்யும் குளறுபடிகளும், அடக்கு முறையும் வேறு. 

இலங்கை தீவின் பொருளாதாரம் திறந்த பொருளாதாரம், எவர் ஆட்சிக்கு வந்தாலும், சிங்களம் தனது ஏக போக உரிமையாக வைத்திருக்க முயன்றாலும். 

 

1 hour ago, Knowthyself said:

தேவையில்லாமல் REALTORS களையும் ARTIFICIAL லா விலையை கூட்டி கீழ் நிலையில் உள்ளவர்கள் எந்த காலத்திலும் வீடு வேண்டாமல் செய்வது தர்மமா ஞயமா? 

"எனது அழகான இலங்கை தீவைப்பற்றி கதைக்கிறேன், wealth well-being பற்றி கதைக்கிறேன் நீங்கள் பணம் பார்பது, வறட்டு கௌவுரவத்தை பற்றி கதைக்கிறீங்கள்"

இலங்கைத் தீவு இப்போது middle income country. அதனால், ஒப்பீட்டளவில் இலங்கைத் தீவின் நீங்கள் சொல்லிய wealth well-being கூடி உள்ளது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் வீதாசாரமும் குறைந்து உள்ளது. பொதுவாக ஏற்றத் தாழ்வுகள் குறைந்து உள்ளது.             

வடகிழக்கு, அதில் ஒப்பீட்டளவில் பின்னுள்ளது. ஆயினும், பல  சிங்கள பகுதிகள் (மாகாணங்கள் அல்ல) வடகிழக்கை விட பின்னுள்ளன. 

ஆயினும் மலையகத்தில் இப்போதும் லயங்களில் இருப்பவருக்கும், ஓர் பிறிம்பான, சிறப்பான நிறுவனமயப்படுத்தப்பட்ட கரிசனை வேண்டும் அவர்களின் economic status ஐ உயர்ச்சி அடையச் செய்ய என்பதை ஏற்றுக் கொள்கிறேன். யுத்தத்திற்கு பின்னும்  இலங்கைத் தீவில் dirt poor community ஆக இருப்பது அவர்களே. இதை அவர்களின் அரசியல் தலைமை வெளியார் (சிங்களம் கூட) செய்வதை  தடுக்கிறது.

உங்களின் வாதப்படி, இலங்கைத் தீவு என்று நீங்கள் கரிசனைப்படுவதால், தமிழர்களோ, சிங்களவர்களோ,
இல்லை முன்னேறிய மலையகத் தமிழர்களோ  1948 இற்கு பின் இப்போதுள்ள பழைய வீடுகளை கட்டிய இருக்க கூடாது.

ஏற்கனவே சொல்லி விட்டேன், சொந்தமாக உழைத்த மற்றும் உழைக்கும்  பணத்தில் காணிகள் வாங்கப்படுவதும், வீடுகள் கட்டப்படுவதும் வாழ்க்கைத்தரம் ஏறும் அளவிற்கு மட்டுமே காணிகளின், வீடுகளின் விலையும் கூடும். விதிவிலக்காக சில இடங்களில் மட்டும் சராசரி விலை உயர்வுக்கு கூடுதலான உயர்வு இருக்கும். பொதுவாக கனிகள், வீடுகள் வாங்குவதற்கு சராசரி மக்களின் பொறுக்க கூடிய (பணச் சுமை (affordability) மாற்றமடையாது. 

கடன், அதுவும் வங்கி கடன் அல்லது நிறுவனமயப்படுபட்ட கடன் வசதி, காணிகள், வீடுகள் வாங்குவதற்கு உள்ள போதே, முக்கியமாக அரச வரியும் (வாடகைக்கு வீடுகள் விடப்படும் போது) அதற்கு உகந்ததாக அமைந்தால் மாத்திரமே, விலைகள் artificial ஆக ஏற்றப்படுவதற்கான தளம் இருக்கும். இலங்கையில் வீடு கட்டுவதற்கு கூட வங்கி கடன், காணி சொந்தமாக இருந்தால் மட்டுமே, வங்கி கரிசனையில்  எடுக்கும், கடன் கிடைப்பது நிச்சயமல்ல. எனது அவதானித்த, கேள்விப்பட்ட தரவுகளின் படி, வங்கிக்கடன், வீடு கட்டியவுடன் இருக்கும் முழுப் பெறுமதியில்  ஏறத்தாழ 20 - 25% அப்பால் செல்வது மிகவும் கடினம். எனவே இலங்கையில் விலை artificial ஆக ஏறுவதற்கு வாய்ப்புக்கள் இது  வரை இல்லை.  

வெளிநாட்டில் வசிப்பவர்கள், குறிப்பாக தமிழர்,  பொதுவாக இருக்கும் வீட்டை திருத்துவது, அல்லது அது முடியாமல் போனால் கட்டுவது, புதிதாக காணி வாங்கி கட்டுவது பொதுவாக குறைவு. அப்படி புதிதாக வாஙகிலனும், எழுந்த மானத்தில்  கேட்ட  விலையை கொடுக்கமாட்டார்கள், ஏனெனில் அவர்கள் உழைத்த  பணம், எவ்வளுவு விலை நடை முறையில் உள்ளது என்பதை விசாரித்தே பேரம் பேசப்படும். விதிவிலக்காக வெகு அருமையாக கேட்ட  விலையிலும் கூடிய விலையை கொடுக்க கூடும். எனவே விலைகளையும், விலை ஏற்றத்தையம் தீர்மானிப்பது பொதுவாக அங்கிருப்பவர்கள் வாங்கு திறனும், இலங்கைத் தீவின் பொருளாதார நிலையும். இங்கே தான் முஸ்லிமகள் பிரச்சனையாக வருகிறார்கள், அவர்களுக்கு middle east இல் இருந்து மதத்தின் பெயரால் பணம் வரும் போது,  காணி, வீடுகளின் விலைகளை தீர்மானிப்பதில் நிச்சயமாக அது பெரும் பங்கு செலுத்தும்.
                    
   
இதுவே வீடு கட்டுவத்திலும், பெரும்பாலும் புலம் பெயர் வாசிகள் பெரும் பணத்தை கொட்டி அங்கு வீடு கட்டுவது அருமை அல்லது விதி விலக்கு. இதனால், புதிய வீடுகளின் விலையை தீர்மானிப்பது அங்குள்ளவர்களின் செலவழிக்கும் திறன், நாட்டின் பரந்த பொருளாதாரம், முக்கியமாக கனி வீடு பற்றிய அரசாங்கத்தின் கொள்கைகள், கடன் பெறும் வசதிகள் மற்றும்காணி வீடு பற்றிய அரச வரிக் கொள்கைகள்.

சுருக்கமாக, விலையும், ஏற்றமமும் தீர்மானிக்கப்படுவது அங்கு. அதனால், புலம் பெயர் தமிழர்கள், அங்கு தீர்மானிக்கப்படும்  விலைகளை கொண்டு காணி வாங்குவது காணி வாங்குவது, வீடு கட்டுவது, அங்குள்ள local economy இல் contributory participants ஆக ஆக்கமுள்ள பொருளியல் செயற்பாடுகளை மேற்றுக்கொள்கிறார்கள், அவர்களின் முதலீட்டிற்கு  குறிப்பிடத்தக்க ஆபத்து இருந்தும். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயகம் நோக்கி போறவர்களை கன்டிப்பாக ஊக்குவிக்க வேணும்.அதுஇந்த திரியில் கான முடியுது.ஊர் நோக்கி நகர்வது எமது இருப்பை தாயகத்தில் தக்க வைப்பதில் காத்திரமான பங்களிப்பை வளங்கும்.மற்றது உரில உழைத்து நல்ல வசதி வாய்ப்புடன் வாழ்பவரகள் இங்கு பலர் உள்ளனர்.ஆனால் என்ன உழைக்கத் தெரிய வேணும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வ‌ண‌க்க‌ம் மோக‌ன் அண்ணா என‌து பெய‌ரை (வீர‌ப்ப‌ன் பைய‌ன்26 ) மாற்றி விடுங்கோ    ந‌ன்றி🙏🥰.......................................
    • த‌மிழ் சிறி அண்ணா அந்த‌ 800ரூபாய் வீடியோ ப‌ழைய‌ வீடியோ அண்ணா அந்த‌ வீடியோ போன‌ வ‌ருட‌மே ரிக்ரோக்கில் பார்த்து விட்டேன்....................இதை ப‌ற்றி அல‌ட்ட‌ என்ன‌ இருக்கு 800ரூபாய் வீடியோ அடிச்சு சொல்லுறேன் அது போன‌ வ‌ருட‌த்தான் வீடியோ ம‌ற்ற‌ வீடியோ ப‌ற்றி நான் வாயே திற‌க்க‌ல‌...................எப்ப‌ பார்த்தாலும் எல்லாத்துக்கையும் என்னை கோத்து விடுவ‌தில் கோஷானுக்கு ஏதோ இன்ப‌ம் இருக்கிற‌ மாதிரி தெரியுது அவ‌ரின் இன்ப‌த்துக்கு அவ‌ர் என்னை எப்ப‌டியும் க‌ழுவி ஊத்த‌ட்டும் ஹா ஹா😂😁🤣.......................... 
    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.