Jump to content

ஊரில் ஒரு வீடு வேணும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

நடை முறைக்கு சாத்தியமில்லாத கொள்கைகளைக் கொண்டுள்ளீர்கள்.
தனி நபராக இருந்தா என்ன ஒரு நாடாக இருந்தா என்ன காலத்துக்கு காலம் உலக சூழலுக்கேற்ப மாற்றிக் கொண்டே போகிறார்கள்.
     உங்களுடன் முரண்பட்டுக் கொண்டிருக்க விருப்பமில்லை.
ஆனாலும் ஒரு வேண்டுகோள்.
    புலம் பெயர்ந்தவர்கள் ஊர் திரும்பும் போது அதைஇத சொல்லி கொச்சைப்படுத்தாதீர்கள்.

விடுங்கோ அண்ணா ...எல்லாம் அவருடைய இயலாமை  தான்😟 ...அவர் அண்மைக் காலத்தில் ஊருக்குப் போகவில்லை என்று நினைக்கிறேன் ...அங்கேயே படிச்சு , பொறியிலாளர்,வைத்தியரமாரின்  வீடுகளை போய் பார்க்கவில்லை போலும் ...உலகம் எங்கேயோ போய்க் கொண்டு இருக்கும் இந் நேரத்தில் கள உறவுகள் கட்டின வீடுகள் மூலம் பொருளாதார ஏற்றது தாழ்வு வந்து விடுமாக்கும் ...யுத்தத்தால் அழிந்து போன தேசத்தை கட்டி எழுப்பாமல் அப்படியே நாசமாய் போக விடட்டாம் .
அப்பட்ட மான பொறாமை ,எரிச்சல் உள்ள ஒரு உறவை யாழ் அடையாளம் காட்டியுள்ளது...சில வேளை இவரே ஒரு ஐடியில் வந்து வாழ்த்திப் போட்டு மற்ற ஐடியில் வந்து இப்படி எழுத கூடும்:unsure:
மீரா இப்படியும் மனிதர்கள் என்று விட்டு இதை கடந்து போங்கோ 😁
 

Link to comment
Share on other sites

  • Replies 277
  • Created
  • Last Reply
5 hours ago, Kadancha said:

படித்ததல்ல, practical ஆக நடைமுறையில் இருக்கும் பொருளாதாரங்களின் ஏற்ற தாழ்வுகளை  அடிப்படையாக வைத்து ஆராய்ந்து   நிறுவப்பட்ட பொருளியல் நடைமுறைகள், கட்டுப்படுத்தாத (artificially controlled) economy இல்லாமல் இருக்கும் வரைக்கும். 

ஆனால் சிங்களம் தேசியவளமான பொருளாதாரம், தனக்கு மட்டுமே ஏக போக உரிமையாக இருக்க வேண்டும் என்று கருதி செய்யும் குளறுபடிகளும், அடக்கு முறையும் வேறு. 

இலங்கை தீவின் பொருளாதாரம் திறந்த பொருளாதாரம், எவர் ஆட்சிக்கு வந்தாலும், சிங்களம் தனது ஏக போக உரிமையாக வைத்திருக்க முயன்றாலும். 

 

"எனது அழகான இலங்கை தீவைப்பற்றி கதைக்கிறேன், wealth well-being பற்றி கதைக்கிறேன் நீங்கள் பணம் பார்பது, வறட்டு கௌவுரவத்தை பற்றி கதைக்கிறீங்கள்"

இலங்கைத் தீவு இப்போது middle income country. அதனால், ஒப்பீட்டளவில் இலங்கைத் தீவின் நீங்கள் சொல்லிய wealth well-being கூடி உள்ளது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் வீதாசாரமும் குறைந்து உள்ளது. பொதுவாக ஏற்றத் தாழ்வுகள் குறைந்து உள்ளது.             

வடகிழக்கு, அதில் ஒப்பீட்டளவில் பின்னுள்ளது. ஆயினும், பல  சிங்கள பகுதிகள் (மாகாணங்கள் அல்ல) வடகிழக்கை விட பின்னுள்ளன. 

ஆயினும் மலையகத்தில் இப்போதும் லயங்களில் இருப்பவருக்கும், ஓர் பிறிம்பான, சிறப்பான நிறுவனமயப்படுத்தப்பட்ட கரிசனை வேண்டும் அவர்களின் economic status ஐ உயர்ச்சி அடையச் செய்ய என்பதை ஏற்றுக் கொள்கிறேன். யுத்தத்திற்கு பின்னும்  இலங்கைத் தீவில் dirt poor community ஆக இருப்பது அவர்களே. இதை அவர்களின் அரசியல் தலைமை வெளியார் (சிங்களம் கூட) செய்வதை  தடுக்கிறது.

உங்களின் வாதப்படி, இலங்கைத் தீவு என்று நீங்கள் கரிசனைப்படுவதால், தமிழர்களோ, சிங்களவர்களோ,
இல்லை முன்னேறிய மலையகத் தமிழர்களோ  1948 இற்கு பின் இப்போதுள்ள பழைய வீடுகளை கட்டிய இருக்க கூடாது.

ஏற்கனவே சொல்லி விட்டேன், சொந்தமாக உழைத்த மற்றும் உழைக்கும்  பணத்தில் காணிகள் வாங்கப்படுவதும், வீடுகள் கட்டப்படுவதும் வாழ்க்கைத்தரம் ஏறும் அளவிற்கு மட்டுமே காணிகளின், வீடுகளின் விலையும் கூடும். விதிவிலக்காக சில இடங்களில் மட்டும் சராசரி விலை உயர்வுக்கு கூடுதலான உயர்வு இருக்கும். பொதுவாக கனிகள், வீடுகள் வாங்குவதற்கு சராசரி மக்களின் பொறுக்க கூடிய (பணச் சுமை (affordability) மாற்றமடையாது. 

கடன், அதுவும் வங்கி கடன் அல்லது நிறுவனமயப்படுபட்ட கடன் வசதி, காணிகள், வீடுகள் வாங்குவதற்கு உள்ள போதே, முக்கியமாக அரச வரியும் (வாடகைக்கு வீடுகள் விடப்படும் போது) அதற்கு உகந்ததாக அமைந்தால் மாத்திரமே, விலைகள் artificial ஆக ஏற்றப்படுவதற்கான தளம் இருக்கும். இலங்கையில் வீடு கட்டுவதற்கு கூட வங்கி கடன், காணி சொந்தமாக இருந்தால் மட்டுமே, வங்கி கரிசனையில்  எடுக்கும், கடன் கிடைப்பது நிச்சயமல்ல. எனது அவதானித்த, கேள்விப்பட்ட தரவுகளின் படி, வங்கிக்கடன், வீடு கட்டியவுடன் இருக்கும் முழுப் பெறுமதியில்  ஏறத்தாழ 20 - 25% அப்பால் செல்வது மிகவும் கடினம். எனவே இலங்கையில் விலை artificial ஆக ஏறுவதற்கு வாய்ப்புக்கள் இது  வரை இல்லை.  

வெளிநாட்டில் வசிப்பவர்கள், குறிப்பாக தமிழர்,  பொதுவாக இருக்கும் வீட்டை திருத்துவது, அல்லது அது முடியாமல் போனால் கட்டுவது, புதிதாக காணி வாங்கி கட்டுவது பொதுவாக குறைவு. அப்படி புதிதாக வாஙகிலனும், எழுந்த மானத்தில்  கேட்ட  விலையை கொடுக்கமாட்டார்கள், ஏனெனில் அவர்கள் உழைத்த  பணம், எவ்வளுவு விலை நடை முறையில் உள்ளது என்பதை விசாரித்தே பேரம் பேசப்படும். விதிவிலக்காக வெகு அருமையாக கேட்ட  விலையிலும் கூடிய விலையை கொடுக்க கூடும். எனவே விலைகளையும், விலை ஏற்றத்தையம் தீர்மானிப்பது பொதுவாக அங்கிருப்பவர்கள் வாங்கு திறனும், இலங்கைத் தீவின் பொருளாதார நிலையும். இங்கே தான் முஸ்லிமகள் பிரச்சனையாக வருகிறார்கள், அவர்களுக்கு middle east இல் இருந்து மதத்தின் பெயரால் பணம் வரும் போது,  காணி, வீடுகளின் விலைகளை தீர்மானிப்பதில் நிச்சயமாக அது பெரும் பங்கு செலுத்தும்.
                    
   
இதுவே வீடு கட்டுவத்திலும், பெரும்பாலும் புலம் பெயர் வாசிகள் பெரும் பணத்தை கொட்டி அங்கு வீடு கட்டுவது அருமை அல்லது விதி விலக்கு. இதனால், புதிய வீடுகளின் விலையை தீர்மானிப்பது அங்குள்ளவர்களின் செலவழிக்கும் திறன், நாட்டின் பரந்த பொருளாதாரம், முக்கியமாக கனி வீடு பற்றிய அரசாங்கத்தின் கொள்கைகள், கடன் பெறும் வசதிகள் மற்றும்காணி வீடு பற்றிய அரச வரிக் கொள்கைகள்.

சுருக்கமாக, விலையும், ஏற்றமமும் தீர்மானிக்கப்படுவது அங்கு. அதனால், புலம் பெயர் தமிழர்கள், அங்கு தீர்மானிக்கப்படும்  விலைகளை கொண்டு காணி வாங்குவது காணி வாங்குவது, வீடு கட்டுவது, அங்குள்ள local economy இல் contributory participants ஆக ஆக்கமுள்ள பொருளியல் செயற்பாடுகளை மேற்றுக்கொள்கிறார்கள், அவர்களின் முதலீட்டிற்கு  குறிப்பிடத்தக்க ஆபத்து இருந்தும். 

 

 

பட்டிமன்றத்தில கதைக்குமாப்போல் தரவுகளை சும்மா அடுக்க கூடாது, சில கருத்துக்களை ஏற்றுக்கொள்ல்லாம். நீங்கள் சொல்வதை பார்த்தால் தமிழர்கள் பொருளாதாரத்தில் ஓக்கே போல் உள்ளது, கஞ்சாவும் இன்னோர்ரன்ன பழக்கங்களும் இருந்தால் பறுவாய் இல்லையா. well-being பற்றி எந்தவிதமான நம்பிக்கையுமில்லையா (https://en.wikipedia.org/wiki/Well-being)

இலங்கை ஒரு கொஞ்சமென்றாலும் கலப்பு பொருளாதரத்தை கொண்ட நாடாக இருக்கிறது அதையொரு மேற்குலகத்தினைபோல் கேடுகெட்ட தனியார், கோப்பிரேட்களின் கைகளில் கொண்டுபோய் சேர்துவிடாதீர்கள், அடிப்படை கல்வியை பெறுவதற்கு மிகபெரிய விலையை கொடுக்கவேண்டி வரும். இவர்கள் கொண்டுவரும் கழிவுகளை (பிளாஸ் ரிக்குகள், கமறாக்கள், நாகரீம் எனும் பெயரில் கொண்டுவரும் கெமிக்கல்கள் அதன் போத்தல்கள், கட்டாயம் தேவை ஏனென்றால் சமையலறையும் கழிவறையும் உள்ளுக்குகல்லோ இருக்கு) கொட்டுவதற்கோ இடம், மண் தண்ணி இல்லாமல் போகும் வடகிழக்கில் ஏன் இலங்கையில் இன்னும் கொஞ்சகாலத்தில். 

இவர்களின் சொத்துக்களை பாதுகாப்பது எனும்பெயரில் சுப்பனையும் குப்பனையும் வீட்டுக்குள் விடாமல், அடக்கியாழ்வது, நிறைய சிறைச்சாலைகள் வருவது வெகுதூரத்திலில்லை.

 

27 minutes ago, ரதி said:

விடுங்கோ அண்ணா ...எல்லாம் அவருடைய இயலாமை  தான்😟 ...அவர் அண்மைக் காலத்தில் ஊருக்குப் போகவில்லை என்று நினைக்கிறேன் ...அங்கேயே படிச்சு , பொறியிலாளர்,வைத்தியரமாரின்  வீடுகளை போய் பார்க்கவில்லை போலும் ...உலகம் எங்கேயோ போய்க் கொண்டு இருக்கும் இந் நேரத்தில் கள உறவுகள் கட்டின வீடுகள் மூலம் பொருளாதார ஏற்றது தாழ்வு வந்து விடுமாக்கும் ...யுத்தத்தால் அழிந்து போன தேசத்தை கட்டி எழுப்பாமல் அப்படியே நாசமாய் போக விடட்டாம் .
அப்பட்ட மான பொறாமை ,எரிச்சல் உள்ள ஒரு உறவை யாழ் அடையாளம் காட்டியுள்ளது...சில வேளை இவரே ஒரு ஐடியில் வந்து வாழ்த்திப் போட்டு மற்ற ஐடியில் வந்து இப்படி எழுத கூடும்:unsure:
மீரா இப்படியும் மனிதர்கள் என்று விட்டு இதை கடந்து போங்கோ 😁
 

 

தயவுசெய்து என்னை குறுகிய வட்டத்துக்குள் அடக்காதீர்கள்

Link to comment
Share on other sites

1 hour ago, ரதி said:

விடுங்கோ அண்ணா ...எல்லாம் அவருடைய இயலாமை  தான்😟 ...அவர் அண்மைக் காலத்தில் ஊருக்குப் போகவில்லை என்று நினைக்கிறேன் ...அங்கேயே படிச்சு , பொறியிலாளர்,வைத்தியரமாரின்  வீடுகளை போய் பார்க்கவில்லை போலும் ...உலகம் எங்கேயோ போய்க் கொண்டு இருக்கும் இந் நேரத்தில் கள உறவுகள் கட்டின வீடுகள் மூலம் பொருளாதார ஏற்றது தாழ்வு வந்து விடுமாக்கும் ...யுத்தத்தால் அழிந்து போன தேசத்தை கட்டி எழுப்பாமல் அப்படியே நாசமாய் போக விடட்டாம் .
அப்பட்ட மான பொறாமை ,எரிச்சல் உள்ள ஒரு உறவை யாழ் அடையாளம் காட்டியுள்ளது...சில வேளை இவரே ஒரு ஐடியில் வந்து வாழ்த்திப் போட்டு மற்ற ஐடியில் வந்து இப்படி எழுத கூடும்:unsure:
மீரா இப்படியும் மனிதர்கள் என்று விட்டு இதை கடந்து போங்கோ 😁
 

 

Tigers, TELLO, EPDP, கருணா supporters ஆக இல்லாமல், பட்டது போதும், group சேராமல் தமிழர் supporter ஆக இருந்து உங்கள் கருத்துகளை முன்வையுங்கள்

நீங்கள் கெட்டதை நல்லது ஆக்கபார்கிறீர்கள் நான் நல்லதை விதைக்க பார்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Knowthyself said:

பட்டிமன்றத்தில கதைக்குமாப்போல் தரவுகளை சும்மா அடுக்க கூடாது, சில கருத்துக்களை ஏற்றுக்கொள்ல்லாம். நீங்கள் சொல்வதை பார்த்தால் தமிழர்கள் பொருளாதாரத்தில் ஓக்கே போல் உள்ளது, கஞ்சாவும் இன்னோர்ரன்ன பழக்கங்களும் இருந்தால் பறுவாய் இல்லையா. well-being பற்றி எந்தவிதமான நம்பிக்கையுமில்லையா (https://en.wikipedia.org/wiki/Well-being)

இலங்கை ஒரு கொஞ்சமென்றாலும் கலப்பு பொருளாதரத்தை கொண்ட நாடாக இருக்கிறது அதையொரு மேற்குலகத்தினைபோல் கேடுகெட்ட தனியார், கோப்பிரேட்களின் கைகளில் கொண்டுபோய் சேர்துவிடாதீர்கள், அடிப்படை கல்வியை பெறுவதற்கு மிகபெரிய விலையை கொடுக்கவேண்டி வரும்.

 

4 hours ago, Knowthyself said:

இவர்களின் சொத்துக்களை பாதுகாப்பது எனும்பெயரில் சுப்பனையும் குப்பனையும் வீட்டுக்குள் விடாமல், அடக்கியாழ்வது, நிறைய சிறைச்சாலைகள் வருவது வெகுதூரத்திலில்லை.

நீங்கள் இலங்கைத் தீயின் பகிரங்கமாக கிடைக்கும் அவதானிகசப்படக் கூடிய தரவுகளை, நீங்கள் அறியாதபடியால், ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள். 

உத்தியோகபூர்வ தரவுகளில் சொறி சிங்கள அரசுக்கு அக்கறை இல்லை என்பதும் உண்மை.

தமிழர்கள் பொருளாதாரத்தில் எல்லாம் அடைந்து விட்டார்கள், housing ஐ பொறுத்தவரையில் எல்லோருக்கும்  சொந்தமாக சொந்தமாக இருக்க வேண்டிய தேவை பூர்த்தி அடைந்து விட்டது  என்று கண்கவது சொல்லி இருந்தால் சுட்டிக்காட்டவும்.

நீங்கள் சொல்லிய வேறுபாடுகளை கூட்டும், புலம் பெயர் தமிழர் அங்கு வீடு கட்டுவது அல்லது வாங்குவது, என்பதற்கே, பொருளியல் அடிப்படையில், பரந்து பட்ட சமூகத்தில், அது productive economic activity ஆக இருக்கும், அங்கு உள்ளவர்கள் விலைகளை தீர்மானிக்கும் வரைக்கும், என்பதே நான் சொல்வது.

இனொரு வளமாக பார்த்தல், ஓர் (சொறி சிங்கள) அரசின், ஓர் பகுதியிலுள்ள மக்களில், அகிலும் ஓர் பகுதி புலம் பெயர்ந்து, புலம் பெயர்த்தவர்களில் ஓர் பகுதி, ஆபத்தான சொறி சிங்களத்தை எதிர் கொண்டு, அங்கொரு காலும் இங்கொரு காலுமாக, அவர்களின் உழைத்த பணத்தை உறுதியற்ற, ஆபத்தான முயற்சியில் உறுதியற்று, எங்கே சீரழிவில்லாமல் (எவ்வளவு பணம் வைத்திருந்தாலும் மேற்கில் புலம் பெயந்தவர் மன நிலை) வாழலாம் அல்லது தமது சந்தத்தியின் அடையாளம், heritage என்பவை தம்மில் இருந்து தமது சந்ததிக்கு கடத்தப்பபட வேண்டும் என்றும்,     எத்தனையோ தனிப்பட்ட தயக்கங்கள் மற்றும் உண்மையாகவுள்ள தடைகளை தாண்டி,  எல்லோரும் பெரும்பாலும் ஏறத்தாழ ஒரே காலப்  பகுதியில் இதை செய்யாமல், அங்கொன்றும் இங்கொன்றுமாக, வண்ணத்துப் பூச்சி சிறகடிப்க்கும் போது ஏற்றப்படும் சிறு அதிர்வுகள் போல,   உண்மையில் local economy இற்கு பரந்து பட்ட  contribution ஆகும், அது உண்மையான பொருளாதார, வாழ்க்கைத்தர முன்னேற்றத்திற்கு பங்களிலுக்கும்,  அவர்கள் சொந்த  பணத்தில் நடந்தால்.
      
நீங்கள் wealth well being   எழுதியதால், நான் பொருளியல் நன்நலம் என்று கருதி விட்டேன்.

நீங்கள் சொல்லிய well being இற்கு இப்படியான, தனிப்பட்ட, local economy இற்கு பங்களிக்க கூடிய செயற்பாடுகள் இன்றிமையாதவை. இது பரந்து பட்ட அளவில், அங்குள்ளவர்களில்  அநேகமானவர்கள் சிறு ஏறக் கூடிய படிமுறை வளர்ச்சியாக இருக்கும்.      

புலம் பெயந்தவர்களில் எல்லோரும் ஒரேடியாக இதை செய்தால், ஏற்றத்தாழ்வுகளை கூர்மைப்படுத்தக் கூடிய balance tilt ஆக வாய்ப்புண்டு. ஆனால், அப்படியான சாத்தியம் இல்லை.

வீடு கட்டுவதால், கஞ்சா மற்றும் போதை பொருள் பாவனை அறிமுகம் அல்லது அதிகரிப்பு என்பதற்கு என்ன தொடர்புகள் (correlation) என்பதற்கு சிறு விளக்கம் தர முடியுமா?

திறந்த பொருளாதாரத்தில் கலப்பு பொருளாதார தன்மைகளும், சிறு பகுதி கலப்பு பொருளாதாரமும் இருக்கவே செய்யும். ஏனெனில், இது பொருளாதார தெரிவுகளை  தனிப்பட்டவர்களிடம் பொறுப்பு அளித்திருக்கிற படியால். 
      
தனிப்பட்டவர்கள் வீடுகளை கட்டாவிட்டால், housing சிறிது சிறிதாக corporate இன்  கைகளுக்கு போகும். இத்தகைய தனிப்பட்ட முயற்சிகள், சமூகத்தில் ஏற்ப்படுத்தும் தாமும் தாமாக வீடு கட்டவேண்டும் என்ற உள எழுச்சி, corporate housing இற்குள் வருவதை தடுக்கும் முதல் அரண். அதன் பின்பே எம்முடைய வசதிகள் வீடு கட்டுவதற்கு  எப்படி என்ற கேள்வி.       

இப்படி தனியாரால் கட்டப்படுவது, இனொன்றையும் தடுக்கும் அல்லது இருந்தால் குறைக்கும்.

இது வசதி கூடியவர்கள், ஓர் குறிப்பிட்ட பிரதேசத்தில் வீட்டு தேவைக்காக குழுமமாக communities உருவாகுதின் வாய்ப்புகளை குறைக்கும். அதற்கு housing இல் corporate இன் செல்வாக்கு இருக்க கூடாது.

அதாவது வசதி குறைந்தவர்களையும், ஒப்பிடலளவில் வசதி கூடியவர்களை கலந்து வாழவைக்கும் சமுதாயக் கட்டமைப்பை படிப்படியாக  உருவாக்கும். 

இவைகளே நீங்கள்  கூறிய gated communities (குப்பனை, சுப்பனை வீட்டுக்குள் அடுக்காமல்) உருவாக்கத்திற்கான வழிகளை பெருமளவில் சமூக விழிப்புணர்வு, மற்றும் பிரக்ஜ்னை (இது எழுதுப் பிழை  என்பது எனக்கு தெரியும்) வழியாக தடுத்து விடும். இதை நான் நேரடியாயாக, அரசாங்க கொள்கை மாற்றத்தை அவதானித்தே எழுதுகிறேன்.         

ஓர் சிறு விலத்தலாக, புலம் பெயர்ந்தவர்களின் இப்படிப்பட்ட முயற்சிகளை, நான்  ஒப்பிடுவது Salmon மீன் எவ்வாறு தந்து உயிரைப் பணயம் வைத்து, திமிங்கலம், டொல்பின் போன்றவற்றின் வேட்டையாடுதலை சமாளித்தும், வெற்றி கொண்டும்,  பல தடைகள் தாண்டி, ஆற்றோட்டத்திற்கு எதிரான திசையில் நீந்தியும்,  கடலில் இருந்து தான் பிறந்த இடத்திற்கு (நன்னீர் ஆற்றின் ஊற்றெடுக்கும் இடத்திற்கு அண்மையாக இருக்கும் இடத்திற்கு), களைத்து வருவது தனது இனப்பெருக்கத்திற்காக என்பதுடன்.

இதை வாசிப்பவர்கள் எல்லோரும், youtube இல் அந்த Salmon மீன் இன் பற்றுறுதியை பாருங்கள்.  

https://www.youtube.com/watch?v=aPf4qtCDRtE

https://www.youtube.com/watch?v=65EfIjADGSc

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, சுவைப்பிரியன் said:

மற்றது உரில உழைத்து நல்ல வசதி வாய்ப்புடன் வாழ்பவரகள் இங்கு பலர் உள்ளனர்.ஆனால் என்ன உழைக்கத் தெரிய வேணும்.

உழைப்பு மாட்டும் காரணம் அல்ல. 

அருமையாக இருக்கலாம். அது கூட செல்வாக்குகள் ஏற்கனவே இல்லாமல், பொதுவாக சாத்தியமானது இல்லை.   

எமது வாழ்கை முறை, அதாவது சீதனம் இதில் பெரும் செல்வாக்கு செலுத்துகிறது. அல்லது பெற்றோருடன் வாழ்வது.

வாடகைக்கு முதலே இருந்து கொண்டு, வீடு மற்றும் வசதிகளை உருவாக்கியவர்கள், அநேகமாக குடும்பத்தில் 2 அல்லது அதற்கு மேற்பட்டோர் உழைக்க வந்து சிறுது காலம் கடந்தே சராசரியாக ஆக்கி இருப்பார்கள்.

இது உண்மையில் நல்லது. படிப்படியான, அநேகமாக எல்லோராலும் அடையாக கூடிய சிறு படிகளை கொண்ட வளர்ச்சி.

சராசரி வாழ்க்கைமுறையையே சுட்டியாக கருத்தில் கொள்ள முடியும்.    

மேலை நாடுகள் மாதிரி, உழைக்க தொடங்கியவுடன் தான் பிறிம்பாக இருக்க வேண்டும் எனும் நிலை வந்தால், பலரால் நீங்கள் சொல்லும் நிலையை அடைவதற்கு சில வேளைகளில் முடியாமல் போகலாம், உயர் வருமானம் இருப்பினும் (இப்பொது 500,000).  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உன்னை நீ அறி என்று  பெயரை வைத்து ஊரையும் இலங்கையும் அறிய மறந்துட்டார் போல

 

அண்ண ஊர்பக்கம் வந்து பாருங்கள் வீடுகளை  இதெல்லாம் இங்கிருப்பவர்கள் கட்டியிருக்கும் வீடுகளுக்கு தாங்காது அண்மையில் வியாழேந்திரனின் வீடு சர்ச்சைக்கு உள்ளானது . அந்தம்பெரிய வீடு அடுத்தது மாவையின்ற கருங்கல்லால் ஆன மதில்சுவரும் வீடும்.

97997602_247647216341803_1856777253266915328_n.jpg?_nc_cat=100&_nc_sid=b96e70&_nc_ohc=iikEQ2QJhCoAX9n8O2L&_nc_ht=scontent.fcmb2-1.fna&oh=2c28d26c48dabf00401c7b26072bf4c0&oe=5EE84054

மேல்மாடியில் இருப்பது நீச்சல் தடாகம்  (எம். பி வீடு )

மக்களும் மாறிவிட்டார்கள் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் வீடுகளில் தங்குவதில்லை  காரணம் நுளம்பு ,மற்றது வெக்கை இங்குள்ளவர்களே இப்போது ஏசி ரூமிற்குள் வாழ பயணிக்கிறார்கள் நீங்கள் இன்னும் அந்த இடத்தை மட்டும் பிடித்துக்கொண்டே நிற்கிறீர்கள் 

இரண்டு நாட்களுக்கு முன் நடந்த சம்பவத்திலிருந்து நான் இலங்கையில் இருக்க கூடாது  என்றே நினைக்கிறேன்  

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/5/2020 at 18:16, Knowthyself said:

நான் ஒரு PRINCIPAL லோட வாழுறவன் புரியலே ஒரு கோடுபோட்டு வாழுறவன்

You mean PRINCIPLE?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகாராவின் வீடும் மீராவின் வீடும் அழகாக இருக்கின்றன. மீரா வீட்டின் மாடி அமைப்பும் குசினித் தளபாட அமைப்பும் நன்றாக இருக்கின்றன. ஆனால் வெள்ளை நிறம் அங்கு அப்படியே இருக்குமா மீரா ????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/5/2020 at 12:56, Knowthyself said:

 

தீயாகங்களை பற்றியும் கதைப்போம் காற்று வராத பெட்டிகளையும் கட்டுவோம் என்ன ஞாயமிது, வீடில்லாதோர் ஒருபுறம் வீட்டுக்குமேல் வீடுகட்டுவோர் மறுபுறம், ஏற்றதாழ்வுகளை நல்லா கூட்டுங்கோ, தமிழ் தேசியம் நல்லா விளங்கும்! என்ன கொடுமையிது

உடையது விளம்பேல்

இணுவில்பக்கம் நீங்கள் போகேல்லையோ??? அங்குள்ளவர் கட்டியுள்ள வீட்டைப் பார்த்து நானே பிரமிப்புள்ளாகிவிட்டேன். அவர்களோடு ஒப்பிடுகையில் நாம் ஏழைகள்.

On 17/5/2020 at 01:43, MEERA said:

விமான நிலையத்திலிருந்து அரச திணைக்களங்கள் வங்கிகள் தனியார் நிறுவனங்கள்  இலத்திரனியல் கடைகள், பலசரக்கு கடைகள் வரை குளிரூட்டிகள் உபயோகிக்கிறார்கள். 

தீக்கோழி மண்ணுக்குள் தலையை புதைத்த நிலை தான்.....

நீங்க கோடு போட்டு வாழுங்கோ அல்லது வட்டம் போட்டு வாழுங்கோ, அது உங்கட சுதந்திரம் / பிரச்சனை.

இப்போ சுமோக்கு விளங்கியிருக்கும்  காணி வாங்கியவுடன் சுற்று மதிலை ஏன் கட்ட வேண்டும் என்று.

நான் காணி வாங்குவது தொடர்பாக கோப்பாயில் உள்ள ஒரு  நண்பருடன் கதைத்தபோது காணி வாங்குங்கோ. ஆனால் வாங்கியவுடன் சுற்றிவர மதில் கட்டுங்கோ என்கிறார். ஏன் சொன்னார் என்று இப்பதான் விளங்கிது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/5/2020 at 04:10, Knowthyself said:

 

AFTER 20 YEARS, உந்த மக்கா கழிவுகளை,  PLASTIC RUBBER AND ETC. எங்கே கொட்டுவது இலங்கையில்?

உந்தப் பழியையும் வெளிநாட்டுக்ககாரரின் தலையிலதான் போடுவீங்களோ ???

On 18/5/2020 at 16:56, தனிக்காட்டு ராஜா said:

இரண்டு நாட்களுக்கு முன் நடந்த சம்பவத்திலிருந்து நான் இலங்கையில் இருக்க கூடாது  என்றே நினைக்கிறேன் 

 

நாங்கள் வரமுதல் என்ன எண்டு எங்களுக்கும் சொன்னால் நாங்களும் யோசிக்கலாம் எல்லா ????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்காவது நல்ல காணி மலிவாக வந்தால் சொல்லுங்கள் என்று ஒரு நண்பரிடம் கேட்டிருந்தேன். இன்று எனக்கு போன் செய்து ஒரு நல்ல காணி வந்திருக்கு பளையில் என்று   கூறி விபரம் போடுகிறேன் என்கிறார். வற்சப்பில் வந்த விபரம் பார்த்து எனக்கு மயக்கம் வராத குறை. மீண்டும் போன் செய்து எனக்கு ஒரு ஐந்தாறு பரப்புக்கு காணி தானே கேட்டேன். இதை ஏன் அனுப்பினீர்கள் என்றேன். என்ன நீங்கள் வெளிநாட்டுக்கு காறறிட்டை இல்லாத காசா என்கிறார். நான் என்ன பணத் தோட்டமா இங்கு வைத்துள்ளேன் என்று ஏசியதில் போனை வைத்து விட்டார்.
அவர் எனக்கு அனுப்பிய விளம்பரத்தைப் பாருங்கள்

 

ஒருங்கிணைந்த பண்ணை விற்பனைக்கு

தனித்துவ அடையாளங்களையுடைய ஒருங்கிணைந்த பண்ணை 19 ஏக்கர் ( உறுதி) காணி பளையில் விற்பனைக்கு.

• 1.5 KM தூரத்தில் A9 வீதி.
• 3.0 KM தூரத்தில் புகையிரத நிலையம்
• 3.5 KM தூரத்தில் கடற்கரை.
• 35 KM தூரத்தில் பலாலி விமான நிலையம்.

இதற்குள்....
• 1500 தென்னை, 1500 தேக்குமரம்,
400 பனை மரம், 40 மாமரம், கற்றாளை,
சோளம், 400 வாழை மரம்.
• 500 முருங்கை மரம், பூசனி,
• 10,000 கோழிகள், வான் கோழிகள், காடை
மற்றும் கறவை மாடுகள் வளர்ககூடிய
இடவசதிகள்.
• 6 கிணறுகள் மின்சார வசதிகளுடன்.
• அனைத்து மரங்களிற்கும் நேரடி நீர்ப்பாசன
வசதிகள்.
• வேலையாட்கள் தங்குவதற்கான வசதிகள்.
• சுற்றுலா விடுதி அமைப்பதற்கான
அனுமதியுடன்.

காணி அளவு : 19 ஏக்கர் (304பரப்பு)
அமைவிடம் : பளை
உறுதி : வங்கி கடன் பெறக்கூடியது.
கடன் வசதி : பிரபல வங்கியில் குறைந்த
வட்டியில் ஏற்படுத்தித்
தரப்படும்
பரப்பு விலை : 150,000/- (SLR)

😃🤣😇
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

காணி அளவு : 19 ஏக்கர் (304பரப்பு)
அமைவிடம் : பளை
பரப்பு விலை : 150,000/- (SLR)

😃🤣😇

ஆக 16 பரப்பு ஒரு ஏக்கர்...

16  * 150000 = 2,400,000
ஒரு ஏக்கர் = 2 இலட்சத்து 400 ஆயிரம் ரூபாய்.

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் ஒரு ஏக்கர் 6 இலட்சம் என்ற வகையில் பார்க்கையில் விலை பரவாயில்லை என்று நினைக்கிறேன்....

உங்கள் தேவைக்கு உகந்தது அல்ல, ஆனாலும், இதனையும் வாங்க ஆள் இருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எங்காவது நல்ல காணி மலிவாக வந்தால் சொல்லுங்கள் என்று ஒரு நண்பரிடம் கேட்டிருந்தேன். இன்று எனக்கு போன் செய்து ஒரு நல்ல காணி வந்திருக்கு பளையில் என்று   கூறி விபரம் போடுகிறேன் என்கிறார். வற்சப்பில் வந்த விபரம் பார்த்து எனக்கு மயக்கம் வராத குறை. மீண்டும் போன் செய்து எனக்கு ஒரு ஐந்தாறு பரப்புக்கு காணி தானே கேட்டேன். இதை ஏன் அனுப்பினீர்கள் என்றேன். என்ன நீங்கள் வெளிநாட்டுக்கு காறறிட்டை இல்லாத காசா என்கிறார். நான் என்ன பணத் தோட்டமா இங்கு வைத்துள்ளேன் என்று ஏசியதில் போனை வைத்து விட்டார்.
அவர் எனக்கு அனுப்பிய விளம்பரத்தைப் பாருங்கள்

 

ஒருங்கிணைந்த பண்ணை விற்பனைக்கு

தனித்துவ அடையாளங்களையுடைய ஒருங்கிணைந்த பண்ணை 19 ஏக்கர் ( உறுதி) காணி பளையில் விற்பனைக்கு.

• 1.5 KM தூரத்தில் A9 வீதி.
• 3.0 KM தூரத்தில் புகையிரத நிலையம்
• 3.5 KM தூரத்தில் கடற்கரை.
• 35 KM தூரத்தில் பலாலி விமான நிலையம்.

இதற்குள்....
• 1500 தென்னை, 1500 தேக்குமரம்,
400 பனை மரம், 40 மாமரம், கற்றாளை,
சோளம், 400 வாழை மரம்.
• 500 முருங்கை மரம், பூசனி,
• 10,000 கோழிகள், வான் கோழிகள், காடை
மற்றும் கறவை மாடுகள் வளர்ககூடிய
இடவசதிகள்.
• 6 கிணறுகள் மின்சார வசதிகளுடன்.
• அனைத்து மரங்களிற்கும் நேரடி நீர்ப்பாசன
வசதிகள்.
• வேலையாட்கள் தங்குவதற்கான வசதிகள்.
• சுற்றுலா விடுதி அமைப்பதற்கான
அனுமதியுடன்.

காணி அளவு : 19 ஏக்கர் (304பரப்பு)
அமைவிடம் : பளை
உறுதி : வங்கி கடன் பெறக்கூடியது.
கடன் வசதி : பிரபல வங்கியில் குறைந்த
வட்டியில் ஏற்படுத்தித்
தரப்படும்
பரப்பு விலை : 150,000/- (SLR)

😃🤣😇

150,000 x 304 = 45,600,00/=
45.6 மில்லியன்கள் 

 

முகநூலில் பார்த்தேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, MEERA said:

150,000 x 304 = 45,600,00/=
4.56 மில்லியன்கள் 

 

லண்டன் வீட்டை வித்துத்தான் வாங்கவேணும் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

ஆக 16 பரப்பு ஒரு ஏக்கர்...

16  * 150000 = 2,400,000
ஒரு ஏக்கர் = 2 இலட்சத்து 400 ஆயிரம் ரூபாய்.

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் ஒரு ஏக்கர் 6 இலட்சம் என்ற வகையில் பார்க்கையில் விலை பரவாயில்லை என்று நினைக்கிறேன்....

உங்கள் தேவைக்கு உகந்தது அல்ல, ஆனாலும், இதனையும் வாங்க ஆள் இருக்கும். 

ஒரு ஏக்கர் 24 இலட்சம் அல்லவா

2.4 மில்லியன்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு முதல் உப்பிடியானதில் ஆசையோ ஆர்வமோ இல்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, MEERA said:

4.56 மில்லியன்கள் 

45.6 million rs. approx 228,000 GBP.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிசண்ட தோட்டக்  காணி தான் இப்ப என் மனதில் நிக்குது. வீணா லட்ஷக்கணக்கில பணம் குடுத்தது ஏன் புதுக் காணி வாங்குவான் என்றுதான் மனதில் ஓடுது. எங்கள் ஊரில் இப்ப ஒரு பரப்பு 20 இலட்சம் போகுதாம் 😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

லண்டன் வீட்டை வித்துத்தான் வாங்கவேணும் 🤣

இல்லை அக்கா இது முதலீட்டிற்குரிய காணி

150,000x 304= 45,600,000/225=

£ 202,607 தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

 

ஒருங்கிணைந்த பண்ணை விற்பனைக்கு

தனித்துவ அடையாளங்களையுடைய ஒருங்கிணைந்த பண்ணை 19 ஏக்கர் ( உறுதி) காணி பளையில் விற்பனைக்கு.

• 1.5 KM தூரத்தில் A9 வீதி.
• 3.0 KM தூரத்தில் புகையிரத நிலையம்
• 3.5 KM தூரத்தில் கடற்கரை.
• 35 KM தூரத்தில் பலாலி விமான நிலையம்.

இதற்குள்....
• 1500 தென்னை, 1500 தேக்குமரம்,
400 பனை மரம், 40 மாமரம், கற்றாளை,
சோளம், 400 வாழை மரம்.
• 500 முருங்கை மரம், பூசனி,
• 10,000 கோழிகள், வான் கோழிகள், காடை
மற்றும் கறவை மாடுகள் வளர்ககூடிய
இடவசதிகள்.
• 6 கிணறுகள் மின்சார வசதிகளுடன்.
• அனைத்து மரங்களிற்கும் நேரடி நீர்ப்பாசன
வசதிகள்.
• வேலையாட்கள் தங்குவதற்கான வசதிகள்.
• சுற்றுலா விடுதி அமைப்பதற்கான
அனுமதியுடன்.

காணி அளவு : 19 ஏக்கர் (304பரப்பு)
அமைவிடம் : பளை
உறுதி : வங்கி கடன் பெறக்கூடியது.
கடன் வசதி : பிரபல வங்கியில் குறைந்த
வட்டியில் ஏற்படுத்தித்
தரப்படும்
பரப்பு விலை : 150,000/- (SLR)

 

ஒரே ஒரு தகவல் குறையுது. :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எனக்கு முதல் உப்பிடியானதில் ஆசையோ ஆர்வமோ இல்லை.

இனி நித்திரையிலும் இது தான் வரும். 

அறுமின்கள் அறுமின்கள் ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10 பேர் சேர்ந்து £ 20,000 களில் ஆரம்பிக்கலாம்..

என்ன அங்கு ஓர் நிச்சயமற்ற நிலமை, முதலீட்டிற்கான வருமானம் வருமா என தெரியவில்லை.

1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சகாராவின் வீடும் மீராவின் வீடும் அழகாக இருக்கின்றன. மீரா வீட்டின் மாடி அமைப்பும் குசினித் தளபாட அமைப்பும் நன்றாக இருக்கின்றன. ஆனால் வெள்ளை நிறம் அங்கு அப்படியே இருக்குமா மீரா ????

சத்தியமாக இருக்காது..

நாம் இங்கு எமது வீட்டை எப்படி பராமரிக்கின்றமோ அதே போல பராமரிக்க வேண்டும்.

முனியர் எனக்கும் சறுக்கீட்டுது...

4.56 ஆ 45.6 ஆ என்று

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, MEERA said:

ஒரு ஏக்கர் 24 இலட்சம் அல்லவா

2.4 மில்லியன்கள்

சோனமுத்தா... போச்சா....

சரிதான்.... நம்ம கணக்கு கவுத்திரிச்சு....

மிக, மிக அதிகம்....  கொஞ்சம் தள்ளி...ரோட்டும் நல்லா இருக்கு. செம்பாட்டு மண்ணோடு.... 6 லட்சத்துக்கு அருமையான இடமே...

மீரா.... இங்கே ஒன்றிணைந்த பண்ணை மூலம் வருமானம் பெரிதாக பார்க்க முடியாது.

ஒரே வழி... ஒரு இயற்கை சுற்றுலா இடமாக்கி காசு பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

EE01-C8-AF-852-A-4343-A9-B5-9-C35-AFCE57

 

7165-A5-A4-A447-467-A-88-A2-B9-A43-D70-B

 

A4-EBEF8-C-7162-4-E22-8636-3-A1-F9-C3-CD

 

66750210_10156286190656551_1407589928270

 

மீரா...  வல்வை சகாறா...  உங்கள் 🏡 வீடுகளை, மிக வடிவாக... கட்டி, உள்ளீர்கள். 👍  👏 :)
இதற்கு.... நீங்கள் எடுத்த, பெரு  முயற்சிக்கும், உங்கள் உழைப்பிற்கும்... வாழ்த்துக்கள். ♥️ 🥰

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/5/2020 at 22:54, உடையார் said:

👍 100% சரிமாக சொன்னீர்கள், சும்மா உதவாமால் முதலீட்டுக்கு உதவினால், பலர் ஒருவரின் முதலீட்டால் முன்னேறுவார்கள். சரியான் வழி நடத்தலின்றி சிலர் வெளியிலிருத்து அனுப்பும் பணத்தை செலவழிக்கின்றார்கள், இது மன வேதனை.

என் தம்பிக்கு தொழிலை காட்டினேன், அவனும் அவனை சார்ந்தோரும் நன்றாக இருக்கின்றார்கள், எனக்கும் பிரச்சனையில்லை வாழ்நாள் முழுக்க பொறுப்பெடுக்க 

உங்கள் பெற்றோரைப் பாராட்ட வேண்டும். பிள்ளைகளை பொறுப்புள்ளவர்களாக வளர்த்துள்ளனர். 🙏

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.